மழை 15
அடுத்த நாள் இருந்து வழமை போல நாட்கள் நகர்ந்தன... அவர்கள் வாழ்க்கையின் திருப்பு முனைக்கான நாளும் வந்து சேர்ந்தது...
ஆம் வசுந்தரா கர்ப்பம் என்று உறுதிப்படுத்தப்பட்ட நாள்...
கையில் இருந்த ப்ரெக்னன்சி ஸ்டிக்கை ஐந்து நிமிடங்களுக்கு மேலாக பார்த்துக் கொண்டு இருந்தாள்...
இரண்டு கோடுகள் தெளிவாக தெரிந்தது...
பிரம்மை போல இருந்தது... தலையை உலுக்கிக் கொண்டாள்...
அன்று இருந்த நிலையில் இதனை பற்றி எல்லாம் அவள் யோசிக்கவே இல்லையே...
பல மாதங்கள் தாண்டி இணையுடன் சேரும் வேகம் மட்டும் தானே இருந்தது...
அவன் கையில் உருகி குழைந்தாள் தவிர குழந்தை பற்றி யோசிக்க கூட இல்லை...
இதனை எப்படி வெளியே சொல்வது என்கின்ற தவிப்பு இருந்தாலும் தாய்மையின் பூரிப்பில் அவள் இதழ்கள் மெலிதாக விரிந்து தான் கொண்டது...
அப்படியே வெளியே வந்து போனை எடுத்து அழைத்தது என்னவோ நரேனுக்கு தான்...
அவனோ லேப்டாப்பில் படம் பார்த்துக் கொண்டு இருந்தவன், அவள் நம்பரை பார்த்ததுமே, 'அதிசயமா இருக்கு' என்று யோசித்துக் கொண்டே போனை எடுத்தான்...
அவன் போனை எடுத்ததுமே, "இடியட் என்ன பண்ணி வச்சு இருக்க தெரியுமா?" என்று திட்டினாள்.
சுண்டு விரலினால் காதை குடைந்தவன், "இப்போ எதுக்குடி கத்துற?" என்று கேட்க, அவளோ, "கத்தாம என்ன பண்ண சொல்ற?" என்றாள்.
"முதல் விஷயத்தை சொல்லு" என்று சொன்னதும், "ஐ ஆம் ப்ரெக்னன்ட் டா" என்றாள் சிணுங்கும் குரலில்...
"வாட்?" என்று அதிர்ந்து விட்டான்...
அவளோ, "என்ன வாட்?" என்று கேட்க, "அன்னைக்கே சொல்லி இருக்க வேண்டியது தானே" என்றான்...
"எனக்கே நினைவு இல்ல, டேட் எல்லாம் கால்குலேட் பண்ண டைம் கொடுத்தியா நீ?" என்று கேட்டாள்.
அவள் கர்ப்பமாக இருப்பது எல்லாம் பிரச்சனை இல்லை...
இதனை எப்படி குடும்பத்தினரிடம் சொல்வது என்கின்ற பிரச்சனை தான் இருவருக்கும்...
"ஓகே லீவ் இட்... இனி என்ன பண்ண முடியும்? வீட்ல சொல்லிட்டியா?" என்று கேட்டான்...
"நோ இனி தான்" என்றாள். அவனோ, "எப்படி இத சொல்றதுன்னும் தெரியல" என்று சொல்ல அவளுக்கு இப்போது அவன் புலம்பல் சிரிப்பை கொடுத்தது...
"சொன்னா என்ன நினைப்பாங்க?" என்று கேட்க, அவனோ, "ஆஅ, அலைஞ்சான் னு நினைப்பாங்க" என்றான்...
"அதானே நிஜம்" என்று அவள் நக்கல் குரலில் கேட்க, அவனோ, "ம்ம், அப்படியும் சொல்லலாம்" என்றவன் ஒரு கணம் நிறுத்தி, "எப்போ வீட்டுக்கு வர்ற?" என்று கேட்டான்...
அவன் குரல் நலிந்து போக, அவள் பக்கத்தில் இருந்து நீண்ட மௌனம்...
"பாரதி எப்போ இங்க வர்றா?" என்று கேட்டாள் அவள்...
கடுப்பாகி விட்டது நரேனுக்கு...
"உன்னோட சை" என்று ஆரம்பித்தவன் சட்டென்று நிறுத்தி, "சரி விடு, அத பத்தி பேசுனா நமக்குள்ள சண்டை வரும்..." என்றான்...
"ம்ம், அப்போ நான் வைக்கிறேன்" என்று சொல்லி விட்டு வசுந்தரா வைத்து விட, "சரியான அழுத்தக்காரி" என்று அவளுக்கு மனதுக்குள் திட்டிக் கொண்டான்.
சாப்பாட்டு மேசையில் தயங்கி தயங்கி வந்து அமர்ந்தாள் வசுந்தரா...
சாப்பிடும் போது அவர்கள் பேசுவது இல்லை...ஆனால் இன்று அவள் பேச வேண்டிய கட்டாயம்..
குரலை செருமியவள், "நான் ஒரு விஷயம் சொல்லணும்" என்றாள்...
அனைவரும் ஒருங்கே திரும்பி பார்த்தார்கள்...
"ஐ ஆம் ப்ரெக்னன்ட்" என்றாள் தலையை குனிந்தபடி...
"வாட்???" என்று வசிஷ்டன் அதிர்ந்தே விட்டான்.
அவனை ஏறிட்டு பார்த்தவளோ, "எஸ் ஐ ஆம் ப்ரெக்னன்ட்... அதுக்கு ஏத்த போல ஃபூட் ப்ரிபெயர் பண்ணனும்" என்றாள் தயக்கமாக...
கோமளாவும், ராஜசேகரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
வசிஷ்டனோ தலையை உலுக்கிக் கொண்டவன், "கங்கிராட்ஸ்" என்று மட்டும் சொல்லிக் கொண்டான்.
இதே விஷயத்தை அவர்கள் வீட்டில் சொன்னான் நரேன்.
மூவரும் கண்ணை சிமிட்டிக் கொண்டே அவனை பார்த்தார்கள்..
"இப்படியே பார்த்துட்டு இருந்தா என்ன அர்த்தம்??" என்று கேட்டுக் கொண்டே சாப்பிட்டான்.
லக்ஷ்மியோ, "பிரிஞ்சு தானே டா இருக்க? எப்படிடா??" என்று கேட்க பாரதியோ, "அதான் பிசினஸ் மீட்டிங்ன்னு அடிக்கடி போனான் ல" என்றாள் அடக்கப்பட்ட சிரிப்புடன்...
"சும்மா இருடி" என்று அவளுக்கு திட்டியவன், "இது என்ன ஊர்ல இல்லாத அதிசயமா? இப்போ எதுக்கு என்ன பார்த்துட்டே இருக்கீங்க" என்று கேட்டுக் கொண்டே சாப்பிட்டவனுக்கு அவர்களை எதிர்கொள்ள உண்மையாகவே கூச்சமாக தான் இருந்தது...
பாரதி சகஜமாக இருப்பது போல காட்டிக் கொண்டாலும் மனதுக்குள் ஒரு நெருடல் இருக்க தான் செய்தது... தன்னால் தான் பிரிந்து இருக்கின்றார்களோ என்கின்ற குற்ற உணர்வு அது... சாப்பிட்டு முடித்ததுமே அவன் அறை கதவை தட்டினாள்.
கதவை திறந்தவனிடம், "உன் கிட்ட பேசணும் அண்ணா" என்றாள்.
"உள்ள வா" என்று சொல்லிக் கொண்டே கதவை தாழிட, "அண்ணி இங்க வர மாட்டாங்களா?" என்று கேட்டாள்.
அவனோ நாடியை நீவிக் கொண்டே, "உன்னை அங்க வரட்டுமாம்னு சொல்லி உளறிட்டு இருக்கா... வர்ற நேரம் வரட்டும்... நீ ரிலாக்ஸ் ஆஹ் இரு... அவ ஆசைபட்டான்னு நீ அந்த சைக்கோ கூட வாழ முடியுமா?" என்று கேட்டான்...
பதில் சொல்லவில்லை...
மெதுவாக எழுந்தவள் வலுக்கட்டாயமாக சிரித்தபடி வெளியேறி விட்டாள்.
மேலும் ஒரு வாரம் கடந்த பின்னரும் அவளால் நிதானமாக இருக்க முடியவே இல்லை...
அவர்கள் பிரிவுக்கு தான் காரணமோ என்கின்ற எண்ணம் தான் ஓடிக் கொண்டு இருந்தது...
அதுவும் இத்தனை காதலை வைத்துக் கொண்டே தனக்காக பிரிந்து இருக்கின்றார்கள் என்கின்ற குற்ற உணர்வில் தவித்தாள்...
ஒரு கட்டத்துக்கு மேல் முடியாமல், காலேஜ் முடிய வசுந்தராவை பார்க்க அவளது ஆபீஸுக்கே கிளம்பி இருந்தாள் பாரதி...
தயங்கி தயங்கி உள்ளே நுழைந்தவளை ஏறிட்டு பார்த்த வசுந்தராவோ, "கம்" என்று சொல்ல, அவளும் தயங்கி தயங்கி வந்து அவள் முன்னே இருந்த இருக்கையில் அமர்ந்தாள்... வசுந்தரா பைல் ஒன்றை பார்த்துக் கொண்டே இருந்தவள், "சொல்லு பாரதி" என்றாள்.
"கங்கிராட்ஸ் அண்ணி" என்று சொன்னதுமே நிமிர்ந்து அவளை பார்த்து புன்னகைத்த வசுந்தரா, "தேங்க் யூ" என்றாள்.
அவளை பார்க்கும் போதெல்லாம் பாரதிக்கு வசிஷ்டனை பார்க்கும் உணர்வு தான்...
தோற்றம், நிமிர்வு ஆளுமை என்று எல்லாமே அவனை போல தானே அவளுக்கு இருந்தது...
தானாக குரல் நடுங்கியது...
குரலை செருமிக் கொண்டே, "ஒன்னு கேக்கலாமா?" என்று கேட்க, அவளோ, "வெய்ட், காஃபி சாப்பிடுறியா?" என்று கேட்டாள். அவளும், "ம்ம்" என்க, போனை எடுத்து காஃபிக்கு சொன்னவள், "சரி இப்போ சொல்லு" என்றாள்.
"வீட்டுக்கு எப்போ வர்றீங்க?" என்று தயங்கி தயங்கி கேட்டாள்.
"நீ எப்போ எங்க வீட்டுக்கு போக போற?" என்று அவளிடம் இருந்து கேள்வி வர, சட்டென்று தலையை குனிந்துக் கொண்டவள், "எனக்கு அவர் கூட வாழ முடியாது... ஆனா நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ணுறீங்க தானே" என்றாள்.
வசுந்தராவோ, "வாழ முடியாதுன்னார் டைவர்ஸ் எடுக்கலாமே... ஒரு வருஷமா இப்படியே இருக்க?" என்று கேட்டு விட்டாள்.
பதில் இல்லை... நீண்ட மௌனத்துக்கு பின்னர், "எனக்கு அவரை பிடிக்கும்... ஆனா வாழ முடியாது" என்றாள்.
"ஏன் முடியாது" என்ற வசுந்தராவின் கேள்விக்கு, "அண்ணா அன்னைக்கு சொன்னார் தானே... என்னால உங்கள போல அடாப்ட் பண்ணிக்க முடியல" என்றாள்.
கண்கள் கலங்கி போனது, அவளையே பார்த்துக் கொண்டு இருந்த வசுந்தராவோ, "பிராங்க் ஆஹ் பேசலாமா?" என்று கேட்டாள்.
"ம்ம்" என்று சொன்னாள் பாரதி...
"இங்க பாரு பாரதி... வசி பத்தி பெர்ஸ்ட் ஆஹ் சொல்லிடுறேன் கேளு... அவனுக்கு ஈகோ அதிகம் இருக்கு... பிரெஸ்டிஜ் ரொம்ப இருக்கு... என்ன போலவே கோபப்படுவான்... இல்ல எனக்கு மேலன்னு கூட சொல்லலாம்... அவனுக்கு தோல்வியை அக்செப்ட் பண்ணிக்க முடியாது... அது தான் மெயின் இஸ்ஸு... அன்னைக்கு நரேன் சொன்ன விஷயத்துல இருந்து எனக்கு புரிஞ்சது இது தான்... அவன் உன்னை வெஞ்சன்ஸ் வச்சு கல்யாணம் பண்ணி இருக்கான் தான்... ஆனா அந்த வெஞ்சன்ஸ் ல உன்னை நடத்தல.. அது அவனோட இயல்பு... இவ்ளோ வருஷம் இறுக்கமா வாழ்ந்துட்டான்... அவனால உன்னோட சேர்க்கில் உள்ளே வர முடியல... அவன் சேர்க்கில் உள்ளே உன்னை எடுக்க பார்க்கிறான்" என்று சொன்னாள்.
பாரதியோ, "எல்லாம் ஓகே, பட் என்னோட போனை உடைச்சது... கைல சூடு வச்சது எல்லாமே எக்ஸ்ட்ரீம்ல" என்றாள்.
"எஸ், போனை உடைச்சது அவன் தப்பு தான்... கோபம் வந்தா என்ன பண்ணுறோம்னு தெரியாம பண்ணிட்டு இருக்கான்... கைல சூடு வச்ச விஷயத்தை பத்தி நானே பேசணும்னு இருந்தேன்... நீ, டூ கே கிட்... ஆனா நாங்க நைன்டீஸ்... பிரெண்ட்ஸ் ஆஹ் இருந்தோம்... ஆனா இப்படி டச் பண்ணி க்ளோஸ் ஆஹ் இருக்கல... சோ அதனால அவனால இத அக்செப்ட் பண்ணிக்க முடியாம இருக்கலாம்... அவன் சூடு வச்சதை நான் சரின்னு சொல்ல வரல... அவன் மனநிலை பத்தி நான் சொல்லணும்னு தோணிச்சு" என்றாள்.
"ம்ம்,சொல்லுங்க" என்று பாரதி சொல்ல, "நீயே சொல்லு, வசி, வேற ஒரு பொண்ணு குடிச்ச கப் ல வசி தண்ணி குடிச்சா உன்னால அக்செப்ட் பண்ணிக்க முடியுமா?" என்று கேட்டவள் ஒரு கணம் நிறுத்தி, "உன்ன பத்தி தெரியல... ஆனா என்னால அக்செப்ட் பண்ணிக்க முடியாது. பேசுறது எல்லாம் ஓகே... ஆனா டச்சிங் விஷயத்துல கொஞ்சம் பழமை வாதின்னு வச்சுக்கோ... எங்க ஜெனரேஷன் அப்படி... ஏன் உன் அண்ணா பெரிய ஈஸி கோயிங்னு இருக்கானே... நான் ஒருத்தன கட்டி பிடிச்சா சும்மா இருப்பான்னு நினைக்கிறியா? கண்டிப்பா மாட்டான்... சுர்ருன்னு அவனுக்கு கோபம் வரும்... அதே மெண்டாலிட்டி தான் வசிக்கும், அவனால அத ஈஸியா அக்செப்ட் பண்ணிக்க முடியல... உன் ஏஜ் க்கு அவனால யோசிக்க முடியல... அதுவும் சிகரெட் னா வசிக்கு ஆகாது... சோ எல்லா கோபமும் சேர்ந்து என்ன பண்ணுறதுன்னு தெரியாம பண்ணிட்டான்... ஐ அட்மிட் இட், அவன் தப்பு தான்... இன்னொரு சான்ஸ் நீ ஏன் கொடுக்க கூடாது?" என்று நேரடியாக கேட்டு விட்டாள்.
"ஆனா எனக்கு பயமா இருக்கு... மறுபடியும் அந்த சேர்க்கில் உள்ள போக முடியல" என்றாள் கலக்கமாக...
"ஐ அண்டர்ஸ்டாண்ட்... கொஞ்ச நாள் உங்க வீட்ல இருந்திட்டு என் வீட்ல என்னாலேயே இருக்க முடியல... ஜெயில் போல பீல் ஆச்சு... ஆனா நீ சின்ன வயசில இருந்து அப்படி ஒரு சிச்சுவேஷன்ல வளர்ந்துட்டு இப்போ அங்கே இருக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கும்... பட் இதுக்கு என்ன தான் முடிவு எடுக்க நினைக்கிற?" என்று கேட்டாள்.
பதில் இல்லை பாரதியிடம்...
"ஒன்னு டைவர்ஸ் எடுக்கணும்... அதுக்கும் முடியாது... இல்லன்னா சேர்ந்து வாழணும், அதுக்கும் முடியாதுன்னா இப்படியே ரெண்டு பேரும் இருந்திட போறீங்களா?" என்று கேட்க, "அவர் சேர்க்கில் உள்ள எனக்கு இருக்க முடியும்னு தோணல" என்றாள்.
"அப்போ அவனை உன் சேர்க்கில் உள்ளே எடு" என்று சொல்ல, அவளோ, "அவர் வந்துட்டாலும்" என்றாள் சலிப்பாக...
அதனைக் கேட்டு சிரித்த வசுந்தராவோ, "கண்டிப்பா வருவான்... நான் உன் அண்ணாவோட சேர்க்கில் உள்ள அடாப்ட் ஆயிட்டேன் தானே... நீ முதல் வசி கூட பேசி பாரு, கேட்கலைன்னா மிரட்டி பாரு" என்றான்...
"மிரட்டுறதா? இதெல்லாம் நடக்குமா?" என்று கேட்க, வசுந்தராவோ, "அவன் வீக்னஸ் சொல்றேன் கேட்டுக்கோ, இந்த ப்ரேஸிடீஜ் அண்ட் லாஸ் எல்லாம் அவன் வீக்னஸ்...நீ விட்டு போன நேரம் அவனோட பிரெஸ்டிஜ் போச்சு... உன் விஷயத்துல அவனுக்கு அது தோல்வி தான்... வெளியே காட்டலன்னாலும் மனசுல கண்டிப்பா அந்த பீலிங் இருக்கும்" என்றாள்.
பாரதியோ, "அது தான் பயமா இருக்கு... எல்லாமே வெஞ்சேன்ஸ் வச்சு பண்ணுவார்... விட்டு போன நேரமே மிரட்டுனார். மறுபடி சிகரெட் சூடு வச்ச போல ஏதும் பண்ணிட்டா என்ன பண்ணுறது?" என்று கேட்க, "வெளியே வந்திடு... அதுக்கப்புறம் உன் கிட்ட நான் அவனோட சேர்ந்து வாழ சொல்லி கேட்கவே மாட்டேன்...சகிச்சிட்டு நீ வாழ தேவல... இப்போ எனக்காக ஒரு லாஸ்ட் சான்ஸ்... எனக்கு அவன் லைஃப் உன் லைஃப்ன்னு ரெண்டுமே முக்கியம்... அவன் ரொம்ப கால்குலேடிவ், உன் விஷயத்தை எல்லாம் இப்போ கால்குலேட் பண்ணி வச்சு இருப்பான் கண்டிப்பா இந்த சான்சை மிஸ் பண்ண மாட்டான்" என்றாள்.
நீண்ட நேரம் மௌனமாக யோசித்தாள்.
"எப்போ வீட்டுக்கு போகணும்?" என்று பாரதி கேட்க, அவளோ, "இப்போவே" என்றாள்.
"இப்போவா?" என்று அவள் அதிர, "ம்ம், அப்புறம் மனசு மாறினா என்ன பண்ணுறது? அதுவும் உன் அண்ணா கிட்ட பேசுனா, அவனே உன் மனச மாத்திடுவான்" என்று சொல்ல, பாரதியோ, "ஆனா அண்ணா கிட்ட சொல்லிட்டு தான் வருவேன்" என்றாள்.
வசுந்தராவோ, "அப்போ எனக்கு நம்பிக்கை இல்லை" என்று சொல்ல, பாரதியோ, "கண்டிப்பா அண்ணா கூடவே உங்க வீட்டுக்கு வரேன்... நீங்க ரெடியா இருங்க" என்று சொன்னாள்.
வசுந்தராவும், "ஓகே" என்று தோள்களை உலுக்கிக் கொண்டாள்.
வீட்டுக்கு சென்று விடயத்தை சொன்னதுமே, தாம் தூம் என்று குதித்தான் நரேன்...
"அந்த சைக்கோ கூட வாழ போறியா? வசுந்தரா தானே இதுக்கெல்லாம் காரணம், அவளுக்கு இருக்கு" என்று சொல்ல, பாரதியோ, "நான் எடுத்த முடிவு தான்... போன முறை போல சகிச்சிட்டு எல்லாம் இருக்க மாட்டேன்... ஒரே ஒரு லாஸ்ட் சான்ஸ்... சரி வரலன்னா வெளியே வந்திடுவேன்... அதுக்கப்புறம் டைவர்ஸ் கூட அப்ளை பண்ணிக்கலாம்" என்றாள்.
அவள் டைவர்ஸ் என்று சொன்னதுமே தான் நரேன் அவளை போக விட்டான்...
தங்கை வாழ்க்கை இப்படியே போய் விடுமோ என்கின்ற கவலை அவனுக்கு... விவாகரத்து எடுத்து விட்டால் வேறு கல்யாணமாவது பண்ணி வைத்து விடலாம் என்று யோசித்தான்…
அவளை அழைத்துக் கொண்டே வசிஷ்டன் வீட்டுக்கு கிளம்பினான்... லக்ஷ்மியோ, "ஏதும்னா கால் பண்ணிடும்மா" என்று சராசரி தாயாக பயந்தார்...
செல்லதுரையோ, "சகிச்சிட்டு எல்லாம் வாழணும்னு இல்லை" என்று சொல்ல, அவளும் சம்மதமாக தலையாட்டி விட்டு புறப்பட்டாள்...
அவர்கள் வீட்டு வாசலில் கார் வந்து நின்றதுமே அனைவரும் புருவம் சுருக்கி பார்த்தார்கள்... வசுந்தராவோ அறைக்குள் சென்று அடுக்கி வைத்து இருந்த உடை பெட்டியை தூக்கிக் கொண்டு வந்தாள்.
வசிஷ்டனோ, அவர்களை துளைத்தெடுக்கும் பார்வை பார்த்துக் கொண்டு இருக்க, வசுந்தராவோ, "நான் வரேன்" என்று சொன்னபடி நரேனை நோக்கிச் செல்ல, அவனோ அவள் உடைப்பெட்டியை வாங்கிக் கொண்டே அங்கிருந்து கிளம்பி விட்டான்...
காரில் ஏறியவன், "நினைச்சதை சாதிச்சுட்டே தானே" என்று சற்று கோபமாக வசுந்தராவிடம் கேட்க, "லாஸ்ட் சான்ஸ் தான் நரேன்... சரி வரலைன்னா டைவர்ஸ் எடுத்து கொடுத்து வேற கல்யாணம் பண்ணி வச்சுடலாம்" என்று சொல்ல, சலிப்பாக இரு பக்கமும் தலையாட்டி விட்டு காரை கிளப்பி இருந்தான்...
இதே சமயம் ஹாலில் அவளையே பார்த்துக் கொண்டு இருந்த யாரையும் பார்க்காமல் அறைக்குள் நுழைந்தாள் பாரதி...
அவளையே பார்த்துக் கொண்டு இருந்த வசிஷ்டனும் அவளை தொடர்ந்து உள்ளே நுழைந்து கதவை தாழிட்டவன், "என்ன இந்த பக்கம்?" என்று கேட்டான்... அவளோ உடை பெட்டியை வைத்துக் கொண்டே அவனை நோக்கி திரும்பியவள் அவனை பார்த்தாள் தவிர பதில் சொல்லவில்லை...
அடுத்த கணமே அவளை நோக்கி வேகமாக வந்தவன், அவள் முகத்தை தாங்கி இதழில் ஆழ்ந்து இதழ் பதித்து இருந்தான்...
திடீர் முத்தம்... அதுவும் வசிஷ்டனிடம் இருந்து...
அவள் எதிர்பார்க்கவே இல்லை...
அவன் மார்பில் கையை வைத்து தள்ள முயன்றாள் முடியவில்லை... முத்தம் நீண்டது...
விளைவு அவளும் முதல் முத்தத்தில் அந்த வயதுக்கே உரிய உணர்ச்சியின் தூண்டலில் கண்களை மூடிக் கொண்டாள்.
முத்தத்தில் ஆரம்பித்து அவளை மொத்தமாக கொள்ளையிட ஆரம்பித்தான்...
அவளும் தடுக்கவில்லை... அவள் மூளை தடுக்க சொன்னாலும் மேனி கேட்கவில்லை... உணர்வின் மிகுதியில் அவனுக்கு அடைக்கலம் கொடுத்தும் விட்டாள்.
அவனிடம் இந்த வேகம் அவள் எதிர்பார்க்கவே இல்லை...
அவன் வேகத்தில், அவள் சுடிதாரும் கிழிந்து போனது...
காலம் நேரம் பார்க்காமல் ஒரு கலவி...
மூச்சிரைக்க விட்டத்தை பார்த்துக் கொண்டே படுத்து இருந்தார்கள்...
அவளுக்கு வேறு எங்கோ ஒரு உலகத்துக்கு சென்று விட்டு வந்த போல உணர்வு...
அவள் மனமோ, "மாறிட்டாரா?" என்று குதூகலித்து ஐந்து நிமிடங்கள் கடந்து இருக்காது, "இது கிடைக்கலன்னு தானே விட்டு போன" என்று கேட்டு விட்டான் அவன்...
அவளை பார்க்கவில்லை, விட்டத்தை பார்த்துக் கொண்டு இருந்தான்...
சட்டென அதிர்ந்து திரும்பி பார்த்தவள், "இப்போ என்ன சொன்னீங்க?" என்று கேட்டாள்.
அவளை திரும்பி சாவகாசமாக பார்த்தவன், "உனக்கு இது தானே தேவைப்பட்டிச்சு... இதுக்கு தானே படிக்கிற வயசுன்னு கூட யோசிக்காம என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட... கிடைக்கலன்னு சொன்னதும் விட்டு ஓடிட்டே தானே" என்று பேச, அவளுக்கோ செருப்பால் அடித்த உணர்வு...
ஏதோ உடல் தேவைக்காக தன்னிடம் வந்த போல அவன் பேசுவதை அவளால் ஜீரணிக்க முடியவே இல்லை...
காதல் என்கின்ற ஒன்று அவனுக்கு தெரியாதா? என்ற எண்ணம் தான் அவளுக்கு தோன்றியது...
தன்னை போர்வையால் மறைத்துக் கொண்டே எழுந்து அமர்ந்தவள், "அப்போ நான் பிஸிக்கல் ரிலேஷன்ஷிப்புக்கு தான் அலையுறேன்னு நினைக்கிறீங்களா?" என்று கேட்க, அவனோ, "நான் உன்னை அவதானிச்ச வரைக்கும் எனக்கு அப்படி தான் தோணிச்சு... இனி ஷெடியூல்ல நைட் வன் ஹவர்க்கு இதுக்கும் நேரம் ஒதுக்கிடலாம்... ஐ ஆம் ரெடி டு ஹாவ் பிஸிக்கல் ரிலேஷன்ஷிப் டெய்லி, உன்னால டெய்லி முடியாதுன்னா வீக்லி த்ரீ டேய்ஸ் ஓகே" என்றான்...
அவளுக்கோ, 'இவன் திருந்தவே மாட்டானா? இதுக்கும் ஷெடியூல் ஆஹ்?' என்று தான் தோன்றியது... சற்று முன்னர் மேனியில் தோன்றிய பரவசம் எல்லாம் மொத்தமாக வடிந்து விட்டது அவளுக்கு...
அவன் தன்னை இப்படி தரக்குறைவாக கணித்து இருக்கின்றான் என்று நினைக்கும் போதே சற்று முன் அவன் ஸ்பரிசித்த மேனி எரிந்தது... தன்னையும் மீறி கண்ணீர் வழிய துடைத்துக் கொண்டாள்.
அவன் நிஜமாகவே அப்படி நினைத்து இருக்கின்றானா இல்லை தான் விட்டுச் சென்றதற்காக இப்படி பேசி பழி வாங்குகின்றானா என்றும் அவளுக்கு கணிக்க முடியவே இல்லை...
அடுத்த நாள் இருந்து வழமை போல நாட்கள் நகர்ந்தன... அவர்கள் வாழ்க்கையின் திருப்பு முனைக்கான நாளும் வந்து சேர்ந்தது...
ஆம் வசுந்தரா கர்ப்பம் என்று உறுதிப்படுத்தப்பட்ட நாள்...
கையில் இருந்த ப்ரெக்னன்சி ஸ்டிக்கை ஐந்து நிமிடங்களுக்கு மேலாக பார்த்துக் கொண்டு இருந்தாள்...
இரண்டு கோடுகள் தெளிவாக தெரிந்தது...
பிரம்மை போல இருந்தது... தலையை உலுக்கிக் கொண்டாள்...
அன்று இருந்த நிலையில் இதனை பற்றி எல்லாம் அவள் யோசிக்கவே இல்லையே...
பல மாதங்கள் தாண்டி இணையுடன் சேரும் வேகம் மட்டும் தானே இருந்தது...
அவன் கையில் உருகி குழைந்தாள் தவிர குழந்தை பற்றி யோசிக்க கூட இல்லை...
இதனை எப்படி வெளியே சொல்வது என்கின்ற தவிப்பு இருந்தாலும் தாய்மையின் பூரிப்பில் அவள் இதழ்கள் மெலிதாக விரிந்து தான் கொண்டது...
அப்படியே வெளியே வந்து போனை எடுத்து அழைத்தது என்னவோ நரேனுக்கு தான்...
அவனோ லேப்டாப்பில் படம் பார்த்துக் கொண்டு இருந்தவன், அவள் நம்பரை பார்த்ததுமே, 'அதிசயமா இருக்கு' என்று யோசித்துக் கொண்டே போனை எடுத்தான்...
அவன் போனை எடுத்ததுமே, "இடியட் என்ன பண்ணி வச்சு இருக்க தெரியுமா?" என்று திட்டினாள்.
சுண்டு விரலினால் காதை குடைந்தவன், "இப்போ எதுக்குடி கத்துற?" என்று கேட்க, அவளோ, "கத்தாம என்ன பண்ண சொல்ற?" என்றாள்.
"முதல் விஷயத்தை சொல்லு" என்று சொன்னதும், "ஐ ஆம் ப்ரெக்னன்ட் டா" என்றாள் சிணுங்கும் குரலில்...
"வாட்?" என்று அதிர்ந்து விட்டான்...
அவளோ, "என்ன வாட்?" என்று கேட்க, "அன்னைக்கே சொல்லி இருக்க வேண்டியது தானே" என்றான்...
"எனக்கே நினைவு இல்ல, டேட் எல்லாம் கால்குலேட் பண்ண டைம் கொடுத்தியா நீ?" என்று கேட்டாள்.
அவள் கர்ப்பமாக இருப்பது எல்லாம் பிரச்சனை இல்லை...
இதனை எப்படி குடும்பத்தினரிடம் சொல்வது என்கின்ற பிரச்சனை தான் இருவருக்கும்...
"ஓகே லீவ் இட்... இனி என்ன பண்ண முடியும்? வீட்ல சொல்லிட்டியா?" என்று கேட்டான்...
"நோ இனி தான்" என்றாள். அவனோ, "எப்படி இத சொல்றதுன்னும் தெரியல" என்று சொல்ல அவளுக்கு இப்போது அவன் புலம்பல் சிரிப்பை கொடுத்தது...
"சொன்னா என்ன நினைப்பாங்க?" என்று கேட்க, அவனோ, "ஆஅ, அலைஞ்சான் னு நினைப்பாங்க" என்றான்...
"அதானே நிஜம்" என்று அவள் நக்கல் குரலில் கேட்க, அவனோ, "ம்ம், அப்படியும் சொல்லலாம்" என்றவன் ஒரு கணம் நிறுத்தி, "எப்போ வீட்டுக்கு வர்ற?" என்று கேட்டான்...
அவன் குரல் நலிந்து போக, அவள் பக்கத்தில் இருந்து நீண்ட மௌனம்...
"பாரதி எப்போ இங்க வர்றா?" என்று கேட்டாள் அவள்...
கடுப்பாகி விட்டது நரேனுக்கு...
"உன்னோட சை" என்று ஆரம்பித்தவன் சட்டென்று நிறுத்தி, "சரி விடு, அத பத்தி பேசுனா நமக்குள்ள சண்டை வரும்..." என்றான்...
"ம்ம், அப்போ நான் வைக்கிறேன்" என்று சொல்லி விட்டு வசுந்தரா வைத்து விட, "சரியான அழுத்தக்காரி" என்று அவளுக்கு மனதுக்குள் திட்டிக் கொண்டான்.
சாப்பாட்டு மேசையில் தயங்கி தயங்கி வந்து அமர்ந்தாள் வசுந்தரா...
சாப்பிடும் போது அவர்கள் பேசுவது இல்லை...ஆனால் இன்று அவள் பேச வேண்டிய கட்டாயம்..
குரலை செருமியவள், "நான் ஒரு விஷயம் சொல்லணும்" என்றாள்...
அனைவரும் ஒருங்கே திரும்பி பார்த்தார்கள்...
"ஐ ஆம் ப்ரெக்னன்ட்" என்றாள் தலையை குனிந்தபடி...
"வாட்???" என்று வசிஷ்டன் அதிர்ந்தே விட்டான்.
அவனை ஏறிட்டு பார்த்தவளோ, "எஸ் ஐ ஆம் ப்ரெக்னன்ட்... அதுக்கு ஏத்த போல ஃபூட் ப்ரிபெயர் பண்ணனும்" என்றாள் தயக்கமாக...
கோமளாவும், ராஜசேகரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
வசிஷ்டனோ தலையை உலுக்கிக் கொண்டவன், "கங்கிராட்ஸ்" என்று மட்டும் சொல்லிக் கொண்டான்.
இதே விஷயத்தை அவர்கள் வீட்டில் சொன்னான் நரேன்.
மூவரும் கண்ணை சிமிட்டிக் கொண்டே அவனை பார்த்தார்கள்..
"இப்படியே பார்த்துட்டு இருந்தா என்ன அர்த்தம்??" என்று கேட்டுக் கொண்டே சாப்பிட்டான்.
லக்ஷ்மியோ, "பிரிஞ்சு தானே டா இருக்க? எப்படிடா??" என்று கேட்க பாரதியோ, "அதான் பிசினஸ் மீட்டிங்ன்னு அடிக்கடி போனான் ல" என்றாள் அடக்கப்பட்ட சிரிப்புடன்...
"சும்மா இருடி" என்று அவளுக்கு திட்டியவன், "இது என்ன ஊர்ல இல்லாத அதிசயமா? இப்போ எதுக்கு என்ன பார்த்துட்டே இருக்கீங்க" என்று கேட்டுக் கொண்டே சாப்பிட்டவனுக்கு அவர்களை எதிர்கொள்ள உண்மையாகவே கூச்சமாக தான் இருந்தது...
பாரதி சகஜமாக இருப்பது போல காட்டிக் கொண்டாலும் மனதுக்குள் ஒரு நெருடல் இருக்க தான் செய்தது... தன்னால் தான் பிரிந்து இருக்கின்றார்களோ என்கின்ற குற்ற உணர்வு அது... சாப்பிட்டு முடித்ததுமே அவன் அறை கதவை தட்டினாள்.
கதவை திறந்தவனிடம், "உன் கிட்ட பேசணும் அண்ணா" என்றாள்.
"உள்ள வா" என்று சொல்லிக் கொண்டே கதவை தாழிட, "அண்ணி இங்க வர மாட்டாங்களா?" என்று கேட்டாள்.
அவனோ நாடியை நீவிக் கொண்டே, "உன்னை அங்க வரட்டுமாம்னு சொல்லி உளறிட்டு இருக்கா... வர்ற நேரம் வரட்டும்... நீ ரிலாக்ஸ் ஆஹ் இரு... அவ ஆசைபட்டான்னு நீ அந்த சைக்கோ கூட வாழ முடியுமா?" என்று கேட்டான்...
பதில் சொல்லவில்லை...
மெதுவாக எழுந்தவள் வலுக்கட்டாயமாக சிரித்தபடி வெளியேறி விட்டாள்.
மேலும் ஒரு வாரம் கடந்த பின்னரும் அவளால் நிதானமாக இருக்க முடியவே இல்லை...
அவர்கள் பிரிவுக்கு தான் காரணமோ என்கின்ற எண்ணம் தான் ஓடிக் கொண்டு இருந்தது...
அதுவும் இத்தனை காதலை வைத்துக் கொண்டே தனக்காக பிரிந்து இருக்கின்றார்கள் என்கின்ற குற்ற உணர்வில் தவித்தாள்...
ஒரு கட்டத்துக்கு மேல் முடியாமல், காலேஜ் முடிய வசுந்தராவை பார்க்க அவளது ஆபீஸுக்கே கிளம்பி இருந்தாள் பாரதி...
தயங்கி தயங்கி உள்ளே நுழைந்தவளை ஏறிட்டு பார்த்த வசுந்தராவோ, "கம்" என்று சொல்ல, அவளும் தயங்கி தயங்கி வந்து அவள் முன்னே இருந்த இருக்கையில் அமர்ந்தாள்... வசுந்தரா பைல் ஒன்றை பார்த்துக் கொண்டே இருந்தவள், "சொல்லு பாரதி" என்றாள்.
"கங்கிராட்ஸ் அண்ணி" என்று சொன்னதுமே நிமிர்ந்து அவளை பார்த்து புன்னகைத்த வசுந்தரா, "தேங்க் யூ" என்றாள்.
அவளை பார்க்கும் போதெல்லாம் பாரதிக்கு வசிஷ்டனை பார்க்கும் உணர்வு தான்...
தோற்றம், நிமிர்வு ஆளுமை என்று எல்லாமே அவனை போல தானே அவளுக்கு இருந்தது...
தானாக குரல் நடுங்கியது...
குரலை செருமிக் கொண்டே, "ஒன்னு கேக்கலாமா?" என்று கேட்க, அவளோ, "வெய்ட், காஃபி சாப்பிடுறியா?" என்று கேட்டாள். அவளும், "ம்ம்" என்க, போனை எடுத்து காஃபிக்கு சொன்னவள், "சரி இப்போ சொல்லு" என்றாள்.
"வீட்டுக்கு எப்போ வர்றீங்க?" என்று தயங்கி தயங்கி கேட்டாள்.
"நீ எப்போ எங்க வீட்டுக்கு போக போற?" என்று அவளிடம் இருந்து கேள்வி வர, சட்டென்று தலையை குனிந்துக் கொண்டவள், "எனக்கு அவர் கூட வாழ முடியாது... ஆனா நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ணுறீங்க தானே" என்றாள்.
வசுந்தராவோ, "வாழ முடியாதுன்னார் டைவர்ஸ் எடுக்கலாமே... ஒரு வருஷமா இப்படியே இருக்க?" என்று கேட்டு விட்டாள்.
பதில் இல்லை... நீண்ட மௌனத்துக்கு பின்னர், "எனக்கு அவரை பிடிக்கும்... ஆனா வாழ முடியாது" என்றாள்.
"ஏன் முடியாது" என்ற வசுந்தராவின் கேள்விக்கு, "அண்ணா அன்னைக்கு சொன்னார் தானே... என்னால உங்கள போல அடாப்ட் பண்ணிக்க முடியல" என்றாள்.
கண்கள் கலங்கி போனது, அவளையே பார்த்துக் கொண்டு இருந்த வசுந்தராவோ, "பிராங்க் ஆஹ் பேசலாமா?" என்று கேட்டாள்.
"ம்ம்" என்று சொன்னாள் பாரதி...
"இங்க பாரு பாரதி... வசி பத்தி பெர்ஸ்ட் ஆஹ் சொல்லிடுறேன் கேளு... அவனுக்கு ஈகோ அதிகம் இருக்கு... பிரெஸ்டிஜ் ரொம்ப இருக்கு... என்ன போலவே கோபப்படுவான்... இல்ல எனக்கு மேலன்னு கூட சொல்லலாம்... அவனுக்கு தோல்வியை அக்செப்ட் பண்ணிக்க முடியாது... அது தான் மெயின் இஸ்ஸு... அன்னைக்கு நரேன் சொன்ன விஷயத்துல இருந்து எனக்கு புரிஞ்சது இது தான்... அவன் உன்னை வெஞ்சன்ஸ் வச்சு கல்யாணம் பண்ணி இருக்கான் தான்... ஆனா அந்த வெஞ்சன்ஸ் ல உன்னை நடத்தல.. அது அவனோட இயல்பு... இவ்ளோ வருஷம் இறுக்கமா வாழ்ந்துட்டான்... அவனால உன்னோட சேர்க்கில் உள்ளே வர முடியல... அவன் சேர்க்கில் உள்ளே உன்னை எடுக்க பார்க்கிறான்" என்று சொன்னாள்.
பாரதியோ, "எல்லாம் ஓகே, பட் என்னோட போனை உடைச்சது... கைல சூடு வச்சது எல்லாமே எக்ஸ்ட்ரீம்ல" என்றாள்.
"எஸ், போனை உடைச்சது அவன் தப்பு தான்... கோபம் வந்தா என்ன பண்ணுறோம்னு தெரியாம பண்ணிட்டு இருக்கான்... கைல சூடு வச்ச விஷயத்தை பத்தி நானே பேசணும்னு இருந்தேன்... நீ, டூ கே கிட்... ஆனா நாங்க நைன்டீஸ்... பிரெண்ட்ஸ் ஆஹ் இருந்தோம்... ஆனா இப்படி டச் பண்ணி க்ளோஸ் ஆஹ் இருக்கல... சோ அதனால அவனால இத அக்செப்ட் பண்ணிக்க முடியாம இருக்கலாம்... அவன் சூடு வச்சதை நான் சரின்னு சொல்ல வரல... அவன் மனநிலை பத்தி நான் சொல்லணும்னு தோணிச்சு" என்றாள்.
"ம்ம்,சொல்லுங்க" என்று பாரதி சொல்ல, "நீயே சொல்லு, வசி, வேற ஒரு பொண்ணு குடிச்ச கப் ல வசி தண்ணி குடிச்சா உன்னால அக்செப்ட் பண்ணிக்க முடியுமா?" என்று கேட்டவள் ஒரு கணம் நிறுத்தி, "உன்ன பத்தி தெரியல... ஆனா என்னால அக்செப்ட் பண்ணிக்க முடியாது. பேசுறது எல்லாம் ஓகே... ஆனா டச்சிங் விஷயத்துல கொஞ்சம் பழமை வாதின்னு வச்சுக்கோ... எங்க ஜெனரேஷன் அப்படி... ஏன் உன் அண்ணா பெரிய ஈஸி கோயிங்னு இருக்கானே... நான் ஒருத்தன கட்டி பிடிச்சா சும்மா இருப்பான்னு நினைக்கிறியா? கண்டிப்பா மாட்டான்... சுர்ருன்னு அவனுக்கு கோபம் வரும்... அதே மெண்டாலிட்டி தான் வசிக்கும், அவனால அத ஈஸியா அக்செப்ட் பண்ணிக்க முடியல... உன் ஏஜ் க்கு அவனால யோசிக்க முடியல... அதுவும் சிகரெட் னா வசிக்கு ஆகாது... சோ எல்லா கோபமும் சேர்ந்து என்ன பண்ணுறதுன்னு தெரியாம பண்ணிட்டான்... ஐ அட்மிட் இட், அவன் தப்பு தான்... இன்னொரு சான்ஸ் நீ ஏன் கொடுக்க கூடாது?" என்று நேரடியாக கேட்டு விட்டாள்.
"ஆனா எனக்கு பயமா இருக்கு... மறுபடியும் அந்த சேர்க்கில் உள்ள போக முடியல" என்றாள் கலக்கமாக...
"ஐ அண்டர்ஸ்டாண்ட்... கொஞ்ச நாள் உங்க வீட்ல இருந்திட்டு என் வீட்ல என்னாலேயே இருக்க முடியல... ஜெயில் போல பீல் ஆச்சு... ஆனா நீ சின்ன வயசில இருந்து அப்படி ஒரு சிச்சுவேஷன்ல வளர்ந்துட்டு இப்போ அங்கே இருக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கும்... பட் இதுக்கு என்ன தான் முடிவு எடுக்க நினைக்கிற?" என்று கேட்டாள்.
பதில் இல்லை பாரதியிடம்...
"ஒன்னு டைவர்ஸ் எடுக்கணும்... அதுக்கும் முடியாது... இல்லன்னா சேர்ந்து வாழணும், அதுக்கும் முடியாதுன்னா இப்படியே ரெண்டு பேரும் இருந்திட போறீங்களா?" என்று கேட்க, "அவர் சேர்க்கில் உள்ள எனக்கு இருக்க முடியும்னு தோணல" என்றாள்.
"அப்போ அவனை உன் சேர்க்கில் உள்ளே எடு" என்று சொல்ல, அவளோ, "அவர் வந்துட்டாலும்" என்றாள் சலிப்பாக...
அதனைக் கேட்டு சிரித்த வசுந்தராவோ, "கண்டிப்பா வருவான்... நான் உன் அண்ணாவோட சேர்க்கில் உள்ள அடாப்ட் ஆயிட்டேன் தானே... நீ முதல் வசி கூட பேசி பாரு, கேட்கலைன்னா மிரட்டி பாரு" என்றான்...
"மிரட்டுறதா? இதெல்லாம் நடக்குமா?" என்று கேட்க, வசுந்தராவோ, "அவன் வீக்னஸ் சொல்றேன் கேட்டுக்கோ, இந்த ப்ரேஸிடீஜ் அண்ட் லாஸ் எல்லாம் அவன் வீக்னஸ்...நீ விட்டு போன நேரம் அவனோட பிரெஸ்டிஜ் போச்சு... உன் விஷயத்துல அவனுக்கு அது தோல்வி தான்... வெளியே காட்டலன்னாலும் மனசுல கண்டிப்பா அந்த பீலிங் இருக்கும்" என்றாள்.
பாரதியோ, "அது தான் பயமா இருக்கு... எல்லாமே வெஞ்சேன்ஸ் வச்சு பண்ணுவார்... விட்டு போன நேரமே மிரட்டுனார். மறுபடி சிகரெட் சூடு வச்ச போல ஏதும் பண்ணிட்டா என்ன பண்ணுறது?" என்று கேட்க, "வெளியே வந்திடு... அதுக்கப்புறம் உன் கிட்ட நான் அவனோட சேர்ந்து வாழ சொல்லி கேட்கவே மாட்டேன்...சகிச்சிட்டு நீ வாழ தேவல... இப்போ எனக்காக ஒரு லாஸ்ட் சான்ஸ்... எனக்கு அவன் லைஃப் உன் லைஃப்ன்னு ரெண்டுமே முக்கியம்... அவன் ரொம்ப கால்குலேடிவ், உன் விஷயத்தை எல்லாம் இப்போ கால்குலேட் பண்ணி வச்சு இருப்பான் கண்டிப்பா இந்த சான்சை மிஸ் பண்ண மாட்டான்" என்றாள்.
நீண்ட நேரம் மௌனமாக யோசித்தாள்.
"எப்போ வீட்டுக்கு போகணும்?" என்று பாரதி கேட்க, அவளோ, "இப்போவே" என்றாள்.
"இப்போவா?" என்று அவள் அதிர, "ம்ம், அப்புறம் மனசு மாறினா என்ன பண்ணுறது? அதுவும் உன் அண்ணா கிட்ட பேசுனா, அவனே உன் மனச மாத்திடுவான்" என்று சொல்ல, பாரதியோ, "ஆனா அண்ணா கிட்ட சொல்லிட்டு தான் வருவேன்" என்றாள்.
வசுந்தராவோ, "அப்போ எனக்கு நம்பிக்கை இல்லை" என்று சொல்ல, பாரதியோ, "கண்டிப்பா அண்ணா கூடவே உங்க வீட்டுக்கு வரேன்... நீங்க ரெடியா இருங்க" என்று சொன்னாள்.
வசுந்தராவும், "ஓகே" என்று தோள்களை உலுக்கிக் கொண்டாள்.
வீட்டுக்கு சென்று விடயத்தை சொன்னதுமே, தாம் தூம் என்று குதித்தான் நரேன்...
"அந்த சைக்கோ கூட வாழ போறியா? வசுந்தரா தானே இதுக்கெல்லாம் காரணம், அவளுக்கு இருக்கு" என்று சொல்ல, பாரதியோ, "நான் எடுத்த முடிவு தான்... போன முறை போல சகிச்சிட்டு எல்லாம் இருக்க மாட்டேன்... ஒரே ஒரு லாஸ்ட் சான்ஸ்... சரி வரலன்னா வெளியே வந்திடுவேன்... அதுக்கப்புறம் டைவர்ஸ் கூட அப்ளை பண்ணிக்கலாம்" என்றாள்.
அவள் டைவர்ஸ் என்று சொன்னதுமே தான் நரேன் அவளை போக விட்டான்...
தங்கை வாழ்க்கை இப்படியே போய் விடுமோ என்கின்ற கவலை அவனுக்கு... விவாகரத்து எடுத்து விட்டால் வேறு கல்யாணமாவது பண்ணி வைத்து விடலாம் என்று யோசித்தான்…
அவளை அழைத்துக் கொண்டே வசிஷ்டன் வீட்டுக்கு கிளம்பினான்... லக்ஷ்மியோ, "ஏதும்னா கால் பண்ணிடும்மா" என்று சராசரி தாயாக பயந்தார்...
செல்லதுரையோ, "சகிச்சிட்டு எல்லாம் வாழணும்னு இல்லை" என்று சொல்ல, அவளும் சம்மதமாக தலையாட்டி விட்டு புறப்பட்டாள்...
அவர்கள் வீட்டு வாசலில் கார் வந்து நின்றதுமே அனைவரும் புருவம் சுருக்கி பார்த்தார்கள்... வசுந்தராவோ அறைக்குள் சென்று அடுக்கி வைத்து இருந்த உடை பெட்டியை தூக்கிக் கொண்டு வந்தாள்.
வசிஷ்டனோ, அவர்களை துளைத்தெடுக்கும் பார்வை பார்த்துக் கொண்டு இருக்க, வசுந்தராவோ, "நான் வரேன்" என்று சொன்னபடி நரேனை நோக்கிச் செல்ல, அவனோ அவள் உடைப்பெட்டியை வாங்கிக் கொண்டே அங்கிருந்து கிளம்பி விட்டான்...
காரில் ஏறியவன், "நினைச்சதை சாதிச்சுட்டே தானே" என்று சற்று கோபமாக வசுந்தராவிடம் கேட்க, "லாஸ்ட் சான்ஸ் தான் நரேன்... சரி வரலைன்னா டைவர்ஸ் எடுத்து கொடுத்து வேற கல்யாணம் பண்ணி வச்சுடலாம்" என்று சொல்ல, சலிப்பாக இரு பக்கமும் தலையாட்டி விட்டு காரை கிளப்பி இருந்தான்...
இதே சமயம் ஹாலில் அவளையே பார்த்துக் கொண்டு இருந்த யாரையும் பார்க்காமல் அறைக்குள் நுழைந்தாள் பாரதி...
அவளையே பார்த்துக் கொண்டு இருந்த வசிஷ்டனும் அவளை தொடர்ந்து உள்ளே நுழைந்து கதவை தாழிட்டவன், "என்ன இந்த பக்கம்?" என்று கேட்டான்... அவளோ உடை பெட்டியை வைத்துக் கொண்டே அவனை நோக்கி திரும்பியவள் அவனை பார்த்தாள் தவிர பதில் சொல்லவில்லை...
அடுத்த கணமே அவளை நோக்கி வேகமாக வந்தவன், அவள் முகத்தை தாங்கி இதழில் ஆழ்ந்து இதழ் பதித்து இருந்தான்...
திடீர் முத்தம்... அதுவும் வசிஷ்டனிடம் இருந்து...
அவள் எதிர்பார்க்கவே இல்லை...
அவன் மார்பில் கையை வைத்து தள்ள முயன்றாள் முடியவில்லை... முத்தம் நீண்டது...
விளைவு அவளும் முதல் முத்தத்தில் அந்த வயதுக்கே உரிய உணர்ச்சியின் தூண்டலில் கண்களை மூடிக் கொண்டாள்.
முத்தத்தில் ஆரம்பித்து அவளை மொத்தமாக கொள்ளையிட ஆரம்பித்தான்...
அவளும் தடுக்கவில்லை... அவள் மூளை தடுக்க சொன்னாலும் மேனி கேட்கவில்லை... உணர்வின் மிகுதியில் அவனுக்கு அடைக்கலம் கொடுத்தும் விட்டாள்.
அவனிடம் இந்த வேகம் அவள் எதிர்பார்க்கவே இல்லை...
அவன் வேகத்தில், அவள் சுடிதாரும் கிழிந்து போனது...
காலம் நேரம் பார்க்காமல் ஒரு கலவி...
மூச்சிரைக்க விட்டத்தை பார்த்துக் கொண்டே படுத்து இருந்தார்கள்...
அவளுக்கு வேறு எங்கோ ஒரு உலகத்துக்கு சென்று விட்டு வந்த போல உணர்வு...
அவள் மனமோ, "மாறிட்டாரா?" என்று குதூகலித்து ஐந்து நிமிடங்கள் கடந்து இருக்காது, "இது கிடைக்கலன்னு தானே விட்டு போன" என்று கேட்டு விட்டான் அவன்...
அவளை பார்க்கவில்லை, விட்டத்தை பார்த்துக் கொண்டு இருந்தான்...
சட்டென அதிர்ந்து திரும்பி பார்த்தவள், "இப்போ என்ன சொன்னீங்க?" என்று கேட்டாள்.
அவளை திரும்பி சாவகாசமாக பார்த்தவன், "உனக்கு இது தானே தேவைப்பட்டிச்சு... இதுக்கு தானே படிக்கிற வயசுன்னு கூட யோசிக்காம என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட... கிடைக்கலன்னு சொன்னதும் விட்டு ஓடிட்டே தானே" என்று பேச, அவளுக்கோ செருப்பால் அடித்த உணர்வு...
ஏதோ உடல் தேவைக்காக தன்னிடம் வந்த போல அவன் பேசுவதை அவளால் ஜீரணிக்க முடியவே இல்லை...
காதல் என்கின்ற ஒன்று அவனுக்கு தெரியாதா? என்ற எண்ணம் தான் அவளுக்கு தோன்றியது...
தன்னை போர்வையால் மறைத்துக் கொண்டே எழுந்து அமர்ந்தவள், "அப்போ நான் பிஸிக்கல் ரிலேஷன்ஷிப்புக்கு தான் அலையுறேன்னு நினைக்கிறீங்களா?" என்று கேட்க, அவனோ, "நான் உன்னை அவதானிச்ச வரைக்கும் எனக்கு அப்படி தான் தோணிச்சு... இனி ஷெடியூல்ல நைட் வன் ஹவர்க்கு இதுக்கும் நேரம் ஒதுக்கிடலாம்... ஐ ஆம் ரெடி டு ஹாவ் பிஸிக்கல் ரிலேஷன்ஷிப் டெய்லி, உன்னால டெய்லி முடியாதுன்னா வீக்லி த்ரீ டேய்ஸ் ஓகே" என்றான்...
அவளுக்கோ, 'இவன் திருந்தவே மாட்டானா? இதுக்கும் ஷெடியூல் ஆஹ்?' என்று தான் தோன்றியது... சற்று முன்னர் மேனியில் தோன்றிய பரவசம் எல்லாம் மொத்தமாக வடிந்து விட்டது அவளுக்கு...
அவன் தன்னை இப்படி தரக்குறைவாக கணித்து இருக்கின்றான் என்று நினைக்கும் போதே சற்று முன் அவன் ஸ்பரிசித்த மேனி எரிந்தது... தன்னையும் மீறி கண்ணீர் வழிய துடைத்துக் கொண்டாள்.
அவன் நிஜமாகவே அப்படி நினைத்து இருக்கின்றானா இல்லை தான் விட்டுச் சென்றதற்காக இப்படி பேசி பழி வாங்குகின்றானா என்றும் அவளுக்கு கணிக்க முடியவே இல்லை...