vallimotcham
Member
Nice
Intresting sisமழை 14
அவள் நீட்டிய செருப்பை பறித்து கீழே போட்ட நரேனோ, "என்னடி ஆச்சு?" என்று கேட்டான்...
அவளோ கையை நீட்டியவள், "இங்க பாரு" என்றாள்...
சிகெரெட் சூட்டை அதிர்ந்து பார்த்தவனோ, "என்ன நடந்திச்சுன்னு எனக்கு முதல் இருந்து சொல்லு" என்று கேட்க, அவளும் அழுதழுது குழந்தை போல எல்லாமே சொன்னாள்.
அவனுக்கு அவள் குழந்தை தானே...
அவன் மார்பில் சாய்ந்து விம்மி விம்மி அழுதவள், "நீ சொன்ன அப்போவே நான் கேட்டு இருக்கணும்... என் தப்பு தான்... எனக்கு இங்க இருக்க மூச்சு அடைக்குது... என்னை அழைச்சிட்டு போ அண்ணா" என்றாள். அவனுக்கோ அவள் சொல்வதை கேட்டதுமே ரத்தம் கொதித்தது...
"வா" என்று சொல்லிக் கொண்டே அவள் கையை பிடித்து இழுத்துச் செல்ல, வசிஷ்டன் அறையை நோக்கி தான் அவன் செல்கின்றான் என்று அவளுக்கு புரிந்தது...
"இங்க வேணாம், வீட்ல பார்த்துக்கலாம்" என்று அவள் கெஞ்சியதை எல்லாம் அவன் பொருட்படுத்தவே இல்லை...
அவளை இழுத்துக் கொண்டே வசிஷ்டனின் அறைக்குள் நுழைந்தான்...
அங்கே அவனோ லேப்டாப் முன்னே அமர்ந்து இருக்க, உள்ளே நுழைந்தவனை புருவம் சுருக்கி பார்த்தான்.
வந்த வேகத்தில் அவன் ஷேர்ட்டில் கையை வைத்து எழ வைத்தவன், "அவள என்னடா பண்ணி வச்சு இருக்க?" என்று சீறினான்...
"கையை எடுடா, இது காலேஜ்" என்று வசிஷ்டன் சீற, "நீ பண்ணுன வேலைக்கு ரோட்ல வச்சு உனக்கு அடிக்கணும்" என்று முடிக்கவில்லை, அவனுக்கு ஓங்கி முகத்தில் குத்தி இருந்தான் வசிஷ்டன்...
அவனோ தடுமாறி பின்னால் விழ போனவன், காலை குத்தி சமன் செய்துக் கொண்டான்...
"காலேஜ் ல வந்து மேல கை வைக்கிற" என்று வசிஷ்டன் சீற, நரேனுக்கும் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் மாறி அவன் முகத்தில் குத்தி இருந்தான்...
இந்த கை கலப்பை பாரதி எதிர்பார்க்கவே இல்லை...
வசிஷ்டன் அவ்வளவு விரைவாக நிதானம் இழந்து விட மாட்டான்...
ஏற்கனவே பாரதியினுடன் உண்டான தகராறினால் சமநிலை இன்றி இருந்தவனுக்கு தன்னை இன்று கட்டுப்படுத்த முடியாமலே போய் விட்டது...
பாரதியோ ஓடிச் சென்று நரேனை பிடித்தவள், "ப்ளீஸ் அண்ணா இது காலேஜ்" என்று கெஞ்சிய போதிலும் அவர்கள் மாறி மாறி ஷேர்ட்டை பிடித்துக் கொண்டு தான் நின்று இருந்தார்கள்...
அவள் பேச்சு அங்கே ஈடுபடவே இல்லை... இறுதியில் சத்தம் கேட்டு எச்.ஓ. டி அங்கே வந்ததும் தான் அவர்கள் தன்னிலை அடைந்து ஒருவரில் இருந்து அடுத்தவர் பிரிந்தார்கள்...
உள்ளே வந்தவரோ, "அப்போ இருந்து இப்போ வரைக்கும் சண்டை தானாடா போட்டுக்கிட்டு இருக்கீங்க" என்று கேட்டுக் கொண்டே, விஷயத்தை பிரின்சிபால் வரை கொண்டு செல்லாமல் தீர்க்க முற்பட்டார்...
விஷயத்தை அவரிடம் விலாவரியாக சொல்லவில்லை... ஆனால் காலேஜில் கைகலப்பில் ஈடுபட்டதால் பெர்சனல் இஸ்ஸு என்று மேலோட்டமாக சொன்னார்கள் இருவரும்...
"உங்க பர்சனல் வீட்ல இருக்கட்டும்... இது காலேஜ் புரியுதா?" என்று சொல்ல, நரேனோ, "சாரி சார்" என்று சொன்னவன் வசிஷ்டனை பார்த்து, "இனி அவ உன் கூட வாழவே மாட்டா..." என்று ஆக்ரோஷமாக சொல்ல, அவனோ சட்டென்று பாரதியை பார்த்தான்...
அவளோ குனிந்தபடி இருந்தாள்... "பாரதி இப்போ மட்டும் நீ போன, அப்புறம் நடக்கிறதே வேற" என்றான் மிரட்டலாக...
"அப்படி என்னடா பண்ணிடுவ? நான் இருக்கேன் அவளுக்கு..." என்று நரேன் சொல்ல, வசிஷ்டனை ஏறிட்டு பார்த்த பாரதியோ, "எனக்கு உங்க கூட வாழ முடியாது" என்றாள் அவன் விழிகளை பார்த்துக் கொண்டே...
அவளை முறைத்துப் பார்த்து விட்டு அங்கே இருந்து வெளியேறி, தனது அறைக்குள் வந்த வசிஷ்டனுக்கோ இன்னுமே கோபம் வந்தது...
ஏமாற்றம், தோல்வி என்றால் அவனால் தாங்கவே முடியாது... அதுவும் தன்னை மீறி ஒன்று நடந்தால் உக்கிரமாகி விடுவான்...
பாரதி விடயத்தில் மொத்தமாக தோற்று விட்டான்...
அதுவும் அவனை மீறி அவள் அவனை விட்டு போய் விட்டாள்.
ஆத்திரம் எல்லை மீற நீரை அருந்தி அடக்கிக் கொண்டான்...
"வாழ முடியாது" என்று அவள் சொன்ன பிறகு அவள் பின்னால் கெஞ்சும் குணம் உடையவன் அல்ல அவன்...
அவளே திரும்ப வர வேண்டும் என்று எதிர்பார்ப்பவன்...
அவள் திரும்ப வரும் அளவுக்கு அவன் அவளுக்கு ஒன்றும் நல்லது செய்து விடவில்லை என்று அவனுக்கே தெரியும்...
இருக்கும் நிலையில் கோபப்பட்டு பிரச்சனையை பெரிதாக்காமல் மௌனமாக இருக்க யோசித்தான்...
பாரதியை திருமணம் செய்ய முதல் எப்படி மௌனமாக இருந்து காரியத்தை செய்தானோ, அதே போன்ற மௌனம்... இடைப்பட்ட காலத்தில் தான் அடக்க முடியாமல் உணர்வுகளை வெளிபடுத்தி இருந்தான்...
மீண்டும் அதே மௌனம் அவனிடம்...
ஆழ்ந்து யோசித்தான்...
தன் மீது அவனால் பழியை போட்டுக் கொள்ள முடியவில்லை...
"தப்பு பண்ணினா தண்டிச்சேன்... அதுக்கு ஏன் விட்டு போகணும்?" என்று தான் யோசித்தான்...
அவள் விட்டுச் சென்ற காரணத்தை அவன் மூளை ஆராய்ந்தது...
மூளை சொல்வதை தான் இப்போதும் கேட்டான்...
லாஜிக் ஆக நினைத்தான்...
சற்று செண்டிமெண்ட்டாக யோசித்து இருந்தால் கூட அவள் மனம் அவனுக்கு புரிந்து இருக்குமோ என்னவோ?
இதே சமயம் வீட்டுக்கு பாரதியை அழைத்துக் கொண்டே வந்த நரேனை அனைவரும் அதிர்ந்து பார்த்தார்கள்...
ஹாலில் நின்ற வசுந்தராவோ, "என்ன நரேன் ஆச்சு?" என்று கேட்க, அவனோ கோபமாக, "என்ன ஆச்சா? உன் சைக்கோ அண்ணன் என்ன பண்ணி வச்சு இருக்கான் தெரியுமா?" என்று கேட்க, அவளுக்கோ அந்த சைக்கோ என்கின்ற வார்த்தை கோபத்தை தான் கொடுத்தது...
கூட பிறந்தவன் அல்லவா?
"நரேன் மைண்ட் யோர் வேர்ட்ஸ்" என்றாள்.
"என்னடி மைண்ட் யோர் வேர்ட்ஸ்? கைல சூடு வச்சு இருக்கான் சிகரெட்டால" என்றான் ஆக்ரோஷமாக...
லக்ஷ்மியோ, "ஐயோ" என்று பதறிக் கொண்டே, அவள் கையை பற்றி பார்க்க, "அம்மா சின்ன காயம் தான்" என்று கையை உருவிக் கொண்டவளுக்கோ படபடப்பாக இருந்தது...
தன்னால் நரேனுக்கும் வசுந்தராவுக்கும் சண்டை வந்து விடுமோ என்று பயம் அவளுக்கு... அவள் பயந்த போலவே போர் ஆரம்பமானது...
"அவன் ஒண்ணும் அப்படி பண்ண மாட்டான்... உன் தங்கச்சி தான் ஏதும் பண்ணி இருப்பா" என்று சொல்ல, "ஓஹோ, உன் அண்ணன் மேல அவ்ளோ நம்பிக்கையா? கல்யாணம் பண்ணி போய் என்ன பண்ணினான் தெரியுமா?" என்று நடந்த அனைத்தையும் சொல்ல, வசுந்தராவோ, "அவன் பண்ணுனதுல என்ன தப்பு? நான் படிக்கும் போது இருந்த போல அவளும் இருக்கணும்னு எதிர்பார்க்கிறான்... டிசிப்ளின் ஆஹ் இருக்கிறது தப்புன்னு சொல்றியா? எனக்கும் தான் உங்க வீடு க்ளப் போல இருக்கும்... நான் அட்ஜஸ்ட் பண்ணி மாறி இருக்கேன்... உன் தங்கச்சிக்கு மாற முடியாதா?" என்று கேட்க, பாரதிக்கு கண்கள் கலங்கி விட்டது...
"என்னடி லூசு போல பேசிட்டு இருக்க? நீ மாறுனதும் அவ மாறுறதும் ஒண்ணா... அடக்குமுறைல இருக்கிறவங்க சுதந்திரமா மாறலாம்... ஆனா சுதந்திரமா இருக்கிறவங்க அடக்கு முறைக்குள்ள போக முடியாது... அது ரொம்ப கஷ்டம்... அவ பீலிங் எப்படி இருக்கும்னு எனக்கு புரியும்... ஆனா உனக்கு புரியாது..." என்றான்...
"யாரு லூசு போல பேசுறா? நீ தான் லூசு போல பேசிட்டு இருக்க... டிசிப்ளின் ஆஹ் இருக்கிறது தப்புன்னு சொல்றியா?" என்று மறுபடி கேட்டாள்.
"நானும் பார்த்துட்டே இருக்கேன்... டிசிப்ளின் டிசிப்ளின்ன்னு பெருசா பீத்திக்கிற... ஒரு வகையான சைக்கோ குடும்பம் உன்னோடது" என்றான் ஆத்திரத்தில்...
"என் குடும்பம் சைக்கோவா? உன் குடும்பம் தான் லூசு குடும்பம்" என்றாள் அவளும் ஆத்திரத்தில்... வார்த்தைகள் தடித்தன...
செல்லதுரையோ, லக்ஷ்மியிடம், "உள்ள வா லக்ஷ்மி, இதுல நாம நின்னா மரியாதை இல்ல" என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைய, பாரதியோ, "ரெண்டு பேரும் என்னால சண்டை போடாதீங்க ப்ளீஸ்" என்றாள் கெஞ்சுதலாக...
"நீ வாய மூடு" என்று கோபத்தில் வசுந்தரா அவளுக்கு திட்ட, "அவளை எதுக்கு திட்டுற?" என்று கேட்டான் நரேன்...
"ஆமா குழந்தை பிள்ளை பாரு..." என்று அவள் மாறி திட்ட, நரேனோ, "அப்போ சிகரெட்ல சூடு வச்சதும் சரின்னு சொல்றியா?" என்று கேட்க, அவளோ, "அப்போ சிகரெட் பிடிக்க போனது உனக்கு தப்பா தெரியல... சூடு வச்சது தான் தப்பா?" என்று கேட்டாள்.
"வசுந்தரா, நீ ரொம்ப ஓவரா பேசிட்டு இருக்க" என்று சொல்ல, "என்ன ஓவரா பேசிட்டேன்? நீ என் அண்ணனை சைக்கோன்னு சொல்லுவே... குடும்பத்தை சைக்கோன்னு சொல்லுவே... நான் பார்த்துட்டு இருக்கணுமா? உன்னை போய் லவ் பண்ணினேன் பாரு... அது என் தப்பு" என்றாள்.
அவனுக்கோ சுர்ரென்று கோபம் வந்து விட்டது...
"வாழ முடியலைன்னா போடி" என்று திட்டி விட்டான்...
அதன் பிறகு அவளை கேட்க வேண்டுமா?
"என்னையே போக சொல்லிட்ட தானே... இப்போவே போறேன்... இனி மறந்தும் உன் வீட்டு வாசல் மிதிக்க மாட்டேன்..." என்று ஆத்திரத்தில் உடைகளை அடுக்க போக, பாரதியோ, "அண்ணி" என்று சொல்லிக் கொண்டே அவள் பின்னால் ஓடிச் சென்றாள்.
வசுந்தராவோ, உடைகளை அடுக்கிக் கொண்டே, தனது கையை பிடித்த பாரதியின் கரத்தை உதறி விட்டாள்.
நரேனோ, "போனா போய் தொலையட்டும் நீ, விடு" என்றான் பாரதியிடம்...
"என்னண்ணா பேசிட்டு இருக்க?" என்று சொன்ன பாரதிக்கு குற்ற உணர்வு தான்...
"அண்ணி ப்ளீஸ், இதுக்கெல்லாம் வீட்டை விட்டு போவாங்களா?" என்று கார் கீயை எடுத்தவளின் கையை மறுபடி பிடிக்க, அவளோ, பாரதியை அழுத்தமாக பார்த்தவள், "அப்போ நீ வசி கூட வாழு, நான் இங்க இருக்கேன்" என்றாள்.
சட்டென்று கையை பாரதி விட, "முடியாதுல... எனக்கும் முடியாது... நீ எப்போ என் அண்ணன் கூட வாழுறியோ, அன்னைக்கு நான் உன் அண்ணன் கூட வாழுறேன்" என்று சொல்லி விட்டு வீட்டை விட்டு வெளியேற அவள் முதுகை வெறித்து பார்த்துக் கொண்டே நின்று இருந்தான் நரேன்...
அவள் அழுத்தமானவள் என்று அவனுக்கு நன்கு தெரியும்...
சொன்ன போல செய்யாமல் விட மாட்டாள் என்றும் தெரியும்... அதற்காக மீண்டும் பாரதியை பலி கொடுக்க நரேன் விரும்பவே இல்லை...
தன் வாழ்க்கை போனாலும் பரவாயில்லை அவளை படுகுழியில் தள்ள கூடாது என்று முடிவெடுத்தான்.
கார் சத்தம் கேட்டு ஹாலுக்குள் வந்த லக்ஷ்மியோ, "என்னடா?" என்று அதிர்ந்து கேட்க, "பாரதி அங்கே போனா தான் மேடம் இங்க வருவாங்களாம்" என்று நக்கலாக சொன்னான் நரேன்...
இதற்கு மேல் அவர்களாலும் என்ன பேசி விட முடியும்...
இதே சமயம் வசிஷ்டனோ, "கொஞ்சம் பர்சனல் இஸ்ஸு, நானும் பாரதியும் பிரிஞ்சு இருக்கோம்" என்று தாய் தந்தையிடம் சொல்லி முடிக்க முதல், கையில் பெட்டியுடன் வீட்டுக்குள் நுழைந்தாள் வசுந்தரா...
கோமளாவோ, "உனக்கு என்ன ஆச்சு?" என்று கேட்க, "எனக்கும் பர்சனல் இஸ்ஸு" என்று சொல்லிக் கொண்டே யாரையும் பார்க்காமல் அறைக்குள் சென்று அடைத்துக் கொண்டாள்.
வசிஷ்டனுக்கும், பாரதிக்கும் மனமாற்றம் இருக்கவில்லை...
ஆனால் காதல் கொண்ட நரேனுக்கும்,வசுந்தராவுக்கும் மாதங்கள் கடக்க, கோபமும் போய் இருந்தது...
ஆனால் வசுந்தராவின் அழுத்தம் அவளை நரேனுடன் சேர விடவே இல்லை...
நரேன் மெசஜ் அனுப்பி பார்த்தான், நேரில் சென்று பேசி பார்த்தான்...
பயன் இல்லை... உறுதியாக இருந்தாள்.
"பாரதி வசிஷ்டனுடன் வாழ்ந்தால் தான் நான் வருவேன்" என்று சொன்னாள்.
மாதங்கள் வருடத்தை தொட்ட போதும் பிரிவில் தான் இருந்தார்கள்...
வசிஷ்டனை பாரதி காலேஜில் நிமிர்ந்து கூட பார்க்க மாட்டாள்...
ஆனால் அவன் பார்ப்பான்...
அவள் இழந்த சந்தோஷத்தை எல்லாம் வீட்டில் மீளவும் பெற்றுக் கொண்டாள்.
அவள் இறுதி வருடத்துக்குள் நுழைந்த போது தான் இந்த விஷயம் நடந்தது...
வசுந்தராவுக்கோ நரேனை பிரிந்த ஏக்கம்... அதே ஏக்கம் அவனிடமும் இருந்தது...
அதனாலேயே அவன் கேட்டதும் அலுவலகம் என்று கூட பார்க்காமல் அவனுடன் இருக்க சம்மதித்து இருந்தாள்.
அவளை தீண்டும் வரை கட்டுப்பாடாக இருந்தவனுக்கு இப்போது முடியவில்லை...
அவளை பார்க்கும் போதெல்லாம் காதலும் மோகமும் கரை புரண்டு ஓடியது...
அதன் விளைவு இன்று அவள் கையை பற்றி வசிஷ்டனுடன் முரண்பட்டு விட்டான்...
கடந்த கால நினைவுகளில் இருந்து நிகழ் காலத்துக்கு வந்தவர்கள், தத்தமது வீட்டுக்குள் வந்த போதும் பேசிக் கொள்ளாமல் அறைக்குள் புகுந்துக் கொண்டார்கள்.