பிரம்மா 3
அவளோ அப்படியே மண்டியிட்டு அமர்ந்து இருக்க, அவன் அறைக்குள் நுழைந்தான் மதன். அவனைக் கண்டதுமே அவள் விழிகள் அதிர்ச்சியில் விரிந்து கொண்டன. ஆம் அவளது நண்பர்கள் மூவரும் தொலைந்த சமயம், அவனிடம் தான் கேள்வி மேல் கேள்வி கேட்டு இருந்தார்கள் பிரசாத்தும் காயத்ரியும். அவன் அப்போது சொன்ன ஒரே வசனம் "நான் உள்ளே போக அனுமதியே இல்ல, உள்ளே என்ன நடக்குதுன்னு எனக்கும் தெரில, வேற யாரும் உள்ள போய் பார்த்தா தான் தெரியும்" என்று தான். ஆனால் இன்று அவனோ சித்தார்த்தின் அறைக்குள் நுழைந்து இருக்கின்றான் அல்லவா? அவனைக் கண்டதுமே அவளுக்கு பொறுமை இன்றி கோபம் எகிற "டேய் துரோகி!! எங்க கிட்ட எப்படி எல்லாம் பொய் சொன்ன? நல்லா இருப்பியா? என்னையும் கொண்டு வந்து இங்க சிக்க வச்சு இருக்க.. மனுஷனா நீ? உன்னை சும்மா விட மாட்டேன், விடவே மாட்டேன்" என்று வீர வசனம் பேச, எரிச்சலில் கண்களை மூடித் திறந்த சித்தார்த்தோ "ஷட் அப்" என்று சீறியவன் மேலும் "எப்போ பார்த்தாலும் லொட லொடன்னு பேசிகிட்டு இருக்காம சும்மா இரு.. எனக்கு விசுவாசமா இருக்கிறவன் உனக்கு துரோகி. அவ்ளோ தான்" என்று சொல்ல அவளுக்கோ அவனை மீறிப் பேச வாயும் வர வில்லை. பேச நினைத்தால் கூட பீட்டர் கண் முன்னே வந்து போக, உண்டான கோபத்தை எல்லாம் அடக்கிக் கொண்டே அவர்களை முறைத்துக் கொண்டே அமர்ந்து இருக்க, மதனோ அவளை கேலியாக பார்த்து புன்னகைத்து விட்டு "சார், இவ ட்ரெஸ் எல்லாம் ஆய்வுகூட லேபர்ஸ் தங்குற இடத்துல வச்சு இருக்கேன்" என்று சொல்ல, அவனோ அழுத்தமாக இல்லை என்று தலையாட்டினான்.
அதைக் கேட்ட மதன் யோசனையாக புருவம் சுருக்க, "அவனுங்க மூணு பேரும் கூட பரவாயில்லை, பட் ஷீ இஸ் டேஞ்சரெஸ்.. பெயர் தான் போலீஸ்காரி ஆனா பக்கா கிரிமினல் வேலை பார்க்கிற போல இருக்கா, அவனுங்க கூட தங்க வச்சா, அப்புறம் கூட்டா சேர்ந்து பிளான் போடுவா. சோ என்னோட ப்ளோர்ல இவளை தங்க வச்சுக்கலாம். எனக்கும் டைம் பாஸ் ஆகும்" என்று சொல்ல, மதனோ "ஆனா சார்" என்று இழுக்க, "ஒஹ், அங்க வசதி அதிகம்னு யோசிக்கிறியா? " என்று கேட்டான் அவனும் "ம்ம்" என்று சொல்ல காயத்ரிக்கு கோபம் உச்சத்தில் வந்தது. அவளோ மனதுக்குள் "கடவுள் வரம் கொடுத்தா கூட பூசாரி வரம் கொடுக்க மாட்டான் போல இருக்கே, இப்போ நான் சொகுசா வாழ்ந்தா இவனுக்கு என்ன கடுப்பு?" என்று நினைக்க, சித்தார்த்தோ "தென் அந்த ரூம்ல இருக்கிற ஃபசிலிடீஸ் எல்லாம் தூக்கிடு, ஒரு பாய் மட்டும் கொடு" என்று சொல்ல, காயத்ரியோ மனதுக்குள் "இருக்கிற வசதி எல்லாம் தூக்கிட்டு ரூம் தர்ற ஆள் இவனுங்களா தான் இருப்பானுங்க" என்று கடுப்பாக நினைத்துக் கொண்டாள்.
மதனும் அவன் சொன்னதற்கு சம்மதமாக தலையாட்டியபடி சென்று விட, சித்தார்த்தோ மடிக் கணனியில் அமர்ந்து வேலையைப் பார்க்க தொடங்கி விட்டான். அவளும் எவ்வளவு நேரம் தான் அப்படியே அமர்ந்து இருப்பாள்? அவளோ சித்தார்த்தைப் பார்த்தபடி மண்டியிட்டு அமர்ந்து இருக்க, அந்த அறைக்குள் அவள் பின்னால் ஆட்கள் வருவதும் போவதுமாக இருக்க, அவளுக்குத் தான் யார் வருகிறார்கள் போகின்றார்கள் என்றும் கூட தெரியவே இல்லை.
வந்தவர்கள் கூட தமது வேலையைப் பார்த்து விட்டுச் சென்றார்களே தவிர அவளை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவளால் அடக்க முடியாதளவு இயற்கை அழைக்க, கஷ்டப்படி எழுந்தவள் "சார் கை ரொம்ப வலிக்குது" என்று சொன்னாள். அவனோ அவளை ஏறிட்டுப் பார்த்து, பக்கத்தில் நின்று கொண்டு இருந்தவரிடம் கண்களைக் காட்ட அவனோ அவளை நோக்கிச் சென்று இரு கைகளையும் கழட்டி விட்டான். ஆனால் இம்முறை அவள் முட்டாள் தனமாக யாரையுமே அடிக்க எத்தனிக்கவில்லை. அதற்கு பலமும் அவளுக்கு இருக்கவே இல்லை.
அவனோ அவளை ஏறிட்டுக் கூடப் பார்க்காமல் இருந்த போதிலும் தனது தேவையை அவனிடம் உணர்த்த வேண்டிய கட்டாயம் அவளுக்கு, உடனே அவனை நோக்கி தயங்கி தயங்கி நடந்து வந்தவள் "சார்" என்று ஒற்றை விரலை தூக்கி காட்ட அவனோ "எலெக்ஷன்ல நிற்க போறியா??" என்று கேட்டான். அவளோ "எத எலெக்ஷனா??" என்று கேட்டவள் கையை இறக்கி விட்டுக் கொண்டே "வாஷ் ரூம் போகணும்" என்று சொல்ல அவளை ஏறிட்டு கூரிய விழிகளால் பார்த்தவன் கண்களாலேயே வழியைக் காட்ட அவளோ "ம்ம்" என்று தலையாட்டியபடி நடந்து சென்றாள். அவன் அறைந்த அறையினால் தாடை வேறு வலிக்க, தன்னிலையை நினைத்து பொங்கி வந்த கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டே பாத்ரூம் கதவை திறந்தாள். உள்ளே பாத்ரூமை கழுவிக் கொண்டே இருந்த ஆண்மகனோ "சாரி மேடம் கொஞ்ச நேரத்தில முடிஞ்சிடும்" என்று சொல்ல அவளோ அதிர்ச்சியுடன் அந்த குரலில் ஸ்தம்பித்து போனாள். அடுத்த கணமே "டேய் அமல் என்னடா பண்ணுற இங்க?" என்று கேட்க சட்டென நிமிர்ந்தவன் "நீ ஏண்டி இங்க வந்த?" என்று அக்கறையாக கேட்டான். அவளோ "உங்கள தேடி தாண்டா வந்தேன். அந்த மதன் நம்ம எல்லாரையுமே ஏமாத்திட்டான். துரோகி.. இப்படி நல்லா மாட்டிக்கிட்டேன்... இங்க பாரு அறைஞ்சு ரத்தம் வேறு வருது" என்று இதழ்களை கட்ட அவனோ அதனை சாதாரணமாக பார்த்தவன் "இவ்ளோ தானா??" என்று தான் கேட்டான். ஏன் என்றால் அவர்கள் பட்ட துன்பம் இதை விட அதிகம் அல்லவா? அந்த கேள்வியிலேயே நிதர்சனம் உணர்ந்தவள் "நீ எல்லாம் எப்படி பட்ட பொலிஸ்?? உன்னை போய் பாத்ரூம் கழுவ வச்சு இருக்காங்களே" என்று நண்பனின் வீரத்தை நினைக்க அவனோ சலிப்பாக "அதை மட்டும் நினைவு படுத்தாதடி.. லைட்டா நெஞ்சு வலிக்குது" என்று சொன்னான். அவளோ "அந்த வளர்ந்து கெட்ட சயின்டிஸ்ட்டை சும்மா விட கூடாதுடா.. அவனை அர்ரெஸ்ட் பண்ணி தெரு தெருவா இழுத்துப் போகணும்.. அப்போ தான் என் மனசு ஆறும்" என்று சொல்ல அவள் நண்பனோ " விஜயசாந்தி போல பேசாதடி.. விளைவு பயங்கரமா இருக்கும்" என்று சொல்ல அவளோ "அப்படி என்ன பயங்கரமா இருக்கும்?? அவன் என்ன பெரிய பருப்பா?? வீ ஆர் போலீஸ்" என்று சொல்லிக் கொண்டே வாசலை நோக்கி திரும்ப அங்கே மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக் கொண்டே அவளையே அழுத்தமாக பார்த்தபடி நின்று இருந்தான் சித்தார்த். உடனே அமல் "போச்சு போ" என்று சொல்லி அடுத்த காணம் அவனது ஒற்றை சொடக்கிலும் கண்ணசைவிலும் பாத்ரூம் கழுவும் பொறுப்பு அமலிடம் இருந்து காயத்ரிக்கு மாறி இருந்தது. அமலோ "பாவம் சார்" என்று ஆரம்பிக்க "அவுட்" என்று அவனைப் பார்த்து அழுத்தமாக சொன்னவன் காயத்ரியை பார்த்து சொடக்கிட்டு "போலீஸ்னா பெரிய கொம்பா? நான் சொல்லும்.வரை இங்கேயே இருந்து பாத்ரூமை கழுவிட்டே இருக்கனும்.. ரைட்??" என்றவன் பாத்ரூம் கதவை வெளியே தாளிட்டு விட்டு செல்ல அன்று தான் முதல் முறை சுத்தமான தரையை திரும்ப திரும்ப தேய்த்து கழுவும் போது உண்டாகும் சலிப்பு எப்படி இருக்கும் என்று உணர்ந்தாள்.
கிட்டத்தட்ட அவளை இரு மணி நேரம் பாத்ரூமிலேயே அடைத்து வைத்தவன் வேலையாளை விட்டு பாத்ரூமை திறந்து விட, அவளோ களைப்புடன் வெளியே வந்தவளுக்கு நடக்க கூட முடியவே இல்லை. ஆனால் அவனோ அவள் களைப்பை உணர்ந்தாலும் கொஞ்சமும் இரக்கம் இன்றி "எனக்கு ஸ்ட்ராங் ஆஹ் ஒரு காபி போட்டு கொண்டு வா" என்றவன் தன்னுடன் நின்றவனிடம் "அவளுக்கு கிச்சனைக் காட்டு" என்று சொன்னான். அவனும் "ம்ம்" என்று சொல்லிக் கொண்டே அவளை அழைத்துச் செல்ல, அவளுக்கோ "கொஞ்சம் கூட இரக்கமே இல்லாம இவ்ளோ வேலை வாங்குறானே. போலீஸ் ட்ரெயினிங்ல கூட நான் இவ்ளோ டயர்ட் ஆனது இல்ல" என்று நினைத்துக் கொண்டே அவனைப் பின் தொடர்ந்தாள்.
அழைத்து வந்தவன் காட்டிய சமையல் அறையில் நின்று காபி போட்டவளுக்கோ கோபத்தில் கண்ணீர் கூட வரப் பார்த்தது. ஆனால் அழக் கூடாது என்கின்ற வைராக்கியத்தில் கண்ணீரை உள்ளே இழுத்துக் கொண்டே காபியை கையில் எடுத்தவள் ட்ரேயில் வைத்து அவனிடம் கொடுக்க நடந்து சென்றாள். இரு பக்கமும் உலோகத்தினால் செய்யப்பட்ட வழியில் யாருமே இல்லாமல் இருக்க, ஆங்காங்கே சி.சி.டி.வி கமெரா மட்டும் இருந்தது.
அவனுக்கு கொடுப்பதற்காக, கையில் காபி கப்புடன் வந்தவள் மனமோ இப்போது தீயாக தகித்தது. அவளது பதவி என்ன? அவள் இப்போது செய்து கொண்டிருக்கும் வேலைகள் என்ன? என்று நினைத்தவளுக்கு ஆத்திரம் தலைக்கு எகிறியது. பாத்ரூம் கழுவும் ஆயாவாக ஆகி விட்டாள் அல்லவா? போதாததற்கு இப்போது சமையல்காரி வேலை வேறு. நடந்து செல்லும் வழியில் சுற்றும் முற்றும் பார்த்தவள் அங்கே சுழன்று கொண்டு இருக்கும் சி.சி.டி.வி மறுபக்கம் திரும்பும் கணத்தில் கையில் இருந்த காபியினுள் காறித் துப்பினாள். அவளுக்கோ கோபத்தை எப்படி காட்டி அவனை பழிவாங்குவது என்று தெரியாமல் இருக்க , சிறைப்பட்ட அவளால் செய்யக் கூடிய சிறிய பழிவாங்கும் படலம் இது ஆகிப் போனது. அப்படியே அவனது அறைக்குள் நுழைந்தவன் அவள் மேசையில் காபி கப்பை வைத்துக் கொண்டே "சார் காபி" என்று சொன்னாள். அவனோ இறுகிய முகத்துடன் லேப்டாப்பில் இருந்து கண்களை அகற்றியவன் காபியை எடுத்து வாயருகே கொண்டு சென்று விட்டு அவளை நிமிர்ந்து பார்க்க, அவளுக்கோ அவன் குடித்து விடுவான் என்கிற ஒரு அற்ப ஆசையில் கண நேரத்தில் முகம் மலர்ந்தது. ஆனாலும் அதனைக் காட்டாமல் உணர்வுகளை சட்டென மறைத்துக் கொள்ள, அவனோ அவளை உறுத்து விழித்துக் கொண்டே அதனுள் துப்பியவன் அதனை மேசையில் வைக்க அவள் விழிகளோ அதிர்ச்சியில் விரிந்து கொண்டன. அவனோ அவளை எரித்து விடுவது போல பார்த்தவன் அருகே நின்ற காவலாளிகளிடம் சொடக்கிட அவர்கள் ஒவ்வொருவராக வந்து அந்த காபி கப்பினுள் துப்பி விட்டு செல்ல அதை விழி விரித்துப் பார்த்துக் கொண்டு நின்றாள் காயத்ரி. அனைவரும் துப்பி முடிய முன்னே என்ன நடக்கின்றது என்று புரியாமல் கையை பிசைந்து கொண்டு நின்ற காயத்ரியின் முன்னே தனது லேப்டாப்பைக் காட்ட அதில் அவள் காறித் துப்பியது கண்ணுக்கு புலப்படாதவாறு பொருத்தப்பட்டு இருந்த நுண்ணிய கமெரா மூலம் ஒளிபரப்பாக அவளோ வாயில் இரு கைகளையும் வைத்தாள். அவனோ அவளை விஷமமாக பார்த்தபடி " குடி" என்று முன்னே இருந்த காபியைக் கண்களால் காட்டியபடி சொல்ல அவளுக்கோ அருவருப்பில் வாந்தி வராத குறை தான். அடுத்த கணமே "சார். இது நியாயமே இல்ல.. நான் ஒருத்தி தான் துப்பினேன். ஆனா இவ்ளோ பேர் துப்புனதை எப்படி சார் குடிக்க முடியும்??" என்று கேட்க அவனோ "உன்னைக் குடிக்க சொன்னேன்" என்றான் அழுத்தமாக. அவளோ கெஞ்சும் குரலில் "ப்ளீஸ் சார்.. இதுல யாருக்கு என்ன நோய் இருக்குன்னு கூட தெரில" என்று சொல்ல அவனோ “உனக்கு எதுவும் வராம நான் பார்த்துகிறேன்.. இப்போ குடி" என்று சொன்னான். அவளது கண்கள் கூட இதை நினைத்து கலங்கிப் போக "ப்ளீஸ் சார் வேணாம்" என்றவள் மனமோ "மயங்கி விழுடி காயத்ரி. இல்லன்னா இந்த வளர்ந்து கெட்டவன் குடிக்க வச்சிடுவான்" என்று நினைக்க பேசிக் கொண்டு இருந்தவாறே அவள் நிலத்தில் விழுந்தாள். அதற்கு அவனிடமோ எந்த பிரதிபலிப்பு இல்லாமல் இருக்க, மீண்டும் லேப்டாப்பில் பார்வையை செலுத்தியவன் "இந்த காபியை அவளோட வாய்க்குள்ள ஊத்துங்க.. மயக்கம் தெளிஞ்சிடும்" என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே எழுந்து அமர்ந்தவள் "எனக்கு மயக்கம் தெளிஞ்சிடுச்சு சார்" என்று சொன்னாள். இறுகிய தோற்றம் கொண்ட அவனுக்கே அவள் செயல்கள் புன்னகையை வரவழைக்க "அப்போ குடி" என்று சொல்ல அவளோ மனதுக்குள் "மயங்கினாலும் விடமாட்டேங்குறான் முழிச்சு இருந்தாலும் விடமாட்டேங்குறான்.. இப்போ என்ன தான் செய்யலாம்?" என்று புலம்பியவள் "இதுக்கு பதிலா வேற தண்டனை கிடைக்குமா சார்?? " என்று கேட்க அவனோ அவளை ஏறிட்டுப் பார்த்து இல்லை என்று அழுத்தமாக தலையாட்டினான்.
அவளோ அவனிடம் எகிறி இனி பயன் இல்லை என்று உணர்ந்தவளாக "சார் என்ன பார்த்தா பாவமா இல்லையா?" என்று கேட்க அவனோ "வீ ஆர் போலீஸ்ன்னு வீர வசனம் எல்லாம் பேசுன, இப்போ என்னாச்சு?" என்று ஒரு நக்கல் பொதிந்த குரலில் கேட்க அவளோ "ஹி ஹி அதெல்லாம் சும்மா அடிச்சு விடுறது தான் சார்" என்றாள் பாந்தமாக. அவனோ மேசையில் இரு கைகளையும் குற்றி எழுந்தவன் "நீ கெஞ்சினாலும் நான் விடுறதா இல்ல, பண்ணுன தப்புக்கு தண்டனை அனுபவிக்க வேணாமா? சோ குடி" என்று கப்பை நீட்ட, கலங்கிய கண்களுடன் "வேணாம் சார்" என்று சொன்னாள். அவனோ பின்னால் திரும்பி “ பீட்டரைக் கூட்டி வா" என்று சொல்ல, அவளோ "ஐயோ அந்த பீட்டர் மட்டும் வேணாம் சார்" என்று சொன்னவள் மேசையில் இருந்த காபியை எடுக்க, அவளுக்கு குமட்டிக் கொண்டே வந்தது. ஆனாலும் குமட்டலை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டே காபி கப்பை வாய் அருகே கொண்டு செல்ல, அவனோ நூலளவு இடைவெளியில் கப்பை வாங்கி எடுத்து மேசையில் வைத்தவன் மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டே அவளை மேலிருந்து கீழ் பார்த்தான்.
அவளுக்கோ அவன் காபியை வாங்கியது நிம்மதியாக இருந்தால் கூட அதனை மீண்டும் குடிக்க சொல்லி விடுவானோ என்கின்ற பயம் கண்ணில் அப்பட்டமாக தெரிய, அதைக் கண்டு கொண்டவனோ "உன்ன போல ஆட்களை தனியா விடவே கூடாது.. யூ ஆர் டேஞ்சரெஸ் ..இனி நீ என்னோட செகிரீட்டரி, நான் எங்க போனாலும் கூடவே வரணும்.. அண்டர்ஸ்டாண்ட்?" என்று கேட்க அவளோ "ம்ம்" என்று தலையாட்டியவள் "ஒரு சந்தேகம் சார்" என்று சொன்னாள். அவனோ "என்ன?" என்று ஒற்றைப் புருவம் உயர்த்திக் கேட்க "எங்க போனாலும்ன்னு சொல்றீங்க..நீங்க வாஷ்ரூம் போனாலும் கூட வரணுமா?" என்று வேணுமென்றே நக்கலாக அவனை அவமானப்படுத்தும் பொருட்டு கேட்க, அங்கிருந்த காவலாளிகள் கூட சிரிப்பை அடக்க முடியாமல் வாயை மூடிக் கொள்ள, அவனோ ஒரு கணம் சுற்றி இருந்தவர்களை அழுத்தமாக பார்த்து விட்டு, "தேவை ஏற்பட்டா அங்கேயும் வரணும்" என்று சொல்லி விட்டு தனது இருக்கையில் அமர்ந்து கொள்ள, அவள் முகத்தை சுளித்தபடி "எனக்கென்ன தேவை அங்க இருக்க போகுது?" என்று நினைத்துக் கொண்டவள், என்ன செய்வதென்று தெரியாமல் ஒரு ஓரமாக நின்று கொண்டாள்.
அதே சமயம், இதை எல்லாம் அறியாமல் கடமையே கண்ணாக ஒரு சின்ன பெண்ணைக் கற்பழித்த கயவனை கை வலிக்க வலிக்க, அடித்துக் கொண்டு இருந்தான் அஜய். நீண்ட நேரம் அடித்த அடியில், வாயிலும் முகத்திலும் ரத்தம் வடிய, இருக்கையில் மயக்கமாகி போய் அவன் இருக்க, உடனே அங்கிருந்த கான்ஸ்ரபிள் "சார், செத்திடுவான் போல இருக்கு சார்" என்று கெஞ்சுதலாக அஜய்யிடம் சொன்னான். உடனே அஜய், அந்த கான்ஸ்ரபிளை அழுத்தமாக பார்த்து விட்டு வெளியேறினான்.
அஜய்யின் கைகளோ ரத்தத்தில் தோய்ந்து இருக்க, செல்லில் இருந்து வெளியே கையை உதறிக் கொண்டே வந்து கையை கழுவியவனிடம் தனது கையில் இருந்த டிஸ்ஸுவை நீட்டினாள் ஷாந்தி. "ம்ம்" என்றபடி அதனை வாங்கிக் கொண்டவன் "அடிச்ச அடில செத்துட போறான்.. கொஞ்சம் எக்ஸ்ட்ரா கெயார் எடுக்க சொல்லு.. எப்போவுமே என்னால இன்வெசிட்டிகேஷனுக்கு போய் விளக்கம் கொடுக்க முடியாது" என்று சொன்னான்.
அவன் அடித்தே கொன்று இருக்கும் குற்றவாளிகள் சிலர் ஏற்கனவே லிஸ்டில் இருக்க, அவளோ "அப்போ ஏன் சார் இப்படி அடிக்கணும்?" என்று அந்த குற்றவாளி சற்று முன்னர் அலறிய அலறலை வைத்துக் கேட்க அவளோ "சின்ன பொண்ண ரேப் பண்ணி இருக்கான்.. ஆரத்தி எடுக்க சொல்றியா?" என்று காட்டமாக கேட்டவன் மேலும் "வர்ற வழியில நான் சொன்ன ஜுவேல்ஸ எடுத்து வந்தியா?" என்று கேட்க அவளும் பையில் இருந்து அதனை எடுத்துக் கொடுத்தாள் . அது சுற்றப்பட்டு இருந்த பெட்டியை பிரித்தவன் அதில் இருந்து ஒரு ஜிமிக்கியை எடுத்து முன்னே நின்ற ஷாந்தியின் காதில் வைத்து "காயத்ரிக்கு அழகா இருக்கும்ல" என்று கேட்க அவளோ எச்சிலை விழுங்கி உணர்வுகளை அடக்கிக் கொண்டே "ம்ம்" என்று சொன்னவளுக்கு அவன் விரல்கள் அவளது காது மடலைத் தீண்டிய உணர்வுகளையே கட்டுப்படுத்த முடியாமல் போனது. அவனோ "இப்போ என்ன மிஷனை வீரமா பண்ணிட்டு இருக்காளோ?" என்று ஏக்கப் பெருமூச்சு விட, அவளோ சித்தார்த்தின் அருகே அங்கு நின்றபடியே களைப்பில் தூங்கிக் கொண்டு இருந்தாள்.
அவளோ அப்படியே மண்டியிட்டு அமர்ந்து இருக்க, அவன் அறைக்குள் நுழைந்தான் மதன். அவனைக் கண்டதுமே அவள் விழிகள் அதிர்ச்சியில் விரிந்து கொண்டன. ஆம் அவளது நண்பர்கள் மூவரும் தொலைந்த சமயம், அவனிடம் தான் கேள்வி மேல் கேள்வி கேட்டு இருந்தார்கள் பிரசாத்தும் காயத்ரியும். அவன் அப்போது சொன்ன ஒரே வசனம் "நான் உள்ளே போக அனுமதியே இல்ல, உள்ளே என்ன நடக்குதுன்னு எனக்கும் தெரில, வேற யாரும் உள்ள போய் பார்த்தா தான் தெரியும்" என்று தான். ஆனால் இன்று அவனோ சித்தார்த்தின் அறைக்குள் நுழைந்து இருக்கின்றான் அல்லவா? அவனைக் கண்டதுமே அவளுக்கு பொறுமை இன்றி கோபம் எகிற "டேய் துரோகி!! எங்க கிட்ட எப்படி எல்லாம் பொய் சொன்ன? நல்லா இருப்பியா? என்னையும் கொண்டு வந்து இங்க சிக்க வச்சு இருக்க.. மனுஷனா நீ? உன்னை சும்மா விட மாட்டேன், விடவே மாட்டேன்" என்று வீர வசனம் பேச, எரிச்சலில் கண்களை மூடித் திறந்த சித்தார்த்தோ "ஷட் அப்" என்று சீறியவன் மேலும் "எப்போ பார்த்தாலும் லொட லொடன்னு பேசிகிட்டு இருக்காம சும்மா இரு.. எனக்கு விசுவாசமா இருக்கிறவன் உனக்கு துரோகி. அவ்ளோ தான்" என்று சொல்ல அவளுக்கோ அவனை மீறிப் பேச வாயும் வர வில்லை. பேச நினைத்தால் கூட பீட்டர் கண் முன்னே வந்து போக, உண்டான கோபத்தை எல்லாம் அடக்கிக் கொண்டே அவர்களை முறைத்துக் கொண்டே அமர்ந்து இருக்க, மதனோ அவளை கேலியாக பார்த்து புன்னகைத்து விட்டு "சார், இவ ட்ரெஸ் எல்லாம் ஆய்வுகூட லேபர்ஸ் தங்குற இடத்துல வச்சு இருக்கேன்" என்று சொல்ல, அவனோ அழுத்தமாக இல்லை என்று தலையாட்டினான்.
அதைக் கேட்ட மதன் யோசனையாக புருவம் சுருக்க, "அவனுங்க மூணு பேரும் கூட பரவாயில்லை, பட் ஷீ இஸ் டேஞ்சரெஸ்.. பெயர் தான் போலீஸ்காரி ஆனா பக்கா கிரிமினல் வேலை பார்க்கிற போல இருக்கா, அவனுங்க கூட தங்க வச்சா, அப்புறம் கூட்டா சேர்ந்து பிளான் போடுவா. சோ என்னோட ப்ளோர்ல இவளை தங்க வச்சுக்கலாம். எனக்கும் டைம் பாஸ் ஆகும்" என்று சொல்ல, மதனோ "ஆனா சார்" என்று இழுக்க, "ஒஹ், அங்க வசதி அதிகம்னு யோசிக்கிறியா? " என்று கேட்டான் அவனும் "ம்ம்" என்று சொல்ல காயத்ரிக்கு கோபம் உச்சத்தில் வந்தது. அவளோ மனதுக்குள் "கடவுள் வரம் கொடுத்தா கூட பூசாரி வரம் கொடுக்க மாட்டான் போல இருக்கே, இப்போ நான் சொகுசா வாழ்ந்தா இவனுக்கு என்ன கடுப்பு?" என்று நினைக்க, சித்தார்த்தோ "தென் அந்த ரூம்ல இருக்கிற ஃபசிலிடீஸ் எல்லாம் தூக்கிடு, ஒரு பாய் மட்டும் கொடு" என்று சொல்ல, காயத்ரியோ மனதுக்குள் "இருக்கிற வசதி எல்லாம் தூக்கிட்டு ரூம் தர்ற ஆள் இவனுங்களா தான் இருப்பானுங்க" என்று கடுப்பாக நினைத்துக் கொண்டாள்.
மதனும் அவன் சொன்னதற்கு சம்மதமாக தலையாட்டியபடி சென்று விட, சித்தார்த்தோ மடிக் கணனியில் அமர்ந்து வேலையைப் பார்க்க தொடங்கி விட்டான். அவளும் எவ்வளவு நேரம் தான் அப்படியே அமர்ந்து இருப்பாள்? அவளோ சித்தார்த்தைப் பார்த்தபடி மண்டியிட்டு அமர்ந்து இருக்க, அந்த அறைக்குள் அவள் பின்னால் ஆட்கள் வருவதும் போவதுமாக இருக்க, அவளுக்குத் தான் யார் வருகிறார்கள் போகின்றார்கள் என்றும் கூட தெரியவே இல்லை.
வந்தவர்கள் கூட தமது வேலையைப் பார்த்து விட்டுச் சென்றார்களே தவிர அவளை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவளால் அடக்க முடியாதளவு இயற்கை அழைக்க, கஷ்டப்படி எழுந்தவள் "சார் கை ரொம்ப வலிக்குது" என்று சொன்னாள். அவனோ அவளை ஏறிட்டுப் பார்த்து, பக்கத்தில் நின்று கொண்டு இருந்தவரிடம் கண்களைக் காட்ட அவனோ அவளை நோக்கிச் சென்று இரு கைகளையும் கழட்டி விட்டான். ஆனால் இம்முறை அவள் முட்டாள் தனமாக யாரையுமே அடிக்க எத்தனிக்கவில்லை. அதற்கு பலமும் அவளுக்கு இருக்கவே இல்லை.
அவனோ அவளை ஏறிட்டுக் கூடப் பார்க்காமல் இருந்த போதிலும் தனது தேவையை அவனிடம் உணர்த்த வேண்டிய கட்டாயம் அவளுக்கு, உடனே அவனை நோக்கி தயங்கி தயங்கி நடந்து வந்தவள் "சார்" என்று ஒற்றை விரலை தூக்கி காட்ட அவனோ "எலெக்ஷன்ல நிற்க போறியா??" என்று கேட்டான். அவளோ "எத எலெக்ஷனா??" என்று கேட்டவள் கையை இறக்கி விட்டுக் கொண்டே "வாஷ் ரூம் போகணும்" என்று சொல்ல அவளை ஏறிட்டு கூரிய விழிகளால் பார்த்தவன் கண்களாலேயே வழியைக் காட்ட அவளோ "ம்ம்" என்று தலையாட்டியபடி நடந்து சென்றாள். அவன் அறைந்த அறையினால் தாடை வேறு வலிக்க, தன்னிலையை நினைத்து பொங்கி வந்த கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டே பாத்ரூம் கதவை திறந்தாள். உள்ளே பாத்ரூமை கழுவிக் கொண்டே இருந்த ஆண்மகனோ "சாரி மேடம் கொஞ்ச நேரத்தில முடிஞ்சிடும்" என்று சொல்ல அவளோ அதிர்ச்சியுடன் அந்த குரலில் ஸ்தம்பித்து போனாள். அடுத்த கணமே "டேய் அமல் என்னடா பண்ணுற இங்க?" என்று கேட்க சட்டென நிமிர்ந்தவன் "நீ ஏண்டி இங்க வந்த?" என்று அக்கறையாக கேட்டான். அவளோ "உங்கள தேடி தாண்டா வந்தேன். அந்த மதன் நம்ம எல்லாரையுமே ஏமாத்திட்டான். துரோகி.. இப்படி நல்லா மாட்டிக்கிட்டேன்... இங்க பாரு அறைஞ்சு ரத்தம் வேறு வருது" என்று இதழ்களை கட்ட அவனோ அதனை சாதாரணமாக பார்த்தவன் "இவ்ளோ தானா??" என்று தான் கேட்டான். ஏன் என்றால் அவர்கள் பட்ட துன்பம் இதை விட அதிகம் அல்லவா? அந்த கேள்வியிலேயே நிதர்சனம் உணர்ந்தவள் "நீ எல்லாம் எப்படி பட்ட பொலிஸ்?? உன்னை போய் பாத்ரூம் கழுவ வச்சு இருக்காங்களே" என்று நண்பனின் வீரத்தை நினைக்க அவனோ சலிப்பாக "அதை மட்டும் நினைவு படுத்தாதடி.. லைட்டா நெஞ்சு வலிக்குது" என்று சொன்னான். அவளோ "அந்த வளர்ந்து கெட்ட சயின்டிஸ்ட்டை சும்மா விட கூடாதுடா.. அவனை அர்ரெஸ்ட் பண்ணி தெரு தெருவா இழுத்துப் போகணும்.. அப்போ தான் என் மனசு ஆறும்" என்று சொல்ல அவள் நண்பனோ " விஜயசாந்தி போல பேசாதடி.. விளைவு பயங்கரமா இருக்கும்" என்று சொல்ல அவளோ "அப்படி என்ன பயங்கரமா இருக்கும்?? அவன் என்ன பெரிய பருப்பா?? வீ ஆர் போலீஸ்" என்று சொல்லிக் கொண்டே வாசலை நோக்கி திரும்ப அங்கே மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக் கொண்டே அவளையே அழுத்தமாக பார்த்தபடி நின்று இருந்தான் சித்தார்த். உடனே அமல் "போச்சு போ" என்று சொல்லி அடுத்த காணம் அவனது ஒற்றை சொடக்கிலும் கண்ணசைவிலும் பாத்ரூம் கழுவும் பொறுப்பு அமலிடம் இருந்து காயத்ரிக்கு மாறி இருந்தது. அமலோ "பாவம் சார்" என்று ஆரம்பிக்க "அவுட்" என்று அவனைப் பார்த்து அழுத்தமாக சொன்னவன் காயத்ரியை பார்த்து சொடக்கிட்டு "போலீஸ்னா பெரிய கொம்பா? நான் சொல்லும்.வரை இங்கேயே இருந்து பாத்ரூமை கழுவிட்டே இருக்கனும்.. ரைட்??" என்றவன் பாத்ரூம் கதவை வெளியே தாளிட்டு விட்டு செல்ல அன்று தான் முதல் முறை சுத்தமான தரையை திரும்ப திரும்ப தேய்த்து கழுவும் போது உண்டாகும் சலிப்பு எப்படி இருக்கும் என்று உணர்ந்தாள்.
கிட்டத்தட்ட அவளை இரு மணி நேரம் பாத்ரூமிலேயே அடைத்து வைத்தவன் வேலையாளை விட்டு பாத்ரூமை திறந்து விட, அவளோ களைப்புடன் வெளியே வந்தவளுக்கு நடக்க கூட முடியவே இல்லை. ஆனால் அவனோ அவள் களைப்பை உணர்ந்தாலும் கொஞ்சமும் இரக்கம் இன்றி "எனக்கு ஸ்ட்ராங் ஆஹ் ஒரு காபி போட்டு கொண்டு வா" என்றவன் தன்னுடன் நின்றவனிடம் "அவளுக்கு கிச்சனைக் காட்டு" என்று சொன்னான். அவனும் "ம்ம்" என்று சொல்லிக் கொண்டே அவளை அழைத்துச் செல்ல, அவளுக்கோ "கொஞ்சம் கூட இரக்கமே இல்லாம இவ்ளோ வேலை வாங்குறானே. போலீஸ் ட்ரெயினிங்ல கூட நான் இவ்ளோ டயர்ட் ஆனது இல்ல" என்று நினைத்துக் கொண்டே அவனைப் பின் தொடர்ந்தாள்.
அழைத்து வந்தவன் காட்டிய சமையல் அறையில் நின்று காபி போட்டவளுக்கோ கோபத்தில் கண்ணீர் கூட வரப் பார்த்தது. ஆனால் அழக் கூடாது என்கின்ற வைராக்கியத்தில் கண்ணீரை உள்ளே இழுத்துக் கொண்டே காபியை கையில் எடுத்தவள் ட்ரேயில் வைத்து அவனிடம் கொடுக்க நடந்து சென்றாள். இரு பக்கமும் உலோகத்தினால் செய்யப்பட்ட வழியில் யாருமே இல்லாமல் இருக்க, ஆங்காங்கே சி.சி.டி.வி கமெரா மட்டும் இருந்தது.
அவனுக்கு கொடுப்பதற்காக, கையில் காபி கப்புடன் வந்தவள் மனமோ இப்போது தீயாக தகித்தது. அவளது பதவி என்ன? அவள் இப்போது செய்து கொண்டிருக்கும் வேலைகள் என்ன? என்று நினைத்தவளுக்கு ஆத்திரம் தலைக்கு எகிறியது. பாத்ரூம் கழுவும் ஆயாவாக ஆகி விட்டாள் அல்லவா? போதாததற்கு இப்போது சமையல்காரி வேலை வேறு. நடந்து செல்லும் வழியில் சுற்றும் முற்றும் பார்த்தவள் அங்கே சுழன்று கொண்டு இருக்கும் சி.சி.டி.வி மறுபக்கம் திரும்பும் கணத்தில் கையில் இருந்த காபியினுள் காறித் துப்பினாள். அவளுக்கோ கோபத்தை எப்படி காட்டி அவனை பழிவாங்குவது என்று தெரியாமல் இருக்க , சிறைப்பட்ட அவளால் செய்யக் கூடிய சிறிய பழிவாங்கும் படலம் இது ஆகிப் போனது. அப்படியே அவனது அறைக்குள் நுழைந்தவன் அவள் மேசையில் காபி கப்பை வைத்துக் கொண்டே "சார் காபி" என்று சொன்னாள். அவனோ இறுகிய முகத்துடன் லேப்டாப்பில் இருந்து கண்களை அகற்றியவன் காபியை எடுத்து வாயருகே கொண்டு சென்று விட்டு அவளை நிமிர்ந்து பார்க்க, அவளுக்கோ அவன் குடித்து விடுவான் என்கிற ஒரு அற்ப ஆசையில் கண நேரத்தில் முகம் மலர்ந்தது. ஆனாலும் அதனைக் காட்டாமல் உணர்வுகளை சட்டென மறைத்துக் கொள்ள, அவனோ அவளை உறுத்து விழித்துக் கொண்டே அதனுள் துப்பியவன் அதனை மேசையில் வைக்க அவள் விழிகளோ அதிர்ச்சியில் விரிந்து கொண்டன. அவனோ அவளை எரித்து விடுவது போல பார்த்தவன் அருகே நின்ற காவலாளிகளிடம் சொடக்கிட அவர்கள் ஒவ்வொருவராக வந்து அந்த காபி கப்பினுள் துப்பி விட்டு செல்ல அதை விழி விரித்துப் பார்த்துக் கொண்டு நின்றாள் காயத்ரி. அனைவரும் துப்பி முடிய முன்னே என்ன நடக்கின்றது என்று புரியாமல் கையை பிசைந்து கொண்டு நின்ற காயத்ரியின் முன்னே தனது லேப்டாப்பைக் காட்ட அதில் அவள் காறித் துப்பியது கண்ணுக்கு புலப்படாதவாறு பொருத்தப்பட்டு இருந்த நுண்ணிய கமெரா மூலம் ஒளிபரப்பாக அவளோ வாயில் இரு கைகளையும் வைத்தாள். அவனோ அவளை விஷமமாக பார்த்தபடி " குடி" என்று முன்னே இருந்த காபியைக் கண்களால் காட்டியபடி சொல்ல அவளுக்கோ அருவருப்பில் வாந்தி வராத குறை தான். அடுத்த கணமே "சார். இது நியாயமே இல்ல.. நான் ஒருத்தி தான் துப்பினேன். ஆனா இவ்ளோ பேர் துப்புனதை எப்படி சார் குடிக்க முடியும்??" என்று கேட்க அவனோ "உன்னைக் குடிக்க சொன்னேன்" என்றான் அழுத்தமாக. அவளோ கெஞ்சும் குரலில் "ப்ளீஸ் சார்.. இதுல யாருக்கு என்ன நோய் இருக்குன்னு கூட தெரில" என்று சொல்ல அவனோ “உனக்கு எதுவும் வராம நான் பார்த்துகிறேன்.. இப்போ குடி" என்று சொன்னான். அவளது கண்கள் கூட இதை நினைத்து கலங்கிப் போக "ப்ளீஸ் சார் வேணாம்" என்றவள் மனமோ "மயங்கி விழுடி காயத்ரி. இல்லன்னா இந்த வளர்ந்து கெட்டவன் குடிக்க வச்சிடுவான்" என்று நினைக்க பேசிக் கொண்டு இருந்தவாறே அவள் நிலத்தில் விழுந்தாள். அதற்கு அவனிடமோ எந்த பிரதிபலிப்பு இல்லாமல் இருக்க, மீண்டும் லேப்டாப்பில் பார்வையை செலுத்தியவன் "இந்த காபியை அவளோட வாய்க்குள்ள ஊத்துங்க.. மயக்கம் தெளிஞ்சிடும்" என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே எழுந்து அமர்ந்தவள் "எனக்கு மயக்கம் தெளிஞ்சிடுச்சு சார்" என்று சொன்னாள். இறுகிய தோற்றம் கொண்ட அவனுக்கே அவள் செயல்கள் புன்னகையை வரவழைக்க "அப்போ குடி" என்று சொல்ல அவளோ மனதுக்குள் "மயங்கினாலும் விடமாட்டேங்குறான் முழிச்சு இருந்தாலும் விடமாட்டேங்குறான்.. இப்போ என்ன தான் செய்யலாம்?" என்று புலம்பியவள் "இதுக்கு பதிலா வேற தண்டனை கிடைக்குமா சார்?? " என்று கேட்க அவனோ அவளை ஏறிட்டுப் பார்த்து இல்லை என்று அழுத்தமாக தலையாட்டினான்.
அவளோ அவனிடம் எகிறி இனி பயன் இல்லை என்று உணர்ந்தவளாக "சார் என்ன பார்த்தா பாவமா இல்லையா?" என்று கேட்க அவனோ "வீ ஆர் போலீஸ்ன்னு வீர வசனம் எல்லாம் பேசுன, இப்போ என்னாச்சு?" என்று ஒரு நக்கல் பொதிந்த குரலில் கேட்க அவளோ "ஹி ஹி அதெல்லாம் சும்மா அடிச்சு விடுறது தான் சார்" என்றாள் பாந்தமாக. அவனோ மேசையில் இரு கைகளையும் குற்றி எழுந்தவன் "நீ கெஞ்சினாலும் நான் விடுறதா இல்ல, பண்ணுன தப்புக்கு தண்டனை அனுபவிக்க வேணாமா? சோ குடி" என்று கப்பை நீட்ட, கலங்கிய கண்களுடன் "வேணாம் சார்" என்று சொன்னாள். அவனோ பின்னால் திரும்பி “ பீட்டரைக் கூட்டி வா" என்று சொல்ல, அவளோ "ஐயோ அந்த பீட்டர் மட்டும் வேணாம் சார்" என்று சொன்னவள் மேசையில் இருந்த காபியை எடுக்க, அவளுக்கு குமட்டிக் கொண்டே வந்தது. ஆனாலும் குமட்டலை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டே காபி கப்பை வாய் அருகே கொண்டு செல்ல, அவனோ நூலளவு இடைவெளியில் கப்பை வாங்கி எடுத்து மேசையில் வைத்தவன் மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டே அவளை மேலிருந்து கீழ் பார்த்தான்.
அவளுக்கோ அவன் காபியை வாங்கியது நிம்மதியாக இருந்தால் கூட அதனை மீண்டும் குடிக்க சொல்லி விடுவானோ என்கின்ற பயம் கண்ணில் அப்பட்டமாக தெரிய, அதைக் கண்டு கொண்டவனோ "உன்ன போல ஆட்களை தனியா விடவே கூடாது.. யூ ஆர் டேஞ்சரெஸ் ..இனி நீ என்னோட செகிரீட்டரி, நான் எங்க போனாலும் கூடவே வரணும்.. அண்டர்ஸ்டாண்ட்?" என்று கேட்க அவளோ "ம்ம்" என்று தலையாட்டியவள் "ஒரு சந்தேகம் சார்" என்று சொன்னாள். அவனோ "என்ன?" என்று ஒற்றைப் புருவம் உயர்த்திக் கேட்க "எங்க போனாலும்ன்னு சொல்றீங்க..நீங்க வாஷ்ரூம் போனாலும் கூட வரணுமா?" என்று வேணுமென்றே நக்கலாக அவனை அவமானப்படுத்தும் பொருட்டு கேட்க, அங்கிருந்த காவலாளிகள் கூட சிரிப்பை அடக்க முடியாமல் வாயை மூடிக் கொள்ள, அவனோ ஒரு கணம் சுற்றி இருந்தவர்களை அழுத்தமாக பார்த்து விட்டு, "தேவை ஏற்பட்டா அங்கேயும் வரணும்" என்று சொல்லி விட்டு தனது இருக்கையில் அமர்ந்து கொள்ள, அவள் முகத்தை சுளித்தபடி "எனக்கென்ன தேவை அங்க இருக்க போகுது?" என்று நினைத்துக் கொண்டவள், என்ன செய்வதென்று தெரியாமல் ஒரு ஓரமாக நின்று கொண்டாள்.
அதே சமயம், இதை எல்லாம் அறியாமல் கடமையே கண்ணாக ஒரு சின்ன பெண்ணைக் கற்பழித்த கயவனை கை வலிக்க வலிக்க, அடித்துக் கொண்டு இருந்தான் அஜய். நீண்ட நேரம் அடித்த அடியில், வாயிலும் முகத்திலும் ரத்தம் வடிய, இருக்கையில் மயக்கமாகி போய் அவன் இருக்க, உடனே அங்கிருந்த கான்ஸ்ரபிள் "சார், செத்திடுவான் போல இருக்கு சார்" என்று கெஞ்சுதலாக அஜய்யிடம் சொன்னான். உடனே அஜய், அந்த கான்ஸ்ரபிளை அழுத்தமாக பார்த்து விட்டு வெளியேறினான்.
அஜய்யின் கைகளோ ரத்தத்தில் தோய்ந்து இருக்க, செல்லில் இருந்து வெளியே கையை உதறிக் கொண்டே வந்து கையை கழுவியவனிடம் தனது கையில் இருந்த டிஸ்ஸுவை நீட்டினாள் ஷாந்தி. "ம்ம்" என்றபடி அதனை வாங்கிக் கொண்டவன் "அடிச்ச அடில செத்துட போறான்.. கொஞ்சம் எக்ஸ்ட்ரா கெயார் எடுக்க சொல்லு.. எப்போவுமே என்னால இன்வெசிட்டிகேஷனுக்கு போய் விளக்கம் கொடுக்க முடியாது" என்று சொன்னான்.
அவன் அடித்தே கொன்று இருக்கும் குற்றவாளிகள் சிலர் ஏற்கனவே லிஸ்டில் இருக்க, அவளோ "அப்போ ஏன் சார் இப்படி அடிக்கணும்?" என்று அந்த குற்றவாளி சற்று முன்னர் அலறிய அலறலை வைத்துக் கேட்க அவளோ "சின்ன பொண்ண ரேப் பண்ணி இருக்கான்.. ஆரத்தி எடுக்க சொல்றியா?" என்று காட்டமாக கேட்டவன் மேலும் "வர்ற வழியில நான் சொன்ன ஜுவேல்ஸ எடுத்து வந்தியா?" என்று கேட்க அவளும் பையில் இருந்து அதனை எடுத்துக் கொடுத்தாள் . அது சுற்றப்பட்டு இருந்த பெட்டியை பிரித்தவன் அதில் இருந்து ஒரு ஜிமிக்கியை எடுத்து முன்னே நின்ற ஷாந்தியின் காதில் வைத்து "காயத்ரிக்கு அழகா இருக்கும்ல" என்று கேட்க அவளோ எச்சிலை விழுங்கி உணர்வுகளை அடக்கிக் கொண்டே "ம்ம்" என்று சொன்னவளுக்கு அவன் விரல்கள் அவளது காது மடலைத் தீண்டிய உணர்வுகளையே கட்டுப்படுத்த முடியாமல் போனது. அவனோ "இப்போ என்ன மிஷனை வீரமா பண்ணிட்டு இருக்காளோ?" என்று ஏக்கப் பெருமூச்சு விட, அவளோ சித்தார்த்தின் அருகே அங்கு நின்றபடியே களைப்பில் தூங்கிக் கொண்டு இருந்தாள்.