ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நிலவு 73

pommu

Administrator
Staff member
நிலவு 73

வந்தனாவின் விஷயத்தை கேள்விப்பட்ட நேத்ராவுக்கு இப்போது தான் மனம் கொஞ்சம் இதமாக இருந்தது. இத்தனை நாட்கள் ஜீவிதனுடன் தமது வாழ்க்கையைப் பற்றி பேச வேண்டும் என்று நினைத்து இருந்தாலும், வந்தனாவின் விஷயத்தினால் அவளால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. இன்று ஏதோ ஒரு பாரம் இறங்கிய உணர்வு.

தனது வாழ்க்கையையும் கொஞ்சம் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. நேரம் பத்து மணி இருக்கும். இன்னும் முன்னறையில் மின்விளக்கு ஒளிர்ந்து கொண்டு இருந்தது. ஜீவிதனுக்காக காத்துக் கொண்டு தூங்காமல் நேத்ரா இருந்தாள்.

'இவ தூங்கலையா இன்னும்?' என்று நினைத்துக் கொண்டு, கதவைத் திறந்த ஜீவிதனின் கண்ணில் பட்டது என்னவோ, ஹாலில் அமர்ந்து இருந்த நேத்ராதான்.

"இன்னும் தூங்கலையா நீ?" என்று கேட்டுக் கொண்டு ஷூவை அவன் கழட்ட, "சாப்பிட்டீங்களா?" என்று கேட்டாள்.

உலக அதிசயமாக இருந்தது அவனுக்கு. முதல்முறை இதனைக் கேட்கின்றாள். அவளைப் புருவம் சுருக்கிப் பார்த்துக் கொண்டு, "ம்ம்..." என்று சொன்னவன் அறைக்குள் நுழையப் போக, "குளிச்சிட்டு வாங்க, பேசணும்." என்றாள்.

அவளை யோசனையுடன் திரும்பிப் பார்த்தவன், "ம்ம்..." என்று குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

ஷார்ட்ஸ் மற்றும் டீஷேர்ட்டுடன் அவன் வெளியே வந்த கணம், அவள் ஹாலுக்குள் தான் அமர்ந்து இருந்தாள்.

"என்ன விஷயம்?" என்று கேட்டவனை நோக்கி எழுந்து வந்தவள், "நம்ம வாழ ஆரம்பிச்சுடலாம் ஜீவிதன்." என்றாள்.

தூக்கிவாரிப் போட்டது அவனுக்கு. அவள் மனம் இன்னும் தன்னை ஏற்றுக் கொள்ளவில்லை என்று தெரியும். கடமைக்கு அவள் தன்னுடன் வாழ்வதில் அவனுக்கு கொஞ்சமும் இஷ்டம் இல்லை. அவள் விழிகள் அவனையே நோக்கி இருந்தன.

அழுத்தமாக இல்லை என்று தலையாட்டியவன், "உன் மாமாவை காப்பாத்துனத்துக்கு இப்படி எல்லாம் எனக்கு நன்றி சொல்லணும்னு அவசியம் இல்ல." என்றான் இறுகிய குரலில்.

"இல்ல ஜீவிதன், அதுக்காக கண்டிப்பா இல்ல..." என்று சொல்ல, "அப்போ எதுக்குடி திடீர்னு இப்படி?" என்று கடுப்பாக வந்தது அவன் வார்த்தைகள்.

மென்மையாக பேச நினைக்கின்றான் தான், ஆனால் முடியவில்லை. அவள் பேச பேச கோபம்தான் வந்தது.

"உங்கள எத்தனை நாள் நானும் காக்க வைக்கிறது?" என்று கேட்டாள்.

"அதுக்குன்னு பிச்சை போடுறியா? எனக்கு நீ வேணும்தான்... உன்னை கிஸ் பண்ணணும், ஹக் பண்ணணும், லவ் மேக் பண்ணணும்னு நிறைய ஆசை இருக்கு. ஆனா இப்படி வேணாம் நேத்ரா, வலிக்குதுடி..." என்றான்.

அவன் குரலே உடைந்து விட்டது. அவளுக்கோ அவன் பேசியதைக் கேட்டு அழுகை.

"என்னை கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ்..." என்றாள்.

"நீ என்னை முதல்ல புரிஞ்சுக்கோ. உனக்கு என்னை பிடிக்கணும், நம்ம லவ் பண்ணணும், சந்தோஷமா வாழ்க்கையை ஆரம்பிக்கணும். இப்படி மட்டும் வேணாம்." என்றான்.

அவள்மீது எவ்வளவு எதிர்பார்ப்புடன் பேசுகின்றான். ஆனால் அவளால் தானே மாறவே முடியவில்லை. சட்டென மொத்த அன்பையும் தூக்கி ஜீவிதனுக்கு கொடுக்க முடியாத நிலையில் இருக்கின்றாளே? அவளைத் தனியாக விட்டால் தனியாகவே இருந்து விடுவாள். கஜன் மீதான அவளது நேசத்தின் ஆழம் அப்படி. அவளை வேருடன் பிடுங்கி எடுத்தாக வேண்டும் என்றால், ஏதோ ஒருவித பிடிப்பு ஜீவிதனுடன் அவளுக்கு உண்டாக வேண்டும்.

உடல் ரீதியாக ஆரம்பித்து, மன ரீதியாக அது மாற்றம் பெறும் என்று அவளுக்கு நம்பிக்கை இருக்கின்றது. ஜீவிதனும் தன்னைப் போல தான் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கின்றான் என்று, அவள் அறிந்ததுமே மொத்தமாக நொறுங்கி விட்டாள். முட்டாள்தனமாக நடந்து கொண்டு இருக்கின்றோம் என்று புரிந்தது. எதற்காக அவனைத் தள்ளி வைக்க வேண்டும்?

அவள் மீது முழு உரிமையும் உள்ளவன் அவன் தானே? அவள் தான் சந்நியாசியாக வாழ்கின்றாள் என்றால் அவன் ஏன் வாழ வேண்டும்? அவனுக்கும் ஆசை இருக்கும் தானே? மோகம் இருக்கும் தானே? எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு அவன் ஏன் ஜடமாக இருக்க வேண்டும்? கஜன் அன்று இப்படித்தான் அவளுக்காக யோசித்தான். அவனால் எல்லாமே கொடுக்க முடியாது என்று அவளையே விட்டுக் கொடுத்தான். இன்று நேத்ராவினால் ஜீவிதனுக்கு தேவையானதை கொடுக்க முடியுமே?! எதற்காக அவனை காக்க வைக்க வேண்டும்?

திருமணம் செய்து விட்டாள், வாழ்க்கையை நடத்ததான் வேண்டும். இப்படியே இருந்து விடவும் முடியாது. ஜீவிதன் நினைப்பது போல மனம் மாறி, உடல் சேர்வது எல்லாம் வாய்ப்பே இல்லை. தன்னை சுற்றி இருக்கும் வட்டத்தை அவ்வளவு இலகுவாக அவளால் தாண்டி வரவும் முடியாது. ஏதோ ஒரு பிடிப்பு அவனிடம் வராத வரைக்கும் அவளால் அவனை முழுமையாக உள்வாங்க முடியாது. இத்தனை நாட்கள் ஜீவிதனுடன் வாழ்வதைப் பற்றி அவள் சிந்திக்க கூட இல்லை. தன்னை மாற்றிக் கொள்ள முயற்சி செய்யவும் இல்லை.

இன்று யோசித்தாள், நீண்ட நேரமாக யோசித்தாள். வாழ்க்கையில் அடுத்த அடியை எடுத்து வைப்பது என்று முடிவும் எடுத்து விட்டாள். அதற்கு அவள் உடல் ரீதியாக அவனுடன் இணைய வேண்டும். மனம் கொஞ்சம் கொஞ்சமாக அவனை விரும்ப ஆரம்பித்து விடும் என்று நம்பிக்கை அவளுக்கு. எல்லா திருமணங்களும் மனம் சேர்ந்து உடல் சேர்வது இல்லையே?

சில திருமணங்கள் உடல் சேர்ந்து மனம் சேர்வது இயல்பு தானே!? இன்று அவளாக அவனிடம் கேட்டும், அவன் அவள் மனநிலை புரியாமல் ஏதேதோ பேசிக் கொண்டு இருக்கின்றான். அவன் எதிர்பார்ப்பது போல தன்னிடம் மாற்றம் நிகழாது என்று அவளுக்கும் தெரியும் தானே?!

அவனை ஆழ்ந்து பார்த்தவள், "ஜீவிதன் கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க, நீங்க ஆசைப்படுற போல நடக்காது. நான் மனசு மாறி, அப்புறம் சேருறது எல்லாமே நடக்கிறது ரொம்ப கஷ்டம்..." என்றாள்.

அவளை வெறித்துப் பார்த்தவனோ, "அப்போ எனக்காக மாறவே மாட்டியா?" என்று தழுதழுத்த குரலில் கேட்க, அவளுக்கோ அழுகை.

"மாறனும்னு தான் நினைக்கிறேன் ஜீவிதன். இத்தனை நாள் உங்கள பத்தி யோசிக்காம முட்டாள்தனமா வாழ்ந்து இருக்கேன். உங்களுக்கு இந்த வாழ்க்கை எவ்வளவு வலிக்கும்னு எனக்கும் தெரியும். இந்த அனுபவம் எனக்கும் இருக்கு. இப்போ நான் வெளிய வரணும்னா இதெல்லாம் நடந்து ஆகணும். ஏதோ ஒரு வகைல உங்ககூட பிணைப்பு வரணும். இதுக்கு மேல எனக்கு உடைச்சு பேச தெரியல..." என்று சொல்லிக் கொண்டு கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

"உனக்கு இஷ்டம் இல்லாம என்னால முடியாதுடி..." என்றான்.

"எனக்கு இஷ்டம் இல்லன்னு உங்களுக்கு எப்படி தெரியும்? நானும் பொண்ணு தானே? சாதாரண உணர்வு இருக்கும் தானே? புருஷன் தொடும் போது ஏதோ ஒரு உணர்வு எனக்கும் வரும் தானே?" என்று சொன்னவளோ வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு,

"நான் இதுக்குள்ள இருந்து வெளிய வரணும்னு ஆசைப்படுறேன், உங்ககூட சந்தோஷமா வாழணும்னு ஆசைப்படுறேன். எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்..." என்று கெஞ்சுதலாக கேட்டு, சுவரில் சாய்ந்து நின்று அவனையே பார்த்து இருந்தாள்.

"ப்ச்!" என்று சொல்லிக் கொண்டு நெற்றியை நீவியவனுக்கு அவள் மனநிலை இப்போதுதான் புரிந்தது.

இவ்வளவு நேரமும் அவளை என்னென்னவோ நினைத்து பேசிக் கொண்டு இருக்கின்றான். அவள் அவனுடன் வாழ ஆசைப்படுகின்றாள். தன்னை வெளியில் கொண்டுவர முயற்சி செய்கின்றாள். ஆனால் அவனுக்கோ மனம் இன்றி உடல் சேர்வது நெருடல் தான். அவளுக்கு பிடிக்காதோ, அவளுக்கு வெறுப்பாக இருக்குமோ, அவள் தன்னை சகித்துக் கொள்வாளோ என்று என்னென்னவோ யோசனைகள். அப்படியான தாம்பத்தியம் அவனுக்கு தேவையே இல்லை.

"இப்படி எல்லாம் என்னால முடியாது நேத்ரா, புரிஞ்சுக்கோ..." என்று சொல்லி விட்டு அவன் தனது அறைக்குள் செல்ல முயல,

"அப்போ நான் வாழ்க்கை முழுக்க இப்படியே இருக்கட்டுமா? உங்க வாழ்க்கையை அழிச்ச குற்ற உணர்வோட நான் வாழணுமா? இது உங்களுக்காக கேட்கல, எனக்காக கேக்கிறேன் ஜீவிதன், புரிஞ்சுக்கோங்க... என்னை வெளிய கொண்டுவர ஹெல்ப் பண்ணுங்க, ப்ளீஸ்..." என்று அழுகையுடன் கேட்டவளை நோக்கி திரும்பியவன்,

அவளை நோக்கி வேகமாக வந்து அவள் கழுத்தைப் பற்றி தன்னை நோக்கி நிமிர்த்தி, அடுத்த கணமே அவள் இதழ்களில் தனது இதழ்களைப் பொருத்தி இருந்தான், ஆழமாகவும் அழுத்தமாகவும். அவள் உடலில் மெல்லிய அதிர்வு. முதலில் ஒரு தயக்கம், பின்பு ஒரு மயக்கம். மெதுவாக கண்களை மூடிக் கொண்டு, கையை எடுத்து அவன் தோள்களில் வைத்துக் கொண்டு, பெருவிரலில் எம்பி நின்று அவன் முத்தத்துக்கு பதில் முத்தம் வழங்கினாள்.

இருவரின் இதழ்களும் நெகிழ்வாக கலந்து கொண்டன. நீண்ட நேரம் முத்தமிட்டவனோ, மெதுவாக விலகி அவளது மூடிய விழிகளை இப்போது பார்த்தான்.

மெதுவாக கண்களைத் திறந்து அவன் விழிகளை நோக்கியவளோ, "ஏன் நிறுத்திட்டிங்க?" என்று கேட்டாள்.

"தொடரலாமா?" என்று கேட்டான் அவன்.

"தாராளமா...” என்று சொல்லி அவன் கரத்தை அவளே பற்றி தனது மேனியில் வைக்க, காதல் கொண்டவனை இனி தடுக்க முடியுமா என்ன?

அவள் இதழ்களை மீண்டும் சிறை செய்து அவன் அறைக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டு இருந்தான். மஞ்சத்தில் தஞ்சம் அடைந்தார்கள். மேனியில் இருந்த வஸ்திரங்கள் அநாதரவாகின. முதலில் கூச்சமடைந்தாள். கொஞ்ச நேரத்தில் அவனை மொத்தமாக உணர்ந்து தனக்குள் உள்வாங்கியும் கொண்டாள். அவன், தாடி மீசையின் குறுகுறுப்பு அவள் மேனி முழுவதும்.

பிடித்த பெண்ணின் மேனியல்லவா? ரசித்து அனுபவித்து ஆளுகை செய்தான்.

செவி தீண்டி, நெற்றி மோதி, நாசியுடன் நாசி உரசி, இதழ்கள் நெகிழ்வாக கலந்தாட, உமிழ்நீர்கள் பரிமாற்றம் கொள்ள, அவள் கழுத்து வளைவில் அவன் பற்கள் தமது தடத்தைப் பதித்து சுகமான வலியை அவளுக்கு கொடுத்தன.

நிறுத்தி விடுவானா அவன்?

கீழிறங்கினான், அவளைக் கிறக்கமாக்கினான்.

அவள் கரங்கள் அவன் சிகை கோதி நெரித்து, அவன் மேனி முழுவதும் பயணம் செய்தது. வினாடிகள் நிமிடங்களாக நீண்டன. நெருக்கமாகி, நெகிழ வைத்து, முனக வைத்து, மூச்சு முட்ட மொத்தமாக ஆட்கொண்டவன் விலகிப் படுக்க, அவளுக்கும் மூச்சு வாங்கியது, அவனுக்கும் மூச்சு வாங்கியது.

தன்னை போர்வையால் மூடியபடி மெதுவாக கண்களை மூடிக் கொண்டாள்.

அவனோ அவளை ஒரு கணம் ஆழ்ந்து பார்த்து விட்டு எழுந்தவன், ஷார்ட்ஸுடன் பால்கனியில் சென்று நின்று விட்டான். அவள் கேட்டாள் என்று எல்லாமே நடந்து முடிந்து விட்டது. அவன் ஆசைப்பட்டது போல இணையவில்லை. அவளை மொத்தமாக கொள்ளையிட்ட கிளர்ச்சி இன்னும், அவன் மேனியில் மீதம் இருந்தாலும், சின்ன ஏமாற்றமும் வருத்தமும் தோன்றுவதை அவனால் தவிர்க்க முடியவில்லை.

பால்கனி கம்பியை அழுந்த பற்றிக் கொண்டு கண்களை மூடி, ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டான். ஏமாற்றம் நடுவே சந்தோஷமும் இருந்தது. அவனை அவள் அருவருக்கவில்லை, நெகிழ்வுடன் உள்வாங்கி இருந்தாள். அவன் திடமான மேனியை ரசித்து ஸ்பரிசித்தும் இருந்தாள். இப்போது அதனை அசை போட்டவனின் மேனி முழுவதும், ஒருவித முறுக்கம்.

மீண்டும் அவளை ஆட்கொள்ளும் மோகம், அடக்கிக் கொண்டான். மீண்டும் அவளை ஆள முற்பட்டால் என்ன நினைப்பாளோ என்கின்ற தவிப்பு அவனிடம்.

கண் மூடி கட்டிலில் படுத்து இருந்தவளோ அவனுடனான கலவியை அசை போட்டாள். மேனியில் இன்னுமே சிலிர்ப்பு அடங்கவில்லை. முத்தத்தினாலும் வெட்கத்தினாலும் இன்னுமே மேனி சிவந்து இருக்க, கை விரல்களால் இதழ்களை வருடிக் கொண்டாள். என்னென்னவோ உணர்வுகள்! கழுத்தை வருடிப் பார்த்தாள், மெல்லிய எரிச்சல். அவன் பற்தடத்தின் விளைவினால் உண்டான எரிச்சல் அது. சிறிது நேரம் அப்படியே கண் மூடி இருந்தவள் மெதுவாக கண்களைத் திறந்த சமயம், பால்கனியில் மெல்லிய வெளிச்சத்தில் நின்று இருந்த ஜீவிதனின் வெற்று முதுகு தென்பட்டது.

மெதுவாக எழுந்து அமர்ந்து ஆடையைத் தேடினாள். அவன் சற்று முன்னர் அணிந்து இருந்த கருப்பு டீஷேர்ட் தான் தென்பட்டது. எடுத்து உரிமையாக அணிந்து கொண்டு கட்டிலில் இருந்து இறங்கியவள், அவன் அருகே வந்து நின்றும் விட்டாள்.

அவள் வந்து நின்றதை உணர்ந்தவன் பக்கவாட்டாக திரும்பிப் பார்த்தபடி குரலை செருமியவன், "எப்படி ஃபீல் பண்ணுன?" என்று கேட்டான்.

அவளுக்கு பிடித்து இருக்கிறது என்று அவன் உணர்ந்தாலும், அவள் வாயால் கேட்பதில் அலாதி இன்பம் போலும்.

அவன் கரம் மேல் கரத்தை வைத்தவள் அவன் விழிகளைப் பார்த்துக் கொண்டு, "ரொம்ப பிடிச்சு இருக்கு..." என்று சொன்னாள்.

அவனுக்கோ தன்னையே கட்டுப்படுத்த முடியாமல் விழிகள் கீழிறங்கியது. அவன் டீஷேர்ட்டின் கழுத்தோ பெரியது. அவளுக்கு கையினால் வழுகும் அளவுக்கு இருந்தது. அவள் மேனி தெரிந்தும் தெரியாத நிலை. அவன் விழிகள் கீழிறங்குவதைக் கண்டவளோ, சட்டென இரு கைகளாலும் டீஷேர்ட்டை கழுத்துடன் இழுத்து பிடித்துக் கொண்டு, "இவ்ளோ பெரிய கழுத்தா இருக்கு...?" என்றாள்.

இதழ்களுக்குள் சிரிப்பு வந்து விட்டது.

"ம்ம்..." என்று சொன்னபடி முகத்தை முன்னால் திருப்பிக் கொண்டவனோ, "மறைக்கணும்னு இனி என்ன அவசியம்?" என்று கேட்டான்.

அவன் பேச்சில் அவளுக்கோ வெட்கமாகி விட்டது. வெளிப்படையாக பேசி விட்டானே?

சட்டென முன்னால் திரும்பிக் கொண்டவளோ, "என் மேல ஒன்னும் வருத்தம் இல்லையே...?" என்று கேட்க, "இல்லன்னு சொல்லவும் முடியாது, இருக்குன்னு சொல்லவும் முடியாது." என்றான்.

"புரியல..." என்றாள் அவனைப் பார்த்துக் கொண்டு.

"நான் எதிர்பார்த்த போல நம்ம நெருங்கலன்னு வருத்தமா இருக்கு. அதே சமயம், நான் டச் பண்ணுனதும் நீ மெல்ட் ஆகுறத நினைச்சு சந்தோஷமாவும் இருக்கு." என்றான்.

தன்னையே பார்த்துக் கொண்டு இருந்த அவன் விழிகளைப் பார்க்க முடியாமல், முன்னால் பார்வையினைத் திருப்பிக் கொண்டவளை ரசனையாக அவன் பார்க்க, இப்போது தன்னையே பார்த்துக் கொண்டு இருந்தவனை திரும்பிப் பார்த்தவள், "பாடியை அழகா மெயின்டெய்ன் பண்ணுறீங்க..." என்றாள்.

அவள் பளிச்சென்று பேசியதும் அவனுக்கே கொஞ்சம் கூச்சம் தான். பேசுவதுடன் நிறுத்தி விடாமல் கையை நீட்டி, அவன் வெற்று மார்பை வேறு ரசனையாக பார்த்துக் கொண்டு வருட, தனது மேனியில் படிந்து இருந்த கரத்தைப் பார்த்துவிட்டு அவளைப் பார்த்தான். அவன் மேனியை ரசனையாக பார்த்துக் கொண்டு வருடினாள்.

அவனே தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கின்றான். அவளோ அதற்கு சவால் விடும் முகமாக இப்படி வருடிக் கொண்டல்லவா இருக்கின்றாள். இழுத்து வைத்து இதழில் இதழ் பதிக்க தான் தோன்றியது. ஒரு கட்டத்தில் அவனால் தன்னை அடக்கவே முடியவில்லை. அவள் கையைத் தட்டி விடவும் முடியவில்லை.

இதழ் கடித்துக் கொண்டு, "கேக்கிறதுக்கு சங்கடமா இருக்கு, ஆனாலும் என்னால கன்ட்ரோல் பண்ண முடியல. நீ வேற ரொம்ப டெம்ப்ட் பண்ணுற, ஐ நீட் யூ அகைன்..." என்று கேட்டே விட்டான்.

அவன் இப்படி கேட்டதுமே கையைத் தன்னை நோக்கி இழுத்துக் கொண்டு, "டெம்ப்ட் பண்ணணும்னு நான் பண்ணல..." என்றாள்.

"தட்ஸ் ஃபைன்!" என்று அவள் கையைப் பற்றி அவனே தனது மேனியில் வைத்துக் கொண்டு, "உனக்கு உரிமையானது தான்..." என்றான்.

அவளும், "உங்களுக்கு உரிமையானதையும் தாராளமா எடுத்துக்கலாம், பெர்மிஷன் கேட்கணும்னு இல்லை..." என்று முடிக்க முதல், அவள் பின்னந்தலையில் கையை வைத்து தன்னை நோக்கி இழுத்தவன் இதழ்களைக் கவ்விக் கொள்ள, அவள் விழிகள் மோகமாக மூடிக் கொண்டன.

அவன் கரங்கள் அவளை வருடிக் கொடுக்க, மொத்தமாக தொய்ந்து போனவளோ, தனது ரகசியங்களை ரசனையுடன் வருடிக் கொண்டு இருந்த அவன் கரத்தைப் பற்றி நிறுத்தியபடி, சட்டென அவன் இதழில் இருந்து இதழ்களைப் பிரித்தவள், "உள்ளே போயிடலாமே...?" என்றாள்.

அவனும் மென்மையாக சிரித்தபடி, "ஓகே." என்று சொன்னவன், அவளைத் தூக்கி இடையில் வைத்துக் கொண்டு முத்தமிட்டபடி உள்ளே நுழைந்து விட்டான். மீண்டும் மஞ்சத்தை அலங்கரிக்க ஆரம்பித்து விட்டார்கள் இருவரும்.

அவள் காலையில் எழுந்த போது அவன் இல்லை. வேலைக்கு கிளம்பி இருந்தான். எப்படியோ, வாழ்க்கையில் அடுத்த படிக்கு சென்று விட்டார்கள். மெதுவாக எழுந்து கட்டிலில் அமர்ந்தவள் நேரத்தைப் பார்த்தாள், ஒன்பது மணியாகி இருந்தது.

'இவ்வளவு நேரம் தூங்கி இருக்கேனே...?' என்று யோசித்தவள் கண்ணில் டீபாயில் இருந்த துண்டு தென்பட்டது.

'இது என்ன துண்டு?' என்று நினைத்தபடி அதனை எடுத்துப் பார்த்தாள்.

அவன்தான் ஏதோ எழுதி வைத்துவிட்டு சென்று இருக்கின்றான். புருவம் சுருக்கிக் கொண்டு வாசித்தாள்.

‘குட் மார்னிங் நேத்ரா! தேங்க்ஸ் ஃபார் த யெஸ்டெர்டே நைட். நீ ரொம்ப அழகு. உன்கிட்ட மொத்தம் பன்னிரண்டு மச்சம் இருக்கு. அதுவும் எனக்கு பிடிச்ச மச்சம் எங்க இருக்குன்னா...’ என்று ஆரம்பித்து, சற்று அந்தரங்கமாகவே போக,

"ஹையோ..." என்று வெட்கத்துடன் புலம்பிக் கொண்டு, முகத்தை அவன் எழுதி வைத்து இருந்த துண்டினுள் புதைத்துக் கொண்டாள்.
 

jayashri

New member
Advika pommu such a wonderful romantic person....wow...dialogues gives goosebumps......thanku so much pommu
 
Top