அத்தியாயம் 5
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் தம்பதி சமேதராக நின்று கொண்டிருந்தனர் இரணிய்யகர்பனும் சஷ்டிகாவும்...
வேஷ்டி சட்டையில் பாந்தமாய் புது மாப்பிள்ளைக்குரிய தோரணையில் நின்றிருந்தவனின் நெற்றியில் சின்னதாய் குங்குமத்தீற்று மட்டுமே இருந்தது.. அவன் முகத்தில் சிறு கர்வமான புன்னகை தோன்றியது....
அவன் ஒன்றும் சாதாரண ஒருவனுடன் மோதி வீழ்த்தவில்லையே.. சற்று கர்வமாகவும், திமிருடன் முகிலனைப் பார்த்து கொண்டிருந்தான்...
முகிலனை எந்தளவிற்கு பழிவெறியும் குரோதத்துடன் பார்த்தானோ அதேயளவு காதலுடன் பார்த்தான் சஷ்டிகாவை...
சஷ்டிகா இளஞ்சிவப்பு நிறத்தில் சேலை அணிந்து.. இவன் அவளுக்காக வாங்கியிருந்த நகையை மட்டும் போட்டுக கொண்டிருந்தாள்.. இதற்கெல்லாம் மேலாக அவன் கட்டிய தாலிக்கொடி அவள் நெஞ்சில் உறவாடிக் கொண்டிருந்தது.. ..
சஷ்டிகா அப்பாவிற்காக திருமணம் என ஏற்றுக் கொண்டாலும்.. முதன் முறையாக திருமண பந்தத்தில் இணையும் போது வரும் பதட்டமும் பயமும் அவளைத் தடுமாற வைத்தது...
வீட்டிலிருந்து அனைவரும் திருமணத்திற்கு வந்திருந்தாலும் யார் முகத்திலும் சுத்தமாக மகிழ்ச்சி என்பது இல்லை.. குயிலின் முகத்தில் பயம் பயம் மட்டுமே.. முகிலனை விட்டு விலகவேயில்லை..
அவளின் பயத்தை கூட அவன் அறியவில்லை.. முகிலனைப் பார்க்க அவனோ குற்றவுணர்ச்சியில் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்ற வருத்ததுடன் இறுகிய முகத்துடன் நின்று கொண்டிருந்தான்..
இரணியனை பார்க்க அவனோ சர்வாவுடன் ஏதோ திவீரமாக பேசிக் கொண்டிருந்தான்… சஷ்டியோ 'முகிலனிடம் பேசலாம்' என முகிலனின் அருகில் சென்றவள் "அப்பா" என கூப்பிட்டது தான் தாமதம்... பக்கத்திலிருக்கும் முகிலனுக்கு கேட்டதோ இல்லையோ பத்தடி தூரத்திலிருக்கும் இரணிய்யனின் காதில் தெளிவாக விழுந்தது...
வேகமாக அவளருகில் வந்தவன்.. அவளின் முழங்கையை பற்றி தன்னை நோக்கி இழுக்க.. அவன் நெஞ்சில் பூமாலையாய் வந்து விழுந்தாள்… அவன் அழுத்திப் பிடித்ததினால் வந்த வலியில் சிறு முகம் சுழித்தவாறே, இருந்தவளின் வலி கண்ணில் பட்டாலும் முகிலனின் முன்னால் மிகவும் சாதாரணமாகவே முகத்தை வைத்திருந்தான்..
"இங்க பாரு.. உனக்கு அப்பா அம்மா சொந்த பந்தம் எல்லாம் நான் தான்.. நான் மட்டுந்தான்... உன்னை யாராவது பாக்கணும்னா கூட அவங்க எல்லாரும் என்னைத் தாண்டிதான் வரணும்." என அவளின் கையைப் பற்றியவன் தரதரவென இழுக்காத குறையாக சஷ்டியை இழுத்துக் கொண்டு சென்றான்...
அங்கிருந்த அனைவருக்குமே நன்றாக புரிந்தது... இனிமேல் சஷ்டியை பார்க்க வேண்டுமென்றால் இவனைத் தாண்டிதான் செல்ல வேண்டுமென்பது...
முகிலனுக்கு தன்னால் தான் என்ற குற்றவுணர்ச்சியே பேச விடாமல் செய்தது.. அங்கிருந்த யாரையும் கண்டுக்காமல் நேராக காரை நோக்கி சென்றவன் எடுத்த வேகத்தில் நின்ற இடம் அவனின் வீடு தான்..
வீட்டில் நுழைந்தவனுக்கு மனமெல்லாய் ரணமாக வலித்தது... தன் பெண்ணை கல்யாணம் என்ற பெயரில் பாழுங்கிணற்றில் தள்ளி விட்டதை ஏற்றுக் கொள்ள முடியாமல் திணறினான்..
சோபாவில் அமர்ந்து அண்ணாந்து விட்டத்தைப் பார்த்தவனின் இதழ்கள் விட்டேற்றியாக ஒரு புன்னகையை சுமந்திருந்தது...
விக்னேஷ்வரன், "இப்போ உங்களுக்கு சந்தோஷமா அண்ணா"...
கார்த்திக், "ஏன் அண்ணா அமைதியாவே இருக்கீங்க??.. எங்ககிட்ட சொல்லியிருந்தா எப்படியாவது இந்தக் கல்யாணத்தை நிறுத்திருப்போம்.. இப்போ பாருங்க நம்ம எல்லாரும் இருக்கும் போதே அவளை நாய் மாதிரி தரதரன்னு இழுத்துட்டுப் போறான்.. நம்ம இல்லாதப்போ நம்ம பொண்ணை என்னெல்லாம் கொடுமைப்படுத்துவான்னு நெனைச்சுப் பார்க்கவே பயமா இருக்கு??"...
"இப்போ அவளுக்கு இப்படியொரு கல்யாணம் பண்ண வேண்டிய அவசியம் என்னன்னா??" என மாறி மாறி கேள்வி கேட்ட தம்பிகளை வெற்றுப்பார்வையுடன் பார்த்தான்... அவனின் பார்வையே அங்கிருந்த அனைவரையும் கொன்று கூறு போட்டது...
அவர்கள் அனைவருக்கும் பதிலாய் வந்து நின்றாள் ப்ரணவீகா.. "பெரியப்பா" என ஓடி வந்து அணைத்துக் கொண்டவளை பார்த்த பின்பு தான் நிம்மதியே வந்தது...
இவளுக்காக தானே இத்தனை பேரையும் எதிர்த்து சஷ்டியை பாழுங்கிணற்றில் பிடித்து தள்ளியிருக்கிறான்.. என்பதே மனதுக்குள் ரணமாக வலித்தது...
இரண்டே நாளில் முகிலனின் குடும்பத்தின் தலையெழுத்தையே மாற்றி எழுதியிருந்தான் இரணிய்யகர்பன்...
இரண்டு நாட்களுக்கு முன்பு ஹார்பரில் நின்றிருந்த முகிலனுக்கு போன் வர, அதை அட்டென்ட் பண்ணி காதில் வைத்த அடுத்த நொடி, "ஹலோ மாமா சவுக்கியமா" என நக்கல் பொதிந்த வார்த்தைகளில் சட்டென கோபம் வந்தது..
"யாருடா நீ??"..
"என்ன மாமா இப்டி கேக்குறீங்க??.. உங்க பொண்ணை கட்டப் போற நான் உங்களுக்கு மாப்ள தானே".. என்றவனின் பேச்சை கவனிக்கும் நிலையில் சுத்தமாக இல்லை...
ஆல் இண்டியா டூர் செல்வதாக ஸ்கூலில் இருந்து சென்ற ப்ரணவீயிடம் நேற்றிலிருந்து பேசமுடியவில்லை... அவளின் செயினில் மாட்டியிருந்த ஜிபிஎஸ்ஸும் வேலை செய்யவில்லை... நேற்று இரவு பேசியதோடு சரி.. அதன் பின்பு அவளை தொடர்பு கொள்ளவே முடியவில்லை"..
அதே கவலையில் இருந்தவனுக்கு இந்த போன் கால் சிறிதும் ரசிக்கவில்லை...
"என்ன மாமா.. என் மச்சினிச்சியை காணும்னு தேடுறீங்களா?? ".. என நக்கலாக சிரித்தவனின் வார்த்தையில்
அனைத்துமே புரிந்து விட்டது..
இவன் சாதாரணமாக போன் போட்டு விளையாடவில்லையென.. "எங்கடா எம் பொண்ணு" என்ற முகிலனின் கர்ஜனையில் இகழ்ச்சியான புன்னகையை சிந்தியவன்..
"என்ன மாமா நீங்க.. இவ்ளோ நடந்ததுக்கப்புறம் நீங்க இப்டி கேட்டா எப்படி??.. நாந்தான் உங்க தம்பி பொண்ணை கடத்தி வச்சிருக்கேன்.. நான் சொல்றதை நீங்க அப்படியே உங்க வீட்ல போய் சொல்வீங்களாம்.. அப்புறம் உங்கதம்பி பொண்ணுக்கு நான் சோறு போடுவேனாம்".. என்றவனின் பேச்சை கேட்க வேண்டிய தருணத்தில் இருந்தான் முகிலன்...
"இங்க பாரு நீ பிரச்சனை பண்ணணும்னா அது எங்கூட தான் பண்ணு.. பாவம் அவ சின்ன பொண்ணுடா" என தன்னிலை விட்டு இரங்கிக் கேட்டவனின் வார்த்தையில் இடியென விழுந்து சிரித்தான் இரணிய்யகர்பன்...
"தி கிரெட் கார்முகிலன் கெஞ்சுறாரா??.. தன் தம்பி பொண்ணுக்காக கெஞ்சிறதை பாக்கும் போது அப்படியே உச்சி குளிர்ந்து போகுது மாமா". உதட்டில் விரக்தியான. புன்னகையுடன் சொல்லியவன்...
"இங்க பாருங்க உங்களுக்கு எந்த ஆப்சனும் கிடையாது... நீங்க நான் சொல்றதை கேட்டுத்தான் ஆகணும்.. அவன் சொல்ல சொல்ல கார்முகிலனுக்கு கோபம் கரை தாண்டினாலும், பெரிப்பா என் தன்னையே சுற்றி வரும் பீரணவீயின் பாசம் கட்டிப் போட்டது"..
.நேராக வீட்டிற்கு செல்லும் வழியிலெல்லாம் அவளைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டான்... அவன் செல்லும் வழியெல்லாம் தனக்குத் தெரிந்த ஆட்களை வைத்து ஊரெல்லாம் தேட ஆள் அனுப்பியிருந்தான்.. எல்லா இடத்திலையும் வந்த ஒரே பதில் கிடைக்கவில்லை என்ற வார்த்தையே கிடைத்தது...
"தங்கள் வீட்டுப் பொண்ணின் மேல் கை வைத்தவன் மேல் இன்னும் கொலைவெறியாக இருந்தாலும், அவன் ஏன் சஷியை திருமணம் செய்ய கேட்கிறான் என்பது மட்டுமே பிரதானமாக இருந்தது"..
அவனின் சிந்தனை தடுபடுவது போல் வீடும் வர, வீட்டிற்குள் நுழைந்தவனுக்கு குயிலு, அன்னம், கங்கா, மீனா தமயந்தி தாத்தா மட்டுமே இருந்தனர்...
முகிலு வந்ததுமே சிரித்தவாறு வந்து நின்ற தமயந்தியை பார்த்தவனுக்கு குற்றவுணர்ச்சியாக இருந்தது... "இவர்களின் சந்தோஷம் நிலைக்குமா?? " என மனதுக்குள் சிந்தித்தவனுக்கு அவன் எடுத்த முடிவை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தான்..
"நான் உங்க எல்லார்கிட்டையும் ஒரு விஷயம் சொல்லணும் " என்றதும் அனைவரும் ஒரு வித எதிர்பார்ப்புடன் வந்து நின்றனர்..
"நான் சஷ்டிக்கு மாப்பிள்ளை பாத்துருக்கேன்".. என்றதும் அனைவரின் முகமும் பூவாய் மலர, அவன் அடுத்து சொன்ன வார்த்தையில் அனைவரும் விக்கித்து நின்றனர்....
"நாளைக்கு அவளுக்குக் கல்யாணம்" என்றதும் அனைவருமே பேரதிர்ச்சியில் இருந்தனர்..
குயிலுவோ முகிலனின் முகத்தைப் பார்க்க அவன் முகமோ பாறையென இறுகிப் போய் இருந்தது...
"யாருங்க மாப்பிள்ளை??.. என்ன பண்றாரு??" என்றவளின் கேள்வி சரியாக இருந்தாலும் அதற்கான பதில் தெரியாமல் தானே அல்லாடுகிறான்..
அவர்களிடம் என்ன சொல்லி சமாளிக்கலாம் என நினைப்பதற்குள் போன் அடிக்க, சட்டென அவர்களின் பேச்சைக் கூட காதில் வாங்கிக் கொள்ளாமல் படிகள் அதிர வேகமாக படியேறி தங்கள் அறைக்கு சென்று விட்டான்...
உள்ளே சென்றவன் நேராக பாத்ரூமிற்கு சென்று, "நீ சொன்ன மாதிரியே நான் சொல்லிட்டேன்.. ப்ரணவீயை விட்டுரு.. அவ சின்ன பொண்ணுடா".. என்றதும் கடகடவென சிரித்தவன்...
"இவ்ளோ சின்ன விஷயம் சென்றவுடனே... நான் ப்ரணவீயை விட்டுரணுமா??.. அதுக்கா நான் கஷ்டப்பட்டு அவளை கடத்துனேன்.. அவ்ளோ கெடுபுடில இருந்த பொண்ணை கடத்துறதுக்கு நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா??. எனக்குத் தேவை ஒங்க பொண்ணு சஷ்டிகா" என ஆணவமாக சொல்லியவனை கண்டு பல்லை மட்டுமே கடிக்க முடிந்தது..
"சிக்கீரம் ஏர்போர்ட்ல வந்து என்னை பிக்கப் பண்ணிக்கோங்க" என்றதும் வெளியில் அவனிடம் பேசலாம் என கட்டிலில் அமர்ந்திருந்த குயிலை கூட கவனிக்காமல் வேகமாக வெளியே சென்று விட்டான்..
முகிலன் வந்தததும் பேசலாம் என நினைத்திருந்த குயிலு அவன் வேக வேகமாக சென்றது... ஏதோ பிரச்சினை என்று மட்டும் புரிந்தது.. கேட்டாலும் சின்னதாக சிரிப்பால் சமாளிப்பானே தவிர.. கண்டிப்பாக வாயைத் திறந்து பதில் சொல்ல மாட்டான் இத்தனை வருஷ வாழ்க்கையில் தெளிவாக தெரிந்தது....
ஏர்போர்ட்டுக்கு வந்த முகிலன் அங்கு இரணியனுக்காக காத்திருந்தான்.. முகிலன் காத்திருப்பது தெரிந்தாலும் வேண்டுமென்றே அவனைத் தாண்டி இகழ்ச்சியான புன்னகையுடனே கடந்து சென்றனர் இரணியனும் சர்வாவும்....
ஏர்போர்ட்டிற்கு வெளியே கால் டாக்ஸியை கூப்பிட்டவனின் பின்னால், "என்னை வர சொல்லிட்டு நீங்க தனி கார் புடிச்சி போனா என்ன அர்த்தம் மிஸ்டர்.. இரண்யகர்பன் " என்றதும் சட்டென திரும்பி பார்த்தவனின் பார்வையில் இருந்த பகையும் கண்களில் தெரிந்த வெறியையும் புரியாத புதிராக பார்த்தான் முகிலன்...
"நான் எப்போ சார் உங்களை வர சொன்னேன்???"
"தூத்துக்குடி ஏர்போர்ட் வாங்கன்னு சொல்லும் போதே.. நான் உங்களோட பிலைட் டீடெய்லை கலெக்ட் பண்ணிட்டேன்.. இங்க இருக்கிற எல்லா பிசினஸ்மேனையும் எனக்குத் தெரியும். தெரியாதவர்னா அது நீ மட்டும்தான்.. அப்போ நீதான் எனக்கு போன் பண்ணி மிரட்டுறது??"...
"பரவாயில்லை மாமனாரே.. செம்ம ப்ரைன் தான் உங்களுக்கு வாங்க போகலாம்" என்றவாறே முகிலனின் காரில ஏற, சர்வாவும் தொடர்ந்து ஏறினான்...
கார் நேராக சென்று நின்றது என்னவோ ஹார்பருக்கு தான்.. அந்த இடத்தைப் பார்த்ததுமே சர்வாவிற்கு சற்று திகிலடிக்க, "என்னாச்சி அண்ணா இப்டி ஒரு இடத்துக்கு கூப்பிட்டு வந்துருக்காரு"...
"ம்ம்.. அமைதியா இரு" என்ற இரணியனின் கண்களில் துளியளவு கூட பயமில்லை..
"நீ இந்த இடத்தை விட்டுப் போனா தானே, ஒனக்கும் எம்பொண்ணுக்கும் கல்யாணம் நடக்கும் " என்றவனின் கர்ஜனையில் யாராக இருந்தாலும் சற்று நடுங்கிதான் போவர்...
"இரணியனுக்குத் தான் பயம் என்பது சிறிதுமில்லையே... "என்ன மாமனாரே ப்ரணவீ.. இப்போ என் கையில இருக்காங்குறதை மறந்துட்டுப் பேசுறீங்க???"..
"ப்ரணவீயை கண்டுபிடிக்க எனக்குத் தெரியும்" என்றவனின் பேச்சில் கலகலவென சிரித்தவாறே,
தன் போனை எடுத்து ஒரு வீடியோவை ஓட விட... அதில் சேரில் கட்டப்பட்டு சோர்ந்த நிலையில் தலை தொங்கியவாறே இருந்த ப்ரணவீயை பார்த்ததும்.. நெஞ்சில் சுருக்கென வலித்தது முகிலனுக்கு.
"ப்ரணவீயை தம்பி மகள் என்று என்றுமே அவன் பார்த்ததில்லை.. வீட்டிலேயே அவள் மிகவும் செல்லப்பிள்ளையும், துருதுருவென இருப்பவளும்.. ப்ரணவீக்காகவே தன் மகளின் வாழ்க்கையை அடகு வைக்க துணிந்தான்.. இருவரையும் கோபத்துடன் முறைத்தவாறே காரில் ஏறியதும்.. முகிலனை நக்கல் சிரிப்புடன் பார்த்தவாறே பின்னால் ஏறினர் இரணிய்யனும், சர்வாவும்..
நேராக வீட்டிற்கு வண்டியை நிறுத்தியவன்.. உள்ளே செல்ல.. அவனைத் தொடர்ந்து உள்ளே சென்றனர் இரணிய்யனும், சர்வாவும்.. இருவரையும் அங்கிருந்த அனைவருக்கும் அறிமுகப்படுத்தியவன் மேலே ஒரு அறையை விருந்தாட்கள் அறையில் தங்கிக் கொள்ள சொல்லிவிட்டு சென்றான்..
வீட்டின் மாடிப்படிக்குச் சென்று கொண்டிருந்த இரணியனின் கண்ணில் விழுந்தாள் சஷி... அரைத்தூக்கத்தில் ஒரு கண்ணை மூடியவாறே படிக்கட்டில் ஆடி அசைந்து வந்தவளின் அழகு இரணியனை மொத்தமாக வீழ்த்தியது...
அவன் நிற்பதைக் கூட பார்க்காமல் லாங் ஸ்கேர்ட்டும் ஆதியின் சட்டையையும் போட்டுக் கொண்டிருந்தாள்.. அவளின் டிரெஸ் எப்பொழுதும் இப்படித்தான் இருக்கும் என்பதால் யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை..
"சஷியோ அங்கிருந்த யாரையும் கண்டு கொள்ளாமல் .. சோபாவில் சோர்ந்த நிலையில் அமர்ந்திருந்த முகிலனின் மடியில் தலை வைத்து படுத்தவள்.. அவனின் கைகளை எடுத்து தன் கன்னத்தில் வைத்தவாறே நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள்.. அவனின் மடியில் சொகுசுப் பூனையாக படுத்திருந்தவளை சற்று எரிச்சலுடன் பார்த்தான் இரணியன் "...
"இதே மாதிரி தன் மடியிலும் படுத்துத் தூங்கும் நாள் எப்பொழுதும் வரும்" என ஏங்கிய மனதை அடக்கிக் கொண்டு பார்த்தான்.
சஷ்டிக்கு கல்யாணம் என தெரிந்த நொடியில் இருந்து வீட்டில் உள்ள அனைவரையும் காச்மூச்சென கத்திக் கொண்டிருந்தாள் கிருத்திகா.. அவளுக்கு சஷ்டியின் அவசர கல்யாணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை..
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் தம்பதி சமேதராக நின்று கொண்டிருந்தனர் இரணிய்யகர்பனும் சஷ்டிகாவும்...
வேஷ்டி சட்டையில் பாந்தமாய் புது மாப்பிள்ளைக்குரிய தோரணையில் நின்றிருந்தவனின் நெற்றியில் சின்னதாய் குங்குமத்தீற்று மட்டுமே இருந்தது.. அவன் முகத்தில் சிறு கர்வமான புன்னகை தோன்றியது....
அவன் ஒன்றும் சாதாரண ஒருவனுடன் மோதி வீழ்த்தவில்லையே.. சற்று கர்வமாகவும், திமிருடன் முகிலனைப் பார்த்து கொண்டிருந்தான்...
முகிலனை எந்தளவிற்கு பழிவெறியும் குரோதத்துடன் பார்த்தானோ அதேயளவு காதலுடன் பார்த்தான் சஷ்டிகாவை...
சஷ்டிகா இளஞ்சிவப்பு நிறத்தில் சேலை அணிந்து.. இவன் அவளுக்காக வாங்கியிருந்த நகையை மட்டும் போட்டுக கொண்டிருந்தாள்.. இதற்கெல்லாம் மேலாக அவன் கட்டிய தாலிக்கொடி அவள் நெஞ்சில் உறவாடிக் கொண்டிருந்தது.. ..
சஷ்டிகா அப்பாவிற்காக திருமணம் என ஏற்றுக் கொண்டாலும்.. முதன் முறையாக திருமண பந்தத்தில் இணையும் போது வரும் பதட்டமும் பயமும் அவளைத் தடுமாற வைத்தது...
வீட்டிலிருந்து அனைவரும் திருமணத்திற்கு வந்திருந்தாலும் யார் முகத்திலும் சுத்தமாக மகிழ்ச்சி என்பது இல்லை.. குயிலின் முகத்தில் பயம் பயம் மட்டுமே.. முகிலனை விட்டு விலகவேயில்லை..
அவளின் பயத்தை கூட அவன் அறியவில்லை.. முகிலனைப் பார்க்க அவனோ குற்றவுணர்ச்சியில் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்ற வருத்ததுடன் இறுகிய முகத்துடன் நின்று கொண்டிருந்தான்..
இரணியனை பார்க்க அவனோ சர்வாவுடன் ஏதோ திவீரமாக பேசிக் கொண்டிருந்தான்… சஷ்டியோ 'முகிலனிடம் பேசலாம்' என முகிலனின் அருகில் சென்றவள் "அப்பா" என கூப்பிட்டது தான் தாமதம்... பக்கத்திலிருக்கும் முகிலனுக்கு கேட்டதோ இல்லையோ பத்தடி தூரத்திலிருக்கும் இரணிய்யனின் காதில் தெளிவாக விழுந்தது...
வேகமாக அவளருகில் வந்தவன்.. அவளின் முழங்கையை பற்றி தன்னை நோக்கி இழுக்க.. அவன் நெஞ்சில் பூமாலையாய் வந்து விழுந்தாள்… அவன் அழுத்திப் பிடித்ததினால் வந்த வலியில் சிறு முகம் சுழித்தவாறே, இருந்தவளின் வலி கண்ணில் பட்டாலும் முகிலனின் முன்னால் மிகவும் சாதாரணமாகவே முகத்தை வைத்திருந்தான்..
"இங்க பாரு.. உனக்கு அப்பா அம்மா சொந்த பந்தம் எல்லாம் நான் தான்.. நான் மட்டுந்தான்... உன்னை யாராவது பாக்கணும்னா கூட அவங்க எல்லாரும் என்னைத் தாண்டிதான் வரணும்." என அவளின் கையைப் பற்றியவன் தரதரவென இழுக்காத குறையாக சஷ்டியை இழுத்துக் கொண்டு சென்றான்...
அங்கிருந்த அனைவருக்குமே நன்றாக புரிந்தது... இனிமேல் சஷ்டியை பார்க்க வேண்டுமென்றால் இவனைத் தாண்டிதான் செல்ல வேண்டுமென்பது...
முகிலனுக்கு தன்னால் தான் என்ற குற்றவுணர்ச்சியே பேச விடாமல் செய்தது.. அங்கிருந்த யாரையும் கண்டுக்காமல் நேராக காரை நோக்கி சென்றவன் எடுத்த வேகத்தில் நின்ற இடம் அவனின் வீடு தான்..
வீட்டில் நுழைந்தவனுக்கு மனமெல்லாய் ரணமாக வலித்தது... தன் பெண்ணை கல்யாணம் என்ற பெயரில் பாழுங்கிணற்றில் தள்ளி விட்டதை ஏற்றுக் கொள்ள முடியாமல் திணறினான்..
சோபாவில் அமர்ந்து அண்ணாந்து விட்டத்தைப் பார்த்தவனின் இதழ்கள் விட்டேற்றியாக ஒரு புன்னகையை சுமந்திருந்தது...
விக்னேஷ்வரன், "இப்போ உங்களுக்கு சந்தோஷமா அண்ணா"...
கார்த்திக், "ஏன் அண்ணா அமைதியாவே இருக்கீங்க??.. எங்ககிட்ட சொல்லியிருந்தா எப்படியாவது இந்தக் கல்யாணத்தை நிறுத்திருப்போம்.. இப்போ பாருங்க நம்ம எல்லாரும் இருக்கும் போதே அவளை நாய் மாதிரி தரதரன்னு இழுத்துட்டுப் போறான்.. நம்ம இல்லாதப்போ நம்ம பொண்ணை என்னெல்லாம் கொடுமைப்படுத்துவான்னு நெனைச்சுப் பார்க்கவே பயமா இருக்கு??"...
"இப்போ அவளுக்கு இப்படியொரு கல்யாணம் பண்ண வேண்டிய அவசியம் என்னன்னா??" என மாறி மாறி கேள்வி கேட்ட தம்பிகளை வெற்றுப்பார்வையுடன் பார்த்தான்... அவனின் பார்வையே அங்கிருந்த அனைவரையும் கொன்று கூறு போட்டது...
அவர்கள் அனைவருக்கும் பதிலாய் வந்து நின்றாள் ப்ரணவீகா.. "பெரியப்பா" என ஓடி வந்து அணைத்துக் கொண்டவளை பார்த்த பின்பு தான் நிம்மதியே வந்தது...
இவளுக்காக தானே இத்தனை பேரையும் எதிர்த்து சஷ்டியை பாழுங்கிணற்றில் பிடித்து தள்ளியிருக்கிறான்.. என்பதே மனதுக்குள் ரணமாக வலித்தது...
இரண்டே நாளில் முகிலனின் குடும்பத்தின் தலையெழுத்தையே மாற்றி எழுதியிருந்தான் இரணிய்யகர்பன்...
இரண்டு நாட்களுக்கு முன்பு ஹார்பரில் நின்றிருந்த முகிலனுக்கு போன் வர, அதை அட்டென்ட் பண்ணி காதில் வைத்த அடுத்த நொடி, "ஹலோ மாமா சவுக்கியமா" என நக்கல் பொதிந்த வார்த்தைகளில் சட்டென கோபம் வந்தது..
"யாருடா நீ??"..
"என்ன மாமா இப்டி கேக்குறீங்க??.. உங்க பொண்ணை கட்டப் போற நான் உங்களுக்கு மாப்ள தானே".. என்றவனின் பேச்சை கவனிக்கும் நிலையில் சுத்தமாக இல்லை...
ஆல் இண்டியா டூர் செல்வதாக ஸ்கூலில் இருந்து சென்ற ப்ரணவீயிடம் நேற்றிலிருந்து பேசமுடியவில்லை... அவளின் செயினில் மாட்டியிருந்த ஜிபிஎஸ்ஸும் வேலை செய்யவில்லை... நேற்று இரவு பேசியதோடு சரி.. அதன் பின்பு அவளை தொடர்பு கொள்ளவே முடியவில்லை"..
அதே கவலையில் இருந்தவனுக்கு இந்த போன் கால் சிறிதும் ரசிக்கவில்லை...
"என்ன மாமா.. என் மச்சினிச்சியை காணும்னு தேடுறீங்களா?? ".. என நக்கலாக சிரித்தவனின் வார்த்தையில்
அனைத்துமே புரிந்து விட்டது..
இவன் சாதாரணமாக போன் போட்டு விளையாடவில்லையென.. "எங்கடா எம் பொண்ணு" என்ற முகிலனின் கர்ஜனையில் இகழ்ச்சியான புன்னகையை சிந்தியவன்..
"என்ன மாமா நீங்க.. இவ்ளோ நடந்ததுக்கப்புறம் நீங்க இப்டி கேட்டா எப்படி??.. நாந்தான் உங்க தம்பி பொண்ணை கடத்தி வச்சிருக்கேன்.. நான் சொல்றதை நீங்க அப்படியே உங்க வீட்ல போய் சொல்வீங்களாம்.. அப்புறம் உங்கதம்பி பொண்ணுக்கு நான் சோறு போடுவேனாம்".. என்றவனின் பேச்சை கேட்க வேண்டிய தருணத்தில் இருந்தான் முகிலன்...
"இங்க பாரு நீ பிரச்சனை பண்ணணும்னா அது எங்கூட தான் பண்ணு.. பாவம் அவ சின்ன பொண்ணுடா" என தன்னிலை விட்டு இரங்கிக் கேட்டவனின் வார்த்தையில் இடியென விழுந்து சிரித்தான் இரணிய்யகர்பன்...
"தி கிரெட் கார்முகிலன் கெஞ்சுறாரா??.. தன் தம்பி பொண்ணுக்காக கெஞ்சிறதை பாக்கும் போது அப்படியே உச்சி குளிர்ந்து போகுது மாமா". உதட்டில் விரக்தியான. புன்னகையுடன் சொல்லியவன்...
"இங்க பாருங்க உங்களுக்கு எந்த ஆப்சனும் கிடையாது... நீங்க நான் சொல்றதை கேட்டுத்தான் ஆகணும்.. அவன் சொல்ல சொல்ல கார்முகிலனுக்கு கோபம் கரை தாண்டினாலும், பெரிப்பா என் தன்னையே சுற்றி வரும் பீரணவீயின் பாசம் கட்டிப் போட்டது"..
.நேராக வீட்டிற்கு செல்லும் வழியிலெல்லாம் அவளைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டான்... அவன் செல்லும் வழியெல்லாம் தனக்குத் தெரிந்த ஆட்களை வைத்து ஊரெல்லாம் தேட ஆள் அனுப்பியிருந்தான்.. எல்லா இடத்திலையும் வந்த ஒரே பதில் கிடைக்கவில்லை என்ற வார்த்தையே கிடைத்தது...
"தங்கள் வீட்டுப் பொண்ணின் மேல் கை வைத்தவன் மேல் இன்னும் கொலைவெறியாக இருந்தாலும், அவன் ஏன் சஷியை திருமணம் செய்ய கேட்கிறான் என்பது மட்டுமே பிரதானமாக இருந்தது"..
அவனின் சிந்தனை தடுபடுவது போல் வீடும் வர, வீட்டிற்குள் நுழைந்தவனுக்கு குயிலு, அன்னம், கங்கா, மீனா தமயந்தி தாத்தா மட்டுமே இருந்தனர்...
முகிலு வந்ததுமே சிரித்தவாறு வந்து நின்ற தமயந்தியை பார்த்தவனுக்கு குற்றவுணர்ச்சியாக இருந்தது... "இவர்களின் சந்தோஷம் நிலைக்குமா?? " என மனதுக்குள் சிந்தித்தவனுக்கு அவன் எடுத்த முடிவை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தான்..
"நான் உங்க எல்லார்கிட்டையும் ஒரு விஷயம் சொல்லணும் " என்றதும் அனைவரும் ஒரு வித எதிர்பார்ப்புடன் வந்து நின்றனர்..
"நான் சஷ்டிக்கு மாப்பிள்ளை பாத்துருக்கேன்".. என்றதும் அனைவரின் முகமும் பூவாய் மலர, அவன் அடுத்து சொன்ன வார்த்தையில் அனைவரும் விக்கித்து நின்றனர்....
"நாளைக்கு அவளுக்குக் கல்யாணம்" என்றதும் அனைவருமே பேரதிர்ச்சியில் இருந்தனர்..
குயிலுவோ முகிலனின் முகத்தைப் பார்க்க அவன் முகமோ பாறையென இறுகிப் போய் இருந்தது...
"யாருங்க மாப்பிள்ளை??.. என்ன பண்றாரு??" என்றவளின் கேள்வி சரியாக இருந்தாலும் அதற்கான பதில் தெரியாமல் தானே அல்லாடுகிறான்..
அவர்களிடம் என்ன சொல்லி சமாளிக்கலாம் என நினைப்பதற்குள் போன் அடிக்க, சட்டென அவர்களின் பேச்சைக் கூட காதில் வாங்கிக் கொள்ளாமல் படிகள் அதிர வேகமாக படியேறி தங்கள் அறைக்கு சென்று விட்டான்...
உள்ளே சென்றவன் நேராக பாத்ரூமிற்கு சென்று, "நீ சொன்ன மாதிரியே நான் சொல்லிட்டேன்.. ப்ரணவீயை விட்டுரு.. அவ சின்ன பொண்ணுடா".. என்றதும் கடகடவென சிரித்தவன்...
"இவ்ளோ சின்ன விஷயம் சென்றவுடனே... நான் ப்ரணவீயை விட்டுரணுமா??.. அதுக்கா நான் கஷ்டப்பட்டு அவளை கடத்துனேன்.. அவ்ளோ கெடுபுடில இருந்த பொண்ணை கடத்துறதுக்கு நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா??. எனக்குத் தேவை ஒங்க பொண்ணு சஷ்டிகா" என ஆணவமாக சொல்லியவனை கண்டு பல்லை மட்டுமே கடிக்க முடிந்தது..
"சிக்கீரம் ஏர்போர்ட்ல வந்து என்னை பிக்கப் பண்ணிக்கோங்க" என்றதும் வெளியில் அவனிடம் பேசலாம் என கட்டிலில் அமர்ந்திருந்த குயிலை கூட கவனிக்காமல் வேகமாக வெளியே சென்று விட்டான்..
முகிலன் வந்தததும் பேசலாம் என நினைத்திருந்த குயிலு அவன் வேக வேகமாக சென்றது... ஏதோ பிரச்சினை என்று மட்டும் புரிந்தது.. கேட்டாலும் சின்னதாக சிரிப்பால் சமாளிப்பானே தவிர.. கண்டிப்பாக வாயைத் திறந்து பதில் சொல்ல மாட்டான் இத்தனை வருஷ வாழ்க்கையில் தெளிவாக தெரிந்தது....
ஏர்போர்ட்டுக்கு வந்த முகிலன் அங்கு இரணியனுக்காக காத்திருந்தான்.. முகிலன் காத்திருப்பது தெரிந்தாலும் வேண்டுமென்றே அவனைத் தாண்டி இகழ்ச்சியான புன்னகையுடனே கடந்து சென்றனர் இரணியனும் சர்வாவும்....
ஏர்போர்ட்டிற்கு வெளியே கால் டாக்ஸியை கூப்பிட்டவனின் பின்னால், "என்னை வர சொல்லிட்டு நீங்க தனி கார் புடிச்சி போனா என்ன அர்த்தம் மிஸ்டர்.. இரண்யகர்பன் " என்றதும் சட்டென திரும்பி பார்த்தவனின் பார்வையில் இருந்த பகையும் கண்களில் தெரிந்த வெறியையும் புரியாத புதிராக பார்த்தான் முகிலன்...
"நான் எப்போ சார் உங்களை வர சொன்னேன்???"
"தூத்துக்குடி ஏர்போர்ட் வாங்கன்னு சொல்லும் போதே.. நான் உங்களோட பிலைட் டீடெய்லை கலெக்ட் பண்ணிட்டேன்.. இங்க இருக்கிற எல்லா பிசினஸ்மேனையும் எனக்குத் தெரியும். தெரியாதவர்னா அது நீ மட்டும்தான்.. அப்போ நீதான் எனக்கு போன் பண்ணி மிரட்டுறது??"...
"பரவாயில்லை மாமனாரே.. செம்ம ப்ரைன் தான் உங்களுக்கு வாங்க போகலாம்" என்றவாறே முகிலனின் காரில ஏற, சர்வாவும் தொடர்ந்து ஏறினான்...
கார் நேராக சென்று நின்றது என்னவோ ஹார்பருக்கு தான்.. அந்த இடத்தைப் பார்த்ததுமே சர்வாவிற்கு சற்று திகிலடிக்க, "என்னாச்சி அண்ணா இப்டி ஒரு இடத்துக்கு கூப்பிட்டு வந்துருக்காரு"...
"ம்ம்.. அமைதியா இரு" என்ற இரணியனின் கண்களில் துளியளவு கூட பயமில்லை..
"நீ இந்த இடத்தை விட்டுப் போனா தானே, ஒனக்கும் எம்பொண்ணுக்கும் கல்யாணம் நடக்கும் " என்றவனின் கர்ஜனையில் யாராக இருந்தாலும் சற்று நடுங்கிதான் போவர்...
"இரணியனுக்குத் தான் பயம் என்பது சிறிதுமில்லையே... "என்ன மாமனாரே ப்ரணவீ.. இப்போ என் கையில இருக்காங்குறதை மறந்துட்டுப் பேசுறீங்க???"..
"ப்ரணவீயை கண்டுபிடிக்க எனக்குத் தெரியும்" என்றவனின் பேச்சில் கலகலவென சிரித்தவாறே,
தன் போனை எடுத்து ஒரு வீடியோவை ஓட விட... அதில் சேரில் கட்டப்பட்டு சோர்ந்த நிலையில் தலை தொங்கியவாறே இருந்த ப்ரணவீயை பார்த்ததும்.. நெஞ்சில் சுருக்கென வலித்தது முகிலனுக்கு.
"ப்ரணவீயை தம்பி மகள் என்று என்றுமே அவன் பார்த்ததில்லை.. வீட்டிலேயே அவள் மிகவும் செல்லப்பிள்ளையும், துருதுருவென இருப்பவளும்.. ப்ரணவீக்காகவே தன் மகளின் வாழ்க்கையை அடகு வைக்க துணிந்தான்.. இருவரையும் கோபத்துடன் முறைத்தவாறே காரில் ஏறியதும்.. முகிலனை நக்கல் சிரிப்புடன் பார்த்தவாறே பின்னால் ஏறினர் இரணிய்யனும், சர்வாவும்..
நேராக வீட்டிற்கு வண்டியை நிறுத்தியவன்.. உள்ளே செல்ல.. அவனைத் தொடர்ந்து உள்ளே சென்றனர் இரணிய்யனும், சர்வாவும்.. இருவரையும் அங்கிருந்த அனைவருக்கும் அறிமுகப்படுத்தியவன் மேலே ஒரு அறையை விருந்தாட்கள் அறையில் தங்கிக் கொள்ள சொல்லிவிட்டு சென்றான்..
வீட்டின் மாடிப்படிக்குச் சென்று கொண்டிருந்த இரணியனின் கண்ணில் விழுந்தாள் சஷி... அரைத்தூக்கத்தில் ஒரு கண்ணை மூடியவாறே படிக்கட்டில் ஆடி அசைந்து வந்தவளின் அழகு இரணியனை மொத்தமாக வீழ்த்தியது...
அவன் நிற்பதைக் கூட பார்க்காமல் லாங் ஸ்கேர்ட்டும் ஆதியின் சட்டையையும் போட்டுக் கொண்டிருந்தாள்.. அவளின் டிரெஸ் எப்பொழுதும் இப்படித்தான் இருக்கும் என்பதால் யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை..
"சஷியோ அங்கிருந்த யாரையும் கண்டு கொள்ளாமல் .. சோபாவில் சோர்ந்த நிலையில் அமர்ந்திருந்த முகிலனின் மடியில் தலை வைத்து படுத்தவள்.. அவனின் கைகளை எடுத்து தன் கன்னத்தில் வைத்தவாறே நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள்.. அவனின் மடியில் சொகுசுப் பூனையாக படுத்திருந்தவளை சற்று எரிச்சலுடன் பார்த்தான் இரணியன் "...
"இதே மாதிரி தன் மடியிலும் படுத்துத் தூங்கும் நாள் எப்பொழுதும் வரும்" என ஏங்கிய மனதை அடக்கிக் கொண்டு பார்த்தான்.
சஷ்டிக்கு கல்யாணம் என தெரிந்த நொடியில் இருந்து வீட்டில் உள்ள அனைவரையும் காச்மூச்சென கத்திக் கொண்டிருந்தாள் கிருத்திகா.. அவளுக்கு சஷ்டியின் அவசர கல்யாணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை..