5
கொடிய விஷநாகம் தன் தூக்கத்தை தடைசெய்த தலைவனை நோக்கிவர கண்டுகொண்டாள் வதன இளவரசி. அவள் வீசி எறிந்த வாள் அதன் தலையை பாதியாக்கி பறந்து சென்றது.தளபதியை அவள் பார்த்த பார்வையோ இது நகரமல்ல தளபதி,வர்ணிக்க வார்த்தையின்றி போகுமளவுக்கு அழகு சுமந்து நிற்கும் பூபோல கொடிய விஷம் தன்னுள் மறைத்து வைத்திருக்கும் முட்கள் பூக்கும் காடும்கூட என்றது.
இம்முறை அழுத்தமாக மிளிரும் அழகு, வீரமும் நிறைந்த இளவரசியே சாம்ராஜ்யம் திரும்புவோமென அவன் சொல்ல எங்கே என்னை தூக்கி கொண்டுபோ பார்க்கலாம் என்றாளாம் அழகிய மங்கை. பொன்மேனி பெண்ணே உன்னை தீண்டும் ஆசையை தூண்டாதே..! எண்ணிய தளபதி தலை தாழ்த்திகொண்ட நேரம் அழகியின் திண்மையை அறிந்திருந்தான் மாக்கியவல்லி.
காரில் அமர்ந்திருந்தவனால் காரை இயக்க முடியுமென தோன்றவில்லை. ஆராதனா பால்கி கையை பிடித்து அமர்ந்திருந்ததை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ‘ஆக்சிடெண்ட் முத்தத்திற்கு இவ்வளவு பொசசிவ்னஸ் ஆகாதுடா அருணு’ அவனை அவனே தேற்றிகொண்டு நடுங்கும் கைகளையே பார்த்து அமர்ந்திருந்தான்.
ரிச்மண்ட் நகரம். மாலை ஆறு மணி, திருமதி சவிதா விக்ரமன் அவர் வக்கீலிடம் சீக்கிரம் இந்த கேஸ் முடித்து கொடுங்கள் என பேசிகொண்டிருந்தார். கணவர் மாய்ந்துவிட்டாரே என்று அழுதுகொண்டிருக்க அவரால் முடியவில்லை. டிரெண்ட் கார்ப்ரேஷன் உலகளவில் விற்கும் பிராண்டட் ஆடைகளின் தேர்ந்த ஆரம்பபுள்ளி.அவர்களிடம் கிடைக்காத துணி ரகமே இல்லை. ஆர்கானிக் நூல் தொடங்கி செயற்கை நூல் வரை பலவிதமான பல நாட்டு வகை துணிகளும் அவர்களிடம் கிடைக்கும்.
விளம்பரங்களில் ‘டிரெண்ட் கார்ப் ஃபேபிரிக்ஸ்’ என தனியாக குறிப்பிடும் அளவிற்கு தனிபெருமை கொண்ட நிறுவனம். ஃபேஷன் உலகில் தனி இடம் வசிக்கும் நிறுவனம். அப்படியான டிரெண்ட் நிறுவனத்தை அவர் காப்பாற்றியாக வேண்டும்.
விக்ரம் இழப்பு அவரை உருகுளைத்துவிட்டதுதான், மகளையும் அவள் எதிர்காலத்தையும் காத்து சீர் செய்து கொடுத்தாகவேண்டும். அந்த ஒரு எண்ணம் மட்டுமே அவரை நடமாட வைத்திருக்கிறது.விக்ரம் மரணம் விபத்து என்று உறுதி செய்து,ஆருவை காப்பாற்றி உடல்நிலை தேற்றி வீட்டுக்கு கூட்டிவரும் வேளை, அவர்கள் நிறுவனத்தின் மீது ஆசைப்பட்டு,சவிதாவுக்கு நெருக்கடி கொடுக்க விக்ரம் மரணம் விபத்து அல்ல கொலை என்றும், ட்ரெண்ட் கார்ப்ரேஷன் நிறுவனத்தில் சட்டத்திற்கு புறம்பான வியாபாரம் நடக்கிறது என்றும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்குப் பதிவு செய்த ஆள் யாரென்று கண்டுபிடித்து என்ன வேண்டும் என்று கேட்க, கம்பெனி அவர்களுக்கு மாற்றி கொடுக்குமாறு மிரட்டியுள்ளனர், இத்தனை நாள் முடியாது என்பது போல் இருந்தவர்.இனி இங்கிருக்கும் சொத்தை எல்லாம் விற்று இந்தியாவில் போய் மகளுடன் செட்டில் ஆகிவிடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.
மகளின் பாதுகாப்பை பற்றிய எண்ணம் எழுந்ததும் வக்கீல் விஸ்வநாதனுக்கு அழைத்தார். நண்பன் விக்ரமன் மீது பாசம் வைத்துள்ள விஸ்வநாதன் சவிதாவின் அழைப்பை ஏற்ற விவரம் தெரிந்துகொண்டு ஆறுதலாக "நீ உன் இஷ்டம் போல செய்யம்மா, கவலைபடாத ஆருதான் எனக்கு மருமகள்" என்றார். எப்போதும் மகளைக்கேட்டே முடிவுசெய்யும் சவிதா இந்த விஷயத்திலும் அவளை கேட்டு முடிவு செய்யலாம் என்று நினைத்தாலும் அதை விஸ்வநாதானிடம் வெளிப்படுத்தவில்லை. கணவனை இழந்து மகளை கரைத்தேற்ற நினைக்கும் பெண்ணுக்கு ஆறுதல் சொல்லும் நல்லுள்ளத்தை மறுதலித்து பேச தோண்றவில்லை அவருக்கு.
சவீதாவின் இப்போதைய எண்ணமெல்லாம் எங்கேனும் ஆராதனா நல்வாழ்வு வாழவேண்டும். விஸ்வநாதனின் ஆறுதலான வார்த்தைகளைக் கேட்டு தற்காலிக நிம்மதி அடைந்த சவிதா மகளுடன் பேசுங்கள் அண்ணா, எப்படியிருக்கிறாள் கேளுங்கள் என்று கூறி அழைப்பை துண்டித்தார். உடனே ஆராதனா நினைவு வர விஸ்வநாதன் ஆராதனாக்கு மெசேஜ் அனுப்பினார் எப்படி இருக்கிறாயென கேட்டு. நன்றாக இருப்பதாக பதில் சொன்னவள் கைக்கு எட்டாது போனை தூரமாக வைத்துவிட்டாள். யாருக்கும் பதில் சொல்லும் தெம்பு இல்லை.
மெத்தையில் விழுந்து கண்மூடியவனுக்கு குற்ற உணர்ச்சி இருந்தும் உறக்கம் வந்தது ஏனோ?! ஐயோ! என்று குற்றவுணர்ச்சியில் அடித்துக்கொண்ட நெஞ்சம் தூக்கம் வராமல்தானே தவித்திருக்க வேண்டும் இது என்ன இது அதிசயமாக இருக்கிறது..!
மேற்கொண்டு வரும் குழப்பத்திற்கு அணை கட்டிவிட்டது வேலைகள்.
மூன்று நாட்கள் வீட்டில் இருந்துகொண்டே யூனிட் வேலையை தொடக்கி அதை உயர்த்த திட்டம் தீட்டி எடுத்துக்கொண்டு வந்தாள் ஆராதனா. வாங்கிப் பார்த்த பால்கிக்கு ஆச்சரியம் மீறி நிம்மதியாக இருந்தது.
அருணும் பால்கியும் பூர்ணாவிற்கு சென்று வேலை செய்யத்தொடங்கிய நாள்முதல் பால்கி அவன் கார் எடுத்துக்கொண்டு பாட்டி வீட்டுக்கு வந்து அருணை கூட்டி போவான். இருவருக்கும் காரோட்ட இஷ்டம் என்றாலும் அருண் ஏதாவது பேசிக்கொண்டே வர பால்கி கார் ஓட்ட; பயணம் செய்வார்கள். அருண் மேனேஜிங் டைரக்டராக அமர்ந்துகொள்ள, பால்கி ஜெனரல் மேனேஜர் என்று சொல்லிக்கொண்டாலும் அருணுக்கு உயர் ரக அசிஸ்டன்ட்டாக இருந்தான். பாட்டி இவர்களை கண்டு ஒன்றும் சொல்லவில்லை.அவன் அப்பாதான் “என்னடா செய்யற நீ? பேசாம நம்ம தொழில் வந்து பாரு” என்று மிரட்டினார். ஆனாலும், அதெல்லாம் இல்லப்பா நான் அருண் கூட இருக்கேன் என்று சொல்லி அவனுடன் இருக்கிறான்.அப்படியான பாசக்கார மச்சானை பாட்டி இன்று சீண்டி விட்டார்.'என்னடா அருண் இல்லாமல் புது கம்பெனியில் வேலை எதுவும் செய்ய தெரியலையோ' கேட்டு விட்டார். முணுக்கென்று இதயத்தின் ஓரத்தில் ஒரு வலி எழுந்தது.சுயகௌரவம் கிள்ளி பார்த்த வலி விடாமல் வலிக்க, நேரம்பார்த்து ஆரு திட்டத்தைத் தீட்டிகொண்டு வந்து கொடுக்க “குட் மேற்கொண்டு டிஸ்கஷன் செய்து பாட்டியிடம் பேசி செய்யலாம்” என்றான்.கண்களை விரித்து தலையை இடமும் புறமும் தலையை அசைத்தவள் செய்கையில் ஆலோசனைகள் செய்யலாம் பாட்டியிடம் இப்போது எதுவும் சொல்ல வேண்டாம் என்றாள்.
அவனும் முகம் சுருக்கி கேள்வியாக பார்க்க ஒவ்வொரு அடியாக செய்துவிட்டு சொல்லலாம்,செய்வதற்கும் முன் சொல்லி நடக்காமல்போனால் கேள்வி கேட்பார்கள். நம்மால் முடியும் என்று காட்டலாம் கம்பீரமாக நம்பிக்கையுடன் அவள் செய்கையில் சொல்ல பால்கி மெல்ல புன்னகைத்தான் .
தேவைப்படும் வேலை ஆட்கள் எண்ணிக்கை, வசதிகள் என்று மேற்கொண்டு பேசிக்கொண்டிருக்க ஒரு முடிவுக்கு வரும் நேரம் அருண் வந்து சேர்ந்தான். இருவரும் பேசி முடிக்கும்வரை அமைதியாக இருந்தவன் சாந்தமான குரலில் காரில் கீறல் இருக்கிறது அது எப்படி ஆனது?அவளை கேள்வி கேட்டான்.
ஆராதனாவும் பொறுமையாக சிக்னலில் ஒரு ஆள் இடிச்சுட்டு போயிட்டான்,அவளும் அங்கே கம்பெனி வந்துதான் பார்த்தாள் சொல்ல இவன் முறைத்தான்.அருணை திசைதிருப்ப பால்கி “மச்சான் பாரு நாங்க இதையெல்லாம் செய்யபோறோம்” சொல்ல “மச்சான் இதெல்லாம் இவளே கவனிக்கட்டும், நீ நம்ப அணிமேஷன் கம்பெனிக்கு தேவையான விஷயங்களை தயார் செய்” பொறுமையில்லாமல் சொல்ல ஆராதனா எரிச்சலானாள்.
அருணை முறைத்துக்கொண்டே போனில் வேக வேகமாக டைப் அடித்தாள். “இது என்ன சின்னபிள்ளைத்தனமாக இருக்கு! ஒரு ஆள் ஒரு வேலையைதான் செய்யமுடியும், அப்போதுதான் அதை சரியாக செய்து முடிக்க முடியும் நீ பழசை பார், பால்கி இந்த புது யூனிட் பார்க்கட்டும், நான் பால்கி சொல்வதைச் செய்கிறேன்” வாய்ஸ் ஆப் பேசியது.
அருணும் கோவமாக,வேலைக்குதான சேர்ந்திருக்க வேலைய மட்டும் பாரு எஜமானர்களை வழிநடத்தும் வேலையாள் இங்க இருக்க முடியாது மிரட்டினான்.
ஆராதனா குறிப்பு எழுதும் புத்தகத்தை சட்டென மேஜைமீது அடித்துவிட்டு பால்கியை ஒரு பார்வை பார்த்துவிட்டு எழுந்து கடகடவென்னு வெளியே நடக்க சென்றாள். ஏய் இரு! அதிகாரமாக அழைத்தவன் அவள் என்ன என்று பார்க்க, “பாஸ் வந்து பேசிட்டு இருக்கேன் இப்படி எகத்தாளமா எழுந்து போற நீ” கேட்க கோணலாக வாயை இழுத்து “போடா” பார்வையில் பேசி திரும்பினாள். கவனிக்க தவறவில்லை அவன். “நான் இங்க முதலாளி, நான் சொல்றதை செய்யணும்” அவன் அதிகாரமாக பேசும் தொனி பிடிக்காமல் கோபம் உச்சந்தலைக்கு ஏற திரும்பி வேகமாக நடக்க போனவளை இரு என்று கையை பிடித்து இழுத்தான் சட்டென கண்கள் இருண்டு தடுமாறிப்போனாள் ஆராதனா. ‘பாடி சோடா’ என்று அவளைக் கிண்டல் செய்து சிரித்தான் அருண். உடனே அவளும் "நீயும் தலையாட்டி பொம்மை" என்று தலையை ஆட்டிக்காண்பித்தாள். இம்முறை திமிர் பார்வையும் கிண்டல் பேசும் முகமும் கொள்ளை அழகாக தெரிய அந்த நிமிடம் அமைதியாகிப் போனான் அருண்.
அவன் இலகுவான முகம் கண்டவள் தீவிரமாகப் பேசினாள் “அடுத்த மூணு மாசம் டைம் எடுத்துக்கொள்ளலாம் இந்த யூனிட் ரன்னிங் நிலைமைக்கு வர வேண்டும்” என்றாள்.
தண்ணீர் விழுந்த தனல் போல இருந்தவன் திரும்ப பக்கென்று பற்றிக்கொண்டான்.“நீ என்ன சொல்றது, டேய் மச்சான் அந்த அணிமேஷன் கம்பெனிக்காரங்க கூப்பிட்டு இன்வெஸ்ட்மெண்ட் டீடைல்ஸ் பத்தி நீ பேசுற…”அருண் சொல்ல கோபத்தில் முகம் சிவந்து ஆராதனா பால்கி கையை அழுத்தி பிடித்துக்கொண்டு பால்கி என்கூட மட்டும் தான் இருப்பான் அழுத்தமாக செய்கையில் சொல்ல, “பால்கி என் மச்சான், என் சொந்தக்காரன் நான் சொல்றதைதான் செய்வான்” அருண் உரிமையாக சொல்ல பல்லை கடித்துக்கொண்டு கண்களை விரித்து “பால்கி என் ஃப்ரெண்ட்” என்று அவளும் செய்கையில் சொல்ல மச்சான் நீ வாடா என்று அருண் அவனை தரதரவென்று இழுத்துக்கொண்டு சென்றான். கடக்கும் பால்கி கையை இருக பிடித்துக்கொண்டு இவள் இழுக்க “ஐயோ ப்ளீஸ் விடுங்க” உரக்கக் கத்திய பால்கி “மூணு வேலையை மூன்று பேர் சேர்ந்து செய்வோம் கொஞ்சம் சும்மா இருங்க” என்றான்.
“இம்” என்று அடுத்தவருக்குப் புரியவேண்டும் என்று இருவரும் பிடித்திருந்த கையை வேகமாக விட ஆடம்பர ஆபிஸ் க்ரானைட் தரையில் "ஊப்ஸ்"என்று சரிந்து விழுந்த பால்கியை பிடிக்க முயன்று மூவரும் கீழே விழுந்தனர்.
“சரியான வாழப்பழத்தோல்டா இவ,எப்ப பாரு எவனையாவது கீழே தள்ளி விட்டுட்டு இருக்குறா” அருண் திரும்ப தொடங்கினான்.
பால்கி வேங்கை ஒரு பக்கம் சிங்கம் ஒருபக்கம், நடுவில் நான்தானே ஆடு கமல்ஹாசன் பாடுவது போல “மச்சான் ப்ளீஸ் பேசாதடா” என்று அவனையும் “ஆரு,அவன் உன்ன விட பெரியவன் மரியாதையாக நடத்தணும்”அவளையும் அடக்கினான்.
“சரி வா மச்சான் நம்ப ஆடிட்டர் பார்க்க போகலாம்” அருண் கூப்பிட “நானும் வருவேன்” ஆருவும் கிளம்ப தயாராக பால்கி அருணிடம் “வரட்டும்டா பிளீஸ்,தனியா இருக்க முடியாது” கெஞ்சி கேட்டு கூட்டிக்கொண்டான்.
“கிலுகிலுப்ப” அருண் சொல்ல ஆராதனா புரியாமல் என்ன சொல்கிறான் இவனென முழித்து பால்கியை பார்த்தாள். பால்கி “குழந்தைகள் கையில் வைத்து விளையாடும் பொம்மை, சதாசர்வகாலமும் சத்தமிட்டுக் கொண்டு இருக்கும்” என்றான்.அதாவது மேடம் தலைவலி கூட்டுறாங்களாம். உட்கருத்து புரிந்து கொண்டவள் “எவ்வளவு உயர்ந்த மனசு,தான் என்ன என்று வெளியே சத்தமாக சொல்லிக்கொள்ளும் உன் பண்பு உன்னை ஒருநாள் உயர்த்தும்” என்றாள்.
அவள் வாய்ஸ் ஆப் கேட்டு முறைத்துக் கொண்டே இருந்தவன் பால்கியை பார்த்து “இரு மச்சான்” ட்ரைவர் சீட்டில் ஏற போனவனை தடுத்து “நாங்க உட்கார்ந்து வரோம், நீ ஓட்டு” என்றான்.பயந்தாலும் தன் சுயமரியாதையை விட்டுகொடுக்கமாட்டாதவள் "எனக்கு என்ன நான் ஓட்டுறேன்" என செய்கையில் சொன்னாள்.
பால்கியை கூகுள் மேப்பில் வழி போட்டுக்கொடுக்க சொல்லிவிட்டு மாற்று வழி ஏதாவது இருந்தால் முன்கூட்டியே சொல்ல சொன்னாள். பால்கி சங்கடமாக முழிக்க, “இரு மச்சான் ஊர் தெரிஞ்சிக்கணும் இல்லையா?” கேட்டான் அருண்.
பயணத்திலும் அருண் வெறுப்பேற்றிக்கொண்டே வர ஆராதனா காரை இடிக்கப் போவது போல ஓட்டினாள். கோபத்தில் இவன் கத்த அவள் வேண்டுமென்றே இன்னமும் செய்ய, டாம் அண்ட் ஜெர்ரி போல சண்டையிட்டு கொண்டு ஆடிட்டரை பார்த்து பேசினார்கள்.
ஆடிட்டரும் அவர் பங்குக்கு ஓர் உண்மையை போட்டு உடைத்தார். சொத்தென்று காற்று போன பலூன் போல சூம்பி போனார்கள் நண்பர்கள் மூவரும்.
கொடிய விஷநாகம் தன் தூக்கத்தை தடைசெய்த தலைவனை நோக்கிவர கண்டுகொண்டாள் வதன இளவரசி. அவள் வீசி எறிந்த வாள் அதன் தலையை பாதியாக்கி பறந்து சென்றது.தளபதியை அவள் பார்த்த பார்வையோ இது நகரமல்ல தளபதி,வர்ணிக்க வார்த்தையின்றி போகுமளவுக்கு அழகு சுமந்து நிற்கும் பூபோல கொடிய விஷம் தன்னுள் மறைத்து வைத்திருக்கும் முட்கள் பூக்கும் காடும்கூட என்றது.
இம்முறை அழுத்தமாக மிளிரும் அழகு, வீரமும் நிறைந்த இளவரசியே சாம்ராஜ்யம் திரும்புவோமென அவன் சொல்ல எங்கே என்னை தூக்கி கொண்டுபோ பார்க்கலாம் என்றாளாம் அழகிய மங்கை. பொன்மேனி பெண்ணே உன்னை தீண்டும் ஆசையை தூண்டாதே..! எண்ணிய தளபதி தலை தாழ்த்திகொண்ட நேரம் அழகியின் திண்மையை அறிந்திருந்தான் மாக்கியவல்லி.
காரில் அமர்ந்திருந்தவனால் காரை இயக்க முடியுமென தோன்றவில்லை. ஆராதனா பால்கி கையை பிடித்து அமர்ந்திருந்ததை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ‘ஆக்சிடெண்ட் முத்தத்திற்கு இவ்வளவு பொசசிவ்னஸ் ஆகாதுடா அருணு’ அவனை அவனே தேற்றிகொண்டு நடுங்கும் கைகளையே பார்த்து அமர்ந்திருந்தான்.
ரிச்மண்ட் நகரம். மாலை ஆறு மணி, திருமதி சவிதா விக்ரமன் அவர் வக்கீலிடம் சீக்கிரம் இந்த கேஸ் முடித்து கொடுங்கள் என பேசிகொண்டிருந்தார். கணவர் மாய்ந்துவிட்டாரே என்று அழுதுகொண்டிருக்க அவரால் முடியவில்லை. டிரெண்ட் கார்ப்ரேஷன் உலகளவில் விற்கும் பிராண்டட் ஆடைகளின் தேர்ந்த ஆரம்பபுள்ளி.அவர்களிடம் கிடைக்காத துணி ரகமே இல்லை. ஆர்கானிக் நூல் தொடங்கி செயற்கை நூல் வரை பலவிதமான பல நாட்டு வகை துணிகளும் அவர்களிடம் கிடைக்கும்.
விளம்பரங்களில் ‘டிரெண்ட் கார்ப் ஃபேபிரிக்ஸ்’ என தனியாக குறிப்பிடும் அளவிற்கு தனிபெருமை கொண்ட நிறுவனம். ஃபேஷன் உலகில் தனி இடம் வசிக்கும் நிறுவனம். அப்படியான டிரெண்ட் நிறுவனத்தை அவர் காப்பாற்றியாக வேண்டும்.
விக்ரம் இழப்பு அவரை உருகுளைத்துவிட்டதுதான், மகளையும் அவள் எதிர்காலத்தையும் காத்து சீர் செய்து கொடுத்தாகவேண்டும். அந்த ஒரு எண்ணம் மட்டுமே அவரை நடமாட வைத்திருக்கிறது.விக்ரம் மரணம் விபத்து என்று உறுதி செய்து,ஆருவை காப்பாற்றி உடல்நிலை தேற்றி வீட்டுக்கு கூட்டிவரும் வேளை, அவர்கள் நிறுவனத்தின் மீது ஆசைப்பட்டு,சவிதாவுக்கு நெருக்கடி கொடுக்க விக்ரம் மரணம் விபத்து அல்ல கொலை என்றும், ட்ரெண்ட் கார்ப்ரேஷன் நிறுவனத்தில் சட்டத்திற்கு புறம்பான வியாபாரம் நடக்கிறது என்றும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்குப் பதிவு செய்த ஆள் யாரென்று கண்டுபிடித்து என்ன வேண்டும் என்று கேட்க, கம்பெனி அவர்களுக்கு மாற்றி கொடுக்குமாறு மிரட்டியுள்ளனர், இத்தனை நாள் முடியாது என்பது போல் இருந்தவர்.இனி இங்கிருக்கும் சொத்தை எல்லாம் விற்று இந்தியாவில் போய் மகளுடன் செட்டில் ஆகிவிடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.
மகளின் பாதுகாப்பை பற்றிய எண்ணம் எழுந்ததும் வக்கீல் விஸ்வநாதனுக்கு அழைத்தார். நண்பன் விக்ரமன் மீது பாசம் வைத்துள்ள விஸ்வநாதன் சவிதாவின் அழைப்பை ஏற்ற விவரம் தெரிந்துகொண்டு ஆறுதலாக "நீ உன் இஷ்டம் போல செய்யம்மா, கவலைபடாத ஆருதான் எனக்கு மருமகள்" என்றார். எப்போதும் மகளைக்கேட்டே முடிவுசெய்யும் சவிதா இந்த விஷயத்திலும் அவளை கேட்டு முடிவு செய்யலாம் என்று நினைத்தாலும் அதை விஸ்வநாதானிடம் வெளிப்படுத்தவில்லை. கணவனை இழந்து மகளை கரைத்தேற்ற நினைக்கும் பெண்ணுக்கு ஆறுதல் சொல்லும் நல்லுள்ளத்தை மறுதலித்து பேச தோண்றவில்லை அவருக்கு.
சவீதாவின் இப்போதைய எண்ணமெல்லாம் எங்கேனும் ஆராதனா நல்வாழ்வு வாழவேண்டும். விஸ்வநாதனின் ஆறுதலான வார்த்தைகளைக் கேட்டு தற்காலிக நிம்மதி அடைந்த சவிதா மகளுடன் பேசுங்கள் அண்ணா, எப்படியிருக்கிறாள் கேளுங்கள் என்று கூறி அழைப்பை துண்டித்தார். உடனே ஆராதனா நினைவு வர விஸ்வநாதன் ஆராதனாக்கு மெசேஜ் அனுப்பினார் எப்படி இருக்கிறாயென கேட்டு. நன்றாக இருப்பதாக பதில் சொன்னவள் கைக்கு எட்டாது போனை தூரமாக வைத்துவிட்டாள். யாருக்கும் பதில் சொல்லும் தெம்பு இல்லை.
மெத்தையில் விழுந்து கண்மூடியவனுக்கு குற்ற உணர்ச்சி இருந்தும் உறக்கம் வந்தது ஏனோ?! ஐயோ! என்று குற்றவுணர்ச்சியில் அடித்துக்கொண்ட நெஞ்சம் தூக்கம் வராமல்தானே தவித்திருக்க வேண்டும் இது என்ன இது அதிசயமாக இருக்கிறது..!
மேற்கொண்டு வரும் குழப்பத்திற்கு அணை கட்டிவிட்டது வேலைகள்.
மூன்று நாட்கள் வீட்டில் இருந்துகொண்டே யூனிட் வேலையை தொடக்கி அதை உயர்த்த திட்டம் தீட்டி எடுத்துக்கொண்டு வந்தாள் ஆராதனா. வாங்கிப் பார்த்த பால்கிக்கு ஆச்சரியம் மீறி நிம்மதியாக இருந்தது.
அருணும் பால்கியும் பூர்ணாவிற்கு சென்று வேலை செய்யத்தொடங்கிய நாள்முதல் பால்கி அவன் கார் எடுத்துக்கொண்டு பாட்டி வீட்டுக்கு வந்து அருணை கூட்டி போவான். இருவருக்கும் காரோட்ட இஷ்டம் என்றாலும் அருண் ஏதாவது பேசிக்கொண்டே வர பால்கி கார் ஓட்ட; பயணம் செய்வார்கள். அருண் மேனேஜிங் டைரக்டராக அமர்ந்துகொள்ள, பால்கி ஜெனரல் மேனேஜர் என்று சொல்லிக்கொண்டாலும் அருணுக்கு உயர் ரக அசிஸ்டன்ட்டாக இருந்தான். பாட்டி இவர்களை கண்டு ஒன்றும் சொல்லவில்லை.அவன் அப்பாதான் “என்னடா செய்யற நீ? பேசாம நம்ம தொழில் வந்து பாரு” என்று மிரட்டினார். ஆனாலும், அதெல்லாம் இல்லப்பா நான் அருண் கூட இருக்கேன் என்று சொல்லி அவனுடன் இருக்கிறான்.அப்படியான பாசக்கார மச்சானை பாட்டி இன்று சீண்டி விட்டார்.'என்னடா அருண் இல்லாமல் புது கம்பெனியில் வேலை எதுவும் செய்ய தெரியலையோ' கேட்டு விட்டார். முணுக்கென்று இதயத்தின் ஓரத்தில் ஒரு வலி எழுந்தது.சுயகௌரவம் கிள்ளி பார்த்த வலி விடாமல் வலிக்க, நேரம்பார்த்து ஆரு திட்டத்தைத் தீட்டிகொண்டு வந்து கொடுக்க “குட் மேற்கொண்டு டிஸ்கஷன் செய்து பாட்டியிடம் பேசி செய்யலாம்” என்றான்.கண்களை விரித்து தலையை இடமும் புறமும் தலையை அசைத்தவள் செய்கையில் ஆலோசனைகள் செய்யலாம் பாட்டியிடம் இப்போது எதுவும் சொல்ல வேண்டாம் என்றாள்.
அவனும் முகம் சுருக்கி கேள்வியாக பார்க்க ஒவ்வொரு அடியாக செய்துவிட்டு சொல்லலாம்,செய்வதற்கும் முன் சொல்லி நடக்காமல்போனால் கேள்வி கேட்பார்கள். நம்மால் முடியும் என்று காட்டலாம் கம்பீரமாக நம்பிக்கையுடன் அவள் செய்கையில் சொல்ல பால்கி மெல்ல புன்னகைத்தான் .
தேவைப்படும் வேலை ஆட்கள் எண்ணிக்கை, வசதிகள் என்று மேற்கொண்டு பேசிக்கொண்டிருக்க ஒரு முடிவுக்கு வரும் நேரம் அருண் வந்து சேர்ந்தான். இருவரும் பேசி முடிக்கும்வரை அமைதியாக இருந்தவன் சாந்தமான குரலில் காரில் கீறல் இருக்கிறது அது எப்படி ஆனது?அவளை கேள்வி கேட்டான்.
ஆராதனாவும் பொறுமையாக சிக்னலில் ஒரு ஆள் இடிச்சுட்டு போயிட்டான்,அவளும் அங்கே கம்பெனி வந்துதான் பார்த்தாள் சொல்ல இவன் முறைத்தான்.அருணை திசைதிருப்ப பால்கி “மச்சான் பாரு நாங்க இதையெல்லாம் செய்யபோறோம்” சொல்ல “மச்சான் இதெல்லாம் இவளே கவனிக்கட்டும், நீ நம்ப அணிமேஷன் கம்பெனிக்கு தேவையான விஷயங்களை தயார் செய்” பொறுமையில்லாமல் சொல்ல ஆராதனா எரிச்சலானாள்.
அருணை முறைத்துக்கொண்டே போனில் வேக வேகமாக டைப் அடித்தாள். “இது என்ன சின்னபிள்ளைத்தனமாக இருக்கு! ஒரு ஆள் ஒரு வேலையைதான் செய்யமுடியும், அப்போதுதான் அதை சரியாக செய்து முடிக்க முடியும் நீ பழசை பார், பால்கி இந்த புது யூனிட் பார்க்கட்டும், நான் பால்கி சொல்வதைச் செய்கிறேன்” வாய்ஸ் ஆப் பேசியது.
அருணும் கோவமாக,வேலைக்குதான சேர்ந்திருக்க வேலைய மட்டும் பாரு எஜமானர்களை வழிநடத்தும் வேலையாள் இங்க இருக்க முடியாது மிரட்டினான்.
ஆராதனா குறிப்பு எழுதும் புத்தகத்தை சட்டென மேஜைமீது அடித்துவிட்டு பால்கியை ஒரு பார்வை பார்த்துவிட்டு எழுந்து கடகடவென்னு வெளியே நடக்க சென்றாள். ஏய் இரு! அதிகாரமாக அழைத்தவன் அவள் என்ன என்று பார்க்க, “பாஸ் வந்து பேசிட்டு இருக்கேன் இப்படி எகத்தாளமா எழுந்து போற நீ” கேட்க கோணலாக வாயை இழுத்து “போடா” பார்வையில் பேசி திரும்பினாள். கவனிக்க தவறவில்லை அவன். “நான் இங்க முதலாளி, நான் சொல்றதை செய்யணும்” அவன் அதிகாரமாக பேசும் தொனி பிடிக்காமல் கோபம் உச்சந்தலைக்கு ஏற திரும்பி வேகமாக நடக்க போனவளை இரு என்று கையை பிடித்து இழுத்தான் சட்டென கண்கள் இருண்டு தடுமாறிப்போனாள் ஆராதனா. ‘பாடி சோடா’ என்று அவளைக் கிண்டல் செய்து சிரித்தான் அருண். உடனே அவளும் "நீயும் தலையாட்டி பொம்மை" என்று தலையை ஆட்டிக்காண்பித்தாள். இம்முறை திமிர் பார்வையும் கிண்டல் பேசும் முகமும் கொள்ளை அழகாக தெரிய அந்த நிமிடம் அமைதியாகிப் போனான் அருண்.
அவன் இலகுவான முகம் கண்டவள் தீவிரமாகப் பேசினாள் “அடுத்த மூணு மாசம் டைம் எடுத்துக்கொள்ளலாம் இந்த யூனிட் ரன்னிங் நிலைமைக்கு வர வேண்டும்” என்றாள்.
தண்ணீர் விழுந்த தனல் போல இருந்தவன் திரும்ப பக்கென்று பற்றிக்கொண்டான்.“நீ என்ன சொல்றது, டேய் மச்சான் அந்த அணிமேஷன் கம்பெனிக்காரங்க கூப்பிட்டு இன்வெஸ்ட்மெண்ட் டீடைல்ஸ் பத்தி நீ பேசுற…”அருண் சொல்ல கோபத்தில் முகம் சிவந்து ஆராதனா பால்கி கையை அழுத்தி பிடித்துக்கொண்டு பால்கி என்கூட மட்டும் தான் இருப்பான் அழுத்தமாக செய்கையில் சொல்ல, “பால்கி என் மச்சான், என் சொந்தக்காரன் நான் சொல்றதைதான் செய்வான்” அருண் உரிமையாக சொல்ல பல்லை கடித்துக்கொண்டு கண்களை விரித்து “பால்கி என் ஃப்ரெண்ட்” என்று அவளும் செய்கையில் சொல்ல மச்சான் நீ வாடா என்று அருண் அவனை தரதரவென்று இழுத்துக்கொண்டு சென்றான். கடக்கும் பால்கி கையை இருக பிடித்துக்கொண்டு இவள் இழுக்க “ஐயோ ப்ளீஸ் விடுங்க” உரக்கக் கத்திய பால்கி “மூணு வேலையை மூன்று பேர் சேர்ந்து செய்வோம் கொஞ்சம் சும்மா இருங்க” என்றான்.
“இம்” என்று அடுத்தவருக்குப் புரியவேண்டும் என்று இருவரும் பிடித்திருந்த கையை வேகமாக விட ஆடம்பர ஆபிஸ் க்ரானைட் தரையில் "ஊப்ஸ்"என்று சரிந்து விழுந்த பால்கியை பிடிக்க முயன்று மூவரும் கீழே விழுந்தனர்.
“சரியான வாழப்பழத்தோல்டா இவ,எப்ப பாரு எவனையாவது கீழே தள்ளி விட்டுட்டு இருக்குறா” அருண் திரும்ப தொடங்கினான்.
பால்கி வேங்கை ஒரு பக்கம் சிங்கம் ஒருபக்கம், நடுவில் நான்தானே ஆடு கமல்ஹாசன் பாடுவது போல “மச்சான் ப்ளீஸ் பேசாதடா” என்று அவனையும் “ஆரு,அவன் உன்ன விட பெரியவன் மரியாதையாக நடத்தணும்”அவளையும் அடக்கினான்.
“சரி வா மச்சான் நம்ப ஆடிட்டர் பார்க்க போகலாம்” அருண் கூப்பிட “நானும் வருவேன்” ஆருவும் கிளம்ப தயாராக பால்கி அருணிடம் “வரட்டும்டா பிளீஸ்,தனியா இருக்க முடியாது” கெஞ்சி கேட்டு கூட்டிக்கொண்டான்.
“கிலுகிலுப்ப” அருண் சொல்ல ஆராதனா புரியாமல் என்ன சொல்கிறான் இவனென முழித்து பால்கியை பார்த்தாள். பால்கி “குழந்தைகள் கையில் வைத்து விளையாடும் பொம்மை, சதாசர்வகாலமும் சத்தமிட்டுக் கொண்டு இருக்கும்” என்றான்.அதாவது மேடம் தலைவலி கூட்டுறாங்களாம். உட்கருத்து புரிந்து கொண்டவள் “எவ்வளவு உயர்ந்த மனசு,தான் என்ன என்று வெளியே சத்தமாக சொல்லிக்கொள்ளும் உன் பண்பு உன்னை ஒருநாள் உயர்த்தும்” என்றாள்.
அவள் வாய்ஸ் ஆப் கேட்டு முறைத்துக் கொண்டே இருந்தவன் பால்கியை பார்த்து “இரு மச்சான்” ட்ரைவர் சீட்டில் ஏற போனவனை தடுத்து “நாங்க உட்கார்ந்து வரோம், நீ ஓட்டு” என்றான்.பயந்தாலும் தன் சுயமரியாதையை விட்டுகொடுக்கமாட்டாதவள் "எனக்கு என்ன நான் ஓட்டுறேன்" என செய்கையில் சொன்னாள்.
பால்கியை கூகுள் மேப்பில் வழி போட்டுக்கொடுக்க சொல்லிவிட்டு மாற்று வழி ஏதாவது இருந்தால் முன்கூட்டியே சொல்ல சொன்னாள். பால்கி சங்கடமாக முழிக்க, “இரு மச்சான் ஊர் தெரிஞ்சிக்கணும் இல்லையா?” கேட்டான் அருண்.
பயணத்திலும் அருண் வெறுப்பேற்றிக்கொண்டே வர ஆராதனா காரை இடிக்கப் போவது போல ஓட்டினாள். கோபத்தில் இவன் கத்த அவள் வேண்டுமென்றே இன்னமும் செய்ய, டாம் அண்ட் ஜெர்ரி போல சண்டையிட்டு கொண்டு ஆடிட்டரை பார்த்து பேசினார்கள்.
ஆடிட்டரும் அவர் பங்குக்கு ஓர் உண்மையை போட்டு உடைத்தார். சொத்தென்று காற்று போன பலூன் போல சூம்பி போனார்கள் நண்பர்கள் மூவரும்.