ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என்னோடு வா அன்பே....-கதை திரி

Status
Not open for further replies.
அத்தியாயம் 10:


இருவரும் சத்தமாக சிரிக்க , பிரியா ஒன்றும் புரியாமல் பார்த்து கொண்டு இருந்தாள் “ ஏன் சிரிக்கிறீங்க...” தயங்கியவாறு அவள் கேட்க சிரிபை கட்டுபடுத்தியவன் “ பிரியா…. பிரியா… உன்னை என்ன பண்றது உன்னோட ஃபேமிலியோடா சொத்து மதிப்பு எவ்ளோனு தெரியுமா உனக்கு” என்று விஷ்வா கேட்க


அவளோ இல்லை என்று தலை அசைத்தாள் , அவளை பார்த்து உடலை முன்னோக்கி வைத்தவன் “நல்லா கேட்டுக்கோ…, ராஜா குரூப்ஸ் உன் அப்பாவுக்கு அப்பாவோட காலத்துல தொடங்கியது கிட்ட தட்ட ஐநூறு கொடி மதிப்பு இருக்கு, நூறு கோடி பெரிய லாஸ் தான் ஆனா அதுக்கு வீட்டை விக்கிற அளவுக்கு நிலைமை எல்லாம் இல்லை, கொஞ்ச நாளுல சரி கட்டிடலாம், அதும் இல்லையா அவங்களோட வேறே புரோபெர்டியை வைக்கலாம், வீட்டை எல்லாம் விற்க மாட்டாங்க உன் கிட்ட போய் சொல்லி இருக்காங்க” என்று சொல்ல


அவளோ அவன் சொல்வது உண்மைதானா என்னும் விதத்தில் ஆச்சரியமாக பார்த்து இருந்தாள்


“ இன்னும் சந்தேகமா இருக்கா என்ன…” என்ற ஷ்யாமின் கேள்விக்கு அவன் புறம் திரும்பியவள் அவனை கேள்வியாக பார்க்க


“ சரி நான் காட்டுறேன்..” என்றவன் மடிக்கணினியை எடுத்து அதில் ராஜா குரூப்சை பற்றி அவன் சேகரித்து வைத்து இருந்த எல்லா ஆவணங்களும் காட்ட , பிரியாவின் கண்கள் வியப்பில் விரிந்தது


“ அப்போ ஏன் என் கிட்ட பொய் சொன்னாங்க..” என்று அப்பாவியாய் அவள் கேட்க


“ அவங்களுக்கு நான் மறுபடியும் அவங்க கூட டீல் வச்சுக்கணும் அதனால தான் , உன் கிட்ட இப்படி சொன்னா தானே நீ வந்து என் கிட்ட பேசுவ” என்று விஷ்வா தொலை குலுக்க என்ன செய்வது என்று தெரியாமல் அமர்ந்து இருந்தாள் பெண்ணவள்


கூடவே ஷ்யாம் “இதுல இருக்குற ப்ராப்பர்ட்டி பிசினஸ் எல்லாமே நீ பொறக்குறதுக்கு முன்னாடியே மூணு பக்கமா பிரிச்சாச்சு, சோ அதுல உனக்கு பங்கு இருக்காது ஆன வீடு உன் அப்பா பேருல இருந்தது அதுல உனக்கு நாலுல ஒரு பங்கு இருக்கு அதை நீ வேண்டாம்னு எழுதி குடுத்திட்ட ஆனாலும் கேசு போட்டா உன் பேருக்கு வர வாய்ப்பு இருக்கு அதனால கூட வீட்டை மட்டும் விக்குறதா சொல்லி இருக்கலாம்” என்று சொல்ல


அதை எல்லாம் ஆச்சரியமாக தான் பார்த்து இருந்தாள் பெண்ணவள்


“ இப்போ நான் என்ன பண்ணட்டும், நீங்க ஒத்துக்கலைனா வீட்டுல எல்லாரும் என்னை திட்டுவாங்க, உங்க கிட்ட யாரு என் பேரை சொல்ல சொன்னது, எதுக்கு என்ன இதுல இழுத்து விட்டீங்க தன்னால தானே..” என்று அவள் கண்கள் கலங்க சொல்ல


அவள் கோபத்தை பார்த்தவன் “ அட பிரியாவுக்கு கோபம் கூட வருமா என்ன” என்று அவன் கிண்டல் செய்ய அவனை ஏறிட்டு முறைத்தாள் பெண்ணவள் “ அட முறைக்குற…. , சரி இப்போ என்ன பண்ணலாம் நீயே சொல்லு” என்று அவளிடம் கேட்க


அவனை ஏறிட்டு பார்த்தவள் “பழைய படி எல்லா டீலிங்குசும் வைக்க முடியாதா…” என்று கேட்க


அவள் கேட்ட தோரணையில் சிரிப்பும் வர “சரி உனக்காக ஒத்துக்கிறேன்” என்று சொல்ல


அவள் முகம் பிரகாசமானது “ ஆனா ஒரு கண்டிசன்..” என்க ப்ரியாவும் ஷ்யாமும் கேள்வியாக அவனை பார்க்க “அதை நான் பார்த்திபன் கிட்ட சொல்லிக்கிறேன்…” என்க


“ அப்போ நான் கிளம்பவா…” என்று கேட்க “ அதுக்குள்ள என்ன அவசரம் , நீ ஆபீசுக்கு தானே போற நானும் அங்க தான் வரேன் சேர்ந்து போகலாம்” என்றவன்


ஷ்யாமை நோக்கி “ ஷ்யாம் பார்த்திபன் கிட்ட நாம வர்ற போறதா சொல்லி அப்போய்ண்ட்மென்ட் வாங்கு” என்று சொல்ல


“ சரி டா..” என்றவனும் அலைபேசியை எடுத்து கொண்டே ஓரமாக செல்ல
இப்போது பிரியாவை பார்த்தவன் “ சாப்டியா…” என்று கேட்க அவளோ ஆம் என்று தலை அசைக்க அவன் கூர்ந்து பார்த்ததில் தலை தானாக இல்லை என்று ஆடியது


“ சரி போற வழியில சாப்டு போலாம்” என்று சொல்ல “ இல்லை பரவாயில்லை.. நான் சாப்டுப்பேன்..” என்று சொல்ல அவனிடம் முறைப்பு தான்


அப்போது ஷ்யாம் அவ்விடம் வந்து “எப்போ வேணா வரட்டுமாம் எப்போ போலாம்” என்று கேட்க “ இப்போவே போகலாம்” என்றவன் எழுந்து கொள்ள ப்ரியாவும் எழுந்து கொண்டாள்


மூவருமாக ஆபீசை விட்டு வெளியேற பிரியா அவள் வந்த காரில் ஏற போக அவள் கையை பற்றி தடுத்தவன் டிரைவரிடம் “ எங்க காரை ஃபாலோ பண்ணு” என்று சொல்லி விட்டு அவளை இழுத்து கொண்டு அவன் காருக்கு செல்ல “ விடுங்க நான் அவர் கூடவே வரேன்…” என்று சொல்ல


அவன் கேட்பானா என்ன அவளை இழுத்து பின் இருக்கையில் அமர வைத்தவன் அவனும் ஏறி அமர்ந்து கொள்ள ஷ்யாம் காரை இயக்கினான்
அவள் பயந்து கொண்டே இருக்கையில் ஒடுங்கி போய் அமர்ந்து இருக்க

அவளை ஒரு மார்க்கமாக பார்த்தவன் “ நான் என்ன வம்பைரா உன்ன கடிச்சு தின்ன, இப்படி பயந்து போய் பாக்குற” என்று கேட்க


அவள் மனதிற்குள்ளோ ‘ இவனும் கடிப்பான் தானே..’ என்று எண்ணி கொண்டது வெளியே இல்லை என்று தலை அசைக்க


அவனோ ஷ்யாமிடம் “ ஷ்யாம்… பக்கத்துல நல்ல ரெஸ்டாரண்டா பார்த்து நிப்பாட்டு…” என்க அவனும் சரி என்றான்


திரும்பி பிரியாவை பார்க்க அவளோ கைப்பையை இறுக்கமாக பற்றி இருந்தாள் அதை கண்டவன் அவளிடம் இருந்து கைப்பையை உருவ பதறியவள் “ அது என்னோடது…” என்று சொல்ல


“ இரு டி கொடுக்கிறேன்..” என்று அதை திறந்து ஆராய பெரிதாக ஒன்றும் இல்லை நேற்று அவன் கொடுத்த புரொட்டீன் பார் ஒரு புக் மற்றும் பேனா கொஞ்சம் காசு ஒரு மொபைல் ஃபோன் அவ்ளோ தான்


அவளை ஏறிட்டு பார்த்தவன் “ மத்த பொண்ணுங்க வச்சிக்கிற மாதிரி மேக்கப் பொருட்கள் எதுவும் இல்லையா” என்று கேட்க இல்லை என தலை அசைத்தாள்


பிறகு அவள் போனை எடுத்து “பாஸ்வேர்ட் என்ன” என்று கேட்க அவளோ சொல்லாமல் தயங்கி நிற்க்க “உள்ளே ஏதாவது சீக்ரெட் வச்சு இருக்கியா என்ன” என்க


அவளோ “ அப்படி எல்லாம் இல்லை 1109” என்றாள் அவனும் அந்த என்னை போட்டு ஓன் செய்தவன் அதில் இருந்து அவள் அலைபேசிக்கு அழைப்பு விடுவிக்க “ என்ன பண்றீங்க” என்று கேட்க


“இது தான் என் நம்பர் சேவ் பண்ணிக்கோ” என்றவன் அவனே அவன் அலைபேசி எண்ணை அவள் போனில் மாமா என்று பதிவு செய்ய அதை எட்டி பார்த்தாள் “ மாமா வா…” என்று ஒவ்வமையாக கேட்க ஷ்யாம் சத்தமாக சிரித்து விட அவனை முறைத்தவன் அவளிடம் திரும்பி “இனிமே நீ என்னை அப்படி தான் கூப்பிடணும்” என்று சொல்ல அவள் மிரண்டு விழித்தாள்


அடுத்து ஷியாமின் எண்ணை ஷ்யாம் அண்ணா என்று பதிவு செய்தவன் “ இது ஷ்யாம் நம்பர் எனக்கு கால் பண்ணி கிடைக்கலெனா அவனுக்கு கால் பண்ணு” என்று சொல்ல அவளோ மனதிற்குள் “ நான் என் கால் பண்ண போறேன்..” என்று எண்ணி கொண்டது


அப்போது ரெஸ்டாரன்ட் வந்து விட காரை ஓரம் கட்டியவன் “ வா சாப்பிட்டு போலாம்..” என்று சொல்ல அவன் சொன்னால் கேக்க மாட்டான் என்று தெரிய இறங்கி கொண்டாள்


என்ன தான் பெரிய வீட்டு பெண்ணாக இருந்தாலும் இது போன்ற இடத்துக்கு அவள் வருவது இது தான் முதல் முறை
பெரிய பிரம்மாண்டமாக இருந்த இடத்தை அவள் மிரட்சியாக பார்க்க அவள் பார்வையை கண்டவன் “ ஃபர்ஸ்ட் டைம் ஆ” என்க அவளும் ஆம் என்று தலை அசைக்க


மூவருமாக விஐபி ஏரியாவில் இருந்த தனி இருக்கையில் வந்தார்கள் தனி அறையாக இருக்க பெரிதாக தொல்லையும் இல்லை யாரும் பார்த்து விடுவார்களா என்ற அச்சமும் இல்லை


பேரர் வந்து என்ன வேண்டும் என்று கேட்க அவளோ இருவரையும் பார்க்க “ உனக்கு எது வேணுமோ ஆர்டர் பண்ணு” விஷ்வா சொல்ல அவளோ இருவரையும் மீண்டும் தவிப்பக பார்த்தாள்


அவளுக்கு இந்த பெரிய இடத்தில் என்ன வாங்கி சாப்பிடுவார்கள் என்றே தெரியாதே அவள் மொழியை கண்டவன் “ சிக்கன் சாப்பிடுவியா…” என்று கேட்க அவளும் ஆம் என்றாள் “ ஒரு சிக்கன் நூடுல்ஸ் ஒரு காஃபி , ஷ்யாம் உனக்கு என்ன வேணும்” என்று அவனிடம் கேட்க “ எனக்கு ஒரு காபி போதும்” என்று சொல்ல


கொஞ்ச நேரத்தில் அவர்களுக்கான சாப்பாடும் வந்து சேர்ந்தது மற்ற இருவரும் காபியை அருந்த அவளுக்கு மட்டும் கொண்டு வந்த நூடுல்ஸை எப்படி சாப்பிடுவது என்று அவள் தயங்கி நிற்க்க


“ எல்லாத்துக்கும் எதுக்கு தயங்கி நிக்கிற போல்டா இரு இங்க யாரும் உன்னை திட்ட போறது இல்லை புரியுதா..” என்று கேட்க அவளும் ஆம் என்றாள் ஆனால் சாப்பாடு தான் உள்ளே போகவில்லை அதை கவனித்தான் “ ம்ச்…” என்று சலித்து கொண்டே


கொஞ்சம் நூடுல்ஸை எடுத்து முதலில் அவன் சாப்பிட கொஞ்சம் எடுத்து அவள் முன் நீட்டினான் அதை கண்டு அதிர்ந்தவள் “ நானே சாப்டுக்கிறேன்..” என்று அதை வாங்கி அவள் சாப்பிட

ஷ்யாமிற்கு தான் சிரிப்பை அடக்க முடியவில்லை அடக்க பட்ட சிரிப்புடன்

அவன் அமர்ந்து இருந்தான்
கொஞ்ச நேரத்தில் மூவரும் சாப்பிட்டு விட்டு அங்கே இருந்து கிளம்பி விட்டார்கள்


கார் நேரே சென்றது பார்த்திபனின் ஆபீசுக்கு தான் விஷ்வா இறங்கி முன்னால் செல்ல ஷ்யாம் மற்றும் பிரியா அவனை பின் தொடர்ந்து சென்றார்கள்


அவன் வந்ததை கண்டதுமே அங்கே வேலை செய்யும் ஊழியன் “வாங்க சார் உங்களுக்காக தான் பார்த்திபன் சார் வெயிட் பண்றார்” என்று அவர்களை அழைத்து கொண்டு பார்த்திபன் அறைக்கு செல்ல


உள்ளே பார்த்திபனுடன் சேர்ந்து கௌரி மற்றும் நாராயணன் அமர்ந்து இருந்தார்கள்


விஷ்வா வருவதாக கூறியதும் இருவரும் வந்து விட்டார்கள் அவனை கண்டதும் “ உக்காருங்க விஷ்வா..” என்று சொல்ல அவனும் ஷ்யாமும் அமர்ந்து கொள்ள பிரியா அங்கேயே நின்றாள்


“ என்ன முடிவு எடுத்திருக்கீங்க விஷ்வா..” பார்த்திபன் பொறுமையாக பேச ஆரம்பித்தார் “ வெல் ராஜா குரூப்ஸ் ஓட நாலு வாரிசுகளும் இங்க தான் இருக்கீங்க சோ என்னோட முடிவை நான் சொல்லிக்கிறேன்” என்று சொல்ல


எல்லோரும் அவனை தான் ஆர்வமாக பார்த்து இருக்க , அவன் சொல்லும் முடிவில் அவர்கள் அவர்கள் கோபம் உச்சிக்கு போகபோவாது தெரியாமல்.


தொடரும்…

 
அத்தியாயம் 11:


நாற்காலியில் கம்பீரமாக அமர்ந்து இருந்த விஷ்வாவில் தான் அனைவரின் பார்வையும் நிலைத்து நின்றது


அவனோ சாவகாசமாக டேபிளில் இருந்த பேப்பர் வெயிட்டை உருட்டி கொண்டே பார்த்திபனை பார்த்து “ சீ மிஸ்டர் பார்த்திபன் எனக்கு உங்க கூட மறுபடியும் பிசினஸ் பண்ண விருப்பம் இல்லை இருந்தாலும் உங்க தங்கச்சி பிரியா வந்து என் கிட்ட கெஞ்சி கெட்டதால தான் இங்க வந்து இருக்கேன்” என்றவன் ஒரு கணம் பிரியாவை ஏறிட்டு பிறகு பார்த்திபனை பார்த்தவன்


“ அவங்களாக தான் இந்த சொத்து வேண்டாம்னு முடிவு பண்ணி எழுதி தந்ததா சொல்றாங்க எனக்கு அதுல நம்பிக்கை இன்னும் வரல , பிக்காசு அவங்களுக்கு இதை தவிர வேறே எந்த பிடிமானமும் இல்லை சோ அவங்களா எப்படி எழுதி தருவாங்க எனக்கு என்னமோ நீங்க மிரட்டி எழுதி வாங்குனதா தோணுது” என்று சொல்ல


பிரியா அவசரமாக “ ஐயோ இல்லை நான் தான் வேண்டாம்னு சொன்னேன்” என்று சொல்ல அவளை திரும்பி அழுத்தமாக பார்த்தவன்


“ மிஸ். பிரியா நான் பார்த்திபன் சார் கிட்ட பேசிக்கிட்டு இருக்கேன் சோ நீங்க கொஞ்ச நேரம் பேசாம இருக்கீங்களா..” என்று அழுத்தமாக சொல்ல


அவள் வாயை மூடி கொண்டாள், இப்போது பார்த்திபனை பார்க்க அவரோ “நோ…. விஷ்வா பிரியா சொல்றது தான் உண்மை அவளா தான் விரும்பி எழுதி தந்தா” என்று சொல்ல


சத்தமாக சிரித்த விஷ்வாவோ “ என்ன பண்ண மிஸ்டர், நீங்க சொல்றது உண்மையா கூட இருக்கலாம் ஆனா கார்ப்பரேட் மூளை சந்தேகமா தான் பார்க்க தோணுது” என்று சொல்ல


ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டு கொஞ்ச நேரம் யோசித்த பார்த்திபன் “இப்போ நாங்க என்ன பண்ணனும் , பிரியா எழுதி தந்தது வேணாம்னு சொன்னா நீங்க நம்புவீங்களா” என்று கேட்க


நாராயணன் மற்றும் கௌரி பல்லை கடிக்க , பிரியா அதிர்ந்து அவரை பார்க்க ஷ்யாம் நிதானமாக விஷ்வாவை பார்த்தான்


விஷ்வாவோ “நோ…. கொஞ்சம் பெருசா … மூணு ஷேர்ஸ் நாலு ஷேர்ஸ் ஆக போடணும் ஒகே வா..” என்று புருவம் உயர்த்தி கேட்க


மற்ற மூவரும் ஒரு சேர “ வாட்…” என்று அதிர பிரியாவோ “ எனக்கு எதுவும் வேண்டாம்” என்று அவசரமாக சொல்ல


“ வில் யூ பிளீஸ் ஷாட் அப்” என்று சீறினான் விஷ்வா , அவள் அவன் கோபம் கண்டு அதிர்ந்து நின்று விட்டாள் ஆனால் இதயம் படபடவென அடித்து கொண்டது


பிறகு வீட்டில் அவளை தானே வைத்து செய்வார்கள், அவன் எல்லாம் சொல்லி விட்டு செல்வான் சிங்கத்தின் குகைக்குள் இருக்கும் முயல் குட்டி தானே மரண பயத்தை தினம் தினம் காணவேண்டும்


அவளோ அதே அதிர்ச்சியுடன் மூவரையும் பார்க்க , அவர்கள் முகம் இறுக்கமாக இருந்தது


எல்லோரும் அமைதியாக இருக்க டேபிளில் மெல்ல தாளம் இட்டவன் “இதுக்கு ஓகே அப்படினா சொல்லுங்க இல்லை நான் கிளம்புறேன் அப்புறம் யாரையும் பேச என் ஆபீசுக்கு அனுப்ப கூடாது” என்று சொல்ல


அவனை ஏறிட்டு பார்த்த பார்த்திபன் “ ரொம்ப பெரிய விஷயம் பேசி தான் முடிவு எடுக்க முடியும்” என்று சொல்ல


“ ஓகே டேக் யுவர் டைம்” என்று சொல்லி கொண்டே எழுந்து கொள்ள ஷ்யாமும் அவனுடன் எழுந்து கொண்டான்


பார்த்திபனுக்கு கை குலுக்கி விட்டு அவன் சென்று விட பிரியா நிற்கவா செல்லவா என்ற தொனியில் நிற்க்க அவர்களின் சுட்டெரிக்கும் பார்வை தாங்க முடியாமல் வெளியே சென்று விட்டாள்


வெளியே வந்து அவனை காண அவனோ லிஃபிடினுள் நுழைந்து விட்டான் , அதை கண்டதும் அவளும் ஓடி சென்றாள் உள்ளே செல்லும் பொருட்டு அதுவோ அடைய போக , அவள் ஓடி வருவதை கண்டவன் கையால் தடுக்க அவளும் ஓடி வந்து உள்ளே நுழைந்து கொண்டாள்


வந்தவள் மூச்சு வாங்க “ உங்க கிட்ட நான் கேட்டேனா …. எனக்கு பங்கு வேணும்னு எதுக்கு அவங்க கிட்ட இப்படி கேட்டீங்க..” என்று கோபமாக கேட்க


அவளை முறைத்தவன் “ என் கிட்ட மட்டும் கோபப்படு இந்த கோபத்த உன் வீட்டு ஆட்கள் கிட்ட காட்டி இருந்த உன் கிட்ட இருந்து எதுவும் வாங்கி இருக்க மாட்டாங்க” என்று சொல்ல


அவளோ “ ஆமா நான் குடுக்கலென்னா என் உயிரை மொத்தமா எடுத்து இருப்பாங்க, எழுதி குடித்ததாலா மட்டும் தான் இப்போ உயிரோட இருக்கேன் “ என்று சொல்ல


அவனோ “ பார்த்து பேசுடி லிஃப்ட் ல காமெரா இருக்கு” என்க பதறி திரும்பி பார்த்தவள் பவ்வியமாக “ கேட்டிருக்குமா..” என்று கிசுகிசுப்பாக கேட்க


அவள் பாவனையை பார்த்து சிரித்தவன் “ இருக்காது..” என்க அவளோ மீண்டும் மெல்லிய குரலில் “ எதுக்கு இப்படி கேட்டீங்க இனிமே எனக்கு தானே பிரச்சனை நான் அவங்க வீட்டுல தான் இருக்கணும்” என்று சொல்ல


“ இது தான் பிரச்சனையே, அது உனக்கும் வீடு தான் அவங்க வீடுன்னு சொல்லாம இருக்க தான் மச்சான் இப்படி ஒரு ஐடியா போட்டு அவங்களை நல்லா ரவுண்டு பண்ணி இருக்கான் , இந்த சான்சை யூசு பண்ணிக்கோ மா” என்று ஷ்யாம் சொல்ல


“ உங்களுக்கு அவங்களை பத்தி தெரியாது அண்ணா , ரொம்ப மோசம் ஆனவங்க , நீங்க எனக்கு ஹெல்ப் பண்றதா இருந்தா ஒரு நல்லா லேடிஸ் ஹாஸ்டல் அப்புறம் நல்ல வேலை வாங்கி தாங்க போதும்” என்று சொல்ல


“ கொஞ்ச நாள் பொறுத்துக்கோ உனக்கு பாதுகாப்பான ஒரு இடம் கொடுக்கிறேன்” என்று விஷ்வா சொல்ல ஷ்யாமோ அவன் காதருகே “உன் வீடு தானே மச்சி” என்று சொல்ல


அவனை ஏறிட்டு முறைத்தான் விஷ்வா..


அவனை ஏறிட்டவன் “ நீ என்ன நினைக்கிற நீ சொன்னதுக்கு அவங்க ஒத்துப்பங்களா” என்று ஷ்யாம் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்ல அவனோ “ சான்சே இல்லை வேறே ஐடியா பண்ணுவாங்க, என்ன பண்றாங்கேனு பொறுத்து இருந்து தான் பாக்கணும்” என்க ஷ்யாம் இடம் ஒரு பெருமூச்சு


அதை தொடர்ந்து அவர்கள் சென்று விட , பிரியா மேலே சென்று அவள் வேலையை கவனிக்க சென்று விட்டாள், மறந்தும் பார்த்திபன் பக்கம் செல்லவே இல்லை


ஆனால் இங்கு பார்த்திபன் அறையில் மூவரும் மும்முரமாக பேசிக்கொண்டு இருந்தார்கள்


“ என்ன அண்ணா அவன் இப்படி சொல்லிட்டு போறான்” என்று கௌரி ஆதங்கமாக கேட்க “ ஆமாம்… நூறு கோடி நஷ்டத்தை ஈடு கட்ட அவன் கிட்ட கேட்டா அவன் நம்ம மொத்த சொத்தையும் பங்கு போட சொல்றான் இது சரி வராது வேறே வழி தான் பாக்கணும்” என்று நாராயணன் சொல்ல


இருக்கையில் சாய்ந்து அமர்ந்து யோசித்த பார்த்திபன் “ நானும் அதே தான் யோசிச்சேன் , விஷ்வா கிட்ட பேசி எந்த பயனும் இல்லை நாம வேறே வழி தான் பாக்கணும்” என்று சொல்ல


“ தப்பா எடுத்துக்க மட்டீங்கென நான் ஒரு வழி சொல்றேன் என்று நாராயணன் சொல்ல மற்ற இருவரும் அவரை கேள்வியுடன் திரும்பி பார்க்க


“ எப்படியும் நாம பிரியாவை வச்சு காசு பார்க்க தானே பிளான் போட்டு இருந்தோம் ஆனா என்ன நல்ல டீலிங் வந்தா அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதா யோசிச்சோம் , ஆன அதை விட நல்ல ஐடியா ஒன்னு இருக்கு” என்று நிறுத்த


“ என்ன ஐடியா …” என்றாள் கௌரி “ உங்களுக்கு இந்திரஜித் சிங் யாருன்னு தெரியுமா” என்று கேட்க பார்த்திபனோ “ தெரியும் பெரிய மல்டி மில்லினியர் டைமண்ட் எக்ஸ்போர்ட் தான் மெயின் பிசினஸ்” என்று சொல்ல


“ ஆமாம் அவனுக்கு ஒரு வீக்கினாசு இருக்கு பொண்ணுங்க அதுவும் வெர்ஜின் பொண்ணுங்க, அவனுக்கு ஒரு பொண்ணை குடுத்தா ஒரு மாசம் இல்லை ஆறு மாசம் வச்சு இருக்குறதுக்கு பெரிய அமௌண்ட் கொடுப்பான்” என்று சொல்ல


“ என்ன சொல்றீங்க அதுக்காக அவளை விக்க சொல்றீங்களா, நமக்கும் பொண்ணுங்க இருக்காங்க” என்று கௌரி கோபமாக சொல்ல


“ நாம கிட்ட வேறே வழி இல்லை “ என்று நாராயணன் சொல்ல


“ நோ…. நாராயணன் என் கிட்ட வேறே ஐடியா இருக்கு” என்று பார்த்திபன் சொல்ல

இப்போது இருவரும் அவரை திரும்பி பார்க்க அவரோ “ இந்திரஜித் சிங் ஓட மனைவி இறந்து ரெண்டு மாசம் ஆகுது அவன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்க பொண்ணு தேடிட்டு இருக்கான் , நாம பிரியாவை அவனுக்கு கல்யாணம் பண்ணி குடுக்கலாம் பதிலுக்கு அவன் பிசினஸ் ல பார்ட்னர்ஷிப் கேக்கலாம் , குடுக்க சான்ஸ் இருக்கு, அப்படி மட்டும் கிடச்சுன்னா இந்த நூறு கோடியை ஒரே மாசத்துல எடுத்திடலாம்” என்று சொல்ல


“ இதுவும் நல்ல ஐடியா தான் அண்ணா” என்று நாராயணன் சொல்ல கௌரியும் தலை அசைத்தார்


“ ஆனா அவர் கிட்ட பிரியாவை பத்தி எப்படி பேசுறது” என்று கேட்க


“ நம்மள நிலேஷ் பொண்ணோட பர்த்டே பார்டிக்கு ஃபேமிலியோட கூப்பிட்டு இருக்கான் தானே அங்க அவளை கூட்டிட்டு போலாம், நிலேஷ் இந்திரஜித் கூட பிசினஸ் பண்றான் சோ அவனும் வர வாய்ப்பு இருக்கு அங்க போன ஒரு வாய்ப்பு கிடைக்கும்” என்று பார்த்திபன் திட்டம் போட


அவர்களும் ஆமோதிப்பாக தலை அசைத்தனர், இங்கு அவளை வைத்து அவர்கள் பெரிய திட்டம் தீட்டுவது அறியாமல் , தனது வேலையை மும்முரமாக பார்த்துகொண்டு இருந்தாள் பெண்ணவள்


இவர்கள் ஆடும் சதி ஆட்டத்தில் அவள் சிக்குவாளா, இல்லை விஷ்வாவிடம் அவர்கள் சிக்குவார்களா என்பது அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.


தொடரும்…

 
Status
Not open for further replies.
Top