அத்தியாயம் 04
கர்ணன் தனது உள்ளங்கை சிவக்கும் அளவிற்கு கதவை தட்டி விட்டான் ரஜீவன் திறந்த பாடு தான் இல்லை.. சரிந்து விழுந்த ஐங்கரனிடம் பூரணியோட ரஜீவனை கர்ணன் பின் தொடர்ந்து வந்திருந்தான்.
"டேய் கதவை திறடா என்ன பிரச்சனையா இருந்தாலும் பேசி சரி பண்ணிக்கணும்.. இப்படி கதவை அடைச்சுக்கிட்டு உள்ள இருந்தா பிரச்சனை தீர்ந்திடுமா??.."
என்ன சொன்னாலும் கதவை திறக்காமல் அழிச்சாட்டியம் செய்பவனை வெளிப்படையாக திட்டக் கூட முடியவில்லை.. அப்படிப்பட்ட உயிர் நண்பன் ரஜீவன் கர்ணனுக்கு.. ஒரே தட்டில் சாப்பிட்டு ஒரே சட்டையை போட்டுக் கொள்ளும் விளையாட்டு நண்பனாக ஆரம்பித்தது கல்வியிலும் சரி தொழிலிலும் சரி அவன் மட்டும் முன்னேறாமல் கர்ணனையும் சேர்த்து இழுத்துக் கொண்டு இவ்வளவு தூரம் வந்திருக்கிறான்.. ஜஸ்ட் பாஸில் வருடங்களை கடந்து கொண்டிருந்தவனை பேசியே சரி கட்டி தன் தொழிலிலும் பார்ட்னர் ஆக்கி கர்ணனை நம்பியும் காண்ட்ராக்ட்களை கண்ணை மூடிக் கொண்டு கொடுக்கலாம் என்ற பெயரை வாங்கி கொடுத்து இருக்கிறான்..
அவனுக்கு இத்தகைய அவமானம் ஏற்பட்டது கர்ணனுக்கு மிகுந்த மனவருத்தமே.. ஐங்கரன் மீது கோபம் வந்தது எல்லாம் அவரால் தான். அதற்காக அவரைத் திட்ட கூட முடியவில்லை அவருக்கு கர்ணனும் இன்னொரு மகன்தான் தந்தை இல்லாதவனை ரஜீவனுக்கு ஒப்பாகத்தான் பார்த்தார் ஆனாலும் மகன் விஷயத்தில் அவசரப்படாமல் யோசித்து செயல்பட்டு இருக்கலாம் மனதுக்குள் வருந்தி கொண்டு எப்படியாவது கதவை திறக்க வைத்து விட வேண்டும் என்ற முனைப்புடன் வேகமாக தட்டினான்.
"ரஜீவ் ஏய் கதவை திறடா.. மனுசன போட்டு இந்த பாடு படுத்துற!!.."
சடார் என்று திறந்த கதவுக்கு பின்னால் பனியனோடு நின்றவனை பார்த்து
"என்னடா பட்டு சட்டை எல்லாம் கழட்டி வீசிட்ட??" என கலங்கினான்.
"ஆமா எனக்கு இப்ப பட்டு சட்டை ஒன்னு தான் கேடு!.."
அறைக்குள் நுழைந்து கதவை சாற்றியவன்
"ஒன்னும் சொல்லாம உள்ள வந்துட்ட.. நித்தியாவை உங்க அத்தை இழுத்துக் கிட்டு போயிடுச்சு ஆளாளுக்கு வாய்க்கு வந்ததை பேசிக் கிட்டு இருக்காங்க டா அப்பா வேற வருத்தமா கீழே உக்காந்துட்டாரு.. அம்மா அழுகுறாங்க உன் பாட்டுக்கு வந்து கதவை பூட்டிகிட்ட! பயந்து போயிட்டேன் அடுத்தது என்ன??"
"தெரியல டா!.." கர்ணன் அளவெல்லாம் துடிக்கவில்லை இயல்பாக இருந்தான்.
"என்னடா இப்படி சொல்ற??" வழமை போல மன வருத்தங்களை காட்டிக் கொள்ளாமல் நண்பன் தனக்குள் வேதனைப்படுகிறானோ என தோன்றியது கர்ணனுக்கு.
"வேற என்ன சொல்லணும்னு எதிர்பார்க்கிற.."
"கல்யாணம் நின்னதை நெனச்சு வருத்தப்படுறியா!?"
"அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை யோசிச்சு பாரு தாலி கட்ட முன்னாடியே இதெல்லாம் தெரிஞ்சதுனால சரியா போச்சு இல்லன்னா.. நித்தியா எங்க குடும்பத்தையே நல்லா ஏமாத்திட்டால்ல.. வீட்டுக்குள்ள சின்ன பிள்ளை மாதிரி அதிகாரம் பண்ணிக்கிட்டு இருப்பாடா.. ஒரு வேலை செய்ய தெரியாத சோம்பேறி மூணு வருஷமா காதலிச்சு இருக்கானா எங்கள் முன்னாடி எல்லாம் நடிச்சுக்கிட்டு தானே இருந்து இருக்கணும்.. காதலிக்க மட்டுமா செய்திருக்கிறாள் கடவுளே..அத்தை பொண்ணுனு தான் அப்பா பிடிவாதமா அவளை கை காட்டவும் நான் மறுத்து பேசல.. இவங்க தொல்லையில் இருந்து தப்பிக்க அவளை பயன்படுத்த நினைத்தேன் ஆனால் பார்த்தியா அவள் என்னை எப்படி உபயோகப்படுத்த திட்டம் போட்டு இருக்கிறாள் என்று ஏன்டா இந்த பொண்ணுங்க இப்படி இருக்காங்க?"
"இப்ப எதுக்குடா பொண்ணுங்கன்னு பன்மையில பேசுற??"
"ம்ம்..அவள் மூஞ்ச பாத்ததுமே தெரியும் எந்த காரியமும் விளங்காதுனு சரியா வந்து கல்யாணத்தை நிறுத்திட்டா பாத்தியா??" எங்கிருந்து எங்கேயோ தாவினான்..
"யாரு மச்சி யாரை பத்தி பேசுற??"
"கர்ணா!!.."
"அந்த பொண்ணு பாட்டுக்கு கல்யாணத்துக்கு வந்தது அதுக்கும் உன் அத்தை மகள் செய்த தப்புக்கும் என்னடா சம்பந்தம் அனாவசியமாக நீ மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுற!.."
"அதெல்லாம் ஒன்னும் இல்லை அது தான் ஆழாக்கு சைஸ்ல இருக்கும் போதே சொன்னாலே என்னை தவிர நீங்கள் இன்னொரு பொண்ணை நெனச்சு கூட பாக்க கூடாது மீறிப் பார்த்தீங்கன்னா காளி கோவிலில் எலுமிச்சை வெட்டி போட்டுடுவேனு .. எனக்கு கல்யாணம்னு தெரிஞ்ச உடனே முதல்ல காளி கோவிலுக்கு தான் போயிருப்பாள்.. அது தான் சுபமா முடிஞ்சிருச்சு, சூனியக்காரி!.."
"உனக்கு கல்யாண பத்திரிக்கை கொடுக்க தொடங்கியே இரண்டு வாரம் தான் ஆச்சு.. உன் அத்தை மகள் மூன்று வருடமாக காதலிக்கிறாளாம் மூணு வருஷத்துக்கு முன்னாடியே அந்த பொண்ணு காளி கோவில் போச்சா என்ன?.. ஏண்டா நீ வேற அது சரி அவளை ஒரு ஆளே இல்லைன்னு கத்துவ ஆனால் எப்பயோ பேசினதெல்லாம் கரெக்டா ஞாபகம் வச்சு சொல்றியே எப்படி?"
"இப்ப அது முக்கியமா??"
"ஆமான்னு சொன்னாலும் நீ உஷார் ஆகிட்ட இனி உன் வாயிலிருந்து ஒரு வார்த்தையும் பிடுங்க முடியாது முதல்ல வெளியில வா அப்பா அம்மா கிட்ட பேசி அடுத்தது என்னன்னு முடிவு பண்ணலாம்"..
"இன்னும் என்ன அவங்க கிட்ட பேசி முடிவு எடுக்கணும்.. அவங்க முடிவு எடுத்து என்னை முடித்து விட்டது போதும், நானே ஒரு முடிவு எடுத்துட்டேன்!..."
"என்ன முடிவு டா??" அவன் பேச்சு தினுசில் கர்ணன் யோசனையானான்.
"அது வந்து".. என ரஜீவன் ஆரம்பிக்கும் போது மீண்டும் கதவு தட்டப்பட்டது.. கட்டிலில் அமர்ந்திருந்த கர்ணன் எழுந்து சென்று கதவை திறக்க ஐங்கரனும் பூரணியும் உள்ளே வந்தனர்.. ஒரே அவமானத்தில் தந்தை உடைந்து போய்விட்டார் என்று தெரிந்தது. சும்மாவே பூரணி பலவீனமானவர் தான் இப்போது இருவரும் நலிவாக தெரிந்தனர். பெற்றோரின் தோற்றம் மனதை உருக்கினாலும் அதே கல்போன்ற முக அமைப்போடு அவர்களை விட்டு பார்வையை திருப்பிக் கொண்டான்.
மகனின் முகத்தில் இருந்து எதையும் கண்டுபிடிக்க முடியாமல் சோர்வாக ஐங்கரன் கட்டிலில் அமர்ந்து கொள்ள மகனுக்கு அருகில் சென்ற பூரணி அவனிடம் பேச துவங்கினார்.
"ரஜீவ்"..
"வீட்டுக்கு கிளம்பலாமா!?"
"வீட்டுக்கா.. உன் கிட்ட கொஞ்சம் பேசலாமேனு"
"திரும்பவும் முதல்ல இருந்து நாடகமா திருந்தவே மாட்டீங்களா இரண்டு பேரும்??" அவன் குதிக்கவும் கர்ணன் வந்து சமாதானப்படுத்தினான்.
"ரஜீவ் அம்மா சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுப்பா!.."
"என்னம்மா.. தயவு செஞ்சு பாதிக்கப்பட்ட யாருக்கும் வாழ்க்கை கொடுத்து என்னை தியாகி ஆக சொல்லதிங்க"..
என மிகக் கடுமையான குரலில் தாயை எச்சரிக்க கண் கலங்க அவனை ஏறிட்ட பூரணி
"இல்லப்பா உங்க அத்தை குடும்பம் வீட்டுக்கு கிளம்பிட்டாங்க அந்தப் பையனும் கூடவே கிளம்பிட்டான்!.."
"நல்லது அடுத்தது நாமும் கிளம்பலாம் சொந்தக்காரங்களை கிளம்ப சொல்லுங்க மத்த வேலை எல்லாம் கர்ணன் கிட்ட ஒப்படைங்க அவன் எல்லாவற்றையும் செட்டில் பண்ணி கிளியர் பண்ணி விடுவான்"..
"இல்லப்பா.. நம்ம கிளம்ப வேண்டாம்"..
"ஏன் இங்கேயே உட்கார்ந்து துக்கம் விசாரிப்பவர்களோடு கூட சேர்ந்து ஒப்பாரி வைக்கணுமா??.."
"என்னை கொஞ்சம் பேச விடுப்பா"..
"இன்னைக்கு உங்க பர்ஃபார்மன்ஸ் போதலம்மா.. இன்னும் ஹெவியா பர்ஃபார்மன்ஸ் பண்ணி என் தலையை கழுவுங்கள்.. நானும் அவமானப்பட்டு நிற்கிறேன்"..
"இப்படி எல்லாம் பேசாத ராஜா!.." என மகனின் கைகளைப் பற்றிக் கொண்டு கதறிய மனைவியை பார்த்ததும் தன்னால் தான் இவ்வளவும் என்று உணர்ந்த ஐங்கரன் அவரே எழுந்து மகனிடம் பேச தயாரானார்..
"ரஜீவ் தப்பு தான் நாங்க யார் சொன்னாலும் நீ காது கொடுத்து கேட்கல அது தான் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னால் ஒரு வேலை கொஞ்சம் அக்கறையா எங்க பேச்சை கேப்பனு நினைச்சேன் அதே மாதிரி நீ கல்யாணத்துக்கு மறுப்பு சொல்லாம ஒத்துக்கிட்ட தானே.. எனக்கு சத்தியமா நித்தியா பத்தி தெரியலப்பா.. உன்னை அருமை பெருமையா வளர்த்த நாங்க இப்படி ஒரு இக்கட்டில் கொண்டு வந்து நிறுத்துவோமா.. நீ நடந்த பிழைக்கு எங்க மேல கோபப்பட்டு உன் சினத்தை ஆத்திக்கிற.. எங்களுக்கு அதுக்கு கூட வழி இல்லை.. சொந்த தங்கச்சி மகள் என்பதற்காக ஒழுங்கா விசாரிக்காம நம்பி தானே கல்யாண ஏற்பாடு பண்ணோம்.. அவள் எங்கள் முகத்தில் இப்படி கரியை பூசுவாள்னு நினைத்து கூட பார்க்கலையே.. எல்லா பிழைகளும் எங்க மேல தான்.. இல்லை என் மேல தான்.. அவள் கிட்ட கோபப்படாத உங்க அம்மா ஒரு அப்பாவி!.."
"இந்த பேச்சே வேணாம்.. எல்லாத்தையும் விட்டுட்டு போகலாம் எனக்கு வீட்டுக்கு போகணும்"..
"ஒரு நிமிஷம் இருப்பா!."
"இப்போ என்னப்பா?"
"இவ்வளவு காலம் தனியாக இருந்து விட்டாய் உன் அம்மாவுக்காக இந்த கல்யாணம் என வெளியில சொன்னாலும் உனக்குமே இனிமேல் ஒரு துணை இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என தோன்றிய படியால் தானே உடனே கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன?.."
"அப்பா இப்ப இந்த விபரம் எல்லாம் எதுக்கு?"
"சொல்லு ரஜீவ் நித்தியா மணப்பெண் என்றதாலயா கல்யாணத்துக்கு ஒத்துகிட்ட!.."
"அதெல்லாம் ஒன்னும் இல்ல ஓயாமல் நீங்க எனக்கு கொடுத்த தொல்லையிலிருந்து தப்பிக்கிறதுக்கு நீங்க எந்த கழுதைக்கு தாலி கட்ட சொன்னாலும் நான் கட்டி இருப்பேன்!.."
"இந்த விஷயத்துல நீ உறுதியா இருக்கறதா இருந்தால் அடுத்த முகூர்த்தத்திலேயே ஒரு நல்ல பெண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வச்சா பண்ணுவியா??" முகத்தில் அனல் அடித்தது ரஜீவனுக்கு.
"அம்மாவோட தொணதொணப்பு போய் இப்போது நீங்களா.. மறுபடியும் எதுக்கு கல்யாணம்னு ஆரம்பிக்கிறீங்க??"
"கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு ரஜீவ் இந்த சொந்தம் பந்தம் உற்றார் உறவு இவங்கள பத்தி நீ கவலைப்படுவதில்லை இனி நாங்களும் கவலைப்பட போவதில்லை எங்களுக்கு எங்கள் பையனின் சந்தோஷமும் அவன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு தான் முக்கியம்.. இப்ப நடந்த பிரச்சினையால இனிமேல் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன் என்று முடிவு பண்ணிட்டியா.. நீ அவசரப்பட்டு அப்படி முடிவு எடுத்திட கூடாது என்று தான் அடுத்த முகூர்த்தத்திலேயே உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு"..
"என்னப்பா பேசிகிட்டே போறீங்க.. இப்பதானே ஒரு பிரச்சனை ஓய்ந்தது.. மறுபடியும் கல்யாண பேச்சு இங்கு நடந்த கூத்து எல்லாம் பாத்த பிறகும் எந்த பைத்தியக்காரன் உங்ககிட்ட பொண்ணு தாரேனு சொன்னது?.. எனக்கு கல்யாணமும் வேணா ஒரு ம.. அப்பா தயவு செஞ்சு என் வாயை கிளறாம வாங்க வீட்டுக்கு போவோம்" உச்சகட்ட கோபத்தில் இருந்தவன் வாயை அடக்க முடியாமல் எரிந்து விழுந்தான்.
"ரஜீவ்!!"
"பொண்ணு தாரேன்னு சொன்ன லூசு குடும்பத்தை விடுங்க.. அந்தப் பொண்ணு எப்படி ஒத்துக்கிட்டது ஆமாம் இவ்வளவு கலவரத்திலும் அது எப்படி இன்ஸ்டன்ட்டா ஒரு பெண்ணை கண்டுபிடிச்சீங்க???"
"வழக்கத்தை மீறி மூச்சு விடாம இவ்வளவு பேசுறியே எந்த அளவுக்கு நீ மனசு உடைந்து போய் இருப்ப??" என கண்ணீர் சிந்திய தாயின் கரங்களைப் பற்றிக் கொண்டவன்
"பேச வேண்டிய நேரத்தில் கொஞ்சம் அதிகமாக பேசலாம் அம்மா தப்பில்லை!.. என்னால உங்கள மாதிரி வாழ முடியாது"
என வாயால் கூறிக் கொண்டே மனதுக்குள்
"குட்டி பிசாசு உன்னை பார்த்ததால் தான்டி என் இயல்பை மீறி என்ன என்னவோ பண்ணுறேன்.. அவளோட தோஷம் என்னையும் தாக்குது!.." என புகைந்தான்..
"சரிப்பா.. இப்ப நம்ம வீட்டுக்கு போகலாம் வீட்டுக்கு போய் மீதி விஷயங்களை பேசி முடிவெடுக்கலாம்!.." தடாலடியாக பேசியும் பெற்றோர் மசியாததால் குரலை இறக்கினான்.
"எனக்குத் தலை வலிக்குது வீட்டுக்கு போலாமே"
"ரஜீவ் நம்ம அவமானப்பட்ட சொந்த பந்தம் முன்னாடியே உனக்கு அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணம் பண்ணலாம்னு நான் முடிவு பண்ணி இருக்கேன்".
"மறுபடியும் சொந்த பந்தத்தையும் கௌரவத்தை இழுத்துகிட்டு வாறீங்க, என்னமோ பண்ணுங்க அதுதான் சரின்னு சொல்லிட்டேனே இன்னும் என்ன எப்ப வருது அந்த அடுத்த முகூர்த்தம் இந்த மாசம் என்ன தேதி இல்ல அடுத்த மாசமா இன்னும் மூணு மாசத்துக்கு வேற முகூர்த்தமே இல்லனு பேசிக்கிட்டீங்களே அதுவும் நல்லது தான் இன்னும் மூணு நாலு மாசத்துக்கு கல்யாணத்தை தள்ளி போடலாம்.. ஆற அமர உட்கார்ந்து பேசி நிதானமாக யோசித்து முடிவு எடுக்கலாம் இல்லப்பா??"
"இல்லைப்பா!!"
"என்னப்பா?"
"மறுபடியும் கல்யாணத்தை தள்ளிப் போட முடியாதுன்னு சொல்றேன் ப்பா"
"புரியலைப்பா??"
"இதுக்கு அப்புறம் எதையும் தள்ளி போட வேண்டாம்.. அதே மாதிரி நீ விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டிய அளவுக்கு பெண்ணின் குடும்பம் வேற்றாளுங்க இல்லை.. நாங்களே பேசி முடிவு பண்ணிட்டோம்"..
"என்ன முடிவு பண்ணிங்க??"
"இன்னும் 20 நிமிடத்தில் வரும் அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணத்தை வச்சுக்கலாம்னு!"
"என்ன?"
"அது தான் ப்பா இன்னும் 20 நிமிடத்தில்"...
"அவசர கோலமா ஆரம்பிச்ச ஒரு விஷயம் தானே இப்படி வந்து முடிஞ்சது மறுபடியும் என்னப்பா பண்ணிட்டு வந்து இருக்கீங்க??.."
"இல்லை கண்ணா!"
"அம்மா தயவு செய்து கொஞ்ச நேரம் பேசாமல் இருங்க.. என் பலவீனமே நீங்க தான்.. நீங்க அழுதாலே என்னால யோசிக்க முடியல மண்டை சூடாகுது"..
"இல்லை ரஜீவ் அந்த குடும்பமும் அந்த பொண்ணும் ரொம்ப நல்லவங்க இந்த தடவை நாங்க சரியான முடிவு தான் எடுத்திருக்கோம்"
"என்னப்பா புரியாம?.." என கத்த தொடங்கியவனை இடைமறித்த கர்ணன்
"முதலில் பெண் குடும்பம் யார்னு கேட்டுக் கொள்ளுடா.. சொல்ல முன்னாடியே கத்துற!.." என்க
"யாரா இருந்தாலும் அடுத்த 20 நிமிஷத்துல கல்யாணம் பண்ண முடியுமா??.."
"ஏன்ப்பா நடந்ததெல்லாம் மறந்திடு இப்பதான் உனக்கு கல்யாணம் நீ முதல் முறை மேடை ஏறுவதாக நினைச்சுக்கோயேன்!.."
"உடனே மறக்குற மாதிரியா காலையில் நடந்த சம்பவம் இருந்தது??.."
"அதை நினைத்து நினைத்து உன்னை நீயே காயப்படுத்திக்குவன்னு தான் நானும் அம்மாவும் இந்த முடிவையே எடுத்தோம்"..
"நான் ஒன்னும் என்னை காயப்படுத்தி கொள்ள மாட்டேன்.. எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க நான் கொஞ்சம் நார்மலானதும் கல்யாணத்தை பத்தி பேசலாம்!.."
"வேணாம் வேணாம் பா.. சூட்டோடு சூடாக உங்களுக்கு இந்த நல்ல காரியம் முடிந்து விடட்டும்!.."
"உங்க குடும்பத்துல பிரச்சனை அவசர கல்யாணம் பண்றீங்க அந்த பொண்ணு குடும்பத்தில் என்ன பிரச்சனை??.."
"அது.. அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை கண்ணா.. அவங்க எங்களுக்காக தான் பொண்ணு தரவே சம்மதம் சொன்னாங்க!.."
"யாருப்பா அது அவ்வளவு நல்லவங்க??"
"அவங்கள உனக்கு தெரியும் ஆனால் இப்போ ஞாபகம் இருக்காது!.."
"நான் அந்த பெண் கிட்ட பேசணும்!"
"அதுக்கு எல்லாம் டைம் இல்ல ராஜா நீ மனைக்கு போக தயாராகு"..
"கொஞ்சம் இருங்கம்மா ம்ம்.. என் சம்மதத்தை தான் மதிக்க மாட்டேங்கிறீங்க அந்தப் பெண் முழு மனதுடன் சம்மதம் சொல்லித் தான் கல்யாணத்துக்கு தயாராகிறீர்களா??"
"ஆமாம்".. என்ற தாயின் குரல் கொஞ்சம் மழுப்பலாகத் தான் ஒலித்தது..
"இது சரி வருமா??.."
இதற்கு மேல் இவனை யோசிக்க விட்டால் ஆபத்து என்பது போல தாய் தந்தை இருவரும் ஒரே நேரத்தில் அவன் கையை பற்றி
"ஒரு தடவை தான் பிழை நடக்கும் பொய்யில் ஆரம்பிச்ச ஒரு கல்யாணம் நிலைக்காம போயிருச்சு.. இது சத்தியத்தில் ஆரம்பிக்கிற கல்யாணம் நீ உன் வாழ்க்கை முழுக்க சந்தோஷமா தான் இருப்ப ஒரு படிப்பினையால் நல்ல முடிவு எடுத்திருக்கோம்.. இது நன்மையை தான் தரும்!! இதுக்கு பிறகும் உனக்கு எங்க வார்த்தைல நம்பிக்கை இல்லனா ஒரே மகன் நல்லா இருக்கணும்னு செஞ்ச காரியத்திற்காக நான் உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கிறேன்" என தந்தை அழ
"அப்பா என்ன பேசுறீங்க?" என அலறியவன் சம்மதமாக தலையாட்டினான் மனதுக்குள் இருந்த திட்டங்கள் நொறுங்கி போக
எந்த அளவிற்கு தனக்குள் வருந்தி கொண்டிருந்தால் தந்தை இப்படி பேசுவார் என்று புரிந்தவன் போல அமைதி காத்தவன் குழப்பமான ஒரு மனதுடனே கர்ணன் எடுத்துக் கொடுத்த பட்டு சட்டையை போட்டுக் கொண்டான்..
தந்தை கதவை திறக்க மறுபடியும் மனைக்கு செல்ல வெளியில் வந்து தளர்வாக மேடையை நோக்கி நடந்தான்.
"ஏம்மா பொண்ணு பெயர் என்ன??"
"ஜனனி!.."
"எந்த ஜனனி?" கர்ணன் குரல் தந்தி அடித்தது.
"காண்ட்ராக்டர் கண்ணபிரான் ஐயா பேத்தி!"
பின்னால் கர்ணன் கேட்ட கேள்வியையும் அதற்கு தாய் தந்த பதிலையும் கேட்டு உறைந்து போய் அதிர்ச்சியாக திரும்பிப் பார்க்க அங்கே கர்ணனும் பேய் அறைந்தது போல் நின்றிருந்தான்..
Leave your valuable comments and likes
கர்ணன் தனது உள்ளங்கை சிவக்கும் அளவிற்கு கதவை தட்டி விட்டான் ரஜீவன் திறந்த பாடு தான் இல்லை.. சரிந்து விழுந்த ஐங்கரனிடம் பூரணியோட ரஜீவனை கர்ணன் பின் தொடர்ந்து வந்திருந்தான்.
"டேய் கதவை திறடா என்ன பிரச்சனையா இருந்தாலும் பேசி சரி பண்ணிக்கணும்.. இப்படி கதவை அடைச்சுக்கிட்டு உள்ள இருந்தா பிரச்சனை தீர்ந்திடுமா??.."
என்ன சொன்னாலும் கதவை திறக்காமல் அழிச்சாட்டியம் செய்பவனை வெளிப்படையாக திட்டக் கூட முடியவில்லை.. அப்படிப்பட்ட உயிர் நண்பன் ரஜீவன் கர்ணனுக்கு.. ஒரே தட்டில் சாப்பிட்டு ஒரே சட்டையை போட்டுக் கொள்ளும் விளையாட்டு நண்பனாக ஆரம்பித்தது கல்வியிலும் சரி தொழிலிலும் சரி அவன் மட்டும் முன்னேறாமல் கர்ணனையும் சேர்த்து இழுத்துக் கொண்டு இவ்வளவு தூரம் வந்திருக்கிறான்.. ஜஸ்ட் பாஸில் வருடங்களை கடந்து கொண்டிருந்தவனை பேசியே சரி கட்டி தன் தொழிலிலும் பார்ட்னர் ஆக்கி கர்ணனை நம்பியும் காண்ட்ராக்ட்களை கண்ணை மூடிக் கொண்டு கொடுக்கலாம் என்ற பெயரை வாங்கி கொடுத்து இருக்கிறான்..
அவனுக்கு இத்தகைய அவமானம் ஏற்பட்டது கர்ணனுக்கு மிகுந்த மனவருத்தமே.. ஐங்கரன் மீது கோபம் வந்தது எல்லாம் அவரால் தான். அதற்காக அவரைத் திட்ட கூட முடியவில்லை அவருக்கு கர்ணனும் இன்னொரு மகன்தான் தந்தை இல்லாதவனை ரஜீவனுக்கு ஒப்பாகத்தான் பார்த்தார் ஆனாலும் மகன் விஷயத்தில் அவசரப்படாமல் யோசித்து செயல்பட்டு இருக்கலாம் மனதுக்குள் வருந்தி கொண்டு எப்படியாவது கதவை திறக்க வைத்து விட வேண்டும் என்ற முனைப்புடன் வேகமாக தட்டினான்.
"ரஜீவ் ஏய் கதவை திறடா.. மனுசன போட்டு இந்த பாடு படுத்துற!!.."
சடார் என்று திறந்த கதவுக்கு பின்னால் பனியனோடு நின்றவனை பார்த்து
"என்னடா பட்டு சட்டை எல்லாம் கழட்டி வீசிட்ட??" என கலங்கினான்.
"ஆமா எனக்கு இப்ப பட்டு சட்டை ஒன்னு தான் கேடு!.."
அறைக்குள் நுழைந்து கதவை சாற்றியவன்
"ஒன்னும் சொல்லாம உள்ள வந்துட்ட.. நித்தியாவை உங்க அத்தை இழுத்துக் கிட்டு போயிடுச்சு ஆளாளுக்கு வாய்க்கு வந்ததை பேசிக் கிட்டு இருக்காங்க டா அப்பா வேற வருத்தமா கீழே உக்காந்துட்டாரு.. அம்மா அழுகுறாங்க உன் பாட்டுக்கு வந்து கதவை பூட்டிகிட்ட! பயந்து போயிட்டேன் அடுத்தது என்ன??"
"தெரியல டா!.." கர்ணன் அளவெல்லாம் துடிக்கவில்லை இயல்பாக இருந்தான்.
"என்னடா இப்படி சொல்ற??" வழமை போல மன வருத்தங்களை காட்டிக் கொள்ளாமல் நண்பன் தனக்குள் வேதனைப்படுகிறானோ என தோன்றியது கர்ணனுக்கு.
"வேற என்ன சொல்லணும்னு எதிர்பார்க்கிற.."
"கல்யாணம் நின்னதை நெனச்சு வருத்தப்படுறியா!?"
"அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை யோசிச்சு பாரு தாலி கட்ட முன்னாடியே இதெல்லாம் தெரிஞ்சதுனால சரியா போச்சு இல்லன்னா.. நித்தியா எங்க குடும்பத்தையே நல்லா ஏமாத்திட்டால்ல.. வீட்டுக்குள்ள சின்ன பிள்ளை மாதிரி அதிகாரம் பண்ணிக்கிட்டு இருப்பாடா.. ஒரு வேலை செய்ய தெரியாத சோம்பேறி மூணு வருஷமா காதலிச்சு இருக்கானா எங்கள் முன்னாடி எல்லாம் நடிச்சுக்கிட்டு தானே இருந்து இருக்கணும்.. காதலிக்க மட்டுமா செய்திருக்கிறாள் கடவுளே..அத்தை பொண்ணுனு தான் அப்பா பிடிவாதமா அவளை கை காட்டவும் நான் மறுத்து பேசல.. இவங்க தொல்லையில் இருந்து தப்பிக்க அவளை பயன்படுத்த நினைத்தேன் ஆனால் பார்த்தியா அவள் என்னை எப்படி உபயோகப்படுத்த திட்டம் போட்டு இருக்கிறாள் என்று ஏன்டா இந்த பொண்ணுங்க இப்படி இருக்காங்க?"
"இப்ப எதுக்குடா பொண்ணுங்கன்னு பன்மையில பேசுற??"
"ம்ம்..அவள் மூஞ்ச பாத்ததுமே தெரியும் எந்த காரியமும் விளங்காதுனு சரியா வந்து கல்யாணத்தை நிறுத்திட்டா பாத்தியா??" எங்கிருந்து எங்கேயோ தாவினான்..
"யாரு மச்சி யாரை பத்தி பேசுற??"
"கர்ணா!!.."
"அந்த பொண்ணு பாட்டுக்கு கல்யாணத்துக்கு வந்தது அதுக்கும் உன் அத்தை மகள் செய்த தப்புக்கும் என்னடா சம்பந்தம் அனாவசியமாக நீ மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுற!.."
"அதெல்லாம் ஒன்னும் இல்லை அது தான் ஆழாக்கு சைஸ்ல இருக்கும் போதே சொன்னாலே என்னை தவிர நீங்கள் இன்னொரு பொண்ணை நெனச்சு கூட பாக்க கூடாது மீறிப் பார்த்தீங்கன்னா காளி கோவிலில் எலுமிச்சை வெட்டி போட்டுடுவேனு .. எனக்கு கல்யாணம்னு தெரிஞ்ச உடனே முதல்ல காளி கோவிலுக்கு தான் போயிருப்பாள்.. அது தான் சுபமா முடிஞ்சிருச்சு, சூனியக்காரி!.."
"உனக்கு கல்யாண பத்திரிக்கை கொடுக்க தொடங்கியே இரண்டு வாரம் தான் ஆச்சு.. உன் அத்தை மகள் மூன்று வருடமாக காதலிக்கிறாளாம் மூணு வருஷத்துக்கு முன்னாடியே அந்த பொண்ணு காளி கோவில் போச்சா என்ன?.. ஏண்டா நீ வேற அது சரி அவளை ஒரு ஆளே இல்லைன்னு கத்துவ ஆனால் எப்பயோ பேசினதெல்லாம் கரெக்டா ஞாபகம் வச்சு சொல்றியே எப்படி?"
"இப்ப அது முக்கியமா??"
"ஆமான்னு சொன்னாலும் நீ உஷார் ஆகிட்ட இனி உன் வாயிலிருந்து ஒரு வார்த்தையும் பிடுங்க முடியாது முதல்ல வெளியில வா அப்பா அம்மா கிட்ட பேசி அடுத்தது என்னன்னு முடிவு பண்ணலாம்"..
"இன்னும் என்ன அவங்க கிட்ட பேசி முடிவு எடுக்கணும்.. அவங்க முடிவு எடுத்து என்னை முடித்து விட்டது போதும், நானே ஒரு முடிவு எடுத்துட்டேன்!..."
"என்ன முடிவு டா??" அவன் பேச்சு தினுசில் கர்ணன் யோசனையானான்.
"அது வந்து".. என ரஜீவன் ஆரம்பிக்கும் போது மீண்டும் கதவு தட்டப்பட்டது.. கட்டிலில் அமர்ந்திருந்த கர்ணன் எழுந்து சென்று கதவை திறக்க ஐங்கரனும் பூரணியும் உள்ளே வந்தனர்.. ஒரே அவமானத்தில் தந்தை உடைந்து போய்விட்டார் என்று தெரிந்தது. சும்மாவே பூரணி பலவீனமானவர் தான் இப்போது இருவரும் நலிவாக தெரிந்தனர். பெற்றோரின் தோற்றம் மனதை உருக்கினாலும் அதே கல்போன்ற முக அமைப்போடு அவர்களை விட்டு பார்வையை திருப்பிக் கொண்டான்.
மகனின் முகத்தில் இருந்து எதையும் கண்டுபிடிக்க முடியாமல் சோர்வாக ஐங்கரன் கட்டிலில் அமர்ந்து கொள்ள மகனுக்கு அருகில் சென்ற பூரணி அவனிடம் பேச துவங்கினார்.
"ரஜீவ்"..
"வீட்டுக்கு கிளம்பலாமா!?"
"வீட்டுக்கா.. உன் கிட்ட கொஞ்சம் பேசலாமேனு"
"திரும்பவும் முதல்ல இருந்து நாடகமா திருந்தவே மாட்டீங்களா இரண்டு பேரும்??" அவன் குதிக்கவும் கர்ணன் வந்து சமாதானப்படுத்தினான்.
"ரஜீவ் அம்மா சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுப்பா!.."
"என்னம்மா.. தயவு செஞ்சு பாதிக்கப்பட்ட யாருக்கும் வாழ்க்கை கொடுத்து என்னை தியாகி ஆக சொல்லதிங்க"..
என மிகக் கடுமையான குரலில் தாயை எச்சரிக்க கண் கலங்க அவனை ஏறிட்ட பூரணி
"இல்லப்பா உங்க அத்தை குடும்பம் வீட்டுக்கு கிளம்பிட்டாங்க அந்தப் பையனும் கூடவே கிளம்பிட்டான்!.."
"நல்லது அடுத்தது நாமும் கிளம்பலாம் சொந்தக்காரங்களை கிளம்ப சொல்லுங்க மத்த வேலை எல்லாம் கர்ணன் கிட்ட ஒப்படைங்க அவன் எல்லாவற்றையும் செட்டில் பண்ணி கிளியர் பண்ணி விடுவான்"..
"இல்லப்பா.. நம்ம கிளம்ப வேண்டாம்"..
"ஏன் இங்கேயே உட்கார்ந்து துக்கம் விசாரிப்பவர்களோடு கூட சேர்ந்து ஒப்பாரி வைக்கணுமா??.."
"என்னை கொஞ்சம் பேச விடுப்பா"..
"இன்னைக்கு உங்க பர்ஃபார்மன்ஸ் போதலம்மா.. இன்னும் ஹெவியா பர்ஃபார்மன்ஸ் பண்ணி என் தலையை கழுவுங்கள்.. நானும் அவமானப்பட்டு நிற்கிறேன்"..
"இப்படி எல்லாம் பேசாத ராஜா!.." என மகனின் கைகளைப் பற்றிக் கொண்டு கதறிய மனைவியை பார்த்ததும் தன்னால் தான் இவ்வளவும் என்று உணர்ந்த ஐங்கரன் அவரே எழுந்து மகனிடம் பேச தயாரானார்..
"ரஜீவ் தப்பு தான் நாங்க யார் சொன்னாலும் நீ காது கொடுத்து கேட்கல அது தான் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னால் ஒரு வேலை கொஞ்சம் அக்கறையா எங்க பேச்சை கேப்பனு நினைச்சேன் அதே மாதிரி நீ கல்யாணத்துக்கு மறுப்பு சொல்லாம ஒத்துக்கிட்ட தானே.. எனக்கு சத்தியமா நித்தியா பத்தி தெரியலப்பா.. உன்னை அருமை பெருமையா வளர்த்த நாங்க இப்படி ஒரு இக்கட்டில் கொண்டு வந்து நிறுத்துவோமா.. நீ நடந்த பிழைக்கு எங்க மேல கோபப்பட்டு உன் சினத்தை ஆத்திக்கிற.. எங்களுக்கு அதுக்கு கூட வழி இல்லை.. சொந்த தங்கச்சி மகள் என்பதற்காக ஒழுங்கா விசாரிக்காம நம்பி தானே கல்யாண ஏற்பாடு பண்ணோம்.. அவள் எங்கள் முகத்தில் இப்படி கரியை பூசுவாள்னு நினைத்து கூட பார்க்கலையே.. எல்லா பிழைகளும் எங்க மேல தான்.. இல்லை என் மேல தான்.. அவள் கிட்ட கோபப்படாத உங்க அம்மா ஒரு அப்பாவி!.."
"இந்த பேச்சே வேணாம்.. எல்லாத்தையும் விட்டுட்டு போகலாம் எனக்கு வீட்டுக்கு போகணும்"..
"ஒரு நிமிஷம் இருப்பா!."
"இப்போ என்னப்பா?"
"இவ்வளவு காலம் தனியாக இருந்து விட்டாய் உன் அம்மாவுக்காக இந்த கல்யாணம் என வெளியில சொன்னாலும் உனக்குமே இனிமேல் ஒரு துணை இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என தோன்றிய படியால் தானே உடனே கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன?.."
"அப்பா இப்ப இந்த விபரம் எல்லாம் எதுக்கு?"
"சொல்லு ரஜீவ் நித்தியா மணப்பெண் என்றதாலயா கல்யாணத்துக்கு ஒத்துகிட்ட!.."
"அதெல்லாம் ஒன்னும் இல்ல ஓயாமல் நீங்க எனக்கு கொடுத்த தொல்லையிலிருந்து தப்பிக்கிறதுக்கு நீங்க எந்த கழுதைக்கு தாலி கட்ட சொன்னாலும் நான் கட்டி இருப்பேன்!.."
"இந்த விஷயத்துல நீ உறுதியா இருக்கறதா இருந்தால் அடுத்த முகூர்த்தத்திலேயே ஒரு நல்ல பெண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வச்சா பண்ணுவியா??" முகத்தில் அனல் அடித்தது ரஜீவனுக்கு.
"அம்மாவோட தொணதொணப்பு போய் இப்போது நீங்களா.. மறுபடியும் எதுக்கு கல்யாணம்னு ஆரம்பிக்கிறீங்க??"
"கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு ரஜீவ் இந்த சொந்தம் பந்தம் உற்றார் உறவு இவங்கள பத்தி நீ கவலைப்படுவதில்லை இனி நாங்களும் கவலைப்பட போவதில்லை எங்களுக்கு எங்கள் பையனின் சந்தோஷமும் அவன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு தான் முக்கியம்.. இப்ப நடந்த பிரச்சினையால இனிமேல் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன் என்று முடிவு பண்ணிட்டியா.. நீ அவசரப்பட்டு அப்படி முடிவு எடுத்திட கூடாது என்று தான் அடுத்த முகூர்த்தத்திலேயே உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு"..
"என்னப்பா பேசிகிட்டே போறீங்க.. இப்பதானே ஒரு பிரச்சனை ஓய்ந்தது.. மறுபடியும் கல்யாண பேச்சு இங்கு நடந்த கூத்து எல்லாம் பாத்த பிறகும் எந்த பைத்தியக்காரன் உங்ககிட்ட பொண்ணு தாரேனு சொன்னது?.. எனக்கு கல்யாணமும் வேணா ஒரு ம.. அப்பா தயவு செஞ்சு என் வாயை கிளறாம வாங்க வீட்டுக்கு போவோம்" உச்சகட்ட கோபத்தில் இருந்தவன் வாயை அடக்க முடியாமல் எரிந்து விழுந்தான்.
"ரஜீவ்!!"
"பொண்ணு தாரேன்னு சொன்ன லூசு குடும்பத்தை விடுங்க.. அந்தப் பொண்ணு எப்படி ஒத்துக்கிட்டது ஆமாம் இவ்வளவு கலவரத்திலும் அது எப்படி இன்ஸ்டன்ட்டா ஒரு பெண்ணை கண்டுபிடிச்சீங்க???"
"வழக்கத்தை மீறி மூச்சு விடாம இவ்வளவு பேசுறியே எந்த அளவுக்கு நீ மனசு உடைந்து போய் இருப்ப??" என கண்ணீர் சிந்திய தாயின் கரங்களைப் பற்றிக் கொண்டவன்
"பேச வேண்டிய நேரத்தில் கொஞ்சம் அதிகமாக பேசலாம் அம்மா தப்பில்லை!.. என்னால உங்கள மாதிரி வாழ முடியாது"
என வாயால் கூறிக் கொண்டே மனதுக்குள்
"குட்டி பிசாசு உன்னை பார்த்ததால் தான்டி என் இயல்பை மீறி என்ன என்னவோ பண்ணுறேன்.. அவளோட தோஷம் என்னையும் தாக்குது!.." என புகைந்தான்..
"சரிப்பா.. இப்ப நம்ம வீட்டுக்கு போகலாம் வீட்டுக்கு போய் மீதி விஷயங்களை பேசி முடிவெடுக்கலாம்!.." தடாலடியாக பேசியும் பெற்றோர் மசியாததால் குரலை இறக்கினான்.
"எனக்குத் தலை வலிக்குது வீட்டுக்கு போலாமே"
"ரஜீவ் நம்ம அவமானப்பட்ட சொந்த பந்தம் முன்னாடியே உனக்கு அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணம் பண்ணலாம்னு நான் முடிவு பண்ணி இருக்கேன்".
"மறுபடியும் சொந்த பந்தத்தையும் கௌரவத்தை இழுத்துகிட்டு வாறீங்க, என்னமோ பண்ணுங்க அதுதான் சரின்னு சொல்லிட்டேனே இன்னும் என்ன எப்ப வருது அந்த அடுத்த முகூர்த்தம் இந்த மாசம் என்ன தேதி இல்ல அடுத்த மாசமா இன்னும் மூணு மாசத்துக்கு வேற முகூர்த்தமே இல்லனு பேசிக்கிட்டீங்களே அதுவும் நல்லது தான் இன்னும் மூணு நாலு மாசத்துக்கு கல்யாணத்தை தள்ளி போடலாம்.. ஆற அமர உட்கார்ந்து பேசி நிதானமாக யோசித்து முடிவு எடுக்கலாம் இல்லப்பா??"
"இல்லைப்பா!!"
"என்னப்பா?"
"மறுபடியும் கல்யாணத்தை தள்ளிப் போட முடியாதுன்னு சொல்றேன் ப்பா"
"புரியலைப்பா??"
"இதுக்கு அப்புறம் எதையும் தள்ளி போட வேண்டாம்.. அதே மாதிரி நீ விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டிய அளவுக்கு பெண்ணின் குடும்பம் வேற்றாளுங்க இல்லை.. நாங்களே பேசி முடிவு பண்ணிட்டோம்"..
"என்ன முடிவு பண்ணிங்க??"
"இன்னும் 20 நிமிடத்தில் வரும் அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணத்தை வச்சுக்கலாம்னு!"
"என்ன?"
"அது தான் ப்பா இன்னும் 20 நிமிடத்தில்"...
"அவசர கோலமா ஆரம்பிச்ச ஒரு விஷயம் தானே இப்படி வந்து முடிஞ்சது மறுபடியும் என்னப்பா பண்ணிட்டு வந்து இருக்கீங்க??.."
"இல்லை கண்ணா!"
"அம்மா தயவு செய்து கொஞ்ச நேரம் பேசாமல் இருங்க.. என் பலவீனமே நீங்க தான்.. நீங்க அழுதாலே என்னால யோசிக்க முடியல மண்டை சூடாகுது"..
"இல்லை ரஜீவ் அந்த குடும்பமும் அந்த பொண்ணும் ரொம்ப நல்லவங்க இந்த தடவை நாங்க சரியான முடிவு தான் எடுத்திருக்கோம்"
"என்னப்பா புரியாம?.." என கத்த தொடங்கியவனை இடைமறித்த கர்ணன்
"முதலில் பெண் குடும்பம் யார்னு கேட்டுக் கொள்ளுடா.. சொல்ல முன்னாடியே கத்துற!.." என்க
"யாரா இருந்தாலும் அடுத்த 20 நிமிஷத்துல கல்யாணம் பண்ண முடியுமா??.."
"ஏன்ப்பா நடந்ததெல்லாம் மறந்திடு இப்பதான் உனக்கு கல்யாணம் நீ முதல் முறை மேடை ஏறுவதாக நினைச்சுக்கோயேன்!.."
"உடனே மறக்குற மாதிரியா காலையில் நடந்த சம்பவம் இருந்தது??.."
"அதை நினைத்து நினைத்து உன்னை நீயே காயப்படுத்திக்குவன்னு தான் நானும் அம்மாவும் இந்த முடிவையே எடுத்தோம்"..
"நான் ஒன்னும் என்னை காயப்படுத்தி கொள்ள மாட்டேன்.. எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க நான் கொஞ்சம் நார்மலானதும் கல்யாணத்தை பத்தி பேசலாம்!.."
"வேணாம் வேணாம் பா.. சூட்டோடு சூடாக உங்களுக்கு இந்த நல்ல காரியம் முடிந்து விடட்டும்!.."
"உங்க குடும்பத்துல பிரச்சனை அவசர கல்யாணம் பண்றீங்க அந்த பொண்ணு குடும்பத்தில் என்ன பிரச்சனை??.."
"அது.. அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை கண்ணா.. அவங்க எங்களுக்காக தான் பொண்ணு தரவே சம்மதம் சொன்னாங்க!.."
"யாருப்பா அது அவ்வளவு நல்லவங்க??"
"அவங்கள உனக்கு தெரியும் ஆனால் இப்போ ஞாபகம் இருக்காது!.."
"நான் அந்த பெண் கிட்ட பேசணும்!"
"அதுக்கு எல்லாம் டைம் இல்ல ராஜா நீ மனைக்கு போக தயாராகு"..
"கொஞ்சம் இருங்கம்மா ம்ம்.. என் சம்மதத்தை தான் மதிக்க மாட்டேங்கிறீங்க அந்தப் பெண் முழு மனதுடன் சம்மதம் சொல்லித் தான் கல்யாணத்துக்கு தயாராகிறீர்களா??"
"ஆமாம்".. என்ற தாயின் குரல் கொஞ்சம் மழுப்பலாகத் தான் ஒலித்தது..
"இது சரி வருமா??.."
இதற்கு மேல் இவனை யோசிக்க விட்டால் ஆபத்து என்பது போல தாய் தந்தை இருவரும் ஒரே நேரத்தில் அவன் கையை பற்றி
"ஒரு தடவை தான் பிழை நடக்கும் பொய்யில் ஆரம்பிச்ச ஒரு கல்யாணம் நிலைக்காம போயிருச்சு.. இது சத்தியத்தில் ஆரம்பிக்கிற கல்யாணம் நீ உன் வாழ்க்கை முழுக்க சந்தோஷமா தான் இருப்ப ஒரு படிப்பினையால் நல்ல முடிவு எடுத்திருக்கோம்.. இது நன்மையை தான் தரும்!! இதுக்கு பிறகும் உனக்கு எங்க வார்த்தைல நம்பிக்கை இல்லனா ஒரே மகன் நல்லா இருக்கணும்னு செஞ்ச காரியத்திற்காக நான் உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கிறேன்" என தந்தை அழ
"அப்பா என்ன பேசுறீங்க?" என அலறியவன் சம்மதமாக தலையாட்டினான் மனதுக்குள் இருந்த திட்டங்கள் நொறுங்கி போக
எந்த அளவிற்கு தனக்குள் வருந்தி கொண்டிருந்தால் தந்தை இப்படி பேசுவார் என்று புரிந்தவன் போல அமைதி காத்தவன் குழப்பமான ஒரு மனதுடனே கர்ணன் எடுத்துக் கொடுத்த பட்டு சட்டையை போட்டுக் கொண்டான்..
தந்தை கதவை திறக்க மறுபடியும் மனைக்கு செல்ல வெளியில் வந்து தளர்வாக மேடையை நோக்கி நடந்தான்.
"ஏம்மா பொண்ணு பெயர் என்ன??"
"ஜனனி!.."
"எந்த ஜனனி?" கர்ணன் குரல் தந்தி அடித்தது.
"காண்ட்ராக்டர் கண்ணபிரான் ஐயா பேத்தி!"
பின்னால் கர்ணன் கேட்ட கேள்வியையும் அதற்கு தாய் தந்த பதிலையும் கேட்டு உறைந்து போய் அதிர்ச்சியாக திரும்பிப் பார்க்க அங்கே கர்ணனும் பேய் அறைந்தது போல் நின்றிருந்தான்..
Leave your valuable comments and likes
இதயம் ஒரு கோவில் கருத்து திரி
வாசகர்களுக்கு அன்பு வணக்கம் நெடிய முயற்சிக்குப் பிறகு என்னுடைய நாவலை உங்கள் பார்வைக்கு இந்த தளத்தில் பதிவிடுகிறேன். கதையை வாசித்து உங்கள் கருத்துக்களை கருத்து திரியில் பகிர்ந்து என்னை ஊக்கப்படுத்தவும் ஈசன் அருளோடு ஞாயிறு முதல் அத்தியாயம் பதிவிடப்படும். ஆரம்பிக்கலாமா??
aadvikapommunovels.com