அத்தியாயம் 9
இதே சமயம் மதுபாலாவோ தீவிர சிந்தனையில் ஆழ்ந்து இருந்தாள். அவள் எதிர்பார்க்காத விடயம் எல்லாம் நடந்து முடிந்து விட்டது அல்லவா? அவளும் ஆதித்துக்கு போனில் அழைத்து ஓய்ந்து போனவள், அவன் நதீகாவை தீவிரமாக தேடுவதில் மும்முரமாக இருப்பான் என்று யூகித்துக் கொண்டே பாண்டினுக்கு அழைக்க, அவரோ "என் பொண்ணை விடச் சொல்லி மிதுன் கிட்ட சொல்லுங்க மேடம்" என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டார். அவரை சமாளிக்கவே மதுபாலாவுக்கு போதும் போதும் என்று ஆகி விட, அவள் மனமோ "மிதுன் கடத்தி இருக்க வாய்ப்பே இல்லையே, அவன் பேச்சு அப்படி இருக்கவில்லையே" என்று மட்டுமே யோசித்துக் கொண்டு இருந்தது.
ஆதித்தோ ததும்ப ததும்ப நதீகாவுடன் காதலில் ஈடுபட்டுக் கொண்டே இருந்தவனுக்கு நிஜ உலகில் காலடி எடுத்து வைக்கவே பல மணி நேரங்கள் ஆனது. தனது மார்பில் தூங்கிக் கொண்டு இருந்தவளை சற்றே நகர்த்தி விட்டு எழுந்தவன் போனை எடுத்துப் பார்த்து புருவம் சுருக்கினான். ஆம் மதுபாலாவிடம் இருந்து அத்தனை மிஸ்ட் கால்கள் வந்திருக்க , மீண்டும் அவளுக்கு அழைக்க அவளோ "ஆதித் எங்க இருக்க?" என்று தான் முதலில் கேட்டாள் . அவனோ "இப்போ தான் போலீஸ் ஸ்டேஷன்ல கம்பிளைன் கொடுத்துட்டு வெளியே வரேன்மா, மிதுன் கிட்ட விசாரணை பண்ணுவாங்க,, நதியோட பிரெண்ட்ஸ் கிட்ட நானே விசாரிச்சுட்டு இருக்கேன் " என்று பொய்யை சோகமான குரலில் அள்ளி விட, "மிதுன் கடத்தி இருக்க வாய்ப்பே இல்ல ஆதித்.. அவன் கிட்ட போய் தான் வந்தேன்.. குடிச்சுட்டு கிடக்கிறான்.. நதீகாவை கடத்துனத்துக்கான அடையாளம் கூட இல்ல" என்று சொல்ல "எனக்கு பயமா இருக்கும்மா" என்று தன் பக்க நடிப்பை ஆரம்பித்து இருந்தான் ஆதித்.
அவளோ "படப்படாத ஆதித் கண்டு பிடிச்சுடலாம், நான் கமிஷனர் கிட்ட பேசுறேன்" என்றபடி போனை வைத்து விட, போனை அணைத்து விட்டு நெற்றியை நீவியபடி சிறிது நேரம் யோசித்தவன் தன்னவளை திரும்பி பார்க்க அவளோ, அவன் படுத்திய பாட்டினால் உண்டான களைப்பின் காரணமாக நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தாள். சற்றே குனிந்து அவள் இதழில் அழுந்த முத்தமிட்டு நிமிர்ந்தவனுக்கு முடிப்பதற்கு நிறையவே வேலைகள் மீதமிருந்தன. அடுத்த கணமே ஆயத்தமானவன் வாசல் கதவை பூட்டி விட்டு வெளியேறி விட்டான். இது எதுவும் தூக்கத்தில் இருந்த நதீகாவுக்கு தெரிய வாய்ப்பே இல்லை.
சிறிது நேரத்தில் கமிஷனரிடம் மதுபாலா பேசி விட்டு யோசனையாக அமர்ந்து இருக்க, அறைக்குள் மதுபாலாவின் சமையல் காரனின் ஷேர்ட் காலரை இழுத்துக் கொண்டு நுழைந்தான் ஆதித்.. மதுபாலாவோ அதிர்ச்சியுடன் எழுந்து நின்றவள் "ஆதித் வந்துட்டியா? இவனை எதுக்கு அழைச்சுட்டு வர்ற? இவன் என்ன பண்ணினான் ?" என்று பதட்டமாக கேட்க அவனோ " இவன் உங்கள கொல்ல சதி பண்ணிட்டு இருந்த வேலைக்காரன்' என்று சொல்ல அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
"வாட்? என்னையா ? இவ்ளோ செக்கியூரிட்டி மத்தியில எப்படி?" என்று சற்றே பயந்த குரலில் கேட்டாள். ஆம் எதற்கும் அஞ்சாதவளுக்கு உயிர் என்றதுமே சற்று நடுக்கம் ஏற்பட்டு இருந்தது. உடனே அவன் "நம்பிக்கையான வேலைக்காரன் விஷம் கொடுத்தாலே போதுமே. இதுக்கு எதுக்கு செக்கியூரிட்டி?" என்று கேட்க அவளோ "விஷமா?" என்று விழி விரித்து கேட்டாள். அவனும் "ஆமாம்மா, போலீஸ் இன்ஸ்பெக்டரோட போன்ல பேசிட்டே கிட்சன் பின் பக்கம் போனேன். அங்க இவன் உங்களுக்கு கலந்துட்டு இருந்த காபில இத கலக்க ட்ரை [பண்ணிட்டு இருந்தான்.. கையும் களவுமா புடிச்சுட்டேன் " என்று கையில் இருந்த விஷ பாட்டிலை நீட்ட அதனை அதிர்ச்சியுடன் வாங்கிப் பார்த்த மதுபாலாவின் கரம் அந்த வேலைக்காரனின் கன்னத்தில் இடியாக இறங்கியது.
அவனோ தடாலடியாக மதுபாலாவின் காலில் விழுந்தவன் "இந்த பாவியை மன்னிச்சுக்கோங்கம்மா, மிதுன் ஐயா தான் இத பண்ண சொன்னார்" என்று சொல்ல நெஞ்சில் கை வைத்தபடி இரு அடிகள் பின்னோக்கி நகர்ந்தாள் அவள்.
அவள் கருவில் உதித்தவன் அவளை கொல்ல துணிந்து விட்டால் அல்லவா? மிதுன் செய்ய இருந்த வேலையை நினைத்து இதழ்கள் கோபத்தில் துடிக்க, "அவனை" என்று பல்லை கடித்துக் கொண்டு சீறியவள் ஆதித் கையில் இருந்த விஷ பாட்டிலை பறித்து எடுத்துக் கொண்டே "இவனை போலீசில் கொடு" என்று சொன்னாள். ஆதித்தும் "எங்கம்மா போறீங்க? நானும் வரேன்" என்று சொல்ல , அவனை அழுத்தமாக பார்த்து இல்லை என்று தலையாட்டியவள் , பாதுகாப்பாளர்களை கூட அங்கேயே நிற்க சொல்லி விட்டு ஜீப்பில் ஏறி மிதுனின் வீட்டை நோக்கி புறப்பட்டாள். அவள் சென்றதும் கேலியாக சிரித்தபடி தன் முன்னே இருந்த வேலைக்காரனை பார்த்து ஒற்றைக் கண்ணை ஆதித் அடிக்க, அவனோ வாயெல்லாம் பல்லாக " சார், பேசுன போல காசை தந்துடுவீங்க தானே" என்று கேட்டான். ஆதித்தும் அவன் தொளில் கை போட்டுக் கொண்டே " நீ நினைக்கிறத விட அதிகமாவே தரேன்" என்றபடி சி சி டி வி யை காட்ட அங்கு போலீசார் மதுபாலாவின் அறைக்குள் வந்து கொண்டு இருக்கும் காட்சி தெரிந்தது.
அதைக் கண்ட வேலைக்காரனோ அதிர்ச்சியாகவும் பதட்டமாகவும் "இவங்க ஏன் இங்க வர்றாங்க சார்?" என்று கேட்க " மினிஸ்டரை கொல்ல ட்ரை பண்ணி இருக்க,அர்ரெஸ்ட் பண்ண வேணாமா?" என்று ஒற்றை புருவம் உயர்த்தி கேட்க அவனுக்கோ வியர்த்து வழிந்தது.
"சார், இதெல்லாம் துரோகம்" என்று ஆரம்பிக்க , அவனை அனல் தெறிக்க பார்த்தவன் "எதுடா துரோகம்? இவ்ளோ நாள் வேலை செய்த முதலாளிக்கு நீ பண்ணினது தான் துரோகம்.. காசு தரேன்னு சொன்னதுமே சரின்னு சொன்ன ஆள் நீ..உன்னை எப்படிடா நம்புறது ? இன்னொருவன் காசை நீட்டுனா எனக்கு எதிரா மாறவும் தயங்க மாட்ட..எப்போவுமே துரோகிகளுக்கு என் அகராதில மன்னிப்பே கிடையாது.. துரோகத்துக்கு துரோகம் தான் தண்டனை …. "என்றவன் உள்ளே நுழைந்த போலீசாரிடம் அவன் ஷேர்ட்டை பிடித்து கொடுத்து "இவன் தான் இன்ஸ்பெக்டர் " என்று சொன்னான்.
உடனே அந்த சமயல் காரனோ "நான் இல்ல சார், இவர் தான்" என்று ஆரம்பிக்க "இப்போ அவன் சொன்ன வாக்கு மூலம்" என்று அவன் மதுபாலவிடம் சொன்னதைபோனில் ரகசியமாக ரெக்கார்ட் பண்ணிய வீடியோவை காட்ட அவனுக்கோ அதிர்ச்சி மேல் அதிர்ச்சி..
ஒரு மினிஸ்டரை கொல்ல முயன்றவன் தப்பிக்க முடியுமா என்ன? அடுத்த கணமே "வாடா" என்று போலீசார் அவனை தரதரவென இழுத்து செல்ல அவனோ ஆதித்தை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டே இழுபட்டு செல்ல, ஆதித்தோ அவனைப் பார்த்து இதழ்களுக்குள் அடக்கப்பட்ட புன்னகையுடன் ஒற்றைக் கண்ணை அடித்தான்.
இதே சமயம் மதுபாலா நீண்ட நேரம் யோசித்துக் கொண்டே மிதுனை நாடிச் சென்று இருந்தாள்.. அவனோ அப்போது தான் தூங்கி எழுந்து இருக்க, அவன் அருகே அமர்ந்தவள் மெலிதாக புன்னகைத்தாள். அந்த புன்னகையில் வலியும் கோபமும் சேர்ந்து இருக்க, மிதுனோ "என் கிட்டயே வந்துடீங்களா?" என்று கேட்டான். அவளும் "ம்ம் , உன்னை விட்டு இருக்க முடில மிதுன்" என்று சொல்ல, "எனக்கு தெரியும் அம்மா, உங்களுக்கு பெத்த பையன விட என் மேல தான் பாசம் அதிகம்னு தெரியும்" மெலிதாக சிரித்தவன் அவளை அணைத்துக் கொள்ள அவள் முகமோ அவன் அறியாமல் இறுகி போனது.
அவனை அணைத்தபடியே "வீட்ட யாருமே இல்லையா?" என்று கேட்க அவனும் "பசங்க இப்போ தான்மா வெளியே போனாங்க,... எனக்கு ஒரு காபி போட்டு தரக் கூட யாருமே இல்ல" என்று சொல்ல அதற்காக காத்துக் கொண்டு இருந்தவள் போல "இதோ உனக்கு நான் இருக்கேன் மிதுன்" என்றபடி சமையலறையை நோக்கிச் சென்றாள் .. சிறிது நேரம் கழித்து வெளியே வந்தவள் அவனிடம் காபியை நீட்ட அவனும் அதை வாங்கி பருக ஆரம்பித்து இருந்தவன் "நான் நதீகாவை நிஜமா கடத்தலம்மா" என்றான். அவளோ அவன் தலையை வருடியபடி " தெரியும் மிதுன், சீக்கிரம் குடி" என்று சொல்ல, அவனும் அவளது விஷம் பதிந்த உள்ளத்தை அறியாமல் அந்த காபியை அருந்த ஆரம்பித்தான்.
அவளோ அவனைப் பார்த்தவாறே அவன் முன்னே இருந்த சோபாவில் அமர, " அந்த ஆதித் மேல எனக்கு சந்தேகமா இருக்கும்மா, அவன் தான் நான் தோற்க காரணமா இருப்பான்னு என் பிரெண்ட்ஸ் சொன்னாங்க.. "என்று சொல்ல அவளோ "ஆஹான் " என்றாள். அவனும் அவள் குரலில் இருந்த பேதம் அறியாமல் காபி கப்பை டீபாயில் வைத்து விட்டு "அடுத்த எம் எல் ஏ எலெக்ஷன்ல எனக்கே சீட் தாங்கம்மா .. இந்த முறை நான் ஜெயிச்சு காட்டுறேன்" என்று சொல்ல அதைக் கேட்டு இருபக்கமும் தலையாட்டி சிரித்தவள் "அதுக்கு நீ உயிரோட இருக்கணுமே மிதுன்" என்று சொல்ல அவனோ விழி விரித்து "என்னம்மா சொல்றீங்க?" என்று கேட்டான்.
அவளோ வன்ம சிரிப்புடன் "உனக்கு மட்டுமா நடிக்க தெரியும்? நான் உன்னை விட பெரிய நடிகைடா,, பெத்த பையன் உன்னையே வளர்த்த பையன்னு சொல்லி இவ்ளோ நாள் நடிச்சுட்டு இருந்து இருக்கேன்.. என் கிட்டயே உன் வேலைய காட்டுறியா?" என்று சொல்ல அவனுக்கோ நெஞ்சு எரிய ஆரம்பிக்க நெஞ்சம் பிடித்தபடி கலங்கிய கண்களுடன் 'என்னம்மா சொல்றீங்க?" என்று கேட்டான். அவளோ " இன்னும் சலிக்காம நடிக்கிற மிதுன்.. எந்த விஷத்தை எனக்கு கொடுக்க சொன்னியோ அதே விஷத்தை நான் உனக்கு தந்து இருக்கேன்.. குட் பாய்" என்று கண் சிமிட்டி சொல்ல, " நான் விஷம் கொடுக்க சொன்னேனா ? "என்று அதிர்ச்சியுடன் கேட்டான் மிதுன்.
அவனுக்கோ அவள் ஒவ்வொன்றாக சொன்ன செய்திகள் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருக்க, விஷம் உடலில் பரவ ஆரம்பித்த காரணத்தினால் மூச்செடுக்க முடியாமலும் சிரம பட ஆரம்பித்தான். அவன் கீழே விழுந்து துடிப்பதை அவள் வன்மமாக பார்த்தபடி அருகே வந்தவள் "உன்னோட அப்பன் யார்னு தெரியாம உன்னை பெத்ததே என் அரசியல் வாரிசுக்காக மட்டும் தான்..ஆனா நீ என்னையே கொல்ல துணிச்சுட்டே தானே" என்று கேட்க அவனோ நெஞ்சை பிடித்துக் கொண்டு இல்லை என்று தலையாட்டினான். அவளும் "சாகும் போதும் சூப்பரா நடிக்கிற" என்று சொல்ல அவன் கண்ணில் இருந்து கண்ணீர் வழிய வாய் விட்டே அழுதான். சொந்த அன்னையை தத்தெடுத்த அன்னையாக நினைத்தவனுக்கு இப்போது அவள் சொந்த அன்னை என்று அறிந்தும் சந்தோஷப்பட முடியாத நிலை..
அவள் விஷம் வைத்ததை நினைத்தவம் மனமோ "இந்த உண்மை தெரியாமலே இருந்து இருக்கலாமே,,, தத்தெடுத்த அம்மா தானே பாசம் குறைவா இருக்கும்னு நினைச்சு நிம்மதியா இறந்து இருப்பேனே" என்று உள்ளுக்குள் பதற, அவன் உயிர் அக்கணமே பூமியை விட்டு பிரிந்தது.
அவளோ இறந்த பிரேதத்தை உணர்ச்சியே இல்லாமல் சிறிது நேரம் பார்த்துக் கொண்டு இருந்தவள் " நீ என் வயித்துல பிறந்த பையனா இருந்தா கூட, எனக்கு விஷம் வச்ச உன்னை உயிரோட விட நான் ஒன்னும் தெய்வ தாய் இல்லடா.. " என்று சொல்லிக் கொண்டே வாசலை நோக்கி திரும்ப அங்கே மார்புக்கு குறுக்கே கையை கட்டிக் கொண்டு நின்று இருந்தான் ஆதித்..
அப்போது தான் உள்ளே நுழைந்தவனுக்கு அவள் பேசியது காதில் விழ , அவன் கண்கள் இறந்து கிடந்த மிதுனை பார்த்துக் பிறகு, கோபத்தில் சிவந்து இருக்க, மதுபாலாவை பார்த்துக் கொண்டே அவளைத் தாண்டி வந்தவன் மிதுனின் திறந்து இருந்த கண்ணை மூடி விட்டு அங்கிருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டுக் கொண்டே அமர்ந்தபடி , அவன் முன்னால் சற்றே பயத்துடன் நின்று இருந்த மதுபாலாவை பார்த்தான்.
"நீ எப்போ ஆதித் வந்த?"என்று பதட்டமாக கேட்டவளுக்கோ மிதுன் தன் பையன் என்று தான் வீர வசனம் பேசியது அவனுக்கு விளங்கி இருக்க கூடாது என்று மனம் வேண்டியது.
ஆதித்தோ அவளை முன்னே இருந்த சோபாவில் இருக்கும் படி சைகை செய்தவன் "ஜஸ்ட் நவ் மதுபாலா" என்று பெயர் அழைத்து விளிக்க அவளோ சோபாவில் அமர போனவள் அவனை அதிர்ந்து பார்த்தாள். அவள் பயத்தை பார்த்து மெலிதாக சிரித்தபடி அவளை ஆழ்ந்து பார்த்தவன் "நான் கூட உங்கள" என்று ஆரம்பித்து சற்றே நிறுத்தி "சாரி உன்னை, கேவலமானவன்னு நினச்சேன்..நீ அதுக்கும் கீழ மட்டமான இருப்பேன்னு நான் நினைச்சே பார்க்கல, பெத்த பையனை விஷம் வச்சு கொன்ன தெய்வ தாய்... அவன் உன் பையன்னு எனக்கு கூட இப்போ தான் தெரியும்.. உனக்கு திட்ட கூட அகராதில அசிங்கமான வார்த்தை இல்ல" என்று சொல்ல அவளோ "ஆதித்" என்று சீறி விட்டாள். "பச் பச்.. ஆதித் கரிகாலன்...அந்த பின்னால இருக்கிற பேரோட பவர் தெரியுமா உனக்கு...அப்படி பட்டவரோட மகன் உன் பக்கம் வருவேன்னு நினைச்ச டைம் நீ ஸ்லிப் ஆகிட்ட" என்று சொல்ல அவளோ அவனை அதிர்ந்து பார்த்தாள்.
மேலும் தொடர்ந்தவன் "யெஸ் , என் உடம்புல உன் ரத்தம் ஓடுது தான்.. அத நினைக்கும் போதே எனக்கு அருவருப்பா இருக்கு.. பெயருக்கு தான் நீ அம்மா, என்னோட உண்மையான அம்மா அவங்க தான்... நீ பெத்துக்காக அம்மான்னு சொல்லிட்டு பின்னால ஓடி வர்றதுக்கு நான் ஒன்னும் மிதுன் இல்ல. ... ஆதித்!!!... கரிகாலன் மாதவியோட மூத்த பையன்" என்று அவன் உச்சரித்த தொனியில் அந்த இடமே அதிர்ந்தது.
அவளுக்கோ கோபமும் எரிச்சலும் ஒருங்கே உண்டாக "ஆதித்" என்று சீறினாள் ஆத்திரத்துடன். அதைக் கேட்டு கை நீட்டி அவளைத் தடுத்தவன் " வைப்ரேஷன் அதிகமாவே இருக்கு மதுபாலா.. பக்கதுல தானே இருக்கேன்..பொதுவாவே பேசலாமே... ஆனா ஒன்னு ஒரு விஷயத்துக்கு உனக்கு நன்றி சொல்லியே ஆகணும்... உன் ரத்தம் என் உடம்புல ஓடுறதால தான்.. சூழ்ச்சின்னா என்ன துரோகம்ன்னா என்னன்னு எனக்கு தெரியுது..இல்லன்னா என் தம்பி போலவே ரொம்ப நல்லவனா இருந்து இருப்பேன்... உன்னை பழி வாங்க எல்லாமே யோசிச்சு இருக்க மாட்டேன்.. இப்போ சொல்றேன் கேட்டுக்கோ துரோகத்துக்கு எப்போவுமே துரோகம் தான் தண்டனை... என் அப்பாவுக்கு நீ பண்ணின துரோகத்துக்கு தண்டனை அவர் பையன் நான் கொடுக்க தான் உன்னை தேடி வந்தேன்.. ஆனா இதுல எனக்கு ஒரே கஷ்டமான விஷயம் மிதுன் இறந்தது தான்.. கொஞ்ச நேரம் முன்னாடி வந்து இருந்தா அவனை நானே காப்பாத்தி இருப்பேன் ..அவன் அடிப்படையில ரொம்ப நல்லவன்.,தாயன்புக்கு ரொம்ப ஏங்கினவன் ... அவன் தடம் மாறி போக காரணமே நீ தான்..உன்னால அவன் செய்த பாவங்களுக்கு தண்டனையா இந்த இறப்பு இருக்கட்டும்.. " என்று சொன்னவன் கண்கள் ஒரு கணம் இறந்து கிடந்த மிதுனை பரிதாபமாக பார்த்து மீண்டது..
இதே சமயம் மதுபாலாவோ தீவிர சிந்தனையில் ஆழ்ந்து இருந்தாள். அவள் எதிர்பார்க்காத விடயம் எல்லாம் நடந்து முடிந்து விட்டது அல்லவா? அவளும் ஆதித்துக்கு போனில் அழைத்து ஓய்ந்து போனவள், அவன் நதீகாவை தீவிரமாக தேடுவதில் மும்முரமாக இருப்பான் என்று யூகித்துக் கொண்டே பாண்டினுக்கு அழைக்க, அவரோ "என் பொண்ணை விடச் சொல்லி மிதுன் கிட்ட சொல்லுங்க மேடம்" என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டார். அவரை சமாளிக்கவே மதுபாலாவுக்கு போதும் போதும் என்று ஆகி விட, அவள் மனமோ "மிதுன் கடத்தி இருக்க வாய்ப்பே இல்லையே, அவன் பேச்சு அப்படி இருக்கவில்லையே" என்று மட்டுமே யோசித்துக் கொண்டு இருந்தது.
ஆதித்தோ ததும்ப ததும்ப நதீகாவுடன் காதலில் ஈடுபட்டுக் கொண்டே இருந்தவனுக்கு நிஜ உலகில் காலடி எடுத்து வைக்கவே பல மணி நேரங்கள் ஆனது. தனது மார்பில் தூங்கிக் கொண்டு இருந்தவளை சற்றே நகர்த்தி விட்டு எழுந்தவன் போனை எடுத்துப் பார்த்து புருவம் சுருக்கினான். ஆம் மதுபாலாவிடம் இருந்து அத்தனை மிஸ்ட் கால்கள் வந்திருக்க , மீண்டும் அவளுக்கு அழைக்க அவளோ "ஆதித் எங்க இருக்க?" என்று தான் முதலில் கேட்டாள் . அவனோ "இப்போ தான் போலீஸ் ஸ்டேஷன்ல கம்பிளைன் கொடுத்துட்டு வெளியே வரேன்மா, மிதுன் கிட்ட விசாரணை பண்ணுவாங்க,, நதியோட பிரெண்ட்ஸ் கிட்ட நானே விசாரிச்சுட்டு இருக்கேன் " என்று பொய்யை சோகமான குரலில் அள்ளி விட, "மிதுன் கடத்தி இருக்க வாய்ப்பே இல்ல ஆதித்.. அவன் கிட்ட போய் தான் வந்தேன்.. குடிச்சுட்டு கிடக்கிறான்.. நதீகாவை கடத்துனத்துக்கான அடையாளம் கூட இல்ல" என்று சொல்ல "எனக்கு பயமா இருக்கும்மா" என்று தன் பக்க நடிப்பை ஆரம்பித்து இருந்தான் ஆதித்.
அவளோ "படப்படாத ஆதித் கண்டு பிடிச்சுடலாம், நான் கமிஷனர் கிட்ட பேசுறேன்" என்றபடி போனை வைத்து விட, போனை அணைத்து விட்டு நெற்றியை நீவியபடி சிறிது நேரம் யோசித்தவன் தன்னவளை திரும்பி பார்க்க அவளோ, அவன் படுத்திய பாட்டினால் உண்டான களைப்பின் காரணமாக நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தாள். சற்றே குனிந்து அவள் இதழில் அழுந்த முத்தமிட்டு நிமிர்ந்தவனுக்கு முடிப்பதற்கு நிறையவே வேலைகள் மீதமிருந்தன. அடுத்த கணமே ஆயத்தமானவன் வாசல் கதவை பூட்டி விட்டு வெளியேறி விட்டான். இது எதுவும் தூக்கத்தில் இருந்த நதீகாவுக்கு தெரிய வாய்ப்பே இல்லை.
சிறிது நேரத்தில் கமிஷனரிடம் மதுபாலா பேசி விட்டு யோசனையாக அமர்ந்து இருக்க, அறைக்குள் மதுபாலாவின் சமையல் காரனின் ஷேர்ட் காலரை இழுத்துக் கொண்டு நுழைந்தான் ஆதித்.. மதுபாலாவோ அதிர்ச்சியுடன் எழுந்து நின்றவள் "ஆதித் வந்துட்டியா? இவனை எதுக்கு அழைச்சுட்டு வர்ற? இவன் என்ன பண்ணினான் ?" என்று பதட்டமாக கேட்க அவனோ " இவன் உங்கள கொல்ல சதி பண்ணிட்டு இருந்த வேலைக்காரன்' என்று சொல்ல அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
"வாட்? என்னையா ? இவ்ளோ செக்கியூரிட்டி மத்தியில எப்படி?" என்று சற்றே பயந்த குரலில் கேட்டாள். ஆம் எதற்கும் அஞ்சாதவளுக்கு உயிர் என்றதுமே சற்று நடுக்கம் ஏற்பட்டு இருந்தது. உடனே அவன் "நம்பிக்கையான வேலைக்காரன் விஷம் கொடுத்தாலே போதுமே. இதுக்கு எதுக்கு செக்கியூரிட்டி?" என்று கேட்க அவளோ "விஷமா?" என்று விழி விரித்து கேட்டாள். அவனும் "ஆமாம்மா, போலீஸ் இன்ஸ்பெக்டரோட போன்ல பேசிட்டே கிட்சன் பின் பக்கம் போனேன். அங்க இவன் உங்களுக்கு கலந்துட்டு இருந்த காபில இத கலக்க ட்ரை [பண்ணிட்டு இருந்தான்.. கையும் களவுமா புடிச்சுட்டேன் " என்று கையில் இருந்த விஷ பாட்டிலை நீட்ட அதனை அதிர்ச்சியுடன் வாங்கிப் பார்த்த மதுபாலாவின் கரம் அந்த வேலைக்காரனின் கன்னத்தில் இடியாக இறங்கியது.
அவனோ தடாலடியாக மதுபாலாவின் காலில் விழுந்தவன் "இந்த பாவியை மன்னிச்சுக்கோங்கம்மா, மிதுன் ஐயா தான் இத பண்ண சொன்னார்" என்று சொல்ல நெஞ்சில் கை வைத்தபடி இரு அடிகள் பின்னோக்கி நகர்ந்தாள் அவள்.
அவள் கருவில் உதித்தவன் அவளை கொல்ல துணிந்து விட்டால் அல்லவா? மிதுன் செய்ய இருந்த வேலையை நினைத்து இதழ்கள் கோபத்தில் துடிக்க, "அவனை" என்று பல்லை கடித்துக் கொண்டு சீறியவள் ஆதித் கையில் இருந்த விஷ பாட்டிலை பறித்து எடுத்துக் கொண்டே "இவனை போலீசில் கொடு" என்று சொன்னாள். ஆதித்தும் "எங்கம்மா போறீங்க? நானும் வரேன்" என்று சொல்ல , அவனை அழுத்தமாக பார்த்து இல்லை என்று தலையாட்டியவள் , பாதுகாப்பாளர்களை கூட அங்கேயே நிற்க சொல்லி விட்டு ஜீப்பில் ஏறி மிதுனின் வீட்டை நோக்கி புறப்பட்டாள். அவள் சென்றதும் கேலியாக சிரித்தபடி தன் முன்னே இருந்த வேலைக்காரனை பார்த்து ஒற்றைக் கண்ணை ஆதித் அடிக்க, அவனோ வாயெல்லாம் பல்லாக " சார், பேசுன போல காசை தந்துடுவீங்க தானே" என்று கேட்டான். ஆதித்தும் அவன் தொளில் கை போட்டுக் கொண்டே " நீ நினைக்கிறத விட அதிகமாவே தரேன்" என்றபடி சி சி டி வி யை காட்ட அங்கு போலீசார் மதுபாலாவின் அறைக்குள் வந்து கொண்டு இருக்கும் காட்சி தெரிந்தது.
அதைக் கண்ட வேலைக்காரனோ அதிர்ச்சியாகவும் பதட்டமாகவும் "இவங்க ஏன் இங்க வர்றாங்க சார்?" என்று கேட்க " மினிஸ்டரை கொல்ல ட்ரை பண்ணி இருக்க,அர்ரெஸ்ட் பண்ண வேணாமா?" என்று ஒற்றை புருவம் உயர்த்தி கேட்க அவனுக்கோ வியர்த்து வழிந்தது.
"சார், இதெல்லாம் துரோகம்" என்று ஆரம்பிக்க , அவனை அனல் தெறிக்க பார்த்தவன் "எதுடா துரோகம்? இவ்ளோ நாள் வேலை செய்த முதலாளிக்கு நீ பண்ணினது தான் துரோகம்.. காசு தரேன்னு சொன்னதுமே சரின்னு சொன்ன ஆள் நீ..உன்னை எப்படிடா நம்புறது ? இன்னொருவன் காசை நீட்டுனா எனக்கு எதிரா மாறவும் தயங்க மாட்ட..எப்போவுமே துரோகிகளுக்கு என் அகராதில மன்னிப்பே கிடையாது.. துரோகத்துக்கு துரோகம் தான் தண்டனை …. "என்றவன் உள்ளே நுழைந்த போலீசாரிடம் அவன் ஷேர்ட்டை பிடித்து கொடுத்து "இவன் தான் இன்ஸ்பெக்டர் " என்று சொன்னான்.
உடனே அந்த சமயல் காரனோ "நான் இல்ல சார், இவர் தான்" என்று ஆரம்பிக்க "இப்போ அவன் சொன்ன வாக்கு மூலம்" என்று அவன் மதுபாலவிடம் சொன்னதைபோனில் ரகசியமாக ரெக்கார்ட் பண்ணிய வீடியோவை காட்ட அவனுக்கோ அதிர்ச்சி மேல் அதிர்ச்சி..
ஒரு மினிஸ்டரை கொல்ல முயன்றவன் தப்பிக்க முடியுமா என்ன? அடுத்த கணமே "வாடா" என்று போலீசார் அவனை தரதரவென இழுத்து செல்ல அவனோ ஆதித்தை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டே இழுபட்டு செல்ல, ஆதித்தோ அவனைப் பார்த்து இதழ்களுக்குள் அடக்கப்பட்ட புன்னகையுடன் ஒற்றைக் கண்ணை அடித்தான்.
இதே சமயம் மதுபாலா நீண்ட நேரம் யோசித்துக் கொண்டே மிதுனை நாடிச் சென்று இருந்தாள்.. அவனோ அப்போது தான் தூங்கி எழுந்து இருக்க, அவன் அருகே அமர்ந்தவள் மெலிதாக புன்னகைத்தாள். அந்த புன்னகையில் வலியும் கோபமும் சேர்ந்து இருக்க, மிதுனோ "என் கிட்டயே வந்துடீங்களா?" என்று கேட்டான். அவளும் "ம்ம் , உன்னை விட்டு இருக்க முடில மிதுன்" என்று சொல்ல, "எனக்கு தெரியும் அம்மா, உங்களுக்கு பெத்த பையன விட என் மேல தான் பாசம் அதிகம்னு தெரியும்" மெலிதாக சிரித்தவன் அவளை அணைத்துக் கொள்ள அவள் முகமோ அவன் அறியாமல் இறுகி போனது.
அவனை அணைத்தபடியே "வீட்ட யாருமே இல்லையா?" என்று கேட்க அவனும் "பசங்க இப்போ தான்மா வெளியே போனாங்க,... எனக்கு ஒரு காபி போட்டு தரக் கூட யாருமே இல்ல" என்று சொல்ல அதற்காக காத்துக் கொண்டு இருந்தவள் போல "இதோ உனக்கு நான் இருக்கேன் மிதுன்" என்றபடி சமையலறையை நோக்கிச் சென்றாள் .. சிறிது நேரம் கழித்து வெளியே வந்தவள் அவனிடம் காபியை நீட்ட அவனும் அதை வாங்கி பருக ஆரம்பித்து இருந்தவன் "நான் நதீகாவை நிஜமா கடத்தலம்மா" என்றான். அவளோ அவன் தலையை வருடியபடி " தெரியும் மிதுன், சீக்கிரம் குடி" என்று சொல்ல, அவனும் அவளது விஷம் பதிந்த உள்ளத்தை அறியாமல் அந்த காபியை அருந்த ஆரம்பித்தான்.
அவளோ அவனைப் பார்த்தவாறே அவன் முன்னே இருந்த சோபாவில் அமர, " அந்த ஆதித் மேல எனக்கு சந்தேகமா இருக்கும்மா, அவன் தான் நான் தோற்க காரணமா இருப்பான்னு என் பிரெண்ட்ஸ் சொன்னாங்க.. "என்று சொல்ல அவளோ "ஆஹான் " என்றாள். அவனும் அவள் குரலில் இருந்த பேதம் அறியாமல் காபி கப்பை டீபாயில் வைத்து விட்டு "அடுத்த எம் எல் ஏ எலெக்ஷன்ல எனக்கே சீட் தாங்கம்மா .. இந்த முறை நான் ஜெயிச்சு காட்டுறேன்" என்று சொல்ல அதைக் கேட்டு இருபக்கமும் தலையாட்டி சிரித்தவள் "அதுக்கு நீ உயிரோட இருக்கணுமே மிதுன்" என்று சொல்ல அவனோ விழி விரித்து "என்னம்மா சொல்றீங்க?" என்று கேட்டான்.
அவளோ வன்ம சிரிப்புடன் "உனக்கு மட்டுமா நடிக்க தெரியும்? நான் உன்னை விட பெரிய நடிகைடா,, பெத்த பையன் உன்னையே வளர்த்த பையன்னு சொல்லி இவ்ளோ நாள் நடிச்சுட்டு இருந்து இருக்கேன்.. என் கிட்டயே உன் வேலைய காட்டுறியா?" என்று சொல்ல அவனுக்கோ நெஞ்சு எரிய ஆரம்பிக்க நெஞ்சம் பிடித்தபடி கலங்கிய கண்களுடன் 'என்னம்மா சொல்றீங்க?" என்று கேட்டான். அவளோ " இன்னும் சலிக்காம நடிக்கிற மிதுன்.. எந்த விஷத்தை எனக்கு கொடுக்க சொன்னியோ அதே விஷத்தை நான் உனக்கு தந்து இருக்கேன்.. குட் பாய்" என்று கண் சிமிட்டி சொல்ல, " நான் விஷம் கொடுக்க சொன்னேனா ? "என்று அதிர்ச்சியுடன் கேட்டான் மிதுன்.
அவனுக்கோ அவள் ஒவ்வொன்றாக சொன்ன செய்திகள் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருக்க, விஷம் உடலில் பரவ ஆரம்பித்த காரணத்தினால் மூச்செடுக்க முடியாமலும் சிரம பட ஆரம்பித்தான். அவன் கீழே விழுந்து துடிப்பதை அவள் வன்மமாக பார்த்தபடி அருகே வந்தவள் "உன்னோட அப்பன் யார்னு தெரியாம உன்னை பெத்ததே என் அரசியல் வாரிசுக்காக மட்டும் தான்..ஆனா நீ என்னையே கொல்ல துணிச்சுட்டே தானே" என்று கேட்க அவனோ நெஞ்சை பிடித்துக் கொண்டு இல்லை என்று தலையாட்டினான். அவளும் "சாகும் போதும் சூப்பரா நடிக்கிற" என்று சொல்ல அவன் கண்ணில் இருந்து கண்ணீர் வழிய வாய் விட்டே அழுதான். சொந்த அன்னையை தத்தெடுத்த அன்னையாக நினைத்தவனுக்கு இப்போது அவள் சொந்த அன்னை என்று அறிந்தும் சந்தோஷப்பட முடியாத நிலை..
அவள் விஷம் வைத்ததை நினைத்தவம் மனமோ "இந்த உண்மை தெரியாமலே இருந்து இருக்கலாமே,,, தத்தெடுத்த அம்மா தானே பாசம் குறைவா இருக்கும்னு நினைச்சு நிம்மதியா இறந்து இருப்பேனே" என்று உள்ளுக்குள் பதற, அவன் உயிர் அக்கணமே பூமியை விட்டு பிரிந்தது.
அவளோ இறந்த பிரேதத்தை உணர்ச்சியே இல்லாமல் சிறிது நேரம் பார்த்துக் கொண்டு இருந்தவள் " நீ என் வயித்துல பிறந்த பையனா இருந்தா கூட, எனக்கு விஷம் வச்ச உன்னை உயிரோட விட நான் ஒன்னும் தெய்வ தாய் இல்லடா.. " என்று சொல்லிக் கொண்டே வாசலை நோக்கி திரும்ப அங்கே மார்புக்கு குறுக்கே கையை கட்டிக் கொண்டு நின்று இருந்தான் ஆதித்..
அப்போது தான் உள்ளே நுழைந்தவனுக்கு அவள் பேசியது காதில் விழ , அவன் கண்கள் இறந்து கிடந்த மிதுனை பார்த்துக் பிறகு, கோபத்தில் சிவந்து இருக்க, மதுபாலாவை பார்த்துக் கொண்டே அவளைத் தாண்டி வந்தவன் மிதுனின் திறந்து இருந்த கண்ணை மூடி விட்டு அங்கிருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டுக் கொண்டே அமர்ந்தபடி , அவன் முன்னால் சற்றே பயத்துடன் நின்று இருந்த மதுபாலாவை பார்த்தான்.
"நீ எப்போ ஆதித் வந்த?"என்று பதட்டமாக கேட்டவளுக்கோ மிதுன் தன் பையன் என்று தான் வீர வசனம் பேசியது அவனுக்கு விளங்கி இருக்க கூடாது என்று மனம் வேண்டியது.
ஆதித்தோ அவளை முன்னே இருந்த சோபாவில் இருக்கும் படி சைகை செய்தவன் "ஜஸ்ட் நவ் மதுபாலா" என்று பெயர் அழைத்து விளிக்க அவளோ சோபாவில் அமர போனவள் அவனை அதிர்ந்து பார்த்தாள். அவள் பயத்தை பார்த்து மெலிதாக சிரித்தபடி அவளை ஆழ்ந்து பார்த்தவன் "நான் கூட உங்கள" என்று ஆரம்பித்து சற்றே நிறுத்தி "சாரி உன்னை, கேவலமானவன்னு நினச்சேன்..நீ அதுக்கும் கீழ மட்டமான இருப்பேன்னு நான் நினைச்சே பார்க்கல, பெத்த பையனை விஷம் வச்சு கொன்ன தெய்வ தாய்... அவன் உன் பையன்னு எனக்கு கூட இப்போ தான் தெரியும்.. உனக்கு திட்ட கூட அகராதில அசிங்கமான வார்த்தை இல்ல" என்று சொல்ல அவளோ "ஆதித்" என்று சீறி விட்டாள். "பச் பச்.. ஆதித் கரிகாலன்...அந்த பின்னால இருக்கிற பேரோட பவர் தெரியுமா உனக்கு...அப்படி பட்டவரோட மகன் உன் பக்கம் வருவேன்னு நினைச்ச டைம் நீ ஸ்லிப் ஆகிட்ட" என்று சொல்ல அவளோ அவனை அதிர்ந்து பார்த்தாள்.
மேலும் தொடர்ந்தவன் "யெஸ் , என் உடம்புல உன் ரத்தம் ஓடுது தான்.. அத நினைக்கும் போதே எனக்கு அருவருப்பா இருக்கு.. பெயருக்கு தான் நீ அம்மா, என்னோட உண்மையான அம்மா அவங்க தான்... நீ பெத்துக்காக அம்மான்னு சொல்லிட்டு பின்னால ஓடி வர்றதுக்கு நான் ஒன்னும் மிதுன் இல்ல. ... ஆதித்!!!... கரிகாலன் மாதவியோட மூத்த பையன்" என்று அவன் உச்சரித்த தொனியில் அந்த இடமே அதிர்ந்தது.
அவளுக்கோ கோபமும் எரிச்சலும் ஒருங்கே உண்டாக "ஆதித்" என்று சீறினாள் ஆத்திரத்துடன். அதைக் கேட்டு கை நீட்டி அவளைத் தடுத்தவன் " வைப்ரேஷன் அதிகமாவே இருக்கு மதுபாலா.. பக்கதுல தானே இருக்கேன்..பொதுவாவே பேசலாமே... ஆனா ஒன்னு ஒரு விஷயத்துக்கு உனக்கு நன்றி சொல்லியே ஆகணும்... உன் ரத்தம் என் உடம்புல ஓடுறதால தான்.. சூழ்ச்சின்னா என்ன துரோகம்ன்னா என்னன்னு எனக்கு தெரியுது..இல்லன்னா என் தம்பி போலவே ரொம்ப நல்லவனா இருந்து இருப்பேன்... உன்னை பழி வாங்க எல்லாமே யோசிச்சு இருக்க மாட்டேன்.. இப்போ சொல்றேன் கேட்டுக்கோ துரோகத்துக்கு எப்போவுமே துரோகம் தான் தண்டனை... என் அப்பாவுக்கு நீ பண்ணின துரோகத்துக்கு தண்டனை அவர் பையன் நான் கொடுக்க தான் உன்னை தேடி வந்தேன்.. ஆனா இதுல எனக்கு ஒரே கஷ்டமான விஷயம் மிதுன் இறந்தது தான்.. கொஞ்ச நேரம் முன்னாடி வந்து இருந்தா அவனை நானே காப்பாத்தி இருப்பேன் ..அவன் அடிப்படையில ரொம்ப நல்லவன்.,தாயன்புக்கு ரொம்ப ஏங்கினவன் ... அவன் தடம் மாறி போக காரணமே நீ தான்..உன்னால அவன் செய்த பாவங்களுக்கு தண்டனையா இந்த இறப்பு இருக்கட்டும்.. " என்று சொன்னவன் கண்கள் ஒரு கணம் இறந்து கிடந்த மிதுனை பரிதாபமாக பார்த்து மீண்டது..