ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 8

pommu

Administrator
Staff member

அத்தியாயம் 8

அடுத்த நாள் காலையில் தயாராகும் கணம், "தாலி எல்லாம் போட்டுட்டு வா, அது தான் எல்லாருக்கும் தெரிஞ்சுடுச்சே" என்றான்.

"நான் என்ன சொன்னேன்? நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?" என்று அவள் கடுப்பாகிக் கொண்டே தாலியை அணிய, இதழ்களுக்குள் சிரித்துக் கொண்டே, அவள் கன்னத்தில் கிள்ளியவன், "சோ கியூட்" என்றபடி வெளியேற, அவளுக்கும் இப்போது இதழ்களுக்குள் மெல்லிய சிரிப்பு வந்தது...

அன்று எல்லாருக்கும் ராவந்த் ட்ரீட்டும் வைத்தான்.

இருவரையும் வாழ்த்தி இருந்தார்கள் அலுவலகத்தினர்.

நிறைய பேருக்கு வயித்தெரிச்சல் தான்.

ஆனால் ராவந்த், அவ்வளவு உறுதியாக இருக்கும் போது, அவனை மீறி கேலி கிண்டல் பண்ண முடியாது என்பதால் மௌனமாகியும் விட்டார்கள்...

இவர்கள் நிலை இப்படி இருக்க, அஸ்வந்த்துக்கு மனம் எல்லாம் ஒரு மாதிரி இருந்தது...

ஜீவிதா கண்டு கொள்வதே இல்லையே...

கல்லூரியிலும் பேச வாய்ப்பு கிடைப்பது இல்லை...

வீட்டில் வைத்தும் பேச முடியவில்லை என்று அவன் தடுமாற, லட்டு போல வாய்ப்பும் வந்து சேர்ந்தது...

அன்று கல்லூரி நேரத்துக்கே முடிந்து, பன்னிரண்டு மணிக்கு ஜீவிதாவும் அஸ்வந்த்தும் வந்து சேர்ந்தார்கள்.

ராவந்த் மற்றும் மாதுரி வேலைக்கு சென்று இருக்க, வழக்கமாக வீட்டில் இருக்கும் திலகவதியும் ராமசாமியும் கூட இல்லை...

அஸ்வந்த் தனது கையில் இருந்த திறப்பினால் கதவை திறக்க, "எங்க அத்தை?" என்றபடி உள்ளே வந்தாள் ஜீவிதா.

"ரெண்டு பேரும் கல்யாணம் ஒன்னுக்கு போயிருக்காங்க, ஈவினிங் தான் வருவாங்க" என்று சொல்ல, அவளும், "ஓஹ்" என்று அவனை பார்க்காமல் சொல்லிக் கொண்டே அறைக்குள் சென்றாள்.

குளித்து விட்டு வந்தவனோ, "இன்னைக்கு சமாதான பேச்சுவார்த்தைக்கு போக வேண்டியது தான்" என்று நினைத்துக் கொண்டே, அவள் அறைக் கதவை தட்டினான்.

அவளும் அப்போது தான் குளித்து விட்டு சுடிதார் ஒன்றை அணிந்து கொண்டே, 'இப்போ எதுக்கு இவன் ரூம் கதவை தட்டுறான்?' என்று நினைத்தபடி கதவை திறந்தாள்.

"பேசணும் டி" என்றான்.

அவனை முறைத்தவள், "பேச என்ன இருக்கு?" என்று கேட்டபடி கதவை மூட முயல, "பேசணும்னு சொல்றேன் ல" என்றபடி சட்டென உள்ளே வந்து விட்டான்.

"அஸ்வந்த் வெளிய போங்க" என்று சீறினாள்.

"என்னடி ரொம்ப பண்ணிட்டு இருக்க? இனியும் என்னை கல்யாணம் பண்ணுறதுல உனக்கென்ன பிரச்சனை?" என்று கேட்டான்.

"என்னது கல்யாணமா? வருஷத்துக்கு ஒரு பொண்ணு கூட இருப்பீங்க, இதுல நானும் வேணுமா?" என்று அழுகையுடன் கேட்டாள்.

அடக்கி வைத்து இருந்த அழுகை எல்லாமே வெளியில் வந்தது...

"ஐயோ நான் யாரையும் லவ் பண்ணல, உன்னை கடுப்பேத்த தான் சுத்தி திரிஞ்சேன், அப்போவும் நீ என்னை கண்டுக்கவே இல்லை" என்றான்.

"நான் நம்ப மாட்டேன்" என்றாள்.

"வேணும்னா என் ஃபோனை செக் பண்ணு, யார் கூடவும் நான் தப்பா பேசுனது கூட இல்லை" என்று சொல்லி அலைபேசியை நீட்ட, அவனை முறைத்துக் கொண்டே, எல்லாமே பார்த்தாள்.

அவன் பழகிய பெண்களுடன் தவறாக பேசிய போல இல்லை...

"அப்போ ஏன் காலேஜ் ல நீங்க லவ் பண்ணுறதா எல்லாரும் சொன்னாங்க?" என்று கேட்க, "ஒரு பொண்ணோட உட்கார்ந்து சாப்பிட்டாலே அப்படி சொல்லிடுறாங்க, நான் என்னடி பண்ணுறது? நான் லவ் பண்ணுனது உன்னை மட்டும் தான்" என்று சொல்லி, அவள் தலையில் கையை வைத்து சத்தியம் செய்தான்.

அவளுக்கு அதுவரை இருந்த ஏதோ ஒரு அழுத்தம் குறைய, "இல்ல நான் நம்ப மாட்டேன்" என்றாள்.

"நம்புடி" என்று சொல்லிக் கொண்டே, அவள் முகத்தை தாங்கி இதழ்களில் இதழ்களை பதித்தான்.

அவள் விழிகள் அதிர்ந்து விரிய, சட்டென அவனில் இருந்து விலகிக் கொண்டே, "அஸ்வந்த் என்ன பண்ணுறீங்க?" என்று சீற, "கிஸ் தானே" என்றான்.

"அதுக்குன்னு இப்படியா?" என்று முடிக்க முதல், மீண்டும் அவள் இதழ்கள் அவன் வசமாயின...

ஆனால் இம்முறை ஆழமாகவும் அழுத்தமாகவும்...

முதலில் திமிறினாள், பின் அடங்கினாள், பின்னர் முனகினாள்.

இருவருமே உணர்வின் பிடியில்...

இளமை உணர்வுகள் தாறு மாறாக உடைப்பெடுத்துக் கொண்டன...

மூடிய அறை வேறு, வீட்டில் யாருமே இல்லை... கேட்கவும் வேண்டுமா...

ஆம் அடுத்த கட்டத்துக்கு சென்று விட்டார்கள்...

அவளும் தடுக்கவில்லை, அவனும் முன்னேறி விட்டான்...

அவளை மொத்தமாக கொள்ளையிட்டு விலகி படுத்ததும் தான், அவளுக்கு நிதானமே வந்தது...

"அஸ்வந்த் என்ன பண்ணி இருக்கீங்க" என்று கேட்டவள் முகத்தை மூடி அழ ஆரம்பிக்க, அவனுக்கும் அதே உணர்வு தான்.

உணர்ச்சிவசப்பட்டு எல்லை மீறி விட்டான்.

"சாரி சாரி, உண்மையாவே, நான் இந்தளவு எதிர்பார்க்கல, கிஸ் மட்டும் தான் நினச்சேன், எப்படியும் நீ தான் டி என் பொண்டாட்டி, ஃப்ரீயா விடு" என்று சொல்ல, அவனை அழுகையுடன் முறைத்தவள், "ஃப்ரீயா விடவா?. ப்ரெக்னன்ட் ஆக சான்ஸ் இருக்கு அஸ்வந்த்" என்றாள்.

"என்னடி சொல்ற?" என்று அவன் பதற, "ப்ரெக்னன்ட் ஆனா இருக்கு உங்களுக்கு" என்று திட்டிக் கொண்டே உடைகளை அணிந்தாள்.

"சாரி" என்றான் மீண்டும்...

"பேசாதீங்க" என்று திட்டி விட்டு, "பசிக்குது வேற" என்று புலம்பியபடி வெளியேற, "ப்ரெக்னன்ட் ஆயிட்டா என்ன பண்ணுறது? நமக்கு காலேஜ் முடிய வேற இன்னும் மூணு மாசம் இருக்கு, உடனே கல்யாணம் கட்டி தரவும் மாட்டாங்க, ப்ரெக்னன்ட் ஆனது வீட்டுக்கு தெரிஞ்சா, அப்பா செருப்பை கழட்டி அடிப்பார்" என்று புலம்பிக் கொண்டே வெளியில் வந்தான்...

அவளோ சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள்.

அவனுக்கும் சாப்பாடு போட்டு வைத்து இருந்தாள்.

அவள் முன்னே அமர்ந்து சாப்பிட்டபடியே, "ப்ரெக்னன்ட் ஆக மாட்ட தானே" என்று கேட்க, "எனக்கென்ன தெரியும்" என்று திட்டு தான் விழுந்தது...

"சாரி டி" என்றான்.

"சரி சாப்பிடுங்க, ப்ரெக்னன்ட் ஆன அப்புறம் யோசிக்கலாம்" என்று சொல்லிக் கொண்டே சாப்பிட்டாள்.

இருவருக்குமே இந்த உணர்வை அனுபவிக்க முடியவில்லை...

கர்ப்பம் ஆகி விட்டால் என்ன செய்வது என்கின்ற பதட்டம் இருந்தது...

இரு வாரங்களில் வர இருக்கும் மாதவிடாய்க்காக காத்துக் கொண்டு இருந்தாள்.

ஆனால் அவளது துரதிஷ்டம் மாதவிடாய் வரவில்லை...

ஆம் கர்ப்பமாகி விட்டாள்.

காலையில் ரகசியமாக ப்ரெக்னன்சி ஸ்டிக் வைத்து செக் செய்தவளுக்கு மயக்கம் வராத குறை தான்.

அன்று ஞாயிற்றுக் கிழமை...

எல்லாருமே வீட்டில் தான் இருந்தார்கள்...

நேரத்தைப் பார்த்தாள்.

"அஸ்வந்த் மேல தான் இருப்பான், இத சொல்லணும், என்ன பண்ணி வச்சு இருக்கான்" என்று வாய்க்குள் திட்டிக் கொண்டே அவனை தேடி மாடியேறி சென்றாள்.

மொட்டை மாடியில் நின்ற இடத்தில் நின்று ஓடிக் கொண்டு இருந்தான் அஸ்வந்த்...

மேல ஏறி வந்த ஜீவிதாவோ, "அஸ்" என்றாள்.

வழக்கம் போல அவனும், "என்னடி பீரியட் வந்திச்சா?" என்று கேட்க, "வரல ப்ரெக்னன்ட் ஆஹ் இருக்கேன்" என்று அவன் தலையில் குண்டை தூக்கி போட்டாள்.

அவ்வளவு நேரமும் ஓடியும் அவனுக்கு வியர்க்கவில்லை. இப்பொது குப்பென்று வியர்த்தது.

"என்னடி சொல்ற?" என்றபடி அவன் வாயில் இரு கைகளையும் வைத்துக் கொண்டான்.

"இப்போ என்ன பண்ணுறது?" என்று அவள் பதற, "ஒரு தடவை தானே, ஒரே தடவைல உன்னை ப்ரெக்னன்ட் ஆக்குற அளவுக்கு ஆண்மை பொருந்தியவனா நானு?" என்றான்.

"ஐயையே, இதுலயும் ஒரு கிளு கிளுப்பு, எல்லாம் உங்களால தான். இப்போ என்ன பண்ணுறது? படிச்சும் முடிக்கல... அக்காவுக்கு தெரிஞ்சா என்னை தூக்கி போட்டு மிதிப்பா" என்றாள்.

"உன் அக்கா பரவாயில்ல டி..இந்த ராவ் அடிச்சா ஒன்னரை டான் வெய்ட்டு. மலைமாடு மாதிரி இருக்கான்..அவன் அடி எல்லாம் தாங்குவேனா நான்?" என்றபடி தலையில் கையை வைத்து விட்டான்.

"வேற வழி இல்ல, அக்கா கிட்ட ஐடியா கேட்டு ஆகணும், கொஞ்சம் அவ சரியா சொல்லுவா" என்று சொல்ல, "ராவ்க்கு தெரியாம பார்த்துக்கோடி, என்னை துவைச்சு எடுத்துடுவான்" என்று சொல்ல, "சரி நான் அக்கா கிட்ட பேசுறேன்" என்றபடி கீழிறங்கி சென்றாள்.

"அக்கா" என்றபடி அறைக்குள் தயங்கி தயங்கி வந்தாள் ஜீவிதா.

அவளும் அப்போது தான் குளித்து விட்டு உடைமாற்றி இருந்தவள், "சொல்லுடி" என்றபடி அவளும் வேலையை பார்க்க, "கொஞ்சம் இருந்து கேளேன்" என்று அவளை இழுத்து அமர வைத்தாள் ஜீவிதா.

"வேலை இருக்கு ஜீவி, இன்னைக்கு தான் வீட்ல இருக்கிற வேலை எல்லாம் பார்க்கணும்" என்று மாதுரி சலிக்க, "இது உயிர் போற விஷயம்" என்றாள்.

"சொல்லி தொலையேன்" என்ற மாதுரியிடம் சுற்றும் முற்றும் பார்த்தபடி, "நான் ப்ரெக்னன்ட் ஆஹ் இருக்கேன்." என்றாள் பார்க்கலாம்.

"அடி ஆத்தி" என்று நெஞ்சில் கையை வைத்துக் கொண்டே எழுந்த மாதுரியோ, "யாரு காரணம்?" என்று கேட்டாள். பயமும் தயக்கமுமாக எச்சிலை அவள் கூட்டி விழுங்க, "இப்போ சொல்ல போறியா இல்லையா?" என்று சீற, "அது வந்து, ராவ் மாமா" என்று ஆரம்பிக்க, "என்னடி சொல்ற?? அந்த நெட்டையனா?? அவனை" என்று சீறிக் கொண்டே விறு விறுவென ஹாலுக்குள் செல்ல, "அக்கா முழுசா கேட்டு போ" என்று ஜீவிதா கத்தியது காற்றில் கரைந்து போனது...

ஹாலுக்குள் வந்த மாதுரி கொஞ்சமும் யோசிக்கவில்லை , டீயை குடித்துக் கொண்டு இருந்த ராவந்த்தின் கையில் இருந்த டீயை பறித்து அவன் முகத்திலேயே ஊற்றி விட்டாள்.

அவனோ பதறிக் கொண்டே எழுந்து கொள்ள, "ஐயோ அக்கா மாமா இல்ல அஸ்வந்த், மாமா கிட்ட சொல்ல வேணாம்னு சொல்ல வந்தேன்" என்று அவள் காதுக்குள் ஓடி வந்து ஜீவிதா சொல்ல, "அடிப்பாவி இத சொல்லி இருக்க வேண்டியது தானே. நல்ல காலம் இப்போவாவது சொன்னியே. அடுத்து கத்தி எடுத்து குத்தலாம்னு இருந்தேன்" என்று சொல்ல, "ஆத்தாடி" என்று நெஞ்சில் கையை வைத்துக் கொண்டே ஜீவிதா அங்கிருந்து நழுவி விட்டாள்.

இப்பொது முகத்தில் வடிந்த டீயை ஒற்றைக் கையால் துடைத்தபடி மாதுரியை வெறித்து பார்த்தான் ராவந்த். அவன் முகம் வேறு சூட்டினால் சிவந்து இருந்தது. அவன் நல்ல காலத்துக்கு மிதமான சூடு தான். மாதுரிக்கு குற்ற உணர்வும் வந்து விட்டது...

ஜீவிதா மேல் இருந்த அதீத நம்பிக்கையில் இப்படி சந்தேகப்பட்டு விட்டாளே, ராவந்த்துடன் பழகியதும் குறைவு தானே... அவளை கொஞ்சம் கொஞ்சமாக இப்போது தான் அறிந்து கொண்டு இருக்கின்றாள்...

ஆனாலும் தவறு அல்லவா?

அதனாலேயே அடங்கி போக தான் நினைத்து இருந்தவள், மாதுரியோ, "சாரி, டீ சூடா இருக்கான்னு செக் பண்ண தான்" என்று என்னென்னவோ உளறியவள், கையை நீட்டி அவன் கன்னத்தை தொட்டு பார்த்துக் கொண்டே, "பெருசா சூடா இல்லையே" என்று முடிக்க முதல், "அடிங்" என்று சொன்னபடி அவள் கையை பற்றி பின்னால் முறுக்கி இருக்க, "அத்தை காப்பாத்துங்க" என்று அவள் அலற, "எதுக்குடி கத்துற" என்றபடி சட்டென கையை விட்டான்.

"கை முறிஞ்சு இருக்கும்ல..." என்றபடி கையை வருடியவளோ, "சாரி, ஒரு குட்டி மிஸண்டேர்ஸ்டாண்டிங்" என்றாள்.

"அதெல்லாம் தெரியாது. இப்போ தான் குளிச்சிட்டு வந்தேன். என்னை திரும்ப நீ தான் குளிக்க வைக்கணும்" என்றான்.

"ஐயையே" என்றபடி அவள் நகர, அவள் கையை இழுத்து பிடித்தவன், "இப்போ நீ குளிக்க வைக்கலன்னா நான் உன்ன குளிக்க வைப்பேன்" என்றான்.

"ச்சீ என்ன பேச்சு இது? பேசாம முகம் கழுவி விடட்டுமா?" என்று கேட்டாள்.

அவனோ அங்கே இருந்த மீதி டீயை எடுத்து தனது டீஷர்ட்டில் அவனே ஊற்றியவன், "இப்போ குளிக்க வை" என்றான்.

'அட பைத்தியமே' என்று மனதுக்குள் நினைத்தபடி அவள் முன்னே சென்றவள், "ட்ரெஸ்ஸோட தான் குளிக்க வைப்பேன்" என்று முடிக்க முதலே அவன் டீஷேர்ட்டை கழட்டியபடி அவளை தாண்டி அறைக்குள் செல்ல, ஓடி வந்து அவன் ஜீன்ஸின் பெல்ட்டில் கையை வைத்தாள்.

"அடி கள்ளி... பிடிக்கல பிடிக்கலன்னு சொல்லிட்டு நீயே கையை வைக்கிற" என்று சொல்ல, "அட ச்ச" என்றபடி விலகி நின்றவள், "அது அங்கேயே இருக்கட்டும்னு சொல்ல வந்தேன்" என்றாள்...

அவள் மூளைக்குள் ஜீவிதாவின் கர்ப்பமான விஷயம் ஓடிக் கொண்டு இருந்தது...

இவன் வேறு குளிக்க வைக்க சொல்லி இம்சை செய்து கொண்டு இருக்கின்றான்.

அவனை சந்தேகப்பட்டதற்கு பரிகாரமாக குளிக்க வைக்கலாம் என்று நினைத்தவளோ, "சரி சீக்கிரம் உள்ளே வாங்க" என்றபடி குளியலறைக்குள் செல்ல, அவனோ உள்ளாடையுடன் வந்தான்.

"என்ன கொடுமை இது? வெட்கமே இல்லையா உங்களுக்கு?" என்று அவள் கேட்க, "அது தான் முழுசா பார்த்துட்டியே அப்புறம் என்ன?" என்று கேட்டான்.

அவளும், "முடியல" என்று புலம்பிக் கொண்டே, அவனை அங்கே இருந்த ஸ்டூலில் அமர வைத்தவள், நீரை ஊற்றினாள்.

"சோப் போட்டு விடு டி" என்றான்.

"வெட்கமே இல்லையா?" என்று கேட்டுக் கொண்டே சோப்பை போட்டு விட்டாள்.

சங்கடமாக இருந்தது...

அவன் படிக்கட்டு தேகத்தை கைகளால் வருடிய சமயம் அவனுக்கு மட்டும் அல்ல, அவளுக்கும் உணர்வுகளின் போராட்டம்.

ஒரு வழியாக அவனை குளிக்க வைத்து முடித்தவள், "சாரி" என்றாள்.

"அது தான் குளிக்க வச்சுட்டியே தட்ஸ் ஓகே" என்றாள்.

"அதுக்கு இல்லை, ஏன்னு சொல்லவும் முடியாது, கொஞ்சம் கில்ட் ஆஹ் இருக்கு" என்று சொல்லிக் கொண்டே வெளியேற, அவனோ யோசனையுடன் இதழ்களை பிதுக்கிக் கொண்டான்.

வெளியே வந்த மாதுரி இப்போது அவசரமாக நுழைந்தது என்னவோ ஜீவிதாவின் அறைக்குள் தான்.
 

grg

Member
😍😍😍
அடேய் அஸ்வந்த் ராவ் கிட்ட மாட்டுன சங்கு தான்....
ஆனாலும் மாதுரி இது கொஞ்சம் ஓவர் மா.... நம்மாளு அதுக்குல்லாம் சரிப்பட்டு வரமாட்டான் 🤣🤣🤣
 
Last edited:
Top