அத்தியாயம் 8
அவனும் சிறிது நேரத்தில் நூடில்ஸ் உடன் வந்து விட அவளோ "என்னை கழட்டி விடு, நான் போகணும்" என்றாள். "உன்னை கழட்டி விடவா இவ்ளோ ரிஸ்க் எடுத்து தூக்கிட்டு வந்தேன் " என்று கேட்டவன் அவள் அருகே அமர்ந்து இதழ்களை குவித்து நூடில்ஸை ஊதியவன் முள்ளுக் கரண்டியில் எடுத்து அவளிடம் நீட்ட அவளோ முகத்தை மற்ற பக்கம் திருப்பினாள்.
அவனும் "பசிக்கும்டி சாப்பிடு" என்க, "ரொம்ப தான் அக்கறை " என்றால் இதழ்களை சுளித்தவாறே.. அவனோ "சொன்னாலும் சொல்லலானாலும் அக்கறை அதிகமாவே இருக்கு" என்றவன் உணவை மீண்டும் அவள் வாயருகே கொண்டு செல்ல அவளோ வாயை இறுக மூடிக் கொண்டாள்.
அவளை அழுத்தமாக பார்த்தவன் இருக்கையை இழுத்து இன்னும் நெருக்கமாக போட இருவர் முட்டிகளும் உரசிக் கொண்டன.
அவள் முகத்தருகே தனது முகத்தை கொண்டு வந்தவன் "ப்ளீஸ் டி சாப்பிடு " என்றான் காற்றுக்கும் வலிக்காத குரலில். அவள் முகமோ பக்கவாட்டாக திரும்பி இருக்க அவனது மூச்சு காற்றோ அவளது கன்னத்தை உரச, அவனை கடைக்கண்ணால் பார்த்தவள் " கொஞ்சம் தள்ளுங்க " என்றாள். "முடியாது, நீ சாப்பிட்டா தள்ளிகிறேன்.. இல்லன்னா இன்னும்" என்று சொன்னபடியே தனது ஈர இதழ்களை அவளது மென்மையான கன்னத்தில் பதிக்க அவளோ கண்களை மூடி உணர்ச்சியை அடக்கியவள் "இது சரி இல்ல" என்று சொன்ன போதே அவனது தாடி அடர்ந்த கன்னத்தினால் அவள் கன்னத்தை உரசியவன் "இது சரியா இருக்கா " என்று கேட்டான்.
அவளுக்கு அதற்கு மேல் தனது உணர்ச்சிகளை அடக்க முடியுமா என்று சந்தேகம் தான் தோன்றியது. அடுத்த கணமே "நான் சாப்பிடுறேன், ப்ளீஸ் தள்ளுங்க" என்று அவசரமாக சொல்ல, இதழ்களை பிரித்து முத்துப் பற்கள் தெரிய சிரித்தவன் சற்றே தள்ளி இருகையில் சாய்ந்து இருந்தபடி அவளுக்கு ஊட்ட முனைய அவனை முறைத்தபடி அவள் சாப்பிட ஆரம்பித்தாள்.
ஒரு கட்டத்தில் அவளும் "போதும் சாப்பாடு" என்று சொல்ல அவனும் "ஓகே" என்றபடி மீதி நூடில்ஸை அவன் சாப்பிட்டு விட்டு அவளுக்கு நீரை கொடுத்தான். அவளும் குடித்து முடிய குவளையில் அவள் குடித்த பக்கமே வாயை வைத்து அவளையே விழுங்கி விடுவது போல பார்த்துக் கொண்டு நீரை அருந்த அவள் தான் அவனது பார்வை வீச்சை தாங்க முடியாமல் முகத்தை மற்றைய பக்கம் திருப்பிக் கொண்டாள்.
அவன் எழுந்த சமயம், "நான் வாஷ் ரூம் போகணும்" என்றால் அவனை பார்க்காமலே, அவனும் "சாரி" என்று சொன்னபடி அவளை அணைத்து விடுவது போல வந்து கைக் கட்டை அவிழ்த்து விட, அவளும் கையை வருடியபடி எழுந்து கொண்டவள் அந்த அறையிலேயே இருந்த குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.
சிறிது நேரம் கழித்து வெளியே வந்தவள் "ஒன்னும் கையை கட்ட தேவல,, நான் ஓடி போக மாட்டேன்" என்று சொல்ல அவனும் "ம்ம் உன் கூட தான் முழுக்க முழுக்க இருக்க போறேன்.. ஓடி போக நீ நினச்சா கூட முடியாது" என்றான். அவளும் இதழ்களை சுளித்துக் கொண்டு அவன் முன்னே இருந்த சோபாவில் அமர, அவனோ நாடியை நீவியவாறு அவளை இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தான். அவன் பார்வை அவளுக்கு சங்கடமாக போக, அவன் மேல் ஏற்கனேவே இருந்த கோபம் இன்னும் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தவள் "இப்படியே பார்த்துட்டு இருந்தா என்ன அர்த்தம்?' என்று கேட்க "நீ ரொம்ப அழகா இருக்கிறன்னு அர்த்தம் " என்றான்.
"இந்த பேச்சுக்கு மட்டும் குறைச்சல் இல்ல," என்று முணு முணுத்தவள் தெரியாம தான் கேட்கிறேன் ஆதித் , "பெத்த அம்மாவுக்கு இப்படி துரோகம் பண்ணலாமா?" என்று கேட்க அவனோ "பண்ணுனா என்ன தப்பு?" என்று கேட்டான். அதைக் கேட்டு மூக்கு விடைக்க அவனை அனல் தெறிக்க பார்த்தவள் " கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லையா?" என்று கேட்க அவனோ "அவங்கள பத்தி உனக்கு முதல் தெரியுமா?" என்று கேட்டான். அவளும் "அவங்க எப்படி இருந்தாலும் துரோகம் பண்ணுறது தப்பு தான்.. நீங்க எப்படி அத நியாயப்படுத்துனாலும் அது தப்பு தான்" என்று வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக பேச, "இப்படி பேசுற உன் கிட்ட என்ன சொன்னாலும் நோ யூஸ், அந்த கதையை விடு, நம்மள பத்தி பேசலாம் வா" என்று சொல்ல அவளும் "நம்மள பத்தி பேச என்ன இருக்கு?" என்று கேட்டாள்.
"எவ்வளவோ இருக்கு, நம்ம கல்யாணம் , பெர்ஸ்ட் நைட்" என்று தொடங்க "போதும் " என்று கை நீட்டி தடுத்தவள் "என்னை எப்போ வெளிய விடுவீங்க?" என்று கேட்டாள். அவனோ அவளை துளைத்தெடுக்கும் பார்வை பார்த்து "ஏண்டி என் கூட இருக்க பிடிக்கலையா?" என்று கேட்க அவள் பதில் சொல்ல முடியாமல் தடுமாறி தான் போனாள்.
அவளோ சிறிது நேர மௌனத்தின் பின்னர் அவனை நிமிர்ந்து பார்த்தவள் "எப்படி ஆதித் நடிக்க முடியுது? என் மேல லவ் இல்லாம கல்யாணம் பண்ணி, அம்மாவுக்கு துரோகம் பண்ணி, இப்போ லவ் பண்ணுற போல ஒரு அக்டிங்,.. ரொம்ப வலிக்குது ஆதித்" என்று சொன்ன கணமே அவள் கண்ணில் இருந்து இரு சொட்டுக் கண்ணீர் வழிந்தது. அவனுக்கும் அது வலித்து இருக்க வேண்டும், அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் சொரிந்தவள் அருகே வந்தவன் அவள் அருகே மண்டியிட்டு அமர்ந்து அவளது கரத்தை தனது கரத்தில் அடக்கியபடி " எல்லாமே நடிப்பு இல்ல நதி, என் கண் உனக்கு பொய் சொல்லுதா? கண்டிப்பா எல்லாத்திலயும் சுயநலம் இருக்கு.. ஆனா இந்த காதல் உண்மை'" என்று சொல்ல அவளோ அவன் கண்களை பார்த்தவள் "எப்படி நம்புறது ஆதித், அத்தை கிட்டயே அப்படி நடிக்கிறீங்க..,இது உண்மைன்னு உங்க கண் சொன்னா கூட அது பொய்யா இருக்குமோன்னு தோணுது. எந்த நம்பிக்கையும் வர மாட்டேங்குது.. பொய்யான வாழ்க்கை வாழுற உணர்வா இருக்கு... பிடிக்கலன்னு உண்மைய சொன்னா கூட என்னால ஏத்துக்க முடியும்... பிடிக்குதுன்னு பொய் சொல்லும் போது செத்துடலாம் போல இருக்கு" என்று பேச, அவனுக்கோ அவள் தன்னை இவ்வளவு பேசியும் நம்பாதது எரிச்சலாக இருந்தது ..
"நதி ஸ்டாப் இட்.. என்ன பேசிட்டு இருக்க? எத சொன்னாலும் நம்பலன்னு சொன்னா நான் என்ன தான் பண்ண முடியும்? " என்று கேட்க அவளோ "நீங்க பண்ணிட்டு இருக்கிற வேலை அப்படி, அப்புறம் எப்படி நம்புறது?" என்று கேட்க அவனோ பெருமூச்செடுத்தபடி தனது ஆறடி உயரத்துக்கு எழுந்து நின்றவன் "அவங்கள பத்தி உனக்கு தெரியாதுடி.. எனக்கு சொல்லவே வாய் கூசுது" என்று சொல்ல அவளும் "அப்படி மோசமானவங்களா இருந்தா எதிர்த்து நின்னு நெஞ்சுல குத்தி இருக்கணும் , இப்படி முதுகுல குத்துறது தப்பு" என்று சொன்னாள். அவனோ " சகுனியை தருமனால ஜெயிக்க முடில,, ஆனா கிருஷ்ணன் சூழ்ச்சி தான் வீழ்த்திச்சு.. யார் யார எப்படி வீழ்த்தணும்னு எனக்கு தெரியும்" என்று சொன்னான். அவள் இவ்வளவு சொல்லியும் தான் செய்தது சரி என்று அவன் வாதாடுவது அவளுக்கு எரிச்சலாக இருக்க, "ஆமா அதான் என்னையும் ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டிங்களா?" என்று கேட்க அவனோ "அடிச்சேன்னா பாரு" என்று பின் கையை ஓங்கி இருந்தான். அவளோ அதிர்ச்சியுடன் எழுந்து நின்றவள் "அந்தளவுக்கு போய்டுச்சா ஆதித்.,,... தாலி கட்டி கொஞ்ச நாள் கூட ஆகல, அடிக்க வர்றீங்களா?" என்று கலங்கிய கண்களுடன் கேட்க ,தலையை கோதி தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன் "இப்போ என்ன பண்ணனும்னு சொல்ற?" என்று கேட்க "ஒன்னும் பண்ண தேவல.. எல்லாமே நடிப்பு,.. என் மேல லவ் கொஞ்சமும் இல்ல, " என்று கண்ணீருடன் சொன்னவள் திரும்பி நடக்க போக அவள் கையினை பிடித்து தன்னை நோக்கி இழுத்தவன் அவள் சுதாகரிக்க முதலே அவள் முகத்தை தாங்கி அவள் கீழ் அதரங்களை அழுத்தமாக கவ்விக் கொண்டான்.
அவளோ அவன் மார்பில் கை வைத்து திமிறிய போதும் அவன் இதழ் முத்தம் நீண்டதே தவிர அவன் கொஞ்சமும் அசரவில்லை. அவன் கரங்களோ அவளை தன்னுடன் இறுக அணைத்துக் கொள்ள, அவளால் ஒரு இன்ச் கூட நகர முடியாமல் இருக்க, அவள் இதழ்களோ அவன் இதழ்களுக்கு இரையாகி கொண்டு இருந்தது.
ஒரு கட்டத்தில் அவள் இதழ்களுக்கு ஓய்வு கொடுத்து விலகியவனிடம் "என்ன பண்ணிட்டு இருக்கீங்க??" என்று சீறினாள் நதீகா..
"உன்னை லவ் பண்ணுறேன்னு ப்ரூப் பண்ண வேணாமா?" என்று தாப குரலில் கேட்டவன் அவளை அணைத்தபடி அங்கிருந்த மஞ்சத்தில் சரிய, "இதெல்லாம் தப்பு ஆதித்" என்றபடி அவள் விலக போராடினாள். "எதுடி தப்பு? புருஷன் பொண்டாட்டிக்குள இது நடக்கலன்னா தான் தப்பு" என்று சொன்னவன் அவளை பதில் பேச விடாமல் அவள் இதழ்களை தனது இதழ் கொண்டு மூடினான். ஆரம்பத்தில் திமிறியவள் ஒரு கட்டத்தில் அவன் இதழ் செய்த சாகசத்தில் மயங்கி படுக்கை விரிப்பை உணர்ச்சியின் பிடியில் பற்றிக் கொள்ள, அவனும் அவள் நெகிழ்வை அறிந்து கர்வம் கொண்டவன் அடுத்த கட்டத்துக்கு தயக்கம் இன்றி முன்னேறினான். அதற்கு பிறகு நடந்த அனைத்துக்கும் இருவருமே சம பொறுப்பாக, அவன் வெற்று மார்பில் கன்னம் வைத்து தூங்கிப் போனாள் பாவையவள்.
சிறிது நேரத்தில் கண் விழித்தவளுக்கு தனது தலையை வருடியபடி படுத்து இருந்த ஆதித்தை பார்க்க சங்கடமாகி போக, அவனைப் பார்க்காமலே விலகி படுக்க முற்பட, "எங்கடி போற?" என்று கேட்டவன் அவளை தன் மீது போட்டுக் கொண்டே அவள் இதழ்களில் மீண்டும் இதழ் பதித்தான். கேள்வி கேட்டு விட்டு பதில் சொல்ல அவன் விட்டால் தானே..
அவளும் வலுக்கட்டாயமாக அவனது இதழில் இருந்து தனது இதழை பிரித்து எடுத்தவள் முகத்தினை மறுபக்கம் திருப்பிக் கொண்டு "என்னோட ட்ரஸ்" என்று ஈன குரலில் கேட்க வாய் விட்டு சிரித்தவன் "அதற்கெல்லாம் அவசியமில்லை" என்று சொல்லிக் கொண்டே அவளை கீழே சரித்து மேலே படர்ந்து தனது மீண்டும் விடுபட்ட வேலையை தொடர, அவன் தொடுகைக்கு கோபம் மறந்து உருகி குலையும் தன் மேல் கோபம் கொண்டாலும் முத்தமிடும் அவன் இதழுக்கு பதில் முத்தம் வழங்கியபடியே அவன் சிகை கோதி தனது சம்மதத்தை தெரிவித்தது என்னவோ உண்மை தான்.
இரு ஜீவன்கள் , பேச ஆயிரம் விடயங்கள் , தீர்க்க ஆயிரம் பிரச்சனைகள், கொடுக்க வேண்டிய ஆயிரம் விளக்கங்கள் மத்தியில் காதல் என்னும் ஒரு மெல்லிய இழையை மட்டுமே ஆதாரமாக வைத்து சங்கமித்துக் கொண்டன.
அவனும் சிறிது நேரத்தில் நூடில்ஸ் உடன் வந்து விட அவளோ "என்னை கழட்டி விடு, நான் போகணும்" என்றாள். "உன்னை கழட்டி விடவா இவ்ளோ ரிஸ்க் எடுத்து தூக்கிட்டு வந்தேன் " என்று கேட்டவன் அவள் அருகே அமர்ந்து இதழ்களை குவித்து நூடில்ஸை ஊதியவன் முள்ளுக் கரண்டியில் எடுத்து அவளிடம் நீட்ட அவளோ முகத்தை மற்ற பக்கம் திருப்பினாள்.
அவனும் "பசிக்கும்டி சாப்பிடு" என்க, "ரொம்ப தான் அக்கறை " என்றால் இதழ்களை சுளித்தவாறே.. அவனோ "சொன்னாலும் சொல்லலானாலும் அக்கறை அதிகமாவே இருக்கு" என்றவன் உணவை மீண்டும் அவள் வாயருகே கொண்டு செல்ல அவளோ வாயை இறுக மூடிக் கொண்டாள்.
அவளை அழுத்தமாக பார்த்தவன் இருக்கையை இழுத்து இன்னும் நெருக்கமாக போட இருவர் முட்டிகளும் உரசிக் கொண்டன.
அவள் முகத்தருகே தனது முகத்தை கொண்டு வந்தவன் "ப்ளீஸ் டி சாப்பிடு " என்றான் காற்றுக்கும் வலிக்காத குரலில். அவள் முகமோ பக்கவாட்டாக திரும்பி இருக்க அவனது மூச்சு காற்றோ அவளது கன்னத்தை உரச, அவனை கடைக்கண்ணால் பார்த்தவள் " கொஞ்சம் தள்ளுங்க " என்றாள். "முடியாது, நீ சாப்பிட்டா தள்ளிகிறேன்.. இல்லன்னா இன்னும்" என்று சொன்னபடியே தனது ஈர இதழ்களை அவளது மென்மையான கன்னத்தில் பதிக்க அவளோ கண்களை மூடி உணர்ச்சியை அடக்கியவள் "இது சரி இல்ல" என்று சொன்ன போதே அவனது தாடி அடர்ந்த கன்னத்தினால் அவள் கன்னத்தை உரசியவன் "இது சரியா இருக்கா " என்று கேட்டான்.
அவளுக்கு அதற்கு மேல் தனது உணர்ச்சிகளை அடக்க முடியுமா என்று சந்தேகம் தான் தோன்றியது. அடுத்த கணமே "நான் சாப்பிடுறேன், ப்ளீஸ் தள்ளுங்க" என்று அவசரமாக சொல்ல, இதழ்களை பிரித்து முத்துப் பற்கள் தெரிய சிரித்தவன் சற்றே தள்ளி இருகையில் சாய்ந்து இருந்தபடி அவளுக்கு ஊட்ட முனைய அவனை முறைத்தபடி அவள் சாப்பிட ஆரம்பித்தாள்.
ஒரு கட்டத்தில் அவளும் "போதும் சாப்பாடு" என்று சொல்ல அவனும் "ஓகே" என்றபடி மீதி நூடில்ஸை அவன் சாப்பிட்டு விட்டு அவளுக்கு நீரை கொடுத்தான். அவளும் குடித்து முடிய குவளையில் அவள் குடித்த பக்கமே வாயை வைத்து அவளையே விழுங்கி விடுவது போல பார்த்துக் கொண்டு நீரை அருந்த அவள் தான் அவனது பார்வை வீச்சை தாங்க முடியாமல் முகத்தை மற்றைய பக்கம் திருப்பிக் கொண்டாள்.
அவன் எழுந்த சமயம், "நான் வாஷ் ரூம் போகணும்" என்றால் அவனை பார்க்காமலே, அவனும் "சாரி" என்று சொன்னபடி அவளை அணைத்து விடுவது போல வந்து கைக் கட்டை அவிழ்த்து விட, அவளும் கையை வருடியபடி எழுந்து கொண்டவள் அந்த அறையிலேயே இருந்த குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.
சிறிது நேரம் கழித்து வெளியே வந்தவள் "ஒன்னும் கையை கட்ட தேவல,, நான் ஓடி போக மாட்டேன்" என்று சொல்ல அவனும் "ம்ம் உன் கூட தான் முழுக்க முழுக்க இருக்க போறேன்.. ஓடி போக நீ நினச்சா கூட முடியாது" என்றான். அவளும் இதழ்களை சுளித்துக் கொண்டு அவன் முன்னே இருந்த சோபாவில் அமர, அவனோ நாடியை நீவியவாறு அவளை இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தான். அவன் பார்வை அவளுக்கு சங்கடமாக போக, அவன் மேல் ஏற்கனேவே இருந்த கோபம் இன்னும் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தவள் "இப்படியே பார்த்துட்டு இருந்தா என்ன அர்த்தம்?' என்று கேட்க "நீ ரொம்ப அழகா இருக்கிறன்னு அர்த்தம் " என்றான்.
"இந்த பேச்சுக்கு மட்டும் குறைச்சல் இல்ல," என்று முணு முணுத்தவள் தெரியாம தான் கேட்கிறேன் ஆதித் , "பெத்த அம்மாவுக்கு இப்படி துரோகம் பண்ணலாமா?" என்று கேட்க அவனோ "பண்ணுனா என்ன தப்பு?" என்று கேட்டான். அதைக் கேட்டு மூக்கு விடைக்க அவனை அனல் தெறிக்க பார்த்தவள் " கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லையா?" என்று கேட்க அவனோ "அவங்கள பத்தி உனக்கு முதல் தெரியுமா?" என்று கேட்டான். அவளும் "அவங்க எப்படி இருந்தாலும் துரோகம் பண்ணுறது தப்பு தான்.. நீங்க எப்படி அத நியாயப்படுத்துனாலும் அது தப்பு தான்" என்று வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக பேச, "இப்படி பேசுற உன் கிட்ட என்ன சொன்னாலும் நோ யூஸ், அந்த கதையை விடு, நம்மள பத்தி பேசலாம் வா" என்று சொல்ல அவளும் "நம்மள பத்தி பேச என்ன இருக்கு?" என்று கேட்டாள்.
"எவ்வளவோ இருக்கு, நம்ம கல்யாணம் , பெர்ஸ்ட் நைட்" என்று தொடங்க "போதும் " என்று கை நீட்டி தடுத்தவள் "என்னை எப்போ வெளிய விடுவீங்க?" என்று கேட்டாள். அவனோ அவளை துளைத்தெடுக்கும் பார்வை பார்த்து "ஏண்டி என் கூட இருக்க பிடிக்கலையா?" என்று கேட்க அவள் பதில் சொல்ல முடியாமல் தடுமாறி தான் போனாள்.
அவளோ சிறிது நேர மௌனத்தின் பின்னர் அவனை நிமிர்ந்து பார்த்தவள் "எப்படி ஆதித் நடிக்க முடியுது? என் மேல லவ் இல்லாம கல்யாணம் பண்ணி, அம்மாவுக்கு துரோகம் பண்ணி, இப்போ லவ் பண்ணுற போல ஒரு அக்டிங்,.. ரொம்ப வலிக்குது ஆதித்" என்று சொன்ன கணமே அவள் கண்ணில் இருந்து இரு சொட்டுக் கண்ணீர் வழிந்தது. அவனுக்கும் அது வலித்து இருக்க வேண்டும், அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் சொரிந்தவள் அருகே வந்தவன் அவள் அருகே மண்டியிட்டு அமர்ந்து அவளது கரத்தை தனது கரத்தில் அடக்கியபடி " எல்லாமே நடிப்பு இல்ல நதி, என் கண் உனக்கு பொய் சொல்லுதா? கண்டிப்பா எல்லாத்திலயும் சுயநலம் இருக்கு.. ஆனா இந்த காதல் உண்மை'" என்று சொல்ல அவளோ அவன் கண்களை பார்த்தவள் "எப்படி நம்புறது ஆதித், அத்தை கிட்டயே அப்படி நடிக்கிறீங்க..,இது உண்மைன்னு உங்க கண் சொன்னா கூட அது பொய்யா இருக்குமோன்னு தோணுது. எந்த நம்பிக்கையும் வர மாட்டேங்குது.. பொய்யான வாழ்க்கை வாழுற உணர்வா இருக்கு... பிடிக்கலன்னு உண்மைய சொன்னா கூட என்னால ஏத்துக்க முடியும்... பிடிக்குதுன்னு பொய் சொல்லும் போது செத்துடலாம் போல இருக்கு" என்று பேச, அவனுக்கோ அவள் தன்னை இவ்வளவு பேசியும் நம்பாதது எரிச்சலாக இருந்தது ..
"நதி ஸ்டாப் இட்.. என்ன பேசிட்டு இருக்க? எத சொன்னாலும் நம்பலன்னு சொன்னா நான் என்ன தான் பண்ண முடியும்? " என்று கேட்க அவளோ "நீங்க பண்ணிட்டு இருக்கிற வேலை அப்படி, அப்புறம் எப்படி நம்புறது?" என்று கேட்க அவனோ பெருமூச்செடுத்தபடி தனது ஆறடி உயரத்துக்கு எழுந்து நின்றவன் "அவங்கள பத்தி உனக்கு தெரியாதுடி.. எனக்கு சொல்லவே வாய் கூசுது" என்று சொல்ல அவளும் "அப்படி மோசமானவங்களா இருந்தா எதிர்த்து நின்னு நெஞ்சுல குத்தி இருக்கணும் , இப்படி முதுகுல குத்துறது தப்பு" என்று சொன்னாள். அவனோ " சகுனியை தருமனால ஜெயிக்க முடில,, ஆனா கிருஷ்ணன் சூழ்ச்சி தான் வீழ்த்திச்சு.. யார் யார எப்படி வீழ்த்தணும்னு எனக்கு தெரியும்" என்று சொன்னான். அவள் இவ்வளவு சொல்லியும் தான் செய்தது சரி என்று அவன் வாதாடுவது அவளுக்கு எரிச்சலாக இருக்க, "ஆமா அதான் என்னையும் ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டிங்களா?" என்று கேட்க அவனோ "அடிச்சேன்னா பாரு" என்று பின் கையை ஓங்கி இருந்தான். அவளோ அதிர்ச்சியுடன் எழுந்து நின்றவள் "அந்தளவுக்கு போய்டுச்சா ஆதித்.,,... தாலி கட்டி கொஞ்ச நாள் கூட ஆகல, அடிக்க வர்றீங்களா?" என்று கலங்கிய கண்களுடன் கேட்க ,தலையை கோதி தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன் "இப்போ என்ன பண்ணனும்னு சொல்ற?" என்று கேட்க "ஒன்னும் பண்ண தேவல.. எல்லாமே நடிப்பு,.. என் மேல லவ் கொஞ்சமும் இல்ல, " என்று கண்ணீருடன் சொன்னவள் திரும்பி நடக்க போக அவள் கையினை பிடித்து தன்னை நோக்கி இழுத்தவன் அவள் சுதாகரிக்க முதலே அவள் முகத்தை தாங்கி அவள் கீழ் அதரங்களை அழுத்தமாக கவ்விக் கொண்டான்.
அவளோ அவன் மார்பில் கை வைத்து திமிறிய போதும் அவன் இதழ் முத்தம் நீண்டதே தவிர அவன் கொஞ்சமும் அசரவில்லை. அவன் கரங்களோ அவளை தன்னுடன் இறுக அணைத்துக் கொள்ள, அவளால் ஒரு இன்ச் கூட நகர முடியாமல் இருக்க, அவள் இதழ்களோ அவன் இதழ்களுக்கு இரையாகி கொண்டு இருந்தது.
ஒரு கட்டத்தில் அவள் இதழ்களுக்கு ஓய்வு கொடுத்து விலகியவனிடம் "என்ன பண்ணிட்டு இருக்கீங்க??" என்று சீறினாள் நதீகா..
"உன்னை லவ் பண்ணுறேன்னு ப்ரூப் பண்ண வேணாமா?" என்று தாப குரலில் கேட்டவன் அவளை அணைத்தபடி அங்கிருந்த மஞ்சத்தில் சரிய, "இதெல்லாம் தப்பு ஆதித்" என்றபடி அவள் விலக போராடினாள். "எதுடி தப்பு? புருஷன் பொண்டாட்டிக்குள இது நடக்கலன்னா தான் தப்பு" என்று சொன்னவன் அவளை பதில் பேச விடாமல் அவள் இதழ்களை தனது இதழ் கொண்டு மூடினான். ஆரம்பத்தில் திமிறியவள் ஒரு கட்டத்தில் அவன் இதழ் செய்த சாகசத்தில் மயங்கி படுக்கை விரிப்பை உணர்ச்சியின் பிடியில் பற்றிக் கொள்ள, அவனும் அவள் நெகிழ்வை அறிந்து கர்வம் கொண்டவன் அடுத்த கட்டத்துக்கு தயக்கம் இன்றி முன்னேறினான். அதற்கு பிறகு நடந்த அனைத்துக்கும் இருவருமே சம பொறுப்பாக, அவன் வெற்று மார்பில் கன்னம் வைத்து தூங்கிப் போனாள் பாவையவள்.
சிறிது நேரத்தில் கண் விழித்தவளுக்கு தனது தலையை வருடியபடி படுத்து இருந்த ஆதித்தை பார்க்க சங்கடமாகி போக, அவனைப் பார்க்காமலே விலகி படுக்க முற்பட, "எங்கடி போற?" என்று கேட்டவன் அவளை தன் மீது போட்டுக் கொண்டே அவள் இதழ்களில் மீண்டும் இதழ் பதித்தான். கேள்வி கேட்டு விட்டு பதில் சொல்ல அவன் விட்டால் தானே..
அவளும் வலுக்கட்டாயமாக அவனது இதழில் இருந்து தனது இதழை பிரித்து எடுத்தவள் முகத்தினை மறுபக்கம் திருப்பிக் கொண்டு "என்னோட ட்ரஸ்" என்று ஈன குரலில் கேட்க வாய் விட்டு சிரித்தவன் "அதற்கெல்லாம் அவசியமில்லை" என்று சொல்லிக் கொண்டே அவளை கீழே சரித்து மேலே படர்ந்து தனது மீண்டும் விடுபட்ட வேலையை தொடர, அவன் தொடுகைக்கு கோபம் மறந்து உருகி குலையும் தன் மேல் கோபம் கொண்டாலும் முத்தமிடும் அவன் இதழுக்கு பதில் முத்தம் வழங்கியபடியே அவன் சிகை கோதி தனது சம்மதத்தை தெரிவித்தது என்னவோ உண்மை தான்.
இரு ஜீவன்கள் , பேச ஆயிரம் விடயங்கள் , தீர்க்க ஆயிரம் பிரச்சனைகள், கொடுக்க வேண்டிய ஆயிரம் விளக்கங்கள் மத்தியில் காதல் என்னும் ஒரு மெல்லிய இழையை மட்டுமே ஆதாரமாக வைத்து சங்கமித்துக் கொண்டன.