அத்தியாயம் 7
அவள் சென்றதுமே திரும்பி மல்லாக்க படுத்த சர்வஜித்தோ, இரு கைகளாலும் முகத்தை அழுந்த வருடிக் கொண்டே, "கீப் காம் சர்வா" என்று தன்னையே நிதானப்படுத்தினான்...
அவன் எத்தனையோ கோடி பிசினஸ் செய்தாலும் இப்படி டென்ஷன் ஆனது இல்லை...
இப்போது அவனால் தன்னிலை அடையவே முடியவில்லை...
அறைக்குள் இருக்கவும் முடியவில்லை...
அப்படியே எழுந்து பால்கனி பக்கம் நின்றுக் கொண்டான்...
குளிர்காற்று அவன் முகத்தில் பட்டு வீச, கொஞ்சம் இதமாக இருந்தது... மனமும் சமநிலை அடைந்தது...
சற்று நேரம் கழித்து மீண்டும் அறைக்குள் வந்தவன் கண்ணில் பட்டது என்னவோ ஆதிரையாழ் வைத்து விட்டு போன எண்ணெய் குப்பி தான்...
'இது என்ன?' என்று யோசித்துக் கொண்டே அதனை எடுத்துப் பார்த்தவன் புருவங்கள் இடுங்கவும் ஆதிரையாழ் அறைக்குள் தலையை துவட்டியபடி வரவும் நேரம் சரியாக இருந்தது...
அவனைக் கண்டதுமே, 'ஐயோ இவர் இன்னும் தூங்கலையா? கைல எண்ணெய் குப்பி வேற வச்சு இருக்கார்... தலைல ஊத்திடுவாரோ? அப்படி ஊத்தினாலும் என்னால இந்த குளிர்ல மறுபடி தலைக்கு குளிக்க முடியாது எண்ணெய் தானே... அப்படியே படுத்துடலாம்' என்று நினைத்துக் கொண்டே, தயங்கி தயங்கி உள்ளே வர, "எல்லாத்துக்கும் ரெடியா தான் அப்போ வந்து இருக்க" என்று ஒரு மார்க்கமான குரலில் கேட்டான்...
'ஐயோ இவர் எத கேக்கிறாருனு தெரியல' என்று நினைத்த ஆதிரையாழோ, எண்ணெய் குப்பியையும் அவனையும் மாறி மாறி பார்த்து விட்டு, "எனக்கு புரியல" என்றாள்.
"இத எதுக்கு கொண்டு வந்த?" என்று கேட்டான்.
அவளோ, "எனக்கு தெரியல... கொடுத்து விட்டாங்க, உங்க கிட்ட கேட்க சொன்னாங்க" என்று சொல்ல, அவன் விழிகளில் மீண்டும் அனல்...
"நான் என்ன டீச்சர் ஆஹ் இதெல்லாம் உனக்கு சொல்லி கொடுக்க?" என்று கடுப்பாக கேட்டான்...
"நான் ப்ளஸ் டூ தான் படிச்சு இருக்கேன்... ஆனா நீங்க பெரிய பெரிய படிப்பெல்லாம் படிச்சு இருக்கீங்க... அப்போ நீங்க சொல்லி தரலாமே" என்றாள்.
"அடிங்" என்று எண்ணெய் குப்பியை அவளை நோக்கி எறிவது போல சைகை செய்ய, அவளோ, "ஐயோ" என்று சொல்லிக் கொண்டே முகத்தை மூடிக் கொண்டாள்.
"படிப்புக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை... உனக்கெல்லாம் தெரிஞ்சு நடிக்கிற போலவே எனக்கு ஃபீல் ஆகுது" என்றான்...
அவளோ அவனை அதிர்ந்து பார்த்துக் கொண்டே, "சத்தியமா எனக்கு ஒன்னுமே தெரியல... இது எதுக்குனு சொல்லி தர்றீங்களா?" என்று கேட்டாள்.
அவனுக்கு அனுபவம் தான் இல்லை... கேள்வி ஞானம் அத்துப்படி தான்...
அவளை மேலிருந்து கீழ் பார்த்து விட்டு, "ஐ டோன்ட் க்னோ" என்றான்...
"உங்களுக்கும் இத பத்தி காலேஜ்ல சொல்லி கொடுக்கலையா?" என்று கேட்டாள்.
அவனுக்கு அவள் தலையில் கல்லை தூக்கி போடலாமா? என்கின்ற அளவுக்கு ஆத்திரம்...
"இதெல்லாம் அங்கே சொல்லி கொடுக்க மாட்டாங்க" என்றான் நறுக்கென்று...
"பக்கத்து வீட்டு அக்கா, எட்டாம் கிளாஸ் ஃபெயில்... அவங்களுக்கு தெரிஞ்சு இருக்கு... உங்களுக்கு தெரியாதா?" என்று அவளிடம் இருந்து அடுத்த கேள்வி...
அவனை ஒரே வார்த்தையில் அவமானப்படுத்தி விட்டாள்.
"எனக்கு தெரியும்" என்றான்...
அவளோ, "அப்போ சொல்லி கொடுங்க" என்றாள்.
அவளுக்கும் அந்த எண்ணெய் எதற்கு என்று அறிந்துக் கொள்ள ஆவல்...
"சொல்லி கொடுக்க நான் ரெடி... அப்புறம் நீ தான் வருத்தப்படுவ" என்றான்...
"இல்ல நான் மாட்டேன்" என்றாள் அவள்...
அவனோ, "சரி நீ நில்லு" என்று சொல்ல, அவளும் அவன் முன்னாடி நிற்க, அவளை பார்த்துக் கொண்டே கட்டிலில் அமர்ந்தவன், "இந்த எண்ணெய் பாட்டில் எதுக்குனா" என்று ஆரம்பித்து அவன் கேள்வி ஞானம் எல்லாம் அள்ளிக் கொட்டினான்...
அவன் சொல்ல சொல்ல, அதிர்ச்சியில் விரிந்த அவள் விழிகள், சங்கடத்திலும் கூச்சத்திலும் மூடிக் கொள்ள, சட்டென இரு கைகளாலும் காதை பொத்தியவள், "போதும் போதும் புரிஞ்சு போச்சு" என்றாள்.
அவனோ, "இன்னும் விளக்கம் வேணுமா?" என்று கேட்க, சட்டென மறுபக்கம் திரும்பிக் கொண்டவள், "ஐயோ வேணாம்" என்றாள்.
ஒரு ஆண்மகன் தன்னிடம் இப்படி வெளிப்படையாக பேசுவது அவளுக்கு என்னவோ போல ஆகி விட்டது...
அவனோ, "இது நமக்கு யூஸ் ஆகாது... குப்பைல போடு" என்று சொல்லிக் கொண்டே அதனை மீண்டும் மேசையில் வைத்தவன், படுத்து விட, அவளுக்கு அப்போது தான் மூச்சே வந்தது...
இப்போது அவளுக்கு எங்கே படுப்பது என்று தெரியவே இல்லை...
கட்டிலில் அவன் அருகே படுக்கும் அளவுக்கு தைரியம் இல்லை...
யோசித்துக் கொண்டே இருந்தவள் முகத்தில் வந்து விழுந்தது போர்வை...
"நிலத்துல விரிச்சிட்டு படு" என்று அவளை பார்க்காமல் சொல்லி இருந்தான் சர்வஜித்...
அவளும் அதனை நிலத்தில் விரித்துக் கொண்டே படுத்தவள் தூங்கிப் போனாள்...
அடுத்த நாள் காலையில் படுத்துக் கொண்டு இருந்தவளோ மெதுவாக கண் விழித்த சமயம் அவளுக்கு தெரிந்தது என்னவோ புஷ் அப்ஸ் செய்துக் கொண்டு இருந்த சர்வஜித் தான்...
ஷார்ட்ஸ் மற்றும் ஆர்ம் கட் அணிந்து இருந்தான்... கடினமான உடற்பயிற்சி செய்ய இங்கே உபகரணங்கள் இல்லை என்பதால் அறைக்குள் செய்ய கூடிய உடற்பயிற்சியை செய்துக் கொள்வான்...
அவனை வேஷ்டியில் பார்த்து பார்த்து, ஷார்ட்ஸில் பார்க்க வித்தியாசமாக இருந்தது அவளுக்கு...
தொடை வரை மட்டுமே அவன் ஷார்ட்ஸ் இருக்க, அவளுக்கோ கூச்சம்...
இப்போது எப்படி எழுவது என்றும் தெரியவில்லை...
எப்படியும் அவன் உடற்பயிற்சியை முடித்து விட்டு குளிக்கச் செல்வான் என்று அவள் அறிவாள். அப்போது எழுந்துக் கொள்ளலாம் என்று நினைத்து இருந்தாள் பெண்ணவள்...
மீண்டும் அவள் கண்களை மெதுவாக மூடிக் கொள்ள, ஒரு பதினைந்து நிமிடங்கள் கடந்து இருக்கும்... அப்படியே அயர்ந்தும் விட்டாள்.
சட்டென அவள் மூச்சு திணற, பதறி எழுந்தாள்... அவள் முகத்தில் நீரை ஊற்றி இருந்தான் சர்வஜித்...
அவளோ புடவை முந்தானையால் நீரை துடைத்து விட்டு அவனை விழி விரித்துப் பார்க்க, "இவ்ளோ நேரம் தூங்கிட்டு இருக்க?" என்று கேட்டுக் கொண்டே, தோளில் கிடந்த டவலினால் கழுத்தில் அரும்பி இருந்த வியர்வையை துடைத்துக் கொண்டான்...
அவனை பார்த்து இருந்தாள் பெண்ணவள், ஆனால் பதில் சொல்லவில்லை...
"நேரத்துக்கு சாப்பிட போகணும்... ஜோடியா வர சொல்லி பெருசோட உத்தரவு... இல்லனா என்னை வச்சு செஞ்சிடும்... குளிச்சிட்டு வரேன்... சீக்கிரம் ரெடி ஆகு" என்று சொல்லி விட்டு விறு விறுவென வெளியேறி குளியலறைக்குள் நுழைய அவளுக்கு அப்போது தான் மூச்சே வந்தது...
தட்டு தடுமாறி எழுந்தவள், படுத்து இருந்த போர்வையை மடித்து வைத்து விட்டு, உடைகளையும் எடுத்துக் கொண்டே நிற்க, இடையில் டவலுடன் அறைக்குள் நுழைந்தான் அவன்...
அவன் வந்த கோலத்தை பார்த்தவள் கையில் இருந்த அவள் புடவை நழுவி விழுந்தது...
விழிகளை விரித்துக் கொண்டே, அப்படியே பேயறைந்த போல நின்றாள்.
"முன்ன பின்ன ஆம்பிளைங்கள பார்த்தது இல்லையா? என்ன இப்படி பார்க்கிற?" என்று அவன் அதட்ட, சட்டென்று நிதானத்துக்கு வந்தவளோ கீழே கிடந்த புடவையை எடுத்துக் கொண்டே, தலையை குனிந்துக் கொண்டாள்.
"கேட்டதுக்கு பதில் சொல்லு" என்றான் அவன் மிரட்டல் குரலில்... அப்படியே கண்ணாடி முன்னே போய் நின்று அவன் தலையை கைகளால் துவட்டினான்.
அவளோ ஆழ்ந்த மூச்சை எடுத்தவள், "தோட்டத்துல வேலை செய்யுற ஆம்பிளைங்கள பார்த்து இருக்கேன்... இப்படி கட்டி கட்டியா இருக்காது... உடம்பெல்லாம் முடி இருக்கும்... உங்க முடி எல்லாம் கொட்டி போச்சா?" என்று கேட்டாள்.
தூக்கி வாரிப் போட்டது அவனுக்கு...
அவளை அதிர்ந்து பார்த்துக் கொண்டே, "இப்போ என்ன கேட்ட?" என்று கேட்டான் மீண்டும்...
சட்டென அவனை ஏறிட்டுப் பார்த்தவள் விழிகள் அவனது அடர்ந்த சிகையில் படிந்து மீள, "தலைல நிறைய முடி இருக்கு... நெஞ்சுல ஒன்னையும் காணோம்... கொட்டிடுச்சா?" என்று கேட்டாள்...
அவனுக்கு சுர்ரென்று கோபம்...
"பட்டிக்காடு, பட்டிக்காடு, ஷேவ் பண்ணி இருக்கேன்... எய்ட் பேக்ஸ் வச்சிட்டு முடியோட இருந்தா நல்லாவா இருக்கும்?" என்றான்...
"ஓஹ்" என்றாள் அவள் மார்க்கமாக...
"என்ன ஓஹ்? போய் குளிச்சிட்டு சீக்கிரம் ரெடி ஆகு..." என்றான்...
அவள் விழிகள் மீண்டும் அவன் திண்ணிய மார்பில் ஆச்சரியமாக படிய, அவனுக்கு எரிச்சலாகி விட்டது...
"இது வரைக்கும் பார்த்தது போதாதா? இந்த டவலையும் கழட்டவா?" என்று இடையில் இருந்த டவலில் அவன் கையை வைக்க, "ஐயோ" என்று சத்தம் போட்டபடி அவள் ஓடோடி வெளியேச் சென்றாள்.
அவனோ இடையில் இரு கைகளையும் வைத்து ஆழ்ந்த மூச்செடுத்தபடி கண்ணாடியைப் பார்த்தவன், 'இவளை எப்படி தான் நான் சமாளிக்க போறேனோ? நான் அவளை வச்சு செய்றதுக்கு முதல் அவ என்ன வச்சு செஞ்சிடுவா போல' என்று நினைத்துக் கொண்டான்...
அவனோ அலுமாரிக்குள் இருந்த வேஷ்டியை கட்டி முடித்து ஷேர்ட்டை போட்டுக் கொண்டே, ஷேர்ட்டின் கையை முட்டி வரை மடித்துக் கொண்டு இருந்த சமயம் அறைக்குள் நுழைந்தாள் ஆதிரையாழ்...
புடவை அணிந்து இருந்தாள்...
தலை பின்னி இருந்தாள்.
அவளை திரும்பி பார்த்தவனுக்கு நேற்று அவளை பார்த்ததில் இருந்து ஏதோ ஒன்று குறைவது போன்ற உணர்வு...
தன்னையும் மீறி, "குங்குமம் வைக்கலையா?" என்று கேட்டு விட்டான்...
கேட்ட பின்னர் தான் சற்று அதிகப்படியாக பேசுகின்றோம் என்று அவனுக்கு தோன்றியது...
அவளோ, "குங்குமம் மேசைல இருக்கு" என்று சொல்ல, அவனோ மேசையில் இருந்த குங்கும சிமிழை பார்த்து விட்டு, "சீக்கிரம் வா" என்று சொன்னபடி வெளியேறிச் செல்ல, அவளும் பெருமூச்சுடன் குங்குமத்தை வைத்து விட்டு அவனை தொடர்ந்துச் சென்றாள்.
அவள் வெளியே வந்ததும் தான் அவளுடன் சேர்ந்து கீழே இறங்கினான்...
தனியாகச் சென்றால் மருதநாயகம் ஒரு வழி செய்து விடுவார் என்று அவனுக்கு தெரியும்... அதனாலேயே அவளுக்காக காத்து நிற்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு... யாருக்கும் அவன் காத்து நின்றது இல்லை... இப்போது அவளுக்காக காத்துக் கொண்டே நின்று இருக்கின்றான்...
கீழே இருவரும் ஜோடியாக வருவதை பார்த்த அங்கே இருந்த பெண்மணியோ, "சுத்தி போடுங்க, என் கண்ணே பட்டிடும்" என்று சொன்னது மட்டும் இல்லாமல், அவர்கள் முன்னே வந்து நின்று கையால் சுற்றி நெட்டி முறித்தார்...
அவனோ வலுக்கட்டாயமாக சிரித்துக் கொண்டே சாப்பாட்டு மேசையில் இருந்த மருதநாயகத்தை அழுத்தமாக பார்த்துக் கொண்டே நடந்தான்...
அவருக்கோ இதழ்களுக்குள் ஒரு வெற்றி சிரிப்பு...
"வந்து இருந்து சாப்பிடுங்க" என்றார் அவர்...
சர்வஜித் அருகே ஆதிரையாழ் நடந்து வர, அவளுக்கு மறுபக்கம் வந்த எண்ணெய் குப்பி கொடுத்த பெண்மணியோ, "நான் கொடுத்தது உதவியா இருந்திச்சா?" என்று ஒரு வெட்க சிரிப்புடன் ஆதிரையாழிடம் கேட்டாள்.
ஆதிரையாழுக்கோ சட்டென புரையேற, தலையில் தட்டிக் கொண்டே, அந்த பெண்மணியை பார்த்தவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவே இல்லை...
இவர்களின் சம்பாஷணை சர்வஜித்துக்கும் கேட்டது...
சட்டென அந்த பெண்மணியை திரும்பி பார்த்தவன், "எல்லாமே யூஸ் ஆச்சு..." என்று அவன் சொல்லி முடிக்க முதல், "ஐயோ" என்று அந்த பெண்மணி முகத்தை மூடிக் கொண்டே வெட்கத்தில் ஓடி விட, அவனோ கடுப்பாக, 'இதுக்கு வெட்கம் தான் ஒரு கேடு' என்று நினைத்துக் கொண்டே அருகே வந்த ஆதிரையாழைப் பார்க்க, அவளோ அவனை நிமிர்ந்தும் பார்க்கவே இல்லை...
அவன் நேற்று கொடுத்த விளக்கத்தை அவள் மறந்து தான் இருந்தாள்...
காலையில் நினைவுப் படுத்தி விட்டார்கள் அல்லவா? இனி எங்கே அவன் முகத்தில் அவள் முழிப்பது...
மௌனமாக வந்து சாப்பிட அமர்ந்து விட்டாள்.
"நல்லா சாப்பிடுங்க ரெண்டு பேரும்" என்று சொல்லிக் கொண்டே சாப்பிட ஆயத்தமான மருதநாயகமோ, "சர்வா, உன்னோட கல்யாண ரெஜிஸ்ட்ரேஷன் டாக்குமெண்ட்ஸ் எல்லாம் இன்னைக்கே வந்திடும்... நான் ஏற்பாடு பண்ணிட்டேன்... விசாவுக்கு அப்ளை பண்ணிடு... நீ அங்கே பிசினஸ் பண்ணுறதால விசா கொடுக்க லேட் ஆகாது... கையோட யாழை அழைச்சிட்டு தான் போற... புரியுதா?" என்றார்...
அவன் எதிர்பார்த்தது தான்...
ஆனாலும் கடுப்பாக இருந்தது...
இல்லை என்று சொல்லவும் முடியாது...
அவ்வளவு சீக்கிரம் மருதநாயகத்தையும் ஏமாற்ற முடியாது...
அவரும் அந்த காலத்து அமெரிக்க வாசி ஆயிற்றே... அவனுக்கு இருந்த திறமையும் அறிவும் அவருக்கும் இருக்கும் அல்லவா? அவன் தாத்தா என்றால் கேட்கவும் வேண்டுமா? அவன் திறமையே அவரில் இருந்து தானே வந்தது...
பெருமூச்சு மட்டுமே அவனிடம்...
"உங்கள விட்டுட்டு எப்படி தாத்தா போறது?" என்று ஆதிரையாழ் கேட்டாள்.
சர்வஜித்துக்கு கடுப்பாகி விட்டது...
அவள் என்ன பேசினாலும் எரிச்சலாக வந்தது...
அவள் சொல்வதை எல்லாம் எதிர்க்க வேண்டும் என்று தான் நினைத்து இருந்தவன், "ஃப்லைட்ல தான்" என்று சொல்லிக் கொண்டே சாப்பிட்டான்...
அவர்கள் பேசுவதைக் கேட்டு சத்தமாக சிரித்த மருதநாயகமோ, "ஒரு கொள்ளு பேரனோ கொள்ளு பேத்தியோ பெத்து கொடு, அடுத்த ஃப்லைட் பிடிச்சு வந்திடுறேன்" என்று சொல்ல, அவளோ மனதுக்குள், 'போச்சு போ' என்று நினைத்துக் கொண்டாள்.
சர்வஜித்தோ, "அதுக்கென்ன அவசரம் இப்போ?" என்று கேட்க, அவனை முறைத்த மருதநாயகமோ, "இங்க பாருடா, அவ எண்ணி மூணு மாசத்துல வாந்தி எடுக்கணும்" என்றார்...
ஆதிரையாழோ, 'தாத்தா விட மாட்டார் போலவே' என்று நினைக்க, மருதநாயகத்தை அழுத்தமாக பார்த்த சர்வஜித்தோ, "அதுக்கெதுக்கு மூணு மாசம் வெய்ட் பண்ணனும்? இப்பவே எடுக்க வச்சுடலாம்" என்று சொல்லிக் கொண்டே ஆதிரையாழைப் பார்த்தவன் அருகே இருந்த கரண்டியை எடுத்துக் கொண்டே அவள் வாயை ஒற்றைக் கையால் அழுத்த, அவள் வாயும் சட்டென்று விரிந்தது... அடுத்த கணமே கையில் இருந்த கரண்டியை அவள் திணற திணற அவள் தொண்டைக்குழிக்குள் புகுத்தி விட, "அடேய் இந்த வாந்தி இல்லடா" என்று மருதநாயகம் அலற ஆரம்பித்து விட்டார்.
அவளோ குமட்டிக் கொண்டே வருவது போல சைகை செய்ய, அதன் பிறகே அவளை விட்டவன், "வாந்தி இப்படி தான் எடுக்க வைக்க முடியும்" என்றான்...
அவள் சென்றதுமே திரும்பி மல்லாக்க படுத்த சர்வஜித்தோ, இரு கைகளாலும் முகத்தை அழுந்த வருடிக் கொண்டே, "கீப் காம் சர்வா" என்று தன்னையே நிதானப்படுத்தினான்...
அவன் எத்தனையோ கோடி பிசினஸ் செய்தாலும் இப்படி டென்ஷன் ஆனது இல்லை...
இப்போது அவனால் தன்னிலை அடையவே முடியவில்லை...
அறைக்குள் இருக்கவும் முடியவில்லை...
அப்படியே எழுந்து பால்கனி பக்கம் நின்றுக் கொண்டான்...
குளிர்காற்று அவன் முகத்தில் பட்டு வீச, கொஞ்சம் இதமாக இருந்தது... மனமும் சமநிலை அடைந்தது...
சற்று நேரம் கழித்து மீண்டும் அறைக்குள் வந்தவன் கண்ணில் பட்டது என்னவோ ஆதிரையாழ் வைத்து விட்டு போன எண்ணெய் குப்பி தான்...
'இது என்ன?' என்று யோசித்துக் கொண்டே அதனை எடுத்துப் பார்த்தவன் புருவங்கள் இடுங்கவும் ஆதிரையாழ் அறைக்குள் தலையை துவட்டியபடி வரவும் நேரம் சரியாக இருந்தது...
அவனைக் கண்டதுமே, 'ஐயோ இவர் இன்னும் தூங்கலையா? கைல எண்ணெய் குப்பி வேற வச்சு இருக்கார்... தலைல ஊத்திடுவாரோ? அப்படி ஊத்தினாலும் என்னால இந்த குளிர்ல மறுபடி தலைக்கு குளிக்க முடியாது எண்ணெய் தானே... அப்படியே படுத்துடலாம்' என்று நினைத்துக் கொண்டே, தயங்கி தயங்கி உள்ளே வர, "எல்லாத்துக்கும் ரெடியா தான் அப்போ வந்து இருக்க" என்று ஒரு மார்க்கமான குரலில் கேட்டான்...
'ஐயோ இவர் எத கேக்கிறாருனு தெரியல' என்று நினைத்த ஆதிரையாழோ, எண்ணெய் குப்பியையும் அவனையும் மாறி மாறி பார்த்து விட்டு, "எனக்கு புரியல" என்றாள்.
"இத எதுக்கு கொண்டு வந்த?" என்று கேட்டான்.
அவளோ, "எனக்கு தெரியல... கொடுத்து விட்டாங்க, உங்க கிட்ட கேட்க சொன்னாங்க" என்று சொல்ல, அவன் விழிகளில் மீண்டும் அனல்...
"நான் என்ன டீச்சர் ஆஹ் இதெல்லாம் உனக்கு சொல்லி கொடுக்க?" என்று கடுப்பாக கேட்டான்...
"நான் ப்ளஸ் டூ தான் படிச்சு இருக்கேன்... ஆனா நீங்க பெரிய பெரிய படிப்பெல்லாம் படிச்சு இருக்கீங்க... அப்போ நீங்க சொல்லி தரலாமே" என்றாள்.
"அடிங்" என்று எண்ணெய் குப்பியை அவளை நோக்கி எறிவது போல சைகை செய்ய, அவளோ, "ஐயோ" என்று சொல்லிக் கொண்டே முகத்தை மூடிக் கொண்டாள்.
"படிப்புக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை... உனக்கெல்லாம் தெரிஞ்சு நடிக்கிற போலவே எனக்கு ஃபீல் ஆகுது" என்றான்...
அவளோ அவனை அதிர்ந்து பார்த்துக் கொண்டே, "சத்தியமா எனக்கு ஒன்னுமே தெரியல... இது எதுக்குனு சொல்லி தர்றீங்களா?" என்று கேட்டாள்.
அவனுக்கு அனுபவம் தான் இல்லை... கேள்வி ஞானம் அத்துப்படி தான்...
அவளை மேலிருந்து கீழ் பார்த்து விட்டு, "ஐ டோன்ட் க்னோ" என்றான்...
"உங்களுக்கும் இத பத்தி காலேஜ்ல சொல்லி கொடுக்கலையா?" என்று கேட்டாள்.
அவனுக்கு அவள் தலையில் கல்லை தூக்கி போடலாமா? என்கின்ற அளவுக்கு ஆத்திரம்...
"இதெல்லாம் அங்கே சொல்லி கொடுக்க மாட்டாங்க" என்றான் நறுக்கென்று...
"பக்கத்து வீட்டு அக்கா, எட்டாம் கிளாஸ் ஃபெயில்... அவங்களுக்கு தெரிஞ்சு இருக்கு... உங்களுக்கு தெரியாதா?" என்று அவளிடம் இருந்து அடுத்த கேள்வி...
அவனை ஒரே வார்த்தையில் அவமானப்படுத்தி விட்டாள்.
"எனக்கு தெரியும்" என்றான்...
அவளோ, "அப்போ சொல்லி கொடுங்க" என்றாள்.
அவளுக்கும் அந்த எண்ணெய் எதற்கு என்று அறிந்துக் கொள்ள ஆவல்...
"சொல்லி கொடுக்க நான் ரெடி... அப்புறம் நீ தான் வருத்தப்படுவ" என்றான்...
"இல்ல நான் மாட்டேன்" என்றாள் அவள்...
அவனோ, "சரி நீ நில்லு" என்று சொல்ல, அவளும் அவன் முன்னாடி நிற்க, அவளை பார்த்துக் கொண்டே கட்டிலில் அமர்ந்தவன், "இந்த எண்ணெய் பாட்டில் எதுக்குனா" என்று ஆரம்பித்து அவன் கேள்வி ஞானம் எல்லாம் அள்ளிக் கொட்டினான்...
அவன் சொல்ல சொல்ல, அதிர்ச்சியில் விரிந்த அவள் விழிகள், சங்கடத்திலும் கூச்சத்திலும் மூடிக் கொள்ள, சட்டென இரு கைகளாலும் காதை பொத்தியவள், "போதும் போதும் புரிஞ்சு போச்சு" என்றாள்.
அவனோ, "இன்னும் விளக்கம் வேணுமா?" என்று கேட்க, சட்டென மறுபக்கம் திரும்பிக் கொண்டவள், "ஐயோ வேணாம்" என்றாள்.
ஒரு ஆண்மகன் தன்னிடம் இப்படி வெளிப்படையாக பேசுவது அவளுக்கு என்னவோ போல ஆகி விட்டது...
அவனோ, "இது நமக்கு யூஸ் ஆகாது... குப்பைல போடு" என்று சொல்லிக் கொண்டே அதனை மீண்டும் மேசையில் வைத்தவன், படுத்து விட, அவளுக்கு அப்போது தான் மூச்சே வந்தது...
இப்போது அவளுக்கு எங்கே படுப்பது என்று தெரியவே இல்லை...
கட்டிலில் அவன் அருகே படுக்கும் அளவுக்கு தைரியம் இல்லை...
யோசித்துக் கொண்டே இருந்தவள் முகத்தில் வந்து விழுந்தது போர்வை...
"நிலத்துல விரிச்சிட்டு படு" என்று அவளை பார்க்காமல் சொல்லி இருந்தான் சர்வஜித்...
அவளும் அதனை நிலத்தில் விரித்துக் கொண்டே படுத்தவள் தூங்கிப் போனாள்...
அடுத்த நாள் காலையில் படுத்துக் கொண்டு இருந்தவளோ மெதுவாக கண் விழித்த சமயம் அவளுக்கு தெரிந்தது என்னவோ புஷ் அப்ஸ் செய்துக் கொண்டு இருந்த சர்வஜித் தான்...
ஷார்ட்ஸ் மற்றும் ஆர்ம் கட் அணிந்து இருந்தான்... கடினமான உடற்பயிற்சி செய்ய இங்கே உபகரணங்கள் இல்லை என்பதால் அறைக்குள் செய்ய கூடிய உடற்பயிற்சியை செய்துக் கொள்வான்...
அவனை வேஷ்டியில் பார்த்து பார்த்து, ஷார்ட்ஸில் பார்க்க வித்தியாசமாக இருந்தது அவளுக்கு...
தொடை வரை மட்டுமே அவன் ஷார்ட்ஸ் இருக்க, அவளுக்கோ கூச்சம்...
இப்போது எப்படி எழுவது என்றும் தெரியவில்லை...
எப்படியும் அவன் உடற்பயிற்சியை முடித்து விட்டு குளிக்கச் செல்வான் என்று அவள் அறிவாள். அப்போது எழுந்துக் கொள்ளலாம் என்று நினைத்து இருந்தாள் பெண்ணவள்...
மீண்டும் அவள் கண்களை மெதுவாக மூடிக் கொள்ள, ஒரு பதினைந்து நிமிடங்கள் கடந்து இருக்கும்... அப்படியே அயர்ந்தும் விட்டாள்.
சட்டென அவள் மூச்சு திணற, பதறி எழுந்தாள்... அவள் முகத்தில் நீரை ஊற்றி இருந்தான் சர்வஜித்...
அவளோ புடவை முந்தானையால் நீரை துடைத்து விட்டு அவனை விழி விரித்துப் பார்க்க, "இவ்ளோ நேரம் தூங்கிட்டு இருக்க?" என்று கேட்டுக் கொண்டே, தோளில் கிடந்த டவலினால் கழுத்தில் அரும்பி இருந்த வியர்வையை துடைத்துக் கொண்டான்...
அவனை பார்த்து இருந்தாள் பெண்ணவள், ஆனால் பதில் சொல்லவில்லை...
"நேரத்துக்கு சாப்பிட போகணும்... ஜோடியா வர சொல்லி பெருசோட உத்தரவு... இல்லனா என்னை வச்சு செஞ்சிடும்... குளிச்சிட்டு வரேன்... சீக்கிரம் ரெடி ஆகு" என்று சொல்லி விட்டு விறு விறுவென வெளியேறி குளியலறைக்குள் நுழைய அவளுக்கு அப்போது தான் மூச்சே வந்தது...
தட்டு தடுமாறி எழுந்தவள், படுத்து இருந்த போர்வையை மடித்து வைத்து விட்டு, உடைகளையும் எடுத்துக் கொண்டே நிற்க, இடையில் டவலுடன் அறைக்குள் நுழைந்தான் அவன்...
அவன் வந்த கோலத்தை பார்த்தவள் கையில் இருந்த அவள் புடவை நழுவி விழுந்தது...
விழிகளை விரித்துக் கொண்டே, அப்படியே பேயறைந்த போல நின்றாள்.
"முன்ன பின்ன ஆம்பிளைங்கள பார்த்தது இல்லையா? என்ன இப்படி பார்க்கிற?" என்று அவன் அதட்ட, சட்டென்று நிதானத்துக்கு வந்தவளோ கீழே கிடந்த புடவையை எடுத்துக் கொண்டே, தலையை குனிந்துக் கொண்டாள்.
"கேட்டதுக்கு பதில் சொல்லு" என்றான் அவன் மிரட்டல் குரலில்... அப்படியே கண்ணாடி முன்னே போய் நின்று அவன் தலையை கைகளால் துவட்டினான்.
அவளோ ஆழ்ந்த மூச்சை எடுத்தவள், "தோட்டத்துல வேலை செய்யுற ஆம்பிளைங்கள பார்த்து இருக்கேன்... இப்படி கட்டி கட்டியா இருக்காது... உடம்பெல்லாம் முடி இருக்கும்... உங்க முடி எல்லாம் கொட்டி போச்சா?" என்று கேட்டாள்.
தூக்கி வாரிப் போட்டது அவனுக்கு...
அவளை அதிர்ந்து பார்த்துக் கொண்டே, "இப்போ என்ன கேட்ட?" என்று கேட்டான் மீண்டும்...
சட்டென அவனை ஏறிட்டுப் பார்த்தவள் விழிகள் அவனது அடர்ந்த சிகையில் படிந்து மீள, "தலைல நிறைய முடி இருக்கு... நெஞ்சுல ஒன்னையும் காணோம்... கொட்டிடுச்சா?" என்று கேட்டாள்...
அவனுக்கு சுர்ரென்று கோபம்...
"பட்டிக்காடு, பட்டிக்காடு, ஷேவ் பண்ணி இருக்கேன்... எய்ட் பேக்ஸ் வச்சிட்டு முடியோட இருந்தா நல்லாவா இருக்கும்?" என்றான்...
"ஓஹ்" என்றாள் அவள் மார்க்கமாக...
"என்ன ஓஹ்? போய் குளிச்சிட்டு சீக்கிரம் ரெடி ஆகு..." என்றான்...
அவள் விழிகள் மீண்டும் அவன் திண்ணிய மார்பில் ஆச்சரியமாக படிய, அவனுக்கு எரிச்சலாகி விட்டது...
"இது வரைக்கும் பார்த்தது போதாதா? இந்த டவலையும் கழட்டவா?" என்று இடையில் இருந்த டவலில் அவன் கையை வைக்க, "ஐயோ" என்று சத்தம் போட்டபடி அவள் ஓடோடி வெளியேச் சென்றாள்.
அவனோ இடையில் இரு கைகளையும் வைத்து ஆழ்ந்த மூச்செடுத்தபடி கண்ணாடியைப் பார்த்தவன், 'இவளை எப்படி தான் நான் சமாளிக்க போறேனோ? நான் அவளை வச்சு செய்றதுக்கு முதல் அவ என்ன வச்சு செஞ்சிடுவா போல' என்று நினைத்துக் கொண்டான்...
அவனோ அலுமாரிக்குள் இருந்த வேஷ்டியை கட்டி முடித்து ஷேர்ட்டை போட்டுக் கொண்டே, ஷேர்ட்டின் கையை முட்டி வரை மடித்துக் கொண்டு இருந்த சமயம் அறைக்குள் நுழைந்தாள் ஆதிரையாழ்...
புடவை அணிந்து இருந்தாள்...
தலை பின்னி இருந்தாள்.
அவளை திரும்பி பார்த்தவனுக்கு நேற்று அவளை பார்த்ததில் இருந்து ஏதோ ஒன்று குறைவது போன்ற உணர்வு...
தன்னையும் மீறி, "குங்குமம் வைக்கலையா?" என்று கேட்டு விட்டான்...
கேட்ட பின்னர் தான் சற்று அதிகப்படியாக பேசுகின்றோம் என்று அவனுக்கு தோன்றியது...
அவளோ, "குங்குமம் மேசைல இருக்கு" என்று சொல்ல, அவனோ மேசையில் இருந்த குங்கும சிமிழை பார்த்து விட்டு, "சீக்கிரம் வா" என்று சொன்னபடி வெளியேறிச் செல்ல, அவளும் பெருமூச்சுடன் குங்குமத்தை வைத்து விட்டு அவனை தொடர்ந்துச் சென்றாள்.
அவள் வெளியே வந்ததும் தான் அவளுடன் சேர்ந்து கீழே இறங்கினான்...
தனியாகச் சென்றால் மருதநாயகம் ஒரு வழி செய்து விடுவார் என்று அவனுக்கு தெரியும்... அதனாலேயே அவளுக்காக காத்து நிற்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு... யாருக்கும் அவன் காத்து நின்றது இல்லை... இப்போது அவளுக்காக காத்துக் கொண்டே நின்று இருக்கின்றான்...
கீழே இருவரும் ஜோடியாக வருவதை பார்த்த அங்கே இருந்த பெண்மணியோ, "சுத்தி போடுங்க, என் கண்ணே பட்டிடும்" என்று சொன்னது மட்டும் இல்லாமல், அவர்கள் முன்னே வந்து நின்று கையால் சுற்றி நெட்டி முறித்தார்...
அவனோ வலுக்கட்டாயமாக சிரித்துக் கொண்டே சாப்பாட்டு மேசையில் இருந்த மருதநாயகத்தை அழுத்தமாக பார்த்துக் கொண்டே நடந்தான்...
அவருக்கோ இதழ்களுக்குள் ஒரு வெற்றி சிரிப்பு...
"வந்து இருந்து சாப்பிடுங்க" என்றார் அவர்...
சர்வஜித் அருகே ஆதிரையாழ் நடந்து வர, அவளுக்கு மறுபக்கம் வந்த எண்ணெய் குப்பி கொடுத்த பெண்மணியோ, "நான் கொடுத்தது உதவியா இருந்திச்சா?" என்று ஒரு வெட்க சிரிப்புடன் ஆதிரையாழிடம் கேட்டாள்.
ஆதிரையாழுக்கோ சட்டென புரையேற, தலையில் தட்டிக் கொண்டே, அந்த பெண்மணியை பார்த்தவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவே இல்லை...
இவர்களின் சம்பாஷணை சர்வஜித்துக்கும் கேட்டது...
சட்டென அந்த பெண்மணியை திரும்பி பார்த்தவன், "எல்லாமே யூஸ் ஆச்சு..." என்று அவன் சொல்லி முடிக்க முதல், "ஐயோ" என்று அந்த பெண்மணி முகத்தை மூடிக் கொண்டே வெட்கத்தில் ஓடி விட, அவனோ கடுப்பாக, 'இதுக்கு வெட்கம் தான் ஒரு கேடு' என்று நினைத்துக் கொண்டே அருகே வந்த ஆதிரையாழைப் பார்க்க, அவளோ அவனை நிமிர்ந்தும் பார்க்கவே இல்லை...
அவன் நேற்று கொடுத்த விளக்கத்தை அவள் மறந்து தான் இருந்தாள்...
காலையில் நினைவுப் படுத்தி விட்டார்கள் அல்லவா? இனி எங்கே அவன் முகத்தில் அவள் முழிப்பது...
மௌனமாக வந்து சாப்பிட அமர்ந்து விட்டாள்.
"நல்லா சாப்பிடுங்க ரெண்டு பேரும்" என்று சொல்லிக் கொண்டே சாப்பிட ஆயத்தமான மருதநாயகமோ, "சர்வா, உன்னோட கல்யாண ரெஜிஸ்ட்ரேஷன் டாக்குமெண்ட்ஸ் எல்லாம் இன்னைக்கே வந்திடும்... நான் ஏற்பாடு பண்ணிட்டேன்... விசாவுக்கு அப்ளை பண்ணிடு... நீ அங்கே பிசினஸ் பண்ணுறதால விசா கொடுக்க லேட் ஆகாது... கையோட யாழை அழைச்சிட்டு தான் போற... புரியுதா?" என்றார்...
அவன் எதிர்பார்த்தது தான்...
ஆனாலும் கடுப்பாக இருந்தது...
இல்லை என்று சொல்லவும் முடியாது...
அவ்வளவு சீக்கிரம் மருதநாயகத்தையும் ஏமாற்ற முடியாது...
அவரும் அந்த காலத்து அமெரிக்க வாசி ஆயிற்றே... அவனுக்கு இருந்த திறமையும் அறிவும் அவருக்கும் இருக்கும் அல்லவா? அவன் தாத்தா என்றால் கேட்கவும் வேண்டுமா? அவன் திறமையே அவரில் இருந்து தானே வந்தது...
பெருமூச்சு மட்டுமே அவனிடம்...
"உங்கள விட்டுட்டு எப்படி தாத்தா போறது?" என்று ஆதிரையாழ் கேட்டாள்.
சர்வஜித்துக்கு கடுப்பாகி விட்டது...
அவள் என்ன பேசினாலும் எரிச்சலாக வந்தது...
அவள் சொல்வதை எல்லாம் எதிர்க்க வேண்டும் என்று தான் நினைத்து இருந்தவன், "ஃப்லைட்ல தான்" என்று சொல்லிக் கொண்டே சாப்பிட்டான்...
அவர்கள் பேசுவதைக் கேட்டு சத்தமாக சிரித்த மருதநாயகமோ, "ஒரு கொள்ளு பேரனோ கொள்ளு பேத்தியோ பெத்து கொடு, அடுத்த ஃப்லைட் பிடிச்சு வந்திடுறேன்" என்று சொல்ல, அவளோ மனதுக்குள், 'போச்சு போ' என்று நினைத்துக் கொண்டாள்.
சர்வஜித்தோ, "அதுக்கென்ன அவசரம் இப்போ?" என்று கேட்க, அவனை முறைத்த மருதநாயகமோ, "இங்க பாருடா, அவ எண்ணி மூணு மாசத்துல வாந்தி எடுக்கணும்" என்றார்...
ஆதிரையாழோ, 'தாத்தா விட மாட்டார் போலவே' என்று நினைக்க, மருதநாயகத்தை அழுத்தமாக பார்த்த சர்வஜித்தோ, "அதுக்கெதுக்கு மூணு மாசம் வெய்ட் பண்ணனும்? இப்பவே எடுக்க வச்சுடலாம்" என்று சொல்லிக் கொண்டே ஆதிரையாழைப் பார்த்தவன் அருகே இருந்த கரண்டியை எடுத்துக் கொண்டே அவள் வாயை ஒற்றைக் கையால் அழுத்த, அவள் வாயும் சட்டென்று விரிந்தது... அடுத்த கணமே கையில் இருந்த கரண்டியை அவள் திணற திணற அவள் தொண்டைக்குழிக்குள் புகுத்தி விட, "அடேய் இந்த வாந்தி இல்லடா" என்று மருதநாயகம் அலற ஆரம்பித்து விட்டார்.
அவளோ குமட்டிக் கொண்டே வருவது போல சைகை செய்ய, அதன் பிறகே அவளை விட்டவன், "வாந்தி இப்படி தான் எடுக்க வைக்க முடியும்" என்றான்...