ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 5

pommu

Administrator
Staff member
அத்தியாயம் 5

அவளும் அவனை விட்டு விலகாது அவன் மார்பில் முகம் புதைக்க அவனோ ஒரு கணம் சங்கடப்பட்டு தான் போனான். "நீ இன்னொருவன் பொண்டாட்டி ஆக போற பொண்ணுடி" என்று அவன் சீறியபடி அவளை ஆக்ரோஷமாக விலக்கி விட, அவனை எரித்து விடுவது போல பார்த்த நதீகா "இன்னொரு தடவை இப்படி பேசுனா கொன்னுடுவேன்" என்றபடி மீண்டும் தனது மேனி முழுதும் அவனில் உரச அவன் கழுத்தை பாய்ந்து கட்டிக் கொண்டவள் அவன் காலில் தனது காலை வைத்து ஏறி நின்று அவன் கன்னத்தை கடிக்க " ஆஹ்.. வலிக்குதுடி ராட்சஷி " என்று கத்தினான். அவளோ " பேசுன பேச்சுக்கு இன்னும் வலிக்கட்டும் " என்றபடி அவன் உடலில் தனது முழு பாரத்தையும் வைத்து அவன் முகத்தை வலுக்கட்டாயமாக தன்னை நோக்கி திருப்பியபடி அவன் இதழில் தனது பற் தடங்களை பதிக்க அவனோ பேச முடியாமல் திணறி போனான். அடுத்த கணமே அவள் தோள்களில் கை வைத்து தள்ளியவன் " பொண்ணா நீ... என்னை இப்படி பலாத்காரம் பண்றியே " என்றபடி தனது காயம் பட்ட இதழ்களை பெருவிரலால் வருடியபடி பக்கவாட்டாக திரும்பியவன் மயங்கி விழாத குறையாக அதிர்ந்து நின்றான்.

ஆம் அங்கு கதவை திறந்தபடி நின்றது வேறு யாரும் இல்லை அவளது தந்தை பாண்டியன் தான். தம்பியுடன் திருமணத்தை வைத்துக் கொண்டு அண்ணனுடன் சில்மிஷம் செய்யும் மகளைக் கண்டவர் மயங்கி விழாத குறையாக அதிர்ந்து நின்றார்.

அவரைக் கண்டதுமே ஆதித் சற்றே தடுமாறி போக, நதீகாவும் கொஞ்சம் சங்கடப்பட்டு தான் போனாள். உடனே பாண்டியன் " சீக்கிரம் கீழே வாம்மா" என்றபடி வெளியேறியவர்க்கு ஆதித்தை கண்டிக்கவும் தைரியம் இருக்கவில்லை. மகளை கண்டிக்க அதற்கும் மேல் பயந்து போனார்.



அவரை தொடர்ந்து வெளியேற போன ஆதித் ஒரு கணம் சங்கடத்துடன் நின்ற நதீகாவை பார்த்து விட்டு வெளியேறினான். அவளும் கண்களை மூடி சுவரில் சாய்ந்து நின்ற போது உடலின் ஒவ்வொரு அணுவும் ஆதித்தையே நாடியது. சற்று முன்னர் அவன் இதழ்களை தீண்டிய இதழ்களை வருடியவளுக்கு அவனது பிரத்தியேக வாசனை இன்னும் நாசியை தாக்க அவன் தனக்கு கிடைக்காமல் போய் விடுவானோ என்று முதல் முறை பயந்து போனாள் .. அவனை விட்டு கொடுக்கும் மன நிலையும் அவளுக்கு அப்போது இருக்கவில்லை. கண்களால் வழிந்த கண்ணீரை துடைத்தபடி மாடியில் இருந்து இறங்கியவளை மிதுன் விழி விரித்து ரசனையாக பார்க்க , ஆதித் அவள் பக்கமே திரும்பவில்லை.

பாண்டியனோ இதயம் படபடக்க அமர்ந்து இருந்தவருக்கு முடிவெடுக்கும் தைரியம் கொஞ்சமும் இருக்கவில்லை. அதே சமயம் கீழே இறங்கி வந்த நதீகா சபையினரை பார்த்து வலுக்கட்டாயமாக புன்னகைக்க மதுபாலாவோ " என்ன நதி சொல்லி வச்சு டிரஸ் பண்ணி இருக்கீங்களா ? " என்று மிதுனின் ஷேர்ட் மற்றும் நதீகாவின் புடவையை பார்த்து சொல்ல " இது அவ வாங்கி கொடுத்தது தான் " என்றான் மிதுன் வெட்கத்துடன்.

உடனே மதுபாலா " அட அந்தளவுக்கு போய்டுச்சா " என்று சிரிப்புடன் கேட்க இப்பொது குழம்பி போனது என்னவோ பாண்டியன் தான். அங்கிருந்த இருக்கையில் அமர்ந்த நதீகாவை பார்த்த மதுபாலா மிதுனிடம் கையில் இருந்த மோதிரத்தை கொடுத்து " போட்டு விடு " என்று சொல்ல நதீகாவுக்கோ நெஞ்சில் நீர் வற்றி போனது. மனம் முழுதும் ஆதித்தை வைத்துக் கொண்டு மிதுன் கையால் மோதிரத்தை எப்படி பெற்றுக் கொள்ள முடியும்??

தன்னை நோக்கி சிரிப்புடன் எழுந்து வந்த மிதுனை பார்த்தவள் ; ஆதித்தை கடைக் கண்ணால் பார்க்க அவனோ மார்புக்கு குறுக்கே கையை கட்டியபடி இறுகிய முகத்துடன் அசையாமல் நின்று இருந்தான்.

அவளுக்கோ இதயம் வெளியில் கேட்குமளவுக்கு துடிக்க எப்படி இந்த மோதிரம் போடுவதை நிறுத்துவது என்று தெரியாமல் திணறி போனாள் .. அடுத்த கணமே டீபாயில் இருந்த தண்ணீர் கிளாஸை எடுப்பது போல தட்டி விட அதுவோ கீழே விழுந்து நொறுங்கியது.

அந்த சம்பவத்தை ஆதித் புருவ முடிச்சுடன் பார்க்க இவளோ விழுந்த கண்ணாடி துண்டுகளை எடுக்கும் தோரணையில் தாராளமாகவே விரல்களில் காயங்களை உண்டாக்க ரத்தமோ பீச்சி அடித்தது. உடனே மிதுன் " ஐயோ " என்று பதறி அவளை நோக்கி செல்ல முதலே ரெண்டெட்டில் அவளை கையை பிடித்து எழுப்பிய ஆதித் தனது கையில் இருந்த டிஸ்ஸுவினால் அவள் காயத்தை அழுத்தியபடி அவளிடமே டிஸ்ஸுவை கொடுத்தபடி கையை விட்டான். அவன் முகம் அது வரை எந்த உணர்ச்சியையும் காட்டாமல் இருக்க மிதுனா " பெரிய காயமா?? " என்றபடி அவளை நோக்கி செல்ல " இல்ல ரெண்டு நாளில ஓகே ஆய்டும் " என்றவள் அவன் கரம் தன்னில் படாமல் லாவகமாக விலகி கொண்டாள் .. அனைத்தையும் மௌனமாக அவதானித்த பாண்டியனுக்கோ முடிவெடுக்க அவகாசம் தேவைப்பட , நடப்பதை சலிப்புடன் பார்த்துக் கொண்டு இருந்த மதுபாலாவிடம் " மேடம் அபசகுனம் போல தெரியுது கொஞ்சம் தள்ளி போடலாமா? " என்று கேட்டவரின் வாய் அவளது அனல் தெறிக்கும் பார்வையில் கப்பென்று மூடிக் கொண்டது. மதுபாலாவோ " இது சும்மா ஆக்சிடென்ட்... சொன்ன நாள் தேதில கல்யாணம் நடக்கலைன்னா இத விட பெரிய ஆக்சிடென்ட் நடக்கும் பாண்டியன் " என்று வெளிப்படையாகவே மிரட்ட அங்கிருந்த அனைவரும் ஒரு கணம் ஆடி தான் போனார்கள் ஆதித் மதுபாலா உட்பட..

உடனே பாண்டியன் எச்சிலை விழுங்கியபடி சம்மதமாக தலையாட்ட நதீகாவோ விக்கித்து நின்றாள்..ஆனாலும் அவளுக்கு இந்த நிச்சயதார்த்த மோதிரம் அவள் கையில் அணிவிக்கப்படாதது நிம்மதியா தான் இருந்தது.. மிதுன் பெற்ற தோல்வியை மூடி மறைக்க அவசர அவசரமாக கல்யாண திகதி குறிக்கப்பட்டு இருக்க , பெண் பார்க்கும் படலத்தை முடித்து விட்டு மாப்பிள்ளை வீட்டினர் கிளம்பி விட்டார்கள்.

இரு நாட்கள் கழித்து , அன்று ஞாயிற்றுக் கிழமை. , நதீகாவுக்கு அழைத்த மதுபாலா அவளை உடை எடுக்க வீட்டுக்கு வர சொல்ல அவளும் வேறு வழி இல்லாமல் மதுபாலா வீட்டுக்கு சென்றாள் .. இதுவே இருதரப்பு காதல் என்றால் நதீகாவே பயம் இன்றி பேசி இந்த கல்யாணத்தை நிறுத்தி இருப்பாள் .. ஒரு பக்க காதலை வைத்துக் கொண்டு அவளால் என்ன தான் செய்ய முடியும்... ??

உள்ளே வந்தவளிடம் கடல் போல புடவைகளையோ எடுத்து அங்கு வந்த கடைக்காரன் போட அவளோ " நீங்களே செலெக்ட் பண்ணிடுங்க மேடம் " என்றாள் ...

மதுபாலாவோ " இல்ல நதி நீயே பண்ணிடு " என்று சொல்ல நதிகாவோ வலுக்கட்டாயமாக சிரித்தபடி " இந்த பைல்ல ஆதித் கிட்ட சைன் வாங்கணும் மேடம்..வாங்கிட்டு வந்து செலக்ட் பண்றேன் " என்று சொன்னாள்

." ஞாயிற்று கிழமையிலயும் வேலையா? உன் கடமை உணர்ச்சிக்கு அளவிலாம போயிட்டு.. ஆதித் மொட்டை மாடில நிற்கிறான். " என்று சொல்ல அவளும் வலுக்கட்டாயமாக சிரித்தபடி மாடி ஏறினாள் ..

மொட்டை மாடிக்கு ஆதித்தை தேடி வந்தவள் கொஞ்சம் அதிர்ந்து தான் போனாள்... அவனோ புகைத்துக் கொண்டு இருப்பதை பார்த்து அருகே வந்தவள் " நீங்க ஸ்மோக் பண்ணுவீங்களா? " என்று கேட்க அவனோ " ம்ம்... அதுக்கும் மேலயே பண்ணுவேன்... உனக்கென்ன " என்று எடுத்தெறிந்து பேச " நான் தானே அத பத்தி பீல் பண்ணனும் " என்று சொன்னாள் .. அவனும் அவளை மேலிருந்து கீழ் பார்த்து விட்டு மீண்டும் சிகரெட்டை வாயில் வைக்க போக அதனை பறித்து எறிந்தவள் " கொஞ்சம் பேசணும் " என்றாள் .. அவனும் " ஏய் !! " என்று சீறியவன் தன்னை நிலைப்படுத்த தலையை கோதியபடியே " என்ன பேசணும் " என்றான்.

அவளும் " நம்ம விஷயத்தை பத்தி. . "என்று ஆரம்பிக்க கை நீட்டி தடுத்தவன் " வாட்?? நம்ம விஷயமா? உன் விஷயம்னு சொல்லு " என்று சொன்னவன் மேலும் " ஒழுங்கு மரியாதையா மிதுனை கல்யாணம் பண்ணிக்க.. உன்னால என் வேலையில் என்னால கன்சிடர் பண்ணவே முடில.. " என்று சொன்னவன் தனது இடையில் கை குற்றி மேலிருந்து கீழ் பார்த்தான். அவளோ சற்றும் அசராமல் " அதெல்லாம் தெரியாது என் கழுத்துல நீங்க தான் தாலி கட்டணும் " என்றவள் தனது மூக்கை பொத்தியப்படி " இந்த ஸ்மெல் எனக்கு குமட்டிண்டு வருது " என்க " ஆஹான் " என்றவன் மேலும் " அது தான் நீ என்ன லவ் பண்ற தானே .. கல்யாணம் பண்ணிகிட்டா இதெல்லாம் லைஃப் லாங் அட்ஜர்ஸ்ட் பண்ணிக்கணும் ...என்னம்மா பண்ண போற?? " என்று சற்று அவள் முகத்துக்கு நேரே குனிந்து ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டான். அவளோ அவன் கண்களை நேரே பார்த்து " அட்ஜஸ்ட் பணிப்பென் " என்று அவன் இதழில் இதழ் பதிக்க போக.. நூலளவு இடைவெளியில் விலகிக் கொண்டவன் அவளை அனல் தெறிக்க பார்த்தான்.

அவளோ அவனை ஏறிட்டு பார்த்தவள் " நீங்களே மனச்சாட்சியை தொட்டு சொல்லுஙக...நான் மிதுனை கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழ முடியுமா? " என்று கேட்க அந்த கேள்வியில் அவன் தடுமாறி தான் போனான். பெருமூச்சுடன் " நான் ஒண்ணும் நீ நினைக்கிற போல நல்லவன் இல்ல...ட்ரின்க் பண்ணுவேன்...பொண்ணுங்க கூட பழக்கம் எல்லாம் இருக்கு " என்றவன் அவளை பார்க்காமல் பக்கவாட்டாக பார்த்தபடி நின்றான். அவளோ " ட்ரின்க் பண்றது ஓகே.. நம்புறேன்.. பொண்ணுங்க கூட பழக்கம் எல்லாம் இருக்க முடியாது.. அப்படீனா என் கிட்ட எப்போவோ பெனிஃபிட் எடுத்து இருப்பீங்க ..." என்று சொல்லி அவன் தாடையை தன்னை நோக்கி திருப்பியவள் " இப்போ சொல்றேன்... வாழ்ந்தா அது உங்க கூட தான்... இந்த கல்யாணத்தை நிறுத்தி என்னை கல்யாணம் பண்ணிக்கல?? " என்று கேட்க தனது தாடையில் இருந்த அவள் கையை அகற்றியவன் " என்னடி பண்ணுவ?? " என்று கேட்க அவளோ " உங்கள கொன்னுட்டு நானும் செத்துடுவேன் " என்று சொன்னவள் " வராட்டா " என்றபடி செல்ல அவள் முதுகை அவன் வெறித்து பார்த்தான்... அவளோ அவனை திரும்பி பார்த்தவள் "கண்டிப்பா சொன்னது நடக்கும்" என்று விரல் நீட்டி எச்சரிக்க அப்போது தான் அவளது கட்டு போடப்பட்டு இருந்த கையை பார்த்தவன் மிக மிக மென்மையான குரலில் "கை எப்படி இருக்கு?" என்று கேட்டான். அவளோ " அந்த வலி போயிடும்.. ஆனா உங்கள விட்டு கொடுதிட்டேன்னா அந்த வலி எப்போவுமே போகாது " என்று சொல்ல அவனோ இடையில் இரு கைகளையும் குற்றி "ஊப் " என்றவன் "இங்க வாயேன்" என்று அழைத்தான். அவளும் அவனை நோக்கி பூரிப்புடன் செல்ல, அவள் காதை பிடித்து திருகியவன் அவள் "ஆ" என்று அலறியதையும் பொருட்படுத்தாமல் "இன்னொரு தடவை இப்படி பேசிட்டு இருந்தா நீ தற்கொலை பண்ண தேவல நானே உன்னை கொன்னுடுவேன்.," என்று சொல்ல அவன் கையை தட்டி விட்டவள் " கொன்னாலும் ஆவியா வந்தாச்சும் டாச்சர் பண்ணுவேன்" என்றவள் அவன் முகத்தை ஏறிட்டு பார்த்தாள். அவனோ "நீ திருந்தவே மாட்டியாடி" என்று கேட்க அவளோ "காதலிக்கிறது தப்பா என்ன? திருந்துறதுக்கு?" என்று கேட்டாள் .

"உனக்கு மட்டும் இல்ல, உன்னால எல்லாருக்கும் சங்கு தான் ,, புரிஞ்சு நடந்துக்கோ " என்று மறைமுகமாக மதுபாலாவை பற்றி சொல்ல, " எப்படி இருந்தாலும் அவங்க என் அத்தை தானே,, சோ பார்த்துக்கலாம்" என்றவள் அவன் முகத்தை காதலுடன் பார்த்து " ட்ரிம் பண்ணினது நல்லா இருக்கு" என்று அவன் தாடி மீசையை பார்த்து சொல்ல "அது எனக்கே தெரியும்,, நீ கிளம்பு" என்று வாசலை காட்டினான். அவளும் இரு கண்களை சிமிட்டி விட்டு வெளியேற , அவள் முதுகை வெறித்து பார்த்து விட்டு மீண்டும் இயற்கையின் பக்கம் திரும்பியவனின் முகம் இறுகி போனது.
 

CRVS2797

Active member
அந்தாதி நீ தானே...!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மூ
( Part - 2 அத்தியாயம் -5)


அட ராமா...! இந்த ஆதித்தும் நதீகாவும் என்ன நினைக்கிறாங்கன்னே தெரியலையே...? எப்படியும் இவனும் மதுபாலாவோட பையன்ங்கிற பட்சத்துல இந்த கல்யாணத்துக்கு அவ எதிர்ப்பு சொல்லுவாளாங்கிற கேள்வி எழுந்தாலும், முதல்ல இந்த ஆதித் நதீகாவை காதலிக்கிறான, இல்லையான்னே தெரியலையே...? ஒருபக்கம் பார்த்தால காதலிக்கிற மாதிரி தெரிஞ்சாலும், இன்னொரு பக்கம் இதுவும் அரசியல் சூழ்ச்சியோன்னு தோண வைக்குறதை தடுக்க முடியலையே..? அய்யோ தேவுடா !
வை திஸ் கன்ஃப்யூசன் ?


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
ஓ... ஆதித் என்ன முடிவு எடுக்கப்போறான்..
லவ் பண்ணா மாறியும் தெரியுது... அவன் மதுபாலாவை பழி வாங்க தான் வந்திருக்கான். இடைசொருகள் இந்த லவ் வேற😔 கண்டிப்பா எல்லோருக்கும் சங்கு தான் ஆனா யார் யார் என்ன நினைக்குறாங்கன்னு ஒன்னும் புரியல ஒரே மர்மமாவே இருக்கு
Today episode is nice
 
Top