அத்தியாயம் 4
இப்படியே கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் கடந்து இருக்கும்.
ஜெயாவோ, "நிரூபன் எப்படி இருக்கான்? அந்த பொண்ண அனுப்பிட்டியா?" என்று அடிக்கடி அலைப்பேசியில் அழைத்து கேட்க, "அதெல்லாம் பார்த்துக்கிறேன்" என்று சமாளித்து இருந்தான் தேவ்...
பத்மா அவன் வீட்டில் தான் இருந்தாள்...
ரத்னத்துடன் உரிமையுடன் பழக ஆரம்பித்து விட்டாள்.
தேவ் மற்றும பத்மா பேசிக் கொள்வதே இல்லை...
இரவில் சாப்பிடும் போது எப்போவாவது பார்த்துக் கொள்வார்கள் அவ்வளவு தான். பத்மாவுக்கு ரத்னத்தை பிடித்தும் விட்டது...
அன்பாக அவளை கையாள்பவர் அவர்...
தங்கையின் வாழ்க்கையை அழித்த
எந்த வன்மமும் அவளிடத்தில் அவருக்கு இல்லை...
அன்று இரவு ஒன்றாக தான் இருவரும் சமைத்துக் கொண்டு இருந்தார்கள்...
"ஏன் மா நீ யாரையும் லவ் பண்ணுறியா?" என்று கேட்க, இதழ்களை பிதுக்கினாள் அவள்...
"கல்யாணம் பண்ணுற வயசுல?" என்று கேட்டார்...
"என்னை யாரு மாமா கல்யாணம் பண்ணிக்க போறா" என்று அவள் வார்த்தைகள் சலிப்பாக வர, "உனக்கென்னம்மா குறைச்சல்?" என்று கேட்டார்.
"பிறப்பு சரி இல்லையே" என்று சொன்னவள் குரலில் எத்தனை வலி என்று அவருக்கு புரிய, "ஒரு நல்லவன் கண்டிப்பா வருவான்" என்று சொன்னார் அவர்...
அவள் அதற்கு பதில் சொல்லவே இல்லை.
"உனக்கு மாப்பிள்ளை எப்படி வேணும்?" என்று கேட்டார்.
"முதல் என்னை கட்டிக்க யாரு மாமா சம்மதம் சொல்லுவா?" என்று கேட்க, "யாரும் சொல்லிடான்னா உனக்கு ஓகே தானே" என்று கேட்டார்.
"படிச்சு, நல்லவனா இருந்தா போதும்" என்றாள் அவள்...
"அவ்ளோ தான்" என்று சிரித்தபடி சொல்லிக் கொண்டார் ரத்னம்.
வீட்டினுள் நுழைந்த தேவ் உடைய காதுகளில் அவர்கள் பேசுவது தெளிவாக விழ, அவற்றை கேட்டுக் கொண்டே தான் அறைக்குள் நுழைந்து இருந்தான்...
அடுத்த நாள் சனிக்கிழமை...
ஓய்வில்லாமல் ஓடி திரியும் தேவ், அன்று உலக அதிசயமாக வீட்டில் இருக்க, அவன் அருகே வந்து அமர்ந்த ரத்னமோ, "டேய் உன் கிட்ட முக்கியமா ஒரு விஷயம் பேசணும்" என்றார்.
"ம்ம் சொல்லுங்க" என்று சொன்னபடி, அலைப்பேசியில் இருந்து விழிகளை அகற்றி அவரைப் பார்த்தான்.
"பத்மாவுக்கு மாப்பிள்ளை பார்க்கணும்" என்று சொன்ன ரத்னத்தை ஆழ்ந்து பார்த்தான் தேவ்...
இதனை கேட்டுக் கொண்டே, அறைக் கதவடியில் நின்ற பத்மாவோ, "இப்போ என்ன அவசரம் மாமா??" என்று கேட்க, "கல்யாணம் பண்ணுற வயசும்மா உனக்கு..." என்று சொன்னவரோ தேவ்விடம், "நல்ல மாப்பிள்ளையா பாருப்பா" என்றார் அவர்.
"என்னை பார்த்தா உங்களுக்கு மாப்பிள்ளை போல தெரியலையா ??" என்று பத்மாவை பார்த்துக் கொண்டே கேட்க, அவளுக்கு சட்டென புரையேற இருமிக் கொண்டே அவனை அதிர்ந்து பார்த்தாள்.
ரத்னத்துக்கும் அவன் பேச்சு அதிர்ச்சியை கொடுக்க, "என்னடா சொல்ற?" என்று கேட்டார்...
"நானே கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்" என்றான் அவரை பார்த்துக் கொண்டே...
பத்மா அவசரமாக இல்லை என்று தலையாட்ட, இப்போது அவன் நீல நிற விழிகளால் அவளை ஆழ்ந்து பார்த்தான்...
எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டாள்.
ரத்னமோ, "ஜெயாவுக்கு தெரிஞ்சா என்னாகும் தெரியுமா?" என்று கேட்க, "பார்த்துக்கலாம்" என்றான்.
"ரிஸ்க் பா" என்றார்.
"உங்களுக்கு ஓகேயா இல்லையான்னு மட்டும் சொல்லுங்க" என்று சொல்ல, "எனக்கு சந்தோஷம் தான்... பத்மா நல்ல பொண்ணு" என்றவரோ, பத்மாவைப் பார்த்துக் கொண்டே, "நீ என்னம்மா சொல்ற?" என்று கேட்டார்.
"எனக்கு இது சரியா படல மாமா" என்றான்.
"ஏன்?" என்று தேவ் கேட்க, அவளும், "நிறைய பிரச்சனை வரும்" என்றாள்.
"அத அப்புறம் பார்த்துக்கலாம், இந்த கல்யாணத்துக்கு நீ சம்மதிக்கிற" என்றான் அழுத்தமாக...
அவளுக்கு கோபமும் வந்தது...
அவன் இஷ்டப்படி அவளை ஆட்டி வைக்க விரும்புகின்றானே...
இல்லை என்று தலையாட்டியவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே எழுந்தவன், அவளை நோக்கி அடி மேல் அடி வைத்து வர, அவளுக்கு உள்ளுக்குள் உதறல்.
கதவு நிலையில் ஒன்றிப் போனாள்.
"உள்ளே வா" என்று சொல்லிக் கொண்டே, அவளது அறைக்குள் செல்ல, அவளுக்கோ அதிர்ச்சி...
தனியாக தனது படுக்கை அறைக்குள் அழைக்கின்றான்...
ஹாலில் தான் ரத்னம் இருக்கின்றார்...
ஒரு மாதிரி ஆகி விட, "மாமா" என்று அவரை பதட்டமாக அழைக்க, "என்னன்னு கேட்டுட்டு வாம்மா" என்றார்.
மகன் மீது அவருக்கு தான் அலாதி நம்பிக்கை ஆயிற்றே...
உள்ளே நுழைந்தவனோ, "கம் இன்" என்றான் மீண்டும்...
அவளும் தயக்கமாக உள்ளே நுழைய, கதவை தாழிட்டான்...
சுவரில் சாய்ந்து பெண்ணவள் நின்று இருக்க, குரலை செருமிக் கொண்டே, அவள் அருகே வந்தவனோ, "என்னடி ரொம்ப ஓவரா பண்ணுற?" என்றான்...
தைரியத்தை வரவழைத்துக் கொண்டே, அவனை ஏறிட்டுப் பார்த்தவள், "நீங்க எதுக்கு இந்த முடிவை எடுத்தீங்க?" என்று கேட்க, "ஆஹ் பொண்ணு கிடைக்கல" என்றான்.
குரலில் ஒரு நக்கல் தொனி...
கிண்டல் செய்கின்றான் என்று அப்பட்டமாக தெரிந்தது...
"எனக்கும் உங்களுக்கும் பொருந்தாது" என்றாள்...
"பொருந்துதா இல்லையான்னு அப்புறம் பார்த்துக்கலாம்" என்று சொல்ல, "இது என்ன விளையாட்டா? வாழ்க்கை" என்றாள்.
"உனக்கு படிச்ச பையன் வேணும்... உன் எதிர்பார்ப்புக்கு மேல படிச்சு இருக்கேன்... சிகரெட் பிடிக்கிறது இல்லை... தண்ணி அடிச்சது இல்லை... நான் இன்னுமே வெர்ஜின் தான்... இதுக்கு மேல நல்ல பையன் உனக்கு கிடைப்பானா?" என்று கேட்க, கண்களை மூடி ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டவளோ, "பொருத்தம்ன்னு ஒன்னு இருக்குல்ல" என்றாள்.
"என்ன பொருத்தம் இல்லன்னு நினைக்கிற?" என்று கேட்டுக் கொண்டே, அவளது இரு பக்கமும் கையை வைத்து, அவளை ஆழ்ந்து பார்க்க, அவளுக்கோ அவன் நெருங்கி நின்றது சற்று அசௌகரியமாக இருந்தது...
"என்ன பொருத்தம் இருக்குன்னு நினைக்கிறீங்க?" என்று கேட்டாள்.
"நான் ஆறடி, நீ ஒரு அஞ்சரை அடி இருப்ப, தோற்ற பொருத்தம் நல்லாவே இருக்கு" என்றான்...
"அது பிரச்சனை இல்லை... ஸ்டேட்டஸ் பொருத்தணும்" என்று ஆரம்பிக்க, "ஐ டோன்ட் மைன்ட்" என்றான்.
"மனசு பொருந்தணும்" என்றாள்.
"முதல் உடல் பொருந்தட்டும், அப்புறம் மனசு தானா பொருந்திக்கும்" என்றான்...
அவன் பேச்சு சற்று வரம்பு மீறியது போல தோன்ற, "நீங்க பேசுறது உங்களுக்கே நல்லா இருக்கா?" என்று கேட்டாள்.
"கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு கிட்ட தானே பேசுறேன்" என்றான்...
"நான் இன்னும் சம்மதிக்கல" என்று அவள் சொல்லி முடிக்க முதல், அவள் முகம் தாங்கி இதழில் ஆழ்ந்து இதழ் பதித்து விலகியவன், "சம்மதிக்கிற, ரைட்" என்று நீல விழிகளால் அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே சொன்னபடி, வெளியேற, அவளோ இன்னும் அதிர்ச்சியில் இருந்து விலகாமல் அப்படியே சுவரில் சாய்ந்து நின்றாள்.
வாசல் கதவை திறக்க போனவன் சட்டென திரும்பி, "லிப்ஸ் கூட பொருந்தி போச்சு, இதுக்கு மேல பொருத்தம் இல்லன்னு நினைக்கிறியா?" என்று கேட்க, அவனை உறுத்து விழித்தவள், அவசரமாக வாயை புறங்கையால் துடைத்துக் கொண்டே, "நீங்க பண்ணுறது சரி இல்ல தேவ்" என்றாள்.
"கல்யாணம் பண்ணிக்கிறோம், தட்ஸ் இட்" என்று சொல்லிக் கொண்டே வெளியேறியவன், ரத்னத்திடம், "சிம்பிள் ஆஹ் கோவில்ல கல்யாணம் வச்சுக்கலாம்" என்றான்.
"ஜெயா" என்று அவர் இழுக்க, "கல்யாணம் முடிய சொல்லிக்கலாம், அப்புறம் கல்யாணத்துல பிரச்சனை பண்ணிட்டு இருப்பாங்க, ரிசெப்ஷன் க்ராண்ட் ஆஹ் வச்சுக்கலாம்..." என்றான்.
"இதெல்லாம் சரியா வருமா டா?" என்று ரத்னம் கேட்க, "வரணும், வள்ளி பாட்டியை மட்டும் கல்யாணத்துக்கு கூப்பிடுங்க" என்று சொல்லிக் கொண்டே, அவன் தனது அறைக்குள் நுழைந்து விட்டான். வள்ளியம்மா வேறு யாருமல்ல, அவன் தாய் வழி பாட்டி...
அவனுக்கு அவரையும் மிகவும் பிடிக்கும்.
இதனை எல்லாம் கேட்டுக் கொண்டே அறைக்குள் நின்று இருந்த பத்மாவுக்கோ ஆத்திரம்...
இப்படி எதிர்பாராத முத்தத்தை அவள் எதிர்பார்க்கவே இல்லை...
லாவகமாக முத்தமிட்டு விட்டு, மிரட்டலாக பேசி விட்டுச் செல்கின்றான் என்று கோபம் வர, கண்ணீரை துடைத்துக் கொண்டே வெளியே வந்தவளோ, "மாமா இது சரி வரும்னு தோணல" என்றாள்.
ரத்னமோ, "இங்க வாம்மா" என்றார்.
அவர் அருகே சென்று அவள் அமர்ந்துக் கொள்ள, "ஏன் தோனல?" என்று கேட்க, "எனக்கும் அவருக்கும் சரி வராது மாமா" என்றாள்.
"அவன் ரொம்ப நல்ல பையன் மா... உன்னை நல்லா பார்த்துப்பான்... ஒருத்தங்களை பிடிச்சுதுன்னா அவங்களுக்காக எது வேணும்னாலும் பண்ணுவான்" என்று சொல்ல, "ஐயோ மாமா" என்று அவள் ஆரம்பிக்க, "எனக்காக சம்மதிக்கணும் பத்மா... ப்ளீஸ், பூர்வி விஷயத்துல அவன் மனசு உடைஞ்சு போய் இருக்கான்... இவ்ளோ தூரம் மனசு மாறுனதே பெரிய விஷயம்" என்று சொல்ல, அவரை ஒரு மார்க்கமாக பார்த்தவள் மனமோ, 'மனசு உடைஞ்சு இருக்கிறவன் பண்ணுற வேலையா இது?' என்று முணுமுணுத்துக் கொண்டவளுக்கு, என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை...
சரி என்றும் சொல்ல முடியவில்லை, இல்லை என்றும் சொல்ல முடியவில்லை...
ரத்னம் கெஞ்சும் போது மறுக்கவும் இஷ்டம் இல்லை...
என்னவோ பார்த்துக் கொள்ளலாம் மனநிலையில் இருந்தவளுக்கு, "ஓகே" என்று சொல்லிக் கொண்டே அறைக்குள் சென்று விட்டாள்.
அன்று இரவு சாப்பிட அவள் உட்கார்ந்த சமயம், ரத்னம் ஏற்கனவே சாப்பிட்டு முடித்துச் சென்று இருக்க, தேவ் வந்து அவள் முன்னே அமர்ந்தான்...
அவனை ஏறிட்டுப் பார்த்துக் கொண்டே, "கல்யாணத்துக்கு அப்புறம் ரொம்ப கஷ்டம் ஆயிடும்" என்றாள்.
"எனக்கா உனக்கா?" என்று கேட்டுக் கொண்டே அவன் சாப்பிட, "உங்களுக்கு தான்... ரொம்ப படுத்தி எடுப்பேன்" என்றாள்.
"ஐ கேன் மேனேஜ்" என்றான்...
"இதெல்லாம் எதுக்கு பண்ணுறீங்க தேவ்?" என்று கேட்க, "அது தான் சொன்னேனே பொண்ணு கிடைக்கல, நீ வேகன்ட் ஆஹ் இருக்க" என்றான்...
"வேகன்ட் ஆஹ் இருந்தா எந்த நிலத்துலயும் பட்டா போட்டுடுவீங்களா? அறுபது வயசு கிழவி வேகன்ட் ஆஹ் இருந்தாலும் இதான் பண்ணுவீங்களா?" என்று கேட்டாள்.
"தோணுனா பட்டா போடுவேன்" என்றான்.
"கொஞ்சம் கூட சென்ஸ் இல்லாம பேசுறீங்களே... என் கிட்ட தோண என்ன காரணம், லவ்ன்னு மட்டும் சொல்லிடாதீங்க... அதுக்கு வாய்ப்பே இல்லன்னு தெரியும்" என்றாள்.
"பிரில்லியண்ட், லவ் எல்லாம் வாய்ப்பே இல்லை... யாரும் உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்கன்னு ஃபீல் பண்ணுன, பொண்ணுங்க ஃபீல் பண்ணுனா எனக்கு மனசு பொறுக்காது" என்று சொல்ல, அவனை முறைத்துப் பார்த்தவள், "ஊர்ல கல்யாணம் ஆகாத ஆயிரம் பொண்ணுங்க இருக்காங்க, எல்லாரையும் கல்யாணம் பண்ணிப்பீங்களா?" என்று கேட்டாள்.
"எனக்கு ஓகே தான்... எல்லாரையும் கூடவே வச்சுக்க உனக்கு ஓகே யா?" என்று கிண்டலாக கேட்க, அவனை கோபமாக பார்த்தவளோ, "உங்க கிட்ட பேச வந்தது என் தப்பு தான்..." என்று சொல்லிக் கொண்டே எழுந்து விறு விறுவென சென்று விட, அவனோ பெருமூச்சொன்றை விட்டுக் கொண்டே, சாப்பிட ஆரம்பித்து இருந்தான்.
அவன் மனதுக்குள் ஆயிரம் எண்ணங்கள் ஓடிக் கொண்டே இருந்தன.
அவன் ஒன்றும் ஆசைப்பட்டு இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கவில்லை...
நேற்று இரவு அவன் அறையை தேடி வந்த ரத்னம் கெஞ்சிய வார்த்தைகள் தான் இந்த முடிவுக்கே காரணம்...
அவன் கையை பற்றிக் கொண்டே, "பத்மாவை கல்யாணம் பண்ணிக்கோ தேவ், நல்ல பொண்ணு" என்றார்.
"அப்பா உங்களுக்கென்ன பைத்தியமா? அவ கூட எனக்கு செட் ஆகாது" என்று சொன்னவனிடம், "அவ இந்த வீட்டை விட்டு போய்ட்டா மனசு ஒரு மாதிரி ஆயிடும்... இப்போ தான் கொஞ்சம் சந்தோஷமா இருக்கேன்... உன் அம்மா இங்க இருக்கும் போது வீடு லக்ஷ்மி கடாச்சமா இருக்கும்... அது போல இப்போ ஃபீல் பண்ணுறேன்" என்றார் கெஞ்சுதலாக.
இப்படி எல்லாம் ரத்னம் கெஞ்சுவது இல்லை...
வித்தியாசமாக இருந்தது தேவ்விற்கு...
பத்மாவின் பிரிவை தாங்க மாட்டார் என்று புரிந்தது...
"உன் கிட்ட நான் எதுவும் கேட்டது இல்லை, இத மட்டும் எனக்காக பண்ணு, நீயே ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிற போல இருக்கட்டும்... அப்புறம் அவ மனசு கஷ்டப்படுவா" என்று சொல்லி, அவர் நடத்திய நாடகம் தான் இது...
அவன் ஒரு நடிகன் மட்டுமே...
பிடித்து தான் கல்யாணம் பண்ணுகிறேன் என்று நிரூபிக்க என்ன செய்வது என்று தெரியாமல் முத்தமும் இட்டு இருந்தான்...
அந்த முத்தத்தில் அவனுக்கு எந்த உணர்வுமே இல்லை...
உணர்வே இல்லாத இதழ் ஒற்றல் தான் அது...
இடையில் அவனுக்கு ஜெயாவை நினைத்து வேறு தலைவலி... கண்டிப்பாக அவர் மனசு கஷ்டப்படுவார் என்று தெரியும்...
ரத்னத்தையும் அப்படியே விட்டு விட முடியாது...
எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்கின்ற ரீதியில் முடிவெடுத்து விட்டான்...
"நான் சொல்லி கல்யாணம் பண்ணுன போல அவளுக்கு எப்போவுமே தோண கூடாது... பிடிச்ச போல நடந்துக்கோ, போக போக உனக்கு உண்மையாவே பிடிச்சிடும்" என்று அவர் திரும்ப திரும்ப சொன்னது நினைவுக்கு வந்தது...
'பிடிச்ச போல எப்படி தொடர்ந்து நடிக்க முடியும்? இப்போ கூட ஓகே, கல்யாணத்துக்கு அப்புறம்? ஓஹ் காட்' என்று நினைத்து நெற்றியை அழுத்தமாக வருடிக் கொண்டான் தேவ்...
இப்படியே கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் கடந்து இருக்கும்.
ஜெயாவோ, "நிரூபன் எப்படி இருக்கான்? அந்த பொண்ண அனுப்பிட்டியா?" என்று அடிக்கடி அலைப்பேசியில் அழைத்து கேட்க, "அதெல்லாம் பார்த்துக்கிறேன்" என்று சமாளித்து இருந்தான் தேவ்...
பத்மா அவன் வீட்டில் தான் இருந்தாள்...
ரத்னத்துடன் உரிமையுடன் பழக ஆரம்பித்து விட்டாள்.
தேவ் மற்றும பத்மா பேசிக் கொள்வதே இல்லை...
இரவில் சாப்பிடும் போது எப்போவாவது பார்த்துக் கொள்வார்கள் அவ்வளவு தான். பத்மாவுக்கு ரத்னத்தை பிடித்தும் விட்டது...
அன்பாக அவளை கையாள்பவர் அவர்...
தங்கையின் வாழ்க்கையை அழித்த
எந்த வன்மமும் அவளிடத்தில் அவருக்கு இல்லை...
அன்று இரவு ஒன்றாக தான் இருவரும் சமைத்துக் கொண்டு இருந்தார்கள்...
"ஏன் மா நீ யாரையும் லவ் பண்ணுறியா?" என்று கேட்க, இதழ்களை பிதுக்கினாள் அவள்...
"கல்யாணம் பண்ணுற வயசுல?" என்று கேட்டார்...
"என்னை யாரு மாமா கல்யாணம் பண்ணிக்க போறா" என்று அவள் வார்த்தைகள் சலிப்பாக வர, "உனக்கென்னம்மா குறைச்சல்?" என்று கேட்டார்.
"பிறப்பு சரி இல்லையே" என்று சொன்னவள் குரலில் எத்தனை வலி என்று அவருக்கு புரிய, "ஒரு நல்லவன் கண்டிப்பா வருவான்" என்று சொன்னார் அவர்...
அவள் அதற்கு பதில் சொல்லவே இல்லை.
"உனக்கு மாப்பிள்ளை எப்படி வேணும்?" என்று கேட்டார்.
"முதல் என்னை கட்டிக்க யாரு மாமா சம்மதம் சொல்லுவா?" என்று கேட்க, "யாரும் சொல்லிடான்னா உனக்கு ஓகே தானே" என்று கேட்டார்.
"படிச்சு, நல்லவனா இருந்தா போதும்" என்றாள் அவள்...
"அவ்ளோ தான்" என்று சிரித்தபடி சொல்லிக் கொண்டார் ரத்னம்.
வீட்டினுள் நுழைந்த தேவ் உடைய காதுகளில் அவர்கள் பேசுவது தெளிவாக விழ, அவற்றை கேட்டுக் கொண்டே தான் அறைக்குள் நுழைந்து இருந்தான்...
அடுத்த நாள் சனிக்கிழமை...
ஓய்வில்லாமல் ஓடி திரியும் தேவ், அன்று உலக அதிசயமாக வீட்டில் இருக்க, அவன் அருகே வந்து அமர்ந்த ரத்னமோ, "டேய் உன் கிட்ட முக்கியமா ஒரு விஷயம் பேசணும்" என்றார்.
"ம்ம் சொல்லுங்க" என்று சொன்னபடி, அலைப்பேசியில் இருந்து விழிகளை அகற்றி அவரைப் பார்த்தான்.
"பத்மாவுக்கு மாப்பிள்ளை பார்க்கணும்" என்று சொன்ன ரத்னத்தை ஆழ்ந்து பார்த்தான் தேவ்...
இதனை கேட்டுக் கொண்டே, அறைக் கதவடியில் நின்ற பத்மாவோ, "இப்போ என்ன அவசரம் மாமா??" என்று கேட்க, "கல்யாணம் பண்ணுற வயசும்மா உனக்கு..." என்று சொன்னவரோ தேவ்விடம், "நல்ல மாப்பிள்ளையா பாருப்பா" என்றார் அவர்.
"என்னை பார்த்தா உங்களுக்கு மாப்பிள்ளை போல தெரியலையா ??" என்று பத்மாவை பார்த்துக் கொண்டே கேட்க, அவளுக்கு சட்டென புரையேற இருமிக் கொண்டே அவனை அதிர்ந்து பார்த்தாள்.
ரத்னத்துக்கும் அவன் பேச்சு அதிர்ச்சியை கொடுக்க, "என்னடா சொல்ற?" என்று கேட்டார்...
"நானே கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்" என்றான் அவரை பார்த்துக் கொண்டே...
பத்மா அவசரமாக இல்லை என்று தலையாட்ட, இப்போது அவன் நீல நிற விழிகளால் அவளை ஆழ்ந்து பார்த்தான்...
எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டாள்.
ரத்னமோ, "ஜெயாவுக்கு தெரிஞ்சா என்னாகும் தெரியுமா?" என்று கேட்க, "பார்த்துக்கலாம்" என்றான்.
"ரிஸ்க் பா" என்றார்.
"உங்களுக்கு ஓகேயா இல்லையான்னு மட்டும் சொல்லுங்க" என்று சொல்ல, "எனக்கு சந்தோஷம் தான்... பத்மா நல்ல பொண்ணு" என்றவரோ, பத்மாவைப் பார்த்துக் கொண்டே, "நீ என்னம்மா சொல்ற?" என்று கேட்டார்.
"எனக்கு இது சரியா படல மாமா" என்றான்.
"ஏன்?" என்று தேவ் கேட்க, அவளும், "நிறைய பிரச்சனை வரும்" என்றாள்.
"அத அப்புறம் பார்த்துக்கலாம், இந்த கல்யாணத்துக்கு நீ சம்மதிக்கிற" என்றான் அழுத்தமாக...
அவளுக்கு கோபமும் வந்தது...
அவன் இஷ்டப்படி அவளை ஆட்டி வைக்க விரும்புகின்றானே...
இல்லை என்று தலையாட்டியவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே எழுந்தவன், அவளை நோக்கி அடி மேல் அடி வைத்து வர, அவளுக்கு உள்ளுக்குள் உதறல்.
கதவு நிலையில் ஒன்றிப் போனாள்.
"உள்ளே வா" என்று சொல்லிக் கொண்டே, அவளது அறைக்குள் செல்ல, அவளுக்கோ அதிர்ச்சி...
தனியாக தனது படுக்கை அறைக்குள் அழைக்கின்றான்...
ஹாலில் தான் ரத்னம் இருக்கின்றார்...
ஒரு மாதிரி ஆகி விட, "மாமா" என்று அவரை பதட்டமாக அழைக்க, "என்னன்னு கேட்டுட்டு வாம்மா" என்றார்.
மகன் மீது அவருக்கு தான் அலாதி நம்பிக்கை ஆயிற்றே...
உள்ளே நுழைந்தவனோ, "கம் இன்" என்றான் மீண்டும்...
அவளும் தயக்கமாக உள்ளே நுழைய, கதவை தாழிட்டான்...
சுவரில் சாய்ந்து பெண்ணவள் நின்று இருக்க, குரலை செருமிக் கொண்டே, அவள் அருகே வந்தவனோ, "என்னடி ரொம்ப ஓவரா பண்ணுற?" என்றான்...
தைரியத்தை வரவழைத்துக் கொண்டே, அவனை ஏறிட்டுப் பார்த்தவள், "நீங்க எதுக்கு இந்த முடிவை எடுத்தீங்க?" என்று கேட்க, "ஆஹ் பொண்ணு கிடைக்கல" என்றான்.
குரலில் ஒரு நக்கல் தொனி...
கிண்டல் செய்கின்றான் என்று அப்பட்டமாக தெரிந்தது...
"எனக்கும் உங்களுக்கும் பொருந்தாது" என்றாள்...
"பொருந்துதா இல்லையான்னு அப்புறம் பார்த்துக்கலாம்" என்று சொல்ல, "இது என்ன விளையாட்டா? வாழ்க்கை" என்றாள்.
"உனக்கு படிச்ச பையன் வேணும்... உன் எதிர்பார்ப்புக்கு மேல படிச்சு இருக்கேன்... சிகரெட் பிடிக்கிறது இல்லை... தண்ணி அடிச்சது இல்லை... நான் இன்னுமே வெர்ஜின் தான்... இதுக்கு மேல நல்ல பையன் உனக்கு கிடைப்பானா?" என்று கேட்க, கண்களை மூடி ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டவளோ, "பொருத்தம்ன்னு ஒன்னு இருக்குல்ல" என்றாள்.
"என்ன பொருத்தம் இல்லன்னு நினைக்கிற?" என்று கேட்டுக் கொண்டே, அவளது இரு பக்கமும் கையை வைத்து, அவளை ஆழ்ந்து பார்க்க, அவளுக்கோ அவன் நெருங்கி நின்றது சற்று அசௌகரியமாக இருந்தது...
"என்ன பொருத்தம் இருக்குன்னு நினைக்கிறீங்க?" என்று கேட்டாள்.
"நான் ஆறடி, நீ ஒரு அஞ்சரை அடி இருப்ப, தோற்ற பொருத்தம் நல்லாவே இருக்கு" என்றான்...
"அது பிரச்சனை இல்லை... ஸ்டேட்டஸ் பொருத்தணும்" என்று ஆரம்பிக்க, "ஐ டோன்ட் மைன்ட்" என்றான்.
"மனசு பொருந்தணும்" என்றாள்.
"முதல் உடல் பொருந்தட்டும், அப்புறம் மனசு தானா பொருந்திக்கும்" என்றான்...
அவன் பேச்சு சற்று வரம்பு மீறியது போல தோன்ற, "நீங்க பேசுறது உங்களுக்கே நல்லா இருக்கா?" என்று கேட்டாள்.
"கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு கிட்ட தானே பேசுறேன்" என்றான்...
"நான் இன்னும் சம்மதிக்கல" என்று அவள் சொல்லி முடிக்க முதல், அவள் முகம் தாங்கி இதழில் ஆழ்ந்து இதழ் பதித்து விலகியவன், "சம்மதிக்கிற, ரைட்" என்று நீல விழிகளால் அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே சொன்னபடி, வெளியேற, அவளோ இன்னும் அதிர்ச்சியில் இருந்து விலகாமல் அப்படியே சுவரில் சாய்ந்து நின்றாள்.
வாசல் கதவை திறக்க போனவன் சட்டென திரும்பி, "லிப்ஸ் கூட பொருந்தி போச்சு, இதுக்கு மேல பொருத்தம் இல்லன்னு நினைக்கிறியா?" என்று கேட்க, அவனை உறுத்து விழித்தவள், அவசரமாக வாயை புறங்கையால் துடைத்துக் கொண்டே, "நீங்க பண்ணுறது சரி இல்ல தேவ்" என்றாள்.
"கல்யாணம் பண்ணிக்கிறோம், தட்ஸ் இட்" என்று சொல்லிக் கொண்டே வெளியேறியவன், ரத்னத்திடம், "சிம்பிள் ஆஹ் கோவில்ல கல்யாணம் வச்சுக்கலாம்" என்றான்.
"ஜெயா" என்று அவர் இழுக்க, "கல்யாணம் முடிய சொல்லிக்கலாம், அப்புறம் கல்யாணத்துல பிரச்சனை பண்ணிட்டு இருப்பாங்க, ரிசெப்ஷன் க்ராண்ட் ஆஹ் வச்சுக்கலாம்..." என்றான்.
"இதெல்லாம் சரியா வருமா டா?" என்று ரத்னம் கேட்க, "வரணும், வள்ளி பாட்டியை மட்டும் கல்யாணத்துக்கு கூப்பிடுங்க" என்று சொல்லிக் கொண்டே, அவன் தனது அறைக்குள் நுழைந்து விட்டான். வள்ளியம்மா வேறு யாருமல்ல, அவன் தாய் வழி பாட்டி...
அவனுக்கு அவரையும் மிகவும் பிடிக்கும்.
இதனை எல்லாம் கேட்டுக் கொண்டே அறைக்குள் நின்று இருந்த பத்மாவுக்கோ ஆத்திரம்...
இப்படி எதிர்பாராத முத்தத்தை அவள் எதிர்பார்க்கவே இல்லை...
லாவகமாக முத்தமிட்டு விட்டு, மிரட்டலாக பேசி விட்டுச் செல்கின்றான் என்று கோபம் வர, கண்ணீரை துடைத்துக் கொண்டே வெளியே வந்தவளோ, "மாமா இது சரி வரும்னு தோணல" என்றாள்.
ரத்னமோ, "இங்க வாம்மா" என்றார்.
அவர் அருகே சென்று அவள் அமர்ந்துக் கொள்ள, "ஏன் தோனல?" என்று கேட்க, "எனக்கும் அவருக்கும் சரி வராது மாமா" என்றாள்.
"அவன் ரொம்ப நல்ல பையன் மா... உன்னை நல்லா பார்த்துப்பான்... ஒருத்தங்களை பிடிச்சுதுன்னா அவங்களுக்காக எது வேணும்னாலும் பண்ணுவான்" என்று சொல்ல, "ஐயோ மாமா" என்று அவள் ஆரம்பிக்க, "எனக்காக சம்மதிக்கணும் பத்மா... ப்ளீஸ், பூர்வி விஷயத்துல அவன் மனசு உடைஞ்சு போய் இருக்கான்... இவ்ளோ தூரம் மனசு மாறுனதே பெரிய விஷயம்" என்று சொல்ல, அவரை ஒரு மார்க்கமாக பார்த்தவள் மனமோ, 'மனசு உடைஞ்சு இருக்கிறவன் பண்ணுற வேலையா இது?' என்று முணுமுணுத்துக் கொண்டவளுக்கு, என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை...
சரி என்றும் சொல்ல முடியவில்லை, இல்லை என்றும் சொல்ல முடியவில்லை...
ரத்னம் கெஞ்சும் போது மறுக்கவும் இஷ்டம் இல்லை...
என்னவோ பார்த்துக் கொள்ளலாம் மனநிலையில் இருந்தவளுக்கு, "ஓகே" என்று சொல்லிக் கொண்டே அறைக்குள் சென்று விட்டாள்.
அன்று இரவு சாப்பிட அவள் உட்கார்ந்த சமயம், ரத்னம் ஏற்கனவே சாப்பிட்டு முடித்துச் சென்று இருக்க, தேவ் வந்து அவள் முன்னே அமர்ந்தான்...
அவனை ஏறிட்டுப் பார்த்துக் கொண்டே, "கல்யாணத்துக்கு அப்புறம் ரொம்ப கஷ்டம் ஆயிடும்" என்றாள்.
"எனக்கா உனக்கா?" என்று கேட்டுக் கொண்டே அவன் சாப்பிட, "உங்களுக்கு தான்... ரொம்ப படுத்தி எடுப்பேன்" என்றாள்.
"ஐ கேன் மேனேஜ்" என்றான்...
"இதெல்லாம் எதுக்கு பண்ணுறீங்க தேவ்?" என்று கேட்க, "அது தான் சொன்னேனே பொண்ணு கிடைக்கல, நீ வேகன்ட் ஆஹ் இருக்க" என்றான்...
"வேகன்ட் ஆஹ் இருந்தா எந்த நிலத்துலயும் பட்டா போட்டுடுவீங்களா? அறுபது வயசு கிழவி வேகன்ட் ஆஹ் இருந்தாலும் இதான் பண்ணுவீங்களா?" என்று கேட்டாள்.
"தோணுனா பட்டா போடுவேன்" என்றான்.
"கொஞ்சம் கூட சென்ஸ் இல்லாம பேசுறீங்களே... என் கிட்ட தோண என்ன காரணம், லவ்ன்னு மட்டும் சொல்லிடாதீங்க... அதுக்கு வாய்ப்பே இல்லன்னு தெரியும்" என்றாள்.
"பிரில்லியண்ட், லவ் எல்லாம் வாய்ப்பே இல்லை... யாரும் உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்கன்னு ஃபீல் பண்ணுன, பொண்ணுங்க ஃபீல் பண்ணுனா எனக்கு மனசு பொறுக்காது" என்று சொல்ல, அவனை முறைத்துப் பார்த்தவள், "ஊர்ல கல்யாணம் ஆகாத ஆயிரம் பொண்ணுங்க இருக்காங்க, எல்லாரையும் கல்யாணம் பண்ணிப்பீங்களா?" என்று கேட்டாள்.
"எனக்கு ஓகே தான்... எல்லாரையும் கூடவே வச்சுக்க உனக்கு ஓகே யா?" என்று கிண்டலாக கேட்க, அவனை கோபமாக பார்த்தவளோ, "உங்க கிட்ட பேச வந்தது என் தப்பு தான்..." என்று சொல்லிக் கொண்டே எழுந்து விறு விறுவென சென்று விட, அவனோ பெருமூச்சொன்றை விட்டுக் கொண்டே, சாப்பிட ஆரம்பித்து இருந்தான்.
அவன் மனதுக்குள் ஆயிரம் எண்ணங்கள் ஓடிக் கொண்டே இருந்தன.
அவன் ஒன்றும் ஆசைப்பட்டு இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கவில்லை...
நேற்று இரவு அவன் அறையை தேடி வந்த ரத்னம் கெஞ்சிய வார்த்தைகள் தான் இந்த முடிவுக்கே காரணம்...
அவன் கையை பற்றிக் கொண்டே, "பத்மாவை கல்யாணம் பண்ணிக்கோ தேவ், நல்ல பொண்ணு" என்றார்.
"அப்பா உங்களுக்கென்ன பைத்தியமா? அவ கூட எனக்கு செட் ஆகாது" என்று சொன்னவனிடம், "அவ இந்த வீட்டை விட்டு போய்ட்டா மனசு ஒரு மாதிரி ஆயிடும்... இப்போ தான் கொஞ்சம் சந்தோஷமா இருக்கேன்... உன் அம்மா இங்க இருக்கும் போது வீடு லக்ஷ்மி கடாச்சமா இருக்கும்... அது போல இப்போ ஃபீல் பண்ணுறேன்" என்றார் கெஞ்சுதலாக.
இப்படி எல்லாம் ரத்னம் கெஞ்சுவது இல்லை...
வித்தியாசமாக இருந்தது தேவ்விற்கு...
பத்மாவின் பிரிவை தாங்க மாட்டார் என்று புரிந்தது...
"உன் கிட்ட நான் எதுவும் கேட்டது இல்லை, இத மட்டும் எனக்காக பண்ணு, நீயே ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிற போல இருக்கட்டும்... அப்புறம் அவ மனசு கஷ்டப்படுவா" என்று சொல்லி, அவர் நடத்திய நாடகம் தான் இது...
அவன் ஒரு நடிகன் மட்டுமே...
பிடித்து தான் கல்யாணம் பண்ணுகிறேன் என்று நிரூபிக்க என்ன செய்வது என்று தெரியாமல் முத்தமும் இட்டு இருந்தான்...
அந்த முத்தத்தில் அவனுக்கு எந்த உணர்வுமே இல்லை...
உணர்வே இல்லாத இதழ் ஒற்றல் தான் அது...
இடையில் அவனுக்கு ஜெயாவை நினைத்து வேறு தலைவலி... கண்டிப்பாக அவர் மனசு கஷ்டப்படுவார் என்று தெரியும்...
ரத்னத்தையும் அப்படியே விட்டு விட முடியாது...
எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்கின்ற ரீதியில் முடிவெடுத்து விட்டான்...
"நான் சொல்லி கல்யாணம் பண்ணுன போல அவளுக்கு எப்போவுமே தோண கூடாது... பிடிச்ச போல நடந்துக்கோ, போக போக உனக்கு உண்மையாவே பிடிச்சிடும்" என்று அவர் திரும்ப திரும்ப சொன்னது நினைவுக்கு வந்தது...
'பிடிச்ச போல எப்படி தொடர்ந்து நடிக்க முடியும்? இப்போ கூட ஓகே, கல்யாணத்துக்கு அப்புறம்? ஓஹ் காட்' என்று நினைத்து நெற்றியை அழுத்தமாக வருடிக் கொண்டான் தேவ்...