அத்தியாயம் 4
இப்படியே பார்த்து இருக்க இரு மாதங்கள் நகர்ந்து விட, அவளும் ஆதித்தை ஈன்று எடுத்தாள். பையன் மேல் இயல்பாக இருக்கும் அக்கறை பாசம் இருந்தாலும் அவளை விஜிதன் கூட பேச விடாமல் அவன் அழுவது எரிச்சலை கொடுக்க மகன் மேலும் பாசம் குறைந்து போனது. இப்படியான ஒரு நாளில் ஆதித் மூன்று மாத குழந்தையாக இருக்கும் போது , கரிகாலனின் தாயும் தந்தையும் கோவிலுக்கு சென்று இருக்க, வீட்டினுள் நுழைந்த கரிகாலனுக்கு ஆதித் வீறிட்டு அழுவது மட்டுமே கேட்டது. பதறி அறைக் கதவை திறக்க அங்கு மதுபாலா சிரித்து சிரித்து போனை பார்த்து காதில் ஹெட் செட் போட்டுக் கொண்டே விஜிதனுக்கு மெசேஜ் பண்ணிக் கொண்டு இருந்தாள் . அவளை எரிச்சலாக பார்த்தபடி வந்த கரிகாலன் "என்னடி பண்ணுற?" என்றபடி ஹெட் செட்டை இழுத்து எறிந்தவன் "குழந்தை அழுறது கேட்கலையா?" என்று சீற ஒரு கணம் பதறி போனவள் "குழந்தைன்னா அழ தான் செய்யும்" என்று சர்வசாதாரணமாக சொன்னபடி தொட்டிலில் இருந்த குழந்தையை எடுத்து பால் கொடுக்க ஆரம்பிக்க அவளை அழுத்தமாக பார்த்தவன் குளியலறைக்குள் நுழைந்து கொண்டான். அவளோ "அப்பாடா தப்பிட்டேன்" என்று நினைத்தவள் "சனியனே அழுதே உன் அப்பா கிட்ட மாட்டி விட்டுடுவே போல" என்று திட்டினாள் அந்த பச்சிளம் குழந்தைக்கு.
தகாத உறவுகள் பெற்ற குழந்தைகளை கூட கொலை பண்ண வைக்கும் அளவுக்கு வக்கிரமானது என்று சும்மாவா சொன்னார்கள்?
விஜிதன் மீது இருந்த ஈர்ப்பில் இப்போது கணவன் குழந்தை தொடக்கம் அனைவரும் அவளுக்கு விரோதியாக தான் தெரிந்தார்கள்.
இப்படியான ஒரு நாளில் விஜிதனிடம் "குழந்தை பிறந்து நாலு மாசம் ஆச்சு, இப்போவும் என் பக்கத்தில வர்றார் இல்ல" என்று அவள் சலித்துக் கொள்ள அவனோ "அது தான் நான் இருக்கேனே" என்றான் ஏக்கமாக, அவளும் "இதெல்லாம் தப்பு" என்று பொய்யாக சொன்னாலும் அவள் எதிர்பார்த்தது அவனிடம் அதை தான். கரிகாலன் நெருங்கிய போதெல்லாம் அவனை விலக்கியது அவள் அல்லவா? ஆனாலும் விஜிதனிடம் இப்படி ஒரு பொய்யை அள்ளி விட்டு தவறு செய்ய அவளே வழி எடுத்துக் கொடுத்தாள். குழந்தையை கரிகாலனின் தாயிடம் கொடுத்து விட்டு அடிக்கடி வெளியே போக ஆரம்பித்தவள் பேச்சு வார்த்தையுடன் இருந்த அவர்கள் தாம்பத்தியத்தை நிஜத்திலும் நடத்திக் காட்டி, தடம் மாறிப் போனாள் . ஊர் வேலையில் இருக்கும் கரிகாலனுக்கு இதை எல்லாம் கவனிக்கும் நிலையும் இல்லாமல் இருக்க, ஒரு நாள் வீட்டுக்கு வந்தவனிடம் "அடிக்கடி மதுபாலா வெளியே போறா, எனக்கு என்னமோ தப்பா படுது, நம்ம பக்கத்து வீட்டு மாமி கூட அவளை அந்த விஜி ஜீவலர்ஸ்ல அடிக்கடி பார்க்கிறதா சொன்னா, அந்த பையன் கூட சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருக்காளாம் " என்று சொல்ல அவனோ "அம்மா, நீங்களும் சராசரி மாமியார் ஆகிட்டீங்களா? எனக்கு அவ மேல முழு நம்பிக்கை இருக்கு, அவ அப்படி எல்லாம் பண்ண மாட்டா, ஏதும் வாங்க போய் இருப்பா, அருண்டவனுக்கு எல்லாம் இருண்டதெல்லாம் பேய்" என்று சொல்லி பேச்சை கத்தரித்தாலும் அவனுக்கு ஒரு உறுத்தல் தோன்ற ஆரம்பித்தது.
அவனுக்கும் அவளிடம் கேட்டு அவள் மனதை காயப்படுத்த விருப்பம் இல்லாமல் இருந்தது. ஒரு வேளை அவள் நிரபராதியாக இருந்து தான் கேட்பது அவளை காயப்படுத்துமோ என்று நினைத்தவன் அவளுக்கு தெரியாமலே அவளை கண்காணிக்க யோசித்தான்.
அறைக்குள் வந்ததும் தொட்டிலில் தூங்கி கொண்டு இருந்த குழந்தை நெற்றியில் முத்தமிட்டவனுக்கு அவள் குளித்துக் கொண்டு இருந்த சத்தம் கேட்க அவளது போனை எடுத்தவன் அதுக்கு பாஸ்வேர்டை அடிக்க முயற்சித்தான். அவன் பெயர் குழந்தையின் பெயர் அவள் பெயர் எல்லாம் நிராகரிக்கப்பட்டு இருக்க எதார்த்தமாக "விஜிதன்" என்று அடித்ததுமே போன் அன்லாக் ஆகி அவன் நெஞ்சில் இடி விழுந்த உணர்வு உண்டானது. அவன் மனமோ "இது உண்மையாக இருக்கவே கூடாது" என்று வேண்ட அவள் கலரியை திறந்தவன் அப்படியே உறைந்து போனான். இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களே நிறைந்து இருக்க, அப்போது அவளுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதை அனுப்பியது விஜிதன் தான். "இன்னைக்கு எப்படி இருந்த தெரியுமா? " என்று ஆரம்பித்து அவளை அந்தரங்கமாக வர்ணித்து இருக்க, கோபத்தில் அவன் கழுத்து நரம்புகள் புடைத்து கிளம்பின.
"அப்போ என் காதல் பொய்த்து போனதா?" என்று யோசித்தவன் கண்கள் சிவக்க, அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தவன் ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டு இருந்தான்.
அப்போது தான் குளித்து விட்டு மார்பில் பூந்தூவளை சுற்றிக் கொண்டு வந்தவள் "வந்துடீங்களா?" என்று கேட்டபடி அலுமாரியை திறந்து உடை எடுக்க ஆயத்தமாக " விஜிதன் கூட என்னடி உறவு?" என்று கேட்க அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது. ஒருவாறு தன்னை சுதாகரித்துக் கொண்டவள் "யாரு விஜிதன்?" என்று கேட்டபடி திரும்பி பார்க்க, அவன் தூக்கி அவள் போனைக் காட்ட உறைந்து போய் விட்டாள் அவள். உடனே "என் அனுமதி இல்லாமல் என் போனை எப்படி எடுப்பீங்க?" என்று கேட்டாலும் மனமோ அவன் அடுத்து என்ன செய்வான் என்றே யோசித்துக் கொண்டு இருந்தது. அவனோ அவளை அனல் தெறிக்க பார்த்து " பொண்ணாடி நீ, கை குழந்தையை வச்சிட்டு என்ன பண்ணி இருக்க நாயே.. நீயெல்லாம் " என்று ஆத்திரத்தில் கெட்ட வார்த்தையில் திட்ட ஆரம்பிக்க அவளோ பொறுமை இழந்து "ஆமாடா, அப்படி தான் பண்ணுவேன். நீ ஆம்பிளையே இல்ல, அப்போ இன்னொருவன் கிட்ட போய் படுக்கிறது எனக்கு தப்பா தெரில" என்று சொல்லி அடுத்த கணமே "என்னடி சொன்ன?" என்று சீறியபடி மேசையில் இருந்த லேப்டாப்பை எடுத்து அவள் தலையில் ஆத்திரத்தின் உச்சத்தில் ஓங்கி அடிக்க அவளோ "ஆஅ" என்று அலறியபடி ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தாள் .
இப்படியே பார்த்து இருக்க இரு மாதங்கள் நகர்ந்து விட, அவளும் ஆதித்தை ஈன்று எடுத்தாள். பையன் மேல் இயல்பாக இருக்கும் அக்கறை பாசம் இருந்தாலும் அவளை விஜிதன் கூட பேச விடாமல் அவன் அழுவது எரிச்சலை கொடுக்க மகன் மேலும் பாசம் குறைந்து போனது. இப்படியான ஒரு நாளில் ஆதித் மூன்று மாத குழந்தையாக இருக்கும் போது , கரிகாலனின் தாயும் தந்தையும் கோவிலுக்கு சென்று இருக்க, வீட்டினுள் நுழைந்த கரிகாலனுக்கு ஆதித் வீறிட்டு அழுவது மட்டுமே கேட்டது. பதறி அறைக் கதவை திறக்க அங்கு மதுபாலா சிரித்து சிரித்து போனை பார்த்து காதில் ஹெட் செட் போட்டுக் கொண்டே விஜிதனுக்கு மெசேஜ் பண்ணிக் கொண்டு இருந்தாள் . அவளை எரிச்சலாக பார்த்தபடி வந்த கரிகாலன் "என்னடி பண்ணுற?" என்றபடி ஹெட் செட்டை இழுத்து எறிந்தவன் "குழந்தை அழுறது கேட்கலையா?" என்று சீற ஒரு கணம் பதறி போனவள் "குழந்தைன்னா அழ தான் செய்யும்" என்று சர்வசாதாரணமாக சொன்னபடி தொட்டிலில் இருந்த குழந்தையை எடுத்து பால் கொடுக்க ஆரம்பிக்க அவளை அழுத்தமாக பார்த்தவன் குளியலறைக்குள் நுழைந்து கொண்டான். அவளோ "அப்பாடா தப்பிட்டேன்" என்று நினைத்தவள் "சனியனே அழுதே உன் அப்பா கிட்ட மாட்டி விட்டுடுவே போல" என்று திட்டினாள் அந்த பச்சிளம் குழந்தைக்கு.
தகாத உறவுகள் பெற்ற குழந்தைகளை கூட கொலை பண்ண வைக்கும் அளவுக்கு வக்கிரமானது என்று சும்மாவா சொன்னார்கள்?
விஜிதன் மீது இருந்த ஈர்ப்பில் இப்போது கணவன் குழந்தை தொடக்கம் அனைவரும் அவளுக்கு விரோதியாக தான் தெரிந்தார்கள்.
இப்படியான ஒரு நாளில் விஜிதனிடம் "குழந்தை பிறந்து நாலு மாசம் ஆச்சு, இப்போவும் என் பக்கத்தில வர்றார் இல்ல" என்று அவள் சலித்துக் கொள்ள அவனோ "அது தான் நான் இருக்கேனே" என்றான் ஏக்கமாக, அவளும் "இதெல்லாம் தப்பு" என்று பொய்யாக சொன்னாலும் அவள் எதிர்பார்த்தது அவனிடம் அதை தான். கரிகாலன் நெருங்கிய போதெல்லாம் அவனை விலக்கியது அவள் அல்லவா? ஆனாலும் விஜிதனிடம் இப்படி ஒரு பொய்யை அள்ளி விட்டு தவறு செய்ய அவளே வழி எடுத்துக் கொடுத்தாள். குழந்தையை கரிகாலனின் தாயிடம் கொடுத்து விட்டு அடிக்கடி வெளியே போக ஆரம்பித்தவள் பேச்சு வார்த்தையுடன் இருந்த அவர்கள் தாம்பத்தியத்தை நிஜத்திலும் நடத்திக் காட்டி, தடம் மாறிப் போனாள் . ஊர் வேலையில் இருக்கும் கரிகாலனுக்கு இதை எல்லாம் கவனிக்கும் நிலையும் இல்லாமல் இருக்க, ஒரு நாள் வீட்டுக்கு வந்தவனிடம் "அடிக்கடி மதுபாலா வெளியே போறா, எனக்கு என்னமோ தப்பா படுது, நம்ம பக்கத்து வீட்டு மாமி கூட அவளை அந்த விஜி ஜீவலர்ஸ்ல அடிக்கடி பார்க்கிறதா சொன்னா, அந்த பையன் கூட சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருக்காளாம் " என்று சொல்ல அவனோ "அம்மா, நீங்களும் சராசரி மாமியார் ஆகிட்டீங்களா? எனக்கு அவ மேல முழு நம்பிக்கை இருக்கு, அவ அப்படி எல்லாம் பண்ண மாட்டா, ஏதும் வாங்க போய் இருப்பா, அருண்டவனுக்கு எல்லாம் இருண்டதெல்லாம் பேய்" என்று சொல்லி பேச்சை கத்தரித்தாலும் அவனுக்கு ஒரு உறுத்தல் தோன்ற ஆரம்பித்தது.
அவனுக்கும் அவளிடம் கேட்டு அவள் மனதை காயப்படுத்த விருப்பம் இல்லாமல் இருந்தது. ஒரு வேளை அவள் நிரபராதியாக இருந்து தான் கேட்பது அவளை காயப்படுத்துமோ என்று நினைத்தவன் அவளுக்கு தெரியாமலே அவளை கண்காணிக்க யோசித்தான்.
அறைக்குள் வந்ததும் தொட்டிலில் தூங்கி கொண்டு இருந்த குழந்தை நெற்றியில் முத்தமிட்டவனுக்கு அவள் குளித்துக் கொண்டு இருந்த சத்தம் கேட்க அவளது போனை எடுத்தவன் அதுக்கு பாஸ்வேர்டை அடிக்க முயற்சித்தான். அவன் பெயர் குழந்தையின் பெயர் அவள் பெயர் எல்லாம் நிராகரிக்கப்பட்டு இருக்க எதார்த்தமாக "விஜிதன்" என்று அடித்ததுமே போன் அன்லாக் ஆகி அவன் நெஞ்சில் இடி விழுந்த உணர்வு உண்டானது. அவன் மனமோ "இது உண்மையாக இருக்கவே கூடாது" என்று வேண்ட அவள் கலரியை திறந்தவன் அப்படியே உறைந்து போனான். இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களே நிறைந்து இருக்க, அப்போது அவளுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதை அனுப்பியது விஜிதன் தான். "இன்னைக்கு எப்படி இருந்த தெரியுமா? " என்று ஆரம்பித்து அவளை அந்தரங்கமாக வர்ணித்து இருக்க, கோபத்தில் அவன் கழுத்து நரம்புகள் புடைத்து கிளம்பின.
"அப்போ என் காதல் பொய்த்து போனதா?" என்று யோசித்தவன் கண்கள் சிவக்க, அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தவன் ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டு இருந்தான்.
அப்போது தான் குளித்து விட்டு மார்பில் பூந்தூவளை சுற்றிக் கொண்டு வந்தவள் "வந்துடீங்களா?" என்று கேட்டபடி அலுமாரியை திறந்து உடை எடுக்க ஆயத்தமாக " விஜிதன் கூட என்னடி உறவு?" என்று கேட்க அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது. ஒருவாறு தன்னை சுதாகரித்துக் கொண்டவள் "யாரு விஜிதன்?" என்று கேட்டபடி திரும்பி பார்க்க, அவன் தூக்கி அவள் போனைக் காட்ட உறைந்து போய் விட்டாள் அவள். உடனே "என் அனுமதி இல்லாமல் என் போனை எப்படி எடுப்பீங்க?" என்று கேட்டாலும் மனமோ அவன் அடுத்து என்ன செய்வான் என்றே யோசித்துக் கொண்டு இருந்தது. அவனோ அவளை அனல் தெறிக்க பார்த்து " பொண்ணாடி நீ, கை குழந்தையை வச்சிட்டு என்ன பண்ணி இருக்க நாயே.. நீயெல்லாம் " என்று ஆத்திரத்தில் கெட்ட வார்த்தையில் திட்ட ஆரம்பிக்க அவளோ பொறுமை இழந்து "ஆமாடா, அப்படி தான் பண்ணுவேன். நீ ஆம்பிளையே இல்ல, அப்போ இன்னொருவன் கிட்ட போய் படுக்கிறது எனக்கு தப்பா தெரில" என்று சொல்லி அடுத்த கணமே "என்னடி சொன்ன?" என்று சீறியபடி மேசையில் இருந்த லேப்டாப்பை எடுத்து அவள் தலையில் ஆத்திரத்தின் உச்சத்தில் ஓங்கி அடிக்க அவளோ "ஆஅ" என்று அலறியபடி ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தாள் .