ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 18

pommu

Administrator
Staff member

அத்தியாயம் 18

"சார்" என்று அதிர்ந்து அழைத்தாள்.

"உன் குழந்தையா?" என்று கேட்டான்.

அவளும் தடுமாறிக் கொண்டே, "ம்ம்" என்றாள்.

கண்களில் கண்ணீர் நிரம்பி விட, "அது தான் வேலையை விட்டு போனியா?" என்று கேட்க, அதற்கும் தலையை தாழ்த்திக் கொண்டே, "ம்ம்" என்றாள்.

"குழந்தைக்கு அப்பா யாரு?" என்று கேட்டான்.

"அத மட்டும் என் கிட்ட கேட்காதீங்க" என்றாள்.

அவளை ஒரு மார்க்கமாக பார்த்து விட்டு, "சரி வா" என்று சொல்ல, அவளோ, "எங்க சார்?" என்று கேட்க, "எனக்கும் குழந்தை பிறந்து இருக்கு, வா" என்றான்.

அவளுக்கு மறுக்கவும் முடியாத நிலை...

"அம்மா எப்படி இருக்காங்க?" என்று கேட்டுக் கொண்டே நடந்தாள்.

"நீ அங்கேயே இருந்து இருக்கலாம், உன்னை எதுவும் சொல்லி இருக்க மாட்டோம், அம்மா நல்லா இருக்காங்க" என்று சொல்லிக் கொண்டே அறைக்குள் நுழைந்தான்.

அங்கே மாதுரி குழந்தையை தூக்கி முத்தமிட்டுக் கொண்டே இருக்க, அருகே தான் ஜீவிதாவும் ஒரு மாதமேயான குழந்தையுடன் அமர்ந்து இருந்தாள்.

அந்த இடமே கல கலவென சந்தோஷமாக இருந்தது...

உள்ளே வந்த ராவந்த்தோ, "முல்லை வந்திருக்கா" என்று சொல்ல, அவள் கையில் இருந்த குழந்தையை பார்த்த மாதுரியோ, "யார் குழந்தை?" என்று தான் கேட்டாள்.

"அவளோட குழந்தை தான், அப்பா யாருன்னு கேட்க வேணாமாம்" என்றபடி தனது குழந்தையை தூக்கிக் கொள்ள, மாதுரி, யோசனையுடன், "ஓஹ்" என்று சொன்னவள், "பையனா?" என்று கேட்டாள்.

"ம்ம்" என்றாள் முல்லை.

அங்கே நிற்கவே சங்கடமாக இருந்தது...

"எப்போ பிறந்திச்சு?" என்று கேட்டுக் கொண்டே, கையை நீட்ட, தயங்கியபடி குழந்தையை கொடுத்தவள், "ரெண்டு நாள் முன்னாடி" என்றாள்.

"ஓஹ் இன்னைக்கு டிஸ்சார்ஜ் ஆஹ்?" என்று கேட்டாள் மாதுரி.

அதற்கும், "ம்ம்" தான்.

"தனியாவா போற?" என்று கேட்டாள்...

"ம்ம்" என்றாள்.

"எங்க போற?" என்று அடுத்த கேள்வி...

பதில் இல்லை அவளிடம். "சரி எங்க வீட்டுக்கு வா" என்றாள்.

"இல்ல" என்று முல்லை தடுமாற, "வான்னு சொல்றேன் ல" என்று சொன்ன மாதுரி அவளை கையுடன் அழைத்து சென்றாள்.

போக்கிடம் இல்லை... குழந்தையை கஷ்டப்படுத்தவும் இஷ்டம் இல்லை.

அதனால் பெரிதாக மறுப்பு கூறாமல் மாதுரியுடன் புறப்பட்டு இருந்தாள் முல்லை...

இப்படியே ஒரு மாதம் கடந்து இருக்கும், மாதுரியின் அறைக்குள் தான் மகனை படுக்க வைத்து விட்டு, குளிக்க சென்று இருந்தாள் முல்லை.

இரு குழந்தைகளும் ஒன்றாக தான் தூங்கிக் கொண்டு இருந்தார்கள்...

மாதுரி குழந்தைகளின் கழுவி போட்ட உடைகளை அடுக்கிக் கொண்டு இருக்க, அலைபேசியில் பேசி விட்டு அறைக்குள் வந்த ராவந்த்தோ, "உன் வீட்ல இருந்து எடுத்தாங்க, மாளிகைல வந்து கொஞ்ச நாள் நிற்கட்டுமாம்... உன் அண்ணனுக்கு வேற இன்னும் நாலைஞ்சு மாசத்துல கல்யாணமாம்" என்று சொல்ல, மாதுரி, "ஓஹ்" என்று மட்டும் சொன்னாள்.

"வர மாட்டோம்னு சொல்லிடுறோம், அங்கே போய் என்ன பண்ணுறது?" என்று அவன் கேட்க, "இல்ல, நம்ம இன்னும் ரெண்டு மாசத்துல கிளம்பலாம், குழந்தைகளும் கொஞ்சம் வளர்ந்திடுவாங்க தானே" என்றாள் அவள்...

"அங்கே தான் போக உனக்கு பிடிக்காதே" என்றான் ராவந்த்.

"எனக்கு பிடிக்காது தான், ஆனா போகணும்" என்றான்.

"ஏன்?" என்று ராவந்த் கேட்க, அவளோ மெதுவாக முல்லையின் மகனான கீர்த்தனனை தூக்கிக் கொண்டே, அவனை தனது தோளில் குப்பற போட்டபடி, மெதுவாக அவன் முதுகில் இருக்கும் மச்சத்தை விலக்கிக் காட்டினாள்.

"என்னடி இது?" என்று ராவந்த் அதிர, "யார் காரணம்னு தெரியணும், என் அப்பாவா, அண்ணனா இல்லை திவ்யனான்னு தெரியணும்" என்று சொன்னாள்.

"திவ்யனா இருக்க சான்ஸ் இல்ல, அவன் ஒரு சீரியஸ் லவ்வர், உன் அண்ணானவும் இருக்க சான்ஸ் இல்லை, ஏன்னா அவன் ஸ்டேட்டஸ் பார்ப்பான், எனக்கென்னவோ உன் அப்பான்னு தான் தோணுது" என்று சொல்ல, "என்ன கருமமோ, ஆனா கண்டு பிடிக்கிறோம்" என்றாள்.

"குசும்ப பார்த்தியா அந்த கிழவனுக்கு, இத விடவே கூடாது, அந்த பொண்ணோட வாழ்க்கையை அநியாயம் ஆக்கி இருக்கார், உன் அப்பாவுக்கு முல்லையை கல்யாணம் பண்ணி வச்சு, உனக்கு சித்தி ஆஹ் மாத்துறோம், அப்போ இவன் உனக்கு தம்பி முறையா?" என்று கேட்டான் ராவந்த்.

"கல்யாணம் பண்ணி வைக்கிறதா? வாயை புடுங்குற போல நாலு கேள்வி கேட்கணும், அவர் வயசென்ன இந்த பொண்ணு வயசென்ன?" என்று அவளும் திட்டி இருந்தாள்.

அடுத்த இரு மாதங்களிலேயே, ராவந்த் குடும்பம், அஸ்வந்த் குடும்பம், முல்லை என எல்லாரும் கிளம்பி இருந்தார்கள்.

டூர் போவதாக மட்டும் சொல்லி இருந்தவர்கள் எங்கே போகின்றார்கள் என்று சொல்லாமல் தான் அழைத்து சென்றார்கள்...

இறுதியில் வண்டி பொன்முடி மாளிகை முன்னே நிற்க, அதிர்ந்த முகத்துடனேயே குழந்தையை தூக்கியபடி இறங்கி இருந்தாள் முல்லை.

"இங்கேயா வந்திருக்கோம்?" என்று முல்லை மாதுரியிடம் கேட்க, "ம்ம் அண்ணாவுக்கு கல்யாணம், அடுத்த மூணு மாசம் இங்க தான், கல்யாணத்தை முடிச்சிட்டு கிளம்புறோம்" என்று சொல்லிக் கொண்டே நடக்க, அவளோ மூச்செடுக்க முடியாமல் அரண்மனையை நோக்கி குழந்தையுடன் அடி மேல் அடி வைத்து நடந்து சென்றாள்....

பாகம் 1 இன்ஸ்டன்ட் மாப்பிள்ளை முடிவுற்றது...

பாகம் ரெண்டு முல்லைக் கொடியே அமரனின் கவியே யில் மீதி கதை தொடரும்...
 
Top