அத்தியாயம் 16
ஒரு பதட்டத்துடன் தான் வெளியே வந்தாள்.தலை விண் விண்ணென்று வலித்தது...
மேனியில் ஏற்கனவே வலி தான்...
அவன் படுத்திய பாட்டின் விளைவு...
இப்போது இப்படி மிரட்டி விட்டு செல்கின்றான்...
இதனை சொல்லவும் முடியாத, மெல்லவும் முடியாத நிலை...
என்ன நியாயம் அவள் கேட்டு விட முடியும்? அது கற்பழிப்பாக இருந்தால் நியாயம் கேட்டு இருப்பாள்.
அவளும் சேர்ந்து தானே தவறு செய்தாள்.
அதற்காக இவனுடன் சேர்ந்து எல்லாம் வாழ முடியாதே...
அவன் சேர்த்துக் கொள்ளவும் மாட்டான். அது வேற கணக்கு...
மாதுரியின் அறைக்குள் வந்து விட்டாள்.
அவளும், மென் சிரிப்புடன் முல்லையை பார்த்தவள், "ஏன் முகம் டயர்ட் ஆஹ் இருக்கு?" என்று கேட்க, அவளோ, "இல்ல ஒன்னும் இல்ல" என்று சொல்லிக் கொண்டே, அறையை துப்பரவு செய்ய, 'இங்க இருந்து எப்போ போகலாம்னு இருக்கு' என்று சலிப்புடன் சொல்லிக் கொண்டே அமர்ந்தாள் மாதுரி.
வழக்கம் போல அலங்காரம் செய்ய வந்திருந்தார்கள்.
'நான் என்ன கல்யாண பொண்ணா?' என்று வாய்க்குள் திட்டிக் கொண்டவள் அடுத்து சாப்பிட சென்றாள்.
ஒவ்வொருவராக வந்து அமர, பொன்முடி தேவரோ, "பொன்னிலாவுக்கும் திவ்யனுக்கும் கல்யாண ஏற்பாடு எப்படி போகுது அமர்?" என்று கேட்க, "இன்னும் நாள் இருக்குல்ல, எல்லாருக்கும் சொல்லி பெருசா செய்ய பிளான் பண்ணிட்டு இருக்கேன்" என்று சொன்ன கணம், அங்கே உணவுகளை கொண்டு வந்து அடுக்கினான் ராவந்த்...
அவனை ஏறிட்டு பார்த்த அமரேந்திரனுக்கு ஒரு மாதிரி குற்ற உணர்வு...
'பார்க்க ஹீரோ போல இருக்கான், இவனுக்கு இப்படி ஒரு குறையா?' என்று அவன் யோசிக்க, மாதுரி அவனை ஒரு கணம் ரசனையாக பார்த்து விட்டு, கழுத்தில் இருந்த அவனது பற்தடத்தை ஷாலினால் மூடிக் கொண்டாள்.
ராவந்த்துக்கு மாதுரியை பார்க்க ஆசையாக இருந்தது...
ஆனால் அமரேந்திரன் தன்னையே பார்த்துக் கொண்டு இருப்பது, தெரிந்தது...
'சைட் அடிக்கவும் விட மாட்டான் போல, என்னை இவன் சைட் அடிச்சிட்டு இருக்கான்' என்று முணுமுணுத்த ராவந்த்தும் சமையலறைக்குள் சென்று விட்டான்...
திவ்யன் குரலை செருமிக் கொண்டே சாப்பிடவும் ஆரம்பித்து விட்டான்...
ராவந்த்துக்கும் மாதுரிக்கும் எப்போது இரவு வரும், எப்போதும் இணையருடன் நேரம் செலவிடலாம் என்கின்ற எண்ணம் தான்.
அந்த நாளையே தவிப்புடன் கடந்தார்கள்.
இரவானதும் அறைக்குள் நுழைந்த ராவந்த், மாதுரியை அணைத்து முத்தமிட ஆரம்பித்து விட்டான்.
சட்டென அவனில் இருந்து பிரிந்தவளோ, "என்னை கெடுத்து வச்சு இருக்கீங்க ராவ்" என்றாள்.
"ஏன் டி?" என்று அவன் கேட்க, "பகல் முழுவதும் இதே நினைப்பா இருக்கு" என்றாள்.
அவனும் சத்தமாக சிரித்துக் கொண்டே, "எனக்கும் தான்" என்று சொல்லி அவள் மூக்கை ஆட்டி விட்டு, மீண்டும் இதழ்களை கவ்வி இருந்தான்.
சற்று நேரத்தில் மெதுவாக கண்களை விரித்தாள் மாதுரி...
ஜன்னல் அருகே நின்று இருந்தான் ராவந்த்.
வெளியே நிலவையே பார்த்துக் கொண்டு இருக்க, அவளோ மெதுவாக எழுந்து அவனை பின்னால் இருந்து அணைத்துக் கொண்டே, "ஏதாவது ஐடியா வந்துச்சா?" என்று கேட்க, அவனோ சிரித்தபடி திரும்பியவன் அவளை இழுத்து அணைத்து தன் உயரத்துக்கு தூக்கிக் கொண்டே, "அத தான் யோசிச்சுட்டு இருக்கேன்" என்றான் மூக்குடன் மூக்கை உரசிக் கொண்டே...
"என் அண்ணா தான், ஆனாலும் பண்ணுற இந்த அராஜகத்துக்கு போலீஸ் ல பிடிச்சு கொடுக்க முடியாதா என்ன?" என்று கேட்க, "க்கும், உன் அண்ணன் மேல எவனும் கையை வைக்க மாட்டான்" என்றான்.
"என்னால இங்க இருக்கவே முடியல ராவ், வீட்டுக்கு போகணும் போலவே இருக்கு" என்றாள்.
"எனக்கும் தான், லக்ஸரியான ஜெயில் இது, அவ்ளோ தான்" என்றான்.
"ம்ம், இப்போ என்ன பண்ணுறது?" என்று அவள் கேட்க, "கூட யோசிக்காதே, ஏதாவது ஒரு வழி சிக்கும்" என்று சொன்னவன், அவளை தூக்கிக் கொண்டே, கட்டிலுக்கு நகர, "திரும்பவுமா?" என்று அவள் கேட்டது அவன் இதழ்களுக்குள் அடங்கிப் போனது...
அடுத்த நாள் காலையில் அவன் கண்களை விரித்த சமயம் ஆறுமணியை கடந்து இருந்தது...
"ஆத்தாடி" என்று சொல்லிக் கொண்டே உடையை அணிய, அப்போது தான் எழுந்த மாதுரியும், "எதுக்கு டென்சன்?" என்று கேட்டாள்.
"ஆஹ் அவனுங்க ஆள் மாறி இருப்பானுங்க, இப்போ போனா சிக்கிடுவேன், அதே நேரம் இங்கயும் இருக்க முடியாது" என்று சொல்லிக் கொண்டே எழுந்தவன் மெதுவாக கதவை திறந்து எட்டி பார்த்தான்.
ஆம் புது காவலாளர்கள் வந்திருந்தார்கள்.
சற்று யோசித்து விட்டு, "திவ்யன் கிட்ட சொல்லலாம்" என்றபடி அலைபேசியை எடுத்து அவனுக்கு அழைக்க, அவனும் காதில் வைத்தான்.
"இன்னைக்கு லேட் ஆயிடுச்சு டா, அவனுங்க ஆள் மாறிட்டானுங்க, இப்போ எப்படி வெளியே வர்றது?" என்று கேட்க, "நீ வெளிய வா, இன்னைக்கு பஞ்சாயத்தை முடிச்சிடலாம்" என்றான்.
"அடிங், சிக்குனா சின்னா பின்னம் ஆயிடுவேன்" என்று சொல்ல, "அதெல்லாம் ஆகாம நான் பார்த்துகிறேன், நீ வா" என்று சொல்ல, "டேய் சீரியஸ் ஆஹ் சொல்றியா என்ன?" என்று கேட்டான்.
"ம்ம் நிஜமா தான் சொல்றேன்" என்றான் அவன்...
அலைப்பேசியை வைத்த ராவந்த்திடம் மாதுரியோ, "என்னவாம்?" என்று கேட்க, "இன்னைக்கு பஞ்சாயத்தை முடிக்கலாம்னு சொல்றான்" என்று சொல்ல, "ஐயோ" என்று அவள் அலற, "அவனை நம்பி வெளிய கிளம்புறேன்" என்று சொல்லிக் கொண்டே, மாதுரியை அணைத்து இதழில் இதழ் பதித்து விட்டு கதவை திறந்து கொண்டே மெதுவாக வெளியே வந்தான்...
இதே சமயம், திவ்யனோ அங்கே மாதுரியின் அறையை நோக்கி நடந்த முல்லையிடம், "இன்னைக்கு உண்மையை சொல்லி மாதுரியை உங்க கூட அனுப்பிடலாம்" என்றாள்.
அவளோ அதிர்ச்சியுடன், "அது சரி வருமா?" என்று கேட்க, "ராவந்த் புருஷன் இல்லன்னு நீ தான் சாட்சி சொல்லணும்" என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, பெரிய கலவர சத்தம் கேட்டது...
"ம்ம் சிக்கிட்டான்" என்று சொல்லிக் கொண்டு திவ்யன் மாதுரியின் அறையை நோக்கி ஓட, பின்னால் முல்லையும் ஓடி சென்றாள்...
ராவந்த், "டேய், ஷேர்ட்டை விடு டா, நானே வந்து சிக்கி இருக்கேன், ஏதோ நீ பாய்ஞ்சு பிடிச்ச போல பில்ட் அப் பண்ணுற" என்று காவலாளியின் கையை தட்டி விட்டுக் கொண்டே ஷேர்ட்டை சரி செய்தான்.
காவலர்களின் கையை தட்டி விட்டு, "இப்போ உன் முதலாளி கிட்ட தானே போகணும், வா போகலாம்" என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே சத்தம் கேட்டு எல்லாருமே அங்கே வந்தார்கள்...
கூடவே மாதுரியும் வந்தவள், 'என்ன நடக்க போகுதோ தெர்லயே' என்று நினைத்துக் கொள்ள, "என்ன பிரச்சனை?" என்று கேட்டான் அமரேந்திரன்.
"மாதுரி அம்மாவோட ரூம் ல இருந்து வர்றான் ஐயா" என்று காவலாளி சொல்ல, இடையில் கையை வைத்து, அவனை மேலிருந்து கீழ் பார்த்த அமரேந்திரன் விழிகள் அங்கே அதிர்ந்து நின்ற முல்லையில் ஒரு கணம் படிந்து மீள, "உள்ளே போய் எதுவும் பண்ணி இருக்க மாட்டான்" என்றான்.
"எத?" என்று இப்போது அதிர்ந்தது என்னவோ ராவந்த் தான்...
"என்னப்பா சொல்ற?" என்று பொன்முடி தேவர் கேட்க, "எதுக்கு உள்ள போனான்னு கேட்கலாம், இவன் அவ்வளவு வேர்த் லாம் இல்ல" என்றான் அமரேந்திரன்...
ராவந்த்தோ, "அடப்பாவி என்னடா சொல்ற? நான் வேர்த் ஆஹ் இல்லையான்னு உன் தங்கச்சி கிட்ட கேளு" என்றான்.
அவனை முறைத்தவன், "மரியாதையா பேசு" என்று கர்ஜிக்க, "என்ன மரியாதை? நான் தான் உன் தங்கச்சி புருஷன், உனக்கு மச்சான்" என்று சொன்னவன் அருகே நின்ற மாதுரியிடம், "சொல்லுடி" என்று சொன்னாள்.
"ஆமா, இவர் தான் என் புருஷன்" என்றாள் அவள் அவசரமாக...
அப்போது தான் வந்து சேர்ந்த கார்கோடனோ, "இது ராவந்த் தானே" என்று சொல்லிக் கொண்டு வர, சட்டென அவனை திரும்பி பார்த்த அமரேந்திரனோ, "இவன் தானா?" என்று கேட்க, "ம்ம் இவன் தான், எப்படி உள்ள வந்தான்?" என்று கேட்டான்.
அமரேந்திரனின் விழிகள் இப்போது திவ்யனில் படிய, "ரிதன்யாவை கடத்தி வச்சுட்டு மிரட்டுனான். அதனால தான் மச்சான்" என்றான் பவ்வியமாக...
ராவந்த்தோ, ',அடப்பாவி, ஆசைக்கு கடத்தி வைக்க சொல்லி இதுக்கு தான் சொன்னானா?' என்று நினைக்க, அமரேந்திரனோ, "இத என் கிட்ட ஏன் சொல்லவே இல்ல" என்று கேட்டான்.
"அப்புறம் ஏதும் பண்ணிட்டாங்கன்னா" என்று எதுவும் தெரியாத போலவே திவ்யன் பேச, "என்னது ரிதன்யாவை கடத்திட்டங்களா?" என்று கார்கோடன் அதிர, "ம்ம், நீ வெளியூர் போனதால உன் கிட்ட பேசாம, என் கிட்ட பேசுனாங்க" என்று இஷ்டத்துக்கு அடித்து விட்டான் திவ்யன்...
கண்களை மூடி இதழ் குவித்து ஊதிய அமரேந்திரனோ, ராவந்த்தைப் பார்த்து, "பத்து நிமிஷத்துல உன் கூட வந்தவளை கூப்பிட்டுட்டு கிளம்புனா உன் உயிர் தப்பும், இல்லன்னா நான் மனுஷனா இருக்க மாட்டேன்" என்றான்.
பழைய அமரேந்திரன் என்றால், இந்நேரம் ராவந்த்தை ஒரு வழி பண்ணி இருப்பான்.
முல்லை விஷயத்தில அவன் மனதளவில் கொஞ்சம் தளர்வாக இருந்தது ராவந்துக்கு சாதகமாக போய் விட்டது.
"மாதுரி இல்லாம நாங்க போக மாட்டோம்" என்று வந்தது ஒரு குரல்...
சொன்னது ராவந்த் அல்ல, அவனுக்கு முதலே சொல்லி இருந்தது முல்லை...
அவளை ஆழ்ந்து பார்த்தான்...
அவளும் விழிகளை உயர்த்தி அவனை பார்த்தவள், "நாங்க இங்க இருந்து போகணும்னா மாதுரி எங்க கூட வரணும்" என்றாள்.
குரலில் அப்படி ஒரு அழுத்தம்...
அவளை துளைத்தெடுக்கும் பார்வை பார்த்த அமரேந்திரனோ, "அழைச்சிட்டு போ" என்றானே பார்க்கலாம்...
திவ்யனோ, 'ப்பா, கண் அசைவிலேயே ஆட்டி வைக்கிறா' என்று கிண்டலாக நினைத்துக் கொள்ள, ராவந்த்தோ மாதுரியிடம், "என்னடி பெரிய அளவுல பில்ட் எல்லாம் பண்ணுன, பொசுக்குன்னு ஆமான்னு சொல்லிட்டான்" என்று கேட்க, "இதுல என்ன ஆராய்ச்சி? மனசு மாற முதல் கிளம்பலாம் வாங்க" என்றாள்.
மணிமேகலையோ, "அமர் என்ன இது? அப்போ திவ்யனுக்கு?" என்று கேட்க, அவனோ, "அவளே புருஷனோட வாழ ஆசைப்படுறா, அவ கூட நான் எப்படி வாழுறது?" என்று கேட்டவன் அமரேந்திரன் பார்த்த பார்வையில் வாயை கப்பென்று மூடிக் கொண்டான்.
தங்கவிழியோ, "என் பொண்ண நான் அனுப்ப மாட்டேன்" என்று சொல்ல, அமரேந்திரனோ, "இஷ்டம் இல்லாம அவளை அடைச்சு வைக்க முடியாது" என்று சொல்லி விட்டு, ராவந்த்தை பார்த்தவன், "நல்லது கெட்டது எல்லாத்துக்கும் அழைச்சிட்டு வந்துடு" என்றான்.
"தேங்க்ஸ் மச்சான்" என்ற ராவந்த்தோ, "வாடி, இவ்ளோ ஈஸியா வாய்ப்பு அமையும்னு நினைக்கல" என்று சொன்னவன், அவள் கையை பற்ற, "சீர் அனுப்பி வைக்கிறோம்" என்றார் பொன் முடி தேவர்.
"மாமா, எனக்கு எதுவும் வேணாம், அவளோட தாலியை மட்டும் கொடுங்க" என்று சொல்ல, தனது அறைக்குள் சென்ற தங்கவிழி தாலியை ராவந்த் கையில் கொடுக்க, அதனை மாதுரியின் கழுத்தில் கட்டியவன், அவள் கையை பற்றிக் கொண்டே, முல்லையை பார்த்து, "வாம்மா" என்று சொல்ல அவளும் நடந்து சென்றாள்.
கார்க்கோடனை பார்த்த அமரேந்திரனோ, "விட்டுட்டு வா" என்று சொல்ல, அவனும், அவர்களை விட செல்ல, "நானும் விட்டுட்டு வர்றேன்" என்று திவ்யன் கிளம்பி விட்டான் ரிதன்யாவை பார்க்கும் பொருட்டு...
அனைவரும் மாதுரியை அணைத்து அழ, "அம்மா, எனக்கு இங்க இருக்க முடியல, ஆனா கண்டிப்பா நல்லது கெட்டது எல்லாத்துக்கும் வருவேன்" என்று சொல்லி, அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்கி விட்டு புறப்பட்டு விட்டாள்.
வாசலை தாண்டி எல்லாரும் செல்ல, மார்புக்கு குறுக்கே கையை கட்டி அவர்களையே பார்த்துக் கொண்டு இருந்தான் அமரேந்திரன்.
அவன் விழிகள் முல்லையில் இருந்து ஒரு வினாடி கூட நகரவில்லை...
ஏதோ ஒரு அழுத்தம் இறங்கிய உணர்வு...
அவள் இன்னொருத்தன் மனைவி அல்ல...
அதுவே அவனுக்கு இக்கணம் போதுமான மன நிம்மதியை கொடுத்து இருந்தது...