ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 15

pommu

Administrator
Staff member

அத்தியாயம் 15

காலை வரை அவள் அறைக்குள் இருந்தவன், சரியாக ஆறு மணிக்கு காவலர்கள் மாறும் நேரம் பார்த்து, கிளம்பி விட்டான்.

திவ்யனோ ராவந்த் அறைக்குள் சென்று வரும் சி சி டி வி காட்சிகளை அழித்து விடுவான்.

இதுவே கிட்டத்தட்ட ஒரு வாரம் தொடர்ந்து இருக்கும், இப்போது திவ்யனுக்கு அவன் சொல்லி விட்ட போதை மாத்திரையும் வந்து சேர்ந்தது...

"இன்னைக்கு வேலையை முடிச்சிட வேண்டியது தான்" என்று நினைத்துக் கொண்டே, சமையலறைக்குள் சென்றான்.

அவனும் கிட்டத்தட்ட அமரேந்திரன் போல தானே...

அதனால் அவனுக்கு எல்லா இடமும் அனுமதி இருந்தது...

அப்படியே சமையலறையை சுற்றி வந்தவன் கண்ணில் அமரேந்திரனுக்காக பால் கரைத்துக் கொண்டு இருந்தவன் தென்பட்டான்.

மெதுவாக நேரத்தைப் பார்த்தான்...

ஒன்பது மணியை நெருங்கிக் கொண்டு இருந்தது...

பால் கரைத்துக் கொண்டு இருந்தவனிடம், "ஹாலுக்குள்ள இருக்கிற தட்டெல்லாம் எடுத்து வா" என்றான்.

திவ்யன் சொன்னால் செய்து தானே ஆக வேண்டும்...

அவனும் தட்டை எடுக்க கிளம்பி விட்டான்.

சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, கையில் இருந்த மாத்திரையை உள்ளே போட்டு கரண்டியால் கலக்கி விட்டான்...

அதனை தொடர்ந்து, அந்த பாலை எடுத்துக் கொண்டே, அமரேந்திரன் அறைக்குள் சென்றான் பணியாளன்...

இப்போது திவ்யன் தேடி வந்தது என்னவோ முல்லையை தான்...

அவன் கையில் இன்னொரு பால் க்ளாஸ் இருந்தது...

உள்ளே மாத்திரை போடப்பட்டு இருந்தது...

முல்லையும் சாப்பிட்டுக் கொண்டு இருக்க, அவள் அருகே வந்தவன், "பால் மீதியா இருந்துச்சு, குடிச்சு முடி" என்று நீட்டினான்.

"ஐயோ சார் எனக்கு வேணாம்" என்று அவள் மறுக்க, "குடிக்க சொல்றேன் ல" என்று அதட்டல் அவனிடம்...

"சாப்பிட்டு முடிச்சிட்டு" என்று அவள் ஆரம்பிக்க, "குடிச்சிட்டு சாப்பிடு" என்றான்.

'என்ன இவர் இப்படி படுத்துறார்' என்று நினைத்துக் கொண்டே பாலை குடித்தாள்.

"எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும். வர்றியா?" என்று கேட்டான்.

அவளோ, "சாப்பிடலையே" என்று சொல்ல, "வந்து சாப்பிடலாம் வா" என்றான்.

அவளுக்கு கடுப்பு வேறு...

சாப்பிடும் நேரத்தில் தொல்லை படுத்தினால் யாருக்கு தான் கோபம் வராது?

ஆனால் உதவி செய்பவன் ஆயிற்று...

அதனால் மௌனமாக கையை கழுவிக் கொண்டே எழுந்து அவனுடன் கூட நடந்தாள்.

அமரேந்திரன் அறை அருகே அவளை அழைத்து வந்தான்.

திவ்யனின் அதிஷ்டத்துக்கு அங்கே யாரும் இல்லை...

"உள்ளே குடிச்சு முடிச்ச க்ளாஸ் இருக்கு, எடுத்துட்டு வா" என்றான்.

"நானா?" என்று அவள் அதிர, "ம்ம்" என்றான்.

"அது அமரேந்திரன் சார் ரூம் ல?" என்று கேட்டாள்.

"ஆமா" என்றான்.

"நான் எப்படி உள்ள போறது? யாரவது பசங்கள அனுப்பலாமே" என்றாள்.

"உன்னை அவன் என்ன பண்ணிட போறான்? எடுத்துட்டு வா" என்று அதட்டலாக சொல்ல, அவளுக்கு மறுக்க முடியாத நிலை...

பணிப்பெண் ஆயிற்றே...

செய்து தானே ஆக வேண்டும்...

பயத்துடன் நடந்தவளை யோசனையாக பார்த்தவன், "கொஞ்சம் வெய்ட் பண்ணு" என்றபடி கதவை மெதுவாக திறந்து எட்டி பார்த்தான்.

குடித்து முடித்த பால் மேசையில் இருந்தது...

'குடிச்சிட்டான்' என்று நினைத்துக் கொண்டே, "சரி போ" என்றான்.

'அவரே எடுக்க வேண்டியது தானே' என்று வாய்க்குள் முணுமுணுத்தபடி உள்ளே நுழைந்தாள்.

அமரேந்திரனை காணவில்லை...

மேசையில் க்ளாஸ் இருந்தது...

அதனை எடுத்த கணம், குளியலறை திறக்கும் சத்தம் கேட்டது...

கிளாஸை எடுக்காமல் பதறி திரும்பினாள்.

அமரேந்திரன் இடையில் ஷார்ட்ஸ் மட்டும் இருந்தது...

திடமான படிக்கட்டு தேகம் அவனுக்கு...

"நீ என்ன பண்ணுற?" என்று கேட்டான்.

குரலிலும் வார்த்தையிலும் தடுமாற்றம்...

இப்போது மெதுவாக கதவில் காதை வைத்து கேட்டான் திவ்யன்.

"பால் க்ளாஸ் எடுக்க வந்தேன்" என்று சொன்னாள் பயத்துடன்.

அவளையே பார்த்துக் கொண்டு நடந்து வந்தான்...

அவளும் அவனை மிரட்சியாக பார்க்க, நெருங்கி நின்றான்.

மூச்சு காற்று படும் தூரத்துக்கு நெருங்கி நின்றான்.

அப்படியே கையை எடுத்து, அவள் கன்னத்தை வருடினான்...

தூக்கி வாரிப் போட்டது அவளுக்கு...

அவனது சிவந்த விழிகளே அவன் நிதானத்தில் இல்லை என்று எடுத்துரைக்க, அப்படியே நின்றவளை நோக்கி குனிந்தவன், அதிரடியாக அவள் இதழ்களில் இதழ்களை பதித்தான்...

விலக முயன்றான்.

இழுத்து நெருக்கிக் கொண்டான்.

அவன் அணைப்பில் இருந்து விடு படவே முடியவில்லை...

போராடினாள்.

அவள் மாத்திரையும் வேலை செய்ய ஆரம்பித்து இருக்க வேண்டும்...

ஒரு கட்டத்தில் அவன் இதழ்களுக்குள் முனகிக் கொண்டே, அவன் தலைக்குள் கையை கோர்த்து நெரித்து இருந்தாள்.

அதன் பிறகு கேட்கவும் வேண்டுமா?

உள்ளே கேட்ட சத்தங்கள் வெளியே நின்ற திவ்யனின் காதில் விழ, 'மச்சான், இதுக்கு அப்புறம் எப்படி வாய திறக்குறேன்னு பாக்கிறேன், ரொம்ப முரட்டு தனமா இருப்பான் போல, இப்படி சத்தம் கேக்குது' என்று நினைத்தபடி தனது அறைக்குள் சென்று விட்டான்...

அடுத்த நாள் காலையில் மெதுவாக கண்களை விரித்தான் அமரேந்திரன்...

அவன் மார்பில் யாரோ படுத்து இருப்பது போல உணர்வு....

குனிந்து பார்த்தான்.

முல்லை தான், அவனை அணைத்துக் கொண்டே படர்ந்து இருந்தாள்.

பதறிக் கொண்டே, அவளை தள்ளி விட்டவன் எழுந்து அமர்ந்தான்.

அவன் தள்ளி விட்ட வேகத்தில் அவள் கீழே உருண்டு விழுந்தும் விட்டாள்.

போர்வையுடனேயே விழுந்து விட, அவனோ தன்னை பார்த்து விட்டு, அங்கே இருந்த ஷார்ட்ஸை அணிந்து கொண்டே, எழுந்து நின்றவனுக்கு இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை...

என்ன பண்ணி இருக்கின்றான்.

யார் என்றே தெரியாத பெண்ணுடன் கலந்து இருக்கின்றான்.

அதுவும் பணிப்பெண் அவள்...

இன்னொருத்தன் மனைவி வேறு...

மூச்சடைத்து விட்டது...

தலையை அழுந்த கோதிக் கொள்ள, "ஐயோ அம்மா" என்று கத்திக் கொண்ட, கண்களை விரித்தவளுக்கு தூக்கி வாரிப் போட்டது...

என்ன நிலையில் அவள் இருக்கின்றாள்.

விழிகள் அதிர்ச்சியில் விரிய, தனக்கு முன்னே ஆறடிக்கும் அதிகமான உயரத்தில் நின்றவனை விழி விரித்துப் பார்த்தாள்.

"எந்திரிடி" என்றான் கர்ஜனையாக...

அழுகை வேறு வந்து விட்டது அவளுக்கு...

மார்பில் போர்வையை பற்றி பிடித்துக் கொண்டே எழுந்து நின்றாள்.

"எதுக்கு என் ரூமுக்குள்ள வந்த?" என்று எகிறிக் கொண்டே வந்தான்.

அவன் அருகே வந்ததில் சட்டென மார்புடன் பற்றி இருந்த போர்வையை அவள் விட்டு விட, அதுவும் நெகிழ்ந்து கீழே விழ போனது, எட்டி ஒற்றைக் கையால் அவனே பற்றி அவள் மார்பில் அழுத்தி வைக்க, அவளும் அதனை இறுக பற்றிக் கொண்டாள்.

"திரும்ப செடியூஸ் பண்ண பாக்கிறியா?" என்று கேட்டான்.

அவளுக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை...

இஷ்டத்துக்கு என்னவோ எல்லாம் பேசுகின்றானே...

"இல்ல அது" என்று அவள் ஆரம்பிக்க, "சீக்கிரம் இடத்தை காலி பண்ணு, இந்த விஷயம் வெளிய போச்சுன்னா சாவடிச்சிடுவேன்" என்றான்.

அவளுக்கு தனது ஆடைகள் எங்கே இருக்கிறது என்று கூட தெரியவில்லை...

சுற்றி பார்த்தாள்.

அவனோ, "ஷீட்" என்று வெளிப்படையாக திட்டியபடி குளியலறைக்குள் சென்றான்.

எல்லாவற்றுக்கும் தராதரம் பார்க்கும் அவனுக்கு மேனி எல்லாம் அருவருப்பு...

அவன் குளியலறைக்குள் சென்றதுமே அவசரமாக புடவையை அணிந்தவள் விறு விறுவென வெளியேறி தனது அறைக்குள் வந்து விட்டாள்.

தலை விண் விண்ணென்று வலித்தது...

என்ன நடந்தது என்று யோசித்தாள்.

பால் கப்பை எடுக்க சென்றாள்.

அவன் முத்தமிட்டான்.

அவளும் முத்தமிட்டாளே.

நெஞ்சே அடைத்து விட்டது...

தலையை பற்றிக் கொண்டே கட்டிலில் அமர்ந்து விட்டாள்.

இதே சமயம் கோல்டன் பாத் டப் உள்ளே கண்களை மூடி படுத்துக் கிடந்தான் அமரேந்திரன்.

என்ன செய்து வைத்து இருக்கின்றான்...

அதுவும் திருமணமான பெண்ணுடன்...

தன் மீதே கோபம் வந்தது...

அந்நிய கலப்பே இருக்க கூடாது என்று நினைப்பவன் அவன்.

அவ்வளவு ஒழுக்கமானவன், எங்கே அதெல்லாம் சென்றது என்று நினைக்க நினைக்க ஆத்திரம்.

நன்றாக குளித்து விட்டு, கண்ணாடி முன்னே வந்து நின்றான்.

அவளுடன் கலந்த நினைவுகள் மீண்டும் மீண்டும் வர, அவனுக்கோ அப்படி ஒரு கடுப்பு...

உடையை மாற்றிக் கொண்டவன், விழிகள் கட்டிலில் படிந்தன.

'இஸ் ஷீ வெர்ஜின்?' என்று இதழ்கள் முணுமுணுக்க, ஏதோ சரி இல்லை என்று தோன்றியது...

விறு விறுவென வெளியேறி விட்டான்...

நேரே சாப்பிட அமர்ந்தான்.

உணவும் பரிமாறப்பட்டது...

தொண்டைக்குழியில் உணவு இறங்கினால் தானே..

கையை சாப்பிடாமலே அவன் கழுவ, "என்னப்பா சாப்பிடலையா?" என்று கேட்டார் பொன்முடி தேவர்.

"பசிக்கல" என்று சொல்லிக் கொண்டே எழுந்தவனை பார்த்த திவ்யனோ, 'இனி பசிக்கிறது கஷ்டம் தான்' என்று வாய்க்குள் சொல்லிக் கொள்ள, அவனும் எங்கே செல்வது என்று தெரியாமல் கால் போன போக்கில் நடந்தான்.

அப்போது தான் குளித்து விட்டு மாதுரியின் அறையை நோக்கி செல்ல வந்த முல்லையின் கால்கள் அப்படியே நின்று விட்டன...

அவனை ஏறிட்டு பார்த்தாள்.

அவனோ பெருமூச்சுடன் அவள் அருகே வந்தவன், "மேலே இருக்கிற ரூமுக்கு வா" என்று சொல்லி விட்டு அவளை கடந்து செல்ல, அவளும் யோசனையுடன் மாடியேறி சென்றாள்.

அங்கே இருந்த அறைக்குள்ளும் பெண்ணவள் நுழைந்து சுற்றி பார்த்தாள்.

நடனம் ஆட அமைக்கப்பட்டு இருந்த பால் ரூம் அது...

அழகான அலங்காரங்கள்...

அவளுக்கோ அதனை எல்லாம் ரசிக்கும் மனநிலை இல்லை...

எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டே, அங்கே நின்று இருக்க, கையில் இருந்த காப்பை இறக்கிக் கொண்டே அங்கே நுழைந்தான் அமரேந்திரன்.

அவனைக் கண்டதுமே அவளுக்கு நெஞ்சில் நீர் வற்றி போய் விட்டது... அவன் முகம் இறுக்கமாக இருக்க அப்படியே சுவரில் சாய்ந்து நின்று தன்னை நிலைப்படுத்த முயன்றாள்.

மூச்செடுக்க முடியவே இல்லை.

அவன் நெருங்க நெருங்க மயங்கி விழுந்து விடுவோமோ என்கின்ற எண்ணம் தான்... அவளை பார்த்தபடி வந்து அவளது இரு பக்கமும் உள்ள சுவரில் கையை ஊன்றி அணை போட்டவன் , அவள் விழிகளை பார்த்துக் கொண்டே, "புருஷன் பொண்டாட்டின்னு சொன்ன, அப்புறம் நீ எப்படி வெர்ஜின்?" என்று கேட்டான்.

அவன் புருவன் இடுங்கி இருக்க அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது... என்ன சொல்லி சமாளிப்பாள் அவள்.

சட்டென எச்சிலை கூட்டி விழுங்கியபடி, "அவருக்கு முடியாது" என்றாள்.

"சோ என்னை வளச்சு போட்டு மொத்த சொத்தையும் ஆட்டைய போட யோசிச்ச ரைட்?" என்றான்.

"சார் உங்கள போல தான் நானும்." என்க, "பொய் சொல்லாதடி எனக்கு நினைக்க நினைக்க அவ்ளோ அருவருப்பான இருக்கு... போயும் போயும் உன் கிட்ட.... ச்ச... நீ ஒரு வேலைக்காரி , இன்னொருத்தன் பொண்டாட்டி வேற... இங்க பாரு .. இந்த விஷயத்தை பத்தி மூச்சு விட்டா மனுஷனா இருக்க மாட்டேன்" என்றான்.

"ம்ம்" என்றாள் அவனை பயத்துடன் பார்த்துக் கொண்டே.

"நான் எல்லாம் எப்படி பட்டவன் தெரியுமா?? உன் கூட ஒரே பெட் ல... ச்சீ" என்றான்.

அவளுக்கு ஏற்கனவே நடந்த விஷயத்தில் இருந்து வெளியே வர முடியவில்லை. இதில் அவன் வேறு அவளை கீழ் தரமாக பேசிக் கொண்டல்லவா இருக்கின்றான்.

ஒரு கட்டத்தில் கண்களில் கண்ணீரும் நிரம்பி விட்டது... சட்டென ஒற்றை கண்ணில் இருந்து நீர் வழிய , "அழாதே" என்றான் பற்களை கடித்துக் கொண்டே.

"திட்றீங்களே" என்றபடி கண்ணீரை துடைக்க, "அப்போ கொஞ்சவா முடியும்?" என்று எரிச்சலாக கேட்டான்.

"நான் என்ன பண்ணுறது" என்று அவள் விம்மலுடன் கேட்க, "நீ ஒழுங்கானவன்னா என்னை தள்ளி விட்டிருக்கணும். இன்னொருத்தன் போண்டாட்டி நீ... இது தான் சான்ஸுன்னு அக்சப்ட் பண்ணுன தானே. அசிங்கம் பிடிச்சவ நீ" என்றான்

"எனக்கு எதுவுமே நினைவுல இல்ல" என்றவளை முறைத்தவன், "நடிக்காதே... இன்னும் ஒரு வாரத்துல இங்க இருந்து கிளம்பனும்" என்றான்.

பதறியே விட்டாள் பெண்ணவள்.

அவள் கிளம்ப வேண்டும் என்றால் ராவந்த்தும் வர வேண்டும்...

மாதுரியை அழைத்து செல்வதாக வாக்கு வேறு கொடுத்து இருக்கின்றாளே...

"ஒரு வாரமா??" என்று அதிர, "இல்லன்னா கொன்னுடுவேன்" என்று ஒற்றை விரலை நீட்டி அவன் சென்று விட, அவளோ என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறி போனாள்.
 
Top