ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 13

pommu

Administrator
Staff member

அத்தியாயம் 13

குடோனுக்கு அருகே இருக்கும் டீ கடையில் டீயை குடித்துக் கொண்டு இருந்தார்கள் ராவந்த்தும் அஸ்வந்த்தும்.

"அடுத்து என்ன பண்ணலாம்னு இருக்க?" என்று அஸ்வந்த் கேட்க, "அதான் டா தெர்ல... பொண்ணு ஒருத்தி கூட தான் அந்த அரண்மனைக்குள்ள நுழையணும்... ஏன்னா மாதுரி கூட பையன் பேச முடியாதாம்" என்றான்.

"புருஷன் நீயுமா பேச முடியாது?" என்று கேட்க, "என்னை தான் முதலில அடிச்சு துரத்துவங்க. பெரிய தாடி மீசை எல்லாம் வச்சு வேஷம் போட்டு போகணும். ஏன்னா கார்கோடனுக்கு என்ன தெரியும்... அவன் கண்ணுல படாம இருக்கணும், இப்போ பொண்ணுக்கு எங்க போறது?" என்று யோசிக்க, "பேசாம நான் பொண்ணு வேஷம் போடட்டுமா?" என்று கேட்டான் அஸ்வந்த்.

"இல்லடா அது ரிஸ்க். சிக்கினா சின்னா பின்னம் ஆயிடுவோம், நம்ம சொல்றது எல்லாம் கேக்கிற ஒரு பொண்ணு" என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, "ஐயா சாப்பிட்டு மூணு நாள் ஆச்சு" என்று சொன்னபடி ஒருத்தி தலையை சொறிந்து கொண்டே கையை நீட்டினாள் ஒரு பெண். அவளை மேலிருந்து கீழ் பார்த்தான்.

ஒற்றைக் கை வேலை செய்யாத போல இருந்தது...

"நடக்கவும் முடியாதுங்க ஐயா" என்றாள்.

கெந்தி கெந்தி தான் நடந்து வந்ததை பார்த்தான்.

பார்க்க பாவமாக இருந்து இருக்க வேண்டும்...

ராவந்த்தும், "கொஞ்சம் இரும்மா" என்றபடி பர்ஸை எடுக்க , அவளோ பர்ஸை பறித்துக் கொண்டு ஓட ஆரம்பித்து விட்டாள்.

"என்னடா நடக்க முடியலன்னு சொன்னா, இந்த ஓட்டம் ஓடுறா" என்றபடி ராவந்த்தும் துரத்த, "அது பிச்சைக்காரி இல்ல திருடி போல" என்றான் அஸ்வந்த்.

ராவந்த் எட்டி அவள் முடியை பிடித்து இருக்க, அவளோ "ஐயோ சார் விடுங்க தெரியாம பண்ணிட்டேன், இது தான் என்னோட முதல் திருட்டு, அம்மாவுக்காக பண்ணுனேன்" என்று கத்த, " யாரு நீ " என்றபடி அவள் கையில் இருந்த பர்ஸை பறித்து எடுக்க, "என்ற பேர் முல்லை, அம்மாவுக்கு உடம்பு சரி இல்ல, அதான்" என்றாள்.

அவளை மேலிருந்து கீழ் நம்பாத பார்வை பார்த்தான் அவன்...

"வேணும்னா எங்க வீடு பக்கம் தான் வாங்க காட்டுறேன்" என்றாள்.

அவனும் அஸ்வந்தை இரு விரல்களால் அழைக்க, அவனும் வந்தான்.

"சரி உங்க அம்மா கிட்ட கூட்டி போ" என்றவன் அவளுடன் செல்ல, அவளும் ஒரு ஓரமாக இருந்த இடத்துக்கு அழைத்து சென்றாள்.

வீடு உடைந்து விழும் நிலையில் இருந்தது...

அவன் உயரத்துக்கு பாதியாக குனிந்து செல்ல வேண்டிய நிலைமை...

குனிந்து உள்ளே போனான்.

அங்கே படுத்த படுக்கையாக கிடந்தார் வயதான பெண்மணி...

"இது என்னோட அம்மா, வீட்டு வேலை செஞ்சு தான் என்னை படிக்க வச்சாங்க, ப்ளஸ் டூ வரைக்கும் படிச்சு இருக்கேன், அதுக்கு மேல படிக்க பணமும் இல்லை... அம்மா கூட வேலைக்கு போனேன், ஆனா அவங்களுக்கு திடீர்னு வலிப்பு வந்து இப்படி படுத்த படுக்கை ஆயிட்டாங்க, இப்போ என்னால வேலைக்கும் போக முடியல, அம்மாவையும் பார்த்துக்கணும்... கைல பணமும் இல்லை... கொஞ்சமா சேர்த்த எல்லாமே அம்மவோட மருத்துவ செலவுக்கு கரைஞ்சிடுச்சு, அவங்களுக்கு சாப்பாடு கொடுக்க கூட பணம் இல்லை... யார் கிட்ட கேக்கிறதுன்னு தெரியல, இவங்கள விட்டுட்டு எப்படி நான் வேலைக்கு போறது?" என்று கேட்டவளுக்கு அழுகை...

முகத்தை மூடி விம்மி அழ ஆரம்பித்து விட்டான்.

அவனுக்கு மாதுரியின் எண்ணம் வந்து போனது...

அவளும் குடும்பத்துக்காக தானே படிக்காமல் வேலை செய்ய ஆரம்பித்தாள்.

அவளை விட இவள் நிலை பரிதாபம் அல்லவா?

"முல்லை" என்றான்.

கண்களை துடைத்து விட்டு அவனை பார்த்தாள்.

"எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும், நான் உன் அம்மவோட செலவு எல்லாமே பார்த்துப்பேன், உன் அம்மாவை பார்த்துக்கவும் ஏற்பாடு பண்ணுறேன்" என்றான்.

அவள் புரியாமல் பார்க்க, "என் கூட ஒரு இடத்துக்கு வந்து நான் சொல்றது எல்லாம் பண்ணனும் " என்றான்.

"ஐயோ சார் நான் அப்படி பட்ட பொண்ணு இல்ல" என்று சொல்ல, "நீ என் தங்கச்சி மாதிரி ஆனா பொண்டாட்டியா நடிக்கணும்" என்றான்.

"இல்ல புரியல" என்றாள் அவள்...

ஒரு பெருமூச்சுடன், "நான் சொல்றத கேளு" என்று ஆரம்பித்து எல்லாமே சொன்னான்.

அவளோ அதிர்ந்து வாயில் கையை வைத்தவள், "இதென்ன அநியாயமா இருக்கு? அவங்க உங்க பொண்டாட்டி தானே, இப்படி செய்யலாமா என்ன?" என்று கேட்க, "அநியாயம் தான், அவளை திரும்ப அழைச்சிட்டு வரணும், அதுக்கு நம்ம அங்க போயாகணும்" என்றவன் திட்டத்தையும் சொன்னவன், "உனக்கு நல்லா நடிக்க வரும் தானே" என்று கேட்டான்.

"ஆஹ் அதெல்லாம் நல்லா பண்ணிடுவேன், இப்போ நடிச்சேன் ல" என்றாள்.

"அது தான் உன்னை செலெக்ட் பண்ணுனேன்" என்றவனிடம், "அம்மாவை என்ன பண்ணுறது? யார் பார்க்க வருவாங்க?" என்று கேட்க, "இங்க வச்சுக்க முடியாது, எனக்கு தெரிஞ்ச ஹோம் இருக்கு, அங்கே கொண்டு விட்டுட்டு போகலாம், நல்லா பார்த்துப்பாங்க, நான் அவங்களுக்கு தேவையான பணத்தை கொடுக்கிறேன்" என்று சொல்ல, அவளோ, "எப்படி தேங்க்ஸ் சொல்றதுன்னே தெரியல சார்" என்றாள்.

"தேங்க்ஸ் எல்லாம் சொல்ல தேவையில்லை, என்னோட பொண்டாட்டியை கூட்டி வர ஃபுல் ஹெல்ப் பண்ணுனா போதும்" என்றான்.

அவளும் யோசித்து விட்டு ஆம் என்று சொன்னவளுக்கு அக்கணம் தெரியவில்லை தனியாக செல்பவள் திரும்பி வர போவது என்னவோ பொன்முடி வம்ச வாரிசை சுமந்து கொண்டு தான் என்று.

அடுத்த ஒரு வாரம் தான்.

மின்னல் வேகத்தில் எல்லா வேலையும் பார்த்தான் ராவந்த்.

அலுவலகத்தில் பெரிய லீவை போட்டவன் முல்லையின் தாயை ஹோம் ஒன்றில் சேர்த்து விட்ட பின்னர் அவளை அழைத்துக் கொண்டே புறப்பட்டு விட்டான்.

தாடி மீசை நன்றாக வளர்ந்து இருந்தது...

கிளம்ப முதலே, "அந்த கார்கோடன் கிட்ட சிக்க மாட்டியா என்ன?" என்று கேட்க, "நம்ம லக்குக்கு கார்கோடன் ஏதோ வேலை விஷயமா வெளிநாடு போயிருக்கானாம், அவனுக்கு தான் என்னை நல்லாவே தெரியும்... மத்தவனுங்க ஈஸியா கண்டு பிடிக்க வாய்ப்பில்லை... கண்டு பிடிச்சாலும் திவ்யன் பார்த்துப்பான்..." என்று சொன்னான்.

"சரி அப்போ பார்த்து போயிட்டு வா" என்று அவனை அனுப்பி இருந்தான்.

போகும் வழியில், முல்லை நிறைய கேள்விகள் கேட்டாள்.

"இப்போ நம்ம போனதுமே வேலை கிடைச்சிடுமா?" என்று கேட்க, "ம்ம், திவ்யன் அத எல்லாம் பார்த்து நமக்கு வேலை செட் பண்ணி இருக்கான், எனக்கு சமையல் பக்கம் வேலையாம்... நீ மாதுரிக்கு பணிவிடை பண்ணனும்... சீக்கிரமே நம்ம வேலையை முடிச்சிடலாம்னு தோணுது" என்று சொன்னான்.

ஒரு வழியாக திவ்யன் சொன்ன இடத்தை வந்தும் அடைந்து விட்டார்கள்.

வண்டியில் இருந்து இறங்கிய ராவந்த்துக்கு அங்கே ஒரு ஜீப்பில் சாய்ந்து தங்க நிற குர்தாவில் நின்ற திவ்யன் தென்பட, "ஹாய்" என்றான்.

அவனை மேலிருந்து கீழ் பார்த்த திவ்யனோ, "பார்க்க சினிமா ஹீரோ போல இருக்க, உன்னை வேலைக்காரன்னு அவன் நம்புவானான்னு தெரியல, சரி சமாளிக்கலாம்" என்றான்.

"இப்போ நான் என்ன பண்ணி என்னோட கிளாமரை குறைக்கிறது?" என்று ராவந்த் கேட்க, "அதெல்லாம் ஒன்னும் பண்ண தேவையில்ல, இதுவா நீ சொன்ன பொண்ணு?" என்று கேட்க, "ம்ம்"என்றான் ராவந்த்.

"உங்க டீடெய்ல் எல்லாமே ரெஜிஸ்டர் ல போட்டுட்டேன், அவ பேர் முல்லைன்னு தான் போட்டிருக்கேன், உன் பேர் ராமசாமி" என்றான்.

"என்னது ராமசாமியா? அது என் அப்பா பேர்" என்றான்.

"சரி இருக்கட்டுமே, ராவந்த் ரொம்ப மார்டன் ஆஹ் இருக்கே" என்று சொன்ன திவ்யனோ, "என்னோட வண்டில ஏறுங்க, பேலஸ்க்கு கொஞ்ச தூரத்துல நிப்பாட்டுவேன், அதுக்கப்புறம் நடந்து வாங்க, கார்கோடன் வர எப்படியும் ஒரு மாசத்துக்கு மேல ஆயிடும், அதுக்குள்ள உன் பொண்டாட்டியை கர்ப்பம் ஆக்கிடு" என்றான் திவ்யன்.

"என்னது?" என்று ராவந்த் அதிர, "அப்போ தான் இந்த கல்யாணமே நிற்கும், உனக்கு அமர் பத்தி தெரியாது, உன்னை போட்டு தள்ளிட்டு, என்னை அவளுக்கு கட்டி கொடுத்தாலும் கொடுத்துடுவான், ப்ரெக்னன்ட் அப்படின்னா கொஞ்சம் சமாளிக்கலாம்" என்றான்.

"உன் அவசரத்துக்கு அதெல்லாம் பண்ணலாமா? என் ஃபெர்ஸ்ட் நைட் எப்படி நடக்கணும்னு கனவு இருக்கு தெரியுமா?" என்றான்.

திவ்யன் அவனை மேலிருந்து கீழ் பார்த்துக் கொண்டே, "நீ கனவு கண்டு அதெல்லாம் நடத்தி முடிக்கிறதுக்கு முதல் எனக்கும் அவளுக்கு கல்யாணம் நடந்திடும் டா" என்றான்.

"சரி ட்ரை பண்ணுறேன்" என்றவன், திவ்யனின் வண்டியில் ஏறிக் கொண்டான்.

அவர்களை மாளிகைக்கு கொஞ்சம் தள்ளி இறக்கி விட்ட திவ்யன் கிளம்பி விட, ராவந்த் மற்றும் முல்லை நடக்க ஆரம்பித்து விட்டார்கள்.

ஒரு வழியாக அரண்மனையை நெருங்க, அதுவோ சூரிய வெளிச்சத்தில் தக தகவென மின்னிக் கொண்டு இருந்தது...

"என்ன அண்ணா இப்படி இருக்கு இடம்?" என்றாள்.

அவனும், "அதான் பாரேன், வாழுறான் அந்த அமர்" என்றான்.

"உங்களுக்கு குதூகலம் தானே, உங்க பொண்டாட்டியும் இந்த வம்சம் தானே" என்று சொல்ல, "அப்படி எல்லாம் இல்லை... எனக்கு அவ பொண்டாட்டியா இருந்தாலே போதும்... இப்படி ஒரு வாழ்க்கை வேணாம்" என்று சொன்னான்.

அவளும் மெலிதாக சிரித்துக் கொண்டே, "நீங்க ரொம்ப நல்லவர்" என்று சொல்ல, "அவளை லவ் பண்ண தொடங்குன அப்புறம் மாறிட்டேன்" என்றான் கண்களை சிமிட்டி...

இதே சமயம், ஜன்னல் அருகே அமர்ந்து இருந்தாள் மாதுரி.

இங்கே இருந்து எப்படி கிளம்புவது என்றே தெரியவில்லை...

கிட்டத்தட்ட சிறைப்பட்ட நிலைமை தான்.

தலை வேறு விண் விண்ணென்று வலித்தது...

"இந்த ஜன்னலை உடைச்சு போகலாமா?" என்று எல்லாம் முயன்று பார்த்து தோல்வியடைந்தாள்.

'ராவந்த் எங்க இருக்கீங்க? சீக்கிரம் வாங்க' என்று அவள் தனக்குள் பேசிக் கொள்ளவும், தங்க மாளிகையில் அவன் கால்களை வைக்கவும் நேரம் சரியாக இருந்தது...

உள்ளே வந்தவர்களை, "உள்ளே வாங்க" என்று அழைத்த திவ்யன் நேரே அவர்களை அழைத்து சென்றது என்னவோ அமரேந்திரனிடம் தான்.

புதிதாக யார் வந்தாலும் அவன் பார்த்தாக வேண்டும்...

அமரேந்திரன் ஹாலில் தான் இருந்தான்...

லேப்டாப்பில் கணக்கு வழக்குகளை பார்த்துக் கொண்டு இருந்தான்...

அவன் முன்னே வந்து நின்ற திவ்யனோ, "மச்சான்" என்று அழைக்க, விழிகளை உயர்த்தி பார்த்தவன் விழிகள் அங்கே நின்ற ராவந்த் மற்றும் முல்லையில் படிந்தது...

"இது தான் நீ சொன்ன ரெண்டு செர்வன்ட்ஸ்ஸுமா?" என்று கேட்க, "ஆமா மச்சான், கார்கோடன் தான் இதெல்லாம் பார்ப்பான், ஆனா அவன் இல்லையே... நம்ம பொன்னிலாவுக்கு எல்லாம் பார்த்துக்க ஆள் வேணும்னு தான் இந்த பொண்ண தேடி பிடிச்சன், புருஷனுக்கும் வேலை கேட்டா, சமையல் பக்கம் வேலை போட்டு கொடுத்து இருக்கேன், அவ பேர் முல்லை, இவன் பேர் ராமசாமி" என்றான்.

மாதுரிக்கு என்றதுமே அவன் எதுவும் சொல்லவில்லை...

அவன் எதுவும் சொல்ல கூடாது என்று தான் திவ்யன் மாதுரியை உள்ளே இழுத்த காரணமும்...

"ம்ம்" என்று மட்டும் சொல்லி விட்டு வேலையை பார்க்க தொடங்க, அப்போது தான் ராவந்த்துக்கு மூச்சே வந்தது...

திவ்யன் தான் இருவரையும் அழைத்து சென்றவன், அவர்களுக்கான அறையை காட்டி, "இது தான் உங்க ரூம், நைட் இங்க தங்கிக்கலாம், உனக்கு சமையல் வேலை, சமைக்க தெரியும் ல" என்றான்.

"குத்து மதிப்பா தெரியும் டா" என்றான் ராவந்த.

"சரி தான்" என்றவன் முல்லையிடம், "நீ தான் பொன்னிலா கூட" என்று ஆரம்பிக்க, "மாதுரின்னு சொல்லு, அவ பேர் அது தான்" என்றான் ராவந்த் இடை மறித்து...

"சரி மாதுரி ரூமுக்குள்ள போகணும்... அதுக்குள்ள நான் போகவே அனுமதி இல்லை... அவ என்ன டைம் என்ன செய்வான்னே தெரியாது... எல்லாமே நோட் பண்ணி இவன் கிட்ட சொல்லிடு" என்று சொல்ல, "அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்" என்றாள் அவள்...

அவனோ பெருமூச்சுடன், ராவந்த்தைப் பார்த்தவன், "நீ பார்க்க சினிமா ஆக்டர் போல தான் இருக்க, அது தான் அவ உனக்கு லவ் லெட்டர் கொடுத்தாளா?" என்று கேட்க, ராவந்த்தின் விழிகள் விரிய, "உனக்கெப்படி தெரியும்?" என்று கேட்டான்.

"லவ் பண்ணுறன், ஸ்பை வைக்காம இருப்பேனா? கேட்டதும் செம கடுப்பாச்சு, நீ கல்யாணம் பண்ணிட்டன்னு கேள்விப்பட்டதால விட்டு வச்சேன்" என்றான்.

"இல்லன்னா?" என்று அவன் கேட்க, "லாரி வச்சு அடிச்சு தூக்கி இருப்பேன்" என்றான்.

"அட சண்டாளா" என்று ராவந்த் சொல்ல, "தப்பிட்ட ப்ரோ" என்று சிரித்தபடி சொன்ன திவ்யன் அவன் தோளில் தட்டி விட்டு நகர, "ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு தினுசா இருக்கானுங்கள்ல?" என்று கேட்ட ராவந்த் அறையை சுற்றி பார்க்க, "வேலைக்காரங்களுக்கே இவ்ளோ சொகுசா அறை கொடுப்பாங்களா?" என்று முல்லை கேட்டாள்.

"நான் மாசம் லட்ச கணக்குல சம்பளம் வாங்குறேன், என் ரூமை விட இந்த சேர்வன்ட் ரூம் லக்ஸரியா இருக்கே" என்று சொல்லிக் கொண்டான்.
 
Aahhaaa.... Apo antha terror amar ku jodi intha mullai thana!!!
Vamsam, ratham nu koovuvaane ivan varisu nu varapo enna panranu paakalaam 😄😄😄
 
Top