அத்தியாயம் 1
கல்யாண மண்டபம் களைகட்டிக் கொண்டு இருந்தது..."மாதுரி வெட்ஸ் ராம்" என்று பெயர்ப் பலகை வாசலில் மின்ன, அங்கே இருந்த பெண்கள் கூட்டமாக நின்று ஒருவனை மட்டும் எட்டி எட்டி பார்த்துக் கொண்டு இருந்தார்கள்...
அவன் தான் ராவந்த்.
வேஷ்டி சட்டை அணிந்து, இருக்கையில் கால் மேல் கால் போட்டு சாய்ந்து அமர்ந்து இருந்தான்.
ஆறடி உயரம் இருப்பான், திடகாத்திரமான ஆளுமையான படிக்கட்டு தேகம் அவனுக்கு...
பளிச்சென்று ஈர்க்கும் தோற்றம் கொண்ட அவனை பெண்கள் பார்க்கவில்லை என்றால் தான் அதிசயம்...
அவனுக்கு அதுவே திமிரை அதிகமாக கொடுத்து இருக்க, அந்த பெண்களை திரும்பி அலட்சியமாக பார்த்து விட்டு முன்னால் திரும்பிக் கொண்டான்.
அருகே இருந்த அவன் தம்பி அஸ்வந்த்தோ, "உன்னை மட்டும் ஏன் டா பொண்ணுங்க இப்படி பார்க்குறாங்க, நானும் உன்னை போல தானே இருக்கேன்" என்றான் ஆதங்கமாக.
"சிக்ஸ் ஃபீட் இருக்கியா?" என்று கேட்க, "இல்ல" என்றான்.
"என்னை போல சிக்ஸ் பேக் வச்சு இருக்கியா?" என்று கேட்க, அதற்கும் இல்லை தான்.
"அப்புறம் எப்படி பார்ப்பாங்க" என்று கேட்டான்.
அஸ்வந்த் அவனை பெருமூச்சுடன் பார்த்துக் கொண்டே, "நானும் இனி ஜிம் போறேன் பாரு" என்று சொல்லிக் கொண்டே மேலும், "ஆனா ஒரு பொண்ண கூட நீ பார்க்கலயே" என்றான்.
"யாரும் என் லெவலுக்கு இல்ல டா, ரொம்ப லோ வா இருக்காங்க, அட்லீஸ்ட் அஞ்சடி எட்டு அங்குலமாச்சும் இருக்கணும், எல்லாம் அளவு எடுத்து செஞ்ச போல கச்சிதமா இருக்கணும்" என்றான்.
"உன் ஆஃபீஸ்லயும் அப்படி யாரும் இல்லையா?" என்று கேட்க, "இருக்காங்க தான், ஏதோ ஒரு குறை இருக்கு" என்றான்.
"நீ ரொம்ப சூசி, இப்படியே இருந்தா கல்யாணம் நடக்காது உனக்கு" என்று அஸ்வந்த் சொல்ல, "பொறாமை பிடிச்சவனே, ஐஸ்வர்யா ராய் போல உனக்கு ஒரு அண்ணி கொண்டு வரேன் பாரு" என்று சொல்ல, "க்கும்" என்று சொல்லிக் கொண்டான் அவன்...
இதே சமயம் அருகே அமர்ந்து இருந்த அவர்களது தாய் திலகவதியும் ராமசாமியும் பேசிக் கொண்டு இருந்தார்கள்...
"பையனுக்கு இங்க கல்யாணம் பார்த்து முடிச்சு வச்சுடனும்" என்று ராமசாமி சொல்ல, "அப்படியே உங்க மவன் கேட்டுட்டாலும், எந்த பொண்ண காட்டுனாலும் வேணாம்னு சொல்றான்" என்று சொல்ல, "அவனுக்கு என்ன தான் டி பிரச்சனை? வயசு ஏறிட்டே போகுது ல, நல்லா படிச்சு இருக்கான், நல்ல கம்பெனில வேலை பார்த்து சம்பாதிக்கிறான், வீடு வேற சொந்தமா இருக்கு, அப்புறம் என்னவாம்?" என்று கேட்க, "பொண்ணு லட்சணமா வேணுமாம்" என்றார் திலகவதி...
"அவனும் அவன் கனவும்" என்று கடுப்பாக திட்டி விட்டு, அமர்ந்து இருந்தவரின் கண்ணில் பதட்டமாக அங்கே ஓடி திரிந்த அவரது நண்பரும் கல்யாண பொண்ணு மாதுரியின் தந்தையுமான வடிவேல் தான் தென்பட்டார்.
இருவரும் உயிர் தோழர்கள்...
அதனால் தான் இவ்வளவு தூரம் குடும்பத்தை அழைத்துக் கொண்டே கல்யாணத்துக்கு வந்திருந்தார் ராமசாமி...
'இவன் ஏன் பதட்டமா இருக்கான்?' என்று யோசித்துக் கொண்டே, ராமசாமி எழுந்து வடிவேல் அருகே சென்று, "என்னாச்சுடா?" என்று கேட்க, "பெரிய பிரச்சனை, உள்ளே வா சொல்றேன்" என்று சொல்லி அவரை அழைத்து சென்றார் வடிவேல்.
இதே சமயம் அஸ்வந்த்தோ, "பொண்ணு உன் ஆஃபீஸ் தானே" என்று கேட்க, "ம்ம், மைனர் ஸ்டாஃப் டீ போடுற பொண்ணு" என்று சொல்லிக் கொள்ள, "ஓஹோ" என்று சொல்லிக் கொண்டான் அவன்...
இதே சமயம் வடிவேல், ராமசாமியிடம், "பொண்ண பிடிக்கலன்னு எழுதி வச்சுட்டு மாப்பிள்ளை ஓடி போய்ட்டான் டா, அவளுக்கே இவ்ளோ கஷ்டப்பட்டு தான் கல்யாணம் பேசி இருந்தேன், இப்போ கல்யாணம் நின்னா அவளுக்கு கல்யாணமே நடக்காது, நாங்க எல்லாரும் குடும்பத்தோட சாக தான் வேணும்" என்று முகத்தை மூடி அழ, அவரையே பார்த்துக் கொண்டு இருந்த ராமசாமி, "என் பையன் மாப்பிள்ளையா வந்தா உனக்கு சம்மதம் தானே" என்று கேட்டார்.
"உன் பையன் சம்மதிப்பானா என்ன?" என்று கேட்க, "சம்மதிக்க வைக்கிறன்" என்று சொன்னவரோ, வெளியே சென்று திலகவாதியை அங்கே இருக்கும் அறை ஒன்றுக்குள் அழைத்தவர், விஷயத்தை சொன்னார்.
அவரோ, "ஐயோ அவன் சரின்னு சொல்ல மாட்டானே" என்று பதற, "வேற வழி இல்லை, நீ சம்ம்மதிக்க வச்சு தான் ஆகணும்" என்று சொல்லிக் கொண்டார் அவர்.
திலகவதிக்கு மயக்கம் வராத குறை தான்...
"சரி பேசி பாக்கிறேன்" என்று சொன்னவன், "ராவந்த்" என்று அழைக்க, அவனோ, "என்னம்மா?" என்றபடி எழுந்து கொள்ள, அஸ்வந்த்தும் அவனுடன் எழுந்து கொண்டான்.
இருவரையும் அழைத்துக் கொண்டு அறைக்குள் வந்த திலகவதி, "நீ தான் மாப்பிள்ளை" என்றார்.
அவனோ, "யாருக்கு?" என்று பதட்டமாக கேட்க, "மாப்பிள்ளை ஓடி போய்ட்டான், நீ தான் தாலி கட்டணும்" என்று அவன் தலையில் குண்டை தூக்கி போட, 'நாசமா போச்சு' என்று அஸ்வந்த் முணுமுணுக்க, "என்ன விளையாடுறீங்களா?" என்று சீறினான் ராவந்த்.
"இன்னைக்கே உனக்கு கல்யாணம்" என்றார்.
"அம்மா இது ஒன்னும் சீரியல் இல்ல... என் லைஃப்" என்று அந்த அறையே அதிரும் வண்ணம் சீறினான் அவன்.
"அது எனக்கும் தெரியும்... மாதுரி தான் உன் பொண்டாட்டி. இப்போவே தாலி கட்டுற" என்றார் அவர்.
"என்னால முடியாது" என்றவனிடம், "உங்க அப்பா வாக்கு கொடுத்துட்டார் டா. இது நடக்கலைன்னா தூக்குல தொங்குவார்" என்றார்.
"அவரை யாரு என் கிட்ட கேட்காம வாக்கு கொடுக்க சொன்னது." என்று சீறியவரிடம், "அந்த பொண்ணுக்கு என்னடா குறைச்சல்" என்றபடி மல்லுக்கு நின்றார்.
"அம்மா எல்லாமே குறைச்சல் தான். நான் யாரு தெரியுமா??" என்று கேட்க, "இந்த பெரிய உருவத்தை தெரியாம இருக்குமா?" என்று கிண்டல் செய்தான் அவன் தம்பி அஸ்வந்த்.
"செருப்பால அடிப்பேன் வாயை மூடு டா" என்று அவனுக்கு திட்டி விட்டு தாய் திலகவதியிடம், "என் கம்பெனி ல டீ போடுற பொண்ணு. நான் என் கம்பெனில இருக்கிற ஹாட் கை" என்றான்.
"கொட்ட இருக்கோ இல்லையோ அவ தான் உன் பொண்டாட்டி" என்றார்.
"ச்சீ அது கொட்ட இல்லை ஹாட்" என்றான்.
"என்ன கருமமோ அவ தான் என் மருமகள்" என்றார்.
"நான் சொல்றது கேட்கவே இல்லையா? என் படிப்பு என்ன அவ படிப்பு என்ன? நான் ஆறடி அவ அஞ்சடி. என் பாடியை பாருங்க" என்று சொன்னபடி ஷேர்ட்டை கழட்ட, "பாடி எல்லாம் போடுவியா நீ?" என்று கேட்டார்.
"ஐயோ அம்மா என் உடம்பை பாருங்க" என்று அவன் படிக்கட்டு தேகத்தை காட்ட, "அட இது நம்ம ஊரு மூட்டை தூக்குற முருகனுக்கும்.தான் இருக்கு... இதுல என்ன விசேஷத்தை கண்ட ?" என்று கேட்டார்.
அஸ்வந்த் வயிற்றை பொத்தியபடி சிரிக்க ஆரம்பித்து விட, "வாயை மூடு டா" என்று அவனுக்கு திட்டியவனோ, "கல்யாணத்துக்கு கூப்பிட்டிங்கன்னு ஊருக்கு லீவு போட்டு வந்தது ஒரு குத்தமா?? மாப்பிளை ஓடி போனா கல்யாணத்தை நிறுத்துங்க... அத விட்டுட்டு என்னை பார்த்தா எப்படி தெரியுது?" என்று சீறினான்.
"நீ மட்டும்.அவ கழுத்துல தாலி கட்டலைன்னா நானும் உன் அப்பனும் இங்கேயே தூக்கு போட்டுப்போம்" என்றார்.
"உங்களுக்கு என்ன பைத்தியமா?" என்று அவன் சீற அஸ்வந்த்தோ, "அம்மா இது தான் நான் உங்க கூட வர்ற கடைசி கல்யாணம்" என்றார்.
"உனக்கு உன் பிரச்சனை" என்று ராவந்த் சொல்ல, அவனோ, "என்ஜாய் ப்ரோ" என்றான் கண்களை சிமிட்டி.
"அம்மா" என்று அவன் ஆரம்பிக்க, "அவ தான் என் மருமக" என்றார் அவர்.
"என்னால முடியாது" என்று அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, "என்னவாம் உன் மவன்" என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தார் ராமசாமி...
"அப்பா என்னால முடியாது" என்று ராவந்த் சொல்ல, ஆறடிக்கு அதிகமான உயரம் உள்ளவனை தலையை உயர்த்தி பார்த்தவர், "அப்போ நான் சாகட்டுமா?" என்று கேட்டார்.
"அப்பா என்னப்பா உளறுறீங்க?" என்று கேட்க, அவனை பார்த்துக் கொண்டே, கையை அஸ்வந்த் பக்கம் நீட்டினார்.
அவனோ புரியாமல், "என்னப்பா?" என்று கேட்க, "வேஷ்டியை கொடு" என்றார்.
"எத?" என்று அவன் அதிர, "வேஷ்டியை கொடு டா" என்று சொல்லிக் கொண்டே, ஒற்றைக் கையால் அவன் வேஷ்டியை உறுவி எடுக்க, "ஐயையோ" என்றபடி அவன் அங்கே கட்டிலில் கிடந்த பெட் ஷீட்டை எடுத்து கட்டிக் கொண்டான்...
ராவந்த்தோ, "இப்போ எதுக்கு உங்களுக்கு ரெண்டு வேஷ்டி?" என்று கேட்க, "தூக்கு போட போறேன்" என்று சொன்னவர் அண்ணார்ந்து பார்த்தார்.
அங்கே மின் விசிறி இல்லை, ஏசி தான் இருந்தது...
"எங்கடி ஃபேன்?" என்று அவர் திலகவாதியிடம் கேட்க, "என்னை கேட்டா எனக்கென்ன தெரியும்? நான் என்ன கொத்தனாரா?" என்று அவர் ஒரு பக்கம் புலம்ப, "ஃபேன் இல்லன்னா என்ன? என் கழுத்தை நானே நெரிச்சுக்கிறேன்" என்று சொல்லிக் கொண்டே வேஷ்டியால் கழுத்தை சுற்றி நெரிக்க, திலகவதி, "ஐயையோ, என்னோட தாலி" என்று சொல்லிக் கொண்டே, அவர் அருகே ஓடி வர, "அப்பா, லூசா நீங்க?" என்று கேட்டபடி வேஷ்டியை பறித்து எடுத்தான் ராவந்த்.
அவன் முன்னே ஒற்றை விரலை நீட்டியவர், "இப்போ நீ தாலி கட்டலைன்னா, இங்க இருந்து குதிச்சிடுவேன்" என்றார்.
"இது கிரவுண்ட் ஃப்ளோர்" என்றான் அவன்.
"மேல ஏறி போய் குதிப்பேன் டா" என்று சொல்லிக் கொண்டே அவர் செல்ல, "டேய் புடி டா" என்று திலகவதி பதற, அவரை பிடித்து இழுத்தவன், "அப்பா கொஞ்சம் சும்மா இருங்களேன்" என்றான் ராவந்த்.
"இப்போ நீ தாலி கட்டுற" என்று அவர் அறுதியாக சொல்ல, அவனோ நெற்றியை நீவிக் கொண்டே, "அந்த பொண்ணு" என்று ஆரம்பிக்க, "நான் வாக்கு கொடுத்துட்டேன், எங்க பரம்பரைல வைக்க காப்பாத்தலைன்னா நாண்டு கிட்டு செத்திடுவோம், உனக்கும் சேர்த்து விஷம் வைப்போம்." என்று சொன்னார். "என்னது விஷம் வைப்பீங்களா?" என்று அவன் அதிர்ந்தான்.
அஸ்வந்த்தோ, "அவனுக்கு ஐஸ்வர்யா ராய் தான் வேணுமாம்" என்று சொல்ல, "டேய் அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகி பெரிய பொண்ணே இருக்கு, என் வயசு வேற" என்றார்.
"ஐயோ அம்மா, அழகான பொண்ணு வேணும்னு சொல்ல வந்தேன் மா" என்றான் ராவந்த் எரிச்சலாக.
"இப்போ பொண்ணு அழகா தான் இருப்பா, நீ கல்யாணம் பண்ணுற" என்று தாயும் தந்தையும் நெருக்கியத்தில், "பண்ணி தொலைக்கிறேன்" என்று சொல்லி விட்டான் அவன்...
இதே சமயம் ரூமுக்குள் இருந்து பூந்தி லட்டை சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள் மாதுரி. ஐந்தடி உயரம், பூசிய உடல் வாகு, கண்ணில் கண்ணாடி என அமர்ந்து இருந்தாள்.
"கல்யாண மாப்பிளை ஓடி போய்ட்டான். நீ பூந்தி லட்டை சாப்பிடுற" என்று அவள் தங்கை ஜீவிதா கேட்க, "அவன் கிடக்குறான்... லட்டு போனா வருமா?" என்றபடி சாப்பிட, "சீக்கிரம் மணமேடைக்கு வாடி இன்ஸ்டன்ட் மாப்பிளை ரெடியா இருக்கார்" என்று சொல்ல, "இன்ஸ்டன்ட் மாப்பிள்ளையா?? என்னை கட்டிக்க எவன் சரின்னு சொல்லி இருப்பான்" என்று யோசித்து கொண்டே மணமேடையை நோக்கி சென்றவளுக்கு மயக்கம் வராத குறை தான். "சரி கண்ணாடியை கழட்டிட்டு போய் உட்காரு" என்று சொல்ல, அவளோ, "அடியேய் எனக்கு கண்ணாடியை கழட்டுனா கண் தெரியாது டி" என்றவளோ அங்கே அமர்ந்து இருந்த ராவந்த்தை பார்த்து, "ஐயோ இந்த ஆளா ?" என்று அவள் அதிர, "புது மாமா செம்ம அழகு டி" என்றாள் அவள்.
" லூசு போல உளறாதே. சரியான சைக்கோ... ஒழுங்கா டீ போடலன்னா அன்னைக்கு முழுக்க டீ போட வைக்கிற மெண்டல் " என்று சொன்னவள் அதிர்ந்த முகத்துடன் தான் அவள் அருகே சென்று அமர்ந்தாள்.
அவன் சட்டென திரும்பி அவளை முறைத்து பார்க்க, 'ஐயோ பாக்கிறானே' என்றபடி, , தலையை குனிந்து கொண்டாள்.
மங்கள நாணை ஐயரும் கொடுக்க, அதனை வாங்கி அவள் கழுத்தில் கட்டி இருந்தான் ராவந்த்.