விழி-3
பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்த நிலவழகனுக்கு தன் கையில் இருக்கும் முகவரியை யாரிடம் கேட்பது என தெரியாது திருதிருவென முழித்துக் கொண்டிருந்தான்...
அவ்வழியே செல்பவர்களை அழைக்க அவர்களும் ஒருநிமிடம் நிற்பவர்கள் அவனின் தோற்றத்தை கண்டதும் அலட்சியப் பார்வையை வீசிவிட்டு சென்றுவிடுவார்கள்... அவனுக்கு மனம் சோர்ந்து கண்ணீர் வரப் பார்த்தது...
இன்னும் ஒருபடி மேலே போய் சிலர் அவன் கூறவருவதைக் கேட்கும் முன்பே "காசில்லை போ" என விரட்டவே செய்தனர்...
சோர்வாக சென்றவன் அங்கிருந்த நடைமேடையில் அமர்ந்து கொண்டான்... அவனுக்கு வாழ்க்கையே வெறுத்து போனது...
என்ன மனிதர்கள் இவர்கள் எல்லாம் .... ஒரு தனி மனித உயிருக்கு இவ்வளவு தான் மதிப்பா... ஒருவனின் உருவத்தில் என்ன உள்ளது ... ஒருவர் செய்யும் செயல்களே அவருக்கு மதிப்பை ஏற்படுத்த வேண்டுமே தவிர பணமோ தோற்றமோ அதனை நிர்ணயிக்க கூடாது... இந்த சிறுவயதிலேயே நிலவழகனுக்கு இவையெல்லாம் வலிக்க வலிக்க அடித்து இந்த சமூகம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தது... இன்னும் அவனுக்கு இந்த சமூகம் என்ன வைத்திருக்கிறதோ.....
கலங்கி அமர்ந்திருப்பவனை சற்றுத் தொலைவில் கண்ணில் வஞ்சம் மின்ன பார்த்துக் கொண்டே ஒரு மிருகம் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தது..தன் அலைப்பேசியே எடுத்த அந்த மிருகம் யாருக்கோ அழைப்பை விடுக்க பார்வை மட்டும் நிலவழகனை விட்டு அகலவில்லை ...
மறுமுனை அழைப்பை ஏற்றவுடன்
" மச்சி காலைலேயே ஒரு பட்சி சிக்கியிருக்கு... இளசான ப்ரஷு பீஸூ மாமே ... தூக்குனோம் நல்ல துட்டு பார்க்கலாம்... "
என்க...
...................
"கவலையை விடு மாமே உனக்கே தெரியும் ... என் கண்ணுல சிக்குனா அடையாளமே இல்லாம பார்சல் பண்ணீருவேன்னு... இன்னைக்கு நைட்டு பார்சல்னு மெசேஜ போட்டுரு மாமே ... சத்தமே இல்லாம தூக்கிட்டு போட்டோ அனுப்புறேன்"
...................
"வேணாம் மாமே அந்த தௌலத்து போன தடவையே துட்ட குறைச்சுட்டான் ... ரொம்ப நாளா ஒரு பாம்பேகாரன் நம்மகிட்ட பார்சல் கேட்டுட்டே இருந்தான்ல அவனுக்கு நா அனுப்புற போட்டோ அனுப்பி விலைய கேளு ஒத்து வந்தா சரி இல்லாட்டி வேற இடம் பார்ப்போம்..."
.....................
"சரி மாமே .. விரசா நம்ம பயலுககிட்ட பொருள வச்சுட்டு ரெடியா இருக்க சொல்லு.... இன்னும் அரை மணி நேரத்தில அங்க இருப்பேன் " என்றவன்
அலைபேசியை சட்டைப்பையில் போட்டவன் தன்னுடைய ஆட்டோவை எடுத்து கொண்டு நிலவழகனின் அருகில் நிறுத்தினான்....
தன் முன் நின்ற ஆட்டோவைக் கண்டவனுக்கு முதலில் பயம் உருவானது..
தலையை மட்டும் வெளியே நீட்டிய அந்த கயவன் எதார்த்தமாக கேட்பது போல
"தம்பி ஊருக்கு புதுசா... இங்க எல்லாம் உட்கார கூடாது பா" என்க... அதை நம்பிய நிலவழகனும் எழுந்து நின்றவனுக்கு தன்னை மதித்து ஒருவர் பேசுவதிலேயே மகிழ்ச்சியாக இருந்தது...
"ஆமா அண்ணா .... " என்றவன் தன் சட்டைப்பையில் இருந்த முகவரியை எடுத்து அவனிடம் காட்டி எப்படி செல்வது எனக் கேட்டான்....
அழகாக அமைந்த இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டவன் முகவரியைப் பார்த்ததும் மனதில் இருந்த சிறு சந்தேகமும் நிவர்த்தியானது. ..
ஏனெனில் அந்த மருத்துவமனை மற்றும் மருத்துவரும் எதில் மிகச் சிறந்தவர் என்பது அந்த வட்டாரத்திற்கே தெரியும் அது மட்டுமின்றி சிகிச்சைக்கு வருபவர்களுக்கு அதற்கு பின்னான பாதுகாப்பையும் அவர்களே வழங்குதால் இவன் அங்கு ஒரு முறை சென்று விட்டால் திரும்ப அவனை தூக்குவது மிகவும் கடினம் என்பதையெல்லாம் யோசித்தவன் இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்...
புன்னகையுடன் நிலவழகனைப் பார்த்தவன்
"இந்த இடமா . எனக்கு நல்லாவே தெரியும்... இங்க இருந்து கொஞ்ச தூரம்" என்க
அழகனும்"என்ன அங்க கொண்டு போய் விடுறீங்களா ... ஆட்டோக்கு பணம் நான் தரேன்.. " என்றான் ..
அந்த கயவனும் "அங்க போன திரும்பி வர சவாரி கிடைக்காது தம்பி.... அதனாலேயே எந்த ஆட்டோவும் வராது.... உன்ன பார்க்க வேற பாவமா இருக்கு..." என்று பொய்யாக நடித்தான்.
அவனின் நடிப்பை நம்பிய அழகனும் "பிளீஸ் அண்ணா என்னை கொண்டு விடுறீங்களா..." என கெஞ்சினான்... அதில் பாவப்பட்டு ஒத்துக் கொள்வது போல " சரி தம்பி உனக்காக வரேன்.... " என்றவன் நிலவழகன் ஆட்டோவில் ஏறியவுடன் தன் அலைப்பேசி மூலம்
"பட்சி சிக்கிடுச்சு " என்று தகவலை தன் கூட்டாளிகளுக்கு அனுப்பியவன் ஆட்டோவை ஸ்டார்ட் செய்தான்....
தனக்காக காத்திருக்கும் ஆபத்தை அறியாத நிலவழகனும் தன் பொதிப்பையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு சிங்காரச் சென்னையை ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.....
-----------------------------------
குளித்து விட்டு வந்த நிலாவிற்கு மிகவும் புத்துணர்ச்சியாக இருந்தது....
ஜீன்சும் டாப்பும் அணிந்து கொண்டவள் தலைமுடியினை ஒரு கிளிப் கொண்டு அடக்கியவளுக்கு அலைப்பு மணி ஒலிக்க சென்று கதவைத் திறந்தாள் அவள் முன் சீறுடை அணிந்து கொண்டு கையில் காலையுணவுடன் பணியாள் நிற்க புன்னகையுடன் வாங்கிக் கொண்டாள்...
அவளுக்கு பிடித்த பூரியும் மாசாலாவும் இருக்க உணவை முடித்தவள் அடுத்து அழைத்தது என்னவோ மணிக்கு தான்.....
என்னதான் அவன் கோபத்தைக் காட்டினாலும் அது அவள் மேல் உள்ள அக்கறையில் அல்லவா... நிலாவைப் பொறுத்தவரை நண்பர்கள் மூவரும் தான் உலகம்...
தாயாய் தந்தையாய் சகோதரியாய் சகோதரனாய் நண்பர்களாய் அவள் வாழ்க்கையில் அனைத்து கதாபாத்திரங்களும் அவர்கள் மூவரும் தான்...
அழைப்பை ஏற்ற மணி
" சொல்லுடி சாப்டியா ... " மணி..
"சாப்டேன் மணி.. ஏன் அவ்வளவு கோபம்... நான்தான் அப்ப அப்ப ஏதாவது உளருவேன்னு தெரியும்ல் அப்புறம் ஏன் அவர்களை திட்டுகிறாய்...." நிலா..
"நிலா மார்னிங் வாசு சொன்னதும் எனக்கு ரொம்ப பதற்றமாகிடுச்சு அதான் . இங்கபாரு உனக்கு அங்க பிடிக்கலன்னா உடனே கிளம்பி வந்திடு" என்றான்..
" இல்ல மணி எனக்கு இந்த இடம் ரொம்ப பிடிச்சு இருக்கு... புது இடம்ல அதான் தூக்கம் வராம கெட்ட கனவா வந்திருக்கு.. கொஞ்சநாள் இருந்துட்டே வரேன்..." நிலா..
"நிலா வேணும்னா நான் கிளம்பி வரவா ரெண்டு பேரும் ஒரு ஒன்வீக் அங்க இருந்துட்டு கிளம்பி வந்திருவோம் " என்றான் அக்கறையாக. " இல்லாடா நான் மேனேஜ் பண்ணிப்பேன் .. அதான் மூணு வாரம் கழிச்சு நீங்க எல்லாம் வருவீங்கல்ல அப்புறம் என்ன..." நிலா ..
" சரிடி பாத்துக்கோ... பத்திரமா இரு. எதுனாலும் எனக்கு கால் பண்ணு... சரியா" மணி..
" சரிடா நான் பாத்துக்கிறேன்... ஆமா இப்போ எல்லாம் உன்னோட புது பிஏ க்கு நிறைய வேலை குடுக்கற போல .. ஆபிஸ் முடிஞ்சு வீட்டுக்கு போனாலும் கால் பண்ணி வேல தருகிறாயாமே... அப்படியா..." என நக்கலாக இழுத்தாள்.... மணி ' அய்யய்யோ இவளுக்கு எப்படி தெரிந்தது... அடேய் வாசுப்பயலே உனக்கு இருக்குடா ' என மனதில் கருவிக் கொண்டான்..
" என்னடா சத்தத்தைக் காணோம்.." நிலா..
" ச்ச... ச்ச... அப்படியெல்லாம் இல்ல நிலாம்மா .. பைல்ல டவுட் அதான் கால் பண்ணி கேட்டேன் மத்தபடி எதும் இல்லை " என வழிந்து கொண்டே பேசினான்... ஏதும் மறைத்தாலோ அல்லது அவளை சமாளிக்கும் போது மட்டுமே அவனின் அழைப்பு 'நிலாம்மா' வாக இருக்கும்...
" அப்போ கன்பார்ம் .. சரிடா சீக்கிரம் சொல்லி சம்மதத்தை வாங்கிரு... சரியா " என மறைமுகமாக தன் சம்மதத்தை கூற அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சி...
இருந்தும் அவனுக்கு மனது சற்று உறுத்தலாகவே இருந்தது. 'இப்போது தான் வாசு கீர்த்தி திருமணம் முடிந்து வேறு வீடு சென்றார்கள்... அதேபோல் தானும் சென்றுவிட்டால் நிலா தனியாளாகிவிடுவாள்....அவளை தனியாக விட முடியாது... திருமணம் முடித்தால் நிச்சயம் மற்றவர்கள் போல் தன்னையும் தனியாக செல்லவே வற்புறுத்துவாள் ' என பலவாறு யோசித்தவன் அவளிடம் இருந்து உண்மையை மறைத்தான்..
" நிலாம்மா. உனக்கே என்னைப் பற்றி தெரியும்ல .. எனக்கு இந்த காதல் கல்யாணம் எல்லாம் ஒத்துவராது.. கொஞ்சநாள் எந்த கமிட்மென்ட் உம் இல்லாம சந்தோஷமா இருக்கணும்.. அதனால இத பத்தியெல்லாம் யோசிக்காம ஹாலிடேவ என்ஜாய் பண்ணு..." என்றான் சமாதானமாக...
" சரிடா ... என்னமோ சொல்லுற நானும் கேட்டுக்கிறேன்... " என்றவள் பேசி முடித்து அலைபேசியை வைக்கையில் நேரம் மதியத்தைத் தொட்டிருந்தது..
அவளுக்கு தோன்றியதெல்லாம் தான் எவ்வளவு அதிஷ்டசாலி என்பதே.. இந்த காலத்தில் இரத்த சொந்தமே இக்கட்டான சூழ்நிலைகளில் சுயநலத்திற்காக உறவுகளை துச்சமாக வீசிச் செல்கையில் எந்த இரத்த சொந்தமும் இன்றி நட்பிற்காக இன்றுவரை அதே பாசத்துடன் வாழும் மனிதர்கள்தான் எத்தனை சிறந்தவர்கள்...
அவளுக்கு பெருமையாகவும் ஒருபுறம் கர்வமாகவும் இருந்தது...
அதேநேரம் அவள் நடத்தும் தொண்டு நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்தது.. அழைப்பை ஏற்றவளுக்கு எதிர்முனையில் என்ன தகவல் சொல்லப்பட்டதோ அதிர்ச்சியாய்...
" ஷிட்... உங்களுக்கு எத்தனை முறை சொல்லிருக்கேன்.. நம்மகிட்ட உதவி கேட்டு நம்ம தேடி வர்றவங்களை பாதுகாப்பா நம்ம காப்பகத்துக்கு கொண்டு வரணும்னு.... நீங்க இவ்வளவு கவனமில்லாம இருப்பீங்கனு நான் நினைக்கவே இல்லை .. என்ன பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது இன்னும் இரண்டு மணி நேரத்துக்குள்ள அந்த பையன் நம்ம காப்பகத்துல பாதுகாப்பா இருக்கணும் ... புரியுதா க்விக்... அந்த பையனோட அடையாளங்களை டாக்டர் சொன்னாருல அத வச்சு நம்ம டிடெக்டிவ் கிட்டவும் சொல்லி தேட சொல்லுங்க ... " என மேலும் சில கட்டளைகளையிட்டவளுக்கு மனம் ஒரு நிலையிலேயே இருக்கவில்லை..
ஏதேதோ எண்ணங்கள் மனதில் அலைமோத இதுவரை இருந்த உற்சாகம் முற்றிலும் வடிந்து அவளின் இருவிழிகளும் கலங்க துவங்கியிருந்தது.....
கதையின் போக்கைப் பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே ??
Thread 'அணுசரணின் "வேங்கை விழியாள் " - கருத்து திரி' https://pommutamilnovels.com/index.php?threads/அணுசரணின்-வேங்கை-விழியாள்-கருத்து-திரி.828/
பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்த நிலவழகனுக்கு தன் கையில் இருக்கும் முகவரியை யாரிடம் கேட்பது என தெரியாது திருதிருவென முழித்துக் கொண்டிருந்தான்...
அவ்வழியே செல்பவர்களை அழைக்க அவர்களும் ஒருநிமிடம் நிற்பவர்கள் அவனின் தோற்றத்தை கண்டதும் அலட்சியப் பார்வையை வீசிவிட்டு சென்றுவிடுவார்கள்... அவனுக்கு மனம் சோர்ந்து கண்ணீர் வரப் பார்த்தது...
இன்னும் ஒருபடி மேலே போய் சிலர் அவன் கூறவருவதைக் கேட்கும் முன்பே "காசில்லை போ" என விரட்டவே செய்தனர்...
சோர்வாக சென்றவன் அங்கிருந்த நடைமேடையில் அமர்ந்து கொண்டான்... அவனுக்கு வாழ்க்கையே வெறுத்து போனது...
என்ன மனிதர்கள் இவர்கள் எல்லாம் .... ஒரு தனி மனித உயிருக்கு இவ்வளவு தான் மதிப்பா... ஒருவனின் உருவத்தில் என்ன உள்ளது ... ஒருவர் செய்யும் செயல்களே அவருக்கு மதிப்பை ஏற்படுத்த வேண்டுமே தவிர பணமோ தோற்றமோ அதனை நிர்ணயிக்க கூடாது... இந்த சிறுவயதிலேயே நிலவழகனுக்கு இவையெல்லாம் வலிக்க வலிக்க அடித்து இந்த சமூகம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தது... இன்னும் அவனுக்கு இந்த சமூகம் என்ன வைத்திருக்கிறதோ.....
கலங்கி அமர்ந்திருப்பவனை சற்றுத் தொலைவில் கண்ணில் வஞ்சம் மின்ன பார்த்துக் கொண்டே ஒரு மிருகம் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தது..தன் அலைப்பேசியே எடுத்த அந்த மிருகம் யாருக்கோ அழைப்பை விடுக்க பார்வை மட்டும் நிலவழகனை விட்டு அகலவில்லை ...
மறுமுனை அழைப்பை ஏற்றவுடன்
" மச்சி காலைலேயே ஒரு பட்சி சிக்கியிருக்கு... இளசான ப்ரஷு பீஸூ மாமே ... தூக்குனோம் நல்ல துட்டு பார்க்கலாம்... "
என்க...
...................
"கவலையை விடு மாமே உனக்கே தெரியும் ... என் கண்ணுல சிக்குனா அடையாளமே இல்லாம பார்சல் பண்ணீருவேன்னு... இன்னைக்கு நைட்டு பார்சல்னு மெசேஜ போட்டுரு மாமே ... சத்தமே இல்லாம தூக்கிட்டு போட்டோ அனுப்புறேன்"
...................
"வேணாம் மாமே அந்த தௌலத்து போன தடவையே துட்ட குறைச்சுட்டான் ... ரொம்ப நாளா ஒரு பாம்பேகாரன் நம்மகிட்ட பார்சல் கேட்டுட்டே இருந்தான்ல அவனுக்கு நா அனுப்புற போட்டோ அனுப்பி விலைய கேளு ஒத்து வந்தா சரி இல்லாட்டி வேற இடம் பார்ப்போம்..."
.....................
"சரி மாமே .. விரசா நம்ம பயலுககிட்ட பொருள வச்சுட்டு ரெடியா இருக்க சொல்லு.... இன்னும் அரை மணி நேரத்தில அங்க இருப்பேன் " என்றவன்
அலைபேசியை சட்டைப்பையில் போட்டவன் தன்னுடைய ஆட்டோவை எடுத்து கொண்டு நிலவழகனின் அருகில் நிறுத்தினான்....
தன் முன் நின்ற ஆட்டோவைக் கண்டவனுக்கு முதலில் பயம் உருவானது..
தலையை மட்டும் வெளியே நீட்டிய அந்த கயவன் எதார்த்தமாக கேட்பது போல
"தம்பி ஊருக்கு புதுசா... இங்க எல்லாம் உட்கார கூடாது பா" என்க... அதை நம்பிய நிலவழகனும் எழுந்து நின்றவனுக்கு தன்னை மதித்து ஒருவர் பேசுவதிலேயே மகிழ்ச்சியாக இருந்தது...
"ஆமா அண்ணா .... " என்றவன் தன் சட்டைப்பையில் இருந்த முகவரியை எடுத்து அவனிடம் காட்டி எப்படி செல்வது எனக் கேட்டான்....
அழகாக அமைந்த இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டவன் முகவரியைப் பார்த்ததும் மனதில் இருந்த சிறு சந்தேகமும் நிவர்த்தியானது. ..
ஏனெனில் அந்த மருத்துவமனை மற்றும் மருத்துவரும் எதில் மிகச் சிறந்தவர் என்பது அந்த வட்டாரத்திற்கே தெரியும் அது மட்டுமின்றி சிகிச்சைக்கு வருபவர்களுக்கு அதற்கு பின்னான பாதுகாப்பையும் அவர்களே வழங்குதால் இவன் அங்கு ஒரு முறை சென்று விட்டால் திரும்ப அவனை தூக்குவது மிகவும் கடினம் என்பதையெல்லாம் யோசித்தவன் இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்...
புன்னகையுடன் நிலவழகனைப் பார்த்தவன்
"இந்த இடமா . எனக்கு நல்லாவே தெரியும்... இங்க இருந்து கொஞ்ச தூரம்" என்க
அழகனும்"என்ன அங்க கொண்டு போய் விடுறீங்களா ... ஆட்டோக்கு பணம் நான் தரேன்.. " என்றான் ..
அந்த கயவனும் "அங்க போன திரும்பி வர சவாரி கிடைக்காது தம்பி.... அதனாலேயே எந்த ஆட்டோவும் வராது.... உன்ன பார்க்க வேற பாவமா இருக்கு..." என்று பொய்யாக நடித்தான்.
அவனின் நடிப்பை நம்பிய அழகனும் "பிளீஸ் அண்ணா என்னை கொண்டு விடுறீங்களா..." என கெஞ்சினான்... அதில் பாவப்பட்டு ஒத்துக் கொள்வது போல " சரி தம்பி உனக்காக வரேன்.... " என்றவன் நிலவழகன் ஆட்டோவில் ஏறியவுடன் தன் அலைப்பேசி மூலம்
"பட்சி சிக்கிடுச்சு " என்று தகவலை தன் கூட்டாளிகளுக்கு அனுப்பியவன் ஆட்டோவை ஸ்டார்ட் செய்தான்....
தனக்காக காத்திருக்கும் ஆபத்தை அறியாத நிலவழகனும் தன் பொதிப்பையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு சிங்காரச் சென்னையை ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.....
-----------------------------------
குளித்து விட்டு வந்த நிலாவிற்கு மிகவும் புத்துணர்ச்சியாக இருந்தது....
ஜீன்சும் டாப்பும் அணிந்து கொண்டவள் தலைமுடியினை ஒரு கிளிப் கொண்டு அடக்கியவளுக்கு அலைப்பு மணி ஒலிக்க சென்று கதவைத் திறந்தாள் அவள் முன் சீறுடை அணிந்து கொண்டு கையில் காலையுணவுடன் பணியாள் நிற்க புன்னகையுடன் வாங்கிக் கொண்டாள்...
அவளுக்கு பிடித்த பூரியும் மாசாலாவும் இருக்க உணவை முடித்தவள் அடுத்து அழைத்தது என்னவோ மணிக்கு தான்.....
என்னதான் அவன் கோபத்தைக் காட்டினாலும் அது அவள் மேல் உள்ள அக்கறையில் அல்லவா... நிலாவைப் பொறுத்தவரை நண்பர்கள் மூவரும் தான் உலகம்...
தாயாய் தந்தையாய் சகோதரியாய் சகோதரனாய் நண்பர்களாய் அவள் வாழ்க்கையில் அனைத்து கதாபாத்திரங்களும் அவர்கள் மூவரும் தான்...
அழைப்பை ஏற்ற மணி
" சொல்லுடி சாப்டியா ... " மணி..
"சாப்டேன் மணி.. ஏன் அவ்வளவு கோபம்... நான்தான் அப்ப அப்ப ஏதாவது உளருவேன்னு தெரியும்ல் அப்புறம் ஏன் அவர்களை திட்டுகிறாய்...." நிலா..
"நிலா மார்னிங் வாசு சொன்னதும் எனக்கு ரொம்ப பதற்றமாகிடுச்சு அதான் . இங்கபாரு உனக்கு அங்க பிடிக்கலன்னா உடனே கிளம்பி வந்திடு" என்றான்..
" இல்ல மணி எனக்கு இந்த இடம் ரொம்ப பிடிச்சு இருக்கு... புது இடம்ல அதான் தூக்கம் வராம கெட்ட கனவா வந்திருக்கு.. கொஞ்சநாள் இருந்துட்டே வரேன்..." நிலா..
"நிலா வேணும்னா நான் கிளம்பி வரவா ரெண்டு பேரும் ஒரு ஒன்வீக் அங்க இருந்துட்டு கிளம்பி வந்திருவோம் " என்றான் அக்கறையாக. " இல்லாடா நான் மேனேஜ் பண்ணிப்பேன் .. அதான் மூணு வாரம் கழிச்சு நீங்க எல்லாம் வருவீங்கல்ல அப்புறம் என்ன..." நிலா ..
" சரிடி பாத்துக்கோ... பத்திரமா இரு. எதுனாலும் எனக்கு கால் பண்ணு... சரியா" மணி..
" சரிடா நான் பாத்துக்கிறேன்... ஆமா இப்போ எல்லாம் உன்னோட புது பிஏ க்கு நிறைய வேலை குடுக்கற போல .. ஆபிஸ் முடிஞ்சு வீட்டுக்கு போனாலும் கால் பண்ணி வேல தருகிறாயாமே... அப்படியா..." என நக்கலாக இழுத்தாள்.... மணி ' அய்யய்யோ இவளுக்கு எப்படி தெரிந்தது... அடேய் வாசுப்பயலே உனக்கு இருக்குடா ' என மனதில் கருவிக் கொண்டான்..
" என்னடா சத்தத்தைக் காணோம்.." நிலா..
" ச்ச... ச்ச... அப்படியெல்லாம் இல்ல நிலாம்மா .. பைல்ல டவுட் அதான் கால் பண்ணி கேட்டேன் மத்தபடி எதும் இல்லை " என வழிந்து கொண்டே பேசினான்... ஏதும் மறைத்தாலோ அல்லது அவளை சமாளிக்கும் போது மட்டுமே அவனின் அழைப்பு 'நிலாம்மா' வாக இருக்கும்...
" அப்போ கன்பார்ம் .. சரிடா சீக்கிரம் சொல்லி சம்மதத்தை வாங்கிரு... சரியா " என மறைமுகமாக தன் சம்மதத்தை கூற அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சி...
இருந்தும் அவனுக்கு மனது சற்று உறுத்தலாகவே இருந்தது. 'இப்போது தான் வாசு கீர்த்தி திருமணம் முடிந்து வேறு வீடு சென்றார்கள்... அதேபோல் தானும் சென்றுவிட்டால் நிலா தனியாளாகிவிடுவாள்....அவளை தனியாக விட முடியாது... திருமணம் முடித்தால் நிச்சயம் மற்றவர்கள் போல் தன்னையும் தனியாக செல்லவே வற்புறுத்துவாள் ' என பலவாறு யோசித்தவன் அவளிடம் இருந்து உண்மையை மறைத்தான்..
" நிலாம்மா. உனக்கே என்னைப் பற்றி தெரியும்ல .. எனக்கு இந்த காதல் கல்யாணம் எல்லாம் ஒத்துவராது.. கொஞ்சநாள் எந்த கமிட்மென்ட் உம் இல்லாம சந்தோஷமா இருக்கணும்.. அதனால இத பத்தியெல்லாம் யோசிக்காம ஹாலிடேவ என்ஜாய் பண்ணு..." என்றான் சமாதானமாக...
" சரிடா ... என்னமோ சொல்லுற நானும் கேட்டுக்கிறேன்... " என்றவள் பேசி முடித்து அலைபேசியை வைக்கையில் நேரம் மதியத்தைத் தொட்டிருந்தது..
அவளுக்கு தோன்றியதெல்லாம் தான் எவ்வளவு அதிஷ்டசாலி என்பதே.. இந்த காலத்தில் இரத்த சொந்தமே இக்கட்டான சூழ்நிலைகளில் சுயநலத்திற்காக உறவுகளை துச்சமாக வீசிச் செல்கையில் எந்த இரத்த சொந்தமும் இன்றி நட்பிற்காக இன்றுவரை அதே பாசத்துடன் வாழும் மனிதர்கள்தான் எத்தனை சிறந்தவர்கள்...
அவளுக்கு பெருமையாகவும் ஒருபுறம் கர்வமாகவும் இருந்தது...
அதேநேரம் அவள் நடத்தும் தொண்டு நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்தது.. அழைப்பை ஏற்றவளுக்கு எதிர்முனையில் என்ன தகவல் சொல்லப்பட்டதோ அதிர்ச்சியாய்...
" ஷிட்... உங்களுக்கு எத்தனை முறை சொல்லிருக்கேன்.. நம்மகிட்ட உதவி கேட்டு நம்ம தேடி வர்றவங்களை பாதுகாப்பா நம்ம காப்பகத்துக்கு கொண்டு வரணும்னு.... நீங்க இவ்வளவு கவனமில்லாம இருப்பீங்கனு நான் நினைக்கவே இல்லை .. என்ன பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது இன்னும் இரண்டு மணி நேரத்துக்குள்ள அந்த பையன் நம்ம காப்பகத்துல பாதுகாப்பா இருக்கணும் ... புரியுதா க்விக்... அந்த பையனோட அடையாளங்களை டாக்டர் சொன்னாருல அத வச்சு நம்ம டிடெக்டிவ் கிட்டவும் சொல்லி தேட சொல்லுங்க ... " என மேலும் சில கட்டளைகளையிட்டவளுக்கு மனம் ஒரு நிலையிலேயே இருக்கவில்லை..
ஏதேதோ எண்ணங்கள் மனதில் அலைமோத இதுவரை இருந்த உற்சாகம் முற்றிலும் வடிந்து அவளின் இருவிழிகளும் கலங்க துவங்கியிருந்தது.....
கதையின் போக்கைப் பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே ??
Thread 'அணுசரணின் "வேங்கை விழியாள் " - கருத்து திரி' https://pommutamilnovels.com/index.php?threads/அணுசரணின்-வேங்கை-விழியாள்-கருத்து-திரி.828/