ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 35- கார்கால தேர்வுகள்

கார்கால தேர்வுகள்
ஜீவானந்தி's journey through struggles and storms is inspiring and powerful. No matter the situation, her courage, intelligence, patience, gratitude, and silent love make her shine. She is strong, thoughtful, and unforgettable. 😍
ஜெயமன் adds warmth to the story with his calm love, waiting, teasing moments, and constant support. Their love feels pure and comforting.
Every character is well written some reflect kindness, while others show the harsh reality of society. The Sri Lankan Tamil narration makes the story even more beautiful.
An engaging, emotional, and meaningful story❤️✨
 
கார்கால தேர்வுகள்

ஜீவநந்தி நம் நாயகி. ஜெயமன் நம் நாயகன்.

ஜீவா சின்ன வயசுலேயே அம்மாவை இழந்து அப்பா வேற கல்யாணம் பண்ணி போயிடுறாரு. அவங்க கூட இருக்க பிடிக்காமல் பாட்டி கூட வளருறா நம் நாயகி.

சின்ன வயசுல அவ படிப்புக்கு பெரிதும் உதவுறாங்க ஜோதி டீச்சர். அவரோட கணவர் பிரின்சிபால் சிவகுமார் ரெண்டு பேரும் அவ பெரிய ஆளா வருவானு எதிர்பார்க்குறாங்க.

கொஞ்சம் வருஷம் கழிச்சு அவளை சந்திக்குறாங்க சிவக்குமார் ஜோதி அவங்க மகன் ஜெயமன் கல்யாணம் பண்ற பொண்ணு ஓடி போய் அந்த வருத்தத்துல வரும் போது ஜீவா அவளோட சித்தி கொடுமைக்கு ஆளாகி அவளை வெளிய துரத்தி விட்டுடுறாங்க.

வெளிய தனியா நிற்கும் பொண்ணை கூட்டிட்டு வந்து அடைக்கலம் கொடுத்து அவளுக்கு ஹெல்ப் பண்றாங்க.

ஜெயமன் அவளை சின்ன வயசுல இருந்து லவ் பண்ணி அதை அவ ஏத்துக்காம அவளை மறக்க வேண்டி வெளிநாடு போய் பத்து வருஷம் கழிச்சு அவளை பார்க்குறான். திரும்பவும் அவன் லைப்ல அவ வந்ததும் அவளை விட முடியாமல் அவ கிட்ட லவ் பண்ண சொல்லி கேட்டுகிட்டே இருக்கான்.

ஜீவா மனசுல லவ் இருந்தும் சிவக்குமார் ஜோதி இவங்களுக்காக அவனை ஏத்துக்காம கஷ்டப்படுறா. அவளுக்கு கவெர்மென்ட் ஜாப் கிடைச்சு சொல்லாமல் போயிடுறா சிவக்குமார் பேசுனது கேட்டு.

சிவக்குமார் மனசுல என்ன இருந்துச்சு. ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்தாங்களனு கதையில் அழகா சொல்லி இருக்காங்க.

ஸ்டார்டிங்ல படிக்கும் போது ஜீவா மேல அவ்வளவு கோபம் வந்துச்சு. பாவம் அவனை இப்படி அலைய விடுறாளேனு. ஆனால் அதுக்கு பின்னாடி எல்லார் காதலுக்கும் வில்லனா வர காரணம் இருக்கும்னு நினைக்கல.

அதுவும் அவ்வளவு படிச்சி அவ்வளவு ஹெல்ப் பண்ற சிவக்குமார் கிட்ட இருந்து எதிர் பார்க்கவே இல்ல.

ஆனால் கடைசியில அவங்கள புரிஞ்சு சேர்த்து வைச்சது நிறைவாக இருந்துச்சு.

ரெண்டு பேரும் ஜீவாக்கு அவ்வளவு ஹெல்ப் பண்ணி மனசுல நின்னுட்டாங்க.

ஜெயமனுக்கு அவ மேல எவ்வளவு லவ் அவளுக்காக வெயிட் பண்ணி அவ கிட்ட கல்யாணம் பண்ணலாமானு கேட்கும் போது பாவமா இருந்துச்சு.

தாத்தா பாட்டி ஆக்கி ஷாக் கொடுத்தது வேற லெவல் 🤣🤣🤣

ஸ்டோரி படிக்க நல்லா விறு விறுப்பா சூப்பரா இருந்துச்சு

வாழ்த்துக்கள் 💐💐💐
 
#கார்கால_தேர்வுகள்….
#கௌரிஸ்ரிவ்யூ…..

ஜீவாவின் கனவு நிறைவேறியதா????

ஜீவா தான் கதையின் உயிர் நாடி…..அம்மா இல்லாமல், பாட்டியின் வளர்ப்பில் வளரும் இவள்…..

ஒரு கட்டத்தில் அவர்களையும் இழக்க….

அடிமை அப்பன், ஆதிக்க சித்தியிடம் அடைக்கலம் தேடும் அவல நிலை🥺🥺🥺🥺🥺🥺….

படிக்கும் பெண்ணவளை….அவள் அப்பனை போல அடிமையாக்க சித்தி நினைக்க….

வந்து பார் என துணிவுடன் நிற்கிறாள் பெண்🔥🔥🔥🔥🔥…..

அந்த துணிவே….அவளை எங்கும் தேங்க விடாமல் படிக்க செய்தது…..

இப்பவும் அரசு பணிக்காக தேர்வுகள் அனைத்தையும் எழுதவும் செய்கிறது…..

அடிமை கணவனின் பெண் தன்னை, தன் வீட்டிலேயே எதிர்ப்பதா என்று நீங்காத வன்மம் ஜீவா மீது….

ஒரு கட்டத்தில், அவளை வீட்டை விட்டு தள்ளி விட…..

சிவா - ஜோதி டீச்சர் தம்பதி அடைக்கலம் தருகிறார்கள்…..

அவர்களுக்கு அவள் என்றால் தனி பிரியம்….நல்ல படிக்கும் மாணவி என…..

அவளுக்கும் தான்…..ஆனால் அவர்களை பிடிக்க இன்னொரு காரணம் ஜெயன்….

யாரிடமும் பகிரப்படாத காதலன்….அவர்களின் மகன்…..

ஜெயனின் காதல் தெரியும் போது அவள் சிறு பெண் தான்…..

சில காரணங்களால் அவனை அவள் மறுத்து விட…..

திரும்பவும் காதல் அத்தியாயம் ஜீவா வாழ்க்கையில்….

ஜெயனும்….அவள் மறுத்த விரக்தியில் வெளி நாடு சென்று விட…..

அவனிலும் புதிய பூ🥰🥰🥰🥰…..

ஜீவாவின் கனவு நிறைவேறியதா??????

ஜீவா ஜெயனை மறுக்க காரணம்??????

இருவரும் சேர்ந்தார்களா ?¿???? என்பது மீதி கதை……

ஜீவா…..இவ கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிச்சது……அவ சித்தியை அலற விடுவதில் ஆகட்டும்…..

மனதுக்குள்ளே ஜெயனை ரசித்து, possessive ஆகி, care பண்ணி இப்படி பலதும் ரொம்ப cute 🥰🥰🥰🥰🥰

ஜெயன்….அவள் குட்டியா இருக்கும் போதே செம்ம லவ் ஜீவா மேல😆😆😆😆😆….

அவளின் மறுதல் அவனை காயப்படுத்தினாலும்…..

அவன் வாழ்வில் ஒரு பிடிப்பு வந்து, முன்னேற அந்த மறுதல் தான் தூண்டுகோலே…..

காதலுக்கு கௌரவம் சேர்க்கறேன்னு டயலாக் பேசிட்டு...என்ன வேலை பார்த்து வெச்சி இருக்க கடைசில🫣🫣🫣🫣🫣……

சிவா - ஜோதி…..ஜீவா நினைக்கற மாறி….பாகுபாலி statue போல தான் உயர்ந்துட்டே போனாங்க👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻…..

கதை எப்பவும் போல இலங்கை தமிழில் cute டா நல்லா இருக்கு ரைட்டர் 🫰🏻 🫰🏻 🫰🏻 🫰🏻 🫰🏻 🫰🏻 🫰🏻

போட்டி
யில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐
 
கார்கால தேர்வுகள்



ஜீவானந்தி.. நம் கதையின் நாயகி.. இவளை சுற்றி தான் கதையே..

சித்தியின் கொடுமை.. இருந்தும் அரசு தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று தன்னம்பிக்கையோடு போராடும் பெண்.. ஒரு கட்டத்தில் தன் சிற்றன்னை வீட்டை விட்டு துரத்தியதும் துவளாமல் போராடியது அருமை.

ஜெயமன் ஜீவானந்தியை ஒருதலையாக காதலிப்பவன்.. தன் காதலை அவள் மறுத்தாள் என்பதற்காக வெளிநாடு சென்று விடுகிறான்.

ஜீவானந்திக்கு காதல் இருந்தும் அதை மறைத்தது ஏன்.? அதற்கான காரணம் தான் என்ன.?

அவள் தன் லட்சியத்தில் ஜெயித்தாளா.?

மீண்டும் அவள் ஜெயமனை ஏற்றுக் கொண்டாளா.?

ஜெயமனும் தன் காதலில் ஜெயித்தானா.? என்பது தான் கதை.

இலங்கை தமிழில் கதை படிக்க நன்றாக இருந்தது..

போட்டியில் வெற்றி பெற வாழ்
த்துக்கள் சிஸ்டர்..
 
ஆதுரியாழின்

கார்கால தேர்வுகள்


நாயகன் -ஜெயமன்

நாயகி - ஜீவானந்தி


தைரியமும் உழைப்பும்,நம்மை சுற்றி நல் உள்ளங்கள்‌ இருந்தால்,எதையும் எதிர்கொள்ளலாம், தடைகள் பல இருந்தாலும் சாதிக்க வைராக்கயம் மட்டுமே வழிதுணை.



இங்கு ஒருத்திக்கு அப்படி தந்தை என்ற ஒருவன் ஏன் இருக்கிறான் என்று தெரியாமலே இருக்கிறான்.


தாய் இழந்த பிள்ளை இவளுக்கு, சித்தியாக இருப்பவளுக்கு பெயர்‌தான் சீதேவி,மூதேவி இவளது குணத்திற்கு பிச்சை எடுக்க வேண்டும்.


இவளிடம் ஒரு பெண் வளர்கிறது.எப்படி இருக்கும்,பயந்து நடங்கி,அடங்கி. ,நினைத்தால் அது தான் இல்லை, தைரியம்,தன்ம்மபிக்கை,விடாமுயற்சி என தனக்கென ஒரு பாதை…தெளிவாக திடமாக..



ஏதடா சமயம் கிடைக்கும் என காத்திருந்தவளுக்கு கிடைக்கும் அல்ப காரணம் கொண்டு வீட்டை விட்டு வெளியேற்றி விடுகிறாள்.




எதற்காக பல்லை கடித்து கொண்டு அவர்களை சகித்து வாழ்ந்து வாந்தாளோ, அந்த நிலைக்கு அநியாயமாக தள்ளப்பட்டு போக்கிடமில்லாமல் நிற்க, ஆபத்பாந்தவனாய் உதவுகின்றனர், அவளுக்கு கல்வி செல்வத்தை கொடையாக வழங்கியவர்கள்.


இவளிடம் காதலை கொட்டி கொடுக்க ஒருவன்‌ இருக்க,இவளோ தட்டி கழித்து தன் இலட்சியம் ஒன்றே குறிக்கோளாய் பயனப்படுகிறாள்.



புத்திகூர்மையும் சில இடங்களில் சாபமா வரமா என்று தெரியாமல் வலியோடு கடக்க தானே வேண்டி இருக்கு…


உறவே இல்லாதவளை,உறவாய் அரவணைத்தும், அவர்களை விட்டு பிரிந்து சொல்லாமல் கொள்ளாமல் செல்வதன் காரணம் தான் என்னவோ…



தடங்களை மறைத்து காணாமல் போனவளை கண்டுபிடித்தனரா…


காதலை கொட்டி கொடுத்தும்,அவனை விட்டு கொடுத்து, தன் காயம் மறைத்து,கண்ணீரோடு காணாமல் போனதன்‌ காரணம் தான் என்ன???


கார்கால தேர்வுகள் —நன்றிபெருக்கு


வாழ்த்துகள் ரைட்டர் ஜி 💖 💖 💖 💖
 
Top