ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 34- என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம்

Pommu Novels அவர்களின் அப்ளிகேஷனில் நடக்கும் போட்டி கதைகள்
#AVP34
ஆஷா ஷாரா அவர்களின் எழுத்தில்
"என் உள்ளத்தை ஈர்த்த பூ முகம்"

யார் உள்ளத்தை யாரின் பூமுகம் ஈர்த்தது என்பது கதையில் 🥰
கயல்மொழி.. மயல் மொழி.. வித்தியாசமான பெயர் முதல்முறையாக இந்த பெயரை கேள்விப்படுகிறேன் 🙄🤔
ரெட்டை சகோதரிகள்.. இவர்களை ஈர்த்த அண்ணன், தம்பி ஜெய தீரன்.. முகிலின்பன்.. ஒருவரின் திருமணம் மற்றவருக்கு தெரியாமல் ரகசியமாக இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்கிறார்கள் இவர்கள். பின் அவர்களை விட்டு பிரிந்திருக்கிறார்கள் இவர்களின் பிரிவுக்கு காரணம் என்ன.. ஒரு ஜோடிக்கு இரட்டை குழந்தைகளும் இருக்கிறது. ஒருவர் தாயிடமும் ஒருவர் தந்தையிடமும் வளர்கிறார்கள் அது ஏன் என்பதும் கோபத்தோடு இருக்கும் இரு ஜோடிகளின் கோபம் யார் மீது என்பதும் கதையில்..
"தப்பே இல்லாத ஒரு உலகம் வேண்டும்.."
என்று கேட்கும் ஒருவரின் ஆசைக்கு பலியானது பல சிறு குருத்துகள். 😔
ஒருவரின் செயல் அனைவருக்கும் வலியாகி போகிறது. சிறு குழந்தைகள் தொடர்ச்சியாக கடத்தப்படுகிறார்கள் அதை கண்டுபிடிக்க முயல்கிறான் காவல் அதிகாரி ஜெயதீரன்.. குற்றவாளியை கண்டுபிடித்தானா..? இவன் குற்றவாளி என முடிவு செய்தவரை சட்டத்தின் முன் நிற்க வைக்க.. அவரோ குற்றமுற்றவர் என்று விடுவிக்கப்படுகிறார். அதில் கோபம் கொண்டு தன் வேலையை உதற நினைக்கிறான் தீரன். பின் அனைத்துக்கும் காரணமான உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்கிறான்.
பிரிந்த ஜோடிகளும் ஒன்று சேர்க்கிறார்கள்.
ஜோதி.. சித்தார்த்.. அருமையான கதாபாத்திரங்கள் நிறைய இடங்களில் இவர்களால் சிரித்துக்கொண்ட கதையை படிக்க முடிந்தது 😀😂
விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰🌹
 
Top