ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 31- என் ரோஜா நீயே...

Pommu Novels அவர்களின் அப்ளிகேஷனில் நடக்கும் போட்டி கதைகள்.
#AVP31
சஸ்னா சர்ஜான் அவர்கள் எழுத்தில்

"என் ரோஜா நீயே.."

ஆருஷி.. தன் சுட்டித்தனத்தால் அனைவரையும் கவர்ந்து விடுகிறாள்.
இவர்களின் நண்பன் ராமகிருஷ்ணன் இவளுக்கு ரோக்கி. நண்பனுடன் நாயகனின் கம்பெனிக்கு வேலைக்கு வருகிறாள். இவளின் சேட்டைகள் ஆரம்பத்தில் கோபத்தை வரவைக்கிறது நாயகனுக்கு பின்பு அதுவே அவளிடம் காதலாக மாறுகிறது. தாயில்லாமல் தந்தையின் அன்பில் வளர்ந்து வருகிறாள் இவள். இவளிடம் தன் காதலை கூறும் நாயகனிடம் முதலில் நண்பர்களாக இருப்போம் என கூறுபவள் பின்பு மெதுவாக அவன் காதலை ஏற்று இவளும் காதலிக்க ஆரம்பிக்கிறாள். கொண்ட காதலுக்கு முற்றுகட்டை ஏற்படுகிறது அது யாரால் என்பது கதையில்.
விஹான் விக்ரம்.. தந்தை இல்லாமல் தாயின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறான். தொழிலை திறம்பட நடத்தும் தொழிலதிபன். வெளிநாட்டில் இருப்பவன் அன்னைக்காக தாய் நாட்டிற்கு திரும்ப வருகிறான். ஆரம்பமே நாயகி உடன் மோதலில் தொடங்குகிறது 😀 ஆரம்பத்தில் பெண் அவளை கண்டால் கோபப்படுபவன் பின்பு அவள் மீது காதல் கொள்கிறான். அவளின் துருதுருப்பில் விரும்பியே விழுகிறான். மனம் கவர்ந்த பெண்ணை மனம் முடித்துக் கொண்டானா என்பது கதையில்.
ரோக்கி நிலா காதல் அருமை 🥰
விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰🌹
 
Top