BawaniBala
Member
#பவாவிமர்சனம்
ஹாய் பொம்முமா வணக்கம் .
முதலில் உங்களின் நூறாவது(100)நாவலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் . இந்த நூறில் (100/75% வீதம்) அதாவது கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் உங்களோடு பயணிப்பதும் உங்களின் நாவலை வாசித்த பெருமையும் எனக்கு உண்டு .அதேபோல் உங்களை நேரில் சந்தித்த பெருமையும் எனக்கே எனக்குண்டு. ஒரு ஆளுமையான எழுத்தாளரின் ரசிகை என்பதில் மிகையில்லை .
#அபூர்வவானவில்நூறடி.
சத்யசாகரன் -அபூர்வா
இக்கதைபற்றிய எந்நிலை.மகளிர்தினத்தை கொண்டாடும் இம்மாதம் (2024.3.8) இந்த கதை வந்ததையிட்டு மிகவும் மகிழ்ச்சி .
மூன்று விதமான பெண்களை மையப்படுத்தி இக்கதை அமைந்தவிதம் அருமைமா.
அபூர்வா,மேனகா,ரங்கநாயகி இவர்களை நோக்கிய என் கணிப்பு
மேனகாவால் அழிக்கபட்ட குடும்பத்தை, ரங்கநாயகியம்மா பாதுகாத்து ஆள, அதை அரவணைப்பாக பூரணமாக ஆக்கப்படுத்திய பெருமை அபூர்வாவுக்கு வந்தது அருமையேமா.
வெள்ளைபிரம்பும் கருமை விழியும் கொண்ட பெண்ணவளுக்கு வர்ணங்களாய் வானவில்லையும் , தன் வாசனை நுகர்வையும் , காதலையும் தந்து விடைபெற்ற நாயகன் .தன் குடும்ப நிம்மதிக்காக தனித்தே வாழ்வது நெகிழ்வேமா.
காதல் சுயநலம் பார்ப்பதில்லை என்ற கருத்தை நாயகன் நாயகி இருவரும் விடைபெறும் இடம்.கண்ணீரே வந்தது. அதே காதலுக்கும் சக்தியும் உண்டல்லவா அது சேர்த்து வைக்கும் அல்லவா !!,சேர்த்து சேர்ந்த போது மகிழ்ந்து போனேன்.
அபூர்வவானவில் நூறடி
ஒளியிழந்த பேதை ஆயினும் துணிவு இழக்கா மங்கையவள்
வெள்ளை பிரம்பின் துணைக்கோலாய் வாழ்வியல் தகிக்க
வந்தானோ தேவதூதனாய் கண்ணொளி பட்டுத்தெறிக்க
வந்தவன் தன் வாசனை தந்து தன்னை தந்து காதலும் தந்து
நேசமிட்டவளை நெஞ்சாங்கூட்டில் பதித்தே வசம் செய்ய
அரண் அவனாய் தூரத்தே விழிவழி நோக்கி இமைகாத்தனலே..
ஓசை அவன் வாசனை மேனி வரியணை என
நுகரும் மாதவளும் அவனே ஒளி ஒலி யென உவகை துள்ள
துன்பியல் சுவடெல்லாம் தூரத்து மேகமாய் களைய..
இருட்டிய வானின் வானவில்லாய் அவளுக்கு அவனாய் உருவமிட
அபூர்வ மங்கையும் சாகர நீராய் அவனும் மாரிபொழிய
கலந்தனலே காதல் மழை பூமழை பொழிவாய்..!!
சூழ்நிலைகள் கைதியாகளாம் தன்னலம் சுரக்காது போகுமிடத்து.
புரிதலே விலகளை தந்தாலும் அதுவும் காதலன்றி வேறது இங்கே.
அருமையான கதை படித்த திருப்தி எனக்கு. ஒரு பெண்ணின் பார்வை கனவை நனவாக்கி உங்களின் எழுத்தின் ஆளுமையில் சிலிர்க்காத நிலையே இல்லை.
இன்னும் பல நூறுகள் கதைகள் நீங்கள் தொடரவும் நான் உங்களை பின் தொடரவும் எதிர்பார்ப்பு கூடுதம்மா.
வாழ்த்துக்கள் மா.
ஹாய் பொம்முமா வணக்கம் .
முதலில் உங்களின் நூறாவது(100)நாவலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் . இந்த நூறில் (100/75% வீதம்) அதாவது கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் உங்களோடு பயணிப்பதும் உங்களின் நாவலை வாசித்த பெருமையும் எனக்கு உண்டு .அதேபோல் உங்களை நேரில் சந்தித்த பெருமையும் எனக்கே எனக்குண்டு. ஒரு ஆளுமையான எழுத்தாளரின் ரசிகை என்பதில் மிகையில்லை .
#அபூர்வவானவில்நூறடி.
சத்யசாகரன் -அபூர்வா
இக்கதைபற்றிய எந்நிலை.மகளிர்தினத்தை கொண்டாடும் இம்மாதம் (2024.3.8) இந்த கதை வந்ததையிட்டு மிகவும் மகிழ்ச்சி .
மூன்று விதமான பெண்களை மையப்படுத்தி இக்கதை அமைந்தவிதம் அருமைமா.
அபூர்வா,மேனகா,ரங்கநாயகி இவர்களை நோக்கிய என் கணிப்பு
மேனகாவால் அழிக்கபட்ட குடும்பத்தை, ரங்கநாயகியம்மா பாதுகாத்து ஆள, அதை அரவணைப்பாக பூரணமாக ஆக்கப்படுத்திய பெருமை அபூர்வாவுக்கு வந்தது அருமையேமா.
வெள்ளைபிரம்பும் கருமை விழியும் கொண்ட பெண்ணவளுக்கு வர்ணங்களாய் வானவில்லையும் , தன் வாசனை நுகர்வையும் , காதலையும் தந்து விடைபெற்ற நாயகன் .தன் குடும்ப நிம்மதிக்காக தனித்தே வாழ்வது நெகிழ்வேமா.
காதல் சுயநலம் பார்ப்பதில்லை என்ற கருத்தை நாயகன் நாயகி இருவரும் விடைபெறும் இடம்.கண்ணீரே வந்தது. அதே காதலுக்கும் சக்தியும் உண்டல்லவா அது சேர்த்து வைக்கும் அல்லவா !!,சேர்த்து சேர்ந்த போது மகிழ்ந்து போனேன்.
அபூர்வவானவில் நூறடி
ஒளியிழந்த பேதை ஆயினும் துணிவு இழக்கா மங்கையவள்
வெள்ளை பிரம்பின் துணைக்கோலாய் வாழ்வியல் தகிக்க
வந்தானோ தேவதூதனாய் கண்ணொளி பட்டுத்தெறிக்க
வந்தவன் தன் வாசனை தந்து தன்னை தந்து காதலும் தந்து
நேசமிட்டவளை நெஞ்சாங்கூட்டில் பதித்தே வசம் செய்ய
அரண் அவனாய் தூரத்தே விழிவழி நோக்கி இமைகாத்தனலே..
ஓசை அவன் வாசனை மேனி வரியணை என
நுகரும் மாதவளும் அவனே ஒளி ஒலி யென உவகை துள்ள
துன்பியல் சுவடெல்லாம் தூரத்து மேகமாய் களைய..
இருட்டிய வானின் வானவில்லாய் அவளுக்கு அவனாய் உருவமிட
அபூர்வ மங்கையும் சாகர நீராய் அவனும் மாரிபொழிய
கலந்தனலே காதல் மழை பூமழை பொழிவாய்..!!
சூழ்நிலைகள் கைதியாகளாம் தன்னலம் சுரக்காது போகுமிடத்து.
புரிதலே விலகளை தந்தாலும் அதுவும் காதலன்றி வேறது இங்கே.
அருமையான கதை படித்த திருப்தி எனக்கு. ஒரு பெண்ணின் பார்வை கனவை நனவாக்கி உங்களின் எழுத்தின் ஆளுமையில் சிலிர்க்காத நிலையே இல்லை.
இன்னும் பல நூறுகள் கதைகள் நீங்கள் தொடரவும் நான் உங்களை பின் தொடரவும் எதிர்பார்ப்பு கூடுதம்மா.
வாழ்த்துக்கள் மா.