அத்தியாயம் 36
கனிஷ்டனோ, “கூட இருந்து குழி பறிச்சு இருக்கியேடா. இது துருவுக்கு தெரிஞ்சா உனக்கு சங்கு ஊதிருவான்.”என்று சொல்ல,” அவன் எதுக்கு நானே அதை பண்றேன். “என்ற சரணித் பக்கத்தில் இருந்த கனமான பொருள் ஒன்றை எடுத்து அவனது தலையில் அடிக்க ஒங்க, அவன் கைகளை இறுக பற்றிக் கொண்டாள் கனி.
சரணித்தோ, “விடு கனி இவனை இப்படியே விட சொல்றியா?” என்று கேட்க, “சரணித் பிரச்சனை எதுவும் வேணாம். ஏற்கனவே இரண்டு பேரும் இத்தனை நாள் பிரிஞ்சு இருந்துடீங்க. இப்போ இவனை கொன்னுட்டு ஜெயில் போய்ட்டா என்னோட தங்கச்சி வாழ்கை என்ன ஆகுறது?”என கேட்டான் கனிஷ்டன்.
சரணித்தும், ஜனணியும் கனியை பார்த்து அதிர்ச்சியாக விழி விரித்துக்கொள்ள, “என்னடா அப்படி பாக்குற? நீ மட்டும் இல்ல, மேடமும் உன் மேல செம்ம லவ்வு. நேற்று உன்னை பார்த்ததுக்கு அப்புறம் தான் என்கிட்டயே இதை சொன்னா. கார்ல ஒரே அழுகை, உங்க எல்லார் கிட்டயும் பேசினத்துக்கு அவன் என்கிட்ட பேசி இருக்கலாமே என்று. எனக்கும் இவனோட கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்கும் போது இந்த விஷயத்தை எப்படி முவ் பண்றது என்றே தெரியல. இப்போதான் எல்லாமே சரி ஆகிடிச்சே. துருக்கும் இனி எல்லாத்தையும் சொல்லிடலாம். “என்று சொன்ன கனிஷ்டன் போனை எடுத்து பொலிஸிற்கு அழைத்திருந்தான்.
கனி அவளை அதிர்ச்சியாக பார்த்து நின்ற சரணித்தின் கைகளை இழுத்துக் கொண்டு ரூமின் முன் அறை பகுதிக்கு வந்தவள், “இப்போ எதுக்கு அப்படி பார்க்குற? அவன் சொன்னது எல்லாமே உண்மைதான். நீ சொல்லுவனு தான் நான் வெயிட் பண்ணன். ஆனா இடைல ஏதோ எல்லாம் நடந்து போச்சு. ஆனாலும் நீ முதல்ல வந்து என்கிட்ட பேசி இருந்தா நானே உன்னை அக்செப்ட் பண்ணி இருப்பேன். “என்று சொன்னாள்.
சரணித்தோ இடுப்பில் கைகளை குற்றிக் கொண்டு அவளையே பார்த்து நின்றவன், “இதெல்லாம் நிஜம் தானா? “என்று கேட்க, அவனின் முகத்தை எட்டி தாங்கியவள், அவன் கண்களோடு கண்கள் கலந்தவாறே அவன் இதழில் முதல் முத்தம் பதித்து அதன் மூலம் அவள் அவனை காதலித்தது உண்மை என அவனுக்கு உரைத்தாள்.
இதை தான் துருவன் பார்த்து தவறாக புரிந்து கொண்டதும். சரணிததின் முதுகு புறம் மட்டுமே அவனுக்கு தெரிய கற்பனையின் உச்சிக்கே சென்றவன் மொத்தமாக அங்கிருந்து புறப்பட்டுஇருந்தான்.
இதை அனைத்தையும் துருவன் அறிந்ததும் தன்னை எண்ணி வெட்க்கித்தான் போனான் அவன். தன்னிடம் இருந்தவை அனைத்தையும் இழந்து விட்ட உணர்வு அவனுக்கு.
தலையை பிடித்துக்கொண்டே சோபாவில் அமர்ந்தவன் முதல் முறையாக உடைந்து அழ ஆரம்பித்தான். அவன் அழும் சத்தம் அங்கிருந்த எல்லோரையும் சற்று இரங்கததான் செய்தது.
அந்நேரம் அங்கு குழந்தையோடு வந்த ஜனனியின் கண்களிலும் தன்னவன் அழுவதை பார்த்து கண்ணீர் சொரிந்தது.
அவளுக்கே அவ்வாறு என்றால் பெற்ற மனம் தாங்குமா என்ன? ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்டவர், “அழாதப்பா, எல்லாரும் ஒரு கோவத்துல உன்னை ஏதேதோ பேசிட்டோம். மத்த படி நீ இங்க இல்லாம நாங்க எல்லாரும் எத்தனை நாள் தூங்காம அழுது இருக்கோம் தெரியுமா?” என்று துருவனை தேற்ற முயன்றார்.
துருவன் சிறிது நேரம் அவர் அணைப்பிலே அழுது இருந்தவன், அவரை விலக்கி விட்டு எழுந்து கனிஷ் பக்கம் திரும்பியவன் அவன் கைகளை பற்றிக் கொண்டு, “நீ சொன்னது சரிதான். ஜனனிய என்ன விட நீதான் ரொம்ப நல்லா புரிஞ்சு வச்சிருக்க. இதுக்கு மேல நான் இங்க இருந்தா அது உனக்கும் அவளுக்கும் தான் சங்கடமா போகும். சோ நான் இருந்த இடத்துக்கே மறுபடியும் போயிடுறேன். “என்று சொன்னான்.
கனிஷ்டன் அவனுடன் பேச எத்தணிக்க, அதை தடுத்து, “கனிஷ் இரு. “என்ற ஜனனி குழந்தையை கொண்டு வந்து துருவனிடம் கொடுத்தவள் “இதுக்கு அப்புறம் நீ இங்க இருந்து போனா, உன்னை நினைச்சு போன மூணு உசுரோட சேர்த்து அடுத்து இரண்டு உசுரும் போயிடும். “என்றுவிட்டு அவனை முறைத்துக்கொண்டே சென்றாள்.
துருவன் ஏதும் புரியாமல் கையில் குழந்தையை வைத்து நின்றிருக்க, அவள் சொன்னதை கேட்ட கௌரி அங்கிருந்து அவள் பின்னாலே சென்று விட, கனிஷ்டனும் கனியை அழைத்துக் கொண்டே ஜனனியை சமாதானபடுத்த சென்றவன், சரணித்திடம் கண்களை காட்டி விட்டு சென்றான்.
சரணித்க்கும் அதன் அர்த்தம் புரிந்து போக, துருவனின் தோளில் கை போட்டவன், “இங்க பாரு துருவ் இதுவரைக்கும் நீ எல்லாத்தையும் தப்பா யோசிச்சு நிதானம் இல்லாம முடிவு எடுத்து இருக்க. இனியாவது கொஞ்சம் யோசிச்சு முடிவு எடு.’என்று சொல்ல, “சாரி சொல்லி முடிக்குற அளவுக்கு நான் உனக்கு கஷ்டம் கொடுக்கல. ஆனாலும் கேக்குறன் சாரி டா. “என்று சொன்னவன், “அப்பா, மாமா, அத்தை எல்லாரும் என்னால தான் இறந்து போனாங்களா? “என்று இயலாமையில் கேட்டான்.
சரணித் துருவனின் தோளில் தட்டியவன், “அப்பாக்கும் மாமாக்கும் ஹார்ட் அட்டாக் துருவ். உன்னால என்று சொல்ல முடியாது. எல்லாருட வாழ்க்கையும் இப்படி போச்சுனு கவலை அவங்களுக்கு. நீ இங்க இருந்து போன நாலு மாசத்துலயே சுந்தரம் மாமா தவறிட்டாரு. அடுத்த இரண்டு மாசத்துல மாமாவும் போய்ட்டாரு. அத்தை தான் ஜனனிட வாழ்கை கேள்வி குறி ஆகிடிச்சே என்ற கவலை ஒரு பக்கம், புருஷனும் அண்ணனும் அடுத்து அடுத்து இறந்த சோகம் ஒரு பக்கம்னு அதை யோசிச்சு யோசிச்சே ஜனனிக்கு டெலிவரி ஆகுறதுக்கு கொஞ்ச நாள் முன்னாடி இறந்துட்டாங்க. “என்றவன், “நீ போனதுல இருந்து ஜனனி முகத்துல யாரும் சந்தோஷத்தையே பார்க்கல. ஏதோ குழந்தை வந்த அப்புறம் தான் அவ கொஞ்சமாச்சும் சிரிக்குறா. “ என்றான்.
துருவனோ சாரணித்தை பார்த்து மெலிதாக புன்னகைத்தவன், “கனிஷ்டன் அவளை நல்லாத்தான் பார்த்துப்பான். “என்று மட்டும் சொல்லி கண்களால் வழிந்த நீரை துடைத்துக்கொண்டான்.
சரணித்தோ சிரித்துக்கொண்டே, “கண்டிப்பா துருவ், அவன் தான் அவ கன்சிவ் ஆனதுல இருந்து அவளை தங்க தட்டில வச்சு தங்கினான். இரவு பகலா அவ கூடவே இருந்து பார்த்துக்கிட்டான், அதுக்கும் மேலே அவளுக்கு டெலிவரி ஆகும் போது கூடவே இருந்து குழந்தையை கையில வாங்குனது கூட அவன்தான். ஆனா அவன் அத ஜனனிய தன்னோட அண்ணனோட வைப் என்று நினைச்சித்தான் பண்ணானே தவிர அவனோட வைப்பா நினைச்சு பண்ணல.” என்றான்.
துருவனுக்கு இப்போது தலையே சுற்றியது. சரணித்தை அவன் கேள்வியாக பார்த்து நிற்க,” ஹேய் உனக்கு இன்னுமா புரியல, ஜனனி உன்கிட்ட குழந்தைய கொடுத்து நீ திருப்ப இங்க இருந்து போன இரண்டு உசிரு போகும் என்றாளே!”என்று கேட்க, குழந்தையையும் சரணித்தையும் மாறி மாறி பார்த்தவன், “தினதரணி என்னோட குழந்தையா? “ என்று கேட்டான்.
சரணித்தும் சிரித்துக்கொண்டே தலையை ஆட்ட அடுத்த கணம் குழந்தையோடு ஜனனியிடம் ஓடினான் அவன். சரணித்தும் இருபக்கம் தலையாட்டி சிரித்து விட்டு அவன் பின்னாலே சென்றான்.
கனிஷ்டனோ, “கூட இருந்து குழி பறிச்சு இருக்கியேடா. இது துருவுக்கு தெரிஞ்சா உனக்கு சங்கு ஊதிருவான்.”என்று சொல்ல,” அவன் எதுக்கு நானே அதை பண்றேன். “என்ற சரணித் பக்கத்தில் இருந்த கனமான பொருள் ஒன்றை எடுத்து அவனது தலையில் அடிக்க ஒங்க, அவன் கைகளை இறுக பற்றிக் கொண்டாள் கனி.
சரணித்தோ, “விடு கனி இவனை இப்படியே விட சொல்றியா?” என்று கேட்க, “சரணித் பிரச்சனை எதுவும் வேணாம். ஏற்கனவே இரண்டு பேரும் இத்தனை நாள் பிரிஞ்சு இருந்துடீங்க. இப்போ இவனை கொன்னுட்டு ஜெயில் போய்ட்டா என்னோட தங்கச்சி வாழ்கை என்ன ஆகுறது?”என கேட்டான் கனிஷ்டன்.
சரணித்தும், ஜனணியும் கனியை பார்த்து அதிர்ச்சியாக விழி விரித்துக்கொள்ள, “என்னடா அப்படி பாக்குற? நீ மட்டும் இல்ல, மேடமும் உன் மேல செம்ம லவ்வு. நேற்று உன்னை பார்த்ததுக்கு அப்புறம் தான் என்கிட்டயே இதை சொன்னா. கார்ல ஒரே அழுகை, உங்க எல்லார் கிட்டயும் பேசினத்துக்கு அவன் என்கிட்ட பேசி இருக்கலாமே என்று. எனக்கும் இவனோட கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்கும் போது இந்த விஷயத்தை எப்படி முவ் பண்றது என்றே தெரியல. இப்போதான் எல்லாமே சரி ஆகிடிச்சே. துருக்கும் இனி எல்லாத்தையும் சொல்லிடலாம். “என்று சொன்ன கனிஷ்டன் போனை எடுத்து பொலிஸிற்கு அழைத்திருந்தான்.
கனி அவளை அதிர்ச்சியாக பார்த்து நின்ற சரணித்தின் கைகளை இழுத்துக் கொண்டு ரூமின் முன் அறை பகுதிக்கு வந்தவள், “இப்போ எதுக்கு அப்படி பார்க்குற? அவன் சொன்னது எல்லாமே உண்மைதான். நீ சொல்லுவனு தான் நான் வெயிட் பண்ணன். ஆனா இடைல ஏதோ எல்லாம் நடந்து போச்சு. ஆனாலும் நீ முதல்ல வந்து என்கிட்ட பேசி இருந்தா நானே உன்னை அக்செப்ட் பண்ணி இருப்பேன். “என்று சொன்னாள்.
சரணித்தோ இடுப்பில் கைகளை குற்றிக் கொண்டு அவளையே பார்த்து நின்றவன், “இதெல்லாம் நிஜம் தானா? “என்று கேட்க, அவனின் முகத்தை எட்டி தாங்கியவள், அவன் கண்களோடு கண்கள் கலந்தவாறே அவன் இதழில் முதல் முத்தம் பதித்து அதன் மூலம் அவள் அவனை காதலித்தது உண்மை என அவனுக்கு உரைத்தாள்.
இதை தான் துருவன் பார்த்து தவறாக புரிந்து கொண்டதும். சரணிததின் முதுகு புறம் மட்டுமே அவனுக்கு தெரிய கற்பனையின் உச்சிக்கே சென்றவன் மொத்தமாக அங்கிருந்து புறப்பட்டுஇருந்தான்.
இதை அனைத்தையும் துருவன் அறிந்ததும் தன்னை எண்ணி வெட்க்கித்தான் போனான் அவன். தன்னிடம் இருந்தவை அனைத்தையும் இழந்து விட்ட உணர்வு அவனுக்கு.
தலையை பிடித்துக்கொண்டே சோபாவில் அமர்ந்தவன் முதல் முறையாக உடைந்து அழ ஆரம்பித்தான். அவன் அழும் சத்தம் அங்கிருந்த எல்லோரையும் சற்று இரங்கததான் செய்தது.
அந்நேரம் அங்கு குழந்தையோடு வந்த ஜனனியின் கண்களிலும் தன்னவன் அழுவதை பார்த்து கண்ணீர் சொரிந்தது.
அவளுக்கே அவ்வாறு என்றால் பெற்ற மனம் தாங்குமா என்ன? ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்டவர், “அழாதப்பா, எல்லாரும் ஒரு கோவத்துல உன்னை ஏதேதோ பேசிட்டோம். மத்த படி நீ இங்க இல்லாம நாங்க எல்லாரும் எத்தனை நாள் தூங்காம அழுது இருக்கோம் தெரியுமா?” என்று துருவனை தேற்ற முயன்றார்.
துருவன் சிறிது நேரம் அவர் அணைப்பிலே அழுது இருந்தவன், அவரை விலக்கி விட்டு எழுந்து கனிஷ் பக்கம் திரும்பியவன் அவன் கைகளை பற்றிக் கொண்டு, “நீ சொன்னது சரிதான். ஜனனிய என்ன விட நீதான் ரொம்ப நல்லா புரிஞ்சு வச்சிருக்க. இதுக்கு மேல நான் இங்க இருந்தா அது உனக்கும் அவளுக்கும் தான் சங்கடமா போகும். சோ நான் இருந்த இடத்துக்கே மறுபடியும் போயிடுறேன். “என்று சொன்னான்.
கனிஷ்டன் அவனுடன் பேச எத்தணிக்க, அதை தடுத்து, “கனிஷ் இரு. “என்ற ஜனனி குழந்தையை கொண்டு வந்து துருவனிடம் கொடுத்தவள் “இதுக்கு அப்புறம் நீ இங்க இருந்து போனா, உன்னை நினைச்சு போன மூணு உசுரோட சேர்த்து அடுத்து இரண்டு உசுரும் போயிடும். “என்றுவிட்டு அவனை முறைத்துக்கொண்டே சென்றாள்.
துருவன் ஏதும் புரியாமல் கையில் குழந்தையை வைத்து நின்றிருக்க, அவள் சொன்னதை கேட்ட கௌரி அங்கிருந்து அவள் பின்னாலே சென்று விட, கனிஷ்டனும் கனியை அழைத்துக் கொண்டே ஜனனியை சமாதானபடுத்த சென்றவன், சரணித்திடம் கண்களை காட்டி விட்டு சென்றான்.
சரணித்க்கும் அதன் அர்த்தம் புரிந்து போக, துருவனின் தோளில் கை போட்டவன், “இங்க பாரு துருவ் இதுவரைக்கும் நீ எல்லாத்தையும் தப்பா யோசிச்சு நிதானம் இல்லாம முடிவு எடுத்து இருக்க. இனியாவது கொஞ்சம் யோசிச்சு முடிவு எடு.’என்று சொல்ல, “சாரி சொல்லி முடிக்குற அளவுக்கு நான் உனக்கு கஷ்டம் கொடுக்கல. ஆனாலும் கேக்குறன் சாரி டா. “என்று சொன்னவன், “அப்பா, மாமா, அத்தை எல்லாரும் என்னால தான் இறந்து போனாங்களா? “என்று இயலாமையில் கேட்டான்.
சரணித் துருவனின் தோளில் தட்டியவன், “அப்பாக்கும் மாமாக்கும் ஹார்ட் அட்டாக் துருவ். உன்னால என்று சொல்ல முடியாது. எல்லாருட வாழ்க்கையும் இப்படி போச்சுனு கவலை அவங்களுக்கு. நீ இங்க இருந்து போன நாலு மாசத்துலயே சுந்தரம் மாமா தவறிட்டாரு. அடுத்த இரண்டு மாசத்துல மாமாவும் போய்ட்டாரு. அத்தை தான் ஜனனிட வாழ்கை கேள்வி குறி ஆகிடிச்சே என்ற கவலை ஒரு பக்கம், புருஷனும் அண்ணனும் அடுத்து அடுத்து இறந்த சோகம் ஒரு பக்கம்னு அதை யோசிச்சு யோசிச்சே ஜனனிக்கு டெலிவரி ஆகுறதுக்கு கொஞ்ச நாள் முன்னாடி இறந்துட்டாங்க. “என்றவன், “நீ போனதுல இருந்து ஜனனி முகத்துல யாரும் சந்தோஷத்தையே பார்க்கல. ஏதோ குழந்தை வந்த அப்புறம் தான் அவ கொஞ்சமாச்சும் சிரிக்குறா. “ என்றான்.
துருவனோ சாரணித்தை பார்த்து மெலிதாக புன்னகைத்தவன், “கனிஷ்டன் அவளை நல்லாத்தான் பார்த்துப்பான். “என்று மட்டும் சொல்லி கண்களால் வழிந்த நீரை துடைத்துக்கொண்டான்.
சரணித்தோ சிரித்துக்கொண்டே, “கண்டிப்பா துருவ், அவன் தான் அவ கன்சிவ் ஆனதுல இருந்து அவளை தங்க தட்டில வச்சு தங்கினான். இரவு பகலா அவ கூடவே இருந்து பார்த்துக்கிட்டான், அதுக்கும் மேலே அவளுக்கு டெலிவரி ஆகும் போது கூடவே இருந்து குழந்தையை கையில வாங்குனது கூட அவன்தான். ஆனா அவன் அத ஜனனிய தன்னோட அண்ணனோட வைப் என்று நினைச்சித்தான் பண்ணானே தவிர அவனோட வைப்பா நினைச்சு பண்ணல.” என்றான்.
துருவனுக்கு இப்போது தலையே சுற்றியது. சரணித்தை அவன் கேள்வியாக பார்த்து நிற்க,” ஹேய் உனக்கு இன்னுமா புரியல, ஜனனி உன்கிட்ட குழந்தைய கொடுத்து நீ திருப்ப இங்க இருந்து போன இரண்டு உசிரு போகும் என்றாளே!”என்று கேட்க, குழந்தையையும் சரணித்தையும் மாறி மாறி பார்த்தவன், “தினதரணி என்னோட குழந்தையா? “ என்று கேட்டான்.
சரணித்தும் சிரித்துக்கொண்டே தலையை ஆட்ட அடுத்த கணம் குழந்தையோடு ஜனனியிடம் ஓடினான் அவன். சரணித்தும் இருபக்கம் தலையாட்டி சிரித்து விட்டு அவன் பின்னாலே சென்றான்.