ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

APV 8- இரகசியத்தின் ராகம்

#இரகசியத்தின்_ராகம்

இது ஒரு துப்பறியும் கதை. இடைல கொஞ்சம் காதலும் சேர்த்து குடுத்திருக்காங்க ரைட்டர்.

நாயகர்கள்: இசை தேவ ப்ரியன், சத்ய தேவ ப்ரியன்

நாயகிகள்: மாயா, மதுபாலா

இதில நாயகர்கள் இரட்டையர்கள். இதில தேவா மெக்கானிக், சத்யன் டாக்டர். அந்த டாக்டரோட வேலை செய்யுற பயிற்சி டாக்டர் மாயா தேவாவை லவ் பண்றா. அவ தோழி சத்யனை லவ் பண்றா. இதில தோழிகள் ரெண்டு பேரும் அனாதை ஆசிரமத்தில வளந்து நட்பையும் தாண்டி உறவா பழகுறவங்க. இதில தேவா மேல போ*தை மருந்து கட*த்தல் பழி விழுது. அவன் அதை பண்ணினானா இல்லையா? அப்போ அந்த கடத்தலை பண்ணினது யாரு? அதை எப்படி கண்டுபிடிக்கிறாங்க இதான் கதை. ❤️❤️

இதில ரெண்டு ஜோடிகளோட காதலுமே முகம் சுளிக்க வைக்காம இனிமையா இருக்கு. அதில ஒரு ஜோடியோட காதல் முதல்லயே தெரியுது. இன்னொரு ஜோடியோடது கிட்டத்தட்ட கடைசிலதான் தெரியுது. நாயகர்கள் இரட்டையர்கள்னு அனுமானிக்க முடியுது. இதில வில்லனா நாம ஒரு பாதி வரை நினைக்குற ஆள் வில்லனே இல்ல நாம நல்லவன்னு நினைக்குற ஒரு ஆள்தான் வில்லன்னு தெரிய வருது. இதுவும் நம்மளால அனுமானிக்க முடியுது ஒரு பாதிக்கு மேல. ஆனா அதுவுமே விறுவிறுப்பாத்தான் இருக்கு. புனிதமான மருத்துவமனையை போ*தை பொருள் கடத்துறதுக்கு பயன்படுத்தறது பாக்கும் போது அவ்வளவு கோபம் வருது அதுவும் உயிர் காக்க வேண்டிய மருத்துவரே இதுக்கு துணை போறது பாக்கும் போது கொ*லவெ*றி ஆகுது.😠😠

இதில ஒரு பெண் கேரக்டரை ஆண் கேரக்டராவே காமிச்சு கடைசில அது பொண்ணுன்னு தெரிஞ்சப்போ செம ஷாக். வருண், யசோம்மா கேரக்டர்ஸும் அவங்க நல்ல செயலால நெஞ்சில நிக்குறாங்க. தேவா, சத்யாவோட பெரிய குடும்பமும் நல்லா இருக்கு.கடைசில பெரியவங்க காதலர்களை வாழ்க்கைல சேர்த்து வைக்க எடுக்கிற முடிவு அதைத் தொடர்ந்த கொண்டாட்டம்னு மனசுக்கு நிறைவா இருக்கு கதை முடிவு.👌👌👌

தன்னோட சுயநலத்துக்காக வாழ வேண்டிய இளைஞர்கள் எவ்வளவு பேர் வாழ்க்கையை இந்த போ*தையால கெடுக்குறாங்கன்னு யோசிக்கும் போது இவனுங்களுக்கு குடுக்கிற தண்டனை இனி ஒருத்தனை இந்த மாதிரி பண்ண விடக்கூடாதுன்னு நினைக்கத் தோணுது. தண்டனைகள் கடுமையாக்கப்படணும். அதே மாதிரி பிள்ளைகளோட பெற்றோர் அவங்களை கண்காணிக்கணும். மாட்டோட மூக்கணாங்கயிறை மரத்தில கட்டி அதை தளர்வா விட்டிருப்பாங்க. ஒரு குறிப்பிட்ட எல்லை வரை அது மேயலாம். ஆனா சுதந்திரமா ஓட முடியாது. அது மாதிரி குழந்தைங்களை கண்ணுக்குத் தெரியாத ஒரு கயிறு கட்டி பாதுகாக்க வேண்டியது பெற்றோர்களோட கடமை. மொத்த சுதந்திரத்தையும் குடுத்து அவங்க வாழ்க்கைக்கு பெத்தவங்களே சூனியம் வைச்சிடக்கூடாது. 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

மொத்தத்தில இரகசியத்தின் ராகம் அவ்வப்போது லேசா வெளிய கசிந்தாலும் அதோட இனிமை மாறாம முழுமையா ரசிக்கக்கூடியதா இருக்கு. ரைட்டரோட முதல் கதை அதோட தாக்கம் ஒண்ணு ரெண்டு இருந்தாலும் மொத்தத்தில முதல் கதையை முத்தா குடுத்திருக்காங்க. பிற்காலத்தில பெரிய எழுத்தாளராகவும், இந்த போட்டில ஜெயிக்கவும் வாழ்த்துக்கள்❤️❤️❤️
 
#ரகசியத்தின்_ராகம்
#கௌரிஸ்ரிவ்யூ

க்ரைம் திரில்லர் & காதல் கதை🥰🥰🥰🥰🥰

ஹாஸ்பிடல்லா போ****தை மருந்து கடத்த😳😳😳😳😳..அதை கண்டுபிடிச்சி தடுக்க டாக்டர் சத்யா & பாலா போராடரங்க….

டாக்டர் ஏன் இதை செய்யணும் அப்படினு கேட்ட அது ரகசியம்🤭🤭🤭🤭🤭

அந்த ஹாஸ்பிடல்லா தான் வேலை செய்யறா மாயா..இவளும் டாக்டர்…

இவளுக்கு ஹாஸ்பிடல் எதிரில் இருக்கும் மெக்கானிக் ஷாப்லா இருக்கும் மெக்கானிக்கா இருக்கும் தேவாக்கும் காதல்🥰🥰🥰🥰🥰….

ஆன தேவாவும் மெக்கானிக் இல்ல….ஏன்னா அதும் ரகசியம்🤣🤣🤣🤣…..

ஆரம்பத்தில் இருந்தே இந்த வருண் பயலை வில்லன்னு அவனுக்கு சில பல சாபத்தை விட்டு படிச்சிட்டு இருந்தா அவனும் வில்லன் இல்ல…..

அப்ப வில்லன் யாரு???? அது ரகசியம்😂😂😂😂😂…..

இதுக்கு எல்லாம் மேல ஒரு ரகசியம், சத்யன் கூடவே சுத்திட்டு இருந்த செவ்வாழ….அது பையனே இல்ல🤣🤣🤣🤣🤣🤣

எப்படி சிக்கி இருக்கேன் பார்த்தியா அப்படிக்கரா மாறி…. டுவிஸ்ட் ஓட கதை சூப்பர் 🥰🥰🥰🥰🥰🥰

ஒண்ணே ஒண்ணு தான்…ஆரம்பத்தில் கதை ஸ்லோவா தான் போச்சி…

மாயா கிட்ட தேவா சொன்ன அவன் குடும்ப தொழில் எல்லாம் சரியான பங்கம்🤣🤣🤣🤣🤣….

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐
 
Pommu Novels அவர்களின் அப்ளிகேஷனில் நடக்கும் போட்டி கதைகள்.
AP Verses
#Apv8
"இரகசியத்தின் ராகம்"
தேவா..மாயா..
சத்யன்.. மது..
கதையின் நாயகர்கள்.
இவர்களின் காதல் மிகவும் அழகாக இருந்தது. மாயா அவளின் இசையை பார்ப்பதற்காகவே நன்றாக ஓடும் தன் மில்கியின் மீது பழியை போட்டு அவனைப் பார்க்க வருவதும். மோகினி கொல்றா என்று மனதில் கொஞ்சி கொண்டு வெளியில் கோபமாக இருப்பது போல் காட்டி அவளை நன்றாக சைட் அடிக்கும் தேவாவின் காதலும் ரசிப்பு 🥰
மருத்துவத்தின் பெயரில் போதை மருந்து கடத்தல்..
அதை கண்டுபிடிப்பதற்காகவே மருத்துவமனையில் சேரும் சத்யன் அவனுக்கு உதவி புரியும் பாலா.
யசோதா.. அருமையான கதாபாத்திரம் 🥰
மாயா.. மதுபாலாவின் பாண்டிங் வெகு அழகு 🥰
வில்லன் என்று ஒருவனை நாம் எதிர்பார்த்து படித்துக் கொண்டிருக்க அவன் வில்லனே அல்ல. போதை மருந்து கடத்தி பல இளைஞர்களின் வாழ்வை சூனியம்மாக்கும் அவன் யார் என்பது கதையில்..
தேவாவிற்கும் கடத்தலுக்கும் சம்பந்தம் இருக்குமா அதுவும் கதையில்..
போதை மருந்து கடத்தலை கண்டுபிடிக்க வரும் போலீஸ் ஆபீசர் பிரியன்
நிறைய ரகசியங்களை ஒழித்து வைத்திருக்கிறது கதை 🥰
விறுவிறுப்பாகும் சுவாரசியமாகும் நகர்ந்தது கதை. நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰🌹
Good luck 🥰❤️


 
இரகசியத்தின் ராகம்
is a gripping suspense tale revolving around a drug smuggling network. Sathyan and Bala take on the risky task of exposing the real culprits, while தேவா’s link to the crime adds an intriguing layer to the plot.
மாயா stands out as a strong character, with her emotional needs, love, and the bonding she shares with Madhu adding warmth to the story. The narrative carries steady suspense though a few turns can be guessed, the reveal points are handled well.
While the first half feels slightly stretched, the second half is sharper and more engaging. Some unclear dialogues cause minor confusion, but the satisfying family oriented ending ties everything together nicely❤️✨
 
Top