யாவும் காதல் செய்த மாயம் (part 1) அலைஸ் கலியுக காதல்
"கலியுக காதல் " என்னும் பெயரில் ஒன்லைனில் எழுதப்பட்ட நாவல் "யாவும் காதல் செய்த மாயம் " என்னும் பெயரில் வெளிவருகிறது.
ஹீரோ ஆத்ரேயன், பெயருக்கேற்ற போலவே கோபத்திலும் அழகிலும் திமிரிலும் உச்சத்தில் இருக்கும் சகலகலா வல்லவன். . காதலுக்கு அடிப்படை அழகு தான் என்ற எண்ணம் உடையவன்.. சந்தர்ப்ப சூழ்நிலையால் சிறு வயதில் இருந்தே அழகு குறைவாக இருப்பதால் அவன் தூரத்து மாமன் மகளை (வைஷ்ணவியை) வெறுக்க தொடங்குகிறான் (அது வெறுப்பா காதலா என்று அவனுக்கே தெரியாது).. எலியும் பூனையுமாக இருப்பவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலையால் திருமணம் செய்து கொண்டபின் இருவருக்கும் இடையே நிகழ்ந்த சண்டையின் விளைவாக அவன் நாயகியை கற்பழித்து விட அவளும் அவனை விட்டு பிரிந்து செல்கிறாள். அதன் பிறகு காதலை உணரும் நாயகன் தனது காதலியிடம் அதை உணர்த்தினானா? இல்லையா? என்பதை பல வித எதிர்பாராத திருப்பங்களுடனும் காதல் காட்சிகளுடனும் நகரும் இந்த கதையை படித்து பார்ப்பதன் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்...
யாவும் காதல் செய்த மாயம் (part 2) அலைஸ் என்னை அறியா என்னுயிரே
"என்னை அறியா என்னுயிரே" என்னும் பெயரில் ஒன்லைனில் எழுதப்பட்ட நாவலே இப்போது யாவும் காதல் செய்த மாயம் (part 2) ஆக வெளியிடப்படுகிறது.
யாவும் காதல் செய்த மாயம் (part 1) நாவலின் நாயகன் ஆத்ரேயனின் மகன் இஷானை நாயகனாக கொண்டு எழுதப்பட்ட நாவல் இது.
நாயகன் இஷான், கோபத்திலும் திமிரிலும் உச்சத்தில் இருக்கும் தந்தைக்கு தப்பாத ஆண் சிங்கம்.. நாயகி நேத்ரா, அவனுக்கு கொஞ்சமும் சளைக்காத பெண் சிங்கம். பிசினஸில் கொடி கட்டி பறக்கும் இருவருக்கும் இடையில் துரோகத்தில் ஆரம்பிக்கும் காதல் பல வித மோதல்களை தாண்டி எப்படி மீண்டும் காதலாக கனிகிறது என்னும் கதை கருவை உடையதே இந்த நாவல். மூன்று நாயகர்களை கொண்ட இந்த நாவலில் அடுத்த நாயகன் அக்ஷித், கனி மற்றும் மேகியின் நெகிழ்வான காதலும் ஆரியன், மானியா ஆகியோரின் துரு துரு காதலும் உள்ளடங்கியுள்ளது. நாவலை படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்
பழி வாங்குவதற்காக மன நிலை இல்லாதவன் போல நடித்து திருமணம் செய்யும் நாயகன் என்று ஆரம்பிக்கும் கதை பலவித திருப்பங்களுடனும் சுவாரசியங்களுடனும் நகர்கின்றது.
சாமுத்ரிகா லட்சணத்துடனும் பல கண்டிஷன்களுடனும் படித்த பண்பான பெண்ணை தேடும் நவநாகரிக உலகில் வாழும் நாயகன் ப்ரவீனுக்கு அவன் எந்த கண்டிஷனுக்கும் ஒத்து வராத, முத்தம் கொடுத்தா குழந்தை பிறக்கும் என்று நம்பிக் கொண்டு இருக்கும் பட்டிக்காட்டு பெண் லவுட் ஸ்பீக்கர் நாச்சிமுத்து (வருணிகா ) வுக்கும் எதிர்பாராமல் நடக்கும் திருமணமும் அதன் பிறகு நடக்கும் கலக்கல் கலவரங்களும் உருவாகும் காதலும் என ரொமான்ஸும் காமெடியுமாக நகரும் இந்த கதையை படித்து உங்கள் கருத்துக்களை தெரிவித்துக் கொள்ளுங்கள்..