ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

3. என் வெட்க சிவபழகியே- நாவலுக்கான விமர்சனங்கள்

pommu

Administrator
Staff member
3. என் வெட்க சிவபழகியே- நாவலுக்கான விமர்சனங்கள்
 

Ruby

Well-known member
#என்_வெட்க_சிகப்பழகி

#விருட்சம்

காதல் சொன்னவனின் காதலை உணர்ந்து குழலி அவளின் காதலை சொல்லும் போது அவனோ நான் உன் நண்பன் மட்டுமே என சொல்லி பிரிந்து போறான்😢😢😢

அவள் நிலை தெரிந்த தாயோ வேறு திருமண ஏற்பாடு செய்ய, அதில் இருந்து விக்கியிடம் ( காதலன்) சென்று விட அவள் முடிவெடுக்க,

வேந்தனுக்கு மனைவி ஆகிறாள் தங்கை சங்கவி.....

குழலியோ விக்கியை தேடி போக அங்கு இருப்பதோ ராஜா🙄🙄

அவள் வரவில் அவன் தாயோ வெறுக்க, தமக்கையோ கொடுமை செய்ய, அவளை துரத்த அவள் காதலனே பல வேலைகள் செய்யுறான்😳😳

உணவில் இருந்து பல பிரச்சனைகளை சந்திக்கும் குழலிக்கு அங்கே அவனின் சித்தி சந்திரா தான் கொஞ்சம் இணக்கம்... ஆனால் அதையும் பேச விடாது, அவர்களையும் ராஜா வெறுக்க என்ன காரணமோ🤔🤔🤔

விக்கி ராஜா ஆனது எப்படி, என்ன பின்னணி.....!?

ராஜாவின் தாய் தமக்கை செயலுக்கு என்ன காரணம்....!?

குழலியின் காதல் அவள் அன்பனின் காதலை வெளி கொணருமா....!!?

சங்கவி வேந்தன் திடீர் திருமணம் இருவரையும் இணைக்குமா....!? என்பதன் விடையை மீதி கதையில் காண்க....

சந்திரா பாவம், அரசி பாசத்துக்கு ஏங்கும் ஒரு ஜீவன்... இருவரும் குழலி மீது அக்கறை வச்சு அன்பா பார்த்துக்கராங்க...

தாயின் விருப்பம் இன்றி கூட வந்த குழலி அவனின் காதலை கண்டுகொள்ளும் முன் எத்தனை இன்னல்கள்.... கொடிக்கு சரியா திருப்பி கொடுப்பது சூப்பர்...

இவ சில நேரம் பைத்தியம் போல செய்யுற செயல் எல்லாம் அடியே நீ நல்லா தான இருக்கேன்னு தான் கேட்க வைக்கும்... எதையும் பேசி தீர்க்காம இஷ்டத்துக்கு முடிவு எடுப்பது🤦‍♀🤦‍♀🤦‍♀🤦‍♀

தியாகு நாலு அறை அந்த கொடியை வச்சு இருந்தா இத்தனை துன்பம் யாருக்கும் இல்ல😡😡😡

மலர்🤬🤬🤬 என்ன ஜென்மம் தெரியலை இவ எல்லாம்... பாவம் தியாகு அம்மா😰😰 ' இன்னா செய்தாரை ' சரியான உதாரணம்..

ரங்கன் அட்லீஸ்ட் இப்போவாவது சொன்னாரே... பவளம் சரியா புரிந்து கொண்டது பரவாயில்லை .. ஆனாலும் மகள் பேச்சை கேட்டு எடுப்பார் கைபிள்ளை போல இருந்தது கடுப்பு தான்...

ராஜா அடேய் ஏன் டா இப்படி... அவன் நிலையில் சரி என்றாலும் ஆசையை விதைத்து பாவம்... பாசத்துக்கு ஏங்கி உண்மைகள் தெரிந்து தவறு உணர்ந்து அவன் படும் பாடு😥😥

சங்கவி இவள் என்னமோ அஞ்சலி பாப்பா மாதிரி ஆக்ட் கொடுத்தது கடுப்பு தான் வந்துச்சு🤣🤣🤣 வேந்தன் கிட்ட குழப்பத்தை கேட்டு இருக்கணும், அவன் சொல்லுறது நம்ப மாட்டேன் என்று லூசு போல பண்ணிட்டு😂😂😂 பாவம் அவன்😂😂

அவன் அம்மா நல்லா வச்சு செஞ்சாங்க அவளை🤣🤣🤣

ராகவி என்ன தான் குழலி மேல கோபம் என்றாலும் அவளுக்காக அவளை ராஜா கிட்ட விட்டது, அவ மேல நம்பிக்கை, அவளோட ஆசையை எப்போதும் no சொல்லாம இருந்தது என சூப்பர்...

வெற்றி பெற வாழ்த்துகள் ரைட்டர் 💐💐💐💐💐
 

Shayini Hamsha

Active member
#பொம்முநாவல்ஸ்குறுநாவல்போட்டி

#T22 விதையில்இருந்துவிருட்சம்வரை

#என்_வெட்க_சிவப்பழகியே

#கதைஇல03

#ஷாயினிவிமர்சனம்13

#antihero_story 😡😅😡
ஊரிற்கு ஒதுக்கு புறமான இடத்தில்,
அறையொன்றில் கட்டி வைக்கப்பட்டு
இருக்கும் அபலை பெண்ணவளான
குழலியிடம் அவளை கடத்தி அங்கே
கட்டி வைத்திருந்த அரளிக்கொடியான
நஞ்சுக் கொடி சில நிபந்தனைகளை
விதிக்க, அதற்கு சம்மதம் தெரிவித்து,
நஞ்சுக் கொடி நீட்டிய காகிதங்களில்
தனது கையெழுத்தை இடுகிறாள் #குழலி !😳

நஞ்சு நிறைந்தவளோ! தனது திட்டம்
வெற்றியடைய போகும் இறுமாப்பு
கலந்த திமிர் பார்வையுடன் மனம்
நிறைய சந்தோசத்துடன் வெளியேற
முன்னர் , குழலியை கட்டிய கயிற்றை அவழ்த்து விடவும், 🙄😒

வெளியே வந்த அபலை பெண்ணான
குழலி மனம் நிறைய வலிகளுடனும் பாரத்துடனும் கண்கள் இரண்டும்
கண்ணீரில் கரைய , அருகிலிருந்த ஆற்றுக் கரையோரம் சென்றவள்;

தனது வாழ்க்கையில் நடந்தவற்றை வலிகளுடன் நினைத்து பார்க்க,😓😰

அவள் வாழ்வில் நடந்தவையும் இனி நடக்க போவதும் , நிழல் காட்சிகளாய் விரிகின்றது! கதைகளின் ஒவ்வொரு அத்தியாயங்களூடாக நம் முன்னே காட்சியாகிறது!😭😰

ஆரம்பத்தில் கதை தலைப்புக்கும் கதைக்கும் என்ன தொடர்பென்று
நினைக்க வைத்தாலும் இரு ஜோடி புறாக்களின் நாயகர்களின் காதல வைத்தே அதற்கு சரிவர ஈடு செய்து அசத்தி விட்டீர்கள்!💕💕😘

தனக்கு, பெற்றவளுக்கு ஈடான ராகவி
பார்த்த மணமகனை ஏற்றுகொள்ள
முடியாமலும் , தனது காதலை பற்றி சொல்ல தைரியமில்லா கோழையாக மனம் நிறைய காதலை, காதலனான விக்கி மீது வைத்திருந்தவள், தனது காதலுக்காக தன்னுயிரை தியாகம் செய்ய நொடியில் முடிவெடுத்து விட, அங்கு நின்றிருந்த இரு வீட்டாரும் கலங்கி தவிக்க,

இதனால்,வேந்தனுடன் அவளிற்கு ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்த திருமணம் நின்று விட, அங்கு இருவர் நடந்ததை எண்ணி முற்று முழுதாக மகிழ முடியாது தவிக்க,

தமது நீண்ட நாள் விருப்பத்தை பாரதி வைத்தே நிறைவேற்றும் நோக்கில் வேந்தனின் தாய் கமலா தூபம் போட, குழலியின் தங்கையான சங்கவியோ கையறு நிலையில் , கல்லூரியில் செல்லும் வயதிலேயே வேந்தனோடு காதலை உணரா திருமண பந்தத்தில்
இணைய நேருகின்றது.

நீண்ட நாள் விருப்பம் நிறைவைடந்த,
மகிழ்வில், வேந்தன் மனைவியுடன்,
தமது வீட்டிற்கு செல்ல, சங்கவியின்
பிடிவாதத்தால் குழலியுடன் பாரதி,

குழலியின் காதலனான விக்கியை தேடி செல்ல நேர, அங்கு குழலிக்கும் ராகவிக்கும், தனக்கு பெண்ணவளை யாரென தெரியாதென்றும் ,இதற்கு முன்னே பார்த்தது கூட இல்லையென தனது பெயரினை கூட வேறாக கூறி, அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளிக்கிறான் #ராஜா

நம்பியவன் கைவிட்ட நிலையில்! ஊராரின் தீர்ப்பில்,காதலித்தவனுடன்
திருமணத்தில் இணை நேருபவள் , தன்னவனின் அலட்சியத்தில் வாடி வதங்கி போகிறாள்.

•ஆசை பட்ட வாழ்வு நரகமாக மாற, அதை விரும்பி ஏற்ற பெண்ணவள் நிலையோ ? 😰😰😓

பெண்ணவளின் எதிர்காலம்? அதன் பிறகு நடந்தவை?😡😠😳

தமக்கையின் கணவனாக அத்தனை நாளும் மனதில் நினைத்தவனை தனது சரிபாதியாக சங்கவி ஏற்றுக் கொள்வளா?

வேந்தன் தன்னை தனது #வெட்க #சிவப்பழகியிடம் உணர வைப்பானா?

என்பதெல்லாம் கதை மீதியில் !

அருமையானதும் , சற்று அழுத்தமான கதை களம் ! அதே நேரம் மத்திய தர குடும்பங்களில் வர கூடிய சாதாரண பிரச்சனை. அதனால், ஏற்படும் பக்க விளைவுகள் ! என அதனை கதையில் மாந்தர்களுடாக காட்டியமை ! அழகு கதை கருவை புரியுமாறு அமைத்து இலகு மொழியில்,கதையை சிறப்புற எழுதி முடித்தமைக்கு பாரட்டுக்கள்!
விருட்சம் போட்டியில் வெற்றி பெற
மனதார்ந்த வாழ்த்துக்கள் சகி!💐💐

கதை மாந்தர்கள் பற்றி கதையில் விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்!

கதை திரி

Post in thread 'என் வெட்க சிவப்பழகியே _ கதை திரி' https://pommutamilnovels.com/index.php?threads/என்-வெட்க-சிவப்பழகியே-_-கதை-திரி.994/post-23382

கதை பற்றிய கருத்துக்களை பகிர

Thread 'என் வெட்க சிவப்பழகியே... கமெண்ட்' https://pommutamilnovels.com/index.php?threads/என்-வெட்க-சிவப்பழகியே-கமெண்ட்.993/
ei2F2GS62815.jpg
 
வணக்கம் சகோதரிகளே ..

#பவாவிமர்சனம்

#என்_வெட்க_சிவப்பழகியே

#விருட்சம்3

என் காதல் நீ தானே என என்றிருக்க
உன் காதல் நானல்ல நட்பே என தோய்க்க
ஓ.. காதல் வந்தால் சொல்லியனுப்பு என்றிட
காதல் வந்த போதோ காதல் கானலாய் தூரமாகியதே..

என் அழகியே என் சிவப்பியே என்ற நிலை
அழகான காதலாய் தோய்க்க..
காதலும் வந்த நிலை கலவரமான நேரங்கள்
கை கூடிய காதல்கள் பல வித மயக்கங்களாக..

என் வெட்க சிவப்பழகியே
இரட்டை இலை நிலையாக
காதல் சடுகுடு ஓட்டமாக ரசிக்க வைத்ததே..

ராஜா: காதலனாய் கவர்ந்தாலும் கணவனாய் பல நேரங்களில் முதுகெலும்பு இல்லாதவனாய் இருக்கிறான்.
இவன் மேல் கோபமே வந்தாலும் பின்னாளில் இவன் ஞாயங்கள் சரியா.. இது தவறா என குழப்பமாக இருக்கிறது .😞😲😙

விக்கி :காதல் பேசும் இடமெல்லாம் அழகே அப்பப்போ ரேமோவாகா காதலானாய் இவன் எடுக்கும் அவதாரங்கள் .இவனை மீறி வரும் அழகு காதலன் ரசனையே.😍😍😍😍

குழலி: இவளே கதையின் உயிர். இவளின் திருமணத்தில் தொடரும் கலவரம் .இவளின் வாழ்வோடு பயணிப்பது வேதனையே.
காதலன் கைவிட கணவனாக வருபவனும் அந்நியனாயும் ரேமோவாயும் மாறி மாறி வந்திட இவளின் வாழ்க்கை வலியே.😟😟

பசிக்குது சாப்பாடு தாங்க என்ற நிலையில் தன் கணவனிடமே கெஞ்சும் நேரம் வலியே.😟😟

வேந்தன் மற்றும் சங்கவி அழகான ரசனையான காதல் தம்பதிகள் இவர்களின் நட்பு என்ற போன்றவர்யில் நடமாடும் சில இடங்கள் எல்லாம் முத்தாயிப்பு.💞💞💞💞

ராகவி: அருமையான அம்மா. பிள்ளைகளை தன் காலில் துணிந்து செயல்பட வைத்து அழகு பார்ப்பது அருமை.👌👏👏💞

சந்திரா: பிள்ளைக்காக தவிக்கும் உணர்வுபூர்வமான தாய்.தன் மருமகளின் கிழிந்த ஆடையை மகன் முன்னால் விசிறி எறியும் போது அருமையான மாமியாராக உயர்ந்து நிற்கிறார்.👏👌👏

கமலா: நல்ல கலகலப்பான அம்மா .ரசனையான மாமியார்.😊😊😊

மலர்: தன்வினையை தன்னை சுடும் என்பதற்கு நல்ல உதாரணம் .😡😡

தியாகு: முதலில் விட்டு பின்னாளிலாவது உறுதியாக நின்றது நிம்மதி .❤❤

ஊர்த்தலைவர் தன் வீட்டில் நடக்கும் பிரச்சினைகளை பார்க்காமல் இருப்பது ஆச்சரியம் என்றாலும் நாட்டாமையின் தீர்ப்பு நன்மையில் முடிந்ததில் நிம்மதி .❤❤😊😊

ஆசிரிய தோழியே: காதலித்தவன் கைவிட்ட நிலையில் அவனைத் தேடி திருமண கோலத்தோடு போகும் ஒரு பெண்ணின் கதையை.உணர்வுபூர்வமாக தந்து சென்றது அருமை.💞👌👏

விக்கி மற்றும் ராஜா பாத்திரங்களை அருமையாக நகர்த்தி சென்றீர்கள்மா.❤❤

ஒரு குடும்பத்தில் ஒரு விஷக்கொடி பரவினால் அதனால் பாதிக்கபடும் உறவுகளின் வலிகளை அருமையாக கூறி சென்றீர்கள்மா.❤❤

அழகான உணர்வுபூர்வமான கதை வாழ்த்துக்கள் மா.👏👏

போட்டியில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள் மா.💐💐💐
 
#priyareviews

கதை எண் 3

என் வெட்க சிவப்பழகியே

குழலி தன் காதலுக்காக தனக்கு நடக்க இருக்கும் திருமணத்தை நிறுத்தி தன் காதலனை தேடி செல்ல அங்கே அவளுக்கு ஏற்படும் பல அதிர்ச்சிகளை எதிர் கொள்வது எவ்வாறு??

விக்கி நல்ல காதலானாக இருப்பவன் பொய்த்து போவது எதனால்? இவனின் மாற்றத்தின் பின்னணி என்ன?

குழலியின் உண்மை காதல் நிறைவேறுமா? அதை தக்க வைத்து கொள்ள அவளுக்கு நிகழும் அனைத்தையும் துணிவோடு எதிர் கொள்வாளா?

மலர்கொடி இவளுக்கு இது எல்லாம் ஒரு பேர் 😤😤😤 விளக்கமாத்துக்கு பட்டு குஞ்சம் என்று ஒரு பழமொழி இருப்பது போல அரக்க குணம் கொண்ட இவளுக்கு மென்மையான மலர் பெயர் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ அதுவும் இந்த கழிசடை செய்யும் 🤮🤮🤮 இது எல்லாம் இருந்து யாருக்கும் ப்ரொயோஜனம் இல்ல போய் தொலைய வேண்டியது தானே 🤐🤐🤐

அரசி & சந்திரா இருவரின் பாச போராட்டமும் தவிப்பும் ரொம்ப பாவமாக இருந்தது 😢😢

ரங்கன் & தியாகு இவர்கள் இருவரும் அருமையான கதாபாத்திரம் 🤗🤗🤗 இருவரும் சரியாக நடந்து கொள்கிறார்கள் நியாயமாகவும் 🤩🤩

கமலா & வேந்தன் இணைந்து சங்கவியை சுத்தலில் விடுவது செம 🤣🤣🤣 இந்த சங்கவிக்கு வாய் ரொம்ப அதிகம் 😬😬 எவ்வளவு பேச்சு அப்படியே சப்புன்னு நாலு அரை விட்டு இருக்கணும் 😤😤😤

வேந்தன் அழகான அன்பான காதலன் & கணவன் 👌👌👌

காதல், துரோகம், வலி, தவிப்பு, எல்லாம் கலந்து கலவையாக இருந்தது 🥰🥰

சில இடங்களில் தடுமாற்றம் இருந்தது அதுவும் சுதாகர், தியாகு என்று பெயர் குழப்பம் நிறையவே இருந்தது 🙄🙄🙄

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐

லிங்க் 👇👇👇

 
Top