ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

2. வதம் செய்யாதே... மாதவா கதைக்கான விமர்சனங்கள்

T21

Well-known member
Wonderland writer
2. வதம் செய்யாதே... மாதவா கதைக்கான விமர்சனங்கள்
 

Gowri

Well-known member
வதம் செய்யாதே....மாதவா
அருவி முன்கோபம், தான் நினைப்பது தான் நடக்க வேண்டும், அப்பா அம்மா தவிர்த்து மற்ற யாரையும் மதிக்க தெரியாத பெண். ஆன இவளை ரொம்ப உருகி உருகி லவ் பண்ணறது வெற்றி. வெற்றியா கண்ட சுத்தமா ஆகல அருவிக்கு அதுக்கு ஒரு காரணம் தென்றல், இவள் வெற்றி ஓட தங்கை. வெற்றி காதல் நிறைவேறியதா, அறிவிக்கும் தென்றலுக்கும் உள்ள சண்ட முடிஞ்சது அப்பரடிங்கறது மீதி கதை......

அருவி - என்ன இவ இப்படி பேசற அப்படினு நமக்கே காண்டு ஆகும் ???. ஆன ஒரு சம்பவத்துக்கு அப்பறம் வெற்றி ஓட காதல் கிடைக்க இவ படும் பாடு???. எதையும் சரியா புரிஞ்சிக்கமல் இப்படி டக்கு டக்கு பேசி இவள் படும் துன்பம்????.

வெற்றி - இவன் ரொம்ப பொறுமைசாலி தான், ஆன இவனும் அப்படி தான். என்ன நடந்ததுனு ஆராயமா இவன் எடுக்கும் முடிவுகள், அதனால் விளையும் விளைவுகள்???.

தென்றல் - இவளும் அப்படி தான் சின்ன வயசுல ஒரு சின்ன பிரச்சனைக்கு போய் இவளோ கோவம் தேவைல்ல.

வினய் அசுரன் - தென்றல் ஓட காதலன். இவங்க லவ் பார்ட் நல்ல இருந்தது.

ஆதவன் & சரசு - நல்ல கபிள் ???, இவங்க தேடி போற சீன் எல்லாம்???. அப்படி என்னத்தா தேடி போறாங்க நா அது கதையில்....

வாசு & கீர்த்தி - டாம் & ஜெர்ரி கபிள்???.

கவின் & காவியா - இவங்களும் வெற்றி & அருவி மாதிரி தான்.

அரசி- இவ யாருனு கதையில் டுவிஸ்ட் சோ ????, ஆன இவ வந்த பின்னாடி நிறைய மாற்றங்கள்....

வசி - இவன் பாவம் உண்மையாவே????.

லீ - செம்ம டுவிஸ்ட் இது தான் ????, கண்டிப்பா இப்படி நினைக்கலா ????

சரியா புரிஞ்சிக்காமல், மனம் விட்டு பேசி தீர்க்க வேண்டிய விசயத்தை எல்லாம் தீர்க்கமாக விட்டா அது என்ன என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது கதையில் நல்ல சொல்லி இருக்காங்க....

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜீ ????

 

Ruby

Well-known member
#Twist21 #No2

#வதம்_செய்யாதே_மாதவா

வாசிப்பு பிரியனான ஆதவனின் கைகளில் ஒரு நாட்குறிப்பு வந்து சேர அதை வாசித்து, முடிவில்லாத அதனின் முடிவை தேடிய அவனின் பயணம் வெற்றி பெருமா? அது எங்கு கொண்டு அவனை சேர்க்கும்?

வெற்றி அவன் காதல் கொண்ட அருவி அவனை சில பல காரணங்களால் ஒதுக்க, அவளின் கோபச் செயலால் பல மாற்றங்கள் பலரின் வாழ்வில்... வெற்றியின் காதலும் வெறுப்பாய் மாற, விதி இணைத்து விளையாடுது..

அருவி ஏன் வெற்றியை ஒதுக்குறா? ஒதுக்கம் விருப்பம் ஆகுமா? வெற்றி வெறுக்க என்ன காரணம்? அவனின் வெறுப்பு காதலாய் மாறுமா? இவளால் யார் வாழ்வு என்ன ஆனது? நேர் ஆகுமா?

நிதானம் இல்லாது நினைத்தது எல்லாம் பேசினால் ஏற்படும் விளைவுகள், கண்ணால் காண்பது பொய் என்று யோசிக்காது விடுவதால் ஏற்படும் விளைவுகள் தான் கதை...


எனக்கு அருவி அண்ட் தென்றலின் மீது சில வருத்தங்கள் உண்டு.. அருவி மேல் அதிகம்... அவளின் பேச்சுக்கு, செயலுக்கு என்ன தான் காரணம் சொன்னாலும் கொஞ்சம் கடுப்பு தான்... எனக்கு பாவமா தெரிஞ்சது வசி தான்?? வீரா அண்ட் அரசியின் வருகையால் அவன்தான் ரொம்பவே பாதிக்கப்பட்டு விட்டான்...

தென்றல் செய்தது சரியா தவறா தெரியலை.. ஆனால் நடந்தது என்ன விளைவை ஏற்படுத்தும் என்று தெரியாது பண்ணியது தப்பு... என்ன தான் அவள் நிலை என்றாலும் பாவம் தான் மத்தவங்க.. வாசுவின் சொதப்பல்கள் ஒவ்வொருமுறையும் கீர்த்தியை தள்ளி போக வச்சது??? பாவம் என்ன தான் பண்ணுவான் நல்லது நினைச்சு தான் பண்ணான் இப்படி ஆகும் என்று அவனுக்கு எப்படி தெரியும்???

சரசுவின் ஆதவன் மீதான புரிதல் சூப்பர்... அவனுக்காக, அவனை அனுப்புவது சூப்பர்... கவினின் நட்பு?? இருவர் பக்கமும் பார்த்து இருக்கான்.. என்ன தான் கோபம் சொன்னாலும் அவைங்க வேலையில் சரியாத்தான் இருந்து இருக்கான்???

வினை இவன் தப்பு பண்ணிட்டு அப்பறம் என்ன குற்ற உணர்வு அதுக்கு பலிகடா வீராவா???

ஏன் டா எல்லாரும் ஓவர் ரியாக்ட் பண்ணுறீங்க.. குடும்பத்தில் ஒருவருக்கு கூடவா மயக்கம் வந்தா என்ன என்று யோசிக்க முடியாது??? ஓவர் பாசத்தை பொழியுறானுங்க, இதில் எல்லாருக்கும் பிள்ளைகள் வேற???

வெற்றி என்ன தான் நிதானமாக இருந்தாலும், இவனும் அவசரப்படுரான் தான்... நல்லவேளை தங்கை ஆக்காமல் விட்டிங்களே சந்தோஷம்??????.. அதுவும் மார்க்ஸ் எல்லாம்???

வெற்றி பெற வாழ்த்துகள் ஆசிரியரே????
 

Art pearl

Member
அருவி சின்ன வயசுல விரும்புன மாமா பையன் வெற்றியை வெறுத்து , கல்யாணம் பண்ண முடியாது சொல்லிடுறா அதுக்கு காரணமா அவ சொல்றது அவன் தங்கச்சி தென்றல. அவ தென்றல வெறுக்க என்ன காரணம்??? அருவி வெற்றி தென்றல் இவங்க மூணு பேரு பத்தின ஸ்டோரி தான் #வதம்_செய்யாதே_மாதவா.


அருவி வெற்றியை விரும்பி அவனை வெறுத்துட்டதா நினைச்சி, fb ல லீ கிட்ட பேசுறா அவன் கவிதை பிடிக்குது அவன் கூட பேச பிடிக்குது ஆனா காதல்(???) சொல்ல முடில.இந்த லீ யாரு???


இதே நேரம் அவ பிரண்ட் அசுரன், தென்றல் கூட பழகுறத பாத்து அவளை காப்பாத்துறதா நினைச்சு இவ செய்ற விஷயம் அவளை ஊரை விட்டே போக வைக்குது.


தென்றல் போன கோபத்துல அதுக்கு காரணம் அருவினு நினைச்சி கல்யாணம் ஆகியும் அவளை வெறுத்து ஒதுக்குறான் வெற்றி.


தென்றல் போக காரணம் அவளுக்கு உள்ள ப்ரோப்லேம் ஆனா அவ அசுரன விரும்புறத தெரியாம கவின் தென்றல் ரெண்டு பேர் பிரண்ட்ஷிப் மேல சந்தேகப்பட்டு அசுரனும் கவி அத்தை பொண்ணு காவ்யாவும் தப்பா நினைக்கிறாங்க.


அவ போக காவ்யா காரணம் அப்டினு கவின் அவளை ஒதுக்குறான். அசுரனும் அவ போனத நினைச்சி ஊரை விட்டு போயிடுறான்.


தென்றல் அவ ஒருத்தியால 3 பேர் வாழ்க்கை தெரிஞ்சே பாதிக்க படுது. இன்னொருத்தரும் பாதிக்க படுறாங்க அருவி அண்ணா வசி அவனும் அவன் லவ்வர் கிட்ட இருந்து பிரிஞ்சிடுறான்.


இப்படி எல்லா பிரச்னைக்கும் காரணமான தென்றல் எங்க போனா?? ஏன் போனா??அவளுக்கு என்ன ப்ரோப்லேம்??


3வருஷம் கழிச்சி தென்றல் டைரி ஆதவன் கிட்ட கிடைக்குது அவன் தென்றலுக்கு என்ன ஆச்சு தெரிஞ்சிக்க அவளை தேடுறான். அவனுக்கு அவன் பிரண்ட் வாசு, அவங்க ரெண்டு பேரு wife சரஸ் கீர்த்தி ஹெல்ப் பன்றாங்க.


இவங்க அந்த ஸ்டோரிக்கு முடிவு தேடி போகும் போது அருவி அது அவ டைரி சொல்லி கல்யாணம் ஆகிட்டதா சொல்லிடுறா, அத கேட்ட வெற்றி அவளை சந்தேக பட்டு பேசிடுறான்.


அப்போ அங்க குழந்தையோட வர அரசி அது வெற்றி குழந்தைனு சொல்றா. அந்த குழந்தை வீரா யாரு?? உண்மையா அவனை மாதிரியே இருக்குற குழந்தை அவனோடதா??


இப்படி ஏகப்பட்ட கேள்விகள் எல்லாத்தையும் ஒரே புள்ளில கொண்டு வந்துட்டாங்க.வாழ்த்துக்கள் ரைட்டர்??. பொம்மு Pommu Novels போட்டி கதை எண் 2.


(எனக்கு வெற்றி தென்றல் ரெண்டு பேரு மேல தான் கோவம் அருவி அவ கோவம் தப்புனு சொல்ல முடியாது எல்லாருக்கும் அவங்க பிடிச்ச பொருள இன்னொருத்தர் கிட்ட கொடுக்க மாட்டாங்க. தென்றல் அவ ப்ரோப்லேம் நல்லா யூஸ் பண்ணிக்கிட்டானு தான் தோணுது. அவ்ளோ தப்பு பண்ண அவளை யாரும் ஒன்னுமே சொல்லல. அவ போனதுக்கு காரணம் அருவினு அவளை எவ்ளோ கஷ்ட படுத்தினாங்க. ஆனா தென்றல் மறுபடியும் வந்தப்ப அவளை யாரும் ஏதும் சொல்லல ??.வதம் செய்யாதே மாதவா அருவி கிட்ட இருக்குற குறைய. வதம் செஞ்சாலும் தென்றல ஏதும் செய்யல அது சின்ன வருத்தம் )
 
Top