பிரம்மா 18
அதே சமயம், ஆய்வுகூடத்தில் இருந்த சித்தார்த்தோ கண் மூடி இருக்கையில் அமர்ந்து இருந்தான். என்ன தான் உணர்வுகளை அடக்கி அவன் அமைதியாக இருந்த போதிலும் மனமெல்லாம் அவ்வளவு ரணமாக தான் இருந்தது. நரேனின் இறப்பு வேறு அவன் மனதில் வடுவை உண்டாக்கி இருந்தது. என்ன தான் துரோகியாக இருந்தால் கூட சித்தார்த் அவனுக்கு உண்மையான நண்பனாக இருந்தவன் அல்லவா? ஆனாலும் இதனை சொல்லி அஜய்யை கஷ்டப்படுத்த விரும்பாதவன் அவன் செயலை அங்கீகரிப்பது போல நடந்து கொண்டாலும் கண் முன்னே நரேனின் இறப்பு ஒரு வலியை அவனுக்கு கொடுத்தது உண்மை தான். அதே போல காயத்ரியின் துரோகம் வேறு அவனை உயிருடன் உருக்குலைத்துக் கொண்டு இருந்தது. காதலின் வலி ஒரு பக்கம் இருந்தாலும் அதையும் மீறி அஜய்யை அவள் காயப்படுத்தியதை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. காயத்ரியை நம்பி ஏமாந்துவிட்டோமா என்று நினைத்தவன் மனமோ "நம்பி ஏமாறுறது உனக்கென்ன புதுசா?" என்று தான் தனக்குள் கேட்டுக் கொண்டது.
நரேன் தொடக்கம் காயத்ரி வரை அவன் அன்பு வைத்தவர்கள் பற்றி அதிகம் ஆராய்வது கிடையாது. எந்தப் பெரிய ஞானியாக இருந்தாலும் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பலவீனம் இருக்கும்.. அவனது இந்த ஆழ்ந்த பிணைப்பு தான் அவனது பலவீனம்.. அவன் அன்பு கிடைத்தவர்கள் அதிஷ்டசாலிகள் என்று தான் கூற வேண்டும்.. நரேன் முதல் காயத்ரி வரை அதனை வீணாக்கி இருக்க, அவன் காயத்துக்கு மருந்தாகவும் அவன் அன்பை உணர்ந்து அவனுக்கு துணையாகவும் இருப்பவன் தான் அஜய்.
அஜய்யை காயத்ரி காயப்படுத்த தானும் ஒரு காரணம் என்று நினைத்தவனுக்கு தன் மீதே கோபம் வர, தலையை உலுக்கியப்படி நீரை அருந்திக் கொண்டான். மனதில் அவ்வளவு ரணம் இருந்தாலும் அவனுக்கான ஒரே ஆறுதலாக இருந்தது அஜய்யும் பதிலுக்கு அவன் கொடுக்கும் அன்பும் தான். அதற்காகவே அஜய் விரும்பிய பெண்ணுடன் வாழ வேண்டும் என்று நினைத்தவன் காயத்ரியை முற்றாக தனது வாழ்க்கையில் இருந்து அகற்றி இருந்தான். காயத்ரியோ எதிலும் ஈடுபாடு இல்லாமல் அறைக்குள் இருந்து அழுது கொண்டு இருக்க, அவள் தந்தை கூட மகளை நினைத்து கஷ்டப்பட்டு போனார். தாயில்லாத பெண்ணவளுக்கு தாயாக இருக்க கூடியவன் தான் சித்தார்த். ஆனால் அவள் செய்த தவறால் அவனை அவளால் நெருங்கவே முடியாமல் இருந்தது. இதே சமயம், ஷாந்தியுடன் பேசிக் கொண்டே ஸ்டேஷனுக்கு சென்ற அஜய், அவளிடம் "சின்னதா கோவில்ல நாளைக்கே கல்யாணம் பண்ணிக்கலாம் ஷாந்தி" என்று சொன்னான். அதைக் கேட்டு அதிர்ச்சியாக விழி விரித்தவள் "நாளைக்கேவா? அதுவும் சின்னதாவா? என்னோட அம்மா அப்பா இதுக்கு ஒத்துப்பாங்களா?" என்று கேட்க அவனோ "ஈவினிங் வந்து உங்க வீட்ல பேசுறேன்" என்று முடித்துக் கொண்டான். அவன் சாதாரணமாக சொல்லி விட்டான். ஆனால் போலீசாக இருந்தாலும் வீட்டில் என்ன நினைப்பார்கள் என்கின்ற தடுமாற்றம் அவளுக்கு.
அதை அஜய்யிடம் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அந்த நாளை கஷ்டப்பட்டு கடத்தினாள். மாலையானதும் அவளை அவன் அழைத்தவன் "உன்னை நான் அழைச்சிட்டு போறேன்.. அப்படியே உன்னோட அம்மா அப்பா கிட்ட பேசுறேன்.. வா" என்று சொல்ல, அவளோ மனதுக்குள் "அவருக்கு கொஞ்சமும் பயம் இல்லாம இருக்கு.. ஆனா எனக்கு" என்று நினைத்தவளோ பெரு மூச்சுடன் அவனை பின் தொடர்ந்தாள். கொஞ்ச நேரத்தில் அவள் வீட்டின் முன்னே ஜீப்பை நிறுத்தியவன் முன்னே செல்ல, அவளோ "அவர் வீடு போல முன்னாடி போறாரே" என்று நினைத்துக் கொண்டே பின்னே வேகமாக அவனைப் பின் தொடர்ந்தாள் . அஜய்க்கு தான் பயம் என்பது துளியும் கிடையாதே. ஷாந்தியின் அப்பா முன்னறையில் இருந்து பத்திரிகை பார்த்துக் கொண்டு இருக்க, அவளது தாயோ சமயலறைக்குள் டீ போட்டுக் கொண்டு இருந்தார். அவனோ சாதாரணமாக உள்ளே வந்து சோபாவில் அமர, எழுந்து கொண்டது என்னவோ அவளது தந்தை தான். ஷாந்தியுடைய உயரதிகாரியாக இருந்தால் கூட இப்படி சாதாரணமாக வந்து அமர்ந்தால் ஒரு பதட்டம் உருவாகும் தானே. அவனோ "சார் இருங்க, நான் உங்க கூட தான் பேச வந்து இருக்கேன்" என்று சொல்ல, அவரோ அருகே நின்ற ஷாந்தியிடம் என்ன என்னும் தோரணையில் கேட்டுக் கொண்டே அமர்ந்தார். அவளோ வலுக்கட்டாயமாக சிரித்துக் கொண்டே கையை பிசைந்து கொண்டு நிற்க, அவனோ பெருமூச்சுடன் சற்றே முன்னே வந்து முட்டியில் கை கோர்த்து அமர்ந்தவன் "நேரடியா விஷயத்துக்கு வரேன் சார், உங்க பொண்ண நான் நாளைக்கே கோவில்ல கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்.. வந்திடுவீங்க தானே" என்று கேட்க அவருக்கோ தூக்கி வாரிப் போட்டது.
இப்படி ஒரு பெண் பார்க்கும் படலம் இதுவரை நடந்ததாக சரித்திரம் இல்லை அல்லவா?
ஷாந்திக்கே அவன் பேசியது அதிர்ச்சி தான். அவள் மனமோ "சும்மா பொண்ணு கேட்டு இருந்தா கூட ஏதோ பாவம் பார்த்து கொடுத்து இருப்பாங்க.. இப்போ என்ன சொல்ல போறாங்களோ" என்று புலம்ப, அவரோ அவனை யோசனையாக பார்த்து "என்ன தம்பி திடீர்னு" என்று கேட்டார். அவர் தான் அவனது முரட்டு குணம் பற்றி கேள்விப்பட்டு இருக்கின்றார் அல்லவா? அதனால் வந்த பணிவு அது.. அவனோ தோள்களை உலுக்கி, "பண்ணிக்கனும்னு தோணிச்சு.. அவ கிட்ட கேட்டேன் ஓகே சொன்னா, அது தான் உங்க கிட்ட சொல்லலாம்னு வந்தேன்" என்று சொல்ல, அவருக்கோ எங்கேயாவது முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது. ஒரு பக்கம் இது வரை திருமணமே வேண்டாம் என்று இருந்த பெண் திருமணத்துக்கு சம்மதித்தது நிம்மதியாக இருந்தாலும் இந்த அதிரடியை தாங்க தான் அவரால் முடியவே இல்லை. அவனோ கம்பீரமாக நடுவீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டு இருக்க, என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திண்டாட ஷாந்தி தான் "அப்பா கொஞ்சம் உள்ளே வர்றீங்களா? பேசணும்" என்று சொன்னாள். அஜய்யோ அவளை பின்னால் திரும்பி பார்க்க, அவளோ "கொஞ்சம் அப்பா கிட்ட பேசிட்டு வந்திடுறேன் சார், ரொம்ப அதிர்ச்சில இருப்பார்" என்று சொல்ல, அவனோ போகும் படி தலையை ஆட்டி சைகை செய்தான்.
அவரும் அதிர்ச்சியாக உள்ளே செல்ல, சமயலறையில் இருந்த தாயையும் அழைத்துக் கொண்டே உள்ளே சென்றாள். அறைக்குள் சென்றதுமே அவள் தந்தை "ஷாந்தி இவரோட கல்யாணம் இப்போ தானே நின்னு போச்சு.. இப்படி திடீர்னு" என்று இழுக்க, அவளோ தலையை குனிந்தபடி "அப்பா, நான் இதுவரை கல்யாணம் பண்ணிக்காததுக்கு காரணமே அவர் மேல இருந்த காதல் தான்.. அன்னைக்கு அவர் மட்டும் கல்யாணம் பண்ணி இருந்தார்ன்னா நான் வாழ்க்கை முழுதும் கல்யாணமே பண்ணி இருக்க மாட்டேன்.. இப்போ என் கிட்ட அவரா வந்து கேக்கிறார்.. நானும் வாழ்ந்தா அவர் கூட தான் வாழுவேன்.. உங்க பொண்ணு அவர் கூட வாழணுமா இல்ல உங்களுக்கு பொண்ணாவே வாழ்க்கை முழுதும் இருக்கணுமா? நீங்களே சொல்லுங்க" என்று அழகாக பேசி அவர்களுக்கான விலங்கை மாட்டி இருக்க, அவரோ மனைவியை திரும்பி பார்த்தார்.
அவரும் மகளுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று ஏறாத கோவில் இல்லை அல்லவா? இந்த வாய்ப்பை பயன் படுத்திக் கொள்ள நினைத்தவர் "சாஸ்திரம் பார்க்காம, மண்டபம் புக் பண்ணாம கல்யாணம் பண்ணுறது ஒரு மாதிரி இருக்கு ஷாந்தி" என்று சொல்ல, தாயின் கையை பிடித்தவள் "ப்ளீஸ் மா, எனக்காக ஓகே சொல்லுங்க.. எனக்கு எப்படி உங்க கிட்ட சொல்லி என்னோட நிலைமையை புரிய வைக்கிறதுன்னும் தெரியல.. மத்த அம்மா அப்பா போல நீங்க இல்லன்னு நம்பிக்கைல தான் உடனே சம்மதிச்சேன்.. எல்லாரும் பொண்ணுன்னா அடக்க ஒடுக்கமா இருக்கணும்னு சொல்ற காலத்துல என்ன நீங்க எவ்வளவோ எதிர்ப்பை மீறி போலீஸ்ல சேர்த்து விட்டீங்க நான் ஆசைபட்டத்துக்காக.. இப்போ என்னோட ஆசை அஜய் சாரை கல்யாணம் பண்ணிக்கனும்னு தான். இது சரியா தப்பா என்கிறத தாண்டி நான் எடுக்கிற முடிவை நம்பி சம்மதம் சொல்லுங்க ப்ளீஸ்" என்று கெஞ்ச, மகளின் ஆசைக்கு மதிப்பு கொடுக்கும் அவர்களும் அஜய்யை பற்றியும் அவன் நேர்மையை பற்றியும் அறிந்ததால் என்னவோ "சரிம்மா உன் இஷ்டம்" என்று சொன்னார்கள் இறுதியாக.
மூவரும் வெளியே வருவதை பார்த்த அஜய் எழுந்து நின்று " ஓகே யா சார்" என்று கேட்க அவரோ "சார் எல்லாம் வேணாம் மாப்பிள்ளை மாமான்னே சொல்லுங்க" என்று தனது சம்மதத்தை சொல்ல அவனும் மென் புன்னகையுடன் "சரி மாமா நான் கிளம்புறேன்" என்று சொல்லிக் கொண்டே வெளியேற எத்தனிக்க, அவள் தாயோ "காபி சாப்பிட்டு போங்க மாப்பிள்ளை " என்றார். அவரை திரும்பி பார்த்தவன் "கல்யாணம் முடிய விருந்தே சாப்பிடுறேன்" என்று சொல்லி விட்டு ஜீப்பில் விறு விறுவென சென்று ஏறியவன் ஜீப்பை உயர் வேகத்தில் செலுத்தினான்.
ஜீப்பை ஓட்டிக் கொண்டு இருந்தவன் மனமோ ரணமாக தான் இருந்தது. காதலித்த பெண்ணை விட்டு வேறு ஒரு பெண் கழுத்தில் மாங்கல்யம் அணிவிக்க போகின்றான். என்ன தான் சாதாரணமாக இருந்தாலும் காதல் தோல்வியின் வலி மனதில் இருக்கும் அல்லவா? "சித்தார்த் எனக்காக பண்ணுனத்தோட ஒப்பிடும் போது இதெல்லாம் ஒண்ணுமே இல்ல" என்று சொல்லிக் கொண்டே வீட்டுக்கு சென்றான். அடுத்த நாள் காலையில் வேட்டி சட்டையுடன் ஜீப்பை எடுத்தவன் ஷாந்தியின் வீட்டின் முன்னே நின்று ஹார்ன் அடிக்க, அவளோ பெற்றோருடன் வந்து ஜீப்பில் ஏறிக் கொண்டாள். அன்று போல இன்றும் அவன் இதழ்கள் "புடவைல நீ அழகா இருக்க" என்று சொன்னது. அவளோ இன்று அதனைக் கேட்டு மென்மையாக சிரித்தாள். என்ன தான் அவன் இயல்பாக இருப்பது போல தெரிந்தாலும் அவன் முகமோ இறுக்கமாக தான் இருந்தது. தான் செய்வது சரியா தவறா என்கின்ற எண்ணமே அவனை நிதானமாக இருக்க விடவில்லை. ஆனாலும் உணர்வுகளை அடக்கிக் கொண்டே கோவிலில் ஜீப்பை நிறுத்தி விட்டு, சொல்லி வைத்து இருந்த மாலையையும் தாலியையும் எடுத்துக் கொண்டே கோவிலுக்குள் நுழைந்தான். அவன் மனதில் தடுமாற்றம் இருக்க, அவள் மனம் தான் சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தது. அவன் சார்பாக இரு போலீஸ் நண்பர்களையும் அழைத்து இருந்தான் திருமணத்துக்கு. அவர்களுக்கு இந்த திடீர் திருமணம் அதிர்ச்சியாக இருந்தாலும் அவனிடம் காரணம் கேட்டாலும் பதில் வராது என்கின்ற காரணத்தினால் அமைதியாக தான் இருந்தார்கள்.
ஐயர் மந்திரம் உச்சரிக்க, சாமி சந்நிதியில் அவள் கழுத்தில் தாலி கட்டி மனைவியாக்கி கொண்டான். அவள் கண்ணில் இருந்து இரு துளி ஆனந்த கண்ணீர் அவன் கையால் தாலி வாங்கும் போது உருண்டு விழுந்தது. அதே சமயம், ஆய்வு ஒன்றில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த சித்தார்த்தின் போன் அலற, அதில் ஒரு வாட்ஸ் அப் மெசேஜ் அஜய் எண்ணில் இருந்து வந்து இருந்தது. "என்னவா இருக்கும்?" என்று யோசித்துக் கொண்டே அதனை திறக்க, அதில் "சித்தார்த் , ஐ ஆம் மரீட்" என்று மெசேஜுடன் ஷாந்தி கழுத்தில் மாங்கல்யம் கட்டிய படங்கள் வரிசையாக வந்து விழ, அதனை அதிர்ச்சியாக விழி விரித்துப் பார்த்த சித்தார்த்துக்கோ ரத்த அழுத்தம் ஏகத்துக்கும் எகிறியது. காயத்ரி மீதான அஜய்யின் காதலை உணர்ந்த சித்தார்த்தும் இது அவன் வேணுமென்று தனக்காக செய்து கொண்ட திருமணம் தான் என்று துல்லியமாக கணித்துக் கொண்டான். அந்த புகைப்படத்தில் அஜய்யின் இதழ்கள் புன்னகைத்துக் கொண்டு இருந்தால் கூட அவன் கண்ணில் ஒரு வலி தெரிய, சித்தார்த்தோ "ஸ்மார்ட் மூவ் பண்ணுறதா நினைப்பாடா உனக்கு?" என்று பதில் அனுப்பியவனுக்கு இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
அளவு கடந்த கோபத்தில், தன்னையே கட்டுப்படுத்தாமல் கையில் இருந்த போனை ஆக்ரோஷமாக சுவரில் எறிந்தவன் அஜய்க்கு வாய்க்கு வந்ததை எல்லாம் திட்டி இருந்தான். அவன் போனோ சுக்கு நூறாக வெடித்து சிதறியது. தனி அறையில் இருந்ததால் என்னவோ இந்த விடயம் ஆய்வுகூடத்தில் யாரின் காதையும் எட்டவே இல்லை.
அதே சமயம், திருமணத்தை பதிவும் செய்து விட்டு ஷாந்தியின் பெற்றோரை அவர்கள் வீட்டில் விட்டபின், அவள் உடைகளை எடுத்துக் கொண்டு அவளையும் அழைத்துக் கொண்டு அஜய் தனது வீட்டுக்கு வந்து இருந்தான். என்ன தான் பிடிக்காத திருமணம் என்றாலும் சமூகத்தின் முன்னே அவளுக்கான மதிப்பை அவன் கொடுக்க தான் நினைத்து இருந்தான். வீட்டின் கதவை திறந்து கொண்டே "இங்க உனக்கு ஆரத்தி எடுக்க யாரும் இல்ல" என்று சொல்ல, அவளோ "பரவாயில்லை" என்று சொல்லிக் கொண்டே அவன் பின்னே சென்றாள். அவளது உடைப்பெட்டியை எடுத்து ஒரு அறையில் வைத்தவன் அவளிடம் "இது தான் உன் ரூம்.. பக்கத்து ரூம் தான் என்னோட ரூம். ஏதும் வேணும்னா கேளு, பேச்சலர் ரூம் கொஞ்சம் அப்படி இப்படி தான் இருக்கும்.. அட்ஜஸ்ட் பண்ணிக்கோ" என்று சொல்ல அவளோ சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே அங்கிருந்த அலுமாரி அருகே இருந்த மது பாட்டிலை எடுத்துக் காட்டியவள் "இப்படியா?" என்று கேட்க, அவனோ சங்கடத்துடன் நெற்றியை நீவியவன் "சாரி, இந்த ரூம் ஒழுங்கா க்ளீன் பண்ணல" என்று சொன்னான். அவளோ அவனது சங்கடத்தையும் ரசித்தவளாக "நானே பண்ணிக்கிறேன்.." என்று சொல்லிக் கொண்டே அதனை குப்பை கூடையில் போட்டவள் புடவையை இழுத்து சொருகியபடி அங்கே இருந்த தூசை துணியால் துடைக்க ஆரம்பித்தாள். அவள் இந்த கோலத்தில் வேலை செய்வது அவனுக்கும் சங்கடமாக இருக்க, அடுத்த கணமே இன்னொரு துணியை எடுத்து வந்தவன் துடைக்க ஆரம்பிக்க , அவன் கையை பிடித்தவள் "நான் பண்ணிக்கிறேன் சார்" என்று சொன்னாள். அவனோ "என் தப்பு தானே, நானும் பண்ணிக்கிறேன்" என்று சொன்னபடி கையை உருவிக் கொண்டே தூசை தட்ட ஆரம்பிக்க அவளோ "கல்யாண கோலத்தில் வீட்டு வேலை பார்க்கிறவங்க நாம ரெண்டு பேரா தான் இருப்போம்" என்று சொல்ல, அவனும் மென்மையாக சிரித்துக் கொண்டான்.
இருவரும் அன்று அறையை சுத்தம் செய்து விட, அவளே அவனுக்கு சமைத்துக் கொடுத்தாள். அவனோ "உனக்கு நல்லா சமைக்கவும் தெரியுமா?" என்று கேட்டுக் கொண்டே சாப்பிட்டான். கடையில் சாப்பிட்டவனுக்கு அவள் சமைத்துக் கொடுத்தது என்னவோ அமிர்தம் போல தான் இருந்தது. காதல் இல்லாவிட்டாலும் ஒரு மெல்லிய நட்பு அவர்களிடையே உருவாகி இருந்தது.
அவனுக்கும் முதல் முறை ஒரு பெண்ணுடன் ஒரே வீட்டில் இருக்கும் அனுபவம்.. ஆரம்பத்தில் சற்றே சங்கடமாக உணர்ந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக அவளுடன் பேச ஆரம்பித்து இருந்தான். அவளுக்கு சொல்லவே தேவையில்லை. இந்த அனுபவம் கசக்குமா என்ன? அவனது ஒவ்வொரு அசைவையும் ஒவ்வொரு பேச்சையும் ரசித்தவளோ அவன் முன்னே அந்த ரசனையை மறைக்க தான் படாத பாடு பட்டு போனாள்.
அன்று அவர்கள் நாட்கள் அப்படியே கழிய, அடுத்த நாள் ஒன்றாக தான் வேலைக்கு வந்தார்கள். வந்ததுமே தனது மேசையில் இருந்த கடிதத்தை பார்த்து புருவம் சுருக்கியவன் அடுத்த கணமே ஷாந்தியை அறைக்குள் அழைத்து இருந்தான். அவளோ சாலியூட் அடித்து விட்டு "சார்" என்று சொல்ல, அவனோ "உனக்கு இன்னும் ரெண்டு மாசத்துல ட்ரான்ஸ்பர், இங்க இருக்கிற டிபார்ட்மென்டுக்கு தான்" என்று கடிதத்தை நீட்ட அதை யோசனையாக பார்த்தவள் "ஏன் சார்?" என்று கேட்டாள்.
அவனோ "புருஷன் பொண்டாட்டி ஒரே இடத்திலே வேலை பார்க்க கூடாதாம்.. அப்படி வேலை பார்த்தா என் கான்செண்ட்ரேஷன் உன் மேல தான் இருக்குமாம்" என்று சொன்னவனோபெருமூச்சுடன் "அவங்களுக்கு தான் நம்ம ரிலேஷன்ஷிப் பத்தி தெரியாதுல.. சோ நாம அவங்கள மதிச்சு அவங்க முடிவை அக்செப்ட் பண்ணிக்கலாம்.. சோ ரெண்டு மாசத்துல கிளம்ப ரெடி ஆகு, யூ மே கோ" என்று சொல்லிக் கொண்டே அவன் பைலை திருப்ப, அவளுக்கோ அது ஒன்றும் பெரிய விடயமாக தெரியவே இல்லை. அந்த ஸ்டேஷனை விட்டு போவது கொஞ்சம் நெருடலாக இருந்தாலும், அவனுடன் தானே வீட்டில் இருக்க போகின்றேன் என்கின்ற எண்ணமே அவளை நிதானமாக இருக்க வைத்தது.
அதே சமயம், காயத்ரியோ உடைகளை தூக்கிக் கொண்டே ஹாலுக்குள் வர அவள் தந்தையோ "காயத்ரி எங்கம்மா போக போற?" என்று பதட்டமாக கேட்டார். அவளோ "என்னால இங்க இருக்க முடியலப்பா, சித்தார்த் நினைவாவே இருக்கு.. நான் கிளம்புறேன் ப்ளீஸ்" என்று சொல்ல, அவரோ "அவன் உன்னை ஏத்துப்பானாம்மா?" என்று தான் கேட்டார். அவளோ "எனக்கு தெரியல.. ஆனா நான் செய்த தப்புக்கு தண்டனையா அவர் கோபத்தை தாங்கிப்பேன்" என்று சொன்னவள் அடுத்த கணமே, அஜய்க்கு திருமணத்துக்கு வாழ்த்தும் சொல்லி விட்டு, அவனிடமும் விடயத்தை சொல்லி விட்டு டாக்சியில் புறப்பட்டு இருந்தாள் சித்தார்த்தின் இடத்துக்கு.. அதுவரை அஜய் மனதுடன் விளையாடி விட்டோமோ என்று இருந்த வலி, அந்த திருமணம் பற்றி அறிந்ததுமே இறங்கிய உணர்வு.. இப்போது தைரியமாக சித்தார்த்தை எதிர்கொள்ள புறப்பட்டு இருந்தாள்.
அவள் வந்து இறங்கிய அன்று சி.சி.டி.வி யைப் பார்த்த சித்தார்த்தின் விழிகள் அதிர்ச்சியுடன் விரிந்து கொண்டது. அவளைக் கண்டதுமே கோபத்தில் அவன் கழுத்து நரம்புகள் புடைத்துக் கிளம்ப அவனது வலி, கோபம் ஆக்ரோஷம் எல்லாம் அவள் மீது திரும்ப "வந்துட்டா போராட்டம் பண்ண" என்று முணு முணுத்துக் கொண்டே முன்னால் இருந்த செக்கியூரிட்டிக்கு இன்டர் காமில் அழைத்தவன் "அவளை உள்ளே விட்டா உன் வேலை போயிடும்.. வெளியே ரோட்ல விடு நிற்கட்டும்." என்று சொல்ல, அவனோ அவளிடம் "இங்க உங்கள நிற்க வேணாம்னு சார் சொன்னார்" என்று சொல்லி அந்த ஆய்வுகூட வளவுக்குள் கூட விடாமல் ரோட்டில் நிற்க வைத்து இருந்தான் அவன். அவளுக்கோ மன வலியுடன் உடல் வலியும் சேர்ந்து கொண்டாலும் சித்தார்த்தை பார்த்து விட வேண்டும் என்கின்ற வைராக்கியத்தில் கண்களில் நீர் வழிய தலையை குனிந்து கொண்டு அப்படியே நின்று இருந்தாள்.a
அதே சமயம், ஆய்வுகூடத்தில் இருந்த சித்தார்த்தோ கண் மூடி இருக்கையில் அமர்ந்து இருந்தான். என்ன தான் உணர்வுகளை அடக்கி அவன் அமைதியாக இருந்த போதிலும் மனமெல்லாம் அவ்வளவு ரணமாக தான் இருந்தது. நரேனின் இறப்பு வேறு அவன் மனதில் வடுவை உண்டாக்கி இருந்தது. என்ன தான் துரோகியாக இருந்தால் கூட சித்தார்த் அவனுக்கு உண்மையான நண்பனாக இருந்தவன் அல்லவா? ஆனாலும் இதனை சொல்லி அஜய்யை கஷ்டப்படுத்த விரும்பாதவன் அவன் செயலை அங்கீகரிப்பது போல நடந்து கொண்டாலும் கண் முன்னே நரேனின் இறப்பு ஒரு வலியை அவனுக்கு கொடுத்தது உண்மை தான். அதே போல காயத்ரியின் துரோகம் வேறு அவனை உயிருடன் உருக்குலைத்துக் கொண்டு இருந்தது. காதலின் வலி ஒரு பக்கம் இருந்தாலும் அதையும் மீறி அஜய்யை அவள் காயப்படுத்தியதை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. காயத்ரியை நம்பி ஏமாந்துவிட்டோமா என்று நினைத்தவன் மனமோ "நம்பி ஏமாறுறது உனக்கென்ன புதுசா?" என்று தான் தனக்குள் கேட்டுக் கொண்டது.
நரேன் தொடக்கம் காயத்ரி வரை அவன் அன்பு வைத்தவர்கள் பற்றி அதிகம் ஆராய்வது கிடையாது. எந்தப் பெரிய ஞானியாக இருந்தாலும் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பலவீனம் இருக்கும்.. அவனது இந்த ஆழ்ந்த பிணைப்பு தான் அவனது பலவீனம்.. அவன் அன்பு கிடைத்தவர்கள் அதிஷ்டசாலிகள் என்று தான் கூற வேண்டும்.. நரேன் முதல் காயத்ரி வரை அதனை வீணாக்கி இருக்க, அவன் காயத்துக்கு மருந்தாகவும் அவன் அன்பை உணர்ந்து அவனுக்கு துணையாகவும் இருப்பவன் தான் அஜய்.
அஜய்யை காயத்ரி காயப்படுத்த தானும் ஒரு காரணம் என்று நினைத்தவனுக்கு தன் மீதே கோபம் வர, தலையை உலுக்கியப்படி நீரை அருந்திக் கொண்டான். மனதில் அவ்வளவு ரணம் இருந்தாலும் அவனுக்கான ஒரே ஆறுதலாக இருந்தது அஜய்யும் பதிலுக்கு அவன் கொடுக்கும் அன்பும் தான். அதற்காகவே அஜய் விரும்பிய பெண்ணுடன் வாழ வேண்டும் என்று நினைத்தவன் காயத்ரியை முற்றாக தனது வாழ்க்கையில் இருந்து அகற்றி இருந்தான். காயத்ரியோ எதிலும் ஈடுபாடு இல்லாமல் அறைக்குள் இருந்து அழுது கொண்டு இருக்க, அவள் தந்தை கூட மகளை நினைத்து கஷ்டப்பட்டு போனார். தாயில்லாத பெண்ணவளுக்கு தாயாக இருக்க கூடியவன் தான் சித்தார்த். ஆனால் அவள் செய்த தவறால் அவனை அவளால் நெருங்கவே முடியாமல் இருந்தது. இதே சமயம், ஷாந்தியுடன் பேசிக் கொண்டே ஸ்டேஷனுக்கு சென்ற அஜய், அவளிடம் "சின்னதா கோவில்ல நாளைக்கே கல்யாணம் பண்ணிக்கலாம் ஷாந்தி" என்று சொன்னான். அதைக் கேட்டு அதிர்ச்சியாக விழி விரித்தவள் "நாளைக்கேவா? அதுவும் சின்னதாவா? என்னோட அம்மா அப்பா இதுக்கு ஒத்துப்பாங்களா?" என்று கேட்க அவனோ "ஈவினிங் வந்து உங்க வீட்ல பேசுறேன்" என்று முடித்துக் கொண்டான். அவன் சாதாரணமாக சொல்லி விட்டான். ஆனால் போலீசாக இருந்தாலும் வீட்டில் என்ன நினைப்பார்கள் என்கின்ற தடுமாற்றம் அவளுக்கு.
அதை அஜய்யிடம் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அந்த நாளை கஷ்டப்பட்டு கடத்தினாள். மாலையானதும் அவளை அவன் அழைத்தவன் "உன்னை நான் அழைச்சிட்டு போறேன்.. அப்படியே உன்னோட அம்மா அப்பா கிட்ட பேசுறேன்.. வா" என்று சொல்ல, அவளோ மனதுக்குள் "அவருக்கு கொஞ்சமும் பயம் இல்லாம இருக்கு.. ஆனா எனக்கு" என்று நினைத்தவளோ பெரு மூச்சுடன் அவனை பின் தொடர்ந்தாள். கொஞ்ச நேரத்தில் அவள் வீட்டின் முன்னே ஜீப்பை நிறுத்தியவன் முன்னே செல்ல, அவளோ "அவர் வீடு போல முன்னாடி போறாரே" என்று நினைத்துக் கொண்டே பின்னே வேகமாக அவனைப் பின் தொடர்ந்தாள் . அஜய்க்கு தான் பயம் என்பது துளியும் கிடையாதே. ஷாந்தியின் அப்பா முன்னறையில் இருந்து பத்திரிகை பார்த்துக் கொண்டு இருக்க, அவளது தாயோ சமயலறைக்குள் டீ போட்டுக் கொண்டு இருந்தார். அவனோ சாதாரணமாக உள்ளே வந்து சோபாவில் அமர, எழுந்து கொண்டது என்னவோ அவளது தந்தை தான். ஷாந்தியுடைய உயரதிகாரியாக இருந்தால் கூட இப்படி சாதாரணமாக வந்து அமர்ந்தால் ஒரு பதட்டம் உருவாகும் தானே. அவனோ "சார் இருங்க, நான் உங்க கூட தான் பேச வந்து இருக்கேன்" என்று சொல்ல, அவரோ அருகே நின்ற ஷாந்தியிடம் என்ன என்னும் தோரணையில் கேட்டுக் கொண்டே அமர்ந்தார். அவளோ வலுக்கட்டாயமாக சிரித்துக் கொண்டே கையை பிசைந்து கொண்டு நிற்க, அவனோ பெருமூச்சுடன் சற்றே முன்னே வந்து முட்டியில் கை கோர்த்து அமர்ந்தவன் "நேரடியா விஷயத்துக்கு வரேன் சார், உங்க பொண்ண நான் நாளைக்கே கோவில்ல கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்.. வந்திடுவீங்க தானே" என்று கேட்க அவருக்கோ தூக்கி வாரிப் போட்டது.
இப்படி ஒரு பெண் பார்க்கும் படலம் இதுவரை நடந்ததாக சரித்திரம் இல்லை அல்லவா?
ஷாந்திக்கே அவன் பேசியது அதிர்ச்சி தான். அவள் மனமோ "சும்மா பொண்ணு கேட்டு இருந்தா கூட ஏதோ பாவம் பார்த்து கொடுத்து இருப்பாங்க.. இப்போ என்ன சொல்ல போறாங்களோ" என்று புலம்ப, அவரோ அவனை யோசனையாக பார்த்து "என்ன தம்பி திடீர்னு" என்று கேட்டார். அவர் தான் அவனது முரட்டு குணம் பற்றி கேள்விப்பட்டு இருக்கின்றார் அல்லவா? அதனால் வந்த பணிவு அது.. அவனோ தோள்களை உலுக்கி, "பண்ணிக்கனும்னு தோணிச்சு.. அவ கிட்ட கேட்டேன் ஓகே சொன்னா, அது தான் உங்க கிட்ட சொல்லலாம்னு வந்தேன்" என்று சொல்ல, அவருக்கோ எங்கேயாவது முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது. ஒரு பக்கம் இது வரை திருமணமே வேண்டாம் என்று இருந்த பெண் திருமணத்துக்கு சம்மதித்தது நிம்மதியாக இருந்தாலும் இந்த அதிரடியை தாங்க தான் அவரால் முடியவே இல்லை. அவனோ கம்பீரமாக நடுவீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டு இருக்க, என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திண்டாட ஷாந்தி தான் "அப்பா கொஞ்சம் உள்ளே வர்றீங்களா? பேசணும்" என்று சொன்னாள். அஜய்யோ அவளை பின்னால் திரும்பி பார்க்க, அவளோ "கொஞ்சம் அப்பா கிட்ட பேசிட்டு வந்திடுறேன் சார், ரொம்ப அதிர்ச்சில இருப்பார்" என்று சொல்ல, அவனோ போகும் படி தலையை ஆட்டி சைகை செய்தான்.
அவரும் அதிர்ச்சியாக உள்ளே செல்ல, சமயலறையில் இருந்த தாயையும் அழைத்துக் கொண்டே உள்ளே சென்றாள். அறைக்குள் சென்றதுமே அவள் தந்தை "ஷாந்தி இவரோட கல்யாணம் இப்போ தானே நின்னு போச்சு.. இப்படி திடீர்னு" என்று இழுக்க, அவளோ தலையை குனிந்தபடி "அப்பா, நான் இதுவரை கல்யாணம் பண்ணிக்காததுக்கு காரணமே அவர் மேல இருந்த காதல் தான்.. அன்னைக்கு அவர் மட்டும் கல்யாணம் பண்ணி இருந்தார்ன்னா நான் வாழ்க்கை முழுதும் கல்யாணமே பண்ணி இருக்க மாட்டேன்.. இப்போ என் கிட்ட அவரா வந்து கேக்கிறார்.. நானும் வாழ்ந்தா அவர் கூட தான் வாழுவேன்.. உங்க பொண்ணு அவர் கூட வாழணுமா இல்ல உங்களுக்கு பொண்ணாவே வாழ்க்கை முழுதும் இருக்கணுமா? நீங்களே சொல்லுங்க" என்று அழகாக பேசி அவர்களுக்கான விலங்கை மாட்டி இருக்க, அவரோ மனைவியை திரும்பி பார்த்தார்.
அவரும் மகளுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று ஏறாத கோவில் இல்லை அல்லவா? இந்த வாய்ப்பை பயன் படுத்திக் கொள்ள நினைத்தவர் "சாஸ்திரம் பார்க்காம, மண்டபம் புக் பண்ணாம கல்யாணம் பண்ணுறது ஒரு மாதிரி இருக்கு ஷாந்தி" என்று சொல்ல, தாயின் கையை பிடித்தவள் "ப்ளீஸ் மா, எனக்காக ஓகே சொல்லுங்க.. எனக்கு எப்படி உங்க கிட்ட சொல்லி என்னோட நிலைமையை புரிய வைக்கிறதுன்னும் தெரியல.. மத்த அம்மா அப்பா போல நீங்க இல்லன்னு நம்பிக்கைல தான் உடனே சம்மதிச்சேன்.. எல்லாரும் பொண்ணுன்னா அடக்க ஒடுக்கமா இருக்கணும்னு சொல்ற காலத்துல என்ன நீங்க எவ்வளவோ எதிர்ப்பை மீறி போலீஸ்ல சேர்த்து விட்டீங்க நான் ஆசைபட்டத்துக்காக.. இப்போ என்னோட ஆசை அஜய் சாரை கல்யாணம் பண்ணிக்கனும்னு தான். இது சரியா தப்பா என்கிறத தாண்டி நான் எடுக்கிற முடிவை நம்பி சம்மதம் சொல்லுங்க ப்ளீஸ்" என்று கெஞ்ச, மகளின் ஆசைக்கு மதிப்பு கொடுக்கும் அவர்களும் அஜய்யை பற்றியும் அவன் நேர்மையை பற்றியும் அறிந்ததால் என்னவோ "சரிம்மா உன் இஷ்டம்" என்று சொன்னார்கள் இறுதியாக.
மூவரும் வெளியே வருவதை பார்த்த அஜய் எழுந்து நின்று " ஓகே யா சார்" என்று கேட்க அவரோ "சார் எல்லாம் வேணாம் மாப்பிள்ளை மாமான்னே சொல்லுங்க" என்று தனது சம்மதத்தை சொல்ல அவனும் மென் புன்னகையுடன் "சரி மாமா நான் கிளம்புறேன்" என்று சொல்லிக் கொண்டே வெளியேற எத்தனிக்க, அவள் தாயோ "காபி சாப்பிட்டு போங்க மாப்பிள்ளை " என்றார். அவரை திரும்பி பார்த்தவன் "கல்யாணம் முடிய விருந்தே சாப்பிடுறேன்" என்று சொல்லி விட்டு ஜீப்பில் விறு விறுவென சென்று ஏறியவன் ஜீப்பை உயர் வேகத்தில் செலுத்தினான்.
ஜீப்பை ஓட்டிக் கொண்டு இருந்தவன் மனமோ ரணமாக தான் இருந்தது. காதலித்த பெண்ணை விட்டு வேறு ஒரு பெண் கழுத்தில் மாங்கல்யம் அணிவிக்க போகின்றான். என்ன தான் சாதாரணமாக இருந்தாலும் காதல் தோல்வியின் வலி மனதில் இருக்கும் அல்லவா? "சித்தார்த் எனக்காக பண்ணுனத்தோட ஒப்பிடும் போது இதெல்லாம் ஒண்ணுமே இல்ல" என்று சொல்லிக் கொண்டே வீட்டுக்கு சென்றான். அடுத்த நாள் காலையில் வேட்டி சட்டையுடன் ஜீப்பை எடுத்தவன் ஷாந்தியின் வீட்டின் முன்னே நின்று ஹார்ன் அடிக்க, அவளோ பெற்றோருடன் வந்து ஜீப்பில் ஏறிக் கொண்டாள். அன்று போல இன்றும் அவன் இதழ்கள் "புடவைல நீ அழகா இருக்க" என்று சொன்னது. அவளோ இன்று அதனைக் கேட்டு மென்மையாக சிரித்தாள். என்ன தான் அவன் இயல்பாக இருப்பது போல தெரிந்தாலும் அவன் முகமோ இறுக்கமாக தான் இருந்தது. தான் செய்வது சரியா தவறா என்கின்ற எண்ணமே அவனை நிதானமாக இருக்க விடவில்லை. ஆனாலும் உணர்வுகளை அடக்கிக் கொண்டே கோவிலில் ஜீப்பை நிறுத்தி விட்டு, சொல்லி வைத்து இருந்த மாலையையும் தாலியையும் எடுத்துக் கொண்டே கோவிலுக்குள் நுழைந்தான். அவன் மனதில் தடுமாற்றம் இருக்க, அவள் மனம் தான் சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தது. அவன் சார்பாக இரு போலீஸ் நண்பர்களையும் அழைத்து இருந்தான் திருமணத்துக்கு. அவர்களுக்கு இந்த திடீர் திருமணம் அதிர்ச்சியாக இருந்தாலும் அவனிடம் காரணம் கேட்டாலும் பதில் வராது என்கின்ற காரணத்தினால் அமைதியாக தான் இருந்தார்கள்.
ஐயர் மந்திரம் உச்சரிக்க, சாமி சந்நிதியில் அவள் கழுத்தில் தாலி கட்டி மனைவியாக்கி கொண்டான். அவள் கண்ணில் இருந்து இரு துளி ஆனந்த கண்ணீர் அவன் கையால் தாலி வாங்கும் போது உருண்டு விழுந்தது. அதே சமயம், ஆய்வு ஒன்றில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த சித்தார்த்தின் போன் அலற, அதில் ஒரு வாட்ஸ் அப் மெசேஜ் அஜய் எண்ணில் இருந்து வந்து இருந்தது. "என்னவா இருக்கும்?" என்று யோசித்துக் கொண்டே அதனை திறக்க, அதில் "சித்தார்த் , ஐ ஆம் மரீட்" என்று மெசேஜுடன் ஷாந்தி கழுத்தில் மாங்கல்யம் கட்டிய படங்கள் வரிசையாக வந்து விழ, அதனை அதிர்ச்சியாக விழி விரித்துப் பார்த்த சித்தார்த்துக்கோ ரத்த அழுத்தம் ஏகத்துக்கும் எகிறியது. காயத்ரி மீதான அஜய்யின் காதலை உணர்ந்த சித்தார்த்தும் இது அவன் வேணுமென்று தனக்காக செய்து கொண்ட திருமணம் தான் என்று துல்லியமாக கணித்துக் கொண்டான். அந்த புகைப்படத்தில் அஜய்யின் இதழ்கள் புன்னகைத்துக் கொண்டு இருந்தால் கூட அவன் கண்ணில் ஒரு வலி தெரிய, சித்தார்த்தோ "ஸ்மார்ட் மூவ் பண்ணுறதா நினைப்பாடா உனக்கு?" என்று பதில் அனுப்பியவனுக்கு இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
அளவு கடந்த கோபத்தில், தன்னையே கட்டுப்படுத்தாமல் கையில் இருந்த போனை ஆக்ரோஷமாக சுவரில் எறிந்தவன் அஜய்க்கு வாய்க்கு வந்ததை எல்லாம் திட்டி இருந்தான். அவன் போனோ சுக்கு நூறாக வெடித்து சிதறியது. தனி அறையில் இருந்ததால் என்னவோ இந்த விடயம் ஆய்வுகூடத்தில் யாரின் காதையும் எட்டவே இல்லை.
அதே சமயம், திருமணத்தை பதிவும் செய்து விட்டு ஷாந்தியின் பெற்றோரை அவர்கள் வீட்டில் விட்டபின், அவள் உடைகளை எடுத்துக் கொண்டு அவளையும் அழைத்துக் கொண்டு அஜய் தனது வீட்டுக்கு வந்து இருந்தான். என்ன தான் பிடிக்காத திருமணம் என்றாலும் சமூகத்தின் முன்னே அவளுக்கான மதிப்பை அவன் கொடுக்க தான் நினைத்து இருந்தான். வீட்டின் கதவை திறந்து கொண்டே "இங்க உனக்கு ஆரத்தி எடுக்க யாரும் இல்ல" என்று சொல்ல, அவளோ "பரவாயில்லை" என்று சொல்லிக் கொண்டே அவன் பின்னே சென்றாள். அவளது உடைப்பெட்டியை எடுத்து ஒரு அறையில் வைத்தவன் அவளிடம் "இது தான் உன் ரூம்.. பக்கத்து ரூம் தான் என்னோட ரூம். ஏதும் வேணும்னா கேளு, பேச்சலர் ரூம் கொஞ்சம் அப்படி இப்படி தான் இருக்கும்.. அட்ஜஸ்ட் பண்ணிக்கோ" என்று சொல்ல அவளோ சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே அங்கிருந்த அலுமாரி அருகே இருந்த மது பாட்டிலை எடுத்துக் காட்டியவள் "இப்படியா?" என்று கேட்க, அவனோ சங்கடத்துடன் நெற்றியை நீவியவன் "சாரி, இந்த ரூம் ஒழுங்கா க்ளீன் பண்ணல" என்று சொன்னான். அவளோ அவனது சங்கடத்தையும் ரசித்தவளாக "நானே பண்ணிக்கிறேன்.." என்று சொல்லிக் கொண்டே அதனை குப்பை கூடையில் போட்டவள் புடவையை இழுத்து சொருகியபடி அங்கே இருந்த தூசை துணியால் துடைக்க ஆரம்பித்தாள். அவள் இந்த கோலத்தில் வேலை செய்வது அவனுக்கும் சங்கடமாக இருக்க, அடுத்த கணமே இன்னொரு துணியை எடுத்து வந்தவன் துடைக்க ஆரம்பிக்க , அவன் கையை பிடித்தவள் "நான் பண்ணிக்கிறேன் சார்" என்று சொன்னாள். அவனோ "என் தப்பு தானே, நானும் பண்ணிக்கிறேன்" என்று சொன்னபடி கையை உருவிக் கொண்டே தூசை தட்ட ஆரம்பிக்க அவளோ "கல்யாண கோலத்தில் வீட்டு வேலை பார்க்கிறவங்க நாம ரெண்டு பேரா தான் இருப்போம்" என்று சொல்ல, அவனும் மென்மையாக சிரித்துக் கொண்டான்.
இருவரும் அன்று அறையை சுத்தம் செய்து விட, அவளே அவனுக்கு சமைத்துக் கொடுத்தாள். அவனோ "உனக்கு நல்லா சமைக்கவும் தெரியுமா?" என்று கேட்டுக் கொண்டே சாப்பிட்டான். கடையில் சாப்பிட்டவனுக்கு அவள் சமைத்துக் கொடுத்தது என்னவோ அமிர்தம் போல தான் இருந்தது. காதல் இல்லாவிட்டாலும் ஒரு மெல்லிய நட்பு அவர்களிடையே உருவாகி இருந்தது.
அவனுக்கும் முதல் முறை ஒரு பெண்ணுடன் ஒரே வீட்டில் இருக்கும் அனுபவம்.. ஆரம்பத்தில் சற்றே சங்கடமாக உணர்ந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக அவளுடன் பேச ஆரம்பித்து இருந்தான். அவளுக்கு சொல்லவே தேவையில்லை. இந்த அனுபவம் கசக்குமா என்ன? அவனது ஒவ்வொரு அசைவையும் ஒவ்வொரு பேச்சையும் ரசித்தவளோ அவன் முன்னே அந்த ரசனையை மறைக்க தான் படாத பாடு பட்டு போனாள்.
அன்று அவர்கள் நாட்கள் அப்படியே கழிய, அடுத்த நாள் ஒன்றாக தான் வேலைக்கு வந்தார்கள். வந்ததுமே தனது மேசையில் இருந்த கடிதத்தை பார்த்து புருவம் சுருக்கியவன் அடுத்த கணமே ஷாந்தியை அறைக்குள் அழைத்து இருந்தான். அவளோ சாலியூட் அடித்து விட்டு "சார்" என்று சொல்ல, அவனோ "உனக்கு இன்னும் ரெண்டு மாசத்துல ட்ரான்ஸ்பர், இங்க இருக்கிற டிபார்ட்மென்டுக்கு தான்" என்று கடிதத்தை நீட்ட அதை யோசனையாக பார்த்தவள் "ஏன் சார்?" என்று கேட்டாள்.
அவனோ "புருஷன் பொண்டாட்டி ஒரே இடத்திலே வேலை பார்க்க கூடாதாம்.. அப்படி வேலை பார்த்தா என் கான்செண்ட்ரேஷன் உன் மேல தான் இருக்குமாம்" என்று சொன்னவனோபெருமூச்சுடன் "அவங்களுக்கு தான் நம்ம ரிலேஷன்ஷிப் பத்தி தெரியாதுல.. சோ நாம அவங்கள மதிச்சு அவங்க முடிவை அக்செப்ட் பண்ணிக்கலாம்.. சோ ரெண்டு மாசத்துல கிளம்ப ரெடி ஆகு, யூ மே கோ" என்று சொல்லிக் கொண்டே அவன் பைலை திருப்ப, அவளுக்கோ அது ஒன்றும் பெரிய விடயமாக தெரியவே இல்லை. அந்த ஸ்டேஷனை விட்டு போவது கொஞ்சம் நெருடலாக இருந்தாலும், அவனுடன் தானே வீட்டில் இருக்க போகின்றேன் என்கின்ற எண்ணமே அவளை நிதானமாக இருக்க வைத்தது.
அதே சமயம், காயத்ரியோ உடைகளை தூக்கிக் கொண்டே ஹாலுக்குள் வர அவள் தந்தையோ "காயத்ரி எங்கம்மா போக போற?" என்று பதட்டமாக கேட்டார். அவளோ "என்னால இங்க இருக்க முடியலப்பா, சித்தார்த் நினைவாவே இருக்கு.. நான் கிளம்புறேன் ப்ளீஸ்" என்று சொல்ல, அவரோ "அவன் உன்னை ஏத்துப்பானாம்மா?" என்று தான் கேட்டார். அவளோ "எனக்கு தெரியல.. ஆனா நான் செய்த தப்புக்கு தண்டனையா அவர் கோபத்தை தாங்கிப்பேன்" என்று சொன்னவள் அடுத்த கணமே, அஜய்க்கு திருமணத்துக்கு வாழ்த்தும் சொல்லி விட்டு, அவனிடமும் விடயத்தை சொல்லி விட்டு டாக்சியில் புறப்பட்டு இருந்தாள் சித்தார்த்தின் இடத்துக்கு.. அதுவரை அஜய் மனதுடன் விளையாடி விட்டோமோ என்று இருந்த வலி, அந்த திருமணம் பற்றி அறிந்ததுமே இறங்கிய உணர்வு.. இப்போது தைரியமாக சித்தார்த்தை எதிர்கொள்ள புறப்பட்டு இருந்தாள்.
அவள் வந்து இறங்கிய அன்று சி.சி.டி.வி யைப் பார்த்த சித்தார்த்தின் விழிகள் அதிர்ச்சியுடன் விரிந்து கொண்டது. அவளைக் கண்டதுமே கோபத்தில் அவன் கழுத்து நரம்புகள் புடைத்துக் கிளம்ப அவனது வலி, கோபம் ஆக்ரோஷம் எல்லாம் அவள் மீது திரும்ப "வந்துட்டா போராட்டம் பண்ண" என்று முணு முணுத்துக் கொண்டே முன்னால் இருந்த செக்கியூரிட்டிக்கு இன்டர் காமில் அழைத்தவன் "அவளை உள்ளே விட்டா உன் வேலை போயிடும்.. வெளியே ரோட்ல விடு நிற்கட்டும்." என்று சொல்ல, அவனோ அவளிடம் "இங்க உங்கள நிற்க வேணாம்னு சார் சொன்னார்" என்று சொல்லி அந்த ஆய்வுகூட வளவுக்குள் கூட விடாமல் ரோட்டில் நிற்க வைத்து இருந்தான் அவன். அவளுக்கோ மன வலியுடன் உடல் வலியும் சேர்ந்து கொண்டாலும் சித்தார்த்தை பார்த்து விட வேண்டும் என்கின்ற வைராக்கியத்தில் கண்களில் நீர் வழிய தலையை குனிந்து கொண்டு அப்படியே நின்று இருந்தாள்.a