ஹாய் ப்ரண்ட்ஸ்.. அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்.. என்னோட மற்ற கதைகளைப் போல் தூரிகையின் நிகரிலன் கதைக்கும் உங்களோட அன்பையும் ஆதரவையும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.. முதல் அத்தியாயம் பதிவிட்டுள்ளேன்..
தூரிகா 1
சலசலவென மழை பெய்து கொண்டிருக்க சேலையை தூக்கி நடந்தவளின் முகத்திலோ அப்பட்டமான எரிச்சலை காட்டியது.. "ச்சே. இந்த மழை இப்போ தான் பெய்யணுமா??.. இர்ரிட்டேட்டிங்" என புலம்பியவாறே வந்தவளை டீக்கடையில் நின்றிருந்த இரு கண்கள் விழுங்கும் பார்வையில் பார்த்ததை அறியாமலே காலேஜ் காம்பஸிற்குள் உள்ளே நுழைந்தாள்…
காலேஜிற்குள்ளே நுழையும் போதே மழை விட்டிருந்தது.. சற்று வெயிலுடன் மிதமான காற்றும் வீச, குளிரோ உடலை தழுவ.. "ஊப்ப்ப" என தன் மூச்சுக்காற்றை வெளியிட்டவள்.. ஸ்டாஃப் ரூமிற்குள் உள்ளே நுழைந்தாள்..
உள்ளே நுழைந்தவளை எதிர்கொண்டது அவளுடன் வேலை செய்யும் மானசா… "என்ன மிஸ்.தூரிகா இப்டி தெப்பமா நனைஞ்சிட்டு வந்திருக்கீங்க??" என்றவளை சலிப்பாக பார்த்தவள்..
"எல்லாம் இந்த பிரின்சியால வந்தது.. இன்னைக்கு இந்த பங்க்ஸன் வைக்கலைன்னு யார் அழுதா??" என சிடுசிடுத்தவாறே பிரின்சிபால் அறையை நோக்கி சென்றாள்..
அங்கு நுழைந்தவளை எதிர்கொண்டது "தான் தான் உலகத்திலேயே பேரழகி என்பதை காட்டுவதற்காக 2,3 கோட்டிங் அடித்து தன்னுடைய 35 வயதை குறைப்பதற்காக பெரும் போராட்டம் நடத்தி முதிர் கன்னிகை ஆனந்தி.. ***** கல்லூரியின் தாளாளர்..
"குட்மார்னிங் மேம்" என சொல்லி முடிப்பதற்குள்..
"மிஸ்..தூரிகா இது தான் காலேஜ் வர்ற டைம்மா.. பத்து நிமிஷம் லேட்.. ஓஹ்.. ஹாட்.. இப்போ நான் என்ன பண்ணுவேன்.. சீப் கெஸ்ட் ஆன் த வே தூரிகா" என புலம்பிக்கொண்டு சென்றவரை பார்த்து உதட்டை சுழித்தவள்..
"ஏதோ அரை வயசுக்கிழவன் வர போறான் போல.. அதான் மேடம் தூக்கல் மேக்கப்புல போகுது" என முணு முணுத்தவாறே வெளியே சென்றவள்.. அங்கு காம்பவுண்டில் நின்றிருந்த போலீஸ் போலீஸ் வாகனத்தை கண்கள் இடுங்க பார்த்தாள்..
"போலீஸ் ஜீப் வந்திருக்கு.. என்னவா இருக்கும்??" என யோசனையுடன் ஆடிட்டோரியத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தவளை, பிரின்சியின் "மிஸ்..தூரிகா" என்ற குரலில் திரும்பியவள்.. ஆனந்தியை நோக்கி வேண்டா வெறுப்பாக சென்றாள்.. "சொல்லுங்க மேடம்" என்றவளின் கையில் அழகிய சிகப்பு நிற பொக்கையை கொடுத்தவர்.. "இதை சார்க்கு கொடுத்து வெல்கம் பண்ணு" என்றவரை உள்ளுக்குள் ஆயிரம் நல்ல வார்த்தைகளால் அர்ச்சனை பண்ணியவள்…
"வெல்கம் சார்" என நிமிர்ந்து பார்த்தவளின் கண்களோ அனலை கக்கியது.. "இவன் எங்கே இங்கே.. பொறுக்கி" என கடுகடுத்த முகத்துடன்.. வேண்டாவெறுப்பாக அவன் கையில் பொக்கையை திணித்தவளின் கைகளை வருடிவிட்டான் எதிரில் நின்றிருந்தவன்.. பட்டென கையை உதறியவள் வேகமாக உள்ளே நுழைய.. அவளை தொடர்ந்து உள்ளே நுழைந்தான் நிகரிலன்..
நாகர்கோவில் ஊரின் சட்ட, ஒழுங்கினை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் ஏசிபி..நிகரிலன்.. மேடையில் அவனை வரவேற்று, சில கலை நிகழ்ச்சிகளும், வீர விளையாட்டுகளும் நடைபெற்றது.. நிகரிலனை பேச அழைக்க.. எந்தவித பந்தா இல்லாமல் எழுந்து நின்றவன்.. ஆயிரம் பேரின் மத்தியில் ஒருத்தியை மட்டுமே பார்வையால் விழுங்கி, கண்களாலேயே கபளீகரம் செய்து கொண்டிருந்தான்..
மைக்கின் முன்னால் நின்றவன்.. காலேஜை பற்றியும் அதன் சிறப்பை பற்றியும் ஓரீரு வார்த்தைகள் பேசியவன்.. உரையாடலை முடிக்கும் வேளையில் "மிஸ்ஸஸ்.தூரிகா" என கம்பீரமாக ஒலித்த வார்த்தையில் ஆடிட்டோரியமே ஒரு நிமிடம் நிசப்தமாகியது… அனைவரின் விழிகளும் ஒருத்தியை நோக்க… அவளோ ஸ்டேஜில் கம்பீரமாக நின்றவனை முறைத்துக் கொண்டிருந்தாள்…
கண்களில் அனல் கக்க பார்த்தவள் மெதுவாக ஸ்டேஜை நோக்கி செல்ல.. சிறிது தயக்கமும், அனைவரையும் எப்படி எதிர்கொள்வோம் என்கிற பயத்துடன் படபடப்பாய் கீழுதட்டை அழுந்தப் பற்றிக் கொள்ள.. அது யார் கண்ணில் சிக்கியதோ.. ஆயிரம் பேர்க்கு மத்தியில் நிற்கும் அவனின் கண்களில் தப்பாமல் சிக்கியது…
அவள் இதழ்களை தாபத்துடன் பார்த்து எச்சில் முழுங்கியவன்.. "கொல்லுறாளே" என முணுமுணுத்தவாறே வெளியில் விரைப்பாக நின்றிருந்தான்..
இதழ்களை விட்டு மெல்ல கீழிறங்கியவனின் விழிகளோ அவளின் வெண்ணிற இடையில் தேங்கி நின்றது..
அவளின் இடுப்பை கிள்ளி விளையாட வேண்டும் என பரபரத்த கைகளை அடக்கி பின்னால் கட்டியவாறு நின்றவனின் பார்வையை நொடியில் கண்டுபிடித்தவள்..
"பொறுக்கி" என முணுமுணுக்க.. அவளின் இதழசைவில் புரிந்த கொண்டவனின் இதழ்களோ தன்னையும் மீறி மலர்ந்தது.. "வாடி பொறுக்கி என்ன பண்ணுவான்னு காட்டுறேன்" என மனதோடு நினைத்தவனின் பார்வை வஞ்சிக்கொடியின் மேல் அழுத்தமாக பதிந்தது…
தூரிகா மேடைக்கு வந்ததும்.. "வாங்க மிஸ்ஸஸ்.தூரிகா"... "மிஸ்ஸஸ்" தானே என்றதும்.. 'இல்லை' எனும் விதமாய் தலையாட்டியவள்..
"இல்லை சார் நான் மிஸ்.தூரிகா" என மிஸ்ஸில் அழுத்தம் கூட்டி சொல்லியவள் பற்களை நறநறவென கடித்தாள்..
"இந்த அரென்ஜ்மெண்ட் எல்லாம்ல நீங்க தான் பண்ணதா மேடம் சொன்னாங்க.. காங்கிராட்ஸ்" என கையை நீட்ட.. மரியாதைக்காகவது கை நீட்ட வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள்.. வேண்டா வெறுப்பாக நீட்டிய கையை.. அழகாக வருடிவிட்டவன்.. "ஸோ ஸாப்ட்" என நினைத்தவாறே அனைவரிடமும் விடைபெற்றான்..
அவன் சென்றதும் தான் நிம்மதியாக மூச்சு விட்டவள் ஆடிட்டோரியத்தை பார்க்க.. செல்லும் அவனை தான் அனைவரும் ஜொல்லு விட்டுக் கொண்டிருந்தனர். மானசா உள்பட..
வேகமாக மானசா அருகில் சென்றவள். அவள் கையில் கிள்ளிவிட.. "ஸ்ஸ்ஸ்.. ஏன்டி கிள்ளுன??" என கைகைளை தேய்த்தவாறே, வாசலையே பார்த்துக் கொண்டிருந்தவளை எரிச்சல் மீதூற பார்த்தவள்..
"ஹேய்ய்..லூசாடி நீ.. வெட்கமே இல்லாம சைட்டடிச்சிட்டு இருக்க? நீ ஒரு ப்ரொபஸர் அதை நியாபகத்துல வச்சிக்க?" என்றவளை ஒரு மார்க்கமாக பார்த்தவள்..
"நான் சைட்டடிச்சா உனக்கென்னடி.. ப்ரொபஸரா இருந்தா சைட்டிக்க கூடாதா?? அவரு அழகென்ன?? ஸ்டையிலென்ன? ஹைய்யோ கொல்லுறாருடி?" என புகழ்ந்தவாறே,
"இதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது.. நீதான் கடிவாளம் போட்ட குதிரை ஒரே மாதிரி பார்ப்ப.. எல்லாரும் அப்படி இருக்க முடியுமா??.. ஏன்டி இப்டி இருக்க? உனக்கு ஏதோ ஹார்மோன்ஸ் பிரச்சினைன்னு நினைக்கிறேன்" என்றவளின் பேச்சில் தன் கடந்த காலத்தை நினைத்தவளுக்கு சிறு வலி தோன்றியது…
எவ்வளவு சந்தோஷமாக இருந்த வாழ்க்கை இப்படி புயலடித்து ஓய்ந்ததை போல் இருப்பதை நினைத்து விரக்தியாக சிரித்தவள் வேகமாக வெளியேறி விட்டாள்..
சுசீந்திரம் காவல் நிலையத்தில் அனைவரும் பரபரப்பாய் ஓடி வேலை செய்ய.. அதற்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமில்லாமல் இன்ஸ்பெக்டர் சேரில் அமர்ந்து கால்களை தூக்கி டேபிளில் போட்டு அமர்ந்திருந்தான் நிகரிலன்…. அவன் இதழ்களோ,
ராமன் ஆண்டாலும்
ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே
நான்தான்டா என் மனசுக்கு ராஜா
வாங்குங்கடா வெள்ளியில் கூஜா
நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன்
கேக்குற வரத்தை கேட்டுக்கோடா
என தன் கம்பீரக்குரலில் பாடியவனின் முன்பாக இருவர் வந்து நின்றனர்..சற்று பம்மிய குரலில் "ஐயா" என்கவும், அதுவரை பாடிக்கொண்டிருந்தவன்… மெல்ல தலையை சரித்து பார்த்தான்.. கால்களை டேபிளில் இருந்து எடுக்காமல்..
"யாருடா அவன்?? ஸ்டேஷன்ல வந்து கொய்யா விக்கிறது" என்றவனை பார்த்து எதிரில் இருந்த இருவரும் பேந்த பேந்த முழித்தனர்..
"என்னல.. ஆளுக ரெண்டு பேரும் திருதிருன்னு முழிக்கிறீய.. என்ன களவாணித்தனம் பண்ணீக??" என்றவனின் முன்பு பம்மியவாறே,
"ஐயா" என்றதும் தான் சட்டென கால்களை எடுத்தவாறே எழுந்து நிமிர்ந்து நின்றவனின் தோற்றத்தில் இருவரும் மிரண்டு நின்றனர்…
அலைஅலையான கேசத்தில் இருக்க வேண்டிய தொப்பியோ டேபிளின் ஓரத்தில் இருந்தது.. கஞ்சிப் போட்டு அயர்ன் பண்ணி சிறு கசங்கல் இல்லாமல் இருக்க வேண்டிய சட்டையோ, ஆங்காங்கே கசங்கல்களுடன்.. சட்டையின் முன் இரண்டு பட்டன்கள் திறந்து விடப்பட்டிருந்தது…
ஆனால் அவனின் பார்வையோ தீர்ககமாக இருந்தது.. எதிரில் இருப்பவர்களை முறைத்துப் பார்த்தால் போதும் எவனுக்கும் எதிரில் நிற்கும் தைரியம் இருக்காது..
"என்னல சைட் அடிக்கீறியளா??" என்றவனின் பதிலில் இருவரும் வலது இடது பக்கமாய் தலையாட்டியவர்கள் எரிச்சலுடன் பார்த்தான்.
"மாணிக்கம் சொன்னான்.. இதுல உங்க கமிஷன் இருக்கு சார்" என்றவர்களின் கையிலிருந்த பையை புடுங்கியவன் அதிலிருந்த ஒரு கட்டு பணத்தை எடுத்து வாசம் பிடித்தவாறே "ம்ம்ம்… வேலை முடிஞ்சிடும்னு போய் சொல்லு" என கர்ஜித்தவனின் குரலில ஓடியே விட்டனர்..
காவலனாய் இருக்க வேண்டியவன் கள்வனாய் மாறி நின்றான்..
சுசீந்திரம் ஸ்டேஷனாக பரபரபபாக செயல்பட்டுக் கொண்டிருந்தது அது வேலையின் காரணமாக என்று நினைத்தால் அது தவறு.. ஸ்டேஷனின் வேலை பார்க்கும் ஒரு போலீஸுக்கு கல்யாணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது அதற்கான ட்ரீட் தான் இங்கு நடைபெறுகிறது..
பிரியாணி பார்சலை அவனிடம் நீட்டியதும் வாங்கி டேபிளில் வைத்தவன்.. பிரிப்பதற்கு முன்பாக போன் அடிக்கும் சத்தத்தில் கலைந்தவன் போனை பார்க்க போன் ஸ்கீரினில் அவனை அணைத்தபடி நின்றிருந்தவளை பார்க்க இதழோரம் சிறு புன்னகை தோன்றியது..
போனை எடுத்து அட்டென்ட் பண்ணியவன் "தக்காளி" என சொன்னதும் தான் தாமதம்
"மாமா" என சிணுங்கியவாறே, "என்னை தக்காளின்னு கூப்பிடாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்" என கோபத்துடன் முடித்தாள்…
"தக்காளினு சொல்ல வேண்டாம்னா பிக்காளினு சொல்லவால" என்றவனை போனிலேயே முறைத்தவள்..
"நீ என்னை எந்த பேரும் சொல்லி கூப்பிட வேண்டாம்"
"மாம்ஸே" என குழைந்த குரலில் கூப்பிட்டவளை கண்டு ஏனோ மனதில் மெல்லிய சாரல் அடித்தது.. அவனிடம் அவளுக்கு ஏதாவது காரியம் நடக்க வேண்டுமென்றால் மட்டுமே.. இந்த பெயர் வரும். இல்லையென்றால் இவனை மாமா என்றே அழைப்பாள்..
"என்னடி இழுவை ரொம்ப ஜாஸ்தியா இருக்கு.. ரொம்ப பெரிய காரியமோ??" என அவளை அறிந்தவனாய் கேட்க.
"இதுக்குத் தான் என் மாம்ஸு பக்கத்துலேயே இருக்கணும்ங்கிறது.. வீட்டுலேயும் இருக்குது பாருங்க தத்திங்க.. நான் என்ன சொல்ல வர்றேன்னு கூட கேட்காம.. லபோதிபோன்னு கத்திக்கிட்டு" என கோபத்தில் கத்தியவாறே, "மாம்ஸ்ஸு" என.மறுபடியும் இழுக்க.
"என்னடி வேணும் ஏன் இப்படி உயிரை எடுத்துக்கிட்டு இருக்க? பிரியாணியை திங்க விடுடி?" என சிடுசிடுத்தவனை கண்டு உதட்டை சுழித்தவள்..
"வர வர நீ என்னை கண்டுக்கிறதே இல்லை.. டுயூட்டி டுயூட்டின்னே சுத்துறே.. போ நான் பேச மாட்டேன்" என போனை கட் பண்ண போனவளை ஆயிரம் சமாதானம் சொல்லி நிறுத்தியிருந்தான்..
"ஆமா அக்கா, அம்மாச்சியெல்லாம் எங்கேடா??"
"சொல்ல மறந்துட்டேன் மாம்ஸு… உனக்கு தெரியாம நம்ம வுட்டுல ஒரு சிதம்பர ரகசியம் ஓடுது" என்றவளை புரியாமல் பார்த்தான்.
"சிதம்பர ரகசியமா. நம்ம வூட்டுலையா.. என்ன உளறுற"
"நான் உளறலை மாமா.. உண்மைதான்.. ஐ திங்க்.. நீ அப்பாவாக போறேன்னு நினைக்கிறேன்" என்றவளின் வார்த்தையில் அதுவரை சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தவனின் இதயமும் தன இதயத்துடிப்பை நிறுத்தியது போல் உணர்ந்தான்..
"என்னடி சொல்ற??" என்றவனின் குரல் தழுதழுத்து தொண்டைக்குழிக்குள் இருந்து வார்த்தைகள் சிக்கித் தவித்தது..
"ஆமா மாம்ஸு… அக்காவுக்கு நாள் தள்ளியிருக்குன்னு தான் அம்மாவும் அப்பாவும் ஹாஸ்பிட்டல் கூப்பிட்டு போயிருக்காங்க" என்றவளின் வார்த்தையில் இதழில் ஒரு கசந்த புன்னகை படர.. ஏனோ அதற்கு மேல் பேசமுடியுமென்று தோன்றவில்லை..
"நான் வைக்கிறேன்டா செல்லக்குட்டி" என்றவனின் கலங்கிய குரலை கேட்டவளுக்கு கண்ணீர் துளிகள் வழிந்தது.. "மாம்ம்ஸு" என்பதற்கு முன்பே போனை கட் பண்ணியிருந்தான் நிகரிலன்..
போனை அணைத்து வைத்தவனின் மனமெல்லாம் ரணம் ரணம் மட்டுமே.. தாங்க முடியா வலியையும் மறைத்துக் கொண்டு வாழ்வதில் இவனுக்கு நிகர் இவனே..
சிறிது நேரத்தில் அவனின் அக்கா மரகதவீணாவிடம் இருந்து போன் வர, உடனே எடுத்து பேச தோன்றாமல், இரண்டு மூன்று அழைப்புக்கு பிறகே எடுத்து காதில் வைத்தான்..
எடுத்த எடுப்பிலேயே "கண்ணாஆஆ… நீ அப்பாவாக போறடா.. இப்போ தான் ஹாஸ்பாட்டல் போய் செக்கப் பண்ணிட்டு வந்தோம்.. இரு உன் பொண்டாட்டி கிட்ட கொடுக்கிறேன்" என தன்னருகில் நின்றிருந்தவளின் கையில் போனை திணித்தவள் நாகரீகமாக வெளியேறிட விட.. சில நிமிடங்கள் கழித்தும் இருவரிடையே மௌனம் மட்டுமே நிலைத்தது.. அவளின் மௌனம் கூட அவனை வதைத்து கொன்றது..
"இப்பக்கூட என்கிட்ட பேச உனக்கு மனசு வரலல்ல டி.. இதை விட ஒரு ஆம்பிளைக்கு வேற என்னடி செருப்படி வேணும்… என் குழந்தையை சுமக்குறது கூட அசிங்கம்னு நினைக்கிறீயா??" என சொல்லி முடிப்பதற்குள்
"மாமாஆஆஆ" என தன்னையும் மீறி அதிர்ந்து வந்த வார்த்தைகளில் கண்களில் கண்ணீருடன் இதழ்களில் கசந்த புன்னகையுடன் நின்றவனின் மனநினைவுகளில் வந்து நின்றாள் நிகரிலனின் ரோசாப்பூ..
"ஏன் மாமா என்னை வதைக்கிற??"
"யாரு நான் வதைக்கிறேனா?? நல்லா யோசிச்சி சொல்லு ரோசாப்பூ.. வதைக்கிறது நானா இல்லை நீயான்னு தெரியும்.. என்னை ஒவ்வொரு நிமிஷமும் சித்ரவதை பண்ணி கொல்லாதடி.. தக்காளிக்கு எம்மேல இருக்கிற பாசம் கூட என்மேல உனக்கு இருக்காடி" என கடுமையாக சாடிவிட்டு போனை வைத்தவனின் மனமெங்கிலும் ரணம் மட்டுமே..
ரணமாய் மன்னவனின் மனம் இருக்க!!
மாலையிட்ட மங்கையவளோ ஒற்றை வார்த்தையில் உயிர் கொன்றிருக்க..
அவர்களின் உறவுக்கு சாட்சியாய் ஓரூயிர் கருவறையில் வாசம் கொண்டு உலகத்தினை உலாவர தவித்து கொண்டிருக்க..
உயிர் கொன்றவளை உயிராய் நேசிப்பவன்
யாருக்கும் நிகரில்லாதவன்
இவனே நிகரிலன்..
தூரிகா 1
சலசலவென மழை பெய்து கொண்டிருக்க சேலையை தூக்கி நடந்தவளின் முகத்திலோ அப்பட்டமான எரிச்சலை காட்டியது.. "ச்சே. இந்த மழை இப்போ தான் பெய்யணுமா??.. இர்ரிட்டேட்டிங்" என புலம்பியவாறே வந்தவளை டீக்கடையில் நின்றிருந்த இரு கண்கள் விழுங்கும் பார்வையில் பார்த்ததை அறியாமலே காலேஜ் காம்பஸிற்குள் உள்ளே நுழைந்தாள்…
காலேஜிற்குள்ளே நுழையும் போதே மழை விட்டிருந்தது.. சற்று வெயிலுடன் மிதமான காற்றும் வீச, குளிரோ உடலை தழுவ.. "ஊப்ப்ப" என தன் மூச்சுக்காற்றை வெளியிட்டவள்.. ஸ்டாஃப் ரூமிற்குள் உள்ளே நுழைந்தாள்..
உள்ளே நுழைந்தவளை எதிர்கொண்டது அவளுடன் வேலை செய்யும் மானசா… "என்ன மிஸ்.தூரிகா இப்டி தெப்பமா நனைஞ்சிட்டு வந்திருக்கீங்க??" என்றவளை சலிப்பாக பார்த்தவள்..
"எல்லாம் இந்த பிரின்சியால வந்தது.. இன்னைக்கு இந்த பங்க்ஸன் வைக்கலைன்னு யார் அழுதா??" என சிடுசிடுத்தவாறே பிரின்சிபால் அறையை நோக்கி சென்றாள்..
அங்கு நுழைந்தவளை எதிர்கொண்டது "தான் தான் உலகத்திலேயே பேரழகி என்பதை காட்டுவதற்காக 2,3 கோட்டிங் அடித்து தன்னுடைய 35 வயதை குறைப்பதற்காக பெரும் போராட்டம் நடத்தி முதிர் கன்னிகை ஆனந்தி.. ***** கல்லூரியின் தாளாளர்..
"குட்மார்னிங் மேம்" என சொல்லி முடிப்பதற்குள்..
"மிஸ்..தூரிகா இது தான் காலேஜ் வர்ற டைம்மா.. பத்து நிமிஷம் லேட்.. ஓஹ்.. ஹாட்.. இப்போ நான் என்ன பண்ணுவேன்.. சீப் கெஸ்ட் ஆன் த வே தூரிகா" என புலம்பிக்கொண்டு சென்றவரை பார்த்து உதட்டை சுழித்தவள்..
"ஏதோ அரை வயசுக்கிழவன் வர போறான் போல.. அதான் மேடம் தூக்கல் மேக்கப்புல போகுது" என முணு முணுத்தவாறே வெளியே சென்றவள்.. அங்கு காம்பவுண்டில் நின்றிருந்த போலீஸ் போலீஸ் வாகனத்தை கண்கள் இடுங்க பார்த்தாள்..
"போலீஸ் ஜீப் வந்திருக்கு.. என்னவா இருக்கும்??" என யோசனையுடன் ஆடிட்டோரியத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தவளை, பிரின்சியின் "மிஸ்..தூரிகா" என்ற குரலில் திரும்பியவள்.. ஆனந்தியை நோக்கி வேண்டா வெறுப்பாக சென்றாள்.. "சொல்லுங்க மேடம்" என்றவளின் கையில் அழகிய சிகப்பு நிற பொக்கையை கொடுத்தவர்.. "இதை சார்க்கு கொடுத்து வெல்கம் பண்ணு" என்றவரை உள்ளுக்குள் ஆயிரம் நல்ல வார்த்தைகளால் அர்ச்சனை பண்ணியவள்…
"வெல்கம் சார்" என நிமிர்ந்து பார்த்தவளின் கண்களோ அனலை கக்கியது.. "இவன் எங்கே இங்கே.. பொறுக்கி" என கடுகடுத்த முகத்துடன்.. வேண்டாவெறுப்பாக அவன் கையில் பொக்கையை திணித்தவளின் கைகளை வருடிவிட்டான் எதிரில் நின்றிருந்தவன்.. பட்டென கையை உதறியவள் வேகமாக உள்ளே நுழைய.. அவளை தொடர்ந்து உள்ளே நுழைந்தான் நிகரிலன்..
நாகர்கோவில் ஊரின் சட்ட, ஒழுங்கினை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் ஏசிபி..நிகரிலன்.. மேடையில் அவனை வரவேற்று, சில கலை நிகழ்ச்சிகளும், வீர விளையாட்டுகளும் நடைபெற்றது.. நிகரிலனை பேச அழைக்க.. எந்தவித பந்தா இல்லாமல் எழுந்து நின்றவன்.. ஆயிரம் பேரின் மத்தியில் ஒருத்தியை மட்டுமே பார்வையால் விழுங்கி, கண்களாலேயே கபளீகரம் செய்து கொண்டிருந்தான்..
மைக்கின் முன்னால் நின்றவன்.. காலேஜை பற்றியும் அதன் சிறப்பை பற்றியும் ஓரீரு வார்த்தைகள் பேசியவன்.. உரையாடலை முடிக்கும் வேளையில் "மிஸ்ஸஸ்.தூரிகா" என கம்பீரமாக ஒலித்த வார்த்தையில் ஆடிட்டோரியமே ஒரு நிமிடம் நிசப்தமாகியது… அனைவரின் விழிகளும் ஒருத்தியை நோக்க… அவளோ ஸ்டேஜில் கம்பீரமாக நின்றவனை முறைத்துக் கொண்டிருந்தாள்…
கண்களில் அனல் கக்க பார்த்தவள் மெதுவாக ஸ்டேஜை நோக்கி செல்ல.. சிறிது தயக்கமும், அனைவரையும் எப்படி எதிர்கொள்வோம் என்கிற பயத்துடன் படபடப்பாய் கீழுதட்டை அழுந்தப் பற்றிக் கொள்ள.. அது யார் கண்ணில் சிக்கியதோ.. ஆயிரம் பேர்க்கு மத்தியில் நிற்கும் அவனின் கண்களில் தப்பாமல் சிக்கியது…
அவள் இதழ்களை தாபத்துடன் பார்த்து எச்சில் முழுங்கியவன்.. "கொல்லுறாளே" என முணுமுணுத்தவாறே வெளியில் விரைப்பாக நின்றிருந்தான்..
இதழ்களை விட்டு மெல்ல கீழிறங்கியவனின் விழிகளோ அவளின் வெண்ணிற இடையில் தேங்கி நின்றது..
அவளின் இடுப்பை கிள்ளி விளையாட வேண்டும் என பரபரத்த கைகளை அடக்கி பின்னால் கட்டியவாறு நின்றவனின் பார்வையை நொடியில் கண்டுபிடித்தவள்..
"பொறுக்கி" என முணுமுணுக்க.. அவளின் இதழசைவில் புரிந்த கொண்டவனின் இதழ்களோ தன்னையும் மீறி மலர்ந்தது.. "வாடி பொறுக்கி என்ன பண்ணுவான்னு காட்டுறேன்" என மனதோடு நினைத்தவனின் பார்வை வஞ்சிக்கொடியின் மேல் அழுத்தமாக பதிந்தது…
தூரிகா மேடைக்கு வந்ததும்.. "வாங்க மிஸ்ஸஸ்.தூரிகா"... "மிஸ்ஸஸ்" தானே என்றதும்.. 'இல்லை' எனும் விதமாய் தலையாட்டியவள்..
"இல்லை சார் நான் மிஸ்.தூரிகா" என மிஸ்ஸில் அழுத்தம் கூட்டி சொல்லியவள் பற்களை நறநறவென கடித்தாள்..
"இந்த அரென்ஜ்மெண்ட் எல்லாம்ல நீங்க தான் பண்ணதா மேடம் சொன்னாங்க.. காங்கிராட்ஸ்" என கையை நீட்ட.. மரியாதைக்காகவது கை நீட்ட வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள்.. வேண்டா வெறுப்பாக நீட்டிய கையை.. அழகாக வருடிவிட்டவன்.. "ஸோ ஸாப்ட்" என நினைத்தவாறே அனைவரிடமும் விடைபெற்றான்..
அவன் சென்றதும் தான் நிம்மதியாக மூச்சு விட்டவள் ஆடிட்டோரியத்தை பார்க்க.. செல்லும் அவனை தான் அனைவரும் ஜொல்லு விட்டுக் கொண்டிருந்தனர். மானசா உள்பட..
வேகமாக மானசா அருகில் சென்றவள். அவள் கையில் கிள்ளிவிட.. "ஸ்ஸ்ஸ்.. ஏன்டி கிள்ளுன??" என கைகைளை தேய்த்தவாறே, வாசலையே பார்த்துக் கொண்டிருந்தவளை எரிச்சல் மீதூற பார்த்தவள்..
"ஹேய்ய்..லூசாடி நீ.. வெட்கமே இல்லாம சைட்டடிச்சிட்டு இருக்க? நீ ஒரு ப்ரொபஸர் அதை நியாபகத்துல வச்சிக்க?" என்றவளை ஒரு மார்க்கமாக பார்த்தவள்..
"நான் சைட்டடிச்சா உனக்கென்னடி.. ப்ரொபஸரா இருந்தா சைட்டிக்க கூடாதா?? அவரு அழகென்ன?? ஸ்டையிலென்ன? ஹைய்யோ கொல்லுறாருடி?" என புகழ்ந்தவாறே,
"இதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது.. நீதான் கடிவாளம் போட்ட குதிரை ஒரே மாதிரி பார்ப்ப.. எல்லாரும் அப்படி இருக்க முடியுமா??.. ஏன்டி இப்டி இருக்க? உனக்கு ஏதோ ஹார்மோன்ஸ் பிரச்சினைன்னு நினைக்கிறேன்" என்றவளின் பேச்சில் தன் கடந்த காலத்தை நினைத்தவளுக்கு சிறு வலி தோன்றியது…
எவ்வளவு சந்தோஷமாக இருந்த வாழ்க்கை இப்படி புயலடித்து ஓய்ந்ததை போல் இருப்பதை நினைத்து விரக்தியாக சிரித்தவள் வேகமாக வெளியேறி விட்டாள்..
சுசீந்திரம் காவல் நிலையத்தில் அனைவரும் பரபரப்பாய் ஓடி வேலை செய்ய.. அதற்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமில்லாமல் இன்ஸ்பெக்டர் சேரில் அமர்ந்து கால்களை தூக்கி டேபிளில் போட்டு அமர்ந்திருந்தான் நிகரிலன்…. அவன் இதழ்களோ,
ராமன் ஆண்டாலும்
ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே
நான்தான்டா என் மனசுக்கு ராஜா
வாங்குங்கடா வெள்ளியில் கூஜா
நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன்
கேக்குற வரத்தை கேட்டுக்கோடா
என தன் கம்பீரக்குரலில் பாடியவனின் முன்பாக இருவர் வந்து நின்றனர்..சற்று பம்மிய குரலில் "ஐயா" என்கவும், அதுவரை பாடிக்கொண்டிருந்தவன்… மெல்ல தலையை சரித்து பார்த்தான்.. கால்களை டேபிளில் இருந்து எடுக்காமல்..
"யாருடா அவன்?? ஸ்டேஷன்ல வந்து கொய்யா விக்கிறது" என்றவனை பார்த்து எதிரில் இருந்த இருவரும் பேந்த பேந்த முழித்தனர்..
"என்னல.. ஆளுக ரெண்டு பேரும் திருதிருன்னு முழிக்கிறீய.. என்ன களவாணித்தனம் பண்ணீக??" என்றவனின் முன்பு பம்மியவாறே,
"ஐயா" என்றதும் தான் சட்டென கால்களை எடுத்தவாறே எழுந்து நிமிர்ந்து நின்றவனின் தோற்றத்தில் இருவரும் மிரண்டு நின்றனர்…
அலைஅலையான கேசத்தில் இருக்க வேண்டிய தொப்பியோ டேபிளின் ஓரத்தில் இருந்தது.. கஞ்சிப் போட்டு அயர்ன் பண்ணி சிறு கசங்கல் இல்லாமல் இருக்க வேண்டிய சட்டையோ, ஆங்காங்கே கசங்கல்களுடன்.. சட்டையின் முன் இரண்டு பட்டன்கள் திறந்து விடப்பட்டிருந்தது…
ஆனால் அவனின் பார்வையோ தீர்ககமாக இருந்தது.. எதிரில் இருப்பவர்களை முறைத்துப் பார்த்தால் போதும் எவனுக்கும் எதிரில் நிற்கும் தைரியம் இருக்காது..
"என்னல சைட் அடிக்கீறியளா??" என்றவனின் பதிலில் இருவரும் வலது இடது பக்கமாய் தலையாட்டியவர்கள் எரிச்சலுடன் பார்த்தான்.
"மாணிக்கம் சொன்னான்.. இதுல உங்க கமிஷன் இருக்கு சார்" என்றவர்களின் கையிலிருந்த பையை புடுங்கியவன் அதிலிருந்த ஒரு கட்டு பணத்தை எடுத்து வாசம் பிடித்தவாறே "ம்ம்ம்… வேலை முடிஞ்சிடும்னு போய் சொல்லு" என கர்ஜித்தவனின் குரலில ஓடியே விட்டனர்..
காவலனாய் இருக்க வேண்டியவன் கள்வனாய் மாறி நின்றான்..
சுசீந்திரம் ஸ்டேஷனாக பரபரபபாக செயல்பட்டுக் கொண்டிருந்தது அது வேலையின் காரணமாக என்று நினைத்தால் அது தவறு.. ஸ்டேஷனின் வேலை பார்க்கும் ஒரு போலீஸுக்கு கல்யாணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது அதற்கான ட்ரீட் தான் இங்கு நடைபெறுகிறது..
பிரியாணி பார்சலை அவனிடம் நீட்டியதும் வாங்கி டேபிளில் வைத்தவன்.. பிரிப்பதற்கு முன்பாக போன் அடிக்கும் சத்தத்தில் கலைந்தவன் போனை பார்க்க போன் ஸ்கீரினில் அவனை அணைத்தபடி நின்றிருந்தவளை பார்க்க இதழோரம் சிறு புன்னகை தோன்றியது..
போனை எடுத்து அட்டென்ட் பண்ணியவன் "தக்காளி" என சொன்னதும் தான் தாமதம்
"மாமா" என சிணுங்கியவாறே, "என்னை தக்காளின்னு கூப்பிடாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்" என கோபத்துடன் முடித்தாள்…
"தக்காளினு சொல்ல வேண்டாம்னா பிக்காளினு சொல்லவால" என்றவனை போனிலேயே முறைத்தவள்..
"நீ என்னை எந்த பேரும் சொல்லி கூப்பிட வேண்டாம்"
"மாம்ஸே" என குழைந்த குரலில் கூப்பிட்டவளை கண்டு ஏனோ மனதில் மெல்லிய சாரல் அடித்தது.. அவனிடம் அவளுக்கு ஏதாவது காரியம் நடக்க வேண்டுமென்றால் மட்டுமே.. இந்த பெயர் வரும். இல்லையென்றால் இவனை மாமா என்றே அழைப்பாள்..
"என்னடி இழுவை ரொம்ப ஜாஸ்தியா இருக்கு.. ரொம்ப பெரிய காரியமோ??" என அவளை அறிந்தவனாய் கேட்க.
"இதுக்குத் தான் என் மாம்ஸு பக்கத்துலேயே இருக்கணும்ங்கிறது.. வீட்டுலேயும் இருக்குது பாருங்க தத்திங்க.. நான் என்ன சொல்ல வர்றேன்னு கூட கேட்காம.. லபோதிபோன்னு கத்திக்கிட்டு" என கோபத்தில் கத்தியவாறே, "மாம்ஸ்ஸு" என.மறுபடியும் இழுக்க.
"என்னடி வேணும் ஏன் இப்படி உயிரை எடுத்துக்கிட்டு இருக்க? பிரியாணியை திங்க விடுடி?" என சிடுசிடுத்தவனை கண்டு உதட்டை சுழித்தவள்..
"வர வர நீ என்னை கண்டுக்கிறதே இல்லை.. டுயூட்டி டுயூட்டின்னே சுத்துறே.. போ நான் பேச மாட்டேன்" என போனை கட் பண்ண போனவளை ஆயிரம் சமாதானம் சொல்லி நிறுத்தியிருந்தான்..
"ஆமா அக்கா, அம்மாச்சியெல்லாம் எங்கேடா??"
"சொல்ல மறந்துட்டேன் மாம்ஸு… உனக்கு தெரியாம நம்ம வுட்டுல ஒரு சிதம்பர ரகசியம் ஓடுது" என்றவளை புரியாமல் பார்த்தான்.
"சிதம்பர ரகசியமா. நம்ம வூட்டுலையா.. என்ன உளறுற"
"நான் உளறலை மாமா.. உண்மைதான்.. ஐ திங்க்.. நீ அப்பாவாக போறேன்னு நினைக்கிறேன்" என்றவளின் வார்த்தையில் அதுவரை சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தவனின் இதயமும் தன இதயத்துடிப்பை நிறுத்தியது போல் உணர்ந்தான்..
"என்னடி சொல்ற??" என்றவனின் குரல் தழுதழுத்து தொண்டைக்குழிக்குள் இருந்து வார்த்தைகள் சிக்கித் தவித்தது..
"ஆமா மாம்ஸு… அக்காவுக்கு நாள் தள்ளியிருக்குன்னு தான் அம்மாவும் அப்பாவும் ஹாஸ்பிட்டல் கூப்பிட்டு போயிருக்காங்க" என்றவளின் வார்த்தையில் இதழில் ஒரு கசந்த புன்னகை படர.. ஏனோ அதற்கு மேல் பேசமுடியுமென்று தோன்றவில்லை..
"நான் வைக்கிறேன்டா செல்லக்குட்டி" என்றவனின் கலங்கிய குரலை கேட்டவளுக்கு கண்ணீர் துளிகள் வழிந்தது.. "மாம்ம்ஸு" என்பதற்கு முன்பே போனை கட் பண்ணியிருந்தான் நிகரிலன்..
போனை அணைத்து வைத்தவனின் மனமெல்லாம் ரணம் ரணம் மட்டுமே.. தாங்க முடியா வலியையும் மறைத்துக் கொண்டு வாழ்வதில் இவனுக்கு நிகர் இவனே..
சிறிது நேரத்தில் அவனின் அக்கா மரகதவீணாவிடம் இருந்து போன் வர, உடனே எடுத்து பேச தோன்றாமல், இரண்டு மூன்று அழைப்புக்கு பிறகே எடுத்து காதில் வைத்தான்..
எடுத்த எடுப்பிலேயே "கண்ணாஆஆ… நீ அப்பாவாக போறடா.. இப்போ தான் ஹாஸ்பாட்டல் போய் செக்கப் பண்ணிட்டு வந்தோம்.. இரு உன் பொண்டாட்டி கிட்ட கொடுக்கிறேன்" என தன்னருகில் நின்றிருந்தவளின் கையில் போனை திணித்தவள் நாகரீகமாக வெளியேறிட விட.. சில நிமிடங்கள் கழித்தும் இருவரிடையே மௌனம் மட்டுமே நிலைத்தது.. அவளின் மௌனம் கூட அவனை வதைத்து கொன்றது..
"இப்பக்கூட என்கிட்ட பேச உனக்கு மனசு வரலல்ல டி.. இதை விட ஒரு ஆம்பிளைக்கு வேற என்னடி செருப்படி வேணும்… என் குழந்தையை சுமக்குறது கூட அசிங்கம்னு நினைக்கிறீயா??" என சொல்லி முடிப்பதற்குள்
"மாமாஆஆஆ" என தன்னையும் மீறி அதிர்ந்து வந்த வார்த்தைகளில் கண்களில் கண்ணீருடன் இதழ்களில் கசந்த புன்னகையுடன் நின்றவனின் மனநினைவுகளில் வந்து நின்றாள் நிகரிலனின் ரோசாப்பூ..
"ஏன் மாமா என்னை வதைக்கிற??"
"யாரு நான் வதைக்கிறேனா?? நல்லா யோசிச்சி சொல்லு ரோசாப்பூ.. வதைக்கிறது நானா இல்லை நீயான்னு தெரியும்.. என்னை ஒவ்வொரு நிமிஷமும் சித்ரவதை பண்ணி கொல்லாதடி.. தக்காளிக்கு எம்மேல இருக்கிற பாசம் கூட என்மேல உனக்கு இருக்காடி" என கடுமையாக சாடிவிட்டு போனை வைத்தவனின் மனமெங்கிலும் ரணம் மட்டுமே..
ரணமாய் மன்னவனின் மனம் இருக்க!!
மாலையிட்ட மங்கையவளோ ஒற்றை வார்த்தையில் உயிர் கொன்றிருக்க..
அவர்களின் உறவுக்கு சாட்சியாய் ஓரூயிர் கருவறையில் வாசம் கொண்டு உலகத்தினை உலாவர தவித்து கொண்டிருக்க..
உயிர் கொன்றவளை உயிராய் நேசிப்பவன்
யாருக்கும் நிகரில்லாதவன்
இவனே நிகரிலன்..