ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என் வாழ்வின் வண்ணம் நீயே!! - கதை திரி

Status
Not open for further replies.

aadrika

Well-known member
Wonderland writer
என் வாழ்வின் வண்ணம் நீயே!! - கதை திரி
 

aadrika

Well-known member
Wonderland writer
என் கதை ரௌத்திரம் கொள் ரதியே கதை அப்டேட் அப்போ அப்போ போஸ்ட் பண்ணிருவேன் சகோஸ்....
என் வாழ்வின் வண்ணம் நீயே கதை டெய்லி ud வரும்...
உங்க ஆதரவை எதிர்ப்பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.... ?
 

aadrika

Well-known member
Wonderland writer
என் வாழ்வின் வண்ணம்
நீயே !!!





அத்தியாயம் - 1…..



பறவைகளின் சத்தமும் அருவியின் சத்தமும் அந்த இடத்தை நிறைந்து இருக்க

சுற்றி மரங்கள் இருக்க நடுவே இருந்த நீர்வீழ்ச்சியை பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தவளின் கையை யாரோ இழுக்க

பேலன்ஸ் இல்லாமல் திரும்பி இழுத்தவனின் நெஞ்சில் மொத

"யாரு இது இவ்ளோ ஹார்ஷா இழுத்தது "என்று நினைத்தவள்

அவனின் முகத்தை பார்க்க நிமிர அவளின் கன்னத்தை தாங்கியவன் அவளின் கண்களை பார்த்துக் கொண்டே அவளின் இதழில் ஆழமாக முத்தமிட

முத்தமிடுவான் என்று எதிர்ப்பார்க்காதவள் அதிர்ந்து போய் பார்த்தது முத்தத்தில் கிறங்கிக் கொண்டு இருந்த நில நிற கண்களை தான்….

அவனின் நிலநிற கண்கள் அவளை கடலுக்குள் இழுப்பது போல மாயவளைக்குள் இழுத்து சென்றது...

அவனின் முகம் அவளுக்கு தெரியவில்லை அவனிடம் இருந்து விலகி அவனின் முகத்தை பார்த்து விட வேண்டும் என்று நினைத்து அவனிடம் இருந்து அவள் விலக பார்க்க

அவனோ அவளின் விலகலை முறியடித்தவன் மீண்டும் மீண்டும் அவளின் இதழில் முத்தமிட்டுக் கொண்டே இருக்க

ஒரு கட்டத்தில் மூச்சுவிட முடியாமல் தவித்தவளை வேறு வழி இல்லாமல் அவளிடம் இருந்து விலக

ஆழ்ந்து மூச்சை இழுத்து விட்டவள் அவன் முகத்தை பார்க்க முயல

அப்போது அவளின் காதருகில் ஏதோ சத்தம் கேட்ட

முதலில் அதை சட்டை செய்யாதவள் அவளின் முகத்தை பார்க்க அதற்குள் மீண்டும் மீண்டும் அந்த சத்தம் அவள் அருகில் கேட்கவும்

எழுந்து பார்த்தால் அலாரம் அடித்துக் கொண்டு இருந்தது

அதை எடுத்து ஆப் செய்தவள் ஒருமுறை அவள் இருந்த அறையை சுத்திபார்த்து " இன்னைக்கும் அதே கனவா ச்சே இன்னைக்கும் அவன் முகத்தை பார்க்க முடியல "என்று புலம்பியவள்

"யாரா இருப்பான் தினமும் கனவுல வரான் ஆனா முகத்தை காட்ட மாட்டேங்கறான் "என்று எண்ணியவளுக்கு அவனின் கண்கள் மட்டுமே நினைவில் இருந்தது…..

அவளின் கனவில் வந்தவனை நினைத்துக் கொண்டு இருந்தவளை மற்றொரு அலாரம் கலைக்க

அதை எடுத்து ஆப் செய்தவள் நேரத்தை பார்க்க

அது ஏழு மணியை தாண்டி இருந்தது

அதை பார்த்தவள் "போச்சு லேட் ஆகிருச்சு சீக்கரம் கிழ போகணும் இல்ல ஹில்டர் என்ன தொங்க விட்ரும் "என்று நினைத்து வேகமாக குளிக்க சென்றாள் சக்தி...

நம் கதையின் நாயகி ..


சக்தி சராசரி பெண் போல ஒல்லியும் இல்லாமல் பூசினார் போலும் இல்லாமல் இருப்பவள்…

அவளின் வாய் பேசுவதை விட அவளின் கண்கள் தான் அதிகம் பேசும்…

அவளிடம் பேசுபவர்கள் எல்லாரும் அவளின் கண்களை தான் பார்ப்பார்கள்….

சட்ரென்று அனைவரிடமும் நட்பாகி விடுவாள்….

அவள் ஒரு புரியாத புதிர் போல

என்ன நினைக்கிறாள் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது ...

குளித்து முடித்து கீழே சென்றவளை வரவேற்றது அவளின் அத்தை ராதையின் பாடல் தான்..



" துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில்

பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும்

நிஷ்டையும் கைகூடும் நிமலனருள்

கந்தர் சஷ்டி கவசம் தனை

அமரரிடர் தீர அமரம் புரிந்த

குமரனடி நெஞ்சே குறி…

சஷ்டியை நோக்கச் சரவண பவனார்

சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்

பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை

கீதம் பாடக் கிண்கிணி யாட "



என கண்மூடி பக்திமயமாக பாடிக் கொண்டு இருக்க

அவரின் குரலை ரசித்துக் கொண்டு இருந்தவளை

"க்கும் "என்று குரல் அவள் பின்னால் கேட்க

அது யார் என்று தெரிந்தவள் "போச்சு கரெக்ட்ஆ மாட்டிகிட்டேன் "என்று மனதில் நினைத்துக் கொண்டே அதை முகத்தில் காட்டிக் கொள்ளாமல்

திரும்பி பார்க்க

அங்கே அவளை முறைத்துக் கொண்டு இருந்த அகிலாண்டஸ்வரி இவளை பார்த்து விட்டு கடிகாரத்தை பார்க்க

"சிம்பாளிக்க நா லேட்டா வந்துட்டேன்னு சொல்லறாங்கலாம் "என்று மனதில் நினைத்து

வெளியில் ஒன்னும் தெரியாதவள் போல் முகத்தை பாவமாக வைத்துக் கொள்ள

"நேரம் என்ன இப்போ தான் வரியா பொட்டபுள்ளைங்க இப்படி இருந்தா வீடு வெளங்கிரும் "என்று திட்ட

அவர் பேச ஆரம்பித்தவுடன் "ஸ்டார்ட் பண்ணிட்டாங்களா "என்று நினைத்தவள்

"அப்படியே நேரமா எழுந்தா மட்டும் விண்வெளிக்கா போக போறேன் "என்று மனதுக்குள் கிண்டல் அடித்துக் கொண்டவள்

வெளியில் முகத்தை அப்பாவியாக வைத்துக் கொள்ள

இவளை திட்டிக் கொண்டு இருந்தவர் "தினமும் நா உன்னை திட்டிக் கிட்டு இருக்கேன் நீ எப்போவும் இப்டியே நின்னுகிட்டு இருக்க "என்று குறைப்பட்டு சொல்ல

"அதான் தெரியுதுல அப்புறம் எதுக்கு தினமும் சொல்லி எனர்ஜிய வேஸ்ட் பண்றாங்க"என்று நினைத்தவள்

வெளியில் "இனி நேரமா எழுந்தறேன் பாட்டி "என்று பவ்யமாக சொல்ல

அவள் சொன்னதை கேட்டு "சரி சரி போ "என்று சொல்ல

"விடு ஜூட் "என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டு

கிச்சன் செல்ல

பூஜையை முடித்த ராதை சக்தி அகிலாண்டஸ்வரியிடம் திட்டு வாங்கிக் கொண்டு இருப்பதை பார்த்து விட்டு

எப்படியும் காபி கேட்டு வருவாள் என்று தெரிந்து அவளுக்காக காபி போடவர்

அவள் வந்தவுடன் கையில் கொடுக்க

அதை வாங்கிக் கொண்டவள் "அத்தைனா அத்தை தான் "என்று அவளை செல்லம் கொஞ்சி விட்டு காபியை குடிக்க

அவள் செல்லம் கொஞ்சியதில் சிரித்தவர் அவளின் அழகை ஒரு நிமிடம் கண்ணில் நிரப்பிக் கொண்டு

"இன்னைக்கு என்ன சமைக்கட்டும் டா "என்று வாஞ்சையாக கேட்க

"பூரி பண்ணுங்க அத்தை சாப்பிடணும் போல இருக்கு "என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது

"ஏன் அவளுக்கு பிடிச்சதை தான் பண்ணுவீங்களா? "என்று கேட்டுக் கொண்டே அங்கு இருந்த சமையல் மேடையில் அமர்ந்து அருகில் இருந்த கேரடை கடித்துக் கொண்டே சாத்விகா கேட்க

அவளின் அருகில் வந்த சக்தி "அதெல்லாம் முடியாது அத்தை எப்போவும் எனக்கு பிடிச்சதை தான் செய்வாங்க "என்று அவளுக்கு போட்டியாக கேரட்டை கடிக்க

இருவரும் விளையாட்டாக பேசிக் கொண்டு இருப்பதை பார்த்து சிரித்து விட்டு பூரிக்கு மாவு பிசைய ஆரம்பிக்க

"எங்க அம்மா எதுக்கு உனக்கு பிடிச்சதை செய்யணும்? "என்று கோவமாக கேட்டுக் கொண்டு ஆத்மிகா வர

அவளை பார்த்த சக்தி "ஐயோ வந்துட்டாள "என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டாலும்

வெளியில் அவள் பேசியதற்கு பதில் அளிக்காமல் இருக்க

"ஏ அவ விளையாட்டுக்கு அப்படி சொல்ற "என்று சாத்வி சொல்ல

சாத்வியை முறைத்த ஆத்மி "நீ அவளுக்கு சப்போர்ட் செய்யாத "என்று சொல்லி விட்டு

ராதையிடம் திரும்பியவள் "இன்னைக்கு கிச்சடி செயிங்க பூரி சுடக் கூடாது "என்று கட்டளை போல் சொல்ல

ராதை சக்தியை திரும்பி பார்த்தார்

ஏன்என்றால் சக்திக்கு கிச்சடி பிடிக்காது அதை தெரிந்துக் கொண்டே ஆத்மி அதை சொல்ல

என்ன செய்வது என்பது போல் ராதை பார்க்கவும்

அதை பார்த்த ஆத்மி "நா சொன்னா அவளை எதுக்கு பார்க்கறீங்க அப்போ இந்த வீட்ல எதுக்கு நடந்தாலும் அவளை தான் கேட்கணுமா "என்று கோவமாக சொல்லியவள்

"பாட்டி "என்று சத்தமாக அழைக்க

அவள் அழைப்பதை கேட்ட சாத்வி அவசரமாக "இப்போ எதுக்கு அவங்களை கூப்பிடற "என்று கடிய

"அவங்க வந்தா உனக்கு என்ன "என்று கேட்டு விட்டு சக்தியை பார்க்க

அவளோ "ஆரம்பிச்சுட்டா "என்று நினைத்து அமைதியாக இருக்க

ராதைக்கு தான் பயமாக இருந்தது அகிலாண்டஸ்வரி வந்து என்ன பேசுவார் என்று அவருக்கு தெரியுமே அதனால் கையை பிசைந்துக் கொண்டு நிற்க

அங்கு வந்த அகிலாண்டஸ்வரி "என்ன ஆத்மி எதுக்கு கூப்பிட? "என்று கேட்டுக் கொண்டே

அங்கு இருந்த சக்தியின் முகத்தையும் ராதையின் முகத்தையும் பார்க்க

"பாருங்க பாட்டி இவ சொன்னானு அம்மா பூரி சுடறாங்க எனக்கு பூரி பிடிக்காதுனு தெரிஞ்சும் அதுனால நா கிச்சடி செய்ய சொன்னா அதுக்கு இவ முகத்தை பார்க்கறாங்க இந்த வீட்ல எனக்கு பிடிச்சது எதுவும் நா கேட்க கூடாதா?"என்று குறைப்பட

அதை கேட்ட அகிலாண்டஸ்வரி ராதையை பார்த்து "என்ன என் பேத்திக்கு பிடிச்சது செய்ய சொன்னா செய்ய மாட்டியா உன் அண்ணன் பொண்ணு சொன்னதை தான் செய்வியா "என்று கேட்க

கையை பிசைந்துக் கொண்டே "இல்ல அத்தை சக்திக்கு கிச்சடி பிடிக்காது "என்று மெதுவாக சொல்ல

"பூரி ஆத்மிக்கும் தான் பிடிக்காது அது தெரிஞ்சும் அவ கேட்கறனு செய்ய போனதான "என்று கேட்க

இதற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக நின்றார்

அவர் கேட்பதும் நியாயம் தானே மகளுக்கு பிடிக்காது என்று தெரிந்தும் செய்ய போனவர் இப்போது சக்திக்கு புடிக்காது என்று பார்த்தால் கோவம் வரும் தானே….

அகிலாண்டஸ்வரி ராதையை கேள்வி கேட்பதை பார்த்த சக்தி "அத்தை கிச்சடி செய்வாங்க நா சாப்டுக்கறேன் "என்று சொல்ல

அவளை திரும்பி பார்த்தவர் ஒன்னும் சொல்லாமல்

ராதையை பார்த்து "இதுக்கு தான் நா ஆரம்பத்துல இவள இங்க கூட்டிகிட்டு வரும் போதே கேட்டேன் உன் பொண்ணுங்களுக்கு தான் முதல முக்கியதுவம் குடுக்கணும்னு இப்போ பாரு "என்று சொல்ல

அதை கேட்ட ராதை கண்ணில் கண்ணீருடன் நிற்க

இதற்குள் மேல் எதுவும் பேச வேண்டாம் என்று நினைத்துக் கொண்டு அகிலாண்டஸ்வரி செல்ல

அங்கு இருந்தவர்களை மிதப்பாக ஒரு பார்வை பார்த்து விட்டு ஆத்மி செல்ல

அவளை முறைத்து பார்த்த சாத்வி "சின்ன விஷயத்தை எப்படி பெருசக்கறா "என்று சொல்லி

சக்தியின் தோளில் கை வைத்தவள் "அவளை பத்தி தான் தெரியுமே விடு "என்று ஆறுதல் சொல்லியவள்

"அம்மா சீக்கரம் செய்யுங்க இல்ல அதுக்கும் பஞ்சாயத்தை கூட்டுவா "என்று சொல்லிவிட்டு செல்ல

ராதையின் கை பிடித்த சக்தி "சாரி அத்தை என்னால தான "என்று வருத்தமாக கேட்க

"அத்தைகிட்ட சாரி கேட்பியா "என்று செல்லமாக கடிந்துக் கொண்டவர்

சக்தி கேட்ட பூரிக்காக மாவு பிசைய

அதை பார்த்த சக்தி "வேண்டாம் அத்தை கிச்சடி செயிங்க "என்க

அவளின் கையை பிடுத்தவர் "நா செஞ்சுக்கறேன் நீ போ "என்று அவளை வெளியில் அனுப்பிவிட்டு வேலையை தொடர

அவரை பார்த்தவள் "நீங்க இருக்கறதால தான் நா இவ்ளோ தூரம் இருக்கேன் "என்று நினைத்துக் கொண்டாள்…..

ராதையின் அண்ணன் பாண்டியன் விவாசாய குடும்பத்தை சேர்த்தவர்கள்…

சிறு வயதிலேயே அவர்களின் பெற்றோர் இறந்து விட

பாண்டியன் தான் ராதாவை தாய் தந்தையாக பார்த்துக் கொண்டார்….

ராதையின் இளம் வயதில் அவரின் அழகை பார்த்து கிருஷ்ணன் அவரை பெண் கேட்டு வர

தங்கைக்கு பெரிய இடத்தில் சமந்தம் வரவும் மிக யோசித்தவர் பின் கிருஷ்ணனின் நல்ல மனதை பார்த்து திருமணம் செய்து வைத்தார்…

என்ன தான் கிருஷ்ணன் ராதையை திருமணம் செய்துகொள்ளும் போது வராதட்சணை வேண்டாம் என்று சொல்லி மறுத்த போதிலும்

பாண்டியன் அவரால் முடிந்த அளவுக்கு ராதைக்கு செய்தார்….

கிருஷ்ணனின் ஆசைக்கு அகிலாண்டஸ்வரியும் மறுப்பு தெரிவிக்க வில்லை….

ராதைக்கு முதல் குழந்தை பிறந்த பின்

பாண்டியன் அவர் ஊரிலே சாந்தியை திருமணம் செய்துக் கொண்டார்…

திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் பின் தான் பாண்டியனுக்கும் சாந்திக்கு சக்தி பிறந்தாள்….

வெகு நாட்கள் பின் ராதையின் இரட்டை குழந்தைகள் பிறந்தநாள் விழாவுக்கு வந்த பாண்டியனும் சாந்தியும் வீடு திரும்பும் போது அச்சிடேன்ட்டில் இறந்து விட

அண்ணன் அண்ணியின் இறப்பை கேட்டு துடித்து போன ராதை அவர்களின் வீட்டுக்கு சென்று இறுதி காரியங்களை முடித்த பின்

பாண்டியன் சாந்தியின் மகள் சக்தியை யார் பார்த்துக் கொள்ளவது என்ற கேள்வி வர

சாந்தியின் உறவினர்கள் எல்லாம் மௌனமாக ஒதுங்கி விட

தன் அண்ணனின் மகளை தானே பார்த்துக் கொள்ளவதாக சொல்லி தன்னுடனே அழைத்து வந்து விட்டார்….

சக்தியை அழைத்து வந்தது கிருஷ்ணனுக்கு எதும் இல்லை ஆனால் அகிலாண்டஸ்வரிக்கு தான் பிடிக்க வில்லை அவளை ஹாஸ்டலில் சேர்த்து விடலாம் என்று சொன்னதிற்கு ராதையின் முகம் கவலை பட

அதை பார்த்த கிருஷ்ணன் சக்தி தங்களுடனே வைத்து கொள்ளலாம் என்று முடிவாக சொல்லிவிட்டார்…

அதில் அகிலாண்டஸ்வரிக்கு சிறிது பிடித்தம் இல்லை

ராதையிடம் அவர் சொல்லியது ஒன்றை தான் "உன் அண்ணன் மகள் இங்கையே இருந்துக்கட்டும் ஆனா இவளால உன் பொண்ணுங்க மேல உன்னோட கவனம் குறைய கூடாது "என்று சொல்லிவிட

ராதை எல்லாரையும் ஒரே மாதிரி பார்த்து கொள்வேன் என்று சொல்லி சக்தி தங்களுடன் வைத்துக் கொண்டார்…

சக்தியின் நான்கு வயதில் அத்தையுடனே இருந்துக் கொண்டாள்….

சக்திக்கு தாய் தந்தையின் ஏக்கம் வந்து விடகூடாது என்று ராதை அவளை நன்றாக பார்த்துக் கொள்ள

நாளாக நாளாக அம்மாவின் மேல் ஓவர் possessiveness ஆக இருக்கும் ஆத்மிக்கு சக்தியை பிடிக்காமல் போனது…

எப்போதும் ராதை இவள் தான் செல்லம் என்ற எண்ணமே அவளை பிடிக்காமல் செய்து விட்டது…

சாத்விகாவுக்கு சக்தியை பிடிக்கும் அவள் பின்னாலே சுத்திக் கொண்டு இருப்பாள்..

ஆத்மிக்கு சக்தி பிடிக்காததால் அடிக்கடி அகிலாண்டஸ்வரியிடம் சக்தியை மாட்டி விட்டு திட்டு வாங்க வைப்பாள்…

இதை ஒரு முறை ராதை கண்டிக்க அதில் மேலும் சக்தியை பிடிக்காமல் போய்விட்டது…

கிருஷ்ணன் எல்லாரையும் ஒன்றாக தான் பார்ப்பார் இருந்தாலும் அவரின் மகள்களுக்கு தான் முதல் உரிமை…

இதனால் ராதை சக்தியை அதிகம் யாரிடமும் திட்டுவாங்காமல் பார்த்துக் கொள்வார்..

இன்று நடந்தது போல் எப்போதும் நடப்பது தான் என்று சக்திக்கு புரிந்தாலும் தன்னால் தான் அத்தை திட்டு வாங்குகிறார் என்று நினைத்து வருந்தியவள் பின் ஹாஸ்பிடல் கிளம்ப சென்றாள்….


வண்ணமாகும்...



 

aadrika

Well-known member
Wonderland writer
அத்தியாயம் - 2




சக்தி ஹாஸ்பிடல் கிளம்ப ரெடி ஆகி கீழே வர

ராதை டைனிங் டேபிளின் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டு இருக்க

எடுத்து வைப்பதற்கு சக்தி உதவி செய்ய

அவளை நிமிர்ந்து பார்த்தவர் "கிளம்பிட்டியா டா? "என்க

எல்லாம் இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொண்டே " ஆமா அத்தை "என்க

அவளை கண்கலங்க பார்த்து "இப்போ அண்ணன் இருந்து இருந்தா உன்னை பார்த்து ரொம்ப சந்தோசப்பட்டு இருப்பாங்க டா "என்க

அதை கேட்டவளின் ஒரு நிமிடம் வேலை செய்வதை நிறுத்திவிட

ராதையின் முகத்தை பார்த்தவள் "இப்போவும் அப்பாவும் அம்மாவும் பார்த்து சந்தோசப்பட்டுகிட்டு தான் இருகாங்க அத்தை "என்று அவரின் கன்னத்தை செல்லமாக தட்டி விட்டு நகர

அவள் போவதை பார்த்துக் கொண்டு இருந்த ராதைக்கு அவளை நினைத்து எப்போதும் போல பெருமையாக இருந்தது….

சக்தி சின்ன வயதில் இருந்தே இப்படி தான் எதையும் பாசிட்டிவ் ஆக யோசிப்பாள்….

சின்ன வயதிலேயே தானக்காக பேசும் அத்தையை பார்த்தவள் எப்போதும் அவரை கஷ்டப்படுத்த கூடாது என்று

நன்றாக படிப்பாள்…

கிருஷ்ணன் சக்தியை தன் மகன் படித்த ஸ்கூலில் சேர்த்து விட்டார்…

சக்தி சின்ன வயதில் இருந்தே டாக்டர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்க

அவளின் ஆசை படியே நல்ல மார்க் எடுத்ததால் டாக்டர் சீட் கிடைத்து விட

இப்போது முதல் ஐந்து வருடம் படித்து முடித்து விட்டு ஹாஸ்பிடலில் டாக்டர் ஆக இருக்கிறாள்…

ஒரு வருடம் போன எம்டி படித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறாள்…

எல்லாரும் டைனிங்க்கு வர

ராதை சாப்பாடு பறிமாற

அங்கே வந்த ஆத்மி ராதை செய்து வைத்து இருந்ததை திறந்து பார்த்தவள்

அவர் செய்து வைத்து இருந்த கிச்சடியை பார்த்து சிரித்தவளின் முகம்

அடுத்து அவர் செய்து வைத்து இருந்த பூரியை பார்த்து முகம் மாறி விட்டது…

ராதையும் சக்தியையும் பார்த்தவள் சாப்பிடாமல் செல்ல

அதை பார்த்த கிருஷ்ணன் "ஆத்மி சாப்பிடாம எங்க போற வா "என்று அழைக்க

கோபத்துடன் திரும்பியவள் " யாருக்காக செஞ்சாங்களோ அவங்களையே சாப்பிட சொல்லுங்க நா கேன்டீன் ல சாப்டுக்கறேன் "என்று சொல்லிவிட்டு செல்ல

ராதையை திரும்பி பார்த்த கிருஷ்ணன் "ஏன் தினமும் அவளை கோவப்படுத்தற இன்னைக்கும் சாப்பிடாம போயிட்டா ஒரு நாள் அவளுக்கு பிடிச்சதை செஞ்சா தான் என்ன? "என்று அவரை குறைப்பட்டவர்

பாதி சாப்பிட்டில் எழுந்து சென்று விட

அதை பார்த்த ராதைக்கு கஷ்டமாக இருந்தது….

கிருஷ்ணன் எழுந்து சென்றதை பார்த்த அகிலாண்டஸ்வரி " உங்கிட்ட நா என்ன சொன்னேன் "என்று காட்டமாக கேட்க

"கிச்சடி பண்ணி இருக்கேன் அத்தை "என்று மெதுவாக சொல்ல

அவரை முறைத்து பார்த்தவர் "அதை மட்டுமா பண்ணி இருக்க கூடவே பூரியையும் thaana பண்ணி இருக்க "என்க

என்ன சொல்வது என்று தெரியாமல் தவித்தவர் பின் மெதுவாக "சக்திக்கு கிச்சடி பிடிக்காது அத்தை "என்க

அகிலாண்டஸ்வரிக்கு ஆயாசமாக இருந்தது

இப்போதும் ராதை சக்திக்கு பிடிக்குமே என்று பார்த்தாரே தவிர கிருஷ்ணனும் ஆத்மியும் சாப்பிடாமல் சென்றதை பார்க்கவில்லை…

"உன் அண்ணன் மகள் மேல பாசமா இரு அதை தப்பு சொல்லல ஆனா உன் பொண்ணுங்களை கவனினு தா சொல்றேன் "என்று சொல்லிவிட்டு செல்ல

அவரின் அருகில் வந்த சக்தி "ஏன் அத்தை நான் தான் வேணாம்னு சொன்னேன் ல இப்போ பாருங்க சாப்பிடாம போயிட்டாங்க "என்று கவலையாக சொல்ல

அவள் கவலை படுவதை தாங்கதவர் "விடு டா இங்க சாப்பிடலைனா வெளிய சாப்பிடுக்குவாங்க ஆனா நீ வீட்டு சாப்பாடை தவிர வேறு எங்கையும் சாப்பிட மாட்டியே "என்க

அவரின் பாசத்தில் எப்போதும் போல சக்திக்கு கண்கலங்கியது அதை அவருக்கு காட்டாமல் மறைத்தவள்

"சரி எனக்கு நேரமாச்சு நா கிளம்பறேன் அத்தை "என்றவள்

யார் எப்படி போனால் என்ன எனக்கு சாப்பாடு தான் முக்கியம் என்பது போல அங்கு சாப்பிட்டுக் கொண்டு இருந்த சாத்வியிடம் "போயிட்டு வரேன் "enga

சாப்பிட்டில் இருந்து பார்வையை திருப்பாதவள் கையை மட்டும் ஆட்டிவிட்டு சாப்பிட

அவளை பார்த்த சக்தி தலையில் அடித்துக் கொண்டு கிளம்பி விட

சாத்வி சாப்பிடுவதை வாஞ்சயாக பார்த்த ராதைக்கு ஆத்மி சாப்பிடாமல் போனது வருத்தமாக இருந்தது…

சாத்வியை பார்த்து "ஏன் ஆத்மிக்கு சக்தியை பிடிக்க மாட்டேங்குது சக்தியை ஏன் நம்ம வீட்டு பொண்ணா நினைக்க மாட்டேங்கறாள் "என்று ஆதங்கமாக கேட்க

சாப்பிட்டு முடித்து கை கழுவி விட்டு வந்த சாத்வி "அவளுக்கு மேட்ச்சூரிட்டி கம்மிம்மா புரிஞ்சுப்பா "என்று அவருக்கு ஆறுதல் தர

"உன்கூட தான அவளும் பிறந்தா உனக்கு இருக்க நிதானம் அவளுக்கு ஏன் இல்லாம போச்சு "என்று புலம்ப

அவரை ஆழமாக பார்த்த சாத்வி "ஆத்வி இப்படி இருக்க ஒருவகையில நீங்களும் காரணம் மா "என்று சொல்லிவிட்டு செல்ல

சாத்வி சொன்னதை கேட்ட ராதைக்கு அவரின் தப்பு புரிந்தது ஆனாலும் அவரால் அவரை மாற்றிக் கொள்ள முடியவில்லை "ஆத்மிக்கு அப்பா பாட்டி அண்ணன் அக்கா என்று எல்லாரும் இருக்கிறார்கள் ஆனால் சக்திக்கு நான் மட்டும் தானே இருக்கிறேன் "என்று நினைத்து கவலைப்பட்டார்….

இவர் நினைத்துக் கொண்டு இருந்ததை போல தான் ஹாஸ்பிடல்க்கு போய் கொண்டு இருந்த சக்தியும் நினைத்துக் கொண்டு இருந்தாள்

"ஆத்மிக்கு ஏன் என்னை பிடிக்க மாட்டேங்குது? "என்று வருந்திக் கொண்டு இருந்தவள்

ஹாஸ்பிடல்குள் வண்டி சென்றவுடன் முகத்தை சிரித்தது போல் வைத்துக் கொண்டு இறங்கினாள்.….

ஹாஸ்பிடலில் இவளை பார்த்தவர்கள் எல்லாம் வணக்கம் சொல்ல

எல்லாருக்கும் புன்னகை முகத்துடன் வணக்கம் சொன்னவள் தனது இடத்தில் சென்று அமர்ந்துக் கொண்டாள்…

அவள் வந்தவுடன் அவளுக்காக காத்துக் கொண்டு இருந்தவர்கள் ஒவ்வொருவராக உள்ளே வர

சக்தியின் நேரம் வேகமாக சென்றது….

இடைவேளை நேரத்தில் சக்தி நிமிர்ந்து அமர

அப்போது அவள் அறை கதவில் சாய்ந்து கைகட்டி ஒருவன் அவளை பார்த்துக் கொண்டு இருக்க

யாரது என்று நிமிர்ந்து பார்த்தவள் "அஜய் வா டா "என்க

அவளை பார்த்து சிரித்துக் கொண்டு உள்ளே வந்தவன்

" என்ன மேடம் ரொம்ப பிஸி ஆ? "என்க

நேரத்தை பார்த்துக் கொண்டே "காபி குடிக்கலாமா? "என்று அவள் கேட்டவுடன்

"இங்கையே கொண்டு வர சொல்லட்டுமா?"என்று கேட்க

"இல்ல வேணாம் நாமளே அங்க போயிக்கலாம் "என்று சொல்ல

மறுப்பு எதுவும் சொல்லாமல் அவளுடன் சென்றான்..

காபி ஆர்டர் பண்ணிவிட்டு சக்திக்கு எதிரே அமர்ந்தவன் "இன்னைக்கு ஏன் டல்ஆ இருக்க மாதிரி இருக்க "என்று கேட்க

"இல்லையே நல்லா தான இருக்கேன் "என்று மலுப்ப

அவளை தீர்க்கமாக பார்த்தவன் "உன்னை பத்தி எனக்கு தெரியாதா?"என்று கேட்டுக் கொண்டே இருக்கும் போது

காபி வர

அதை எடுக்காமல் அஜய் சக்தியையே பார்க்க

அவள் சொல்லாமல் அவன் விட மாட்டான் என்று புரிந்துக் கொண்டவள்

"ஆத்மி கூட சண்டை டா "என்று சொல்ல

"ச்சே "என்று சொல்லி அவள் முகத்தை பார்த்தவன்

"தினமும் உன்கூட சண்டை போடறது தான் அவளுக்கு வேலையா? "என்று எரிச்சலாக கேட்க

அவனை நிமிர்ந்து பார்த்தவள் எதுவும் சொல்லாமல் "டைம் ஆச்சு வா போகலாம் "என்று சொல்லி எழுந்து முன்னால் செல்ல

அவள் போவதை பார்த்துக் கொண்டு இருந்தவன்

"இவளை திருத்த முடியாது "என்று அவனின் காபியை ஒரே முறையில் குடித்துவிட்டு அவள் பின்னால் சென்றான்….

அஜய் சக்தியுடன் ஒன்றாக படித்தவன்…

இந்த ஹாஸ்பிடல் அவனுடையது தான் ஆனால் அவனிடம் அப்படி ஒரு தன்மையே தெரியாது எல்லோருடனும் சகஜமாக பேசுவான்…

அவனுக்கு சக்தியை ரொம்ப பிடிக்கும் அவளுக்கு தாய் தந்தை இல்லை என்று தெரிந்தவுடன் அவளுக்கு எல்லாமாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்….

எப்போதும் சக்தியுடனே இருப்பான்

அவள் எம்பிபிஎஸ் முடித்த உடன் அவன் ஹாஸ்பிடலில் வந்து சேர சொல்லி விட்டான்…

அவனுக்கு ஆத்மியை சுத்தமாக பிடிக்காது இத்தனைக்கும் அவளை நேரில் பார்த்தது கூட கிடையாது

ஆனால் சக்தி அவளை நினைத்து கவலைபடுவதை பார்த்தே அவள் மீது ஒரு விதஎரிச்சலில் இருந்தான்

அவள் பெயரை கேட்டாலே கோவம் வந்து விடும்..

இத்தனைக்கும் மேலாக அவன் சக்தியை ஒரு தலையாக காதலிக்கிறான்

இதுவரை சக்தியிடம் அவன் சொன்னது கிடையாது இன்னும் கொஞ்ச நாள் கழித்து சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறான் ….

அங்கு கோவமாக எழுந்து சென்ற ஆத்மி நேராக காலேஜ்க்கு செல்ல

அங்கே அவளுக்காக காத்துக் கொண்டு இருந்த நண்பர்களிடம் வந்தவள்

"வாங்க கேன்டீன் போகலாம் "என்க

அவளை முறைத்து பார்த்தவர்கள் "இன்னைக்குமா "என்று கோரஸ் ஆக கேட்க

எல்லாரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு "வந்தா வாங்க இல்லனா நா மட்டும் போறேன் "என்று சொல்லிவிட்டு செல்ல

வேறு வழி இல்லாமல் அவளை பின் தொடர்ந்து சென்றார்கள்…

ஆத்மியின் அருகில் அமர்ந்த வைஷு "இன்னைக்கு ஏன் டி சாப்பிடல? "என்று கேட்க

தோசையை பியித்து வாய்குள் வைத்து கொண்டே

"எப்போவும் போல தான் சக்தி "என்று சொல்லி விட்டு சாப்பிட

"உனக்கு ஏன் டி அவங்களை பிடிக்க மாட்டேங்குது "என்று வைஷு கேட்க

அவளை முறைத்து பார்த்தவள் "எனக்கு அவளை பார்த்தாலே பிடிக்காது எப்போ பார்த்தாலும் அம்மா அவ பின்னாலையே சுத்திக் கிட்டு இருகாங்க அவ வந்ததுக்கு அப்புறம் ஒரு நாள் கூட என்கிட்ட வந்து ஆசையா பேசுனது கூட இல்ல இதுக்கு எல்லாத்துக்கும் காரணம் அவ மட்டும் தான் இனி அவளை பத்தி என்கிட்ட பேசாத "என்று சொல்லி

கைகழுவ செல்ல வைஷுவும் அவள் பின்னால் சென்றாள்….

கேன்டீனனில் இருந்து ஆத்மி வெளியே வர

சாத்வி அவளுடன் இனைந்துக் கொள்ளவும்

அவளை பார்த்து முறைந்த ஆத்மி "உன்னால மட்டும் எப்படி சாத்வி அவகூட சிரிச்சு பேச முடியுது அவ மேல உனக்கு கோவம் இல்லையா? "என்று வெறுப்பாக கேட்க

அவளை திரும்பி பார்த்த சாத்வி "எதுக்கு கோவம் வரணும்? "என்று கேள்வி கேட்க
அவளை புரியாமல் பார்த்த ஆத்மி "ஏன்னா அவளால தான் அம்மா நம்ம கூட ஒழுங்கா பேச மாட்டேங்கறாங்க "என்று சொல்ல

அவளை பார்த்து சிரித்த சாத்வி "நீ சக்தி kooda நல்லா பேசுனா அம்மா உன்கூடயும் நல்லா பேசுவாங்க "என்று சொல்ல

அவள் சொன்னதை கேட்ட ஆத்மிக்கு எரிச்சலாக வந்தது "என் அம்மா என்கூட நல்ல பேசுறதுகூட நா அவகிட்ட போகணுமா? "என்று வெறுப்பாக கேட்க

"இவ சொன்னா புரிஞ்சுக்க மாட்டா " என்று எண்ணியவள்

"நா என்ன சொன்னாலும் நீ கேட்க போறது இல்ல அப்புறம் எதுக்கு அதை பத்தி பேசிகிட்டு வா கிளாஸ்க்கு டைம் ஆச்சு "என்று சொல்லி ஆத்மியின் கையை பிடித்து இழுத்து சென்றாள்...

ஆத்மியும் சாத்வியும் இரட்டையர்கள்
ஆனால் ஒரே உருவத்தில் இருக்க மாட்டார்கள்
உருவத்தில் மட்டும் அல்ல குணத்திலும்...

சாத்வி எது நடந்தாலும் அதை ஒருமுறைக்கு பலமுறை யோசித்து அதற்கு தகுந்தார் போல நடப்பாள்
ஆனால் ஆத்மி அப்படி அல்ல அவள் நினைத்தது நடக்க வேண்டும் என்று நினைப்பாள்...
ஆத்மி எல்லார் மேலையும் அதிக பாசம் வைத்து இருப்பாள் அவர்கள் மீது ஓவர் possessiveness ஆக இருப்பாள்....
பிடித்தவர்களுக்காக என்ன வேணும் என்றாலும் செய்வாள்...


ஆத்மி சக்தியின் மீது கோவமாக இருக்க

சக்தி ஆத்மி எப்போது பேசுவாள் என்று காத்துக் கொண்டு இருக்க

ஆத்மியின் பெயரை கேட்டாலே வெறுப்பாக அஜய் இருக்க


இவர்களின் வாழ்க்கையில் விதி என்ன வைத்து இருக்கிறதோ….




வண்ணமாகும்….


ரெண்டு நாள் ud போடாததுக்கு சாரி ஆன்லைன் கிளாஸ் வந்ததுல இருந்து கொஞ்சம் பிஸி ஹோம்ஒர்க் குடுக்கறாங்க அதுனால கதையை எழுந்த லேட் ஆகிருச்சு
 
Status
Not open for further replies.
Top