ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 7

pommu

Administrator
Staff member

அத்தியாயம் 7

இதழ்களுக்குள் ஒரு புன்னகையுடன் தான் ராவந்த் வேலை செய்தான்.

மாதுரியால் அவனை பார்க்கவே முடியவில்லை...

ஒரு வித்தியாசமான உணர்வு அவளுக்குள்...

அன்று வீட்டுக்கும் வந்து விட்டார்கள்...

ராவந்த்துக்கு வேலை இருந்ததால் தாமதமாக தான் வந்தான்.

அவன் வந்த நேரம் மாதுரியும் ஜீவிதாவும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டே காய்கறியை வெட்டினார்கள்.

மாதுரியை ஒரு கணம் பார்த்து விட்டு அறைக்குள் சென்று விட்டான்.

குளித்து விட்டு இடையில் டவலுடன் விசிலடித்தபடி உடைகளை தேடிக் கொண்டு இருந்தான் ராவந்த்.

மாதுரி அறைக் கதவை திறக்கவும் அவன் இடையில் இருந்த டவல் விழவும் சரியாக இருந்தது.

அவளோ விறைத்து போனவள் அப்படியே மயங்கி விழுந்து விட்டாள்.

"ஹேய்" என்றபடி இடையில் டவலை கட்டிக் கொண்டு அவளை நோக்கி செல்ல, திலகவதியும் அங்கே ஓடி வந்து விட்டார்.

மாதுரியின் கன்னத்தை தட்டி ராவந்த் எழ வைக்க கண்களை மெதுவாக திறந்து அவனை மிரட்சியாக பார்க்க அவனோ குரலை செருமிக் கொண்டான்.

"ஏன் மா நல்லா தானே சாப்பிட்ட? அப்புறம் என்ன மயக்கம்?? ஒரு வேளை கர்ப்பமா இருக்கியா?" என்று திலகவதி கேட்க, ராவந்தோ, 'க்கும். இப்படி மயங்கி விழுறவ கர்ப்பம் ஆயிட்டாலும்' என்று நினைத்தபடி, "அதெல்லாம் இருக்காதும்மா என்னன்னு நானே பார்க்கிறேன்" என்றவன் திலகவதியை அனுப்பி விட்டு அவளை கையை கொடுத்து தூக்கி விட்டான்.

"இப்போ எதுக்கு மயங்குன?" என்று அவன் கேட்க, "இன்னைக்கு தான் முதல் தடவை பார்க்கிறேன், மயக்கம் வருமா இல்லையா?" என்று கேட்டாள்.

அவனுக்கு சிரிப்பும் வந்து விட்டது. கீழ் அதரங்களை கடித்து அடக்கிக் கொண்டே, "நீ பார்க்கலாம் தப்பில்ல" என்றான்.

"ச்சீ என்ன பேச்சு இது? இப்போ எதுக்கு ரூமுக்குள்ள வந்தேன்னு மறந்தே போயிடுச்சு" என்று புலம்பிக் கொண்டே வெளியேற, "மாதுரி" என்றான்.

திரும்பி பார்த்தாள்.

"இன்னைக்கு கிஸ் எப்படி இருந்திச்சு?" என்று கேட்டான்.

நின்று முறைத்தாள்.

"சரி நான் காட்டுன ஃப்ரீ ஷோ ஆச்சும் எப்படி இருந்துச்சு?" என்று கேட்க, "ஐயோ கடவுளே" என்று காதை மூடிக் கொண்டே வெளியேறி இருந்தாள்.

இப்படியே இரு நாட்கள் தான் நகர்ந்து இருக்கும், ராவந்த் முன்னே வந்து நின்று விட்டாள் ரிதன்யா...

அவளை ஏறிட்டு பார்த்தவனோ, "சொல்லு ரித்து" என்று ஆரம்பிக்க, அவன் முன்னே இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டே, "அன்னைக்கு ஒரு கார்ட் தந்தேன் ல" என்றாள்.

"ம்ம்" என்று சொன்னவன் லேப்டாப்பை பார்க்க, "எதுவும் பதில் சொல்லலையே ராவ்" என்றாள்.

அவனோ பெருமுச்சுடன், "எனக்கு லவ் எல்லாம் செட் ஆகாது" என்றான்.

அவளும், "ஏன்?" என்று கேட்க, குரலை செருமிக் கொண்டே அவளை பார்த்தவன், "எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு" என்று அவன் நெஞ்சில் குண்டை தூக்கி போட்டான்.

இப்படி ஒரு அதிர்ச்சியை அவள் எதிர்பார்க்கவே இல்லை...

"என்ன ராவ் சொல்றீங்க, யாருக்கும் தெரியாதே" என்று அவள் ஆரம்பிக்க, "அது திடீர் கல்யாணம்" என்றான்.

அவனுக்கும் இதனை நீண்ட நாட்கள் மறைக்க இஷ்டம் இல்லை...

எப்படியும் வெளியே தெரிய தானே வேண்டும்...

அவனும் மாதுரியை காதலிக்க ஆரம்பித்து விட்டாள் அல்லவா?

"திடீர் கல்யாணம்" என்றவனை சந்தேகமாக பார்த்தவள், "இல்ல நான் நம்ப மாட்டேன், ப்ரூஃப் பண்ணுங்க" என்றாள்.

"நான் என்ன பொய்யா சொல்றேன்?" என்று கேட்டுக் கொண்டே, அலைபேசியை எடுத்து, தனது கல்யாண புகைப்படத்தை காட்டினாள்.

அதிர்ந்து வாயில் இரு கைகளையும் வைத்துக் கொண்டே, "இது மாதுரி தானே" என்று கேட்க, "ம்ம் திடீர்னு புருஷன் ஆயிட்டேன்" என்றான்.

"நாகூர் பிரியாணி, உளுந்தூர் பேட்டை" என்று அவள் ஆரம்பிக்க, "வாயை கிழிச்சிடுவேன், அவ என் பொண்டாட்டி" என்றான்.

"ரொம்ப தான் லவ்வோ?" என்று சிணுங்கிக் கொண்டே கேட்டாள்.

"இருக்காதா பின்ன?" என்றான்.

"என் கிட்ட இல்லாதது அவ கிட்ட என்ன இருக்கு ராவ்?" என்று கேட்டாள்.

'விட மாட்டா போல இருக்கே' என்று நினைத்த ராவந்த்தோ, "கியூட் ஆஹ் குட்டியா இருக்கா, ரொம்ப பிடிச்சு இருக்கு" என்றான்.

"நிறைய குறை எல்லாம் அடுத்தவங்களுக்கு சொல்லுவீங்களே ராவ்" என்றாள்.

"தப்பு தான் மா, சொல்லி இருக்க கூடாது" என்றான்.

"என்னால இத ஏத்துக்கவே முடியல" என்றபடி எழுந்து கொண்டாள்.

"நான் தானே புருஷன், நீ ஏன் ஏத்துக்கணும்?" என்று கேட்டான்.

ரிதன்யா சிணுங்கிக் கொண்டே, "ஃபெர்ஸ்ட் நைட் முடிஞ்சா என்ன?" என்று கேட்டாள்.

'ஐயோ இவ கூட முடியலயே' என்று முணுமுணுத்தவன், "முடிஞ்சு டி போடி" என்றான் லேப்டாப்பை பார்த்துக் கொண்டே.

"அப்போ நான் கடிதத்துல எழுதுனது எல்லாமே அவ கிட்ட பண்ணுனீங்களா என்ன?" என்று கேட்டாள்.

அவளை கடுப்பாக ஏறிட்டு பார்த்தவன், "ஆமா, அதுக்கு மேலயும் பண்ணுனேன், இனியும் பண்ணுவேன், உனக்கென்ன?" என்று கேட்டான்.

"நீங்க ஸ்வீட் ஆஹ் பேசுவீங்களே, அவ உங்கள மாத்திட்டா" என்றாள்.

தலையில் இரு கைகளையும் வைத்துக் கொண்டே, அழுந்த தேய்த்தவன், "இப்போ என்ன வேணும் உனக்கு?" என்று சலிப்பாக கேட்டான்.

"நீங்க தான் வேணும், ஆனா கிடைக்காதே" என்றாள்.

"தெரியுது ல, அப்புறம் என்ன?" என்று கேட்டான்.

"எனக்கு மனசே ஆறல" என்று சொல்லிக் கொண்டே வெளியே வந்தவள் கண்ணில் ஃபோட்டோ காப்பி அறைக்குள் சென்ற மாதுரி தான் தென்பட்டாள்.

'கிராதகி, குள்ள கத்திரிக்கா போல இருந்துட்டு மயக்கி போட்டியேடி' என்று மனதுக்குள் திட்டிக் கொண்டே அவளும் ஃபோட்டோகாப்பி அறைக்குள் சென்றாள்.

மாதுரி ஸ்கான் பண்ணும் பொருட்டு, ஃபோட்டோ காப்பி மெஷினின் மேற்பக்கத்தை தூக்கி இருக்க, அதில் சட்டென கையை வைத்த ரிதன்யாவோ மாதுரியை முறைத்து பார்த்தாள்.

'இந்தம்மாவுக்கு என்னாச்சு?' என்று நினைத்தவளோ, "கையை ஃபோட்டோ காப்பி எடுக்க போறீங்களா என்ன?" என்று கேட்க, "என்னை பார்த்தா லூசு போல இருக்கா?" என்று கேட்டுக் கொண்டே கையை எடுத்தாள்.

மாதுரிக்கு ஒன்றுமே புரியவில்லை...

"இப்போ என்ன மேம்?" என்று கேட்டாள்.

"ராவ் கூட கல்யாணம் ஆயிடுச்சாமே... கேள்விப்பட்டேன்" என்று சொன்னாள்.

அவளை ஒரு மார்க்கமாக பார்த்த மாதுரியோ, "யார் சொன்னா?" என்று கேட்க, "அவர் தான்" என்று சொன்னாள் விம்மலுடன்.

'ஐயோ இந்த வளர்ந்து கெட்டவன் சும்மா இருக்க மாட்டானா?' என்று நினைத்துக் கொண்டே, அவள் நகர, "எங்கடி போற? பேசிட்டு இருக்கேன் ல" என்று சொல்லிக் கொண்டே, அவள் ஜாக்கெட்டில் கையை வைத்து இழுத்து இருந்தாள் ரிதன்யா.

ஜாக்கெட் சர்ரென கிழிந்து விட, அவள் முதுகு அப்படமாகா காட்சி அளித்தது.

"ஐயோ" என்றபடி ஜாக்கெட்டை திரும்பி பார்க்க, ரிதன்யா அவள் முதுகையே வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தாள்.

'இது என்ன? முன்ன பின்ன பொண்ண பார்த்தது இல்லையா? இப்படி வெறிச்சு பார்க்குது' என்று நினைத்துக் கொண்டே, புடவையை எடுத்து சுற்றி முதுகை மறுத்தவள், "ஜாக்கெட்டை கிழிச்சிட்டு, அங்கேயே பார்த்துட்டு இருந்தா என்ன அர்த்தம்?" என்று கேட்டாள்.

இப்போது அவள் விழிகளை அதிர்ந்து பார்த்த ரிதன்யாவோ, "அது பேர்த் மார்க் தானே" என்று கேட்க, "ம்ம் அதுக்கென்ன?" என்று கேட்டாள்.

"க்ரோவ்ன் ஷேப் தானே" என்று மீண்டும் கேட்டாள்.

"ஆமா" என்று மாதுரி சொல்ல, அப்படியே நெஞ்சில் கையை வைத்துக் கொண்டே, அவளை அதிர்ந்து பார்த்தாள்.

"என்ன?" என்று மாதுரி மீண்டும் கேட்க, "ஒன்னும் இல்ல" என்று சொல்லிக் கொண்டே விறு விறுவென வெளியேற, "ஜாக்கெட்டை கிழிச்சிட்டு போறத பாரு, ஒரு சாரி கூடா கேட்கல" என்று திட்டிக் கொண்டே அவள் நடந்து சென்றது என்னவோ ராவந்த்தை தேடி தான்.

அவளை ஏறிட்டு பார்த்த ராவந்த்தோ, "இதென்ன போர்த்து கட்டிட்டு வர்ற?" என்று கேட்க, "அந்த ரிதன்யா என் ஜாக்கெட்டை கிழிச்சிட்டா" என்றாள்.

"என்னது?" என்று அவன் அதிர, "தெரியாம தான் கிழிச்சா, அத விடுங்க, இப்போ எதுக்கு அவ கிட்ட எல்லாமே சொன்னீங்க?" என்று கேட்டாள்.

"காரணம் கேட்டா, காரணம் சொன்னேன்" என்று தோள்களை உலுக்கினான்.

"அதுக்குன்னு நான் தான் பொண்டாட்டின்னு சொல்வீங்களா?" என்று கேட்க, "நீ தானே டி பொண்டாட்டி" என்றான்.

"உங்க கிட்ட பேசவே சலிப்பா இருக்கு" என்றபடி அவள் நகர, "வீட்ல கொண்டு விடட்டுமா? இப்படியே இருப்பியா என்ன?" என்று கேட்க, "அர்ஜஸ்ட் பண்ணிப்பேன்" என்றாள்.

"போகணும்னா சொல்லு" என்றான்.

"அப்படின்னா கேக்கிறேன்" என்று சொல்லி விட்டு வெளியேறி வேலையை ஆரம்பித்து விட்டாள்.

இதே சமயம் ரிதன்யாவின் வாய் சும்மா இருக்குமா என்ன? எல்லாரிடமும் விஷயம் பரவியது...

"எது கல்யாணம் ஆயிடுச்சா?" என்று எல்லாரும் அதிர, "ராவ் உம் அந்த மூணு நாள் வரல தெரியும் ல" என்று அவர்களே எல்லாம் யூகித்துக் கொண்டார்கள்.

மாதுரியை கடந்து செல்லும் பெண்கள் எல்லாருமே முறைத்து விட்டு சென்றார்கள்.

'என்ன ஏதோ வில்லி போல பாக்கிறாங்க, எல்லாம் இந்த நெட்டையன் பண்ணுற வேலை' என்று நினைத்துக் கொண்டே, அன்று வீட்டுக்கும் வந்து விட்டாள்.

இப்போதெல்லாம் அவனை சிறுக சிறுக பிடித்து இருந்தது...

அதுவும் அவன் புலம்பும் போது சிரிப்பும் வந்தது...

அவன் தோற்றம் எல்லாம் அவளை ஈர்க்கவில்லை...

மெதுவாக அதே சமயம் ஆழமாக அவளை ஈர்த்துக் கொண்டு இருந்தான்.

இப்போதெல்லாம் அவனுடன் சண்டைக்கு போவது இல்லை அவள்...

பட்டும் படாமல் தான் அவர்கள் நாட்களும் நகர ஆரம்பித்தது...
 
Top