ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 7

pommu

Administrator
Staff member
அத்தியாயம் 7

இரவு ஏழு மணி இருக்கும், தேவ் உடைய அறைக் கதவு தட்டப்பட்டது...

அவனும் திறக்க, அங்கே துர்கா மற்றும் வள்ளியம்மா நின்று இருந்தார்கள்...

"வெளிய போப்பா, அலங்காரம் பண்ணனும்" என்றார் அவர்...

அவனுக்கோ, "ஐயோ பாட்டி, இதெல்லாம் எதுக்கு?" என்று அவன் கேட்க, "போடா" என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்தவரோ, அவன் அலுமாரிக்குள் இருந்து வேஷ்டியை எடுத்து நீட்டிக் கொண்டே, "இப்படி காற்சட்டை போட்டுட்டு இருக்காதே... வேஷ்டி கட்டிட்டு காத்தோட்டமா இரு" என்று சொல்ல, துர்கா வாயில் கையை வைத்து சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.

"பாட்டி" என்று பற்களை கடித்துக் கொண்டே, கடுப்பாக சொல்ல, "பாரேன், எவ்ளோ கோபம்னு, நான் வளர்த்த பையன் அவன்... அந்த காலத்துல அம்மணமா ஓடி திரிஞ்சவன்" என்று சொன்னதுமே, துர்கா மறுபக்கம் திரும்பி நின்று சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.

அவனோ, "மானத்தை வாங்காதீங்க" என்று திட்டிக் கொண்டே, அவர் கையில் இருந்த வேஷ்டியை பிடுங்கி எடுத்தவன் விறு விறுவென வெளியேறி இருக்க, "நீ வாடிம்மா, நம்ம அலங்காரம் பண்ணலாம்" என்று சொல்லிக் கொண்டே, அவர்கள் அறையை அலங்கரிக்க ஆரம்பித்து விட்டார்கள்...

அவனும் அடுத்த அறைக்குள் இருக்கும் குளியலறையில் குளித்து விட்டு, வேஷ்டியையும் டீ ஷேர்ட்டையும் அணிந்தவன் வெளியே வந்து ஹாலில் அமர்ந்து விட்டான்...

சற்று நேரத்தில் அவன் அறையை அலங்கரித்து முடித்து விட்டு, வந்த வள்ளியம்மாவோ, "எல்லாம் பண்ணியாச்சுப்பா, பார்த்து பக்குவமா நடந்துக்க... காய்ஞ்ச மாடு கம்புல பாயுற போல பாய்ஞ்சு தொலைச்சுடாதே" என்று சொல்ல, துர்கா சிரித்துக் கொண்டே, அவனை கடந்துச் செல்ல, அவனுக்கோ எங்கேயாவது தலையை முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது...

வள்ளியம்மா அருகே வந்தவனோ, அவர் கையை பற்றி, "பாட்டி, என் மேல கோபம் இருந்தா தனியா சொல்லுங்க, இப்படி பப்லிக்கா மானத்தை வாங்காதீங்க" என்று சொல்ல, "என்னடா பப்ளிக்கு? நான் பார்த்து வளர்ந்தவன் தானே நீ... உன் கிட்ட எனக்கு உரிமை இல்லையா?" என்று கேட்டுக் கொண்டே கடந்துச் செல்ல, அவனோ, "ஷப்பா" என்று இதழ் குவித்து ஊதிக் கொண்டே அறைக்குள் நுழைந்தான்.

அதனை தொடர்ந்து, பத்மாவின் அறைக் கதவு தட்டப்பட்டது...

அவளும் குளித்து விட்டு புடவை அணிந்து இருந்தவள், கதவை திறக்க, "என்னம்மா ரெடியா?" என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தார்...

"ரெடி ஆயிட்டு இருக்கேன் பாட்டி" என்று சொன்னவளை ஆழ்ந்து பார்த்தவர், "என்ன தலைல பூ வைக்கல... உட்காரு நான் வச்சி விடுறேன்" என்று சொல்லிக் கொண்டே, அவளை அமர வைத்தவர், தலையில் பூக்களை அள்ளி வைத்துக் கொண்டே, "மகாலக்ஷ்மி போல இருக்க, நான் சொல்றத கேளு, புருஷன் கிட்ட பக்குவமா நடந்துக்கோ... புருஷன புடவை முந்தானைல முடிஞ்சுக்கணும்னா அவனுங்க சொல்றத எல்லாம் பண்ணனும்... புரியுதா... மயக்கி வச்சுக்கோடி" என்று சொல்ல, அவளோ, "ம்ம் ம்ம் மயக்கிடலாம்" என்று சலிப்பாக சொல்லிக் கொண்டே எழுந்தாள்.

அவள் கையில் பால் குவளையை கொடுத்தவர் நேரத்தைப் பார்க்க, நேரம் ஒன்பது மணியை காட்டியது...

"சீக்கிரம் போ, காத்துட்டு இருப்பான் என் பேரன்" என்று சொல்லிக் கொண்டே, அவளை அழைத்து வந்து அவன் அறைக்கு அருகே விட்டு அறைக் கதவை திறந்து விட, அவளும், உள்ளே நுழைந்தாள்.

அறைக்குள் வரும் வரை தான் மெதுவாக வந்தாள். கதவை தாழிட்டு விட்டு விறு விறுவென உள்ளே வந்து மேசையில் பால் குவளையை வைத்த பெண்ணவளை கட்டிலில் அமர்ந்துக் கொண்டே ஏறிட்டுப் பார்த்தான் தேவ்.

மஞ்சள் புடவை அணிந்த பத்மாவும் அவன் முன்னே வந்து நின்றபடி, "கல்யாணம் வரைக்கும் ஓகே, ஆனா இதெல்லாம் வேணாம்" என்றாள்.

அவளை துளைத்தெடுக்கும் பார்வை பார்த்தபடி எழுந்து நின்றவனோ, "என்னை பார்த்தா எப்படி தெரியுது??" என்று கேட்க, அவனை மேலிருந்து கீழ் பார்த்தவள், "பனை மரத்துக்கு வேஷ்டி கட்டி விட்ட போல இருக்கு" என்றாள்.

'அடிங்' என்று வாய்க்குள் முணுமுணுத்து விட்டு, "உன் மேல எவ்ளோ ஆசை வச்சு இருக்கேன்னு காட்ட வேணாமா??" என்றான். குரலில் கஷ்டப்பட்டு ஒரு மென்மையை கொண்டு வந்தான். அவனுக்கே இந்த வரிகளை சொல்லும் வாயை சுவற்றில் வைத்து தேய்க்கலாமா என்கின்ற எண்ணம் தான்.

அவனை ஒரு மார்க்கமாக பார்த்தவள், "அப்படி ஒன்னும் தெரியலையே" என்று சொல்ல, "தெரிஞ்சுக்கணும்னா இதெல்லாம் நடந்தாகணும்" என்றான்.

"இப்போ எதுக்கு மௌனராகம் மோகன் போல சாஃப்ட் ஆஹ் பேசுறீங்க... இது நீங்க இல்லையே" என்றாள்.

குரலை செருமிக் கொண்டே கழுத்தை வருடியவனோ, 'இவளுக்கு இந்த லவ் டயலாக் எல்லாம் செட் ஆகாது... ஸ்ட்ரெய்ட் ஆஹ் ஆக்ஷன் தான்' என்று நினைத்துக் கொண்டே ஒற்றை விரலை நீட்டியவன், "இங்க பாரு... இன்னைக்கு இங்கயே நமக்கு முதலிரவு நடந்தாகணும்" என்றான்.

வழக்கமாக அவளை உறுத்து விழிக்கும் நீல நிற விழிகளை பார்த்தவள், "இது தேவ்" என்றாள்.

"ஆமா தேவ் தான்... இப்போ முடியுமா ? இல்லையா??" என்று கேட்டான்.

"கல்யாணம் தான் அவசரமா நடந்திச்சு... இதுவாச்சும்" என்று ஆரம்பித்தவளது வார்த்தைகள் முற்றுப் பெற்றது என்னவோ அவன் இதழ்களுக்குள் தான்.

மீண்டும் எதிர்பாராத இதழ் முத்தம்...

'இவன் ஒரு முடிவோட தான் இருக்கான்... இன்னைக்கு என்னை கன்னி கழிக்காம விட மாட்டான் போல' என்று நினைத்தவளுக்கு அந்த முத்தம் ஆரம்பத்தில் அசௌகரியமாக இருந்தது...

'பத்மா, இவன் தான் உன் புருஷன்' என்று தனக்கு தானே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டவள் மேனி ஆழ்ந்த முத்தத்தின் நடுவே, இளக ஆரம்பித்து விட்டது. மோகத்துடன் கண்களை மூடினாள்.

இதே சமயம், தேவ் ஆரம்பத்தில் சாதாரணமாக தான் இதழ் தீண்டினான்...

அன்று போல, கண நேர இதழ் அணைப்பு அல்ல இது...

மிக ஆழமான நீளமான இதழ் அணைப்பு...

கொஞ்சம் கொஞ்சமாக பெண்ணருகே அவன் ஆண்மை உணர்வுகளும் பீறிட்டுக் கிளம்ப ஆரம்பித்து விட்டன...

அதன் விளைவாக, அவள் கழுத்தை பற்றி இருந்த அவன் கைகள் அப்படியே கீழிறங்கி அவள் மேனியை வருட, சட்டென துடித்துப் போய் அவன் கையை பற்றிக் கொண்டே அவனில் இருந்து அவள் பிரிய முயல, அவனோ அவள் இடையை பற்றி மீண்டும் இழுத்து தன்னுடன் நெருக்கிக் கொண்டே, "என்னடி?" என்று அவள் விழிகளை பார்த்துக் கொண்டே கேட்டான்...

இத்தனை நாட்கள் அவன் நீல விழிகள் அவளை உறுத்து விழித்து தான் பார்த்து இருக்கின்றாள்...

இன்று தான், மோகமும், தாபமும், மயக்கமும் கலந்த நீல விழிகளைப் பார்க்கின்றாள்...

மேனியில் ஒரு விதமான அதிர்வு...

அவன் பார்வையை கூட அவளால் எதிர்கொள்ள முடியவில்லை...

சட்டென விழிகளை தாழ்த்த, அவனோ, அவளை விட மாட்டேன் என்கின்ற தோரணையில், அவள் கழுத்தை பற்றி தன்னை நோக்கி நிமிர்த்தி, மீண்டும் இதழில் கதை எழுத ஆரம்பித்து விட்டான்.

இப்போது அவன் கைகள் பயணம் செய்ததை அவள் தடுக்கவில்லை...

தடுத்தும் பயனில்லை என்று தெரிந்ததும் தடுப்பதை விட்டு விட்டாள் போலும்...

அவள் மாராப்பை இழுக்க முயன்றான்...

அவன் வேகத்துக்கு, ஊக்கு புடவையை கிழித்து இருக்க, மாராப்பு அவன் கையில் வந்தது...

அவளோ, "புடவை கிழிஞ்சிடுச்சு" என்று அவன் இதழ்களுக்குள் முனகிக் கொண்டே, அவன் மார்பில் கையை வைத்து தள்ள, மெதுவாக அவளை விட்டு விலகியவன், "எனக்கு அந்தளவு பொறுமை இல்லை, சீக்கிரம் ட்ரெஸ்ஸை கழட்டு" என்று சொல்லிக் கொண்டே, தனது டீ ஷேர்ட்டை கழட்டி கட்டிலில் போட்டான்...

அவனுக்கோ இப்போது அவள் மேல் தோன்றி இருக்கும் மோக உணர்வு கலைந்து விட கூடாது என்கின்ற அவசரம்...

இதே உணர்வுடன் இருந்தால் தானே, அவளை ஆட்கொள்ள முடியும்...

"என்ன தான் அவசரமோ" என்று முணுமுணுத்துக் கொண்டே, ஜாக்கெட்டில் கையை வைக்க, அவனுக்கு அந்தளவு பொறுமை இல்லை போலும்...

"இவ்ளோ நேரம் என்ன பண்ணிட்டு இருக்க?" என்று கேட்டுக் கொண்டே, அவனே கையை வைத்து இழுக்க, ஜாக்கெட் வேறு தாறு மாறாக கிழிந்து விட்டது...

'சரியான காய்ஞ்ச மாடு' என்று வாய்க்குள் முணுமுணுக்க, அவனே அவள் ஆடைகளை பொறுமை இன்றி களைய ஆரம்பித்தவன், அவளுடன் கட்டிலில் தஞ்சம் அடைந்து விட்டான்...

கட்டிலில் போடப்பட்டு இருந்த ரோஜா மலர்கள் இடையே, அவள் ரோஜாவாக மலர்ந்து இருக்க, கள்ளுண்ட வண்டாக அவன் அவளை ஆட்கொள்ள ஆரம்பித்து விட்டான்...

அவன் வேகத்திலும் வன்மையிலும் அவள் திக்கி திணறி தான் போனாள்.

ஆனாலும் கஷ்டப்பட்டு ஈடுகொடுத்து இருந்தாள். அவள் கைகள் அவன் வெற்று முதுகிலும் சிகையிலும் பயணம் செய்தது... அவன் கரங்களும் இதழ்களும் அவள் மேனி முழுவதும் பயணம் செய்தன.

அவன் ஸ்பரிசம் அவளை உருக வைத்தாலும் அவனை பார்க்க ஒரு வித சங்கடம்...

அவனுக்கும் அதே சங்கடம் இருந்து இருக்க வேண்டும்...

இதழ்கள் கலந்த போதிலும், மேனிகள் கலந்த போதிலும், விழிகள் கலப்பதை இருவரும் தவிர்த்துக் கொள்ள, அவன் செயினில் இருந்த டாலரோ, அவள் ஜிமிக்கியில் மோதி, சீரான சந்தத்தை உருவாக்க, அந்த சந்தம் கேட்டு இருவரின் விழிகளும் இப்போது நேரே சந்தித்துக் கொண்டன...

அவள் விழிகள் அவன் செயினில் படிய, அவன் விழிகளோ அவள் ஜிமிக்கியில் படிய, அந்த தொனியே இருவருக்கும் ஒரு வித கிளர்ச்சியை உண்டாக்கியது என்னவோ உண்மை தான்...

சட்டென அவனில் இருந்து பார்வையை திருப்பிக் கொண்டாள்.

அவனும், அவள் கழுத்தில் முகம் புதைத்து, பற்களை பதித்துக் கொண்டே, மீண்டும் அவளை ஆட்கொள்ள ஆரம்பித்து விட்டான்.

அவன் பற்தடத்தை பதித்த வலியில், "கடிக்காதீங்க ப்ளீஸ்" என்று முனகலோடு பெண்ணவள் கெஞ்சினாலும் அவன் அதனை காது கொடுத்து கேட்பதாக இல்லை...

அவளை மொத்தமாக ஆட்கொண்டு விட்டு விலகி விட்டத்தை பார்த்துக் கொண்டே படுத்து இருந்தவனின் மார்பு மூச்சு வாங்கியதில் ஏறி இறங்க, அவளோ, சட்டென அவனுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டே, போர்வையால் தன்னை மொத்தமாக மூடிக் கொண்டாள்.

அவள் முதுகை ஒரு கணம் வெறித்துப் பார்த்து விட்டு, அவனும், அவளுக்கு முதுகு காட்டி படுத்து தூங்க ஆரம்பித்து விட்டான்.

பத்மாவுக்கு உடம்பெல்லாம் அடித்து போட்ட உணர்வு...

அப்படியே தூங்கி விட்டாள்.

இரவு பன்னிரண்டு மணி இருக்கும்... சட்டென முழிப்பு வந்தது...

விழிகளை திறந்து மெல்லிய வெளிச்சத்தில் நேரத்தைப் பார்த்தாள்.

பசி வேறு வயிற்றைக் கிள்ளியது...

'படுபாவி, காய்ஞ்ச மாடு போல பாய்ஞ்சு, என் ஸ்ட்ரென்த் எல்லாமே போயிடுச்சே... கடிச்சு வேற வச்சு இருக்கான்... சரியான காஜியா இருப்பான் போல, இப்போ பசிக்குது வேற' என்று நினைத்துக் கொண்டே அறையை சுற்றி கண்களை சுழல விட்டாள்.

சற்று தள்ளி இருந்த மேசையில் பழங்களும் அவள் கொண்டு வந்து வைத்த பாலும் இருந்தது...

படுத்தபடி அவனை திரும்பிப் பார்த்தாள்.

அவன் தூங்கிக் கொண்டு இருந்தான்...

'இவனுக்கு பசிக்காது போல, தேவாங்கு' என்று மனதுக்குள் திட்டியவள், அந்த மேசையை நோக்கிச் செல்ல வேண்டும்... போர்வையை அவனும் சேர்த்து போர்த்திக் கொண்டே படுத்து இருந்தான்...

இழுக்க முடியாது...

கையை கீழே விட்டு, அவன் உருவி போட்ட புடவையை எடுத்தாள்.

அதையே சுற்றிக் கொண்டே, மேசை அருகே சென்றவளுக்கு இரு அடிகள் வைப்பதே பெரும் பாடாகி போனது...

'ச்ச, என்னை என்ன எல்லாம் பண்ணி வச்சு இருக்கான், நடக்க கூட முடியல' என்று திட்டியவள் மனசாட்சியோ, 'நீயும் ரசிச்சிட்டு தானே இருந்த, இப்போ எதுக்கு திட்டுற?' என்று அவளுக்கே காறி துப்பியது...

'கெத்தை மெயின்டெய்ன் பண்ணனும்ல, போயும் போயும் இவன் கிட்ட மயங்கி கிடந்தேன்னு சொல்ல முடியுமா?' என்று தன்னை தானே சமாதானப்படுத்திக் கொண்டே, மேசை அருகே இருந்த ஆப்பிளை எடுத்து, கத்தியால் வெட்டி கையில் எடுத்துக் கொண்டாள்.

அப்படியே பாலையும் எடுத்துக் கொண்டே கட்டிலில் வந்து அமர்ந்தவள், அருகே இருந்த டீப்பாயில் பாலை வைத்து விட்டு, ஆப்பிளை சாப்பிட ஆரம்பித்து விட்டாள்.

நடு இரவில், 'கரக்கு கரக்கு' என்று ஒரு சத்தம்...

தூங்கிக் கொண்டு இருந்த தேவ்விற்கு முழிப்பும் வந்து விட்டது.

தலையை திருப்பிப் பார்த்தான்...

பத்மா தான் கட்டிலில் அவனுக்கு முதுகு காட்டி அமர்ந்து இருந்தாள்.

புடவையை சுற்றி இருந்தாள். அவள் மேனி தெரிந்தும் தெரியாமல் புடவையால் மூடப்பட்டு இருந்தது.

அவள் வெற்று முதுகு அவனுக்கு விருந்தாக, அதில் ரோஜா பூ இதழ்கள் வேறு ஒட்டி இருந்து அவனுக்கு வெறியேற்றிக் கொண்டு இருந்தன...

அவள் மேல் மோகம் மீண்டும் வராமல் போய் விடுமோ என்று பதறியவனுக்கு, இப்படி பார்த்ததுமே உணர்வுகள் பீறிட்டுக் கிளம்ப, 'என்ன தேவ் இப்படி ஆயிட்டே?' என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டே சத்தமே இல்லாமல் எழுந்து அமர்ந்தான்.

சாப்பிட்டுக் கொண்டிருந்த பெண்ணவளுக்கு அவன் எழுந்து விட்டது தெரியவே இல்லை.

ஆப்பிளை வாயில் வைக்கப்போன பெண்ணவளின் விழிகள் அதிர்ந்து விரிந்து இப்போது மோகமாக மூடிக் கொண்டன.

ஆம் அவளை பின்னால் இருந்து அணைத்து, அவள் கழுத்து வளைவில் இதழ்களை பதித்து இருந்தான் தேவ்...

அப்படியே சற்று கீழிறங்கி, அவள் முதுகில் இருந்த ரோஜா இதழை தனது இதழ்களால் கவ்வி எடுத்துக் கொண்டே, மீண்டும் கழுத்தில் முகத்தை புதைத்துக் கொண்டான்.

கண்களை மூடிய பெண்ணவளின் இதழ்களில் இருந்து உஷ்ண பெருமூச்சு வெளியேறிச் செல்ல, "என்னடி பண்ணுற?" என்று அவள் காதருகே முத்தமிட்டுக் கேட்டான்.

"பசிக்குது" என்றாள் இதழ்கள் நடுங்க.

"எனக்கும்" என்றான்...

அவளோ அவனை திரும்பிப் பார்க்காமல், ஆப்பிள் துண்டை மட்டும் நீட்டி இருக்க, அவன் அதனை கடித்து எடுத்தவன், அப்படியே, பின்னால் இருந்தபடியே அவள் முகத்தை மட்டும் தன்னை நோக்கி திருப்பி, அவள் இதழில் இதழ் பதித்துக் கொள்ள, அவன் கடித்ததில் மீதியாக இருந்த ஆப்பிள் துண்டு அவள் கையில் இருந்து கீழே விழுந்தும் விட்டது...

அந்த ஆப்பிளை யார் விழுங்கினார்கள் என்று அறிந்துக் கொள்ள முடியாதளவு முத்தம்...

அவன் விழுங்கிய ஆப்பிளில் அவள் எச்சிலும் உள்ளடக்கம்...

அவள் விழுங்கிய ஆப்பிளில் அவன் எச்சிலும் உள்ளடக்கம்.

முத்தமிட்டு களைத்தவனிடம், "பால் இருக்கு, குடிக்கணும்" என்றாள் அவன் விழிகளை பார்த்துக் கொண்டே...

"குடிக்கலாமே" என்றான் அவளை மோகமாக பார்த்தபடி...

அவளும் பாலை எட்டி எடுத்தவள், அதனை குடித்த கணம், அவனோ தனது கரத்தின் பின் பக்கத்தினால் அவள் வெற்று முதுகை வருடிக் கொண்டே, "அந்த காலத்துல இப்படி தானே, ஜாக்கெட் இல்லாம புடவை கட்டி இருப்பாங்க" என்றான்...

அவள் மனமோ, 'எந்த நேரத்தில எத ஆராய்ச்சி பண்ணுறான் பாரு' என்று முணுமுணுத்தது.

அவன் வருடியதில், அவள் கையில் இருந்த பால் அவள் புடவையிலும் சிந்தி விட, "அச்சோ" என்றாள்.

தேவ்வும் பின்னால் இருந்தபடி எட்டிப் பார்த்துக் கொண்டே, "சிந்திடுச்சா?" என்று கேட்க, அவளும் பால் குவளையை டீப்பாயில் எட்டி வைத்தவள், "ம்ம்... க்ளீன் பண்ணனும்" என்று சொல்லிக் கொண்டே எழ முற்பட, "லெட் மீ ஹெல்ப் யூ" என்று அவள் கையை பிடித்து தன்னை நோக்கி இழுக்க, அவளோ அவன் மீதே விழுந்து இருந்தாள்.

இப்போது அவனை ஏறிட்டுப் பார்த்தவள், "வாட்?" என்று கேட்க, "எனக்கு தராம குடிச்சிட்ட, எனக்கும் பசிக்கும்ல, நான் குடிக்க வேணாமா?" என்று சொல்லிக் கொள்ள, அவள் விழிகள் அதிர்ந்து விரிந்தன...

அவன் சொல்ல வருவதை புரிந்தவளோ, "நோ நோ" என்று சொல்ல முதலே, அவளை கீழே மஞ்சத்தில் போட்டு, மேலே படர்ந்து விட்டான்...

அவளால் அதன் பிறகு தடுக்க முடியுமா என்ன?

"நோ" என்கின்ற கதறல் இறுதியாக முனகலாக மாறியது...

முதல் முறை இருந்த வேகமும், மூர்க்கமும் அவனிடம் இல்லை...

மெதுவாக மிக மெதுவாக, ரசனையாக அவளை ஆட்கொள்ள, அவளும் இம்முறை இரு மடங்காக சிலிர்த்துப் போனாள்.

அதன் பிறகு, இருவரும் தூங்கி விட்டார்கள்...

இப்போதும் அணைக்கவில்லை...

முதுகு காட்டி படுத்துக் கொண்டார்கள்...

காலையில் அவள் எழுந்த நேரம், அவன் இல்லை...


நேரத்துக்கே எழுந்து விட்டான் என்று தெரிந்தது...
 
Top