ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 7

pommu

Administrator
Staff member
அத்தியாயம் 7

அதே சமயம், ஆதித் திருமண விடயத்தை மறைக்க கரிகாலன் படாத பாடு பட்டுக் கொண்டு இருந்தான். செய்தி தாளில் அவன் படம் பிரசுரம் ஆகி இருக்க, கரிகாலனோ ஆதித் மேல் கோபத்தின் உச்சத்தில் இருந்தாலும் மாதவியின் மனதை காயப்படுத்த கூடாது என்ற ஒரே காரணத்தினால் அந்த விடயத்தை மறைக்க போராடி கொண்டு இருக்க, ஒரு நாள் மாலை வீட்டுக்கு வந்த மாதேஷ், "மாம் அண்ணா கல்யாணம் பண்ணிட்டானா?" என்று கேட்டபடி போனில் இருந்த போடோவைக் காட்ட சாப்பிட்டுக் கொண்டு இருந்த கரிகாலனுக்கு புரை ஏறியது. இருமியபடி நீரை அருந்தியவன் மாதவியை பார்க்க அவளோ அதிர்ச்சியுடன் மாதேஷ் காட்டிய புகைப்படத்தை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அவன் எலெக்ஷனில் போட்டி இடும் விடயத்தை தவிர அவளுக்கு அனைத்துமே ரகசியமாக தான் வைக்கப்பட்டு இருந்தது. ஆதித்தும் தினமும் பேசுவதாலும் கரிகாலன் கவனமாக இருந்ததாலும் அந்த ரகசியம் காக்கப்பட்ட போதும் இன்று மொழி தெரியாவிட்டாலும் படத்தை பார்த்து மாதேஷ் இந்த உண்மையை உளறி விட்டான்.

மாதவியோ கரிகாலனை பார்க்க அவனும் தெரியாத போல போட்டோவை பார்த்தவன் "அவனை கொன்னு போட போறேன்.. வீட்ட சொல்லாம கல்யாணம் பண்ணி இருக்கான் ராஸ்கல்,, அந்த பொண்ணு என்ன குலமோ என்ன கோத்திரமோ" என்று சீற இப்போது அதிர்ந்தது என்னவோ மாதவி தான்.

அவனை முறைத்தவள் "இதென்ன புது பழக்கம், அந்த பொண்ணு யாரா இருந்தா என்ன? அவன் இப்படி பண்ண ஏதும் காரணம் இருக்கும்.. நாம விசாரிக்கலாம்" என்று சொல்ல கரிகாலனோ "ஹப்பா எப்படி எல்லாம் நடிக்க வேண்டி இருக்கு" என்று நினைத்தவன் "ஆனாலும் இப்படி சொல்லாம கல்யாணம் பண்ணுறது தப்பில்லையா மாதவி" என்று கேட்டான்.

மாதவிக்கு ஆதித் விஷயத்தில் ஏமாற்றம் கோபம் இருந்தாலும் கரிகாலனை சமாளிக்கவே இப்படி நடந்து கொண்டாள் . அது கரிகாலனுக்கும் நன்கு தெரிந்து இருந்த போதிலும் மாதவியை இப்படி நடக்க வைக்க தான் கரிகாலன் கோபப்படுவது போல நடித்தான் என்று மாதவிக்கு தெரிய வாய்ப்பு இல்லை.

இருவரையும் அதிர்ச்சியாக பார்த்த மாதேஷ் "பையன் திருட்டு கல்யாணம் பண்ணி இருக்கான். ரெண்டு பேரும் இவ்ளோ சாவகாசமா பேசுறீங்க?"என்று கேட்க மாதவியோ "டென்சன் ஆகி என்ன ஆக போகுது..பிளட் ப்ரெஷர் தான் எகிற போகுது முதலில விசாரிப்போம்" என்று கூறி சாதாரணமாக இருப்பது போல காட்டிக் கொண்டாலும் அவள் மனம் உலையாக கொதித்துக் கொண்டு இருப்பதை அவள் மட்டுமே அறிவாள்.

அடுத்த கணமே ஆதித்துக்கு கரிகாலன் அழைத்து இருக்க, அவனோ "சொல்லுங்கப்பா " என்றான். கரிகாலனும் "உன் அம்மா உன்னோட கல்யாணம் பத்தி பேசணுமாம்" என்று சொல்ல அவனும் "ம்ம்" என்றான். ,மாதவியோ "என்னடா இதெல்லாம்" என்று கேட்டபோதே அவளது நிதானம் ஆதித்துக்கு அதிர்ச்சி தான். ஆனாலும் சுதாகரித்துக் கொண்டவன் "அம்மா, அந்த பொண்ணுக்கு ரெண்டு நாள்ல கல்யாணம்.. டீப் லவ், ஏமாத்த முடியாதுல்ல , அந்த பொண்ணு இல்லன்னா நான் செத்து இருப்பேன்" என்று சொல்ல "ஆதித் கண்ணா" என்று அலறிவிட்டாள் மாதவி. அவனோ "அவளை நான் ரொம்ப லவ் பண்ணுறேன்மா " என்று நெகிழ்ந்த குரலில் சொல்ல "புரியுதுடா, சரி விடு, மருமக கிட்ட கொடு" என்று சொல்ல அவனோ "அவ சாப்பிடுறாம்மா" என்றான் தன் முன்னே வாயில் ஒட்டப்பட்ட பிளாஸ்டருடன் தலையை இருபக்கமும் ஆட்டிக் கொண்டு கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்த நதீகாவை பார்த்தபடி.

மாதவியும் "சரிப்பா உடம்ப பத்திரமா பார்த்துக்கோ" என்றபடி வைத்து விட, நதீகாவோ அவனை எரித்து விடுவது போல பார்த்தாள்.

அவனோ "ரிலாக்ஸ் நதி" என்றபடி அவள் முன்னே இருக்கையை எடுத்துப் போட்டபடி அமர்ந்தவன் அவள் கழுத்தில் கிடந்த தாலியை தூக்கி பார்த்து "புருஷனுக்கு விசுவாசம் இல்ல, உன் அத்தைக்கு ரொம்ப விசுவாசமோ" என்று கேட்டான். ஆம் மிதுனை மேயர் எலெக்ஷனில் தோற்கடித்து அவன் நண்பன் தருணை வெற்றி பெற வைத்தது சம்பந்தமாக அவன் செய்த தில்லும் முள்ளு வேலைகள் அனைத்தும் அவனது காரில் இருந்த பிரத்தியேக பென் ட்ரைவில் இருந்தது. தனது அரசியல் தேவைக்காக அவன் அதனை அதில் சேகரித்து வைத்து இருக்க, நதீகா ஆசையாக திருமண போட்டோக்களை கேட்டிருக்க அவனும் திருமண போட்டோக்களை ஞாபக மறதியில் அதே பென் ட்ரைவில் போட்டுக் கொடுத்து இருந்தான். அவளை வீட்டில் இறக்கி விட்டு திரும்பிய சமயமே அவனுக்கு அந்த பென்ட்ரைவ் நினைவில் "ஷீட்" என்று தலையில் அடித்தவன் வேகமாக காரை எடுத்துக் கொண்டு அவள் வீட்டுக்கு விரைந்தான். போகும் வழியில் எத்தனை தடவை அழைத்தும் அவள் போனை எடுக்கவில்லை என்றதுமே அவளுக்கு உண்மை தெரிந்து விட்டது என்ற விடயத்தை அவன் யூகித்து விட்டான்.

வீட்டுக்கு அவன் சென்ற போது , அவள் காரில் மதுபாலாவின் ஆபீசுக்கு சென்று இருப்பதாக செய்தி கிடைக்க அவளை பின் தொடர்ந்து வேகம் எடுத்தான் அவன். அவள் மன நிலையை கேட்கவே வேண்டாம், அவன் மீது அளவு கடந்த காதல் இருந்தால் கூட அவனது இந்த துரோகத்தை அவள் ஏற்றுக் கொள்ளும் மன நிலையில் கொஞ்சமும் இல்லை. நெற்றிக் கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே என்று நினைப்பவள் கொள்கையோ வேலை செய்வது துரியோதனிடம் இருந்தால் கூட அவனுக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்பதே ஆகும் .. அவளை பற்றி நன்கு அறிந்த ஆதித்தும் அவளை தடுக்க முனைய, சைட் மிரர் ஊடாக அவன் பின் தொடர்வதை பார்த்தவள் வேகமாக ஓட முயன்றும் அவனது பல வருட கார் டிரைவிங்குக்கு மத்தியில் தோற்று தான் போனாள்.

போகும் வழியில் ஆட்கள் இல்லாத குறுக்கு சந்தாக பார்த்து அவளை தாண்டி சென்று மரித்தபடி நின்றவன் கார் கதவை திறந்து கொண்டு இறங்க அவள் பின்னால் ரிவர்ஸ் எடுக்க முயல அவனோ ஓடிச் சென்று காரின் பின்னால் மார்புக்கு குறுக்காக கைகளை கட்டியபடி நின்று கொண்டான். அவன் அறிவான் அவளால் தன்னை இடித்து விட்டு செல்ல முடியாது என்று. அவள் காதலின் ஆழம் அறிந்தவன் அவன்.

அவளோ சோர்ந்து போய் காரில் இருந்து இறங்கியவள் அவனை அடிப்பட்ட பார்வை பார்த்து "இது துரோகம் ஆதித்" என்று சீற, அவனோ "ஐ டோன்ட் கேயார்" என்றபடி கையை நீட்டினான் பென் ட்ரைவுக்காக.

அவளோ "இத தந்தா போல என்னால வாயால சொல்ல முடியாதா? கண்டிப்பா சொல்லுவேன்.. நீங்க என் புருஷனா இருந்தா கூட அது தப்புன்னா கண்டிப்பா தண்டனை வாங்கி கொடுப்பேன்" என்று சொல்ல அவனோ தடையை நீவியபடி "ஆஹான்" என்றவன் அடுத்த கணமே அவள் போட்டிருந்த ஷாலை உருவ அவள் பதறி போனாள். அவனோ சற்றும் தாமதிக்காமல் அவள் முன்னால் இருந்து அணைத்தபடி பின்னால் அவளது இரு கையையும் திமிர திமிர கட்டியவன் அவளை குழந்தை போல ஏந்தி தனது காரில் ஏற்றிக் கொண்டான்.

அவளும் விடு பட போராடி தோற்றவள் அப்படியே தொய்ந்து விட, அவளை காரில் ஏற்றிக் கொண்டு மதுபாலாவின் ஆபீசுக்கே சென்றவன் காரில் இருந்த பிளாஸ்டரை எடுத்து அவள் வாயில் ஒட்டி விட்டு நதீகாவை கடத்தி விட்டதாக மதுபாலாவிடம் சென்று நாடகம் ஆடி விட்டு வந்தவன் அவளை தனக்கு தெரிந்த நண்பனின் ஒரு தனி வீட்டில் கொண்டு இறக்கினான். அவளை அப்படியே தூக்கிக் கொண்டு போய் அங்கிருந்த நாற்காலியில் இருக்க வைத்தவன் " கொஞ்சம் டயர்ட் ஆஹ் இருக்குடி" என்றுபடி அருகே இருந்த கட்டிலில் தூங்கி குட்டி தூக்கம் வேறு போட்டான். நதீகாவினால் அசைய கூட முடியாமல் இருக்க, அப்படியே களைப்பில் தூங்கியவள் எழுந்தது என்னவோ மாதவி அவனுக்கு அழைத்த போன் சத்தத்தில் தான்.

இப்போது தன் முன்னே இருந்தவனிடம் பேச முடியாமல் அவள் திணற, ஒற்றை கையால் அவள் பிளாஸ்டரை கழட்டியவன் "பேசு" என்று கைகளால் சைகை காட்டினான். அவளோ "கட்டுன பொண்டாட்டிய கடத்த வெட்கமா இல்லையா?" என்று கேட்க அவனோ "கட்டுன புருஷன காட்டி கொடுக்க உனக்கு வெட்கமா இல்லையா?" என்று மாறி கேட்டான். அவளோ "நீ பண்ணுனதுக்கு பேர் என்ன தெரியுமா துரோகம்" என்று சொல்ல அவனும் "அதுக்கு?" என்று ஒற்றைப் புருவம் உயர்த்தி கேட்டான்.

"நினைச்சாலே வெறுப்பா இருக்கு.. உன்னை போல ஒருவனை விழுந்து விழுந்து லவ் பண்ணினத நினச்சா எரிச்சலா இருக்கு.. என்னை கூட ஏதும் அரசியலுக்காக தானே கல்யாணம் பண்ணி இருப்ப.." என்று சொல்லும் போதே அவள் கண்கள் கலங்கி போக, அவளை ஆழ்ந்து பார்த்தவன் தனது கைகளை கொண்டு வழிந்த அவளது கண்ணீரை துடைத்தான். அவளோ அவன் கரம் பட்டதும் திமிர ஆரம்பிக்க "அத விடுடி , நமக்கு எப்போ பெர்ஸ்ட் நைட்?" என்று கேட்க அவளோ "அது ஒன்னு தான் குறை" என்று சீறினாள். அவனும் "ஹா ஹா " என்று முத்துப் பற்கள் தெரிய சிரித்தவன் " கல்யாணம் பண்ணியும் நான் பிரம்மச்சாரியா இருக்கணுமா?" என்று கேட்க அவளோ "இது நிஜ கல்யாணமா இதுவும் படத்தில கட்டுற போல நடிப்பு தாலியா?" என்று வலி நிறைந்த குரலில் கேட்க "அப்படி எல்லாம் உனக்கு சந்தேகம் வருதாடி ?" என்று கேட்டவன் "எந்த படத்தில ரெஜிஸ்டர் எல்லாம் நிஜமாவே பண்ணிக்கிறாங்க?" என்று கேட்டான். அவளோ "அது கூட ஏதாவது அரசியலுக்காக தான் இருக்கும்" என்று சொன்னவள் முகத்தை மற்றைய பக்கம் திருப்பி கொண்டாள். அவனோ அவள் தாடையில் கையை வைத்து தன்னை நோக்கி திருப்பியவன் "அது அரசியல் காரணமா இருந்தா கூட நீ என் பொண்டாட்டி தான் ஓகேயா?" என்று கேட்டான்.

அவன் தான் மறைமுகமாக அரசியலுக்காக தான் கல்யாணம் பண்ணிக் கொண்டேன் என்று கூறி விட்டான் அல்லவா?

"உன்ன போய் விழுந்து விழுந்து லவ் பண்ணினேன் பாரு.. நீ வேணாம்னு சொன்னா கூட இவ்ளோ வலிச்சு இருக்காது.. ஆனா இப்போ ரொம்ப வலிக்குது ..கையை எடு ஆதித், அருவருப்பா இருக்கு.. " என்று சீற அவனோ "சும்மா இருந்த பையனை விழுந்து விழுந்து லவ் பண்ணிட்டு அந்த பயனை ரேப் பண்ண பார்த்துட்டு இப்போ பேசுற பேச்சை பாரு" என்றான் அடக்கப்பட்ட சிரிப்புடன்.. அவளோ அவனை அனல் தெறிக்க பார்த்து "வாட்? ரேப் பண்ண பார்த்தேனா? லூசா நீ? அப்படிலாம் நான் பண்ணல" என்று சொல்ல அவனோ "அப்போ அன்னைக்கு போர்ஸ் பண்ணி கிஸ் பண்ணுனதுக்கு பேர் என்னவாம்?" என்று கேட்டான். அவளும் "அதுக்கு பேர் லவ்,. அப்புறம் நீயும் தானே பண்ணுன கார் பார்க்கிங் ல வச்சு" என்று சொல்ல, அவனோ வாய் விட்டு இருபக்கமும் தலையாட்டி சிரித்தவன் "இதுவே ஒரு பையன் ஒரு பொண்ண லவ் என்று சொல்லி கிஸ் அடிச்சா அவனை பொறுக்கி லிஸ்ட் ல சேர்த்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்புவீங்க ,,அதே நீங்க பண்ணுனா அது லவ் என்று சொல்லுவீங்க,, நல்லா இருக்கும்மா உங்க சமத்துவம்" என்று சொல்ல, நதீகாவுக்கு பதில் கூற வார்த்தை வராமல் அவனை முறைத்து பார்த்தவள் "பாஸ்ட் இஸ் பாஸ்ட் ,இப்போ கையை எடு" என்று தனது நடையில் இருந்த அவனது கையை கண்களால் காட்டி சொன்னாள். அவனோ அவளை கேலியாக பார்த்தவன் "பொண்ணுக்கு மட்டுமா லவ் வரும்? பையனுக்கு வர கூடாதா என்ன?" என்று சொன்னபடி அவள் இதழ்களில் உரிமையாக தனது இதழ்களை ஆழ பொருத்திக் கொண்டவன் சிறிது நேரம் கழித்து நிமிர்ந்து தன்னையே முறைத்தவளைப் பார்த்து கண்களை சிமிட்டி விட்டு எழுந்தான். அவளோ வாய்க்குள் "பொறுக்கி" என்று முணு முணுக்க அவனுக்கு அது தெளிவாக காதில் விழுந்தது..

"ஆமாடி, நான் பொம்பிளை பொறுக்கி , நீ ஆம்பிள பொறுக்கி" என்றவன் மேலும் "எனக்கு பெரிசா குக் பண்ண வராது. நூடில்ஸ் செஞ்சு தரேன் அடம் பிடிக்காம சாப்பிடு" என்றபடி சமயலறைக்குள் நுழைய அவன் முதுகை அவள் வெறித்துப் பார்த்தாள்.
 

CRVS2797

Active member
அந்தாதி நீ தானே...!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மூ
( Part - 2 அத்தியாயம் -7)


அடப்பாவி...! எத்தனை பேர் டா இப்படி கிளம்பியிருக்கிங்க..?
ஹீரோவாத்தானே என்ட்ரீ கொடுத்தே.... இப்ப என்ன டா நீயும் ஆன்ட்டிஹீரோவா அவதாரம் எடுத்துட்டே...?
என்னவோ போ, எல்லாருமே இங்க திருடனுங்கத்தான்....
சொல்லப்போனா அயோக்கியனுங்கத்தான்....
என்கிற கான்செப்ட்லயே சுத்தறிங்க டா.


அடுத்தது என்ன...? நீயும் பொண்டாட்டியையே ரேப் பண்ணப் போறியா...? நடத்து ராஜா நடத்து நீ, அடுத்த வீட்டுப் பொண்ணை பண்ணா அது ரேப், புருசனே பொண்டாட்டியை பண்ணா... அது தான் மாஸ்..?


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Super episode 😂
Avan yen pannaan nu nadhiga kitta reason solluvaano nu expect pannen but sollala😊 eagerly waiting for next episode
Its very interesting
 
Top