ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 6

pommu

Administrator
Staff member
அத்தியாயம் 6

புடவைகளை பார்த்த பத்மாவுக்கு எதிலும் ஆர்வம் இல்லை...

"இப்படியே ஒவ்வொண்ணா தூக்கி போட்டா என்ன அர்த்தம்?" என்று கேட்டான்.

அவனை பக்கவாட்டாக திரும்பிப் பார்த்தவள், "இந்த கல்யாணம் தேவை தானா?" என்று கேட்டாள்.

"கண்டிப்பா" என்றான் அவள் விழிகளை பார்த்துக் கொண்டே...

சலிப்பாக, ஒரு தங்க நிற பட்டுப் புடவையை எடுத்தவள், "இத எடுத்துக்கலாம்" என்று சொல்ல, "குட் செலெக்ஷன்" என்றான்.

அவளிடம் பெருமூச்சு மட்டுமே.

அதனை தொடர்ந்து, அவனும் பட்டு வேஷ்டி சட்டை எடுத்தான்...

அவன் கையணைவினுள் சிவனே என்கின்ற ரீதியில் அவன் இழுபடும் இடத்துக்கு எல்லாம் இழுப்பட்டு திரிந்தாள்.

கொஞ்சம் சங்கடமாகவும் இருந்தது...

இறுதியாக ரத்னமுக்கும் உடைகளை எடுத்துக் கொண்டே புறப்பட்டு விட்டார்கள்...

காரில் செல்லும் போது, "ரெஜிஸ்டர் ஆஃபீஸ்ல பேசணும்" என்றார் ரத்னம்...

"யாரையும் கூப்பிடாம சாட்சி கையெழுத்து யார் வைக்கிறது?" என்று தேவ் கேட்க, அவரோ, "ம்ம், என் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் கந்தசாமி அண்ட் ஆன்டனியை வர சொல்றேன்" என்று சொல்ல, "விஷயம் வெளிய போகாம பார்த்துப்பாங்களா?" என்று கேட்டான்.

"எப்படியும் கல்யாணம் ஆகி அடுத்த நாள் வெளிய வர தான் போகுது, சில் படி" என்று ரத்னம் சொல்ல, ஜெயாவை நினைத்து அவனுக்கு இப்போதே தலை வலிக்க ஆரம்பித்து விட்டது.

ஒரு வழியாக வீட்டுக்கும் வந்து விட்டார்கள்...

அடுத்த நாள் அலுவலகத்திற்கு வந்த தேவ்வின் அறைக் கதவை திறந்துக் கொண்டே வந்தாள் ஸ்டெல்லா.

அவளுடன் பெரிதாக அவன் பேசிக் கொள்வது இல்லை...

பார்த்துக் கொள்வதும் குறைவு தான்...

இன்று தான் அவனுடன் பேச வந்து இருக்கின்றாள்...

ஒரு கணம் அவளைப் பார்த்து விட்டு, அவளில் இருந்து பார்வையை அகற்றி லேப்டாப்பை பார்த்தவன், "சிட்" என்றான்.

அவளும் அவன் முன்னே அமர்ந்துக் கொண்டே, கைகளை பிசைந்தவள், "சார் எனக்கு கொஞ்சம் லீவ் வேணும்... ப்ரொபேஷன் பீரியட் ல லீவ் எடுக்க முடியாதுன்னு தெரியும்... ஆனாலும் அர்ஜன்ட்" என்று இழுக்க, கழுத்தை வருடிக் கொண்டே, இப்போது அவளைப் பார்த்தவன், "என்ன ரீசன்னு தெரிஞ்சுக்கலாமா?" என்று கேட்டான்.

"பொண்ணுக்கு உடம்பு சரி இல்லை... ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்கேன், அம்மா தான் பார்த்துக்கிறாங்க" என்றாள்.

"என்னாச்சு?" என்று கேட்க, "ஹோல் இன் தெ ஹார்ட், ஆபரேஷன் பண்ணனும்" என்று சொன்னவளிடம், "எப்போ ஆபரேஷன்?" என்று கேட்டான்.

"இன்னும் டேட் ஃபிக்ஸ் பண்ணல, எனக்கு டூ டேய்ஸ் லீவு போதும், அம்மாவுக்கு கண் முழிச்சு ஷுகர் அதிகம் ஆயிடுச்சு... அதனால நான் தான் குழந்தையை பார்த்துக்கணும்... அவங்க வீட்ல ரெஸ்ட் எடுக்கட்டும்" என்று சொல்ல, இதழ்களை கடித்துக் கொண்டே யோசித்தவன், "லீவு எடுத்துக்கோங்க, நோ ப்ராப்லம்" என்றான்.

"டூ டேய்ஸ்ல வந்திடுவேன் சார்" என்றாள்.

"யோர் விஷ்" என்று மட்டும் சொல்லிக் கொண்டே, லேப்டாப்பை பார்த்தவனுக்கு மனம் கேட்கவில்லை...

அவன் உருகி உருகி காதலித்த பெண்ணின் இப்போதைய நிலை மனதை நெருடிக் கொண்டே இருந்தது...

இத்தனை நாள் ஏதோ ஒரு சங்கடம் அவனுக்கு... இப்போது தான் அவனுக்கு திருமணம் ஆக போகின்றதே... பேசி விட்டால் என்ன என்று தான் தோன்றியது...

அவளும் வாசல் வரை சென்று கதவை திறக்க ஆயத்தமாகி விட்டாள்.

"ஸ்டெல்லா" என்று அழுத்தமாக அழைத்தான்...

திரும்பிப் பார்த்தாள்.

"சிட் அகைன்" என்றான்...

அவளும் வந்து அமர்ந்துக் கொள்ள, "இஃப் யூ டோன்ட் மைண்ட், ஹஸ்பண்ட் கூட என்ன இஸ்ஸுன்னு தெரிஞ்சுக்கலாமா... ஐ க்னோ இட்ஸ் பெர்சனல்... பட் உன் லைஃபை சரி பண்ணனும்னு மனசுல தோணிட்டே இருக்கு" என்றான்...

அவள் கண்கள் கலங்க, இதழ்களில் மென் புன்னகை தோன்ற, எச்சிலை கூட்டி விழுங்கியவள், "அது உங்களோட இயல்பு சார்" என்றாள்.

அவனை நன்றாக புரிந்துக் கொண்டவள் தானே அவள்...

"வெல் என்னாச்சு?" என்று கேட்டுக் கொண்டே, கைகளை கோர்த்தபடி அவளைப் பார்க்க, அவளும், "அவர் பேர் ஸ்டீஃபன்" என்றாள்.

"ஐ க்னோ" என்றான்.

"பேங்க்ல வேர்க் பண்ணுறார்" என்றாள்.

"ஐ க்னோ" என்றான் மீண்டும்.

"அவர் ரொம்ப நல்லவர் தான்... ஆனா அவங்க அம்மா தான்" என்று சொல்லிக் கொண்டவளுக்கு கண்ணீர் வழிய கண்ணீரை துடைத்துக் கொண்டே, "பொண்ணு பிறந்தது அவங்களுக்கு பிடிக்கல... எப்போவுமே குத்தி பேசிட்டே இருப்பாங்க, பொண்ணுக்கு உடம்பு சரி இல்லன்னு சொன்னதும், நோயாளி குழந்தையை பெத்து வச்சு இருக்கானு எனக்கு திட்டுறது மட்டும் இல்லாம, குழந்தைக்கும் திட்டிட்டே இருப்பாங்க, ஒரு கட்டத்துல எனக்கு பொறுமை போய் அவங்க அம்மா கூட பெரிய சண்டை ஆகி, நான் கொஞ்சம் தாறு மாறா பேசிட்டேன்... ஸ்டீஃபனுக்கு கோபம் வந்து எனக்கு கை நீட்டிட்டார்... நான் வீட்டை விட்டு கிளம்பிட்டேன்... அவருக்கு நான் அவங்க அம்மாவை பேசுன கோபம், எனக்கு அவர் கை நீட்டுன கோபம்... இப்போ பிரிஞ்சு இருக்கோம்... அப்போ தான் உங்க கம்பெனி விளம்பரம் பார்த்தேன்... எனக்கு இங்க வர சங்கடம் தான்... ஆனா எனக்கு வேற வழி தெரியல... என் குழந்தையை பார்த்துக்க, அவளுக்கு ஆபரேஷன் பண்ண எனக்கு பணம் தேவை... வேலைக்கு சேர வேண்டிய கட்டாயம்... அது தான் சேர்ந்தேன்... என்னால உங்களுக்கு ஏதும் சங்கடம் இருந்தா சாரி" என்றாள்.

மென்மையாக பேசினாள்...

அவளது இந்த மென்மைக்கும் நல்ல மனதுக்கும் தானே, அவன் விழுந்து விழுந்து காதலித்தான்...

அவனோ, "நோ நோ நாட் லைக் தட்... சீக்கிரம் உன் ஃபேமிலி இஸ்ஸு சரி ஆயிடும்... ஏதாவது பண உதவி தேவைன்னா கூட சங்கடம் பார்க்காம கேளு, நோ ப்ராப்லம்" என்றான்.

"ஓகே சார்" என்று சொல்லிக் கொண்டே, எழுந்தவள் வெளியேறி இருந்தாள்.

அவனும் சார் என்கின்ற அழைப்பை தவிர்க்க நினைக்கவில்லை...

அந்த அழைப்பு இருவரையும் சற்று தள்ளி நிறுத்தி இருந்தது...

அந்த விலகல் அவனுக்கும் தேவையாக இருந்தது...

அடுத்தடுத்த நாட்கள் மின்னல் வேகத்தில் நகர்ந்தன...

திருமண நாளும் நெருங்கி இருக்க, தேவ் உடைய தாய் வழிப் பாட்டி வள்ளியம்மாவும் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்...

உள்ளே வந்ததுமே, "எங்க மாப்பிள்ளை மருமக?" என்று கேட்க, "பத்மா" என்று ரத்னம் அழைக்க, அவளும் வெளியே வந்து வள்ளியம்மாவை பார்த்தாள்.

"இது லக்ஷ்மியோட அம்மா" என்று ரத்னம் அறிமுகப்படுத்தி இருக்க, அவளும், "வணக்கம் பாட்டி" என்று சொல்லிக் கொண்டே, வள்ளியம்மாவின் காலில் விழ, "மரியாதை தெரிஞ்ச புள்ள" என்று சொல்லிக் கொண்டே, அவள் நெற்றியில் முத்தம் பதித்த வள்ளியம்மாவோ, "அழகா இருக்க கண்ணம்மா" என்று சொல்ல, மெலிதாக சிரித்துக் கொண்டாள்.

அப்போது தான் வீட்டினுள் நுழைந்த தேவ், "எப்படி இருக்கீங்க பாட்டி?" என்று சொல்லிக் கொண்டே, அவரை அணைத்து விடுவிக்க, "நல்லா இருக்கேன் ராசா... நீ எப்படி இருக்க? உனக்கு பொருத்தமான புள்ள தான்" என்று சொல்லி, அவன் கையை பற்றி அவள் அருகே நிற்க வைத்தவர், "என் கண்ணே பட்டுடும் போல இருக்கு" என்று சொல்லி, அவர்களுக்கு கையால் திருஷ்டி சுற்றி நெட்டி முறித்து இருந்தார்...

தேவ் மற்றும் பத்மாவின் முகத்தில் மருந்துக்கும் சிரிப்பு இல்லை...

ஆனால் கஷ்டப்பட்டு சிரிக்க முயன்றார்கள்.

அவன் இறுகிய முகத்தைப் பார்த்த ரத்னமோ, "தேவ், கொஞ்சம் பேசணும், உள்ளே வா" என்று தனது அறைக்குள் அழைத்துச் செல்ல, அவனும் நுழைந்தான்.

"இப்போ எதுக்கு முகத்தை தூக்கி வச்சுட்டு இருக்க?" என்று கேட்டார்.

"நத்திங், கொஞ்சம் டயர்ட் ஆஹ் இருக்கு, சிரிக்க முடியல, அவ்ளோ தான்" என்றான்.

"இங்க பாரு தேவ், பத்மா நல்ல பொண்ணு" என்று ஆரம்பிக்க, "ஓஹ் மை காட், வில் யூ ப்ளீஸ் ஸ்டாப் திஸ்" என்றான் எரிச்சலாக...

அவரோ, "கல்யாணம் பண்ணி சீக்கிரம் குழந்தை பெத்து கொடு, வாழ்க்கை சீரா போகும்... அவளை உனக்கு ரொம்ப பிடிக்கும்... அவளுக்கும் உன்னை பிடிக்கும்" என்றார்...

"ம்ம்" என்று சொல்லி விட்டு வெளியேறி இருந்தான்.

அடுத்த நாள் கல்யாண நாள்...

காலையில் சலிப்பாகவே எழுந்தாள் பத்மா...

எதிலும் நாட்டம் இல்லை...

திருமணம் என்கின்ற எண்ணமும் அவளுக்கு இல்லை...

ஒருவாறு மனதை நிலைப்படுத்திக் கொண்டே, குளித்து ஆயத்தமானாள்...

புடவையையும் அணிந்து விட்டாள்.

தலையில் பூக்களை அள்ளி வைத்தவளோ, ரத்னம் வாங்கி கொடுத்த ஆபரணங்களை அணிந்துக் கொண்டே, அன்று இரவை பற்றி தான் யோசித்தாள்.

கல்யாணத்துக்கு சம்மதித்து விட்டாள்.

ஆனால் இந்த முதலிரவு எல்லாம் அவளுக்கு நினைத்து கூட பார்க்க முடியவில்லை...

அதுவும் தேவ் உடன் ஒரே அறையில் ஒரே கட்டிலில் என நினைக்கும் போதே மயக்கம் வந்தது.

'இன்னைக்கு முடியாதுன்னு சொல்லிடணும்' என்று நினைத்தவள் மனமோ, 'அன்னைக்கே கிஸ் பண்ணுனான். இன்னைக்கு சும்மா இருப்பானா?' என்று கேட்டது...

அவளிடம் பதில் இல்லை...

'நடந்து தான் ஆகணும்னு சொல்லிட்டா என்ன பண்ணுறது?' என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டாள்.

'அக்செப்ட் இட் பத்மா, வேற வழி இல்லை... எப்படியும் இவன் கூட தானே என்னைக்கோ நடக்க போகுது' என்று தனக்கு தானே சமாதானமும் சொல்லிக் கொண்டாள்.

இதே கணம், கண்ணாடி முன்னே நின்று வேஷ்டியை கட்டியபடி நின்ற தேவ்விற்கும் அதே சலிப்பு தான்...

"ஓஹ் மை காட்" என்று புலம்பிக் கொண்டே, ஷேர்ட்டை அணிந்தான்.

அவனுக்கும் அன்று இரவு என்ன செய்வது என்று தடுமாற்றம்...

பத்மா மேல் சாதாரண ஈர்ப்பு கூட அவனுக்கு இன்னும் தோன்றவில்லை...

கடமைக்கு அவளுடன் சங்கமிப்பதா? என்கின்ற எண்ணம் தான் அவனுக்கு...

அப்படி சங்கமித்தால் கூட, அது மோகம் கலந்த கூடலாக தான் இருக்குமே தவிர, காதல் அதில் துளியும் இருக்காது...

அப்படி ஒரு நிகழ்வை அவன் மனம் விரும்பவில்லை...

அதற்காக இதனை தவிர்க்கவும் முடியாது...

பிடித்து திருமணம் செய்வதாக அவளிடம் கூறி விட்டான்...

இப்போது விலகி இருந்தால் சொன்னது பொய் என்று ஆகி விடும்...

அவளுடன் இணையாமல் ரத்னம் முன்னால் அந்நியோன்யமாக காட்டிக் கொள்ளவும் முடியாது...

ஷேர்ட்டை போட்டவன் சிறிது நேரம் தலையை பிடித்துக் கொண்டே அமர்ந்தான்.

'எப்படியும் வாழ்க்கை அவளோட தானே தேவ்... ஸ்டார்ட் யோர் லைஃப் வித் லஸ்ட், எப்படியும் லவ் தானா வரும்' என்று தனக்கு தானே சமாதானம் செய்துக் கொண்டே வெளியே வந்து இருந்தான்.

பத்மாவும் தேவ்வும் ஒன்றாக தான் அறைக்குள் இருந்து வெளியே வர, "ரெண்டு பேரும் அழகா இருக்கீங்க" என்று சொன்னார் ரத்னம்...

"என் கண்ணே பட்டிடும்" என்றார் வள்ளியம்மா...

இப்போது தேவ் திரும்பி பத்மாவைப் பார்த்தான்...

வலுக்கட்டாயமாக அவளை ரசிக்க முயன்றான்...

அழகாக தான் இருந்தாள்.

நடிகன் அவன் போலும்.

"அழகா இருக்க பத்மா" என்றான் மென் சிரிப்புடன்...

ரத்னமோ அவன் சொன்னதைக் கேட்டு மெலிதாக சிரித்துக் கொள்ள, பத்மாவும், "தேங்க்ஸ்" என்று மட்டும் சொல்லிக் கொண்டே, முன்னேச் செல்ல, காரில் நால்வரும் கோவிலை நோக்கி புறப்பட்டு இருந்தார்கள்...

அங்கே ஏற்கனவே ரத்னத்தின் நண்பர்கள் வந்து இருக்க, "என்ன ரத்னம், ரகசிய கல்யாணமா?" என்று சிரித்துக் கொண்டே கேட்டார்கள்...

"ஐயோ இல்லடா... அவசர கல்யாணம்... அடுத்த மாசம் ரிசெப்ஷன் பெருசா வச்சுடலாம்" என்று சொல்ல, அதனை தொடர்ந்து சாமி சந்நிதியில் திருமண நிகழ்வும் ஆரம்பமானது.

மந்திரத்தை உச்சரித்த ஐயரும், தாலியை தேவ்விடம் கொடுக்க, அவனும் அதனை வாங்கி, அவள் கழுத்தில் கட்டி மூன்று முடிச்சுக்களை இட்டான்...

இதுவரை பத்மா மூர்த்தியாக இருந்தவளோ, இக்கணம் பத்மா தேவ் ஆதித்யாவாக மாறி இருந்தாள்.

அதனை தொடர்ந்து, மாலைகளையும் மாற்றிக் கொண்டார்கள்...

புகைப்படமும் எடுத்துக் கொண்டார்கள்...

எல்லாவற்றிலும் இருவரும் கஷ்டப்பட்டு சிரித்தும் கொண்டார்கள்...

அதனை தொடர்ந்து, திருமண பதிவு செய்ய சென்று இருந்த சமயம், தான் பத்மா அவனது பெயரையே முழுதாக கவனித்தாள்...

'தேவ் ஆதித்யாவா? அப்போ இவன் சும்மா தேவ் இல்லையா? என்ன கொடுமை சரவணா, கல்யாணம் பண்ணுனவனோட பேர் கூட சரியா தெரியல' என்று தனக்கு தானே திட்டிக் கொண்டாள்...

அவர்களுக்கு பதிவு திருமணமும் நிறைவேறி இருக்க, வீட்டுக்கு புறப்பட்டு விட்டார்கள்...

வீட்டில் ரத்னமுடைய நண்பர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது...

எல்லோரும் சுற்றி அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டே இருக்க, ஆன்டனியோ, "ஒரு மாதிரி தேவ்வுக்கு கல்யாணம் பண்ணிட்டே" என்று சொல்ல, ரத்னமோ, "அவன் ஆசைப்பட்டான், பத்மாவுக்கும் புடிச்சு இருந்திச்சு... பண்ணி வச்சுட்டேன்" என்றார்.

தேவ்வோ, 'நாசமா போச்சு' என்று வாய்க்குள் சொல்லிக் கொள்ள, பத்மாவோ, 'கிழிஞ்சுது' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.

அவர்களும் சாப்பிட்டு விட்டு கிளம்பி இருக்க, தேவ் தனது அறைக்குள் நுழைந்துக் கொண்டான்.

பத்மாவோ தனது அறைக்குள் நுழையப் போக, "ஒன்பது மணிக்கு முகூர்த்தம்மா, ரெடியா இரு, மஞ்சள் புடவை இருக்குல்ல?" என்று கேட்க, "ம்ம்" என்று சொல்லிக் கொண்டே அறைக்குள் நுழைந்தவளுக்கு, போதும் போதும் என்று ஆகி விட்டது...

கண்ணாடி முன்னே வந்து குனிந்து பார்த்தாள்.

அவன் கட்டிய தாலி அவளைப் பார்த்து சிரித்தது.


'போச்சு போச்சு, வாழ்க்கை முழுக்க இவன் கூடவா? இவன் எப்படி பட்டவன்னு தெரியாதே... அன்னைக்கு ஐஸ்க்ரீம் பார்லர்ல வச்சு எப்படி எல்லாம் பேசுனான்... மாமாவுக்காக இவனுக்கு போய் ஓகே சொல்லி இருக்கேன், ச்ச' என்று தனக்கு தானே திட்டிக் கொண்டே, அலங்காரங்களை அகற்றியவள், குளிக்கச் சென்று விட்டாள்.
 

CRVS2797

Active member
ஐஸ்க்ரீம் சிலையே ..!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மூ
(அத்தியாயம் - 6)


அட.. ரொம்பத்தான் அலுத்துக்கிறாங்கப்பா..!
தேவ்வும் நல்லவன் தான், பத்மாவும் நல்லவ தான், நல்லவனுக்கு நல்லவ வல்லவன் தானே.
அரேன்ஜ்ட் மேரேஜே லஸ்ட்ல ஆரம்பிச்சு லவ்ல தான் சங்கமிக்குது. அப்புறம் என்ன..? இப்பத்துக்கு கோ ஃப்ளோ ஆன் தி வே. தட்ஸ் ஆல்.


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Top