அத்தியாயம் 4
இதே சமயம் தோட்டத்தை சுற்றி பார்த்து விட்டு அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார் மருதநாயகம்... அங்கே வேலை செய்துக் கொண்டு இருந்தவனோ மருதநாயகத்தின் அருகே வந்து, "யாழ் பொண்ணு வந்து தேங்காய் எடுத்துச்சு ஐயா, தம்பி திட்டி விட்டார்... அழுதுக்கிட்டே போச்சு ஐயா" என்று போட்டுக் கொடுத்து விட்டான்...
மருதநாயகத்தின் மீசை துடிக்க, கண்கள் சிவந்து போக, வேகமாக சர்வஜித்தை நோக்கி வந்தார்...
தேங்காய் உரித்துக் கொண்டே இருந்தவனது ஷேர்ட் காலரை பற்றி இழுத்தவர், "அந்த பொண்ணு கிட்ட என்னடா சொன்ன?" என்று கேட்டார்...
அவருக்கு ஆதிரையாழை அவன் காயப்படுத்தியதை தாங்கவே முடியவில்லை...
அவர் கையையும் அவரையும் அழுத்தமாக பார்த்தவன், "பேரனை விட, அந்த பொண்ணு முக்கியமா போச்சுல்ல" என்று கேட்டான்...
"ஆமாடா அப்படி தான்... நீ எந்த மூலைலயோ இருந்துட்டு உன் இஷ்டப்படி வாழுற... உனக்கு பந்த பாசம் பத்தி என்ன தெரியும்... அவ எவ்ளோ நல்ல பொண்ணு தெரியுமா? தேங்காய் எடுத்ததுக்கு எதுக்கு திட்டுன?" என்று காட்டமாக கேட்க, "கையை எடுங்க தாத்தா" என்று சொல்லிக் கொண்டே ஷேர்ட் காலரை பற்றி இருந்த அவர் கையை அழுத்தமாக பிடித்து அகற்றியவன், ஒற்றைக் கையால் தலையை கோதி விட்டு இடையில் இரு கைகளையும் குற்றி அவரை மேலிருந்து கீழ் பார்த்தவன், "இங்க நான் வந்திருக்கவே கூடாது... யாரோ ஒருத்திக்காக என்னையே அவமானப்படுத்துறீங்கல்ல" என்றான்...
"நீ என்ன பார்க்க ஆசையா வந்த போல பேசுற... சொத்துக்காக தானே வர்ற" என்று அவர் கேட்க, அவனோ ஆழ்ந்த மூச்சை எடுத்தவன், அவரை அனல் தெறிக்க பார்த்தான்...
"உன் முறைப்பு எல்லாம் அமெரிக்காவுல தான் செல்லுபடி ஆகும், என் கிட்ட உன் பருப்பு வேகாது... அந்த பொண்ண எதுக்கு திட்டுன? எனக்கு பதில் தெரிஞ்சாகணும்" என்றார்...
அவனோ, அங்கே வேலை செய்துக் கொண்டு இருந்தவனை அழுத்தமாக பார்க்க, அவனோ பயந்து தென்னை மரத்தின் பின்னே ஒளிந்துக் கொண்டான்...
"அவனை எதுக்குடா முறைக்குற?" என்றார் மருதநாயகம்.
"அவன் தானே போட்டு கொடுத்தான்" என்று சர்வஜித் கேட்க, மருதநாயகமோ, "அதெல்லாம் உனக்கு தேவை இல்லாத விஷயம்... அந்த பொண்ண எதுக்கு திட்டுன?" என்று கேட்டார்...
"அவ திருடி தாத்தா" என்றான் அவன் எரிச்சலாக...
"என்னத்தடா திருடுனா?" என்று அவர் கேட்க, "நான் உரிச்சு வைச்ச தேங்காயை திருடிட்டு போறா" என்றான் அவன்...
"அட போடா கஞ்ச பிசினாரி, நீ தான் அவ்வளவு சம்பாதிக்கிறியே... ஒரு தேங்காய்க்கு கணக்கு பார்க்கிற... அவளை தேவைப்பட்ட நேரம் எல்லாம் எடுத்து போக சொன்னதே நான் தான்" என்றார்.
அவனோ, "வயசாக எல்லாம் மந்தமா போச்சு" என்றான் கடுப்பாக... அவரோ, "வயசாக ஆக தான் எனக்கு மனிதாபிமானம் வந்து இருக்கு... இப்போ நீ உழைக்கிற பணம் எல்லாம் சாகும் போது விட்டு தானே போக போற... இல்லாதவங்க அனுபவிக்கிறதுல ஒன்னும் தப்பில்லயே, இப்படியே நீ ஏட்டிக்கு போட்டி பேசிட்டு இருந்தா உன் பேர்ல எழுதுன சொத்து எல்லாமே மாத்தி வேற யாருக்கும் எழுதி வச்சிடுவேன் பார்த்துக்கோ" என்று தனது மிரட்டலை இறுதியாக அவர் கையில் எடுத்த பின்னர் தான் சர்வஜித் அடங்கி நிதானமாகி போனான்...
தலையை சலிப்பாக இரு பக்கமும் ஆட்டிக் கொண்டே அவரைப் பார்த்தவன், "இப்போ என்ன பண்ணனும்?" என்று கேட்க, அவரோ, "அம்மா, அப்பா இல்லாத பொண்ணு, தனியா வேற இருக்கா... ஒரு தேங்காய்க்காக அவளை திட்டி இருக்க நீ... அதுக்காக இதான் உனக்கு தண்டனை... அந்த பொண்ணுக்கு ஒரு மூட்டை தேங்காய் கொண்டு போய் நீயே அவ வீட்ல கொடுத்துட்டு வரணும்" என்றார்...
அவனுக்கோ சுர்ரென்று கோபம்...
"நான் கொடுத்துட்டு வரணுமா?" என்றான் அவன் ஆத்திரத்துடன்...
"நீ தான் கொடுக்கணும்" என்று சுட்டு விரலை எடுத்து அவன் திண்ணிய மார்பில் வைத்து சொல்ல, அவனால் மறுக்க முடியுமா என்ன?
ஓரிரெண்டு கோடி என்றால் கண்டுக் கொள்ளவே மாட்டான்...
அவர் வசம் இருப்பதோ பல மில்லியன்கள் பெறுமதியான சொத்துக்கள்...
விட்டு கொடுக்க அவனுக்கு மனமே இல்லை...
அப்படி விட்டு கொடுத்தால் அமெரிக்காவில் அவன் மதிப்பு இழந்து விடும் என்று பயம் வேறு அவனுக்கு...
எத்தனை பேரை அலட்சியப்படுத்தி இருப்பான்... எத்தனை பேரை அவமானப்படுத்தி இருப்பான்... அவன் மதிப்பு இழந்தால் அவனால் அவமானப்பட்ட எல்லாருமே அவனை எள்ளி நகையாடுவார்கள் அல்லவா?
அமெரிக்காவில் தனது மதிப்பையும் மரியாதையையும் தக்க வைத்துக் கொள்ள, இந்தியாவில் அடிபணிந்தால் பரவாயில்லை என்று தோன்றியது...
அவரை முறைத்துக் கொண்டே, அருகே இருந்த சாக்குப் பையை எடுத்தவன், அதற்குள் தேங்காய்களை எடுத்துப் போட்டுக் கொண்டே, "இது போதுமா?" என்று கேட்டான்...
அவரோ, "இன்னும் நாலு சேர்த்து போடுடா, கஞ்ச பிசினாரி" என்றார்...
அவனை இப்படி தரக்குறைவாக திட்டும் உரிமையும் தைரியமும் அவருக்கு மட்டும் தான் உண்டு...
அவனும் தேங்காய்களை எடுத்துக் கொண்டே, "அவ வீடு எங்க இருக்கு?" என்று கேட்டான்... அவரும் அவளது வீட்டை நோக்கி கையை காட்ட, தேங்காயை முதுகில் தூக்கி போட்டுக் கொண்டே நடந்தவன் மனமோ, 'இந்த சொத்துக்காக என்ன எல்லாம் பண்ண வேண்டி இருக்கு... ச்சைக்' என்று நினைத்துக் கொண்டது...
அவளது வீட்டை நோக்கிச் சென்றான்...
அவளோ தேங்காய் இல்லாமல் சமைத்துக் கொண்டு இருந்தாலும் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்துக் கொண்டு இருந்தது...
அவன் சொன்ன வார்த்தைகள் அவளுக்கு முள்ளால் தைத்தன...
எப்படியும் சாப்பிட்டாலும் இறங்காது என்று தெரியும்...
சமைப்பதை நிறுத்தி விடலாமா? என்று அவள் யோசித்துக் கொண்டே இருக்க, அவர்களின் வாசல் கதவு தட்டப்பட்டது...
வாசலில் நின்று இருந்த சர்வஜித்தோ, 'என் பாத்ரூமை விட சின்ன இடமா இருக்கு' என்று அந்த வளாகத்தைப் பார்த்து நினைத்துக் கொண்டான்...
கண்களை துப்பட்டாவினால் துடைத்துக் கொண்டே எழுந்த ஆதிரையாழ் கதவை திறந்தாள்... அங்கே நின்று இருந்தவனை பார்த்து அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது...
அதிர்ந்தே விட்டாள்...
அவள் விழிகளோ விரிய, கையில் இருந்த மூட்டையை தூக்கி அவள் வீட்டின் வாசலில் வைத்தவன், "தேங்காய்" என்றான்...
அவளுக்கு ஆச்சரியம்...
ஒரு தேங்காய்க்கு அப்படி திட்டி விட்டு இத்தனை தேங்காய்களை கொடுக்கின்றான் என்று...
"ஐயோ வேணாம்" என்றாள் அவசரமாக...
அவனிடம் இருந்து ஒரு முறைப்பு...
சட்டென அவள் பேச வந்த வார்த்தைகளை விழுங்கிக் கொண்டாள்.
அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன் மனமோ, 'இவ இனி நம்ம வீட்டுக்கு வராத போல பண்ணனும்' என்று நினைக்க, வேஷ்டியை மடித்துக் கொண்டே, "உள்ளே கூப்பிட மாட்டியா?" என்று கேட்டபடி உள்ளே நுழைய முற்பட, பதறி விட்டாள் பெண்ணவள்...
"எதுக்கு உள்ள வர்றீங்க? பார்க்கிறவங்க தப்பா நினைப்பாங்க" என்றாள்.
"நினைக்கட்டுமே" என்று சொல்லிக் கொண்டே, ஆறடி உயர உடலை வாசலின் உயரத்துக்கு ஏற்ப வளைத்து உள்ளே நுழைந்தவன் அங்கே இருந்த சுவரில் சாய, அவளோ, "நான் சத்தம் போடுவேன்" என்றாள்.
"போட்டு தான் பாரேன்... அப்படியே இழுத்து வச்சு சத்தம் போடுற வாயிலேயே கிஸ் அடிப்பேன்" என்றான் அவளை துளைத்தெடுக்கும் பார்வை பார்த்துக் கொண்டே...
அவனுக்கே அவன் பேசுவதை நினைத்து சிரிப்பு தான்...
இப்படி அவன் யாரிடமும் பேசி இல்லை...
ஆனால் இவளை மிரட்ட இதனை விட வேறு வழி அவனுக்கும் தெரியவே இல்லை...
சட்டென இரு கைகளாலும் வாயை மூடிக் கொண்டாள் பெண்ணவள்... அவனோ அங்கிருந்த சுவரில் சாய்ந்து நின்றுக் கொண்டே, ஒற்றை காலை சுவரில் குத்தியப்படி மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக் கொண்டவன், "இங்க பாரு, இனி வீட்டு பக்கம் ஐயா கொய்யான்னு சொல்லிட்டு வந்த நடக்கிறதே வேற, அடுத்த முறை இப்படி பேசிட்டு இருக்க மாட்டேன்... ரேப் பண்ணிட்டு போய்கிட்டே இருப்பேன்" என்றான்...
தூக்கி வாரிப் போட்டது அவளுக்கு...
"என்னது?" என்றாள்.
"எஸ், ரேப் பண்ணுறது எனக்கு ஹாபி" என்றவன் நிறுத்தி, "அதாவது பொழுது போக்கு, வேஷ்டி சட்டை போட்டு இருக்கேன்னு சாதாரணமா நினைச்சுடாதே... நான் ரொம்ப பொல்லாதவன்... நான் இப்போ பேசுனது நமக்குள்ளேயே இருக்கணும்... தாத்தா காதுக்கு போச்சுனா உன் ட்ரெஸ் உன் கிட்ட இருக்காது" என்று சற்று அதிகப்படி வக்கிரமாகவே பேசி விட்டான்...
அவனை பற்றி தெரியாத பெண்ணவளுக்கு பயத்தில் மேனி சில்லிட்டு போக, "தோட்டத்துல வேலை பார்க்க மட்டும் வருவேன்... இனி வீட்டுக்கு வர மாட்டேன்" என்று தழுதழுத்த குரலில் சொன்னாள்.
"அது" என்று சொல்லிக் கொண்டே பிடரியை வருடிக் கொண்டே அவன் வெளியேற அவன் முதுகை அவள் அதிர்ந்து பார்த்தாள் என்றாள். அவனோ தான் பேசியதை நினைத்து இதழ் பிரித்து சிரித்துக் கொண்டே தனது வீட்டை நோக்கிச் சென்றான்...
வீட்டுக்குள் நுழைந்தவனிடம், "என்னடா தேங்காயை கொடுத்தியா?" என்று மருதநாயகம் கேட்க, "ம்ம்" என்ற பதில் மட்டுமே அவனிடம்...
ஆதிரையாழ் இப்படி ஒரு பரிமாணத்தை சர்வஜித்திடம் எதிர்பார்க்கவே இல்லை... அவன் ஊருக்குச் செல்லும் வரை அங்கே செல்ல கூடாது என்று முடிவெடுத்து இருந்தாள்...
இவ்வளவு தூரம் அவளை மிரட்டி விட்டு வந்த சர்வஜித்துக்கோ அவள் பெயர் கூட தெரியாது...
மருதநாயகம் அவளுக்காக தன்னை அவமானப்படுத்தியதை அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை...
அவள் இனி வீட்டுக்கு வர கூடாது என்று நினைத்தவன் இப்படி மிரட்டி விட்டான்... பாவையவளும் நம்பி விட்டாள்.
கிராமத்தில் பெண்களுக்கு மானம் முக்கியம் என்று அவனுக்கு நன்கு தெரிந்து இருந்தது...
அவனுக்கு இப்போது பரம திருப்தி... அவனுக்கு பிடிக்கவில்லை என்றால் பழி வாங்க எந்த எல்லைக்கும் செல்வான்...
இன்று அவனிடம் பலியானது ஆதிரையாழ் தான்... இனியும் பலியாக போவதும் ஆதிரையாழ் தான்...
அன்றில் இருந்து மருதநாயகம் வீட்டுக்கு அவள் வரவே இல்லை...
தோட்டத்தில் வேலை முடித்து விட்டு தனது வீட்டுக்குச் சென்று விடுவாள்...
அவளை தோட்டத்தில் மருதநாயகம் பார்த்ததால் அவளை அவர் சந்தேகப்படவில்லை...
இப்படியே இரு வாரங்கள் நகர்ந்து இருக்கும்...
தோட்டத்தில் அமர்ந்து கணக்கு பிள்ளையுடன் பேசிக் கொண்டு இருந்த மருதநாயகத்தை நோக்கி அவர்கள் வீட்டில் வேலை பார்க்கும் முத்து ஓடி வந்தான்...
"என்னடா?" என்று மருதநாயகம் கேட்க, "யாழ் புள்ள வீட்ல பெரிய சத்தமா இருக்குங்க ஐயா, மணி பய அந்த புள்ளைக்கு அடிக்கிறான் போல" என்று சொன்னான்...
மருதநாயகத்துக்கு கோபத்தில் மீசை துடித்தது...
"வாங்கடா" என்று சொல்லிக் கொண்டே தோளில் கிடந்த துண்டை உதறியவர் வீறு நடை போட்டுச் செல்ல, அவரை பின் தொடர்ந்து அங்கே வேலை செய்பவர்கள் கத்தி கடப்பாறையுடன் சென்றார்கள்...
சர்வஜித்தோ அங்கிருந்த தென்னை மரத்தில் சாய்ந்து நின்றுக் கொண்டே, 'அவங்க வீட்ல பிரச்சனைனா இந்த பெருசுக்கு என்ன வந்திச்சு... சண்டைக்கு கிளம்பி போகுது' என்று நினைத்துக் கொண்டே இருக்க, சட்டென அவனை திரும்பி பார்த்த மருதநாயகமோ, "நீயும் வாடா" என்றார்...
"அவளுக்காக எல்லாம் என்னால சண்டை போட முடியாது" என்றான் அவன் தோள்களை உலுக்கி...
"அது தான் உடம்பை இப்படி வளர்த்து வச்சு இருக்கியே... சண்டைக்கு பயப்படுற" என்று அவன் தன்மானத்தை சீண்டி விட்டார்...
"நான் பயப்படுறேன்னு சோன்னேனா?" என்று அவன் கேட்க, "பயம் தான்... இல்லனா சும்மா உப்பு சப்பு இல்லாத காரணம் சொல்வியா? ஆம்பிளையா இருந்தா வாடா" என்று சொல்ல, அவனுக்கு சுர்ரென்று ஏறியது...
"இப்போ சண்டை போடணும், அவ்வளவு தானே" என்று கேட்டுக் கொண்டே, வேஷ்டியை மடித்துக் கட்டியவன், அருகே நின்றவனிடம் அரிவாளை வாங்கிக் கொண்டே, "யாரை சீவணும்னு சொல்லுங்க, சீவிடுறேன்" என்று சொல்லிக் கொண்டே மருதநாயகத்துடன் கூட நடக்க, அவரும், "அது" என்று சொல்லிக் கொண்டே, அனைவருடனும் ஆதிரையாழின் வீட்டை அடைந்தார்...
அங்கே வாசலில் வைத்து, "கல்யாணம் பண்ணிக்க சொன்னா பண்ண வேண்டியது தானே... திமிரா உனக்கு" என்று ஆதிரையாழின் தலை முடியை பிடித்து உலுக்கினான் மணி...
அதனை பார்த்த சர்வஜித்துக்கோ குளு குளு உணர்வு...
'அப்படியே ரெண்டு நல்லா போடணும்' என்று மனதுக்குள் சந்தோஷப்பட்டவனால் வெளியே சந்தோஷப்பட முடியவே இல்லை...
கோபப்படுவது போல காட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயம்...
முறைத்தபடி நின்றான்...
மருதநாயகமோ, "அவ மேல இருந்து கையை எடுடா" என்று சீறியதும் தான் நிமிர்ந்து கத்திகளுடன் வந்தவர்களை பார்த்து சற்று பயந்து போனான் மணி...
அதுவும் முறுக்கேறிய தோற்றத்தில் கையில் கத்தியுடன் சர்வஜித் நின்று இருக்க, அவன் தோற்றத்தையும் உயரத்தையும் பார்த்த மணியோ எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டே ஆதிரையாழின் மேல் இருந்து கையை எடுத்தான்...
இதே சமயம் தோட்டத்தை சுற்றி பார்த்து விட்டு அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார் மருதநாயகம்... அங்கே வேலை செய்துக் கொண்டு இருந்தவனோ மருதநாயகத்தின் அருகே வந்து, "யாழ் பொண்ணு வந்து தேங்காய் எடுத்துச்சு ஐயா, தம்பி திட்டி விட்டார்... அழுதுக்கிட்டே போச்சு ஐயா" என்று போட்டுக் கொடுத்து விட்டான்...
மருதநாயகத்தின் மீசை துடிக்க, கண்கள் சிவந்து போக, வேகமாக சர்வஜித்தை நோக்கி வந்தார்...
தேங்காய் உரித்துக் கொண்டே இருந்தவனது ஷேர்ட் காலரை பற்றி இழுத்தவர், "அந்த பொண்ணு கிட்ட என்னடா சொன்ன?" என்று கேட்டார்...
அவருக்கு ஆதிரையாழை அவன் காயப்படுத்தியதை தாங்கவே முடியவில்லை...
அவர் கையையும் அவரையும் அழுத்தமாக பார்த்தவன், "பேரனை விட, அந்த பொண்ணு முக்கியமா போச்சுல்ல" என்று கேட்டான்...
"ஆமாடா அப்படி தான்... நீ எந்த மூலைலயோ இருந்துட்டு உன் இஷ்டப்படி வாழுற... உனக்கு பந்த பாசம் பத்தி என்ன தெரியும்... அவ எவ்ளோ நல்ல பொண்ணு தெரியுமா? தேங்காய் எடுத்ததுக்கு எதுக்கு திட்டுன?" என்று காட்டமாக கேட்க, "கையை எடுங்க தாத்தா" என்று சொல்லிக் கொண்டே ஷேர்ட் காலரை பற்றி இருந்த அவர் கையை அழுத்தமாக பிடித்து அகற்றியவன், ஒற்றைக் கையால் தலையை கோதி விட்டு இடையில் இரு கைகளையும் குற்றி அவரை மேலிருந்து கீழ் பார்த்தவன், "இங்க நான் வந்திருக்கவே கூடாது... யாரோ ஒருத்திக்காக என்னையே அவமானப்படுத்துறீங்கல்ல" என்றான்...
"நீ என்ன பார்க்க ஆசையா வந்த போல பேசுற... சொத்துக்காக தானே வர்ற" என்று அவர் கேட்க, அவனோ ஆழ்ந்த மூச்சை எடுத்தவன், அவரை அனல் தெறிக்க பார்த்தான்...
"உன் முறைப்பு எல்லாம் அமெரிக்காவுல தான் செல்லுபடி ஆகும், என் கிட்ட உன் பருப்பு வேகாது... அந்த பொண்ண எதுக்கு திட்டுன? எனக்கு பதில் தெரிஞ்சாகணும்" என்றார்...
அவனோ, அங்கே வேலை செய்துக் கொண்டு இருந்தவனை அழுத்தமாக பார்க்க, அவனோ பயந்து தென்னை மரத்தின் பின்னே ஒளிந்துக் கொண்டான்...
"அவனை எதுக்குடா முறைக்குற?" என்றார் மருதநாயகம்.
"அவன் தானே போட்டு கொடுத்தான்" என்று சர்வஜித் கேட்க, மருதநாயகமோ, "அதெல்லாம் உனக்கு தேவை இல்லாத விஷயம்... அந்த பொண்ண எதுக்கு திட்டுன?" என்று கேட்டார்...
"அவ திருடி தாத்தா" என்றான் அவன் எரிச்சலாக...
"என்னத்தடா திருடுனா?" என்று அவர் கேட்க, "நான் உரிச்சு வைச்ச தேங்காயை திருடிட்டு போறா" என்றான் அவன்...
"அட போடா கஞ்ச பிசினாரி, நீ தான் அவ்வளவு சம்பாதிக்கிறியே... ஒரு தேங்காய்க்கு கணக்கு பார்க்கிற... அவளை தேவைப்பட்ட நேரம் எல்லாம் எடுத்து போக சொன்னதே நான் தான்" என்றார்.
அவனோ, "வயசாக எல்லாம் மந்தமா போச்சு" என்றான் கடுப்பாக... அவரோ, "வயசாக ஆக தான் எனக்கு மனிதாபிமானம் வந்து இருக்கு... இப்போ நீ உழைக்கிற பணம் எல்லாம் சாகும் போது விட்டு தானே போக போற... இல்லாதவங்க அனுபவிக்கிறதுல ஒன்னும் தப்பில்லயே, இப்படியே நீ ஏட்டிக்கு போட்டி பேசிட்டு இருந்தா உன் பேர்ல எழுதுன சொத்து எல்லாமே மாத்தி வேற யாருக்கும் எழுதி வச்சிடுவேன் பார்த்துக்கோ" என்று தனது மிரட்டலை இறுதியாக அவர் கையில் எடுத்த பின்னர் தான் சர்வஜித் அடங்கி நிதானமாகி போனான்...
தலையை சலிப்பாக இரு பக்கமும் ஆட்டிக் கொண்டே அவரைப் பார்த்தவன், "இப்போ என்ன பண்ணனும்?" என்று கேட்க, அவரோ, "அம்மா, அப்பா இல்லாத பொண்ணு, தனியா வேற இருக்கா... ஒரு தேங்காய்க்காக அவளை திட்டி இருக்க நீ... அதுக்காக இதான் உனக்கு தண்டனை... அந்த பொண்ணுக்கு ஒரு மூட்டை தேங்காய் கொண்டு போய் நீயே அவ வீட்ல கொடுத்துட்டு வரணும்" என்றார்...
அவனுக்கோ சுர்ரென்று கோபம்...
"நான் கொடுத்துட்டு வரணுமா?" என்றான் அவன் ஆத்திரத்துடன்...
"நீ தான் கொடுக்கணும்" என்று சுட்டு விரலை எடுத்து அவன் திண்ணிய மார்பில் வைத்து சொல்ல, அவனால் மறுக்க முடியுமா என்ன?
ஓரிரெண்டு கோடி என்றால் கண்டுக் கொள்ளவே மாட்டான்...
அவர் வசம் இருப்பதோ பல மில்லியன்கள் பெறுமதியான சொத்துக்கள்...
விட்டு கொடுக்க அவனுக்கு மனமே இல்லை...
அப்படி விட்டு கொடுத்தால் அமெரிக்காவில் அவன் மதிப்பு இழந்து விடும் என்று பயம் வேறு அவனுக்கு...
எத்தனை பேரை அலட்சியப்படுத்தி இருப்பான்... எத்தனை பேரை அவமானப்படுத்தி இருப்பான்... அவன் மதிப்பு இழந்தால் அவனால் அவமானப்பட்ட எல்லாருமே அவனை எள்ளி நகையாடுவார்கள் அல்லவா?
அமெரிக்காவில் தனது மதிப்பையும் மரியாதையையும் தக்க வைத்துக் கொள்ள, இந்தியாவில் அடிபணிந்தால் பரவாயில்லை என்று தோன்றியது...
அவரை முறைத்துக் கொண்டே, அருகே இருந்த சாக்குப் பையை எடுத்தவன், அதற்குள் தேங்காய்களை எடுத்துப் போட்டுக் கொண்டே, "இது போதுமா?" என்று கேட்டான்...
அவரோ, "இன்னும் நாலு சேர்த்து போடுடா, கஞ்ச பிசினாரி" என்றார்...
அவனை இப்படி தரக்குறைவாக திட்டும் உரிமையும் தைரியமும் அவருக்கு மட்டும் தான் உண்டு...
அவனும் தேங்காய்களை எடுத்துக் கொண்டே, "அவ வீடு எங்க இருக்கு?" என்று கேட்டான்... அவரும் அவளது வீட்டை நோக்கி கையை காட்ட, தேங்காயை முதுகில் தூக்கி போட்டுக் கொண்டே நடந்தவன் மனமோ, 'இந்த சொத்துக்காக என்ன எல்லாம் பண்ண வேண்டி இருக்கு... ச்சைக்' என்று நினைத்துக் கொண்டது...
அவளது வீட்டை நோக்கிச் சென்றான்...
அவளோ தேங்காய் இல்லாமல் சமைத்துக் கொண்டு இருந்தாலும் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்துக் கொண்டு இருந்தது...
அவன் சொன்ன வார்த்தைகள் அவளுக்கு முள்ளால் தைத்தன...
எப்படியும் சாப்பிட்டாலும் இறங்காது என்று தெரியும்...
சமைப்பதை நிறுத்தி விடலாமா? என்று அவள் யோசித்துக் கொண்டே இருக்க, அவர்களின் வாசல் கதவு தட்டப்பட்டது...
வாசலில் நின்று இருந்த சர்வஜித்தோ, 'என் பாத்ரூமை விட சின்ன இடமா இருக்கு' என்று அந்த வளாகத்தைப் பார்த்து நினைத்துக் கொண்டான்...
கண்களை துப்பட்டாவினால் துடைத்துக் கொண்டே எழுந்த ஆதிரையாழ் கதவை திறந்தாள்... அங்கே நின்று இருந்தவனை பார்த்து அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது...
அதிர்ந்தே விட்டாள்...
அவள் விழிகளோ விரிய, கையில் இருந்த மூட்டையை தூக்கி அவள் வீட்டின் வாசலில் வைத்தவன், "தேங்காய்" என்றான்...
அவளுக்கு ஆச்சரியம்...
ஒரு தேங்காய்க்கு அப்படி திட்டி விட்டு இத்தனை தேங்காய்களை கொடுக்கின்றான் என்று...
"ஐயோ வேணாம்" என்றாள் அவசரமாக...
அவனிடம் இருந்து ஒரு முறைப்பு...
சட்டென அவள் பேச வந்த வார்த்தைகளை விழுங்கிக் கொண்டாள்.
அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன் மனமோ, 'இவ இனி நம்ம வீட்டுக்கு வராத போல பண்ணனும்' என்று நினைக்க, வேஷ்டியை மடித்துக் கொண்டே, "உள்ளே கூப்பிட மாட்டியா?" என்று கேட்டபடி உள்ளே நுழைய முற்பட, பதறி விட்டாள் பெண்ணவள்...
"எதுக்கு உள்ள வர்றீங்க? பார்க்கிறவங்க தப்பா நினைப்பாங்க" என்றாள்.
"நினைக்கட்டுமே" என்று சொல்லிக் கொண்டே, ஆறடி உயர உடலை வாசலின் உயரத்துக்கு ஏற்ப வளைத்து உள்ளே நுழைந்தவன் அங்கே இருந்த சுவரில் சாய, அவளோ, "நான் சத்தம் போடுவேன்" என்றாள்.
"போட்டு தான் பாரேன்... அப்படியே இழுத்து வச்சு சத்தம் போடுற வாயிலேயே கிஸ் அடிப்பேன்" என்றான் அவளை துளைத்தெடுக்கும் பார்வை பார்த்துக் கொண்டே...
அவனுக்கே அவன் பேசுவதை நினைத்து சிரிப்பு தான்...
இப்படி அவன் யாரிடமும் பேசி இல்லை...
ஆனால் இவளை மிரட்ட இதனை விட வேறு வழி அவனுக்கும் தெரியவே இல்லை...
சட்டென இரு கைகளாலும் வாயை மூடிக் கொண்டாள் பெண்ணவள்... அவனோ அங்கிருந்த சுவரில் சாய்ந்து நின்றுக் கொண்டே, ஒற்றை காலை சுவரில் குத்தியப்படி மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக் கொண்டவன், "இங்க பாரு, இனி வீட்டு பக்கம் ஐயா கொய்யான்னு சொல்லிட்டு வந்த நடக்கிறதே வேற, அடுத்த முறை இப்படி பேசிட்டு இருக்க மாட்டேன்... ரேப் பண்ணிட்டு போய்கிட்டே இருப்பேன்" என்றான்...
தூக்கி வாரிப் போட்டது அவளுக்கு...
"என்னது?" என்றாள்.
"எஸ், ரேப் பண்ணுறது எனக்கு ஹாபி" என்றவன் நிறுத்தி, "அதாவது பொழுது போக்கு, வேஷ்டி சட்டை போட்டு இருக்கேன்னு சாதாரணமா நினைச்சுடாதே... நான் ரொம்ப பொல்லாதவன்... நான் இப்போ பேசுனது நமக்குள்ளேயே இருக்கணும்... தாத்தா காதுக்கு போச்சுனா உன் ட்ரெஸ் உன் கிட்ட இருக்காது" என்று சற்று அதிகப்படி வக்கிரமாகவே பேசி விட்டான்...
அவனை பற்றி தெரியாத பெண்ணவளுக்கு பயத்தில் மேனி சில்லிட்டு போக, "தோட்டத்துல வேலை பார்க்க மட்டும் வருவேன்... இனி வீட்டுக்கு வர மாட்டேன்" என்று தழுதழுத்த குரலில் சொன்னாள்.
"அது" என்று சொல்லிக் கொண்டே பிடரியை வருடிக் கொண்டே அவன் வெளியேற அவன் முதுகை அவள் அதிர்ந்து பார்த்தாள் என்றாள். அவனோ தான் பேசியதை நினைத்து இதழ் பிரித்து சிரித்துக் கொண்டே தனது வீட்டை நோக்கிச் சென்றான்...
வீட்டுக்குள் நுழைந்தவனிடம், "என்னடா தேங்காயை கொடுத்தியா?" என்று மருதநாயகம் கேட்க, "ம்ம்" என்ற பதில் மட்டுமே அவனிடம்...
ஆதிரையாழ் இப்படி ஒரு பரிமாணத்தை சர்வஜித்திடம் எதிர்பார்க்கவே இல்லை... அவன் ஊருக்குச் செல்லும் வரை அங்கே செல்ல கூடாது என்று முடிவெடுத்து இருந்தாள்...
இவ்வளவு தூரம் அவளை மிரட்டி விட்டு வந்த சர்வஜித்துக்கோ அவள் பெயர் கூட தெரியாது...
மருதநாயகம் அவளுக்காக தன்னை அவமானப்படுத்தியதை அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை...
அவள் இனி வீட்டுக்கு வர கூடாது என்று நினைத்தவன் இப்படி மிரட்டி விட்டான்... பாவையவளும் நம்பி விட்டாள்.
கிராமத்தில் பெண்களுக்கு மானம் முக்கியம் என்று அவனுக்கு நன்கு தெரிந்து இருந்தது...
அவனுக்கு இப்போது பரம திருப்தி... அவனுக்கு பிடிக்கவில்லை என்றால் பழி வாங்க எந்த எல்லைக்கும் செல்வான்...
இன்று அவனிடம் பலியானது ஆதிரையாழ் தான்... இனியும் பலியாக போவதும் ஆதிரையாழ் தான்...
அன்றில் இருந்து மருதநாயகம் வீட்டுக்கு அவள் வரவே இல்லை...
தோட்டத்தில் வேலை முடித்து விட்டு தனது வீட்டுக்குச் சென்று விடுவாள்...
அவளை தோட்டத்தில் மருதநாயகம் பார்த்ததால் அவளை அவர் சந்தேகப்படவில்லை...
இப்படியே இரு வாரங்கள் நகர்ந்து இருக்கும்...
தோட்டத்தில் அமர்ந்து கணக்கு பிள்ளையுடன் பேசிக் கொண்டு இருந்த மருதநாயகத்தை நோக்கி அவர்கள் வீட்டில் வேலை பார்க்கும் முத்து ஓடி வந்தான்...
"என்னடா?" என்று மருதநாயகம் கேட்க, "யாழ் புள்ள வீட்ல பெரிய சத்தமா இருக்குங்க ஐயா, மணி பய அந்த புள்ளைக்கு அடிக்கிறான் போல" என்று சொன்னான்...
மருதநாயகத்துக்கு கோபத்தில் மீசை துடித்தது...
"வாங்கடா" என்று சொல்லிக் கொண்டே தோளில் கிடந்த துண்டை உதறியவர் வீறு நடை போட்டுச் செல்ல, அவரை பின் தொடர்ந்து அங்கே வேலை செய்பவர்கள் கத்தி கடப்பாறையுடன் சென்றார்கள்...
சர்வஜித்தோ அங்கிருந்த தென்னை மரத்தில் சாய்ந்து நின்றுக் கொண்டே, 'அவங்க வீட்ல பிரச்சனைனா இந்த பெருசுக்கு என்ன வந்திச்சு... சண்டைக்கு கிளம்பி போகுது' என்று நினைத்துக் கொண்டே இருக்க, சட்டென அவனை திரும்பி பார்த்த மருதநாயகமோ, "நீயும் வாடா" என்றார்...
"அவளுக்காக எல்லாம் என்னால சண்டை போட முடியாது" என்றான் அவன் தோள்களை உலுக்கி...
"அது தான் உடம்பை இப்படி வளர்த்து வச்சு இருக்கியே... சண்டைக்கு பயப்படுற" என்று அவன் தன்மானத்தை சீண்டி விட்டார்...
"நான் பயப்படுறேன்னு சோன்னேனா?" என்று அவன் கேட்க, "பயம் தான்... இல்லனா சும்மா உப்பு சப்பு இல்லாத காரணம் சொல்வியா? ஆம்பிளையா இருந்தா வாடா" என்று சொல்ல, அவனுக்கு சுர்ரென்று ஏறியது...
"இப்போ சண்டை போடணும், அவ்வளவு தானே" என்று கேட்டுக் கொண்டே, வேஷ்டியை மடித்துக் கட்டியவன், அருகே நின்றவனிடம் அரிவாளை வாங்கிக் கொண்டே, "யாரை சீவணும்னு சொல்லுங்க, சீவிடுறேன்" என்று சொல்லிக் கொண்டே மருதநாயகத்துடன் கூட நடக்க, அவரும், "அது" என்று சொல்லிக் கொண்டே, அனைவருடனும் ஆதிரையாழின் வீட்டை அடைந்தார்...
அங்கே வாசலில் வைத்து, "கல்யாணம் பண்ணிக்க சொன்னா பண்ண வேண்டியது தானே... திமிரா உனக்கு" என்று ஆதிரையாழின் தலை முடியை பிடித்து உலுக்கினான் மணி...
அதனை பார்த்த சர்வஜித்துக்கோ குளு குளு உணர்வு...
'அப்படியே ரெண்டு நல்லா போடணும்' என்று மனதுக்குள் சந்தோஷப்பட்டவனால் வெளியே சந்தோஷப்பட முடியவே இல்லை...
கோபப்படுவது போல காட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயம்...
முறைத்தபடி நின்றான்...
மருதநாயகமோ, "அவ மேல இருந்து கையை எடுடா" என்று சீறியதும் தான் நிமிர்ந்து கத்திகளுடன் வந்தவர்களை பார்த்து சற்று பயந்து போனான் மணி...
அதுவும் முறுக்கேறிய தோற்றத்தில் கையில் கத்தியுடன் சர்வஜித் நின்று இருக்க, அவன் தோற்றத்தையும் உயரத்தையும் பார்த்த மணியோ எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டே ஆதிரையாழின் மேல் இருந்து கையை எடுத்தான்...