அத்தியாயம் 3
"அப்போ வா சாப்பிடலாம்" என்று சொல்ல, "ம்ம்" என்று சொல்லிக் கொண்டே, அவருடன் சென்றவள் மேசையில் அமர, ரத்னமோ, அவளுக்கு சாப்பாட்டை எடுத்து வைத்தார்.
"நீங்க சாப்பிடலையா?" என்று கேட்டவளிடம், "நான் டைமுக்கு சாப்பிட்டுடுவேன், ஷுகர் டேப்ளெட்ஸ் போடணும்ல" என்று சொன்னார்.
"நீங்களா சமைச்சீங்க??" என்று கேட்க, அவரும், "ம்ம், டின்னர் நான் தான் பண்ணுவேன். தேவ் நேரத்துக்கே வந்துட்டான்னா அவன் பண்ணுவான்... லன்ச், வீடு க்ளீனிங் எல்லாம் சேர்வன்ட் கேர்ள் காலைல வந்து பண்ணிடுவா" என்று சொல்ல, மெலிதாக புன்னகைத்தவளுக்கு அவரை நினைத்து ஒரு பிரமிப்பு இருந்தது...
மனைவியின் இறப்பின் பின்னர் இன்னொரு திருமணம் செய்யாமல் வாழும் கணவன் மாரை விரல் விட்டு எண்ணி விடலாம் அல்லவா? அதில் ரத்னமும் ஒருவர் தான் என்று தோன்ற, அவர் சமைத்த உணவை வாய்க்குள் வைத்துக் கொண்டே, "நல்லா இருக்கு மாமா" என்று சொன்னாள்.
"பல வருஷ ட்ரெயினிங் மா" என்று சொன்னவரின் குரலில் மனைவியின் இழப்பின் வலி அப்பட்டமாக தெரிய, "எப்படி இறந்தாங்க?" என்று தயங்கி தயங்கி கேட்டுக் கொண்டே, அங்கே சுவரில் மாட்டி இருந்த லக்ஷ்மியின் புகைப்படத்தைப் பார்த்தாள்.
தேவ் உடைய சாயல் தான் அவருக்கும்...
தேவ் உடைய நீல நிற கண் மணிகள் அவருக்கும் இருந்தன...
அவன் விழிகளைப் பார்த்தாலே அவளுக்குள் ஒரு வித உதறல் எடுக்கும்...
ரத்னமோ, "ரெண்டாவது குழந்தை டிலிவேரி நேரம் இப்படி ஆயிடுச்சு...குழந்தையும் இறந்து தாயும் இறந்துட்டாங்க" என்று வருத்தத்துடன் சொல்ல, "சாரி" என்றாள்.
"தட்ஸ் ஓகே" என்று அவர் மென் சிரிப்புடன் சொல்ல, "உங்க மகன், அத்தை போலவே" என்று சொல்ல, அவரோ சிரித்துக் கொண்டே, "ம்ம், அதே கண்கள்" என்றார்.
அவளும் மென் புன்னகையுடன், "இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலையா நீங்க?" என்று கேட்க, "இல்லம்மா, தேவ்வுக்கு அவன் அம்மா மேல உயிர்... அவ இடத்துல யாரையும் வச்சு பார்க்க மாட்டான்... எனக்கும் லக்ஷ்மி இடத்துல இன்னொரு பொண்ண கற்பனை கூட பண்ணி பார்க்க முடியல" என்றார் ஏமாற்றமாக...
அவளுக்கோ சுள்லென்று ஒரு வலி...
மூர்த்தி செய்த செயல் மீண்டும் நினைவுக்கு வர, ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டவள், "இப்படியே எல்லோரும் இருந்து இருந்தா நல்லா இருந்து இருக்கும்ல" என்றாள்.
அவளை ஆராய்ச்சியாக ரத்னம் பார்க்க, "நானும் பிறந்து இருக்க மாட்டேன்" என்று ஒரு வலி நிறைந்த குரலில் சொல்லிக் கொண்டே உணவை எடுத்து வாயில் வைத்தவளுக்கு சாப்பிட முடியவில்லை...
அழுகை வந்தது, கண்களை அவசரமாக துடைத்துக் கொண்டாள்.
ரத்னமோ, "மனசை போட்டு குழப்பிக்காம சாப்பிடும்மா" என்று சொல்ல, அந்த நேரம் தேவ்வும் அவ்விடத்துக்கு வந்தான்...
அவள் பேசியதை கேட்டுக் கொண்டே வந்தவன், எதுவும் பேசாமல், அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்து விட்டான்.
ரத்னமோ, "உன் அத்தை கிட்ட என்ன சொல்ல போற?" என்று தேவ்விடம் கேட்க, "ம்ம் கேட்கும் போது பார்த்துக்கலாம்" என்று சொல்லிக் கொண்டே சாப்பிட்டான்.
அதனை தொடர்ந்து எல்லோரும் தூங்கச் சென்று விட்டார்கள்...
புது இடம் என்பதால் பத்மாவுக்கு தூக்கம் சீக்கிரம் வரவே இல்லை...
படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தவள், நீண்ட நேரம் கழித்தே தூங்கி இருந்தாள்.
அடுத்த நாள் காலையில் எழுந்து, குளித்து விட்டு ஆயத்தமாகி ஹாலுக்கு வந்த சமயம், ஜெயாவும் ரத்னத்தை பார்க்க வந்து இருந்தார்...
ஏதாவது புதிதாக சமைத்தால் கொண்டு வந்து கொடுப்பார்...
இன்று அவருக்கு சிக்கன் கறி செய்துக் கொண்டு வந்து இருந்தவரோ, வீட்டு வேலை செய்ய வந்த பெண்ணான துர்காவிடம் உணவை கொடுத்து விட்டு, ஹாலினுள் அவரை அதிர்ந்து பார்த்தபடி நின்ற பத்மாவைப் பார்த்தார்...
அவர் முகம் இறுகியது...
அங்கே அமர்ந்து இருந்த ரத்னமோ, "இங்க உட்காரு ஜெயா" என்று அவரிடம் விளக்கம் சொல்ல முயல, "இவளை யாரு இங்க அழைச்சு வந்தது?" என்று சீற ஆரம்பித்து விட்டார் ஜெயா.
"ஜெயா சொன்னா கேளு" என்று ரத்னம் சொல்லிக் கொண்டே எழ, "இவளை வெளியே துரத்துங்க, என் வாழ்க்கையை அழிச்சது இவள் தான்" என்று சொன்னபடி, அவளை அடிக்க அவர் நெருங்கி இருக்க, அவளுக்கும் அவருக்கும் நடுவே வந்து நின்று கொண்டே, ஜெயாவை ஆழ்ந்து பார்த்தான் தேவ்...
"தேவ், தள்ளு, இவ இங்க இருக்க கூடாது" என்று சொல்லிக் கொண்டே, அவனை தாண்டிச் செல்ல முயல, அவர் கையை பற்றிப் பிடித்தவன், "அத்தை ப்ளீஸ்" என்றான்.
அவரோ, "இவ தான் எல்லாத்துக்கும் காரணம், என் புருஷன கொன்னதும் இவ தான்" என்று சொல்ல, பத்மாவுக்கு அந்த வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ஊசியால் குத்தும் உணர்வைக் கொண்ட, "இப்படி திரும்ப திரும்ப சொல்லாதீங்க" என்று அவள் ஆரம்பிக்க, தலையை திருப்பி பின்னால் நின்றவளைப் பார்த்தவன், "அதிகம் பேசாம உள்ளே போ" என்றான்.
அவளுக்கு ஆதங்கம்...
தன்னை பேசவே விடமாட்டேன் என்கின்றானே...
எல்லோரும் அவளை காயப்படுத்திக் கொண்டே இருக்கும் போது அவள் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டுமா? என்கின்ற ஆதங்கம்...
"அவங்க பேசிட்டே" என்று ஆரம்பிக்க, "உள்ளே போனு சொல்றேன்ல" என்று கர்ஜித்தவன் விழிகள், அவளில் அழுத்தமாக படிய, அவளுக்கோ அவன் விழிகளை பார்த்ததுமே ஒரு வித பதட்டம்...
எதுவும் பேசாமல் விறு விறுவென உள்ளேச் சென்று கதவை தாழிட்டுக் கொண்டாள்.
கோபம் வந்தது...
காட்ட முடியாத நிலை...
இதே சமயம் ஜெயாவோ, "அவ தான் தப்பா பிறந்தவ, அவளை எதுக்கு இங்க வச்சு இருக்க தேவ்?" என்று அழுதுக் கொண்டே அவனிடம் கேட்க, அவனும், "வாங்க பேசலாம்" என்று சொல்லி, அவர் தோளில் கையை போட்டு அழைத்துச் சென்றவன், இருக்கையில் அவரை அமர வைத்துக் கொண்டே, அவனும் அமர்ந்தான்...
ரத்னமோ, "துர்கா கொஞ்சம் தண்ணி கொடும்மா" என்று சொல்ல, துர்காவும் நீரை கொண்டு வந்து ஜெயாவிடம் கொடுக்க, அவரும் அதனை வாங்கி குடித்து விட்டு, "அவ அம்மா பண்ணுனது எல்லாம் மறந்துட்டீங்களா?" என்று கேட்டார்.
தேவ்வோ, "அத்தை, முடிஞ்சத பத்தி பேச வேணாம்... நடந்துக்கிட்டு இருக்கிறத பேசலாமா?" என்று கேட்டான்.
ஜெயாவோ, "அவளை ஏன் இங்க அழைச்சு வந்த?" என்று கேட்டார்.
"ஏன்னா உங்க மகனால தான்" என்றான் தேவ் அழுத்தமாக.
"அவன் என்ன பண்ணுனான்?" என்று ஜெயா கேட்க, "நேத்து குடிச்சிட்டு ஃப்ரெண்ட்ஸ் கூட போய் அவ வீட்டு கதவை உடைச்சு இருக்கான்... ஏதாவது ஆகி இருந்தா வாழ்க்கை முழுக்க அவன் தான் ஜெயில்ல இருப்பான்... நான் சொல்லியோ நீங்க சொல்லியோ அவன் கேக்கிற ஆள் இல்லை... சரி சரின்னு சொல்லிட்டு, அவனுக்கு தோணுனத தான் பண்ணுவான்" என்று ஆதங்கமாக சொல்ல, ஜெயாவுக்கும் ஒரு மாதிரி ஆகி விட்டது...
"அவனை என்ன பண்ணுறதுன்னு தெரியல தேவ்... அவன் அப்பா பண்ணுன வேலையால ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கான்" என்று சொல்ல, தேவ்வோ, "அது எனக்கும் புரியுது... ஆனா அது எல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை... அவன் பொறுப்பு இல்லாம இருக்கிறதுக்கு சொல்ற நொண்டி காரணம் தான் இது" என்று சொன்னான்.
ஜெயாவோ, "எப்போ அவளை இங்க இருந்து அனுப்ப போற?" என்று கேட்டார்.
"அத்தை, நமக்கு ஆயிரம் கோபம் இருந்தாலும், இந்த பொண்ணு என்ன பண்ணுவா? ஒரு நல்ல வாழ்க்கை" என்று ஆரம்பிக்க, சட்டென எழுந்தவர், "நீ சரி இல்ல தேவ்" என்றார்.
"அத்தை ப்ளீஸ்" என்றான்.
"அவ இங்க இருக்க கூடாது" என்று சொல்ல, "அந்த பொண்ணுக்கு ஒரு நல்ல வழி அமைச்சு கொடுக்கும் வரைக்கும், இங்க தான் இருப்பா" என்றான் அழுத்தமாக...
"அவ அம்மா என் புருஷன மயக்குன போல. இவ உன்னை மயக்கிட்டாளா?" என்று ஆதங்கமாக கேட்க, ரத்னமோ, "என்ன பேசுற ஜெயா" என்றார்...
கண்களை மூடி திறந்த தேவ், "அத்தை இப்படி பேசாதீங்க" என்று சொல்ல, "வேற எப்படி பேசுறது?" என்று ஆதங்கமாக கேட்க, "அத விடுங்க, எப்போ பெங்களூர் கிளம்புறீங்க?" என்று கேட்டான்.
நித்யா அங்கே தான் வேலை செய்கின்றாள்...
"என்னை அங்கே துரத்தி விட்டுட்டு இங்க நீ கூத்தடிக்கலாம்னு பார்க்கிறியா?" என்று எகிற, அவனோ இதழ் குவித்து ஊதிக் கொண்டே, "அவ இங்க தான் இருப்பா, நல்ல லைஃப் அவளுக்கு வந்ததும் இங்க இருந்து கிளம்புவா... புரிஞ்சுக்கோங்க" என்று சொல்ல, "என்னடா புரியுறது? அவ இருக்கிற வரைக்கும் நான் இந்த வீட்டு பக்கம் வர மாட்டேன்" என்று சொல்லி விட்டு வெளியேறி இருக்க, அறைக்குள் மூடி இருந்த கதவில் சாய்ந்து நின்று அவர் பேசியதை கேட்டு கண்ணீர் விட்ட பத்மா, கண்களை துடைத்துக் கொண்டே வெளியே வந்து இருந்தாள்.
"ஆஃபீஸ் கிளம்புறியாம்மா?" என்று ரத்னம் கேட்க, தலையை குனிந்துக் கொண்டே, "நான் இங்க இருந்து கிளம்பிடுறேன்... ஏதாவது லேடீஸ் ஹாஸ்டல்ல" என்று ஆரம்பிக்க, "உளறாம, சாப்பிட்டுட்டு வேலைக்கு கிளம்பு" என்று சொல்லிக் கொண்டே அவளை தாண்டிச் சென்றான் தேவ்...
"இல்ல நிஜமா" என்று அவள் பேசிக் கொண்டே இருக்க, தேவ் அறைக்குள் நுழைந்து விட்டான்...
ரத்னம் பேப்பர் பார்க்க ஆரம்பித்து விட்டார்...
அவள் பேசுவதை இருவரும் கேட்க தயார் இல்லை என்று புரிய, பெருமூச்சுடன் சாப்பிடச் சென்று உட்கார்ந்தவளுக்கு மனம் பிசைந்துக் கொண்டு இருந்தது...
ஜெயா மீது எப்போதுமே அவளுக்கு ஒரு பரிதாப உணர்வு இருக்கும்.
அவர் நிலைக்கு தெரிந்தோ தெரியாமலோ அவளும் காரணம் அல்லவா?
அதனாலேயே அவரை அவளால் வெறுக்க முடியவில்லை...
இன்றும் அவர் வீட்டுக்கு வர மாட்டேன் என்று சொன்னது அவளுக்கு மனதில் பாரத்தை தான் ஏற்றி இருந்தது...
வீட்டை விட்டு போகவும் ரத்னம் மற்றும் தேவ் விட மாட்டார்கள் என்று புரிய, என்ன செய்வது என்று தெரியாமல் காலம் நகரும் போக்கில் அவளும் வாழ ஆரம்பித்து விட்டாள்.
இப்படியே ஒரு வாரம் நகர்ந்து இருக்கும், அன்று வேலை விட்டு நேரே தேவ் சென்றது என்னவோ ஜெயா வீட்டுக்கு தான்...
அவன் வீட்டினுள் நுழைந்ததுமே, ஜெயா அவனை முறைத்துக் கொண்டே, அறைக்குள் செல்ல, "அத்தை" என்று சொல்லிக் கொண்டே கையை பற்றினான்...
"பேசாதேடா" என்று கண்ணீருடன் வந்தது அவர் வார்த்தைகள்...
அவர் கையை பற்றி அமர வைத்தவர், "இன்னைக்கு நைட் பெங்களூர் போறீங்க தானே... இப்படி என் கூட கோபப்பட்டுட்டு கிளம்பலாமா?" என்று கேட்க, அவரோ, "நீ பண்ணுனது சரியா?" என்று கேட்டார்.
"அத விடுங்க" என்றவனை உறுத்து விழித்தவர், "அத எப்படி விட முடியும்?" என்றார்.
அவனோ அவர் கையை வருடிக் கொண்டே, "உங்க ஃபீலிங்ஸ் புரியுது... ஆனா" என்று இழுக்க, "என்னடா ஆனா?" என்று அதட்டலாக கேட்டார்...
"நீங்க வர ஒரு ஆறு மாசம் ஆகும்ல, அப்போ அவ வீட்ல இருக்க மாட்டா" என்றான்...
"உன்னை நம்பலாமா?" என்று அவர் கேட்க, "நம்புறதுக்கு என்ன?" என்றவனோ, "நிரூபன் எங்க?" என்று கேட்டான்.
"தெரியல, ஃப்ரெண்ட்ஸ்ன்னு சுத்த போய் இருப்பான்" என்று சொன்னவரிடம், "இந்த வேலையாவது அவனுக்கு நிலைக்குமா?" என்று கேட்க, "நித்யா தான் வேலை எடுத்து கொடுத்து இருக்கா, நிலைக்கணும்" என்று சோர்வாக சொல்லிக் கொண்டார்...
"ராஸ்கல் எத்தனை வேலை மாறிட்டான். ஒரு இடத்துலயும் நிலைச்சு நின்னது இல்லை, குடி, கூத்து கும்மாளம் சீட்டுன்னு இருந்தா எப்படி முன்னேறுறது?" என்று சீற, "நான் சொன்னா எங்கடா கேக்கிறான்" என்றார் சலிப்பாக...
"தொழில் பண்ணுறேன்னு ஆரம்பிச்சு அதுலயும் கோட்டை விடுறான், என் கிட்ட அனுப்ப சொன்னா நீங்களும் விடுறீங்க இல்ல" என்று ஆதங்கப்பட, "அவனுக்கு உன்ன பார்த்தா பயம், வர மாட்டேன்னு அடம் பிடிக்கிறான், நான் என்ன பண்ணட்டும்?" என்று சொல்லிக் கொண்டே இருக்கும் போது விசிலடித்துக் கொண்டே வீட்டினுள் நுழைந்தான் நிரூபன்.
தேவ்வைக் கண்டதும், எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டே, "மச்சான்" என்று சொல்ல, "வாடா நல்லவனே" என்று சொல்லிக் கொண்டே எழுந்தவன், "இந்த வேலையாவது ஒழுங்கா பண்ணு" என்றான்...
அவனோ பயத்துடன், "ம்ம்" என்றான்.
தேவ்வும், ஜெயாவை அணைத்து விடுவித்தவன், "மனச போட்டு குழப்பிக்காம போயிட்டு வாங்க" என்று சொல்ல, அவரும், "அந்த பொண்ணு நான் வர்ற நேரம் இங்க இருக்க கூடாது" என்றார்.
"ம்ம்" என்று சொல்லிக் கொண்டே, வெளியேறி இருக்க, அவன் சென்ற அடுத்த கணம், "அவளை எதுக்கு வீட்ல வச்சு இருக்காராம்?" என்று நிரூபன் கேட்க, "அதுக்கு தான் சண்டை போட்டேன், நான் திரும்பி வர்றதுக்கு முதல் அனுப்புறேன்னு சொல்லி இருக்கான்... எல்லாத்துக்கும் நீ தான் டா காரணம், அன்னைக்கு எதுக்கு அவ வீட்டுக்கு போய் சண்டை போட்ட?" என்று கேட்க, "ஒரு கோபத்துல" என்று சொல்ல, "அது தான் காரணம்" என்று சொன்னவரோ, "சரி பார்த்துக்கலாம்" என்று சொல்லி விட்டு அன்று இரவே கிளம்பி இருந்தார்…
"அப்போ வா சாப்பிடலாம்" என்று சொல்ல, "ம்ம்" என்று சொல்லிக் கொண்டே, அவருடன் சென்றவள் மேசையில் அமர, ரத்னமோ, அவளுக்கு சாப்பாட்டை எடுத்து வைத்தார்.
"நீங்க சாப்பிடலையா?" என்று கேட்டவளிடம், "நான் டைமுக்கு சாப்பிட்டுடுவேன், ஷுகர் டேப்ளெட்ஸ் போடணும்ல" என்று சொன்னார்.
"நீங்களா சமைச்சீங்க??" என்று கேட்க, அவரும், "ம்ம், டின்னர் நான் தான் பண்ணுவேன். தேவ் நேரத்துக்கே வந்துட்டான்னா அவன் பண்ணுவான்... லன்ச், வீடு க்ளீனிங் எல்லாம் சேர்வன்ட் கேர்ள் காலைல வந்து பண்ணிடுவா" என்று சொல்ல, மெலிதாக புன்னகைத்தவளுக்கு அவரை நினைத்து ஒரு பிரமிப்பு இருந்தது...
மனைவியின் இறப்பின் பின்னர் இன்னொரு திருமணம் செய்யாமல் வாழும் கணவன் மாரை விரல் விட்டு எண்ணி விடலாம் அல்லவா? அதில் ரத்னமும் ஒருவர் தான் என்று தோன்ற, அவர் சமைத்த உணவை வாய்க்குள் வைத்துக் கொண்டே, "நல்லா இருக்கு மாமா" என்று சொன்னாள்.
"பல வருஷ ட்ரெயினிங் மா" என்று சொன்னவரின் குரலில் மனைவியின் இழப்பின் வலி அப்பட்டமாக தெரிய, "எப்படி இறந்தாங்க?" என்று தயங்கி தயங்கி கேட்டுக் கொண்டே, அங்கே சுவரில் மாட்டி இருந்த லக்ஷ்மியின் புகைப்படத்தைப் பார்த்தாள்.
தேவ் உடைய சாயல் தான் அவருக்கும்...
தேவ் உடைய நீல நிற கண் மணிகள் அவருக்கும் இருந்தன...
அவன் விழிகளைப் பார்த்தாலே அவளுக்குள் ஒரு வித உதறல் எடுக்கும்...
ரத்னமோ, "ரெண்டாவது குழந்தை டிலிவேரி நேரம் இப்படி ஆயிடுச்சு...குழந்தையும் இறந்து தாயும் இறந்துட்டாங்க" என்று வருத்தத்துடன் சொல்ல, "சாரி" என்றாள்.
"தட்ஸ் ஓகே" என்று அவர் மென் சிரிப்புடன் சொல்ல, "உங்க மகன், அத்தை போலவே" என்று சொல்ல, அவரோ சிரித்துக் கொண்டே, "ம்ம், அதே கண்கள்" என்றார்.
அவளும் மென் புன்னகையுடன், "இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலையா நீங்க?" என்று கேட்க, "இல்லம்மா, தேவ்வுக்கு அவன் அம்மா மேல உயிர்... அவ இடத்துல யாரையும் வச்சு பார்க்க மாட்டான்... எனக்கும் லக்ஷ்மி இடத்துல இன்னொரு பொண்ண கற்பனை கூட பண்ணி பார்க்க முடியல" என்றார் ஏமாற்றமாக...
அவளுக்கோ சுள்லென்று ஒரு வலி...
மூர்த்தி செய்த செயல் மீண்டும் நினைவுக்கு வர, ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டவள், "இப்படியே எல்லோரும் இருந்து இருந்தா நல்லா இருந்து இருக்கும்ல" என்றாள்.
அவளை ஆராய்ச்சியாக ரத்னம் பார்க்க, "நானும் பிறந்து இருக்க மாட்டேன்" என்று ஒரு வலி நிறைந்த குரலில் சொல்லிக் கொண்டே உணவை எடுத்து வாயில் வைத்தவளுக்கு சாப்பிட முடியவில்லை...
அழுகை வந்தது, கண்களை அவசரமாக துடைத்துக் கொண்டாள்.
ரத்னமோ, "மனசை போட்டு குழப்பிக்காம சாப்பிடும்மா" என்று சொல்ல, அந்த நேரம் தேவ்வும் அவ்விடத்துக்கு வந்தான்...
அவள் பேசியதை கேட்டுக் கொண்டே வந்தவன், எதுவும் பேசாமல், அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்து விட்டான்.
ரத்னமோ, "உன் அத்தை கிட்ட என்ன சொல்ல போற?" என்று தேவ்விடம் கேட்க, "ம்ம் கேட்கும் போது பார்த்துக்கலாம்" என்று சொல்லிக் கொண்டே சாப்பிட்டான்.
அதனை தொடர்ந்து எல்லோரும் தூங்கச் சென்று விட்டார்கள்...
புது இடம் என்பதால் பத்மாவுக்கு தூக்கம் சீக்கிரம் வரவே இல்லை...
படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தவள், நீண்ட நேரம் கழித்தே தூங்கி இருந்தாள்.
அடுத்த நாள் காலையில் எழுந்து, குளித்து விட்டு ஆயத்தமாகி ஹாலுக்கு வந்த சமயம், ஜெயாவும் ரத்னத்தை பார்க்க வந்து இருந்தார்...
ஏதாவது புதிதாக சமைத்தால் கொண்டு வந்து கொடுப்பார்...
இன்று அவருக்கு சிக்கன் கறி செய்துக் கொண்டு வந்து இருந்தவரோ, வீட்டு வேலை செய்ய வந்த பெண்ணான துர்காவிடம் உணவை கொடுத்து விட்டு, ஹாலினுள் அவரை அதிர்ந்து பார்த்தபடி நின்ற பத்மாவைப் பார்த்தார்...
அவர் முகம் இறுகியது...
அங்கே அமர்ந்து இருந்த ரத்னமோ, "இங்க உட்காரு ஜெயா" என்று அவரிடம் விளக்கம் சொல்ல முயல, "இவளை யாரு இங்க அழைச்சு வந்தது?" என்று சீற ஆரம்பித்து விட்டார் ஜெயா.
"ஜெயா சொன்னா கேளு" என்று ரத்னம் சொல்லிக் கொண்டே எழ, "இவளை வெளியே துரத்துங்க, என் வாழ்க்கையை அழிச்சது இவள் தான்" என்று சொன்னபடி, அவளை அடிக்க அவர் நெருங்கி இருக்க, அவளுக்கும் அவருக்கும் நடுவே வந்து நின்று கொண்டே, ஜெயாவை ஆழ்ந்து பார்த்தான் தேவ்...
"தேவ், தள்ளு, இவ இங்க இருக்க கூடாது" என்று சொல்லிக் கொண்டே, அவனை தாண்டிச் செல்ல முயல, அவர் கையை பற்றிப் பிடித்தவன், "அத்தை ப்ளீஸ்" என்றான்.
அவரோ, "இவ தான் எல்லாத்துக்கும் காரணம், என் புருஷன கொன்னதும் இவ தான்" என்று சொல்ல, பத்மாவுக்கு அந்த வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ஊசியால் குத்தும் உணர்வைக் கொண்ட, "இப்படி திரும்ப திரும்ப சொல்லாதீங்க" என்று அவள் ஆரம்பிக்க, தலையை திருப்பி பின்னால் நின்றவளைப் பார்த்தவன், "அதிகம் பேசாம உள்ளே போ" என்றான்.
அவளுக்கு ஆதங்கம்...
தன்னை பேசவே விடமாட்டேன் என்கின்றானே...
எல்லோரும் அவளை காயப்படுத்திக் கொண்டே இருக்கும் போது அவள் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டுமா? என்கின்ற ஆதங்கம்...
"அவங்க பேசிட்டே" என்று ஆரம்பிக்க, "உள்ளே போனு சொல்றேன்ல" என்று கர்ஜித்தவன் விழிகள், அவளில் அழுத்தமாக படிய, அவளுக்கோ அவன் விழிகளை பார்த்ததுமே ஒரு வித பதட்டம்...
எதுவும் பேசாமல் விறு விறுவென உள்ளேச் சென்று கதவை தாழிட்டுக் கொண்டாள்.
கோபம் வந்தது...
காட்ட முடியாத நிலை...
இதே சமயம் ஜெயாவோ, "அவ தான் தப்பா பிறந்தவ, அவளை எதுக்கு இங்க வச்சு இருக்க தேவ்?" என்று அழுதுக் கொண்டே அவனிடம் கேட்க, அவனும், "வாங்க பேசலாம்" என்று சொல்லி, அவர் தோளில் கையை போட்டு அழைத்துச் சென்றவன், இருக்கையில் அவரை அமர வைத்துக் கொண்டே, அவனும் அமர்ந்தான்...
ரத்னமோ, "துர்கா கொஞ்சம் தண்ணி கொடும்மா" என்று சொல்ல, துர்காவும் நீரை கொண்டு வந்து ஜெயாவிடம் கொடுக்க, அவரும் அதனை வாங்கி குடித்து விட்டு, "அவ அம்மா பண்ணுனது எல்லாம் மறந்துட்டீங்களா?" என்று கேட்டார்.
தேவ்வோ, "அத்தை, முடிஞ்சத பத்தி பேச வேணாம்... நடந்துக்கிட்டு இருக்கிறத பேசலாமா?" என்று கேட்டான்.
ஜெயாவோ, "அவளை ஏன் இங்க அழைச்சு வந்த?" என்று கேட்டார்.
"ஏன்னா உங்க மகனால தான்" என்றான் தேவ் அழுத்தமாக.
"அவன் என்ன பண்ணுனான்?" என்று ஜெயா கேட்க, "நேத்து குடிச்சிட்டு ஃப்ரெண்ட்ஸ் கூட போய் அவ வீட்டு கதவை உடைச்சு இருக்கான்... ஏதாவது ஆகி இருந்தா வாழ்க்கை முழுக்க அவன் தான் ஜெயில்ல இருப்பான்... நான் சொல்லியோ நீங்க சொல்லியோ அவன் கேக்கிற ஆள் இல்லை... சரி சரின்னு சொல்லிட்டு, அவனுக்கு தோணுனத தான் பண்ணுவான்" என்று ஆதங்கமாக சொல்ல, ஜெயாவுக்கும் ஒரு மாதிரி ஆகி விட்டது...
"அவனை என்ன பண்ணுறதுன்னு தெரியல தேவ்... அவன் அப்பா பண்ணுன வேலையால ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கான்" என்று சொல்ல, தேவ்வோ, "அது எனக்கும் புரியுது... ஆனா அது எல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை... அவன் பொறுப்பு இல்லாம இருக்கிறதுக்கு சொல்ற நொண்டி காரணம் தான் இது" என்று சொன்னான்.
ஜெயாவோ, "எப்போ அவளை இங்க இருந்து அனுப்ப போற?" என்று கேட்டார்.
"அத்தை, நமக்கு ஆயிரம் கோபம் இருந்தாலும், இந்த பொண்ணு என்ன பண்ணுவா? ஒரு நல்ல வாழ்க்கை" என்று ஆரம்பிக்க, சட்டென எழுந்தவர், "நீ சரி இல்ல தேவ்" என்றார்.
"அத்தை ப்ளீஸ்" என்றான்.
"அவ இங்க இருக்க கூடாது" என்று சொல்ல, "அந்த பொண்ணுக்கு ஒரு நல்ல வழி அமைச்சு கொடுக்கும் வரைக்கும், இங்க தான் இருப்பா" என்றான் அழுத்தமாக...
"அவ அம்மா என் புருஷன மயக்குன போல. இவ உன்னை மயக்கிட்டாளா?" என்று ஆதங்கமாக கேட்க, ரத்னமோ, "என்ன பேசுற ஜெயா" என்றார்...
கண்களை மூடி திறந்த தேவ், "அத்தை இப்படி பேசாதீங்க" என்று சொல்ல, "வேற எப்படி பேசுறது?" என்று ஆதங்கமாக கேட்க, "அத விடுங்க, எப்போ பெங்களூர் கிளம்புறீங்க?" என்று கேட்டான்.
நித்யா அங்கே தான் வேலை செய்கின்றாள்...
"என்னை அங்கே துரத்தி விட்டுட்டு இங்க நீ கூத்தடிக்கலாம்னு பார்க்கிறியா?" என்று எகிற, அவனோ இதழ் குவித்து ஊதிக் கொண்டே, "அவ இங்க தான் இருப்பா, நல்ல லைஃப் அவளுக்கு வந்ததும் இங்க இருந்து கிளம்புவா... புரிஞ்சுக்கோங்க" என்று சொல்ல, "என்னடா புரியுறது? அவ இருக்கிற வரைக்கும் நான் இந்த வீட்டு பக்கம் வர மாட்டேன்" என்று சொல்லி விட்டு வெளியேறி இருக்க, அறைக்குள் மூடி இருந்த கதவில் சாய்ந்து நின்று அவர் பேசியதை கேட்டு கண்ணீர் விட்ட பத்மா, கண்களை துடைத்துக் கொண்டே வெளியே வந்து இருந்தாள்.
"ஆஃபீஸ் கிளம்புறியாம்மா?" என்று ரத்னம் கேட்க, தலையை குனிந்துக் கொண்டே, "நான் இங்க இருந்து கிளம்பிடுறேன்... ஏதாவது லேடீஸ் ஹாஸ்டல்ல" என்று ஆரம்பிக்க, "உளறாம, சாப்பிட்டுட்டு வேலைக்கு கிளம்பு" என்று சொல்லிக் கொண்டே அவளை தாண்டிச் சென்றான் தேவ்...
"இல்ல நிஜமா" என்று அவள் பேசிக் கொண்டே இருக்க, தேவ் அறைக்குள் நுழைந்து விட்டான்...
ரத்னம் பேப்பர் பார்க்க ஆரம்பித்து விட்டார்...
அவள் பேசுவதை இருவரும் கேட்க தயார் இல்லை என்று புரிய, பெருமூச்சுடன் சாப்பிடச் சென்று உட்கார்ந்தவளுக்கு மனம் பிசைந்துக் கொண்டு இருந்தது...
ஜெயா மீது எப்போதுமே அவளுக்கு ஒரு பரிதாப உணர்வு இருக்கும்.
அவர் நிலைக்கு தெரிந்தோ தெரியாமலோ அவளும் காரணம் அல்லவா?
அதனாலேயே அவரை அவளால் வெறுக்க முடியவில்லை...
இன்றும் அவர் வீட்டுக்கு வர மாட்டேன் என்று சொன்னது அவளுக்கு மனதில் பாரத்தை தான் ஏற்றி இருந்தது...
வீட்டை விட்டு போகவும் ரத்னம் மற்றும் தேவ் விட மாட்டார்கள் என்று புரிய, என்ன செய்வது என்று தெரியாமல் காலம் நகரும் போக்கில் அவளும் வாழ ஆரம்பித்து விட்டாள்.
இப்படியே ஒரு வாரம் நகர்ந்து இருக்கும், அன்று வேலை விட்டு நேரே தேவ் சென்றது என்னவோ ஜெயா வீட்டுக்கு தான்...
அவன் வீட்டினுள் நுழைந்ததுமே, ஜெயா அவனை முறைத்துக் கொண்டே, அறைக்குள் செல்ல, "அத்தை" என்று சொல்லிக் கொண்டே கையை பற்றினான்...
"பேசாதேடா" என்று கண்ணீருடன் வந்தது அவர் வார்த்தைகள்...
அவர் கையை பற்றி அமர வைத்தவர், "இன்னைக்கு நைட் பெங்களூர் போறீங்க தானே... இப்படி என் கூட கோபப்பட்டுட்டு கிளம்பலாமா?" என்று கேட்க, அவரோ, "நீ பண்ணுனது சரியா?" என்று கேட்டார்.
"அத விடுங்க" என்றவனை உறுத்து விழித்தவர், "அத எப்படி விட முடியும்?" என்றார்.
அவனோ அவர் கையை வருடிக் கொண்டே, "உங்க ஃபீலிங்ஸ் புரியுது... ஆனா" என்று இழுக்க, "என்னடா ஆனா?" என்று அதட்டலாக கேட்டார்...
"நீங்க வர ஒரு ஆறு மாசம் ஆகும்ல, அப்போ அவ வீட்ல இருக்க மாட்டா" என்றான்...
"உன்னை நம்பலாமா?" என்று அவர் கேட்க, "நம்புறதுக்கு என்ன?" என்றவனோ, "நிரூபன் எங்க?" என்று கேட்டான்.
"தெரியல, ஃப்ரெண்ட்ஸ்ன்னு சுத்த போய் இருப்பான்" என்று சொன்னவரிடம், "இந்த வேலையாவது அவனுக்கு நிலைக்குமா?" என்று கேட்க, "நித்யா தான் வேலை எடுத்து கொடுத்து இருக்கா, நிலைக்கணும்" என்று சோர்வாக சொல்லிக் கொண்டார்...
"ராஸ்கல் எத்தனை வேலை மாறிட்டான். ஒரு இடத்துலயும் நிலைச்சு நின்னது இல்லை, குடி, கூத்து கும்மாளம் சீட்டுன்னு இருந்தா எப்படி முன்னேறுறது?" என்று சீற, "நான் சொன்னா எங்கடா கேக்கிறான்" என்றார் சலிப்பாக...
"தொழில் பண்ணுறேன்னு ஆரம்பிச்சு அதுலயும் கோட்டை விடுறான், என் கிட்ட அனுப்ப சொன்னா நீங்களும் விடுறீங்க இல்ல" என்று ஆதங்கப்பட, "அவனுக்கு உன்ன பார்த்தா பயம், வர மாட்டேன்னு அடம் பிடிக்கிறான், நான் என்ன பண்ணட்டும்?" என்று சொல்லிக் கொண்டே இருக்கும் போது விசிலடித்துக் கொண்டே வீட்டினுள் நுழைந்தான் நிரூபன்.
தேவ்வைக் கண்டதும், எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டே, "மச்சான்" என்று சொல்ல, "வாடா நல்லவனே" என்று சொல்லிக் கொண்டே எழுந்தவன், "இந்த வேலையாவது ஒழுங்கா பண்ணு" என்றான்...
அவனோ பயத்துடன், "ம்ம்" என்றான்.
தேவ்வும், ஜெயாவை அணைத்து விடுவித்தவன், "மனச போட்டு குழப்பிக்காம போயிட்டு வாங்க" என்று சொல்ல, அவரும், "அந்த பொண்ணு நான் வர்ற நேரம் இங்க இருக்க கூடாது" என்றார்.
"ம்ம்" என்று சொல்லிக் கொண்டே, வெளியேறி இருக்க, அவன் சென்ற அடுத்த கணம், "அவளை எதுக்கு வீட்ல வச்சு இருக்காராம்?" என்று நிரூபன் கேட்க, "அதுக்கு தான் சண்டை போட்டேன், நான் திரும்பி வர்றதுக்கு முதல் அனுப்புறேன்னு சொல்லி இருக்கான்... எல்லாத்துக்கும் நீ தான் டா காரணம், அன்னைக்கு எதுக்கு அவ வீட்டுக்கு போய் சண்டை போட்ட?" என்று கேட்க, "ஒரு கோபத்துல" என்று சொல்ல, "அது தான் காரணம்" என்று சொன்னவரோ, "சரி பார்த்துக்கலாம்" என்று சொல்லி விட்டு அன்று இரவே கிளம்பி இருந்தார்…