அத்தியாயம் 3
இப்படியாக தேர்தல் பிரச்சாரம் அனைத்தும் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டு இருந்த சந்தர்ப்பம் அது.. ஒவ்வொரு தொகுதிகளாக சென்று வாக்கு கேட்க வாக்காளர்கள் புறப்பட்டு இருக்க, மிதுனுடன் சென்றது என்னவோ ஆதித் தான். அதே சமயம் அதே இடத்துக்கு தனது ஆட்களுடன் வந்து இருந்தான் தருண். நடை பயணமாக வந்த தருண் கண்ணில் பட்டது என்னவோ மிதுனுடன் வெயிலுக்கு சன் க்ளாஸ் அணிந்தபடி நடந்து வந்த ஆதித் தான். அவனைக் கண்டதுமே முகம் இறுகியவன் அவனைக் கண்டும் காணாமல் தாண்டிச் செல்ல முற்பட, " என்னடா எப்படி இருக்க?" என்றபடி ஆதித் அவன் தோளில் கை வைக்க தனது தோளில் இருந்த கையை தனது கை கொண்டு அகற்றிய தருண் " நீ போனதும் ரொம்ப நல்லா இருக்கேன், " என்றான் அவன் மேல் இருந்த கோபத்தில்.
உடனே மிதுன் "நீங்க ஏன் இவன் கூட பேசிட்டு இருக்கீங்க?" என்று கேட்க ஆதித்தோ "என்ன தான் இருந்தாலும் என்னோட நண்பன் அவன்" என்று முடிக்கவில்லை தருணோ " அந்த வார்த்தையை அசிங்கப்படுத்தாதே,. உன்னை போல துரோகியை நான் பார்க்கவே இல்ல.,ச்ச" என்று கோபத்தில் சீறினான். அதைக் கேட்டு வாய் விட்டு முத்துப் பற்கள் தெரிய சிரித்த ஆதித், "முதுகுல குத்தாம அரசியல் பண்ண முடியுமா நண்பா?" என்று கேட்க அவனோ " அது சரி, உன் அம்மாவோட ரத்தம் ஓட தானே செய்யும்" என்று சொன்னாலும் "நான் அத அக்செப்ட் பண்ணிக்கிறேன் மச்சி, வெற்றி பெற வாழ்த்துக்கள்" என்று சொல்லி கை குலுக்க போக, தருணோ கைகளை கூப்பி "நன்றி" என்று சொன்னான். அதை பார்த்து இதழ்களை பிதுக்கிய ஆதித் "வர வர முழு அரசியல்வாதியாவே மாறிட்ட" என்று சொன்னவன் அவனை தாண்டி சென்றான்.
இப்படியே அவர்கள் நாட்கள் நகர, ஆதித்தோ மும்முரமாக அரசியல் பிரச்சாரத்தில் மிதுனின் சார்பில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தான். எந்த பக்கம் இருந்தாலும் அந்த பக்கத்துக்கு சார்பாக பாய்ண்ட் எடுத்து பேசும் அவன் திறமையில் கட்சி அங்கத்தவர்களே கொஞ்சம் அதிர்ந்து தான் போனார்கள். இப்படியான நாள் ஒன்றில் தான், மதுபாலாவின் அலுவலகத்துக்கு வந்து இருந்தான் ஆதித்.
மதுபாலாவோ ஒரு முக்கிய பிரமுகருடன் பேசிக் கொண்டு இருக்க , உள்ளே செல்ல முடியாமல் வெளியே இருந்த அறையில் அவன் அமர்ந்து இருந்தான். அப்போது அலுவலகத்தினை அண்டிய நீச்சல் குளத்தில் நின்று நதீகா பேசிக் கொண்டு இருக்க, கண்ணாடியால் ஆன அறையின் மற்றைய பக்கம் நின்று அவளை மேலிருந்து கீழ் பார்த்தான் ஆதித்.
குட்டையாகவும் இறுக்கமாகவும் உடை அணிந்து இருந்தவள் ஒரு சாண் உயரத்துக்கு பாய்ண்ட் ஹீல் அணிந்து இருந்தாள். அதைக் கண்டவன் "இத போட்டுட்டு பொண்ணுங்க எப்படி தான் நடக்கிறாங்களோ? இப்போ ஸ்லிப் ஆகி உள்ளே விழுந்தா என்ன நடக்கும்? " என்று நினைத்தபடி அவள் ஓரமாக நின்றதை பார்த்து பெருமூச்சு விட, ஆழமாக பகுதியில் நின்று பேசிக் கொண்டு இருந்த நதீகா அடுத்த கணமே ஸ்லிப் ஆகி நீருக்குள் போனுடன் விழுந்து விட்டாள். அவனோ " ஹா ஹா நிஜமாவே விழுந்துட்டா" என்று நினைத்தவன் ,அவளுக்கு நீச்சல் தெரிந்து இருக்கும் என்ற நினைப்பில் பார்த்துக் கொண்டு இருக்க அவளோ வெளியே வரும் அறிகுறியே இல்லாமல் இருந்தது. ஆம் அவள் காலில் ஏற்பட்ட சுளுக்கினாலும் அவள் உயரத்தை விட ஆழமாக அந்த குளம் இருந்ததாலும் அவளால் நீந்தி மேலே வர முடியாமல் இருக்க, உள்ளேயே மூச்சுக்காக திணற ஆரம்பித்து இருந்தாள்.
அவள் கஷ்டகாலத்துக்கு அது தனியான இடமாகி போனதால் அவள் விழுந்தது கூட யாருக்கும் தெரியவில்லை ஆதித்தை தவிர.. அவனோ நிலைமை விபரீதமாவதை உணர்ந்தவன் கதவை திறந்து கொண்டு வேக நடையில் அந்த இடத்தை அடையவே அவள் கை கால்களை அடித்து ஓய்ந்து மூச்சுக்கு திணறி உணர்விழந்து போய் இருக்க அடுத்த கணமே போட்டிருந்த டீஷேர்ட்டையும் ஷூவையும் கழட்டி விட்டு நீருக்குள் பாய்ந்தான். அவள் அருகே சென்று அவளை அணைத்து தூக்கியவன் "நதீகா நதீகா " என்று அழைத்த போதிலும் அவள் சுயஉணர்வு இன்றியே இருந்தாள்.
அவளை அப்படியே தூக்கி கரையில் வைத்தவன் தனது திண்ணிய புஜங்களை நீச்சல் தடாகத்தின் ஓரத்தில் ஊன்றி மேலே ஏறியவன் அவள் கன்னத்தை தட்டிய போதும் கூட அவள் எழவே இல்லை. அவள் சுவாசம் கூட தடைப்பட்டு இருக்க, சற்றே பதட்டமானவன் அவளது மார்பில் கை வைத்து அழுத்தத்தை கொடுத்தான். அப்போதும் கூட அவள் அசையாமல் இருக்க அவள் தடையை தன்னை நோக்கி இரு விரல்களால் நிமிர்த்தியவன் அவள் மூக்கினை ஒரு கையினால் பொத்தி பிடித்தபடி வாய் மேல் வாய் வைத்து ஊதினான். முதலுதவியினை அவன் தொடர்ந்து அளிக்க ஒரு கட்டத்தில் அவள் பெருமூச்சுடன் விழித்துக் கொண்டாள். அவனோ "தான்க் காட்" என்றவன் "ஆர் யூ ஓகே?" என்று கேட்க அவளும் இருமியபடி "ஐ அம் பைன் " என்றவளால் எழ கூட முடியவில்லை.
இதுவரை அவனை முறைத்துக் கொண்டு இருந்தவள் இன்று அவன் தன் உயிரை காப்பாற்றியதை நினைத்து சிலிர்த்து போனாள். அவள் அறிவாள் அவன் இக்கணம் இல்லை என்றால் அவள் உயிர் திறந்து இருப்பாள் என்று. அதுவே அவன் மீது உள்ள கோபத்தினை குறைத்து விட, தனது கணுக்காலை பிடித்தவள் " என்னால எழும்ப முடில. வலிக்குது" என்று சொல்ல அவனோ அவள் பாதத்தில் இருந்த ஹீலை கையினால் கழட்டியவன் "உயரமான பொண்ணு தானே நீ, எதுக்கு இவ்ளோ பெரிய ஹீல்" என்று சற்றே கடினமான குரலில் கடிந்து விட்டு அவள் காலில் அழுத்தத்தை கொடுக்க அவளோ கையை அவன் வெற்று தோளில் வைத்து அழுத்தியவள் "ஆஅ, வலிக்குது" என்று முகத்தை சுருக்கி சத்தம் போட்டாள். அவனோ " சரி நான் ஹெல்ப் பண்றேன், எழுந்திரு" என்று சொல்ல அவளும் அவன் கரத்தில் கையை வைக்க அவனோ ஒற்றை கையை அவள் இடையில் பிடித்து எழ வைக்க அவளோ அவன் தோள்களில் கையை வைத்து நடக்க முறைப்பட்டாலும் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியல.
உடனே அவள் "என்னால காலை தூக்கி வைக்கவே முடில.. ரொம்ப வலிக்குது" என்று சொல்ல அவனோ பெருமூச்சுடன் "உன்னோட கார் எங்க இருக்கு?" என்று கேட்டான். அவளும் சற்றே தள்ளி நின்ற காரை கை காட்ட அவளை தூக்கி எடுக்க போக அவளோ "ஐயோ வேணாம்" என்றாள். அவனும் அவளை புருவம் சுருக்கி பார்க்க அவளோ சங்கடமாக " ஸ்கேர்ட் கொஞ்சம் குட்டியா இருக்கு" என்று சொல்ல அவனோ "கொஞ்சம் இல்ல ரொம்பவே குட்டியா இருக்கு" என்று உணர்ச்சி துடைக்கப்பட்ட முகத்துடன் சொன்னவன் கழட்டி போட்டு இருந்த அவன் டீ ஷேர்ட்டை கொடுக்க அவளோ அதை தனது மெல்லிடையில் முடிந்து கொண்டாள்.
அடுத்த கணமே அவளை தூக்கியவன் அவள் காரில் ஏற்றி விட்டு ட்ரைவர் சீட்டில் ஏறிக் கொள்ள அவளும் அவன் டீஷேர்ட்டை கொடுத்தாள். அவன் தூக்கி வரும் போது அவனது கழுத்தை மாலையாக கட்டிக் கொண்டவளுக்கு முதல் தடவை ஆணின் அருகாமையை உணர்ந்தான். எப்போதுமே ஆண்கள் என்றால் எட்டி நிற்பவள் இன்று அவன் இதழ் தீண்டிய போதிலும் அவன் கரங்கள் அவள் மேனியில் சுதந்திரமாக உலா வந்த போதிலும் கூட ஒரு வார்த்தை பேசாமல் இருக்க அவள் நிலை காரணமாக இருந்த போதிலும் அவன் மேல் ஒரு ஈர்ப்பு அடுத்த கணமே உருவாக ஆரம்பித்தது. அவள் மேனி மொத்தமாக இப்போது அவன் அணைவில் இருக்கிறது, ஆனால் அவள் தடுக்கவும் இல்லை தடுக்க தோன்றவும் இல்லை. அதற்கு அவள் மனமோ "அவன் உதவி தானே செய்கிறான்" என்று தன்னை தானே சமாதானப்படுத்திய போதிலும் அவன் அருகாமையை அவள் ரசித்தது என்னவோ உண்மை தான்.
அவளும் இப்படி அவன் மேல் ஒரே தடவையில் காதல் வயப்படுவோம் என்று கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. ஆனால் அவன் முகமோ மிகவும் இயலாக அல்லவா இருந்தது. அவனை பொறுத்தவரை உயிருக்கு போராடிய பெண்ணை காப்பாற்றி இருக்கிறோம் மேலும் அவளுக்கு வீட்டுக்கு செல்ல உதவி செய்கிறோம் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது.
அவள் தந்த டீஷேர்ட்டை அணிந்தவன் , அவள் வீட்டுக்கு காரை செலுத்தினான். இவ்வளவு நாள் மதுபாலாவுடன் இருந்தவனுக்கு அவள் வீடு தெரியாதா என்ன? அவள் வீட்டை அடைந்ததும் வாசலில் காரை நிறுத்தியவன் அவள் தாயிடம் கதவை தட்டி சொல்லி விட்டு அவளுக்கு ஒரு சிறு தலை அசைப்பை மட்டுமே பதிலாக கொடுத்து விட்டு புறப்பட்டு விட்டான்.
அவள் தான் வேலைக்காரர்கள் உதவியுடன் வீட்டுக்குள் நுழைந்த கணமே மதுபாலாவுக்கு கால் பண்ணி விடயத்தை கூறியவளுக்கு அன்று ஆதித்தின் நினைவில் தூக்கம் தொலைந்து போனது.
எந்த ஆண்மகனிடமும் அவள் இப்படி சாஷ்டாங்கமாக சறுக்கி விழுந்ததில்லை.. அவன் கம்பீரமும், விடயங்களை அழகாக கையாளும் திறனும், அவளை மொத்தமாக அவனிடம் மண்டியிட வைக்க, அவள் விரல்களோ அவன் இதழ்கள் ஸ்பரிசித்த தனது இதழ்களை வருடிக் கொண்டது.
இதே சமயம் இதை எல்லாம் அறியாத ஆதித்தோ எலெக்ஷன் முடிவுக்காக காத்துக் கொண்டு இருந்தான். வாக்களிக்கும் நாளன்று அனைத்தும் அமோகமாக நடந்து இருக்க, அவனும் முடிவுக்காக ஆர்வமாக வாக்கெண்ணும் நிலையம் அருகே காத்துக் கொண்டு மிதுனுடன் இருந்தான். பக்கத்தில் தருண் அவனை முறைத்து பார்த்து விட்டு இருக்க ஒவ்வொரு தொகுதி முடிவாக வெளியாக தொடங்கியது.
அனைத்தையும் கேட்டுக் கொண்டு இருக்க ஆரம்பத்தில் மிதுன் உச்சத்தில் இருந்தாலும் போக போக தருண் மேலே மேலே சென்றான். ஆதித்தோ உணர்ச்சியை முகத்தில் காட்டாமல் கண்களை சன் கிளாஸ் போட்டு மறைத்து இருக்க, இறுதி முடிவாக தருண் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட மிதுனின் முகமோ அவமானத்தில் சுருங்கியது. உடனே அவன் "ஷீட்," என்று நிலத்தில் உதைத்தவனுக்கு கோபம் மட்டுமே எஞ்சி இருக்க, ஆதித்தோ "ஹவ் இஸ் இட் பாசிபிள்?"என்று அதிர்ந்த குரலில் கேட்டான். மிதுனோ "எனக்கு மனசு சரி இல்ல, நான் கிளம்புறேன்" என்று சொல்லி விட்டு கிளம்ப, அவன் முதுகை ஒரு கணம் பார்த்து விட்டு பக்கத்தில் கட்சி உறுப்பினர்களுடன் சந்தோஷத்தில் இருந்த தருணை நோக்கி வந்தவன் "காங்கிராட்ஸ் " என்று கையை நீட்டினான். தருணும் மெல்லிய சிரிப்புடன் "ரொம்ப நன்றி ஆதித் சார்" என்று நக்கலாக சொல்ல, அவனோ "ம்ம். பரவாயில்ல. ஏதோ ஜெயிச்சுட்ட" என்று சொன்னான். உடனே தருண், "என் பிரெண்ட் , " என்று ஆரம்பித்து சற்றே நிறுத்தி "ஐ மீன் என்னோட கட்சி தொண்டர்கள் இருக்கும் மட்டும் எனக்கு தோல்வியே கிடையாது" என்று சொல்ல "ம்ம் குட்" என்று தலையாட்டி சாதாரணமாக சொன்னவன் அங்கிருந்து வெளியேறி இருக்க அவன் முதுகை ஒரு கணம் பார்த்த தருண் முகத்தை தன்னை சார்ந்தவர்களை நோக்கி திருப்பிக் கொண்டான்.
இதே கணம் மதுபாலாவோ ஆத்திரத்தின் உச்சத்தில் ஆடிக் கொண்டல்லவா இருந்தாள்??. அவள் அறையில் மிதுன் உற்பட கட்சி தொண்டர்கள் இருக்க "ஒரு மேயர் எலக்சன்ல ஜெயிக்க முடில, வாட் இஸ் திஸ்? கடைசி வரை மிதுன் தானே ஜெயிப்பான்னு இருந்திச்சு.." என்று சொல்லவே அங்கு ஆதித் நுழைந்தவன் "ம்ம் ,, நானும் அவன் ஜெயிக்க என்னவோ எல்லாம் பண்ணினேன். ஆனா ஏதோ சதி நடந்து இருக்கு" என்றவன் கண்கள் அங்கிருந்த மிகவும் விசுவாசமான எம் எல் ஏ ஏகாம்பரம் மீது பதிய, அவரோ "என்னை ஏன் தம்பி பார்க்கிறீங்க?" என்று பதட்டமாக கேட்டார். உடனே அவன் சொடக்கிட்ட அதே கணம் ஒருவன் உள்ளே நுழைந்தவன் "வணக்கம் மேடம்" என்று மதுபாலாவிடம் சொல்ல அவளோ "இது யாரு? எனக்கு புரியல" என்று சொன்னாள். உடனே ஆதித் கையில் இருந்த கடித உறையை நீட்ட அதைப் பார்த்த மதுபாலா விறைத்து போனாள். ஆம் அதில் மிதுனின் அனைத்து மோசமான நடவடிக்கை பற்றியும் எழுதி அவன் பெண்களுடன் இருந்த போட்டோக்களையும் தொகுப்பாக்கி ஒரு நோட்டீஸ் உருவாக்கி அது ஒவ்வொருவரின் விலாசத்துக்கும் எலெக்ஷனுக்கு முதல் நாள் அனுப்பப்பட்டு இருந்தது.
அதைக் கண்டவள் "இது என்ன ஆதித்?யார் இத பண்ணுனா? அந்த தன்ராஜ் வேலையா?" என்று ஆத்திரத்தில் சீற இல்லை என்று தலையாட்டியவன் " அவர் கிட்ட விசுவாசமா இருக்கிற ஒரு கருப்பு ஆடு" என்று சொன்னபடி மறுபடி ஏகாம்பரத்தை பார்க்க அவரோ "நான் பண்ணல,மேடம் " என்று ஆத்திரத்துடன் எழுந்து கொண்டார். உடனே ஆதித் கூட வந்த ஏகாம்பரம் வீட்டில் வேலை செய்பவன் "நான் ஏகாம்பரம் ஐயா வீட்ட தான் வேலை செஞ்சேன், அவர் தான் இதெல்லாம் பண்ணினார். அட்ரஸ் எழுதுன ஆட்களில் நானும் ஒருவன்" என்று முடிக்க முதல் மதுபாலாவின் செருப்பு ஒன்று ஏகாம்பரத்தின் முகத்தில் வந்து விழுந்தது. அதைக் கண்ட ஆதித்தோ தனது கன்னத்தை வருடிக் கொள்ள ஏகாம்பரமோ அவமானமும் கோபமுமாக மதுபாலாவை பார்க்க "அடேய் துரோகி நாயே வெளியே போடா" என்று மதுபாலா கெட்ட வார்த்தையில் திட்டினாள். உடனே ஏகாம்பரம் "இந்த சின்ன பையன் சொல்றத கேட்டு என்ன அவமானப்படுத்துற தானே..இதுக்கெல்லாம் உனக்கு இருக்குடி " என்று ஒருமையில் சொல்ல "என்னது டியா அடி செருப்பால, என்னடா பார்த்துட்டு இருக்கீங்க" என்று முடிக்க முதல் அங்கிருந்தவர்கள் ஏகாம்பரத்தை அடித்து பின்னி இருந்தார்கள். உடனே அவர் "டேய் விடுங்கடா" என்று சீறியபடி "உனக்கு இருக்கு" என்று ஒற்றை விரலை நீட்டி எச்சரித்துக் கொண்டே வெளியேற அவர் முன்னே ஒரு டிஸ்ஸுவை நீட்டிய ஆதித் "அங்கிள் ரத்தத்தை துடைச்சுக்கோங்க" என்று சொல்ல அவனை அனல் தெறிக்க பார்த்தவர் "இதுக்கெல்லாம் நீ தானே காரணம்.. " என்று சொல்லி விட்டு வெளியேற அவனோ தோள்களை உலுக்கி விட்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான்.
அங்கிருந்த கட்சி காரர்கள் அனைவரும் பேசி விட்டு சென்றதுமே எஞ்சியது என்னவோ மிதுனும் ஆதித்தும் பாண்டியனும் மதுபாலாவும் மட்டுமே. மிதுனோ "அம்மா எனக்கு ஒரே அவமானமா இருக்கு.. வெளிய தல காட்ட முடில, செத்துடலாம் போல இருக்கு" என்று புலம்ப ஆதித்தோ " அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்டா,,இந்த வெட்கம் மானம் எல்லாம் பார்த்தா இங்க நிலைச்சு நிற்க முடியாது" என்று சொல்ல அவனோ "அது கூட பரவாயில்லை. எனக்கு மேயர் போஸ்ட் கிடைச்சா தான் கல்யாணம் பண்ணி வைப்பேன்னு அம்மா சொன்னாங்க. அந்த கல்யாணம் நடக்காதோன்னு நினைக்க தான் பயமா இருக்கு" என்று சொல்ல ஆதித்தோ மனதுக்குள் "அது தானே பார்த்தேன்" என்று நினைத்தான். மதுபாலாவோ "இவன் இதுக்கு தான் சரி" என்று நினைத்தவள் பாண்டியனை பார்த்து "அந்த கல்யாணத்தை பண்ணி வச்சுடலாம் பாண்டியன். இவனுக்கு அரசியல் சரி வராது. உங்களுக்கு சம்மதமா?" என்று கேட்க ஆதித்தோ " ஓஹ் அந்த நதி தான் இந்த மிதுனோட காதலி போல" என்று நினைக்க பாண்டியனோ "உங்க பையன வேணாம்னு சொல்வேனா மேடம்?" என்று சொன்னார். உடனே மதுபாலா "உங்க சம்மதத்தை விட, அவ சம்மதம் தான் முக்கியம்.. இங்க தான் இருப்பா..நான் கூப்பிடுறேன். உடனே முடிவை கேளுங்க அடுத்த மாசமே கல்யாணம், அப்போ தான் இந்த தோல்வி எல்லாம் ஒன்னும் இல்லன்னு நாம ஊருக்கு காட்ட முடியும்" என்று சொல்ல பாண்டியனும் மகனை அழைத்தார். அவளும் உள்ளே வந்த சமயம் , அவன் கண்களோ கால் மேல் கால் போட்டு தாடியை நீவியப்படி இருந்த ஆதித் மீது பதிந்து மீண்டது.
பாண்டியனுக்கு சற்றே நடுக்கமாக இருக்க, "மேடம் நீங்களே கேளுங்க" என்று மதுபாலாவிடம் சொல்ல "நல்ல அப்பன் யா நீ" என்று சொன்னவள் "நதி, என் பையன கல்யாணம் பண்ணிக்கிறியா?" என்று கேட்டதுமே முத்துப் பற்கள் தெரிய சிரித்தவள் சம்மதமாக தலை ஆட்டினாள். ஆதித்தோ "அப்போ இவளும் மிதுனை லவ் பண்ணுறா போல " என்று நினைத்து இருக்க நதீகாவோ மூத்த பையன் ஆதித் தான் மாப்பிளை என்று எண்ணி சம்மதித்து இருந்தாள்.
மிதுனுக்கோ வானுக்கும் பூமிக்கும் குதிக்கும் சந்தோஷமாக இருக்க, நதீகாவோ "நான் வரேன் மேடம்" என்ற வெட்கப்புன்னகையுடன், வெளியேற மிதுன் பாய்ந்து பாண்டியன் கன்னத்தில் முத்தமிட்டான். ஆதித்தோ "ஐயையே" என்று சொல்ல பாண்டியனோ "மாப்பிள்ளை நான் அவ அப்பா" என்று சொல்ல மதுபாலா சிரித்துக் கொண்டாள்.
இப்படியாக தேர்தல் பிரச்சாரம் அனைத்தும் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டு இருந்த சந்தர்ப்பம் அது.. ஒவ்வொரு தொகுதிகளாக சென்று வாக்கு கேட்க வாக்காளர்கள் புறப்பட்டு இருக்க, மிதுனுடன் சென்றது என்னவோ ஆதித் தான். அதே சமயம் அதே இடத்துக்கு தனது ஆட்களுடன் வந்து இருந்தான் தருண். நடை பயணமாக வந்த தருண் கண்ணில் பட்டது என்னவோ மிதுனுடன் வெயிலுக்கு சன் க்ளாஸ் அணிந்தபடி நடந்து வந்த ஆதித் தான். அவனைக் கண்டதுமே முகம் இறுகியவன் அவனைக் கண்டும் காணாமல் தாண்டிச் செல்ல முற்பட, " என்னடா எப்படி இருக்க?" என்றபடி ஆதித் அவன் தோளில் கை வைக்க தனது தோளில் இருந்த கையை தனது கை கொண்டு அகற்றிய தருண் " நீ போனதும் ரொம்ப நல்லா இருக்கேன், " என்றான் அவன் மேல் இருந்த கோபத்தில்.
உடனே மிதுன் "நீங்க ஏன் இவன் கூட பேசிட்டு இருக்கீங்க?" என்று கேட்க ஆதித்தோ "என்ன தான் இருந்தாலும் என்னோட நண்பன் அவன்" என்று முடிக்கவில்லை தருணோ " அந்த வார்த்தையை அசிங்கப்படுத்தாதே,. உன்னை போல துரோகியை நான் பார்க்கவே இல்ல.,ச்ச" என்று கோபத்தில் சீறினான். அதைக் கேட்டு வாய் விட்டு முத்துப் பற்கள் தெரிய சிரித்த ஆதித், "முதுகுல குத்தாம அரசியல் பண்ண முடியுமா நண்பா?" என்று கேட்க அவனோ " அது சரி, உன் அம்மாவோட ரத்தம் ஓட தானே செய்யும்" என்று சொன்னாலும் "நான் அத அக்செப்ட் பண்ணிக்கிறேன் மச்சி, வெற்றி பெற வாழ்த்துக்கள்" என்று சொல்லி கை குலுக்க போக, தருணோ கைகளை கூப்பி "நன்றி" என்று சொன்னான். அதை பார்த்து இதழ்களை பிதுக்கிய ஆதித் "வர வர முழு அரசியல்வாதியாவே மாறிட்ட" என்று சொன்னவன் அவனை தாண்டி சென்றான்.
இப்படியே அவர்கள் நாட்கள் நகர, ஆதித்தோ மும்முரமாக அரசியல் பிரச்சாரத்தில் மிதுனின் சார்பில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தான். எந்த பக்கம் இருந்தாலும் அந்த பக்கத்துக்கு சார்பாக பாய்ண்ட் எடுத்து பேசும் அவன் திறமையில் கட்சி அங்கத்தவர்களே கொஞ்சம் அதிர்ந்து தான் போனார்கள். இப்படியான நாள் ஒன்றில் தான், மதுபாலாவின் அலுவலகத்துக்கு வந்து இருந்தான் ஆதித்.
மதுபாலாவோ ஒரு முக்கிய பிரமுகருடன் பேசிக் கொண்டு இருக்க , உள்ளே செல்ல முடியாமல் வெளியே இருந்த அறையில் அவன் அமர்ந்து இருந்தான். அப்போது அலுவலகத்தினை அண்டிய நீச்சல் குளத்தில் நின்று நதீகா பேசிக் கொண்டு இருக்க, கண்ணாடியால் ஆன அறையின் மற்றைய பக்கம் நின்று அவளை மேலிருந்து கீழ் பார்த்தான் ஆதித்.
குட்டையாகவும் இறுக்கமாகவும் உடை அணிந்து இருந்தவள் ஒரு சாண் உயரத்துக்கு பாய்ண்ட் ஹீல் அணிந்து இருந்தாள். அதைக் கண்டவன் "இத போட்டுட்டு பொண்ணுங்க எப்படி தான் நடக்கிறாங்களோ? இப்போ ஸ்லிப் ஆகி உள்ளே விழுந்தா என்ன நடக்கும்? " என்று நினைத்தபடி அவள் ஓரமாக நின்றதை பார்த்து பெருமூச்சு விட, ஆழமாக பகுதியில் நின்று பேசிக் கொண்டு இருந்த நதீகா அடுத்த கணமே ஸ்லிப் ஆகி நீருக்குள் போனுடன் விழுந்து விட்டாள். அவனோ " ஹா ஹா நிஜமாவே விழுந்துட்டா" என்று நினைத்தவன் ,அவளுக்கு நீச்சல் தெரிந்து இருக்கும் என்ற நினைப்பில் பார்த்துக் கொண்டு இருக்க அவளோ வெளியே வரும் அறிகுறியே இல்லாமல் இருந்தது. ஆம் அவள் காலில் ஏற்பட்ட சுளுக்கினாலும் அவள் உயரத்தை விட ஆழமாக அந்த குளம் இருந்ததாலும் அவளால் நீந்தி மேலே வர முடியாமல் இருக்க, உள்ளேயே மூச்சுக்காக திணற ஆரம்பித்து இருந்தாள்.
அவள் கஷ்டகாலத்துக்கு அது தனியான இடமாகி போனதால் அவள் விழுந்தது கூட யாருக்கும் தெரியவில்லை ஆதித்தை தவிர.. அவனோ நிலைமை விபரீதமாவதை உணர்ந்தவன் கதவை திறந்து கொண்டு வேக நடையில் அந்த இடத்தை அடையவே அவள் கை கால்களை அடித்து ஓய்ந்து மூச்சுக்கு திணறி உணர்விழந்து போய் இருக்க அடுத்த கணமே போட்டிருந்த டீஷேர்ட்டையும் ஷூவையும் கழட்டி விட்டு நீருக்குள் பாய்ந்தான். அவள் அருகே சென்று அவளை அணைத்து தூக்கியவன் "நதீகா நதீகா " என்று அழைத்த போதிலும் அவள் சுயஉணர்வு இன்றியே இருந்தாள்.
அவளை அப்படியே தூக்கி கரையில் வைத்தவன் தனது திண்ணிய புஜங்களை நீச்சல் தடாகத்தின் ஓரத்தில் ஊன்றி மேலே ஏறியவன் அவள் கன்னத்தை தட்டிய போதும் கூட அவள் எழவே இல்லை. அவள் சுவாசம் கூட தடைப்பட்டு இருக்க, சற்றே பதட்டமானவன் அவளது மார்பில் கை வைத்து அழுத்தத்தை கொடுத்தான். அப்போதும் கூட அவள் அசையாமல் இருக்க அவள் தடையை தன்னை நோக்கி இரு விரல்களால் நிமிர்த்தியவன் அவள் மூக்கினை ஒரு கையினால் பொத்தி பிடித்தபடி வாய் மேல் வாய் வைத்து ஊதினான். முதலுதவியினை அவன் தொடர்ந்து அளிக்க ஒரு கட்டத்தில் அவள் பெருமூச்சுடன் விழித்துக் கொண்டாள். அவனோ "தான்க் காட்" என்றவன் "ஆர் யூ ஓகே?" என்று கேட்க அவளும் இருமியபடி "ஐ அம் பைன் " என்றவளால் எழ கூட முடியவில்லை.
இதுவரை அவனை முறைத்துக் கொண்டு இருந்தவள் இன்று அவன் தன் உயிரை காப்பாற்றியதை நினைத்து சிலிர்த்து போனாள். அவள் அறிவாள் அவன் இக்கணம் இல்லை என்றால் அவள் உயிர் திறந்து இருப்பாள் என்று. அதுவே அவன் மீது உள்ள கோபத்தினை குறைத்து விட, தனது கணுக்காலை பிடித்தவள் " என்னால எழும்ப முடில. வலிக்குது" என்று சொல்ல அவனோ அவள் பாதத்தில் இருந்த ஹீலை கையினால் கழட்டியவன் "உயரமான பொண்ணு தானே நீ, எதுக்கு இவ்ளோ பெரிய ஹீல்" என்று சற்றே கடினமான குரலில் கடிந்து விட்டு அவள் காலில் அழுத்தத்தை கொடுக்க அவளோ கையை அவன் வெற்று தோளில் வைத்து அழுத்தியவள் "ஆஅ, வலிக்குது" என்று முகத்தை சுருக்கி சத்தம் போட்டாள். அவனோ " சரி நான் ஹெல்ப் பண்றேன், எழுந்திரு" என்று சொல்ல அவளும் அவன் கரத்தில் கையை வைக்க அவனோ ஒற்றை கையை அவள் இடையில் பிடித்து எழ வைக்க அவளோ அவன் தோள்களில் கையை வைத்து நடக்க முறைப்பட்டாலும் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியல.
உடனே அவள் "என்னால காலை தூக்கி வைக்கவே முடில.. ரொம்ப வலிக்குது" என்று சொல்ல அவனோ பெருமூச்சுடன் "உன்னோட கார் எங்க இருக்கு?" என்று கேட்டான். அவளும் சற்றே தள்ளி நின்ற காரை கை காட்ட அவளை தூக்கி எடுக்க போக அவளோ "ஐயோ வேணாம்" என்றாள். அவனும் அவளை புருவம் சுருக்கி பார்க்க அவளோ சங்கடமாக " ஸ்கேர்ட் கொஞ்சம் குட்டியா இருக்கு" என்று சொல்ல அவனோ "கொஞ்சம் இல்ல ரொம்பவே குட்டியா இருக்கு" என்று உணர்ச்சி துடைக்கப்பட்ட முகத்துடன் சொன்னவன் கழட்டி போட்டு இருந்த அவன் டீ ஷேர்ட்டை கொடுக்க அவளோ அதை தனது மெல்லிடையில் முடிந்து கொண்டாள்.
அடுத்த கணமே அவளை தூக்கியவன் அவள் காரில் ஏற்றி விட்டு ட்ரைவர் சீட்டில் ஏறிக் கொள்ள அவளும் அவன் டீஷேர்ட்டை கொடுத்தாள். அவன் தூக்கி வரும் போது அவனது கழுத்தை மாலையாக கட்டிக் கொண்டவளுக்கு முதல் தடவை ஆணின் அருகாமையை உணர்ந்தான். எப்போதுமே ஆண்கள் என்றால் எட்டி நிற்பவள் இன்று அவன் இதழ் தீண்டிய போதிலும் அவன் கரங்கள் அவள் மேனியில் சுதந்திரமாக உலா வந்த போதிலும் கூட ஒரு வார்த்தை பேசாமல் இருக்க அவள் நிலை காரணமாக இருந்த போதிலும் அவன் மேல் ஒரு ஈர்ப்பு அடுத்த கணமே உருவாக ஆரம்பித்தது. அவள் மேனி மொத்தமாக இப்போது அவன் அணைவில் இருக்கிறது, ஆனால் அவள் தடுக்கவும் இல்லை தடுக்க தோன்றவும் இல்லை. அதற்கு அவள் மனமோ "அவன் உதவி தானே செய்கிறான்" என்று தன்னை தானே சமாதானப்படுத்திய போதிலும் அவன் அருகாமையை அவள் ரசித்தது என்னவோ உண்மை தான்.
அவளும் இப்படி அவன் மேல் ஒரே தடவையில் காதல் வயப்படுவோம் என்று கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. ஆனால் அவன் முகமோ மிகவும் இயலாக அல்லவா இருந்தது. அவனை பொறுத்தவரை உயிருக்கு போராடிய பெண்ணை காப்பாற்றி இருக்கிறோம் மேலும் அவளுக்கு வீட்டுக்கு செல்ல உதவி செய்கிறோம் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது.
அவள் தந்த டீஷேர்ட்டை அணிந்தவன் , அவள் வீட்டுக்கு காரை செலுத்தினான். இவ்வளவு நாள் மதுபாலாவுடன் இருந்தவனுக்கு அவள் வீடு தெரியாதா என்ன? அவள் வீட்டை அடைந்ததும் வாசலில் காரை நிறுத்தியவன் அவள் தாயிடம் கதவை தட்டி சொல்லி விட்டு அவளுக்கு ஒரு சிறு தலை அசைப்பை மட்டுமே பதிலாக கொடுத்து விட்டு புறப்பட்டு விட்டான்.
அவள் தான் வேலைக்காரர்கள் உதவியுடன் வீட்டுக்குள் நுழைந்த கணமே மதுபாலாவுக்கு கால் பண்ணி விடயத்தை கூறியவளுக்கு அன்று ஆதித்தின் நினைவில் தூக்கம் தொலைந்து போனது.
எந்த ஆண்மகனிடமும் அவள் இப்படி சாஷ்டாங்கமாக சறுக்கி விழுந்ததில்லை.. அவன் கம்பீரமும், விடயங்களை அழகாக கையாளும் திறனும், அவளை மொத்தமாக அவனிடம் மண்டியிட வைக்க, அவள் விரல்களோ அவன் இதழ்கள் ஸ்பரிசித்த தனது இதழ்களை வருடிக் கொண்டது.
இதே சமயம் இதை எல்லாம் அறியாத ஆதித்தோ எலெக்ஷன் முடிவுக்காக காத்துக் கொண்டு இருந்தான். வாக்களிக்கும் நாளன்று அனைத்தும் அமோகமாக நடந்து இருக்க, அவனும் முடிவுக்காக ஆர்வமாக வாக்கெண்ணும் நிலையம் அருகே காத்துக் கொண்டு மிதுனுடன் இருந்தான். பக்கத்தில் தருண் அவனை முறைத்து பார்த்து விட்டு இருக்க ஒவ்வொரு தொகுதி முடிவாக வெளியாக தொடங்கியது.
அனைத்தையும் கேட்டுக் கொண்டு இருக்க ஆரம்பத்தில் மிதுன் உச்சத்தில் இருந்தாலும் போக போக தருண் மேலே மேலே சென்றான். ஆதித்தோ உணர்ச்சியை முகத்தில் காட்டாமல் கண்களை சன் கிளாஸ் போட்டு மறைத்து இருக்க, இறுதி முடிவாக தருண் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட மிதுனின் முகமோ அவமானத்தில் சுருங்கியது. உடனே அவன் "ஷீட்," என்று நிலத்தில் உதைத்தவனுக்கு கோபம் மட்டுமே எஞ்சி இருக்க, ஆதித்தோ "ஹவ் இஸ் இட் பாசிபிள்?"என்று அதிர்ந்த குரலில் கேட்டான். மிதுனோ "எனக்கு மனசு சரி இல்ல, நான் கிளம்புறேன்" என்று சொல்லி விட்டு கிளம்ப, அவன் முதுகை ஒரு கணம் பார்த்து விட்டு பக்கத்தில் கட்சி உறுப்பினர்களுடன் சந்தோஷத்தில் இருந்த தருணை நோக்கி வந்தவன் "காங்கிராட்ஸ் " என்று கையை நீட்டினான். தருணும் மெல்லிய சிரிப்புடன் "ரொம்ப நன்றி ஆதித் சார்" என்று நக்கலாக சொல்ல, அவனோ "ம்ம். பரவாயில்ல. ஏதோ ஜெயிச்சுட்ட" என்று சொன்னான். உடனே தருண், "என் பிரெண்ட் , " என்று ஆரம்பித்து சற்றே நிறுத்தி "ஐ மீன் என்னோட கட்சி தொண்டர்கள் இருக்கும் மட்டும் எனக்கு தோல்வியே கிடையாது" என்று சொல்ல "ம்ம் குட்" என்று தலையாட்டி சாதாரணமாக சொன்னவன் அங்கிருந்து வெளியேறி இருக்க அவன் முதுகை ஒரு கணம் பார்த்த தருண் முகத்தை தன்னை சார்ந்தவர்களை நோக்கி திருப்பிக் கொண்டான்.
இதே கணம் மதுபாலாவோ ஆத்திரத்தின் உச்சத்தில் ஆடிக் கொண்டல்லவா இருந்தாள்??. அவள் அறையில் மிதுன் உற்பட கட்சி தொண்டர்கள் இருக்க "ஒரு மேயர் எலக்சன்ல ஜெயிக்க முடில, வாட் இஸ் திஸ்? கடைசி வரை மிதுன் தானே ஜெயிப்பான்னு இருந்திச்சு.." என்று சொல்லவே அங்கு ஆதித் நுழைந்தவன் "ம்ம் ,, நானும் அவன் ஜெயிக்க என்னவோ எல்லாம் பண்ணினேன். ஆனா ஏதோ சதி நடந்து இருக்கு" என்றவன் கண்கள் அங்கிருந்த மிகவும் விசுவாசமான எம் எல் ஏ ஏகாம்பரம் மீது பதிய, அவரோ "என்னை ஏன் தம்பி பார்க்கிறீங்க?" என்று பதட்டமாக கேட்டார். உடனே அவன் சொடக்கிட்ட அதே கணம் ஒருவன் உள்ளே நுழைந்தவன் "வணக்கம் மேடம்" என்று மதுபாலாவிடம் சொல்ல அவளோ "இது யாரு? எனக்கு புரியல" என்று சொன்னாள். உடனே ஆதித் கையில் இருந்த கடித உறையை நீட்ட அதைப் பார்த்த மதுபாலா விறைத்து போனாள். ஆம் அதில் மிதுனின் அனைத்து மோசமான நடவடிக்கை பற்றியும் எழுதி அவன் பெண்களுடன் இருந்த போட்டோக்களையும் தொகுப்பாக்கி ஒரு நோட்டீஸ் உருவாக்கி அது ஒவ்வொருவரின் விலாசத்துக்கும் எலெக்ஷனுக்கு முதல் நாள் அனுப்பப்பட்டு இருந்தது.
அதைக் கண்டவள் "இது என்ன ஆதித்?யார் இத பண்ணுனா? அந்த தன்ராஜ் வேலையா?" என்று ஆத்திரத்தில் சீற இல்லை என்று தலையாட்டியவன் " அவர் கிட்ட விசுவாசமா இருக்கிற ஒரு கருப்பு ஆடு" என்று சொன்னபடி மறுபடி ஏகாம்பரத்தை பார்க்க அவரோ "நான் பண்ணல,மேடம் " என்று ஆத்திரத்துடன் எழுந்து கொண்டார். உடனே ஆதித் கூட வந்த ஏகாம்பரம் வீட்டில் வேலை செய்பவன் "நான் ஏகாம்பரம் ஐயா வீட்ட தான் வேலை செஞ்சேன், அவர் தான் இதெல்லாம் பண்ணினார். அட்ரஸ் எழுதுன ஆட்களில் நானும் ஒருவன்" என்று முடிக்க முதல் மதுபாலாவின் செருப்பு ஒன்று ஏகாம்பரத்தின் முகத்தில் வந்து விழுந்தது. அதைக் கண்ட ஆதித்தோ தனது கன்னத்தை வருடிக் கொள்ள ஏகாம்பரமோ அவமானமும் கோபமுமாக மதுபாலாவை பார்க்க "அடேய் துரோகி நாயே வெளியே போடா" என்று மதுபாலா கெட்ட வார்த்தையில் திட்டினாள். உடனே ஏகாம்பரம் "இந்த சின்ன பையன் சொல்றத கேட்டு என்ன அவமானப்படுத்துற தானே..இதுக்கெல்லாம் உனக்கு இருக்குடி " என்று ஒருமையில் சொல்ல "என்னது டியா அடி செருப்பால, என்னடா பார்த்துட்டு இருக்கீங்க" என்று முடிக்க முதல் அங்கிருந்தவர்கள் ஏகாம்பரத்தை அடித்து பின்னி இருந்தார்கள். உடனே அவர் "டேய் விடுங்கடா" என்று சீறியபடி "உனக்கு இருக்கு" என்று ஒற்றை விரலை நீட்டி எச்சரித்துக் கொண்டே வெளியேற அவர் முன்னே ஒரு டிஸ்ஸுவை நீட்டிய ஆதித் "அங்கிள் ரத்தத்தை துடைச்சுக்கோங்க" என்று சொல்ல அவனை அனல் தெறிக்க பார்த்தவர் "இதுக்கெல்லாம் நீ தானே காரணம்.. " என்று சொல்லி விட்டு வெளியேற அவனோ தோள்களை உலுக்கி விட்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான்.
அங்கிருந்த கட்சி காரர்கள் அனைவரும் பேசி விட்டு சென்றதுமே எஞ்சியது என்னவோ மிதுனும் ஆதித்தும் பாண்டியனும் மதுபாலாவும் மட்டுமே. மிதுனோ "அம்மா எனக்கு ஒரே அவமானமா இருக்கு.. வெளிய தல காட்ட முடில, செத்துடலாம் போல இருக்கு" என்று புலம்ப ஆதித்தோ " அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்டா,,இந்த வெட்கம் மானம் எல்லாம் பார்த்தா இங்க நிலைச்சு நிற்க முடியாது" என்று சொல்ல அவனோ "அது கூட பரவாயில்லை. எனக்கு மேயர் போஸ்ட் கிடைச்சா தான் கல்யாணம் பண்ணி வைப்பேன்னு அம்மா சொன்னாங்க. அந்த கல்யாணம் நடக்காதோன்னு நினைக்க தான் பயமா இருக்கு" என்று சொல்ல ஆதித்தோ மனதுக்குள் "அது தானே பார்த்தேன்" என்று நினைத்தான். மதுபாலாவோ "இவன் இதுக்கு தான் சரி" என்று நினைத்தவள் பாண்டியனை பார்த்து "அந்த கல்யாணத்தை பண்ணி வச்சுடலாம் பாண்டியன். இவனுக்கு அரசியல் சரி வராது. உங்களுக்கு சம்மதமா?" என்று கேட்க ஆதித்தோ " ஓஹ் அந்த நதி தான் இந்த மிதுனோட காதலி போல" என்று நினைக்க பாண்டியனோ "உங்க பையன வேணாம்னு சொல்வேனா மேடம்?" என்று சொன்னார். உடனே மதுபாலா "உங்க சம்மதத்தை விட, அவ சம்மதம் தான் முக்கியம்.. இங்க தான் இருப்பா..நான் கூப்பிடுறேன். உடனே முடிவை கேளுங்க அடுத்த மாசமே கல்யாணம், அப்போ தான் இந்த தோல்வி எல்லாம் ஒன்னும் இல்லன்னு நாம ஊருக்கு காட்ட முடியும்" என்று சொல்ல பாண்டியனும் மகனை அழைத்தார். அவளும் உள்ளே வந்த சமயம் , அவன் கண்களோ கால் மேல் கால் போட்டு தாடியை நீவியப்படி இருந்த ஆதித் மீது பதிந்து மீண்டது.
பாண்டியனுக்கு சற்றே நடுக்கமாக இருக்க, "மேடம் நீங்களே கேளுங்க" என்று மதுபாலாவிடம் சொல்ல "நல்ல அப்பன் யா நீ" என்று சொன்னவள் "நதி, என் பையன கல்யாணம் பண்ணிக்கிறியா?" என்று கேட்டதுமே முத்துப் பற்கள் தெரிய சிரித்தவள் சம்மதமாக தலை ஆட்டினாள். ஆதித்தோ "அப்போ இவளும் மிதுனை லவ் பண்ணுறா போல " என்று நினைத்து இருக்க நதீகாவோ மூத்த பையன் ஆதித் தான் மாப்பிளை என்று எண்ணி சம்மதித்து இருந்தாள்.
மிதுனுக்கோ வானுக்கும் பூமிக்கும் குதிக்கும் சந்தோஷமாக இருக்க, நதீகாவோ "நான் வரேன் மேடம்" என்ற வெட்கப்புன்னகையுடன், வெளியேற மிதுன் பாய்ந்து பாண்டியன் கன்னத்தில் முத்தமிட்டான். ஆதித்தோ "ஐயையே" என்று சொல்ல பாண்டியனோ "மாப்பிள்ளை நான் அவ அப்பா" என்று சொல்ல மதுபாலா சிரித்துக் கொண்டாள்.