அத்தியாயம் 26
அவன் சாணக்கியனிடம் உள்ளங்கையை விரித்து காட்டியது ஊசியின் மூடியையே ஆகும்... அதை பார்த்து ஒரு கணம் தோன்றிய அதிர்ச்சியை மறைத்த சாணக்கியன், "என்னடா இதெல்லாம்?" என்று கேட்க விஷ்வாவோ, "நம்ம அப்பாவை யாரோ கொன்னுருக்காங்கனு எனக்கு சந்தேகமா இருக்கு அண்ணா" என்றான்.
"என்னடா சொல்ற? அவருக்கு அப்போ மாரடைப்பு வரலையா?" என்று புரியாத போல கேட்டவனிடம், "இல்ல அண்ணா... வர வச்சு இருக்காங்க... போஸ்ட்மாட்டம் செய்யும் போதே அவர் கையில் ஊசி போட்டதால் ரத்தம் உறைஞ்சு இருந்தது. வெய்ன்ல காற்றை செலுத்தி அவருக்கு ஹார்ட் ஸ்ட்ரோக் வர வச்சு இருக்காங்க... இந்த மூடி அப்பாவோட ரூம் டஸ்ட்பின் உள்ள இருந்திச்சு" என்றவனை கூர்ந்து பார்த்தபடி, "ஏன் டா நீ ஏற்கனவே சொல்லல?" என்று கேட்க, "இதுக்கு எந்த எவிடென்சும் இல்ல அண்ணா... சந்தேகம் மட்டும் தான். ரிப்போர்ட்ல ஹார்ட் ஸ்ட்ரோக் என்று தான் இருக்கும். நேற்று தான் மனசு கேட்காம ஒரு மாசமா மூடி இருந்த அப்பாவோட அறையை திறந்து பார்த்த நேரம் தான் இது கிடைச்சுது. அப்போ தான் சந்தேகம் கூடிச்சு... இப்போ கூட இது கன்பார்ம் இல்ல. இது வேற எதுக்கும் அப்பா பாவிச்ச ஊசியா கூட இருக்கலாம்" என்றவனிடம், "சரி நான் பார்த்துக்கிறேன். நீ இத பற்றி யோசிக்காதே. யார்கிட்டயும் இத சொல்லி குழப்பாதே" என்ற சாணக்கியன் அதை தனது கைகளில் வாங்கிக் கொண்டான்.
அதை அவனிடம் கொடுத்தபடி, "நான் மித்ரா கிட்ட கூட சொல்லல அண்ணா சொல்லவும் மாட்டேன்" என்றவனை மெல்லிய புன்னகையுடன் நோக்கினான்.
போக திரும்பியவன் சற்று நின்று, "அண்ணா இன்னொன்று சொன்னா தப்பா நினைக்க மாட்டீங்களே?" என்று கேட்க புருவம் உயர்த்தி என்ன என்று சாணக்கியன் கேட்டான். "அது வந்து எனக்கு கெளதம் மேல கொஞ்சம் சந்தேகமா இருக்கு... அப்பா இறந்ததிலிருந்து கயல் பற்றியும் அக்கறை இல்லாம இந்த பக்கம் வராம இருக்கிறான். நான் அவதானிச்ச வரை அவன் நடவடிக்கை சரி இல்ல. அப்பாவோட அடிக்கடி ரகசியமா பேசி பார்த்திருக்கேன்" என்றவனை உணர்ச்சி துடைத்த முகத்துடன் பார்த்தவன், "நான் பார்க்கிறேன்" என்று சொல்லி விஷ்வாவை அனுப்பினான்.
வசுந்தராவுக்கு இன்னும் ஒரு மாதத்தில் பிரசவம் என்ற நிலை வந்தது.
மகாலிங்கம் இறப்பை படிப்படியாக மறந்து அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். 31 ஆம் நாள் நினைவாஞ்சலியில் மகாலிங்கத்தின் ஆளுயரப்படத்துக்கு மாலையிட்டு அதுக்குரிய கிரியைகள் நடைபெற்றது.
அவர் முன்னே மண்டியிட்டு அழுத சித்ராவிடம், 'நீங்க அழுற அளவுக்கு அவர் ஒன்றும் நல்லவர் இல்லம்மா' என்று மானசீகமாக உரையாடினான் சாணக்கியன்.
இறுதி கிரியைக்கு வந்த ஒருவர், "இழவு நடந்த வீட்டில் ஒரு நல்ல காரியம் நடக்கணும் அந்த புள்ளைக்கு வளைகாப்பை யாச்சும் பண்ணுங்கப்பா" என்று சொல்ல சாணக்கியன் ஆமோதிப்பாக தலையாட்டினான்.
மித்ராவுக்கோ எதிலும் ஒட்டுதல் ஏற்படவில்லை.
ஏதோ ஒன்று அவள் மனதில் உறுத்திக் கொண்டிருந்தது. வளைகாப்பு தேதி அன்றே குறிக்கப்பட்டு இன்னும் இரு கிழமைகளில் வளைகாப்பு என்று முடிவு செய்யப்பட்டது.
இரு நாட்கள் கழித்து வேலையில் இருந்து வந்த விஷ்வா அன்று தனது வாழ்க்கையை தொடங்கும் எதிர்பார்ப்புடன் அறைக்குள் நுழைந்தான்.
குளித்து விட்டு வெளி வந்தவன் மித்ராவுக்காக காத்திருக்க அவள் வந்து சேர பத்து மணியாகி விட்டது.
"ஏன் மித்ரா லேட்?" என்றவன் அவளை நெருங்கி இழுத்து அணைக்க தள்ளி விட்டவள், "குளிச்சிட்டு வரேன்" என்றபடி குளியலறைக்குள் நுழைந்தாள்.
அவள் தள்ளி விட்டதில் வந்த கோபத்தை கட்டுப்படுத்தியவன் அவளுக்காக மேலும் காத்திருக்க,
வெளியில் வந்தவள், "சாப்பிடலையா? எனக்கு பசிக்குது விஷ்வா" என்று கேட்டாள்.
"எனக்கும் தான் பசிக்குது" என்று ஒரு மார்க்கமாக சொன்னவன் அவளை அழைத்துச் சென்று இருவரும் அமைதியாக சாப்பிட்டனர்.
அங்கு சித்ராவும் கயலும் இருந்ததால் விஷ்வா மித்ராவுடன் எந்த வித சில்மிஷத்திலும் ஈடுபடவில்லை.
சாப்பிட்டு விட்டு அறைக்குள் வந்ததும் அவளை இழுத்து அணைக்க போக அவள் தள்ளிய எதிர்பாராத ஒரே தள்ளில் அவன் கட்டிலில் விழுந்தான்.
"ஏன் டி?" என்று கோவமாக அவன் கேட்க, "இப்போ தான் மாமாவோட கிரியை முடிஞ்சிருக்கு. என்ன அவசரம்? இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்" என்றாள் கறாராக.
அதை கேட்டு ஆழ்ந்து பெருமூச்சு விட்டவன், "எத்தனை நாள் இப்படியே என்னை காக்க வைக்கிறதா உத்தேசம்?" என்று கேட்க, "எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு" என்றவள் கண்கள் கோபத்தில் பளபளத்தது.
"உன் வேலைய பார்க்கும் போது என்னையும் கவனிக்கிறது" என்று கட்டிலில் படுத்தபடியே புருவம் தூக்கி அவன் சொல்ல ஒரு பெரு மூச்சையே பதிலாக கொடுத்தாள்.
அவனருகே வந்தவளை இழுத்து கட்டிலில் போட்டவன் அவள் மேல் படர அவளோ எந்த உணர்ச்சியுமில்லாமல் கல் போல் இருந்தாள். அதை கண்டு எரிச்சலடைந்து, "ச்ச" என்றபடி எழுந்தவன், "எதுக்கு என்ன பிடிக்காம கல்யாணம் பண்ணிக்கிட்ட?" என்று கேட்க அவளோ இருந்த பல யோசனைகளால் எரிச்சலடைந்தவள், "நான் கல்யாணம் பண்ண ஆசைப்படலயே நீங்க தான்" என்றாள்.
அவள் வார்த்தைகள் அவனை சீண்ட, "உன்னோட தப்பா நடந்ததுக்காக ஒரு ஆம்பள நானே உன்ன கல்யாணம் பண்ண யோசிச்சேன்.ஆனா அந்த விஷயம் உனக்கு பெரிசா தெரியலையா?" என்று கோபமாக உரைத்த அவன் "அந்த" என்ற வார்த்தைகளை எந்த உள் அர்த்தத்திலும் சொல்லாமல், "தான் ஒரு ஆம்பளயாக இருந்தும் கூட ஏமாற்றாமல் உன்னை திருமணம் செய்தது பெரிதாக தெரியவில்லையா?" என்று சாதாரணமான கேள்வியாகவே கேட்டான்.
ஆனால் அப்போது இருந்த நிலமைக்கு அவன் வார்த்தைகள் அவள் காதில் தப்பாகவே ஒலித்தது.
அவன் வார்த்தைகளில் "அந்த விஷயம்" என்ற சொல் தன் நடத்தையை குறிக்கிறது என்று தப்பாக விளங்கியவளின் கோபம் பன் மடங்காக, "ஆமா அப்படிதான் எனக்கு அது பெரிய விஷயமில்லை தான். சர்வ சாதாரணம் தான். இப்போ எனக்கு நீ தேவையில்ல" என்று அகங்காரமாக ஒருமையில் கத்தியவளை பார்த்து விஷ்வா திகைத்து போனான்.
'இப்போ நான் என்ன கேட்டுட்டேன்னு இப்படி கத்துறா?' என்று யோசித்தவனுக்கு அவன் கூறிய வார்த்தைகளில் வேறு அர்த்தம் பொதிந்திருந்தது அப்போது அவனுக்கு விளங்கவில்லை.
"இப்போ என்னாச்சு உனக்கு ?" என்று கேட்டவனிடம் அவனை பதிலுக்கு காயப்படுத்த யோசித்தவள், "உன்ன பார்த்தாலே அருவருப்பா இருக்கு இனி பக்கத்துல வராதே" என்று வார்த்தையை விட அது அவனுக்கும் தப்பாகவே காதைச் சென்று அடைந்தது. அவள் அவனை காயப்படுத்த மனதில் யோசிக்காமல் கூறிய வார்த்தைகள் அவன் மனதை ஈட்டியால் குத்தி கிழித்தது.
அவளை நோக்கி அடிபட்ட பார்வையை வீசியவன் மேலும் எதுவும் பேசாமல் சென்று படுத்துக் கொண்டான். பேசி தீர்க்காத பிரச்சனைகள் குடும்பத்தில் பெரிய குழப்பங்களை உண்டாக்கும் என்று அவர்கள் இருவரும் அக்கணத்தில் அறியவில்லை. இருவரும் வார்த்தைகளை தப்பான அர்த்தம் கொண்டு இல்லாத பிரச்சனையை அவர்களே உருவாக்கிக் கொண்டனர்.
நடந்து வந்து கீழே போர்வையை விரித்து படுத்தவளை வெறித்து பார்த்தவனுக்கு அவள் மேல் கொண்ட அன்பு அவன் மனதை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாற, "இனி என் சுண்டு விரல் கூட உன் மேல படாது. விரும்பினா மேல படு." என்று சினமாக உரைத்த விஷ்வா மற்றைய பக்கம் திரும்பி படுத்தான்.
அவள் மனதோ, 'என்ன பார்த்து ஏன் விஷ்வா அப்படி சொன்ன?' என்று கேள்வி கேட்டது. அவள் மனதில் கேட்டதை நேரடியாக கேட்டிருந்தால் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்திருக்கும் என்று அறியாத பாவை மனதுக்குலேயே கண்ணீருடன் பேசிக் கொண்டாள்.
அடுத்த நாள் எழுந்தவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தவிர்த்து தங்கள் வேலைகளை தொடங்கினர்.
விஷ்வா சொன்னது போலவே அவளை அன்றிலிருந்து தள்ளி வைக்க தொடங்கினான்.
அவன் ஒதுக்கம் அவளுக்கு மன காயமாக இருந்தாலும் அந்த விலகல் அப்போது அவளுக்கு தேவையானதாக இருக்க அப்படியே விட்டு விட்டாள்.
வசுந்தராவை பார்க்கும் போதெல்லாம் சாணக்கியனுக்கு மலரின் எண்ணம் வந்து போவதை தடுக்க முடியவில்லை. மனதால் குற்ற உணர்ச்சியை தாங்க முடியாமல் சில நாட்கள் தவித்தவன் யோகா மூலம் பழைய நிலைக்கு திரும்பி இருந்தான்.
வசுந்தரா மேடிட்ட வயிற்றுடன் வேலை செய்ய முடியாமல் கஷ்டப்பட்டு சில வேலைகளை வீட்டுக்கு கொண்டு வந்து செய்ய தொடங்கினாள்.
இதை அவதானித்த சாணக்கியன், "இதெல்லாம் இப்போ தேவையா? கொஞ்சம் ரெஸ்ட் எடு" என்று கூற பைலில் இருந்து கண்ணை எடுத்து அவனை நிமிர்ந்து பார்த்தவள், "இப்போ இப்படி சொல்லுவீங்க சார் அப்புறம் மீட்டிங்ல என்ன உண்டு இல்லனு ஆக்குவீங்க" என்று நக்கலாய் சொல்ல அவனோ சிரித்தபடி, "நீ உண்மையாவே நல்ல டெடிகேஷன்டி...உன்ன போல எல்லா அதிகாரிகளும் வாங்கிற சம்பளத்துக்கு உண்மையா வேலை பார்த்தா நம் நாடு தான் அடுத்த வல்லரசு" என்றான்.
"அச்சோ குளிருதே, போதும் ஐஸ் வச்சது... இந்த ப்ராஜெக்ட்ல கொஞ்சம் டவுட் இருக்கு.வந்து எக்ஸ்பிளைன் பண்ணுங்க" என்று கூற அவ்வளவு நேரமும் வேலையில் களைத்து வந்தவன் முகம் சுளிக்காமல் அவள் அருகில் அமர்ந்து அனைத்தையும் விளங்கப்படுத்த தொடங்கினான்.
நாட்கள் இவ்வாறே நகர, ஒரு நாள் வாசலில் மித்ரா கையை பிசைந்துக் கொண்டு நின்றிருந்தாள்.
வேலைக்குச் செல்ல ஆயத்தமாகி வெளியே வந்த விஷ்வா அவளை ஒரு கணம் பார்த்து விட்டு தனது வண்டியில் ஏற போக அவ்விடத்துக்கு வந்த சித்ரா, "என்னம்மா விஷ்வா போறான் நீ போகலையா?" என்று கேட்க அவள் சங்கடத்துடன், "இல்ல அத்தை அது வந்து..." என்று இழுத்தாள். திரும்பிய விஷ்வா, "என்ன பிரச்சனை?" என்று சித்ராவிடம் கேட்க, "நல்ல பொண்ணும்மா நீ... சொல்லலையா?" என்றவர் விஷ்வாவிடம், "மித்ரா வண்டி கொஞ்சம் ரிப்பேராம்... அவசரமா ஸ்டேஷன் போகணுமாம். கொஞ்சம் ட்ரோப் பண்ணுடா" என்றவருக்கு அப்போது தான் அவர்கள் இருவரினதும் பாரா முகம் கண்ணில் பட்டு தொலைத்தது.
மித்ராவை ஒரு கணம் பார்த்தவன் வண்டியில் ஏறி ஹார்ன் அடிக்க மித்ரா அசையாமல் நின்றாள்.
"உன்ன தான் வரசொல்றான்... போம்மா" என்று கூறிய சித்ரா அவளை வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தார். அவளும் சங்கடத்துடன் அவன் வண்டியில் ஏறி அமர்ந்தாள்.
இருவரும் போகும் போது ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளவில்லை.
விஷ்வாக்கு தொலைபேசி வர அதை எடுத்தவன், "ஓகே" என்று பதிலளித்து விட்டு காரை தொடர்ந்து செலுத்தினான். இடையில் செல்லும் போது ஒரு இடத்தில் வண்டியை நிப்பாட்டிய விஷ்வா அவளை பார்த்தான். 'இவன் எதுக்கு நம்மள இப்படி பார்க்கிறான்?' என்று யோசித்தவள் புருவம் சுருக்கி பார்க்க அவனோ எட்டி கதவை திறக்க அருகில் வந்ததை பார்த்து அவன் தன்னை அணைக்க வருகிறான் என்று நினைத்தவள் அவனை தள்ள கைகளை கொண்டு போக ஒருகணம் கைகளை பார்த்து விட்டு அவளை முறைத்தவன் கதவை திறந்து விட்டான்.
இருவரின் மனதிலும் கோபம் இருந்ததால் கதவு திறந்த போது ஏற்பட்ட உரசல் கூட அவர்களை பாதிக்க வில்லை. கதவை திறந்தவன் கீழே இறங்குமாறு கைகளால் சைகை செய்ய, "வாட் ?" என்றாள் மித்ரா.
"இறங்குடி" என்று உறுமியவனை அதிர்ச்சியாக பார்த்தவள், "அப்போ எதுக்கு..." என்று தொடங்க போனவளை கை நீட்டி தடுத்தவன், "இறங்குனு சொன்னேன்" என்றான். இதுக்கு மேல் அவமான பட விரும்பாதவள் கோபமாக இறங்கி அதே கோபத்துடன் கதவை அடித்து சாத்தினாள்.
அவள் சாத்தியதும் கார் கண்ணாடியை இறக்கி கேலியாக சிரித்தவன் கண்ணாடியை மூடிக் கொண்டு வண்டியை அடுத்த கணம் அவ்விடத்தில் இருந்து எடுத்திருந்தான்.
"யு இடியட்" என்று காலை நிலத்தில் உதைத்தவள் அப்போது தான் கவனித்தாள் அது ஆட்டோ ஸ்டாண்ட் என்று. அங்கிருந்த ஆட்டோவை பிடித்து விஷ்வாவை திட்டியபடி சென்றவளுக்கு தெரியவில்லை அவன் ஒரு மெடிக்கல் எமெர்ஜென்சி கேசுக்காக போய் இருக்கும் விஷயம்.
அலுவலகத்துக்கு வந்தவளுக்கு மேலிடத்தில் சந்திக்க சொல்லி உத்தரவு வந்திருக்க உடனடியாக மேலதிகாரியை போய் சந்தித்தவளுக்கு சரமாரியாக திட்டு விழுந்தது.
அவளின் திருமணம் அதை தொடர்ந்து மகாலிங்கத்தின் இறப்பு என்பதால் பல கேஸ் பெண்டிங்கில் இருப்பதை சுட்டி காட்டி விழுந்த திட்டுகளை கம்பீரமாக நெஞ்சை நிமிர்த்தியே வாங்கிக் கொண்டாள்.
"ஜெயில் கைதி ரங்கனின் மெடிக்கல் ரிப்போர்ட் இன்னும் வரல" என்ற மேலதிகாரியிடம், "அது எடுத்தாச்சே சார் "என்றாள் மித்ரா. "யு இடியட் எல்லாம் மறந்தாச்சா ? பிரைவேட் ஆஹ் ஒரு செக்கப்புக்கு அவசரமா S.V .K ஹாஸ்பிடலில் கொடுத்திருக்கோம் நீங்களே நேர்ல போய் டிலே ஆனதுக்கு எக்ஸ்ப்ளனேஷன் கொடுத்து ரிப்போர்ட்டை வாங்கி வரணும்" என்று சொல்ல அவளுக்கோ அதிர்ச்சி மேல் அதிர்ச்சி 'அங்கேயா?' என்று நினைத்தவள் சற்று நேரம் கழித்து அவள் வாகனம் திருத்தி வர அதை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.
ஹாஸ்பிடலை அடைந்தவள் "டாக்டர் .கயல்விழி ரூம் எங்கே?" என்று ரிசப்ஷனில் கேட்டு விட்டு அவள் அறையை அடைந்தாள். உள்ளேச் சென்ற போது கயல்விழி கொஞ்சம் பிசியாக இருந்தாள். மித்ரா வந்ததை நிமிர்ந்து பார்த்தவள், "என்னடி இந்த பக்கம் காற்று வீசுது?" என்று கேட்க, "அத கேட்காதடி... லீவு எடுத்ததில் இருந்து தலைக்கு மேல வேலை. ஒரு கைதியின் மெடிக்கல் ரிப்போர்ட் எடுக்கணும். அதுக்கு எக்ஸ்ப்ளனேஷன் கொடுத்து விட்டு ரிப்போர்ட்டை வாங்கி வர சொல்லி ஒரே தொல்லை" என்று சலித்தபடியே முன்னால் இருந்த கதிரையில் உட்கார்ந்தாள்.
அவளை ஆச்சரியமாக பார்த்த கயல்விழி, "அதுக்கு உன் புருஷன் ரூமுக்கு போகணும் ... எதுக்குடி இங்க வந்த?" என்று கேட்க, "அங்கே போக முதல் உன்ன சும்மா பார்த்துட்டு போக வந்தேன்... உன்ன பார்க்க வர கூடாதா?" என்று கேட்க, "அப்படியில்ல மித்ரா நான் கொஞ்சம் தலை வலியால இப்போ தான் வந்தேன். அம்மா வேற உனக்கும் அண்ணாக்கும் பிரச்சனை போல என்று வரும் போது சொன்னாங்க... நீ வேற அவன் ரூமுக்கு போகாம இங்க வந்து நிக்கிற...அதான் கேட்டேன்... தப்பா நினைச்சுக்காத" என்றாள்.
உடனே அவள், "இட்ஸ் ஓகே கயல்... நான் வரேன்" என்றவள் வெளியேறி அங்கிருந்தவர்களிடம் விஷ்வாவின் அறையை கேட்டு தேடி அவன் அறையுள்ளே போனாள்.
அங்கே விஷ்வா இருக்கவில்லை ஆனால் இரு தாதிமார் இருந்து சில மருந்து பொருட்களை தேவைக்காக எடுத்துக் கொண்டிருந்தனர்.
உள்ளே வந்தவள், "டாக்டர் விஷ்வா" என்று அவர்களிடம் கேட்க, "சார் ஒரு எமெர்ஜென்சி கேஸ் விஷயமா போய் இருக்கிறார், நீங்க வெயிட் பண்ணுங்க இப்போ வந்திருவார்..." என்றவர்கள் அவன் மேசை முன்னால் இருந்த கதிரையை காட்டினார்கள். 'ஓ அதுதான் நம்மள வழியில இறக்கி விட்டானா?' என்று நினைத்தவளுக்கு இனம் புரியாத சந்தோசம் உருவானது.
அவளும் அவர்கள் இருக்கையில் அமர்ந்தவள் அறையை சுற்றி நோட்டமிட்டாள். அங்கே இருந்த நர்ஸ் அழகாக இருக்க மித்ராவுக்கோ இனம் புரியாத பயம் உருவானது.
'விச்சு அப்படி பட்டவனில்லை' என்று மனதை தேற்றியவள் அங்கேயே காத்திருக்க சிறிது நேரத்தில் விஷ்வா உள்ளே வந்தான்.
உள்ளே வந்ததும் அவளை கூர்ந்து பார்த்தபடி கைகளை கழுவச் சென்றவன் ஸ்டேதஸ்கோப்பையும் கோட்டையும் கழட்டி வைத்து விட்டு ஷர்ட் கைகளை முழங்கை வரை மடித்தபடி அங்கிருந்த அவன் இருக்கையில் இருந்தான். அவன் வந்தது தெரிந்தும் அவனை பார்க்காமல் இருந்தவள் அவன் முன்னே இருந்ததும் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவனோ அவள் ஒன்றும் பேசாமலிருக்க மேசையிலிருந்த பைல்களை பார்க்க தொடங்கினான். 'ரொம்ப தான் கொழுப்பு இவனுக்கு' என்று நினைத்தவள், "டாக்டர்" என்று தொடங்க வர அந்நேரம் பார்த்து இன்னொருவன் அறைக்குள் நுழைந்தான்.
"ஹாய் கபில் இப்போ தான் இங்கே வர வழி தெரிஞ்சுதா?" என்று விஷ்வா வந்தவனை பார்த்து கேட்க வந்தவனோ, "நீ பிசியா?" என்று மித்ராவை கண்களால் காட்டி கேட்டான்.
"ச்ச இது யூஸ்லெஸ் மேட்டர் .நீ வா" என்றவன் அவனை அணைத்து மித்ரா அருகில் இருந்த கதிரையில் இருக்க சொல்லி அரட்டையை தொடங்கினான். இருவரும் நீண்ட நேரம் பேச மித்ராவோ கோபத்தில் இருவரையும் எரித்து விடுவது போல் பார்த்தாள்.
அதை கவனித்த கபிலன், "டேய் விஷ்வா அவங்கள கவனிடா... நம்மள முறைக்கிறாங்க" என்று சொல்ல சிரித்து பேசிக் கொண்டிருந்தவன் சிரிப்பை நிறுத்தி மித்ராவை நோக்கி, "என்ன விஷயம்?" என்று கேட்க அவளோ இறுகிய முகத்துடன், "கைதி ரங்கனின் மெடிக்கல் ரிப்போர்ட்" என்றாள் அழுத்தமான குரலில்.
"ஓ... எமெர்ஜென்சினு அவசரமாக ரிப்போர்ட் தர சொல்லி ஒரு மாசம் ஆச்சு... இது தானா உங்க எமெர்ஜென்சி ?" என்று நக்கலாக கேட்க, "கொஞ்சம் பர்சனல் ஒர்க்" என்றாள்.
"அப்படியென்ன பர்சனல் ஒர்க்?" என்று கேட்க அவளோ அவன் வாயை அடைக்க, "என்னோட கல்யாணம் நடந்திச்சு" என்றாள்.
"ஊர்ல இல்லாததை பண்ணிட்டீங்க பாருங்க? அதை ரீசனா சொல்றதுக்கு... கல்யாணம் பண்ணினதுல உங்க டியூட்டி மறந்து போச்சா?" என்று கடுமையாக கேட்க அங்கிருந்த தாதியரும் கபிலனும் வாய் விட்டு சிரித்தனர்.
'சிரிக்கிறத பாரு' என்று மனதுக்குள் திட்டியவள் அவனை முறைத்த படி, "உங்க வேலைய மட்டும் பாருங்க டாக்டர் என் தனிப்பட்ட விஷயத்தில தலையிட வேண்டாம்" என்று கறாராக சொல்ல அவளை புருவம் உயர்த்தி பார்த்த விஷ்வா, "ஐசி" என்றான்.
பக்கத்தில் இருந்த கபிலனுக்கு அவள் பேச்சு எரிச்சலை கொடுக்க, "இப்படி தான் விஷ்வா...எல்லா தப்பையும் பண்ணிட்டு திமிரா வேற பேசுவாங்க இந்த போலீஸ்காரங்க... ஒண்ணுக்கும் உதவாதவங்க. கிரிமினலை பிடிக்க தெரியாது நம்ம கிட்ட வந்து வெட்டி வீராப்பு பேச மட்டும் தெரியும்...கல்யாணம் பண்ணி புருஷன் கூட கொஞ்சிக்கிட்டு இருந்திருப்பாங்க... இப்போ வந்து அத தா இத தா என்று அலுப்படிக்க மட்டும் தெரியும்" என்று கபிலன் மித்ராவை கொஞ்சமும் மதிக்காமல் பயம் இன்றி பொரிந்து தள்ள விஷ்வா அவனை சுவாரஸ்யத்துடனும் அடக்கப்பட்ட சிரிப்புடனும் பார்க்க மித்ராவோ அவனை முறைத்துக் கொண்டு இருந்தாள்.
"கூல்டா அரெஸ்ட் பண்ணிட போறாங்க" என்று விஷ்வா கபிலனிடம் சொல்ல சத்தமாக சிரித்தவன், "காசை தூக்கி எறிஞ்சா போதும்" என்றான். உடனே விஷ்வா, "எல்லாரும் அப்படி இல்லடா" என்றான். "அது சரி உன் பொண்டாட்டியும் போலீஸ் தானே... ஏன்டா உனக்கு பொண்ணா கிடைக்கல... போயும் போயும் ஒரு போலீஸ்காரிய கல்யாணம் பண்ணி இருக்க? சரி விடு" என்றவனை வெட்டவா குத்தவா என்று மித்ரா முறைக்க அந்த வசனம் விஷ்வாவுக்கும் பிடிக்காமல் இருக்க, "நாட்டுக்காக சேவை செய்றவங்கடா தப்பா பேசாத" என்று நண்பனை அடக்கியவன் மேலும் மித்ரா அங்கு இருந்தால் நிலைமை விபரீதம் ஆகி விடும் என்று அறிந்து மேசையிலிருந்த மெடிக்கல் ரிப்போட்டை தேடி எடுத்து சைன் பண்ணினான். மித்ராவோ மனதுக்குள், 'டேய் டிபார்ட்மெண்டை பற்றியா தப்பா பேசுற? உன் வாய்க்குள்ளேயே சுடணும் டா' என்று கபிலனுக்கு திட்டியபடி இருந்தாள்.
"சரி விடு... எப்போ உன் பொண்டாட்டிய இன்ட்ரோ கொடுக்க போ?" என்று கபிலன் கேட்க அவனை பார்த்து சிரித்தபடி கதிரையில் இருந்து எழுந்தவன், "வெல் இப்போவே" என்றான்.
"இப்போவா?" என்று கேட்டவனிடம், "எஸ் அஃப் கோர்ஸ்" என்றவன், "கபில்... திஸ் இஸ் மிஸிஸ்.மித்ரா விஷ்வவர்மன்" என்று மித்ராவை கைகாட்டி கபிலனை பார்த்து சொன்னவன், "திஸ் இஸ் கபிலன்" என்று மித்ராவிடம் சொன்னான்.
அதை கேட்டு அதிர்ந்த கபிலன், "டேய்... இப்படி கோர்த்து விட்டியேடா" என்று விஷ்வாவுக்கு மெதுவாக திட்டி விட்டு மித்ராவை பார்க்க மித்ரா கபிலனை எரித்து விடுவது போல பார்த்தபடியே கதிரையில் இருந்து எழுந்தாள். விஷ்வாவோ கை கட்டி இருவரையும் அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். கபிலன் சங்கடத்துடன், "ஹெலோ சிஸ்டர்" என்று அவளிடம் கையை நீட்ட மேசையிலிருந்த பைலை எடுத்தவள் அவன் நீட்டிய கையையும் அவனையும் முறைத்தவள் அடக்கப்பட்ட சிரிப்புடன் நின்ற விஷ்வாவையும் முறைத்தபடி வெளியேறினாள்.
அவள் சென்றதும் கபிலன் விஷ்வாவை வாங்கு வாங்கென்று வாங்க அவனோ, "விடு மச்சி" என்றபடி அரட்டையை தொடங்கினான். மித்ரா நிம்மதி இல்லாமல் சில நாள் தவித்தவள் ஒரு முடிவெடுத்தபடி வளைக்காப்புக்கு இரு நாட்கள் முன்னர் கௌதமை தேடிச் சென்றாள்.
"மே ஐ கம் இன் சார்?" என்றபடி உள்ளே நுழைந்தவளை புருவம் உயர்த்தி கெளதம் பார்க்க அவளோ பாக்கெட்டிலிருந்து ஒரு பொருளை எடுத்து மேசை மீது வைத்தாள். கதிரையிலிருந்த கெளதம் அதிர்ச்சியுடன், "இது..." என்றபடி எழுந்து நின்றான்.
அவன் சாணக்கியனிடம் உள்ளங்கையை விரித்து காட்டியது ஊசியின் மூடியையே ஆகும்... அதை பார்த்து ஒரு கணம் தோன்றிய அதிர்ச்சியை மறைத்த சாணக்கியன், "என்னடா இதெல்லாம்?" என்று கேட்க விஷ்வாவோ, "நம்ம அப்பாவை யாரோ கொன்னுருக்காங்கனு எனக்கு சந்தேகமா இருக்கு அண்ணா" என்றான்.
"என்னடா சொல்ற? அவருக்கு அப்போ மாரடைப்பு வரலையா?" என்று புரியாத போல கேட்டவனிடம், "இல்ல அண்ணா... வர வச்சு இருக்காங்க... போஸ்ட்மாட்டம் செய்யும் போதே அவர் கையில் ஊசி போட்டதால் ரத்தம் உறைஞ்சு இருந்தது. வெய்ன்ல காற்றை செலுத்தி அவருக்கு ஹார்ட் ஸ்ட்ரோக் வர வச்சு இருக்காங்க... இந்த மூடி அப்பாவோட ரூம் டஸ்ட்பின் உள்ள இருந்திச்சு" என்றவனை கூர்ந்து பார்த்தபடி, "ஏன் டா நீ ஏற்கனவே சொல்லல?" என்று கேட்க, "இதுக்கு எந்த எவிடென்சும் இல்ல அண்ணா... சந்தேகம் மட்டும் தான். ரிப்போர்ட்ல ஹார்ட் ஸ்ட்ரோக் என்று தான் இருக்கும். நேற்று தான் மனசு கேட்காம ஒரு மாசமா மூடி இருந்த அப்பாவோட அறையை திறந்து பார்த்த நேரம் தான் இது கிடைச்சுது. அப்போ தான் சந்தேகம் கூடிச்சு... இப்போ கூட இது கன்பார்ம் இல்ல. இது வேற எதுக்கும் அப்பா பாவிச்ச ஊசியா கூட இருக்கலாம்" என்றவனிடம், "சரி நான் பார்த்துக்கிறேன். நீ இத பற்றி யோசிக்காதே. யார்கிட்டயும் இத சொல்லி குழப்பாதே" என்ற சாணக்கியன் அதை தனது கைகளில் வாங்கிக் கொண்டான்.
அதை அவனிடம் கொடுத்தபடி, "நான் மித்ரா கிட்ட கூட சொல்லல அண்ணா சொல்லவும் மாட்டேன்" என்றவனை மெல்லிய புன்னகையுடன் நோக்கினான்.
போக திரும்பியவன் சற்று நின்று, "அண்ணா இன்னொன்று சொன்னா தப்பா நினைக்க மாட்டீங்களே?" என்று கேட்க புருவம் உயர்த்தி என்ன என்று சாணக்கியன் கேட்டான். "அது வந்து எனக்கு கெளதம் மேல கொஞ்சம் சந்தேகமா இருக்கு... அப்பா இறந்ததிலிருந்து கயல் பற்றியும் அக்கறை இல்லாம இந்த பக்கம் வராம இருக்கிறான். நான் அவதானிச்ச வரை அவன் நடவடிக்கை சரி இல்ல. அப்பாவோட அடிக்கடி ரகசியமா பேசி பார்த்திருக்கேன்" என்றவனை உணர்ச்சி துடைத்த முகத்துடன் பார்த்தவன், "நான் பார்க்கிறேன்" என்று சொல்லி விஷ்வாவை அனுப்பினான்.
வசுந்தராவுக்கு இன்னும் ஒரு மாதத்தில் பிரசவம் என்ற நிலை வந்தது.
மகாலிங்கம் இறப்பை படிப்படியாக மறந்து அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். 31 ஆம் நாள் நினைவாஞ்சலியில் மகாலிங்கத்தின் ஆளுயரப்படத்துக்கு மாலையிட்டு அதுக்குரிய கிரியைகள் நடைபெற்றது.
அவர் முன்னே மண்டியிட்டு அழுத சித்ராவிடம், 'நீங்க அழுற அளவுக்கு அவர் ஒன்றும் நல்லவர் இல்லம்மா' என்று மானசீகமாக உரையாடினான் சாணக்கியன்.
இறுதி கிரியைக்கு வந்த ஒருவர், "இழவு நடந்த வீட்டில் ஒரு நல்ல காரியம் நடக்கணும் அந்த புள்ளைக்கு வளைகாப்பை யாச்சும் பண்ணுங்கப்பா" என்று சொல்ல சாணக்கியன் ஆமோதிப்பாக தலையாட்டினான்.
மித்ராவுக்கோ எதிலும் ஒட்டுதல் ஏற்படவில்லை.
ஏதோ ஒன்று அவள் மனதில் உறுத்திக் கொண்டிருந்தது. வளைகாப்பு தேதி அன்றே குறிக்கப்பட்டு இன்னும் இரு கிழமைகளில் வளைகாப்பு என்று முடிவு செய்யப்பட்டது.
இரு நாட்கள் கழித்து வேலையில் இருந்து வந்த விஷ்வா அன்று தனது வாழ்க்கையை தொடங்கும் எதிர்பார்ப்புடன் அறைக்குள் நுழைந்தான்.
குளித்து விட்டு வெளி வந்தவன் மித்ராவுக்காக காத்திருக்க அவள் வந்து சேர பத்து மணியாகி விட்டது.
"ஏன் மித்ரா லேட்?" என்றவன் அவளை நெருங்கி இழுத்து அணைக்க தள்ளி விட்டவள், "குளிச்சிட்டு வரேன்" என்றபடி குளியலறைக்குள் நுழைந்தாள்.
அவள் தள்ளி விட்டதில் வந்த கோபத்தை கட்டுப்படுத்தியவன் அவளுக்காக மேலும் காத்திருக்க,
வெளியில் வந்தவள், "சாப்பிடலையா? எனக்கு பசிக்குது விஷ்வா" என்று கேட்டாள்.
"எனக்கும் தான் பசிக்குது" என்று ஒரு மார்க்கமாக சொன்னவன் அவளை அழைத்துச் சென்று இருவரும் அமைதியாக சாப்பிட்டனர்.
அங்கு சித்ராவும் கயலும் இருந்ததால் விஷ்வா மித்ராவுடன் எந்த வித சில்மிஷத்திலும் ஈடுபடவில்லை.
சாப்பிட்டு விட்டு அறைக்குள் வந்ததும் அவளை இழுத்து அணைக்க போக அவள் தள்ளிய எதிர்பாராத ஒரே தள்ளில் அவன் கட்டிலில் விழுந்தான்.
"ஏன் டி?" என்று கோவமாக அவன் கேட்க, "இப்போ தான் மாமாவோட கிரியை முடிஞ்சிருக்கு. என்ன அவசரம்? இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்" என்றாள் கறாராக.
அதை கேட்டு ஆழ்ந்து பெருமூச்சு விட்டவன், "எத்தனை நாள் இப்படியே என்னை காக்க வைக்கிறதா உத்தேசம்?" என்று கேட்க, "எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு" என்றவள் கண்கள் கோபத்தில் பளபளத்தது.
"உன் வேலைய பார்க்கும் போது என்னையும் கவனிக்கிறது" என்று கட்டிலில் படுத்தபடியே புருவம் தூக்கி அவன் சொல்ல ஒரு பெரு மூச்சையே பதிலாக கொடுத்தாள்.
அவனருகே வந்தவளை இழுத்து கட்டிலில் போட்டவன் அவள் மேல் படர அவளோ எந்த உணர்ச்சியுமில்லாமல் கல் போல் இருந்தாள். அதை கண்டு எரிச்சலடைந்து, "ச்ச" என்றபடி எழுந்தவன், "எதுக்கு என்ன பிடிக்காம கல்யாணம் பண்ணிக்கிட்ட?" என்று கேட்க அவளோ இருந்த பல யோசனைகளால் எரிச்சலடைந்தவள், "நான் கல்யாணம் பண்ண ஆசைப்படலயே நீங்க தான்" என்றாள்.
அவள் வார்த்தைகள் அவனை சீண்ட, "உன்னோட தப்பா நடந்ததுக்காக ஒரு ஆம்பள நானே உன்ன கல்யாணம் பண்ண யோசிச்சேன்.ஆனா அந்த விஷயம் உனக்கு பெரிசா தெரியலையா?" என்று கோபமாக உரைத்த அவன் "அந்த" என்ற வார்த்தைகளை எந்த உள் அர்த்தத்திலும் சொல்லாமல், "தான் ஒரு ஆம்பளயாக இருந்தும் கூட ஏமாற்றாமல் உன்னை திருமணம் செய்தது பெரிதாக தெரியவில்லையா?" என்று சாதாரணமான கேள்வியாகவே கேட்டான்.
ஆனால் அப்போது இருந்த நிலமைக்கு அவன் வார்த்தைகள் அவள் காதில் தப்பாகவே ஒலித்தது.
அவன் வார்த்தைகளில் "அந்த விஷயம்" என்ற சொல் தன் நடத்தையை குறிக்கிறது என்று தப்பாக விளங்கியவளின் கோபம் பன் மடங்காக, "ஆமா அப்படிதான் எனக்கு அது பெரிய விஷயமில்லை தான். சர்வ சாதாரணம் தான். இப்போ எனக்கு நீ தேவையில்ல" என்று அகங்காரமாக ஒருமையில் கத்தியவளை பார்த்து விஷ்வா திகைத்து போனான்.
'இப்போ நான் என்ன கேட்டுட்டேன்னு இப்படி கத்துறா?' என்று யோசித்தவனுக்கு அவன் கூறிய வார்த்தைகளில் வேறு அர்த்தம் பொதிந்திருந்தது அப்போது அவனுக்கு விளங்கவில்லை.
"இப்போ என்னாச்சு உனக்கு ?" என்று கேட்டவனிடம் அவனை பதிலுக்கு காயப்படுத்த யோசித்தவள், "உன்ன பார்த்தாலே அருவருப்பா இருக்கு இனி பக்கத்துல வராதே" என்று வார்த்தையை விட அது அவனுக்கும் தப்பாகவே காதைச் சென்று அடைந்தது. அவள் அவனை காயப்படுத்த மனதில் யோசிக்காமல் கூறிய வார்த்தைகள் அவன் மனதை ஈட்டியால் குத்தி கிழித்தது.
அவளை நோக்கி அடிபட்ட பார்வையை வீசியவன் மேலும் எதுவும் பேசாமல் சென்று படுத்துக் கொண்டான். பேசி தீர்க்காத பிரச்சனைகள் குடும்பத்தில் பெரிய குழப்பங்களை உண்டாக்கும் என்று அவர்கள் இருவரும் அக்கணத்தில் அறியவில்லை. இருவரும் வார்த்தைகளை தப்பான அர்த்தம் கொண்டு இல்லாத பிரச்சனையை அவர்களே உருவாக்கிக் கொண்டனர்.
நடந்து வந்து கீழே போர்வையை விரித்து படுத்தவளை வெறித்து பார்த்தவனுக்கு அவள் மேல் கொண்ட அன்பு அவன் மனதை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாற, "இனி என் சுண்டு விரல் கூட உன் மேல படாது. விரும்பினா மேல படு." என்று சினமாக உரைத்த விஷ்வா மற்றைய பக்கம் திரும்பி படுத்தான்.
அவள் மனதோ, 'என்ன பார்த்து ஏன் விஷ்வா அப்படி சொன்ன?' என்று கேள்வி கேட்டது. அவள் மனதில் கேட்டதை நேரடியாக கேட்டிருந்தால் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்திருக்கும் என்று அறியாத பாவை மனதுக்குலேயே கண்ணீருடன் பேசிக் கொண்டாள்.
அடுத்த நாள் எழுந்தவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தவிர்த்து தங்கள் வேலைகளை தொடங்கினர்.
விஷ்வா சொன்னது போலவே அவளை அன்றிலிருந்து தள்ளி வைக்க தொடங்கினான்.
அவன் ஒதுக்கம் அவளுக்கு மன காயமாக இருந்தாலும் அந்த விலகல் அப்போது அவளுக்கு தேவையானதாக இருக்க அப்படியே விட்டு விட்டாள்.
வசுந்தராவை பார்க்கும் போதெல்லாம் சாணக்கியனுக்கு மலரின் எண்ணம் வந்து போவதை தடுக்க முடியவில்லை. மனதால் குற்ற உணர்ச்சியை தாங்க முடியாமல் சில நாட்கள் தவித்தவன் யோகா மூலம் பழைய நிலைக்கு திரும்பி இருந்தான்.
வசுந்தரா மேடிட்ட வயிற்றுடன் வேலை செய்ய முடியாமல் கஷ்டப்பட்டு சில வேலைகளை வீட்டுக்கு கொண்டு வந்து செய்ய தொடங்கினாள்.
இதை அவதானித்த சாணக்கியன், "இதெல்லாம் இப்போ தேவையா? கொஞ்சம் ரெஸ்ட் எடு" என்று கூற பைலில் இருந்து கண்ணை எடுத்து அவனை நிமிர்ந்து பார்த்தவள், "இப்போ இப்படி சொல்லுவீங்க சார் அப்புறம் மீட்டிங்ல என்ன உண்டு இல்லனு ஆக்குவீங்க" என்று நக்கலாய் சொல்ல அவனோ சிரித்தபடி, "நீ உண்மையாவே நல்ல டெடிகேஷன்டி...உன்ன போல எல்லா அதிகாரிகளும் வாங்கிற சம்பளத்துக்கு உண்மையா வேலை பார்த்தா நம் நாடு தான் அடுத்த வல்லரசு" என்றான்.
"அச்சோ குளிருதே, போதும் ஐஸ் வச்சது... இந்த ப்ராஜெக்ட்ல கொஞ்சம் டவுட் இருக்கு.வந்து எக்ஸ்பிளைன் பண்ணுங்க" என்று கூற அவ்வளவு நேரமும் வேலையில் களைத்து வந்தவன் முகம் சுளிக்காமல் அவள் அருகில் அமர்ந்து அனைத்தையும் விளங்கப்படுத்த தொடங்கினான்.
நாட்கள் இவ்வாறே நகர, ஒரு நாள் வாசலில் மித்ரா கையை பிசைந்துக் கொண்டு நின்றிருந்தாள்.
வேலைக்குச் செல்ல ஆயத்தமாகி வெளியே வந்த விஷ்வா அவளை ஒரு கணம் பார்த்து விட்டு தனது வண்டியில் ஏற போக அவ்விடத்துக்கு வந்த சித்ரா, "என்னம்மா விஷ்வா போறான் நீ போகலையா?" என்று கேட்க அவள் சங்கடத்துடன், "இல்ல அத்தை அது வந்து..." என்று இழுத்தாள். திரும்பிய விஷ்வா, "என்ன பிரச்சனை?" என்று சித்ராவிடம் கேட்க, "நல்ல பொண்ணும்மா நீ... சொல்லலையா?" என்றவர் விஷ்வாவிடம், "மித்ரா வண்டி கொஞ்சம் ரிப்பேராம்... அவசரமா ஸ்டேஷன் போகணுமாம். கொஞ்சம் ட்ரோப் பண்ணுடா" என்றவருக்கு அப்போது தான் அவர்கள் இருவரினதும் பாரா முகம் கண்ணில் பட்டு தொலைத்தது.
மித்ராவை ஒரு கணம் பார்த்தவன் வண்டியில் ஏறி ஹார்ன் அடிக்க மித்ரா அசையாமல் நின்றாள்.
"உன்ன தான் வரசொல்றான்... போம்மா" என்று கூறிய சித்ரா அவளை வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தார். அவளும் சங்கடத்துடன் அவன் வண்டியில் ஏறி அமர்ந்தாள்.
இருவரும் போகும் போது ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளவில்லை.
விஷ்வாக்கு தொலைபேசி வர அதை எடுத்தவன், "ஓகே" என்று பதிலளித்து விட்டு காரை தொடர்ந்து செலுத்தினான். இடையில் செல்லும் போது ஒரு இடத்தில் வண்டியை நிப்பாட்டிய விஷ்வா அவளை பார்த்தான். 'இவன் எதுக்கு நம்மள இப்படி பார்க்கிறான்?' என்று யோசித்தவள் புருவம் சுருக்கி பார்க்க அவனோ எட்டி கதவை திறக்க அருகில் வந்ததை பார்த்து அவன் தன்னை அணைக்க வருகிறான் என்று நினைத்தவள் அவனை தள்ள கைகளை கொண்டு போக ஒருகணம் கைகளை பார்த்து விட்டு அவளை முறைத்தவன் கதவை திறந்து விட்டான்.
இருவரின் மனதிலும் கோபம் இருந்ததால் கதவு திறந்த போது ஏற்பட்ட உரசல் கூட அவர்களை பாதிக்க வில்லை. கதவை திறந்தவன் கீழே இறங்குமாறு கைகளால் சைகை செய்ய, "வாட் ?" என்றாள் மித்ரா.
"இறங்குடி" என்று உறுமியவனை அதிர்ச்சியாக பார்த்தவள், "அப்போ எதுக்கு..." என்று தொடங்க போனவளை கை நீட்டி தடுத்தவன், "இறங்குனு சொன்னேன்" என்றான். இதுக்கு மேல் அவமான பட விரும்பாதவள் கோபமாக இறங்கி அதே கோபத்துடன் கதவை அடித்து சாத்தினாள்.
அவள் சாத்தியதும் கார் கண்ணாடியை இறக்கி கேலியாக சிரித்தவன் கண்ணாடியை மூடிக் கொண்டு வண்டியை அடுத்த கணம் அவ்விடத்தில் இருந்து எடுத்திருந்தான்.
"யு இடியட்" என்று காலை நிலத்தில் உதைத்தவள் அப்போது தான் கவனித்தாள் அது ஆட்டோ ஸ்டாண்ட் என்று. அங்கிருந்த ஆட்டோவை பிடித்து விஷ்வாவை திட்டியபடி சென்றவளுக்கு தெரியவில்லை அவன் ஒரு மெடிக்கல் எமெர்ஜென்சி கேசுக்காக போய் இருக்கும் விஷயம்.
அலுவலகத்துக்கு வந்தவளுக்கு மேலிடத்தில் சந்திக்க சொல்லி உத்தரவு வந்திருக்க உடனடியாக மேலதிகாரியை போய் சந்தித்தவளுக்கு சரமாரியாக திட்டு விழுந்தது.
அவளின் திருமணம் அதை தொடர்ந்து மகாலிங்கத்தின் இறப்பு என்பதால் பல கேஸ் பெண்டிங்கில் இருப்பதை சுட்டி காட்டி விழுந்த திட்டுகளை கம்பீரமாக நெஞ்சை நிமிர்த்தியே வாங்கிக் கொண்டாள்.
"ஜெயில் கைதி ரங்கனின் மெடிக்கல் ரிப்போர்ட் இன்னும் வரல" என்ற மேலதிகாரியிடம், "அது எடுத்தாச்சே சார் "என்றாள் மித்ரா. "யு இடியட் எல்லாம் மறந்தாச்சா ? பிரைவேட் ஆஹ் ஒரு செக்கப்புக்கு அவசரமா S.V .K ஹாஸ்பிடலில் கொடுத்திருக்கோம் நீங்களே நேர்ல போய் டிலே ஆனதுக்கு எக்ஸ்ப்ளனேஷன் கொடுத்து ரிப்போர்ட்டை வாங்கி வரணும்" என்று சொல்ல அவளுக்கோ அதிர்ச்சி மேல் அதிர்ச்சி 'அங்கேயா?' என்று நினைத்தவள் சற்று நேரம் கழித்து அவள் வாகனம் திருத்தி வர அதை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.
ஹாஸ்பிடலை அடைந்தவள் "டாக்டர் .கயல்விழி ரூம் எங்கே?" என்று ரிசப்ஷனில் கேட்டு விட்டு அவள் அறையை அடைந்தாள். உள்ளேச் சென்ற போது கயல்விழி கொஞ்சம் பிசியாக இருந்தாள். மித்ரா வந்ததை நிமிர்ந்து பார்த்தவள், "என்னடி இந்த பக்கம் காற்று வீசுது?" என்று கேட்க, "அத கேட்காதடி... லீவு எடுத்ததில் இருந்து தலைக்கு மேல வேலை. ஒரு கைதியின் மெடிக்கல் ரிப்போர்ட் எடுக்கணும். அதுக்கு எக்ஸ்ப்ளனேஷன் கொடுத்து விட்டு ரிப்போர்ட்டை வாங்கி வர சொல்லி ஒரே தொல்லை" என்று சலித்தபடியே முன்னால் இருந்த கதிரையில் உட்கார்ந்தாள்.
அவளை ஆச்சரியமாக பார்த்த கயல்விழி, "அதுக்கு உன் புருஷன் ரூமுக்கு போகணும் ... எதுக்குடி இங்க வந்த?" என்று கேட்க, "அங்கே போக முதல் உன்ன சும்மா பார்த்துட்டு போக வந்தேன்... உன்ன பார்க்க வர கூடாதா?" என்று கேட்க, "அப்படியில்ல மித்ரா நான் கொஞ்சம் தலை வலியால இப்போ தான் வந்தேன். அம்மா வேற உனக்கும் அண்ணாக்கும் பிரச்சனை போல என்று வரும் போது சொன்னாங்க... நீ வேற அவன் ரூமுக்கு போகாம இங்க வந்து நிக்கிற...அதான் கேட்டேன்... தப்பா நினைச்சுக்காத" என்றாள்.
உடனே அவள், "இட்ஸ் ஓகே கயல்... நான் வரேன்" என்றவள் வெளியேறி அங்கிருந்தவர்களிடம் விஷ்வாவின் அறையை கேட்டு தேடி அவன் அறையுள்ளே போனாள்.
அங்கே விஷ்வா இருக்கவில்லை ஆனால் இரு தாதிமார் இருந்து சில மருந்து பொருட்களை தேவைக்காக எடுத்துக் கொண்டிருந்தனர்.
உள்ளே வந்தவள், "டாக்டர் விஷ்வா" என்று அவர்களிடம் கேட்க, "சார் ஒரு எமெர்ஜென்சி கேஸ் விஷயமா போய் இருக்கிறார், நீங்க வெயிட் பண்ணுங்க இப்போ வந்திருவார்..." என்றவர்கள் அவன் மேசை முன்னால் இருந்த கதிரையை காட்டினார்கள். 'ஓ அதுதான் நம்மள வழியில இறக்கி விட்டானா?' என்று நினைத்தவளுக்கு இனம் புரியாத சந்தோசம் உருவானது.
அவளும் அவர்கள் இருக்கையில் அமர்ந்தவள் அறையை சுற்றி நோட்டமிட்டாள். அங்கே இருந்த நர்ஸ் அழகாக இருக்க மித்ராவுக்கோ இனம் புரியாத பயம் உருவானது.
'விச்சு அப்படி பட்டவனில்லை' என்று மனதை தேற்றியவள் அங்கேயே காத்திருக்க சிறிது நேரத்தில் விஷ்வா உள்ளே வந்தான்.
உள்ளே வந்ததும் அவளை கூர்ந்து பார்த்தபடி கைகளை கழுவச் சென்றவன் ஸ்டேதஸ்கோப்பையும் கோட்டையும் கழட்டி வைத்து விட்டு ஷர்ட் கைகளை முழங்கை வரை மடித்தபடி அங்கிருந்த அவன் இருக்கையில் இருந்தான். அவன் வந்தது தெரிந்தும் அவனை பார்க்காமல் இருந்தவள் அவன் முன்னே இருந்ததும் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவனோ அவள் ஒன்றும் பேசாமலிருக்க மேசையிலிருந்த பைல்களை பார்க்க தொடங்கினான். 'ரொம்ப தான் கொழுப்பு இவனுக்கு' என்று நினைத்தவள், "டாக்டர்" என்று தொடங்க வர அந்நேரம் பார்த்து இன்னொருவன் அறைக்குள் நுழைந்தான்.
"ஹாய் கபில் இப்போ தான் இங்கே வர வழி தெரிஞ்சுதா?" என்று விஷ்வா வந்தவனை பார்த்து கேட்க வந்தவனோ, "நீ பிசியா?" என்று மித்ராவை கண்களால் காட்டி கேட்டான்.
"ச்ச இது யூஸ்லெஸ் மேட்டர் .நீ வா" என்றவன் அவனை அணைத்து மித்ரா அருகில் இருந்த கதிரையில் இருக்க சொல்லி அரட்டையை தொடங்கினான். இருவரும் நீண்ட நேரம் பேச மித்ராவோ கோபத்தில் இருவரையும் எரித்து விடுவது போல் பார்த்தாள்.
அதை கவனித்த கபிலன், "டேய் விஷ்வா அவங்கள கவனிடா... நம்மள முறைக்கிறாங்க" என்று சொல்ல சிரித்து பேசிக் கொண்டிருந்தவன் சிரிப்பை நிறுத்தி மித்ராவை நோக்கி, "என்ன விஷயம்?" என்று கேட்க அவளோ இறுகிய முகத்துடன், "கைதி ரங்கனின் மெடிக்கல் ரிப்போர்ட்" என்றாள் அழுத்தமான குரலில்.
"ஓ... எமெர்ஜென்சினு அவசரமாக ரிப்போர்ட் தர சொல்லி ஒரு மாசம் ஆச்சு... இது தானா உங்க எமெர்ஜென்சி ?" என்று நக்கலாக கேட்க, "கொஞ்சம் பர்சனல் ஒர்க்" என்றாள்.
"அப்படியென்ன பர்சனல் ஒர்க்?" என்று கேட்க அவளோ அவன் வாயை அடைக்க, "என்னோட கல்யாணம் நடந்திச்சு" என்றாள்.
"ஊர்ல இல்லாததை பண்ணிட்டீங்க பாருங்க? அதை ரீசனா சொல்றதுக்கு... கல்யாணம் பண்ணினதுல உங்க டியூட்டி மறந்து போச்சா?" என்று கடுமையாக கேட்க அங்கிருந்த தாதியரும் கபிலனும் வாய் விட்டு சிரித்தனர்.
'சிரிக்கிறத பாரு' என்று மனதுக்குள் திட்டியவள் அவனை முறைத்த படி, "உங்க வேலைய மட்டும் பாருங்க டாக்டர் என் தனிப்பட்ட விஷயத்தில தலையிட வேண்டாம்" என்று கறாராக சொல்ல அவளை புருவம் உயர்த்தி பார்த்த விஷ்வா, "ஐசி" என்றான்.
பக்கத்தில் இருந்த கபிலனுக்கு அவள் பேச்சு எரிச்சலை கொடுக்க, "இப்படி தான் விஷ்வா...எல்லா தப்பையும் பண்ணிட்டு திமிரா வேற பேசுவாங்க இந்த போலீஸ்காரங்க... ஒண்ணுக்கும் உதவாதவங்க. கிரிமினலை பிடிக்க தெரியாது நம்ம கிட்ட வந்து வெட்டி வீராப்பு பேச மட்டும் தெரியும்...கல்யாணம் பண்ணி புருஷன் கூட கொஞ்சிக்கிட்டு இருந்திருப்பாங்க... இப்போ வந்து அத தா இத தா என்று அலுப்படிக்க மட்டும் தெரியும்" என்று கபிலன் மித்ராவை கொஞ்சமும் மதிக்காமல் பயம் இன்றி பொரிந்து தள்ள விஷ்வா அவனை சுவாரஸ்யத்துடனும் அடக்கப்பட்ட சிரிப்புடனும் பார்க்க மித்ராவோ அவனை முறைத்துக் கொண்டு இருந்தாள்.
"கூல்டா அரெஸ்ட் பண்ணிட போறாங்க" என்று விஷ்வா கபிலனிடம் சொல்ல சத்தமாக சிரித்தவன், "காசை தூக்கி எறிஞ்சா போதும்" என்றான். உடனே விஷ்வா, "எல்லாரும் அப்படி இல்லடா" என்றான். "அது சரி உன் பொண்டாட்டியும் போலீஸ் தானே... ஏன்டா உனக்கு பொண்ணா கிடைக்கல... போயும் போயும் ஒரு போலீஸ்காரிய கல்யாணம் பண்ணி இருக்க? சரி விடு" என்றவனை வெட்டவா குத்தவா என்று மித்ரா முறைக்க அந்த வசனம் விஷ்வாவுக்கும் பிடிக்காமல் இருக்க, "நாட்டுக்காக சேவை செய்றவங்கடா தப்பா பேசாத" என்று நண்பனை அடக்கியவன் மேலும் மித்ரா அங்கு இருந்தால் நிலைமை விபரீதம் ஆகி விடும் என்று அறிந்து மேசையிலிருந்த மெடிக்கல் ரிப்போட்டை தேடி எடுத்து சைன் பண்ணினான். மித்ராவோ மனதுக்குள், 'டேய் டிபார்ட்மெண்டை பற்றியா தப்பா பேசுற? உன் வாய்க்குள்ளேயே சுடணும் டா' என்று கபிலனுக்கு திட்டியபடி இருந்தாள்.
"சரி விடு... எப்போ உன் பொண்டாட்டிய இன்ட்ரோ கொடுக்க போ?" என்று கபிலன் கேட்க அவனை பார்த்து சிரித்தபடி கதிரையில் இருந்து எழுந்தவன், "வெல் இப்போவே" என்றான்.
"இப்போவா?" என்று கேட்டவனிடம், "எஸ் அஃப் கோர்ஸ்" என்றவன், "கபில்... திஸ் இஸ் மிஸிஸ்.மித்ரா விஷ்வவர்மன்" என்று மித்ராவை கைகாட்டி கபிலனை பார்த்து சொன்னவன், "திஸ் இஸ் கபிலன்" என்று மித்ராவிடம் சொன்னான்.
அதை கேட்டு அதிர்ந்த கபிலன், "டேய்... இப்படி கோர்த்து விட்டியேடா" என்று விஷ்வாவுக்கு மெதுவாக திட்டி விட்டு மித்ராவை பார்க்க மித்ரா கபிலனை எரித்து விடுவது போல பார்த்தபடியே கதிரையில் இருந்து எழுந்தாள். விஷ்வாவோ கை கட்டி இருவரையும் அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். கபிலன் சங்கடத்துடன், "ஹெலோ சிஸ்டர்" என்று அவளிடம் கையை நீட்ட மேசையிலிருந்த பைலை எடுத்தவள் அவன் நீட்டிய கையையும் அவனையும் முறைத்தவள் அடக்கப்பட்ட சிரிப்புடன் நின்ற விஷ்வாவையும் முறைத்தபடி வெளியேறினாள்.
அவள் சென்றதும் கபிலன் விஷ்வாவை வாங்கு வாங்கென்று வாங்க அவனோ, "விடு மச்சி" என்றபடி அரட்டையை தொடங்கினான். மித்ரா நிம்மதி இல்லாமல் சில நாள் தவித்தவள் ஒரு முடிவெடுத்தபடி வளைக்காப்புக்கு இரு நாட்கள் முன்னர் கௌதமை தேடிச் சென்றாள்.
"மே ஐ கம் இன் சார்?" என்றபடி உள்ளே நுழைந்தவளை புருவம் உயர்த்தி கெளதம் பார்க்க அவளோ பாக்கெட்டிலிருந்து ஒரு பொருளை எடுத்து மேசை மீது வைத்தாள். கதிரையிலிருந்த கெளதம் அதிர்ச்சியுடன், "இது..." என்றபடி எழுந்து நின்றான்.