ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 26

pommu

Administrator
Staff member

அத்தியாயம் 26

சற்று நேரத்தில் அவனும் நீந்துவதற்காக ஆயத்தமாகி வெளியே வந்து விட்டான்...

அங்கே சுவரில் சாய்ந்து நின்றவளிடம், "போகலாமா?" என்று கேட்டான்.

அவளுக்கோ ஷார்ட்ஸ் மட்டுமே அணிந்து இருந்தவனை ஏறிட்டுப் பார்க்க சங்கடம்...

தலையை குனிந்து கொண்டே, "ஆம்" என்று தலையாட்டினாள்...

அவனோ அவளது சங்கடத்தை அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்துக் கொண்டே முன்னால் நடக்க, அவனை பின் தொடர்ந்து நடந்தவள் தலை மெதுவாக நிமிர்ந்தது...

அவன் முதுகில் இருந்த வாள் டாட்டூவில் அவள் விழிகள் படிந்தன...

அதனை வருடிப் பார்க்க இன்னுமே அவள் கைகள் பரபரத்தன... அடக்கிக் கொண்டாள்.

உரிமை இருந்தும் வெட்கம் அவளை தடுத்துக் கொண்டு இருந்தது...

அவள் இதழ்கள் மெலிதாக விரியவும் அவன் திரும்பிப் பார்க்கவும் நேரம் சரியாக இருக்க, அவளோ சட்டென்று நடையை தளர்த்தி தலையை குனிந்து கொண்டாள்...

ஆனால் அவள் இதழில் தெரிந்த சிரிப்பை கண்டு கொண்டவனோ, "டாட்டூவையா ரசிச்சிட்டு வர்ற?" என்று நேரடியாக கேட்டு விட்டான்...

அவனது கேள்வியில் சற்று உறைந்து தான் போனாள்.

அவன் தன்னை கண்டு கொண்டானே என்று கூச்சம் ஒரு பக்கம்...

அவசரமாக 'இல்லை' என்று தலையாட்டினாள்...

அவனோ, "அப்படின்னா பக்கத்துல நடந்து வாம்மா" என்று சொல்லிக் கொண்டே, அவள் கையை எட்டிப் பிடிக்க, அவளோ மென் சிரிப்புடனேயே அவனுடன் கூட நடந்தாள்...

அவள் மேனியின் சிலிர்ப்பில் அவள் கைகளும் குளிர்ந்து போக, "என்ன கை இப்படி குளிருது?" என்று கேட்டான்...

அவனை பக்கவாட்டாக திரும்பி பார்த்தவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை...

"தெரியாது" என்கின்ற தோரணையில் இதழ்களை பிதுக்கினாள்...

இருவரும் விழிகளால் காதல் பாஷை பேசிக் கொண்டே நீச்சல் தடாகத்தையும் அடைந்து விட்டார்கள்...

அவர்கள் ஜோடியாக செல்வதை வீட்டினுள் இருந்தபடி ஜன்னலினூடு கடுப்பாக பார்த்துக் கொண்டே அமர்ந்து இருந்தார் வேதவல்லி...

இதே சமயம், கெளதம் கிருஷ்ணாவும் யாதவ் கிருஷ்ணாவும் நீச்சல் தடாகத்தினுள் நீந்திக் கொண்டு இருக்க, வம்சி கிருஷ்ணாவோ தேன்மொழியிடம், "இங்க இரு தேன்மொழி" என்று அங்கே இருந்த இருக்கையை காட்டி விட்டு, நீச்சல் தடாகத்தினுள் டைவ் அடித்தான்...

அவன் நீச்சல் தடாகத்தினுள் பாய்வதை இமைக்காமல் பார்த்து இருந்தாள் பெண்ணவள்...

அவனில் இருந்து அவள் கண்களை அகற்றவே இல்லை...

அகற்றவும் முடியவில்லை...

அவன் நீந்துவதை இதழ்களில் மெல்லிய சிரிப்புடன் அவள் பார்த்துக் கொண்டு இருக்க, வம்சி கிருஷ்ணாவோ நீந்தி, கெளதம் கிருஷ்ணா அருகே வந்து விட்டான்.

நீரினுள் இருந்து தலையை மேலே தூக்கி, முகத்தில் வடிந்த நீரை ஒற்றைக் கையால் அகற்றியவனிடம், "என்னடா அண்ணியோட பார்வை உன் மேலயே இருக்கு" என்றான் கெளதம் கிருஷ்ணா...

வம்சி கிருஷ்ணாவோ சட்டென அவளை திரும்பிப் பார்க்க அவளோ வேகமாக பார்வையை வேறு எங்கேயோ திருப்பிக் கொண்டாள்.

வம்சி கிருஷ்ணாவுக்கு மட்டும் அல்ல, கெளதம் கிருஷ்ணாவுக்கும் சிரிப்பு வந்து விட்டது...

கெளதம் கிருஷ்ணாவோ சத்தமாக சிரித்துக் கொள்ள, தேன்மொழியோ, "இப்படியா பார்த்து வைப்ப தேன்மொழி? எப்படி மானம் போகுது பாரு" தனக்கு தானே மனத்துக்குள் திட்டிக் கொள்ள, வம்சி கிருஷ்ணாவோ, "புருஷனை சைட் அடிக்கலாம்... தப்பில்ல" என்று சத்தமாக சொன்னான்...

அவளுக்கோ வெட்கத்தில் பூமிக்குள் புதைந்து விடலாம் போல இருந்தது...

சட்டென ஒற்றைக் கையால் தனது விழிகளை வெட்கத்துடன் மூடிக் கொள்ள, வம்சி கிருஷ்ணா சத்தமாக சிரித்து விட்டு, யாதவ் கிருஷ்ணாவை பார்த்தவன், "ஸ்விம் பண்ணலாமா?" என்று சைகையால் கேட்க, அவனும் சம்மதமாக தலையாட்டினான்... அதனை தொடர்ந்து மூவரும் நீந்த ஆரம்பித்து விட்டார்கள்...

அவளும் கையை நாடியில் வைத்தபடி அவர்கள் ஒற்றுமையாக நீந்துவதை மென் புன்னகையுடன் பார்த்துக் கொண்டு இருக்க, அவள் அருகே வந்து அமர்ந்த வசந்தியோ, "இப்படி இவங்கள பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு... இவர் ஒரு பக்கம் வேலை வேலைன்னு போயிடுவார்... இவனுங்க ரெண்டு பேரும் இன்னொரு பக்கம் போயிடுவானுங்க, இன்னைக்கு நிறைய நாள் அப்புறம் மனசு ரொம்ப திருப்தியா இருக்கு தேன்மொழி" என்றார்.

அவளும் அவரைப் பார்த்து சிரித்துக் கொண்டே, அப்போது தான் கவனித்தாள் குருமூர்த்தியும் நீந்த வந்து விட்டதை...

"அப்பா போட்டிக்கு நீந்தலாமா?" என்று கெளதம் கிருஷ்ணா கேட்க, அவரோ, "ச்ச, என் கூட நீந்துனா உங்களால ஜெயிக்க முடியாது... உங்களுக்காக விட்டு தரேன்... நீங்க நீந்துங்க" என்று சொல்ல, "அட இத கேட்டியா வம்சி" என்று சிரித்தபடி சொல்லிக் கொண்டான் கெளதம் கிருஷ்ணா...

"அவரை பெர்ஃபோர்ம் பண்ண விடுடா" என்று வம்சி கிருஷ்ணா சொல்ல, அங்கே அவர்களின் சிரிப்புச் சத்தம் அந்த இடத்தையே நிரப்பியது...

அவர்கள் ஒன்றாக சேர்ந்து செல்ஃபீயும் எடுத்துக் கொண்டார்கள்...

அவர்களை சந்தோஷமாக பார்த்துக் கொண்டு இருந்த தேன்மொழியோ, இப்போது வசந்தியை பார்த்து, "நான் உங்க கிட்ட ஒண்ணு கேக்கலாமா?" என்று சைகையில் கேட்டாள்.

"கேளும்மா" என்றார் அவர்...

"நீங்க ஏன் வெளிய பாடுறத நிறுத்துனீங்க?" என்று கையை அசைத்து கேட்க, அவரோ பெருமூச்சுடன், "அத்தைக்கு பிடிக்காது... திட்டிட்டே இருப்பாங்க... எனக்கு என்னோட ஆசையை விட அப்போ குடும்பம் முக்கியமா பட்டிச்சு" என்றார்...

அவளோ, "நான் உங்க பாட்டெல்லாம் கேட்டு இருக்கேன்... உங்க குரல் என்னை அப்படியே மயக்கி இருக்கு... அடுத்தவங்க சொல்றாங்கன்னு நமக்கு சந்தோஷம் தர்றதை நிறுத்துறது தப்பில்லையா? நானும் உங்கள போல முடிவு எடுத்து இருக்கேன்... எனக்கு கல்யாணம் பேசுன நேரம் மாப்பிள்ளை வீட்ல சொல்றாங்கன்னு வேலையை விட யோசிச்சு இருந்தேன்... நல்ல வேலை வம்சி என்னை காப்பாத்திட்டார்... இப்போ நான் நானா இருக்கேன்... இப்படி ஒரு மகனை பெத்தத்துக்கு நீங்க ரொம்ப பெருமை படணும்" என்று மனதில் இருப்பது எல்லாம் அவரிடம் சொல்லி முடித்தவளுக்கு கண்களும் நெகிழ்வில் கலங்கி விட்டன...

அவளை மென் புன்னகையுடன் பார்த்துக் கொண்டு இருந்த வசந்தியோ, "உண்மையாவே எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு" என்று சொல்லிக் கொண்டே வம்சி கிருஷ்ணாவை பார்த்தவர், "உன் மாமா கூட அப்படி தான்... ஏன் பாடலன்னு கேட்டுட்டே இருப்பார்... ஆனா குடும்பம் பிரிய கூடாதுன்னு நான் எதுவும் சொல்ல மாட்டேன்... நீ நீயா இருக்க, ஆனா நான் இத்தனை நாள் நானா இல்லை... வீட்ல பாடுற கொஞ்ச நேரம் தான் மனம் இதமா இருக்கும்... அதுக்கும் அத்தை ஏதாவது சொல்லிட்டே இருப்பாங்க, வம்சி பாடும் போதெல்லாம் எனக்கும் பாடணும் போல இருக்கும்... அடக்கிக் கொள்வேன்... ஆசையை அடக்குறது எவ்ளோ அழுத்தம் தெரியுமா? இன்னைக்கு மனசுல ஏதோ ஒரு பாரம் குறைஞ்ச போல இருக்கு... இந்த முடிவை நான் எப்போவோ எடுத்து இருக்கணும்... நமக்காக கொஞ்சம் சுயநலமா இருக்கலாம், தப்பில்லன்னு எனக்கு இப்போ தோணுது... யார் என்ன சொன்னா என்னன்னு நான் பாடி இருக்கணும்... நான் பாடுறதால யாரும் பாதிக்கப்பட போறது இல்லையே... அத ஏன் செய்யாம விட்டேன்னு இப்போ தான் யோசிக்கிறேன்... நான் முட்டாள்ல" என்று கேட்டுக் கொண்டே தேன்மொழியை பார்க்க, அவளோ இல்லை என்று தலையாட்டியவள், "அன்பான அம்மாவா, நல்ல மனைவியா, மரியாதை கொடுக்கிற மருமகளா இருந்து இருக்கீங்க... முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும்... இனி உங்களுக்காக வாழுங்க... தப்பில்ல... கல்யாணம் ஆனதும் எந்த ஆம்பிளையும் தான் பண்ணிட்டு இருக்கிற வேலையையோ பிடிச்ச விஷயங்களையோ விட்டு கொடுக்கிறது இல்லை... விட்டுக் கொடுக்கிறது எல்லாமே பொண்ணுங்க தான்... அதுல எனக்கு உடன்பாடே இல்லை... நம்ம கல்யாணத்துக்கு பிறகும் சுயம் தொலைக்காம இருக்கணும்னா நமக்கு வர்ற துணை அதுக்கு துணையா இருக்கணும்... அவங்களை அவங்களா வாழ விடுறது தானே உண்மையான காதல்… அதுக்கு வம்சி போல துணை வேணும்... அது எல்லா பொண்ணுங்களுக்கு அமையுறது இல்லையே, நான் ரொம்ப கொடுத்து வச்சவ" என்று கணவனை பற்றி பெருமையாக சைகை மொழியில் பேசினாள்...

அவளை வியப்பாக பார்த்த வசந்தியோ, "உனக்கு இவ்ளோ பேச வரும்னு இன்னைக்கு தான் தெரியும் தேன்மொழி... ரொம்ப தெளிவா பேசுற... கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்றார் மனநிறைவுடன்...

தேன்மொழியோ, "உங்க கிட்ட நான் இன்னொன்னும் சொல்லணும்" என்று சைகை மொழியில் சொல்ல, "சொல்லும்மா" என்றார்...

"நான் உங்க பையன காதலால தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்... கண்டிப்பா பணத்துக்காக இல்ல" என்று சைகையில் சொல்ல, வசந்தியோ அவள் கையை பற்றிக் கொண்டே, "அது நீ சொல்லவே வேணாம், உன் கண்ணுலயும் அவன் கண்ணுலயும் தெரியுற காதலே சொல்லுது" என்று கண் சிமிட்டி சொல்ல, அவளோ இதழ் பிரித்து சிரித்துக் கொண்டாள்.

இவர்களின் சந்தோஷத்தை ஜன்னலினூடு பார்த்து கடுப்பாக இருந்தது என்னவோ வேதவல்லி தான்...
 

pommu

Administrator
Staff member
என்ன அவமானப்படுத்திட்டு மாமியாரும் மருமகளும் கொஞ்சிக்கிறத பாரு" என்று அவர்களுக்கு வாய்க்குள் திட்டிக் கொண்டே இருந்தார்...

சற்று நேரத்தில் நீந்தி முடிய, அனைவரும் தத்தமது அறையை நோக்கி சென்றார்கள்...

தேன்மொழிக்கோ அது வரை இருந்த இலகு தன்மை மறைந்து ஒரு வித எதிர்பார்ப்புடன் கூடிய பயம் தொற்றிக் கொண்டது...

அவன் வேறு இன்று வாழ ஆரம்பித்து விடலாம் என்று கூறி விட்டானே...

அடுத்து என்ன நடக்கும் என்கின்ற எதிர்பார்ப்புடன் கூடிய பயம்...

அவன் கரத்தை பற்றிக் கொண்டு தான் நடந்து வந்தாள்.

அறைக்குள்ளும் நுழைந்து விட்டாள்.

அவன் குளித்து முடித்து விட்டும் ஷார்ட்ஸ் மட்டுமே அணிந்து இருந்தான்...

அவளோ அவன் கரத்துக்குள் இருந்த தனது கரத்தை அகற்றியபடி நகர முற்பட, அவனோ மீண்டும் அவள் கரத்தைப் பற்ற, சற்று விதிர்விதிர்த்துப் போய் விட்டாள்.

ஏ சி அறையிலும் அவளுக்கு வியர்க்க தொடங்கியது...

அவனை மெதுவாக திரும்பிப் பார்த்தாள்...

"டாட்டூவை தொட்டுப் பார்க்கணும்னு ஆசைப்பட்ட தானே" என்றான்...

அவளுக்கு அவன் முகத்தை பார்க்க முடியவில்லை...

தலையை குனிந்து கொண்டே, "ஆம்" என்று தலையாட்ட, "அப்போ தொட்டு பார்த்திடு" என்றான்...

அவளுக்கோ சங்கடம்...

தயங்கி தயங்கி அவனுக்கு பின்னால் செல்ல, அவனும் பற்றி இருந்த அவளது கைக்கு விடுதலை கொடுத்தான்...

குனிந்தபடியே தனது கரத்தை எடுத்து அவன் முதுகில் வைத்தபடி மெதுவாக நிமிர்ந்து பார்த்தாள்.

அவள் ஆசைப்பட்டது எல்லாம் நிறைவேற்றுகின்றான்...

மனதில் தோன்றியது எல்லாமே மடலில் எழுதியவளுக்கு அது நிஜமாக நடக்கும் போது மூச்சு முட்டியது...

அவள் மென் விரல்களின் ஸ்பரிசத்தை தன் மேனியில் உணர்ந்தவனுக்கு இதழ்கள் பிரிய, அவளோ தயங்கி தயங்கி தான் முதலில் வருடினாள்...

அதன் பிறகு அவள் தொடுகை அழுத்தமானது...

விழிகள் அந்த டாட்டூவை ரசனையாக பார்த்தன...

அதனை வருடிக் கொண்டே, அவனை எட்டிப் அவள் பார்க்க, அவனோ பக்கவாட்டாக திரும்பி "என்னம்மா?" என்று கேட்டான்...

அவனுக்கு தெரியும் வண்ணம் சற்று நகர்ந்து நின்றவளோ, "இந்த டாட்டூ ஏன் போட்டீங்க?" என்று சைகையில் கேட்டாள்.

அவனோ மென் சிரிப்புடன், "நான் முதன் முதலா சினிமாவுல பாடுன பாட்டு உனக்கு நினைவு இருக்கும்... ஒரு வாளை பத்தி தான் பாடி இருப்பேன்... அந்த பாட்டு முழுக்க இந்த வாள் தான் வரும்... வரலாற்று படம் ஒண்ணு... ... எனக்கு வாழ்க்கைல திருப்பு முனையா இருந்தது இந்த வாள் தான்... சென்டிமென்ட் ஆஹ் ஃபீல் பண்ணி டாட்டூ குத்திட்டேன்... " என்றான்...

அவளோ இதழ் பிரிய சிரித்தபடி, "சூப்பரா இருக்கு" என்று சைகையில் சொல்லிக் கொண்டே, மீண்டும் அந்த டாட்டூவை ஆசையாக வருடியவள், ஒரு கட்டத்தில் தன்னிலை இழந்து விட்டாள்.

அந்த வாளில் முத்தமிட அவளுக்குள் ஒரு உந்துதல்...

நிதானம் இழந்து அவனை நெருங்கி நின்றவள் ஏதோ ஒரு தைரியத்தில் முத்தமும் பதித்து விட்டாள்.

அவன் மேனி சட்டென்று சிலிர்த்து விட்டது...

முதுகு வடம் சில்லிட்டு விட்டது...

அது அவன் மேனியின் அசைவிலேயே தெரிந்தது...

விழிகளை விரித்தவன் சட்டென அவளை நோக்கி திரும்ப, அப்போது தான் அவளுக்கு தான் செய்த செயல் மூளையில் உறைத்தது...

சற்று அதிர்ந்து தான் போனாள்.

அவனோ இதழ்களுக்குள் அடக்கப்பட்ட புன்னகையுடன், "தேங்க்ஸ்" என்றான்...

சிவந்து விட்டாள்.

சட்டென தலையை குனிந்து கொண்டே, பின்னால் அடிகளை வைத்து அவன் நெருக்கத்தை அவள் தவிர்க்க முயல, சட்டென்று அவள் கையை பிடித்தவன், "சும்மா இருந்தவனை உசுப்பேத்தி விட்டுட்டு எங்க போற?" என்று கேட்டான்...

அவளோ சட்டென்று அவன் கையில் இருந்து தனது கையை அகற்றியபடி, அவனை ஏறிட்டுப் பார்த்துக் கொண்டே, "குளிக்கணும்" என்றாள் சைகையில்...

அவனோ, "கண்டிப்பா குளிக்கணுமா?" என்று கேட்க, ஆம் என்கின்ற ரீதியில் அழுத்தமாக தலையாட்டினாள்.

அவனிடமிருந்து உஷ்ணப் பெருமூச்சு...

"ஓகே நான் வெய்ட் பண்ணுறேன்" என்று சொல்லிக் கொண்டே, சோஃபாவில் அமர்ந்து அலைபேசியை பார்க்க தொடங்கி விட, அவளோ தலையை உலுக்கி தன்னை சமன் செய்து கொண்டே குளிப்பதற்காக குளியலறைக்குள் நுழைந்து விட்டாள்.

அவள் திரும்பி வரும்வரை அவனுக்கு பெரிய பாடாகி விட்டது... நேரமோ மெதுவாக செல்வது போன்ற உணர்வு...

"இவ்ளோ நேரம் என்ன பண்ணிட்டு இருக்கா?" என்று மனதுக்குள் கேட்டுக் கொண்டே இருக்க, அவளும் தலையை துவட்டியபடி வெளியே வந்தாள்.

சுடிதார் அணிந்து இருந்தாள்.

ஷாலினால் தன்னை மூடி இருந்தாள்...

தலைக்கு குளித்து இருந்தாள்.

நாடியை நீவியபடி அவளை பார்த்தவன், "நைட் ல எதுக்கு ஹெட் பாத் எடுத்த?" என்று சற்று அதட்டலாகவே கேட்டான்...

அவனுக்கு பிடிக்கவில்லை என்று அவளுக்கு புரிந்தது...

"அது காய்ஞ்சிடும்" என்றாள் சைகையில்...

அவளை முறைத்தவன், "இந்த ஏசி ல காயும்னு நினைக்கிறியா? கழுத்து வரைக்கும் முடி இருந்தா கூட பரவாயில்லை... உனக்கு இடுப்புக்கு கீழ நிற்குது... நீர் கோர்க்கும்னு சொல்வாங்க உனக்கு தெரியாதா?" என்று கேட்டான்...

அவளோ, "அம்மா சொல்வாங்க தான், இப்போ என்ன பண்ணட்டும்?" என்று கேட்டாள் கைகளை அசைத்து...

அவன் அதட்டலில் அவள் சற்று பயந்து போக, அதனை உணர்ந்தவனோ மென்மையாக சிரித்துக் கொண்டே, "பயந்துட்டியா? சும்மா விளையாடுனேன்... ஹெயார் ட்ரையரால ட்ரை பண்ணி விடுறேன்... இரு" என்று சொன்னபடி, அவள் அருகே வந்தவன், அவளை மறுபக்கம் திருப்பி, அவள் இரு தோள்களிலும் கையை வைத்து, நிலைக் கண்ணாடிக்கு முன்னால் இருந்த ஸ்டூலில் அமர வைத்தான்.

அவளோ நிலைக் கண்ணாடியில் தெரிந்த அவன் விம்பத்தை பார்த்து முறைக்க, அவனோ அவளை பார்த்து கண்களை சிமிட்டியவன், "என் பொண்டாட்டி கூட நான் விளையாடாம யார் விளையாடுறது?" என்று கேட்டுக் கொண்டே, ஹெயார் ட்ரையரை எடுத்து மின்சார இணைப்பு கொடுத்தான்...

அவன் பேச்சில் அவள் இதழ்களும் மெலிதாக விரிந்தன...

"இதுல தொடர்ந்து ட்ரை பண்ணும் போது முடி கொட்டும்... சோ இனி நைட்ல ஹெட் பாத் எடுக்காதே" என்று சொல்லிக் கொண்டே, அவள் அலை அலையான முடியை வருடிக் கொண்டே, ஹெயார் ட்ரையரை உபயோகித்து அவள் முடியை காய வைக்க ஆரம்பித்தான்...

அவளுக்கு ஹெயார் ட்ரையரின் கதகதப்பை விட, அவன் அக்கறையும் அரவணைப்பும் இதமாக இருந்தது... அவள் கண்களும் சந்தோஷத்தில் கலங்கி விட்டன...

அவள் முடியை காய வைத்து முடித்தவனோ, "லைட்டான கேர்லிங் ஹெயார்... உனக்கு ரொம்ப அழகா இருக்கு" என்று சொல்லிக் கொண்டே, அவளை கண்ணாடியில் பார்க்க, அவளோ கையசைத்து, "தேங்க்ஸ்" என்றாள்.

"அப்போ இன்னைக்கு முழுக்க நீ தேங்க்ஸ் மட்டும் தான் சொல்ல வேண்டி இருக்கும்" என்று சொல்ல, அவன் பேச்சின் அர்த்தம் அவளுக்கு சட்டென புரிந்து விட்டது, ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை நிலைப்படுத்த முயன்றவள் சற்று தடுமாறிப் போனாள்.

அவள் தடுமாற்றத்தை அவன் கண்ணாடியூடு ரசித்துக் கொண்டே, அவள் முடிக்குள் இரு கைகளையும் வைத்து அழுத்தம் ஒன்றைக் கொடுக்க, அவளோ கண்களை சுகமாக மூடிக் கொண்டாள். சிறிது நேரம் அவள் தலையில் அழுத்தத்தை கொடுத்து அவளுக்கு இதமான உணர்வை கொடுத்து இருந்தான்...

அவள் விழிகள் மூடி இருக்க, அவன் விழிகளோ கண்ணாடியில் தெரிந்த அவளை ரசனையுடன் நீண்ட நேரம் ரசித்துப் பார்த்தது...

காதலும் மோகமும் கலந்து அவன் அவளை ரசித்த தருணம் அது...

அதனை தொடர்ந்து, சற்று குனிந்து அவள் காதருகே தனது இதழ்களை கொண்டு வந்தவன், "ட்ரை ஆயிடுச்சு..." என்று ரகசிய குரலில் சொல்ல, அவளும் வெட்கத்திலும் பூரிப்பிலும் கன்னங்கள் சிவக்க கண்களை திறந்தவள், மெதுவாக எழுந்து கொண்டபடி அவனை நோக்கி திரும்ப, அவனோ அவள் எதிர்பார்க்காத கணத்தில் அவள் வயிற்றில் ஒரு கையை வைத்து மெதுவாக தள்ளி அருகே இருந்த சுவரில் சாய வைக்க, அவன் அதிரடி நடவடிக்கையில் அவள் அதிர்ந்து போய் அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

அவளை மோக விழிகளால் நோக்கிக் கொண்டே, அவளுக்கு அருகே இருந்த சுவரில் தனது ஒற்றைக் கையை வைத்தவன், அடுத்த கையால் அவளை சுற்றி இருந்த ஷாலை இழுத்து அகற்றி இருக்க, அவளோ அவனை நோக்கி எதிர்பார்ப்பும், பயமும் கலந்த பார்வை ஒன்றை வீசினாள்...

வம்சி கிருஷ்ணா அவளை பார்த்துக் கொண்டே மேலும் நெருங்கி நிற்க, இருவரின் தேகங்களும் பட்டும் படாத நிலை...

"பசிக்குதா?" என்று கேட்டான்...

அவளோ பக்கவாட்டாக திரும்பி நேரத்தைப் பார்த்தாள்.

மணி இரவு ஏழு தான்...

"இல்லை" என்று தலையாட்டினாள்...

"சாப்பிட்டு வரும் வரைக்கும் எனக்கு பொறுமை இல்லை... இப்போ உனக்கு ஓகே யா?" என்று கேட்க, அவன் எதனை கேட்கின்றான் என்று அவளுக்கு புரிந்து விட்டது... இதற்கெல்லாம் சம்மதம் கேட்க வேண்டுமா? என்று தான் அவளுக்கு அந்த கணத்தில் தோன்றியது...

திக்கி திணறி தலையை குனிந்தபடி 'ஆம்' என்று தலையாட்டினாள்...

அவனோ அவளை விழுங்கி விடுவது போல பார்த்துக் கொண்டே, தனது விரல்களால் அவள் நெற்றியில் விழுந்து இருந்த அலையலையான முடிகளை சுற்றிக் கொண்டே, அவள் செவியை நோக்கி குனிய, அவளுக்கோ இதயம் வெடித்து விடும் அளவுக்கு துடிக்க ஆரம்பித்து விட்டது...

அவன் நெருக்கத்தில் வயிற்றில் பட்டாம் பூச்சி பறக்க, சட்டென சுவற்றில் இரு கைகளையும் அழுந்த பதித்துக் கொண்டாள்.

இருவரின் மேனிகளுக்கும் நூலளவு இடைவெளி தான்...

அவள் செவியில் அவன் இதழ்கள் உரச, "சிட்டுவேஷன் சாங் பாடட்டுமா?" என்று கேட்டான்.

அவளோ சட்டென முகத்தை பக்கவாட்டாக திருப்பிக் கொண்டே, கண்களை இறுக மூடிக் கொள்ள,

"கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில்

கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில்

கர்வம் அழிந்ததடி. என் கர்வம் அழிந்ததடி"

என்று அவன் மோகம் கலந்த குரலில் பாட, மொத்தமாக அவன் இசையில் தொலைந்து விட்டாள்.

இதழ்களை பிரித்து பெருமூச்சு ஒன்றை அவள் விட்டுக் கொள்ள, அவன் விழிகளும் அவன் பாடிய பாடலுக்கு ஏற்ற போல அவள் மேனியில் அலைபாய, அப்படியே அவள் செவியில் பதிந்து இருந்த இதழ்களை கன்னத்துக்கு நகத்த, அவளுக்கு அதற்கு மேல் நிலை கொள்ள முடியவில்லை...

தனது கரத்தை எடுத்து அவன் இரு தோள்களிலும் வைத்துக் கொண்டாள்.

அவள் கன்னத்தில் அவன் தாடி மீசை என்னவோ எல்லாம் செய்து அவளை இம்சித்தது...

அவனோ இதழ்களால் அவள் கன்னத்தில் கோலம் போட்டு விட்டு, அப்படியே அவள் கழுத்தில் முகம் புதைக்க, அவன் உஷ்ண மூச்சு காற்றின் வெம்மை அவளை சுட்டது...

அவள் கரங்கள் இப்போது அவன் முதுகில் இறங்கிக் கோலம் போட்டன...

நிலைகள் மாறின...

இடங்கள் மாறின...

சந்தங்கள் மட்டும் தான் இசையாகும் என்று யார் சொன்னார்கள்?

இவர்கள் காதலில் லயம், தாளம், சுருதி என்று எதுவும் இல்லாமல் மௌனம் மட்டுமே இசையானது...

அவள் மௌனமே இவன் இசையாக....

அவன் இசைத்த இசைக்கு ஏற்ப, அவள் கரங்களோ அவன் வாள் டாட்டூவை வீணையாக பாவித்து மீட்டின...

மனங்களையும், முத்தங்களையும் மட்டுமே இதுவரை பரிமாறி இருந்தார்கள்...

இன்று தேகங்களையும் பரிமாறி வாழ்வில் அடுத்த கட்டத்துக்கு சென்று இருந்தார்கள் தேன்மொழியும் அவள் வம்சி கிருஷ்ணாவும்...

இசையின் அந்தியில் தனது கைவளைவினுள் இருந்தவளின் விழிகளைப் பார்த்துக் கொண்டே, "ஆர் யூ ஓகே?" என்று கேட்டான் வம்சி கிருஷ்ணா...

அவள் விழிகளில் கண்ணீர்...

அவள் வாழ்க்கை முதல் முறை அவள் ஆசைப்பட்ட போல நகர்கின்றது...

இதுவரை கனவாக இருந்தவை எல்லாம் இன்று நிஜமாகி விட்டன... இதுவரை சமூகத்தில் கிடைக்காத அங்கீகாரத்தை எல்லாம் சேர்த்து அவளுக்கு ஒட்டு மொத்தமாக கொடுத்து விட்டான் அல்லவா அவளவன்...

இதற்கு மேல் அவளுக்கு என்ன வேண்டும்?

பரவசத்தின் உச்சத்தில் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது...

அவள் மேனியில் ஒரு நடுக்கம்...

புது வித உணர்வு...

அவன் விழிகளை ஏறிட்டுப் பார்த்தாள்.

அவனோ மீண்டும், "ஆர் யூ ஓகேன்னு கேட்டேன்" என்றான்...

அவளோ ஆமோதிப்பாக தலையை அசைத்துக் கொண்டே, அவன் முகத்தை இரு கைகளாலும் தாங்கியவள் கண்களை மூடியபடி அவன் இதழ்களில் மென்மையாக இதழ் பதிக்க, அவனும் கண்களை மூடிக் கொண்டான்...

அவனது சத்தமான முத்தத்துடன் ஆரம்பமான அவர்கள் இசை, அவளது மௌனமான முத்தத்துடன் நிறைவு பெற்று இருந்தது...

அவளது மௌனமான முத்தத்துடன் அவள் கண்ணீரையும் உணர்ந்து கொண்டான்... அவனுக்கு நன்றி சொல்லும் கண்ணீர் அது என்று அவனுக்கு புரியாமல் இருக்குமா என்ன?

அவள் காதலுடன் சேர்த்து வலியை உணர்ந்தவனும் அவனே...

அவளை உள்ளும் புறமும் முழுமையாக அறிந்தவனும் அவனே...

அவளை உணர அவனுக்கு மொழிகள் தேவையில்லை... அவள் மௌனமே போதுமானது...

"காற்று வீசும் போது திசைகள் கிடையாது

காதல் பேசும் போது மொழிகள் கிடையாது

பேசும் வார்த்தை போல...மௌனம் புரியாது

கண்கள் பேசும் வார்த்தை....கடவுள் அறியாது



உலவி திரியும் காற்றிற்கு....உருவம் தீட்ட முடியாது

காதல் பேசும் மொழி-எல்லாம்... சப்த கூட்டில் அடங்காது



இயற்கையின் மொழிகள் புரிந்து விடில்

மனிதரின் மொழிகள் தேவை-இல்லை

இதயத்தின் மொழிகள் புரிந்து விடில்

மனிதர்க்கு மொழியே தேவை-இல்லை"



- கவிஞர் வைரமுத்து
 
Top