ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 22

pommu

Administrator
Staff member

அத்தியாயம் 22

அவர்களை பார்த்துக் கொண்டே சுவரில் சாய்ந்து நின்றாள்.

தலை குனியவில்லை அவள், குனிய வேண்டிய அவசியமும் இல்லை அவளுக்கு...

மகாலக்ஷ்மியோ, "உட்காருங்க" என்று சொல்ல, யாதவ் கிருஷ்ணாவும் வசந்தியும் தேன்மொழியை பார்த்துக் கொண்டே அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தார்கள்...

மகாலக்ஷ்மியோ, "காஃபி சாப்பிடுறீங்களா?" என்று கேட்டார்...

அவர்கள் பேசுவதற்கு தடையாக அவர் இருக்க விரும்பவில்லை... அதனாலேயே வந்ததும் இந்த கேள்வியை கேட்டு விட்டு அங்கிருந்து நகர நினைத்து இருந்தார்...

வசந்தியும் ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டே சம்மதமாக தலையாட்ட, மகாலக்ஷ்மியும் அவர்களுக்கு காஃபி தயாரிப்பதற்காக சமையலறைக்குள் சென்று இருந்தார்...

யாதவ் கிருஷ்ணாவும் அங்கே இருந்த புகைப்படங்களை பார்த்துக் கொண்டே நடக்க ஆரம்பித்து இருந்தான்...

இப்போது அவர்களுக்கு பேசுவதற்கான அவகாசம் கிடைத்து இருக்க, "தேன்மொழி, கோவில் போய்ட்டு வந்ததும் தான் எல்லாமே கேள்விப்பட்டேன்... எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு... வீட்டுக்கு வா, நாம பேசி ஒரு முடிவுக்கு வரலாம்..." என்றார் வசந்தி...

அவளோ அழுத்தமாக இல்லை என்று தலையாட்டியவள், "செய்யாத தப்புக்கு நான் பழி ஏத்துக்கிட்டு அங்கே இருக்க முடியாது" என்றாள் சைகை மொழியில்.

வசந்தியோ, "இங்க நீ வந்தா மட்டும் உன் மேல விழுந்த பழி இல்லன்னு ஆகிடுமா? அங்கே வந்து போராட வேண்டியது தானே" என்றார்...

அவளோ, "சாட்சி எல்லாம் எனக்கு எதிரா இருக்கு, ஆனா என் மனசாட்சிக்கு தெரியும் நான் தப்பு பண்ணலன்னு, வாழ்க்கைல போராடியே களைச்சு போய்ட்டேன் அத்தை" என்று சைகையால் சொன்னவளது கண்களில் இருந்து இரு சொட்டு கண்ணீர் விழ, அவளை பரிதாபமாக பார்த்துக் கொண்டே அமர்ந்து இருந்தார் வசந்தி...

கண்களை துடைத்து விட்டு மேலும் தொடர்ந்தவளோ, "உங்க பையன நான் பணத்துக்காக கல்யாணம் பண்ணிக்கல, காதலில தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்..." என்று கையசைத்து சொல்லிக் கொண்டவளுக்கு விம்மலுடன் அழுகை வர கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டாள்.

வசந்தியோ, "எனக்கு சாட்சி எல்லாம் தாண்டி உன் மேல நம்பிக்கை இருக்கு, எல்லாரையும் விடு, யாதவ்வை பற்றி யோசிச்சு பாரு, இன்னைக்கு ஒரு நாள் நீ இல்லன்னு சொன்னதுமே என்ன பாடு பட்டான் தெரியுமா?" என்று கேட்டார்...

தேன்மொழியோ, "எனக்கு புரியுது... அவனுக்கு க்ளாஸ் எடுக்க நான் கண்டிப்பா வரேன்... எனக்கு ஒரு வாரம் மட்டும் டைம் கொடுங்க, என் மனசு கொஞ்சம் நிதானம் ஆகணும்... ஆனா இப்போ இருக்கிற மனநிலைல உங்க மருமகளா அங்க வந்து வாழ முடியுமான்னு தெரியல" என்று சைகை மொழியில் சொன்னவளோ இரு கரங்களையும் கூப்பி இறைஞ்சினாள்...

"வம்சி கிட்ட சொன்னியா?" என்று கேட்டார்...

அவள் இல்லை என்று தலையாட்டினாள்...

எழுந்து அவள் அருகே வந்து, அவள் கையை பற்றி இறக்கி விட்ட வசந்தியோ, "சரி உனக்கான டைமை நீ எடுத்துக்கோ... வம்சி வரட்டும் இது சம்பந்தமா பேசி, தீர விசாரிச்சுடலாம்... எனக்கு இப்போவும் உன் மேல நம்பிக்கை இருக்கு" என்று சொல்ல, அவளோ கலங்கிய கண்களால் நன்றி சொன்னாள்.

அவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போதே கையில் காஃபியுடன் வந்து விட்டார் மகாலக்ஷ்மி...

உடனே வசந்தியும் யாதவ் கிருஷ்ணாவும் வந்து நாற்காலியில் அமர்ந்து கொள்ள, அவர்களுக்கு காஃபி பரிமாறப்பட்டது...

வசந்தியோ மகாலக்ஷ்மியிடம், "தேன்மொழி ஏதும் சொன்னாளா?" என்று கேட்க, அவரோ பெருமூச்சுடன் இல்லை என்று தலையாட்டியவர், "நான் வருத்தப்படுவேன்னு எதுவுமே சொல்லல, கேட்டாலும் சொல்ல மாட்டேங்குறா, அவளுக்கு எப்போ சொல்ல தோணுதோ சொல்லட்டும்" என்றார்...

அவர் குரலிலும் ஒரு தழுதழுப்பு...

உடனே வசந்தி தேன்மொழியை பார்க்க, அவளும் இல்லை என்கின்ற ரீதியில் தலையாட்டினாள்...

இப்போது வசந்தி மகாலக்ஷ்மியை பார்த்தவர், "சில கஷ்டங்கள் வர தான் செய்யும் மகா, அவ நல்ல மனசுக்கு எல்லாமே சீக்கிரம் சரி ஆகிடும்... வம்சி வந்துட்டா நிறய பிரச்சனை முடிஞ்சிடும்... அவனுக்கு எப்படி எத ஹாண்டில் பண்ணணும்னு தெரியும்" என்றார்.

மகாலக்ஷ்மியோ, "உங்க மேல நம்பிக்கை இருக்கு.... அதனால தான் நான் அமைதியா இருக்கேன்" என்று சொன்னவருக்கு கண்கள் கலங்கி போக, வசந்தியிடம் பெருமூச்சு மட்டுமே பதிலாக...

காஃபியை குடித்து முடித்ததுமே, "அண்ணி, நம்ம கூட வர்றாங்க தானே" என்று சைகையில் கேட்டான் யாதவ் கிருஷ்ணா...

வசந்தி பதில் சொல்ல முதலே, அவன் முன்னே போய் நின்ற தேன்மொழியோ, "எனக்கு அம்மா கூட கொஞ்ச நாள் இருக்கணும் போல இருக்கு யாதவ், சீக்கிரம் வந்திடுறேன்" என்றாள்...

வேறு ஏதும் சொன்னால் அடம்பிடித்து இருப்பான்... தாயுடன் இருக்க வேண்டும் என்று அவள் சொன்னதை புரிந்து கொண்டவனோ, "சீக்கிரம் வந்துடுங்க" என்று சைகையால் சொல்லி விட்டு புறப்பட, தேன்மொழியோ காரில் ஏறியவர்களை கதவு நிலையில் சாய்ந்து நின்று பார்த்தாள்.

அதுவரை இருந்த அழுத்தத்தில் கொஞ்சம் குறைந்த உணர்வு...

வசந்தி தன்னை நம்புகிறார் என்பதே அவளுக்கு பெரிய விடுதலையாக இருந்தது...

ஆனால் அவள் எண்ணம் முழுதும் சுற்றி வந்தது என்னவோ வம்சி கிருஷ்ணாவை தான்... மீண்டும் அறைக்குள் வந்து தனது அலைபேசியை எடுத்துப் பார்த்தாள்.

அவன் இன்னுமே பதில் அனுப்பவில்லை...

ஒரு பெருமூச்சு மட்டுமே அவளிடம்...

மகாலக்ஷ்மியும் துருவி துருவி ஒன்றும் கேட்கவில்லை...

அவளுக்கான இடைவெளியை கொடுத்து விலகி தான் நின்றார்...

இதே சமயம் வீட்டுக்கு வந்த வசந்தியோ, அன்று இரவு குருமூர்த்தியிடம், "தேன்மொழி தப்பு பண்ணுன போல தெரியலைங்க" என்றார்.

அவரோ, "ஆனா சாட்சி எல்லாம் தேன்மொழிக்கு எதிரா தானே இருக்கு" என்றார்...

இதற்கு வசந்தியிடம் பதில் ஏது...

மௌனமாகி விட்டார்...

அடுத்த நாள் இருந்து தேன்மொழி தனது வீட்டில் இருந்தே ஸ்கூலுக்கு செல்ல ஆரம்பித்து விட்டாள்...

பக்கத்து வீட்டு பெண்மணி சும்மா இருப்பாரா என்ன?.

"என்ன மகா, பொண்ணு வாழா வெட்டியா வந்துட்டா போல" என்று ஆரம்பிக்க மகாலக்ஷ்மிக்கு ஆத்திரம்...

"மாப்பிள்ளை வெளிநாட்டுக்கு போய் இருக்காருன்னு கொஞ்ச நாள் தங்கிட்டு போக வந்தா, நீ சந்தோஷப்படுற அளவுக்கு ஒண்ணும் நடந்துடல" என்று சொல்லிக் கொண்டே வீட்டினுள் நுழைந்து கொண்டார்...

அக்கம் பக்கத்தினரின் வார்த்தைகளுக்கு பயந்து, பெண்ணை புகுந்த வீட்டிலேயே கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டு வாழ சொல்லும் தாய் அல்ல மகாலக்ஷ்மி...

ஊரார் என்ன பேசினாலும் தனது மகளை அரவணைத்துக் கொள்ள அவர் தயாராக தான் இருக்கின்றார்...

நாட்களும் கடந்து ஒரு வாரம் வேகமாக முடிந்து விட்டது...

அன்று காலையில் எழுந்த தேன்மொழியோ கெலெண்டரை பார்த்தாள்.

அவன் வந்து இறங்கும் நாள்...

இதயம் வேகமாக துடித்தது...

அவன் என்ன சொல்வானோ என்கின்ற பதட்டம்...

அவன் வேறு அவளுடன் பேசுவது இல்லை...

அவள் மனம் எதிர்மறையாகவே யோசித்தது...

தலையை உலுக்கி தன்னை நிலைப்படுத்திக் கொண்டே, ஸ்கூலுக்கு செல்ல ஆயத்தமானாள்...

சாப்பிடவும் மனமில்லை, பெயருக்கு ரெண்டு இட்லிகளை வாயில் போட்டவள், விரைவாகவே கிளம்பி விட்டாள்.

இதே சமயம் விமானத்தில் பிசினஸ் க்ளாசில் பயணம் செய்து கொண்டு இருந்தான் வம்சி கிருஷ்ணா...

அவனை தேடி வந்து இருந்தான் அவனது நெருங்கிய நண்பனும், இசையமைப்பாளருமான ஜெய்...

"மச்சி எனக்கு ஒரு ஃபேவர் பண்ண முடியுமா?"; என்று கேட்டான் ஜெய்...

"சொல்லுடா" என்று வம்சி கிருஷ்ணா சொல்ல, அவனோ, "என்னோட ஆல்பம் ஒண்ணுக்கு உன் அம்மாவோட வாய்ஸ் வேணும்" என்றான்...

வம்சி கிருஷ்ணாவோ அவனை புருவம் சுருக்கி பார்த்து விட்டு அருகே அமர்ந்து இருந்த கெளதம் கிருஷ்ணாவை பார்த்தான்...

அவனும் ஜெய் பேசுவதை தான் கேட்டுக் கொண்டு இருந்தான்.

"அம்மா இப்போ வெளியில பாடுறது இல்லையே" என்றான் கெளதம் கிருஷ்ணா...

"அது நானும் கேள்விப்பட்டேன்... இவ்ளோ சூப்பரான வாய்ஸ்ஸை வச்சிட்டு ஏன் பாடுறது இல்ல? அவங்க பழைய பாட்டெல்லாம் கேட்டேன்... ப்பா, அப்படியே மெர்சல் ஆயிட்டேன்" என்றான் ஜெய்...

வம்சி கிருஷ்ணாவோ, "அது ஏன்னு எங்களுக்கும் தெரியல... கேட்டாலே இஷ்டம் இல்லன்னு சொல்லிடுவாங்க... அவங்க வெளியே பாடுறத நிறுத்தியே பல வருஷம் ஆயிடுச்சு..." என்றான்...

"ப்ளீஸ் வம்சி, எனக்காக ஒரு தடவை கேட்டு பாரேன்" என்று சொல்ல, வம்சி கிருஷ்ணாவோ சிறிது நேரம் யோசித்து விட்டு, "கேட்டு பார்க்கிறேன் ஜெய்... அதிகமா இல்லன்னு தான் சொல்வாங்க, உன் மன ஆறுதலுக்காக கேட்டு பார்க்கிறேன்" என்றான்...

ஜெய்யும், "தேங்க்ஸ் டா" என்று சொல்லி விட்டு விடை பெற்று இருந்தான்...

விமான நிலையமும் வந்து விட்டது...

இருவரும் வீட்டில் இருந்து அவர்களை ஏற்றி செல்ல வந்த காரில் ஏறிக் கொண்டார்கள்...

"என்னடா, வீட்டுக்கு போய் மறுபடியும் சண்டையா?" என்று கெளதம் கிருஷ்ணா கேட்க, "ச்ச இல்லடா, அவ பாவம்... கண்டிப்பா யோசிச்சிட்டு இருப்பா... நிதானமா பேசலாம்" என்றான் வம்சி கிருஷ்ணா...

"அன்னைக்கு பழி எல்லாம் வாங்குனியே... இன்னைக்கு இப்படி பேசுற?" என்று கெளதம் கிருஷ்ணா கேட்க, "அன்னைக்கு கோபம் இருந்திச்சு... இப்போ கம்மி ஆயிடுச்சு... நீ சொல்றதும் சரி தான்... அதே நேரம் என் மேலயும் தப்பு இருக்கு... அவ என் கிட்ட அவ பிரச்சனையை சொல்ற அளவுக்கு நான் அவ கிட்ட நடந்துக்கலன்னு தோணுது... இன்னைக்கு அவ கிட்ட நிறைய பேசணும்" என்று சொன்னவன் அறியவில்லை அவள் பேசுவதற்காக வீட்டில் இருக்கவே மாட்டாள் என்று...

வீட்டுக்கும் வந்து விட்டான்.

குருமூர்த்தி அன்று அவனிடம் பேசுவதற்காகவே வீட்டில் நின்று இருந்தார்...

கெளதம் கிருஷ்ணாவும் வம்சி கிருஷ்ணாவும் வீட்டினுள் காலடி எடுத்து வைத்த அடுத்த கணமே ஹாலினுள் இருந்த வேதவல்லியோ, "உன் பொண்டாட்டி" என்று ஆரம்பிக்க, "அம்மா" என்கின்ற அதட்டல் அங்கிருந்த குருமூர்த்தியிடம்...

வாயை கப்பென்று மூடிக் கொண்டார் வேதவல்லி...

"என்ன பொண்டாட்டி?" என்று கேள்வியாக கேட்டான் வம்சி கிருஷ்ணா...

"நீ குளிச்சிட்டு வாப்பா பேசலாம்" என்று குருமூர்த்தி சொல்ல, அவனோ, "ம்ம் தேன்மொழி ஸ்கூல் போய்ட்டாளா?" என்று அங்கே நின்று இருந்த வசந்தியை பார்த்து கேட்க, அவரோ பதில் சொல்லாமல் அவனையே பார்த்துக் கொண்டு நின்று இருந்தார்...

அனைவரையும் புருவம் சுருக்கி யோசனையாக பார்த்த வம்சி கிருஷ்ணாவும் கெளதம் கிருஷ்ணாவுடன் மாடியேறி விட்டான்…

இருவரும் குளித்து விட்டு ஒன்றாக கீழே இறங்கினார்கள்...

குருமூர்த்தியோ, "சாப்பிட்டு வாப்பா பேசலாம்" என்றார் வம்சி கிருஷ்ணாவை பார்த்து...

"நான் ஃப்லைட்ல சாப்பிட்டேன்... சொல்லுங்க என்ன விஷயம்?" என்று கேட்டுக் கொண்டே, அவருக்கு முன்னே இருந்த சோஃபாவில் அவன் அமர்ந்து விட, "எனக்கு பசிக்குது" என்று சொன்ன கெளதம் கிருஷ்ணாவோ சாப்பிட அமர்ந்து விட்டான்.

குருமூர்த்தி வாயை திறக்க முதலே, "எத சொல்ல சொல்ற? உன் திருட்டு பொண்டாட்டி பண்ணிட்டு போன அசிங்கத்தை சொல்ல சொல்றியா?" என்று வேதவல்லி கேட்க, சட்டென அவரை திரும்பி அழுத்தமாக பார்த்தவன், "வாட்?" என்றான்...

"அவங்க சொல்றது உண்மை தான், நீ போய் அடுத்த நாள் என்னாச்சு தெரியுமா?" என்று ஆரம்பித்து குருமூர்த்தி நடந்தது எல்லாமே சொல்லி முடித்தார்...

அவனுக்கு கோபத்தில் கழுத்து நரம்புகளும் புடைத்து விட்டன...

அவர் சொல்லி முடிக்க முதல், "இனாஃப்" என்று கையை நீட்டி சொல்லிக் கொண்டே எழுந்தவனோ, இடையில் இரு கைகளையும் வைத்து இதழ் குவித்து ஊதியபடி, "ஓஹ் மை காட், உங்களுக்கு கொஞ்சம் கூட சென்ஸ் இல்லையா? இப்படி தான் ஒருத்தி என்ன சொல்ல வர்றான்னு விசாரிக்காம நடந்துப்பீங்களா? உங்க பணம் எங்க போச்சுன்னு எனக்கு தெரியல... ஆனா அவ உங்க கிட்ட கொடுத்தது அவளோட பணம்... அவளுக்கு பணம் தேவைப்பட்ட நேரத்துல கூட என் கிட்ட அவ கேட்கவே இல்லை... வட்டிக் கடைக்கு போய் வாங்கி இருக்கா... பிரதீப் தான் அந்த பணத்தை கொடுத்து விட்டான்... அவளால மாறி பேச முடியல என்கிறதுக்காக என்ன வேணும்னாலும் பேசிடுவீங்களா?" என்று சொல்லிக் கொண்டே அங்கே ஓரமாக நின்று இருந்த வசந்தியை பார்த்தான்.

அவருக்கு இது வரை இருந்த அழுத்தம் நீங்கி, மனதில் ஒரு நிம்மதி... பெருமூச்சு ஒன்றை விட்டுக் கொண்டார்...

"அம்மா இதெல்லாம் நீங்க கேட்க மாட்டிங்களா? தேன்மொழியை பத்தி இவருக்கு தான் தெரில, உங்களுக்கு கூடவா தெரியாது?" என்று கேட்டான்.

வசந்தியோ, "அந்த நேரம் கோவிலுக்கு போய் இருந்தேன் வம்சி... அவ வீட்டுக்கு நானும் யாதவ்வும் அவளை திரும்ப அழைச்சு வர போனோம்... வர முடியாதுன்னு சொல்லிட்டா" என்றார்...

"அவ எப்படி வருவா? இவ்ளோ தூரம் அசிங்க படுத்தி இருக்காங்க... எனக்கு வர்ற கோபத்துக்கு" என்று சொல்லிக் கொண்டே தனது தலையை அழுந்த கோதினான்...

குருமூர்த்திக்கோ அதிர்ச்சி...

முதல் முறையாக, செய்யாத தப்புக்கு ஒரு பெண் மீது குற்றம் சுமத்தி விட்டோமோ என்கின்ற குற்ற உணர்வு...

"நான் ஒண்ணும் வேணும்னு பண்ணல, இன்ஃபாக்ட் அவளுக்கு நான் திட்ட கூட இல்லை, பணம் வேணும்னா என் கிட்ட கேட்டு இருக்கலாமேன்னு தான் சொன்னேன்... வீட்டை விட்டு போக கூட நான் சொல்லல, அம்மாவும் கல்யாணியும் அவ பணத்தை எடுத்ததை பார்த்தேன்னு சொன்னாங்க... எப்படி நம்பாம இருக்க சொல்ற?" என்று கேட்டார்...

இப்போது வேதவல்லிக்கு சிக்கிக் கொள்வோமோ என்கின்ற பயத்தில் வியர்த்து வடிந்தது...

புடவை முந்தானையால் வியர்வையை துடைத்துக் கொண்டார்...

கல்யாணி வேறு இந்நேரம் அவர் அருகே துணைக்கு இல்லை...
 

pommu

Administrator
Staff member
இப்போது வம்சி கிருஷ்ணா திரும்பி வேதவல்லியைப் பார்த்தவன், "இவங்களோடது எல்லாம் ஒரு சாட்சின்னு நம்புறீங்களா?" என்று குருமூர்த்தியிடம் கேட்டான்...

அவரோ, "அப்போ நான் பொய் சொல்றேன்னு சொல்றியா? அவ பணத்தை எடுத்ததை என் ரெண்டு கண்ணால பார்த்தேன்... உன் பொண்டாட்டியை காப்பாத்த நீ கட்டுக் கதை சொல்ற" என்று இப்போது அவன் மீதும் பழி விழுந்தது...

"ஒஹோ நான் இப்போ கட்டுக் கதை சொல்றேனா?" என்று அவன் கடுப்பாக கேட்க, சாப்பிட்ட பாதியில் நடப்பதை பார்த்துக் கொண்டு இருந்த கெளதம் கிருஷ்ணாவுக்கே பொறுக்கவில்லை...

"பாட்டி, அவன் ஒண்ணும் கட்டுக்கதை சொல்லல, அவன் சிங்கப்பூர் போகும் போது தேன்மொழி கிட்ட கோபமா இருக்க காரணமே இது தான்... தன் கிட்ட பணம் கேட்காம வட்டிக்கடைல போய் கேட்ட கோபம் தான் அது... விட்டா இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்கீங்க" என்றான்...

"ஓஹ் நீயும் உன் அண்ணன் கூட கூட்டா?" என்றார் அவர்...

எங்கே சிக்கி விடுவோமோ என்கின்ற பதட்டத்தில் அனைவர் மீதும் பழியை தூக்கிப் போட்டார்...

அங்கே சமையலறைக்குள் நின்ற பாக்கியாவுக்கும் அவர்கள் பேசியது தெளிவாக கேட்டது...

'அடி ஆத்தி, இந்த பாட்டி எப்படி எல்லாம் திட்டம் போட்டு இருக்கு, சரியான க்ரிமினல் போல, நாம பார்த்ததை இப்போ சொல்றதா? வேணாமா? சொன்னா நமக்கு பிரச்சனை வருமோ? இது அவங்க குடும்ப விஷயம்... நமக்கெதுக்கு வம்பு... கம்முன்னு இருப்போம்' என்று நினைத்துக் கொண்டாள்.

வம்சி கிருஷ்ணாவோ வேதவல்லியை உறுத்து விழித்தவன், "தேன்மொழியை அழைச்சிட்டு வந்து, உங்க கிட்ட மீதி விஷயத்தை பேசிக்கிறேன்" என்று சொன்னபடி தனது கார்க் கீயை எடுத்துக் கொண்டே வெளியேறி விட்டான்.

'என்னது? ஊமைச்சியை கூட்டி வர போறானாமா?' என்று நினைத்த வேதவல்லிக்கு உதறல் தான்...

குருமூர்த்தியோ பெருமூச்சுடன் வேதவல்லியை பார்த்தவர், "அம்மா, அன்னைக்கு நீங்க சொன்னது உண்மை தானா?" என்று கேட்டார்...

வேதவல்லியோ, "அவன் சொன்னதை கேட்டு என்னையே சந்தேகப்படுறியே" என்று கேட்டபடி வராத கண்ணீரை துடைத்துக் கொள்ள, "பச், இப்போ எதுக்கு கண்ணை கசக்கிட்டு இருக்கீங்க, சரி விடுங்க, அந்த பணம் எங்க போனாலும் பரவாயில்லை, அத பத்தி இனி பேச வேணாம்" என்று சொல்லி விட்டு அங்கிருந்து அகன்று தனது வேலைகளை பார்க்க சென்று விட்டார்...

கெளதம் கிருஷ்ணாவோ தனக்கு சற்று தள்ளி நின்ற வசந்தியை பார்த்தவன், "எனக்கென்னவோ இந்த பாட்டி மேல சந்தேகமா இருக்கு, பணத்தை அவங்களே எடுத்து வச்சிட்டு தேன்மொழி மேல பழி போடுறாங்கன்னு தோணுது... ஷீ இஸ் டேஞ்சரெஸ் பாட்டி" என்றான் அவன்...

"ஆதாரம் இல்லாம சந்தேகப்படாத கெளதம்... பார்த்துக்கலாம்... நீ முதல் சாப்பிடு" என்றார் வசந்தி...

"சரி அத விடுங்க, உங்கள பாட சொல்லி ஜெய் கேட்டான்" என்று கெளதம் கிருஷ்ணா சொல்ல, அவரோ, "நான் தான் பாடுறத விட்டேன்ல.. அப்புறம் என்ன?" என்றார் அவர்...

"அது தான் ஏன்? எத்தனையோ சிங்கர்ஸ் சாகும் வரைக்கும் பாடுறாங்க... நீங்க ஏன் இப்படி இருக்கீங்க? உங்க வாய்ஸ் எவ்ளோ செமயா இருக்கும் தெரியுமா? வம்சி கூட ஒரு டூயட் பாடுங்க, அப்புறம் இந்த இன்டர்நெட்டே உங்கள பத்தி தான் பேசும்... ரெண்டு பேரோட வாய்ஸ்ஸும் சூப்பரா மேட்ச் ஆகும்..." என்று அவன் சொல்ல, வசந்தி மெதுவாக புன்னகைத்து விட்டு, "பாட இஷ்டம் இல்லன்னா விடேன்டா" என்றார்...

"என்னவோ போங்க" என்று சலிப்பாக சொல்லிக் கொண்டே கெளதம் கிருஷ்ணா சாப்பிட ஆரம்பித்து விட்டான்...

இதே சமயம் வம்சி கிருஷ்ணாவின் காரானது தேன்மொழியின் வீட்டின் முன்னே நின்றது...

அவனும் காரில் இருந்து இறங்கி அவர்கள் வீட்டின் உள்ளே நுழைய, அவனைக் கண்ட பக்கத்து வீட்டு பெண்மணியோ, 'மகா சொன்னது உண்மை தான் போலவே' என்று நினைத்துக் கொண்டார்...

கார் சத்தம் கேட்டு வாசலுக்கு வந்த மகாலக்ஷ்மியோ அங்கே நின்ற வம்சி கிருஷ்ணாவை மென் புன்னகையுடன் பார்த்தவர், "வாங்க மாப்பிள்ளை, தேன்மொழி ஸ்கூல் போய் இருக்கா" என்று சொன்னார்...

அவன் அப்போது தான் நேரத்தைப் பார்த்தான்...

'ச்ச, வர்ற அவசரத்துல நேரத்தை பார்க்கலாமலே கிளம்பிட்டேன்' என்று நினைத்துக் கொண்டே, "வர்றதுக்கு லேட் ஆகுமா?" என்று கேட்டான்...

அவரும் அங்கே இருந்த சுவர் கடிகாரத்தை பார்த்துக் கொண்டே, "இல்ல இன்னும் அரை மணி நேரத்துல வந்திடுவா, நீங்க உட்காருங்க, நான் காஃபி போட்டு கொண்டு வரேன்" என்று சொல்ல, அவனோ, "காஃபி எல்லாம் வேணாம், தண்ணி மட்டும் போதும்" என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான்...

இன்று தான் நிதானமாக வீட்டை சுற்றிப் பார்க்கின்றான்...

சுவரில் அங்கும் இங்கும் சில வெடிப்புகள்...

வீடு சற்று மோசமாக தான் இருந்தது...

"வாடகைக்கா இருக்கீங்க" என்று சத்தமாக கேட்டான்...

"ஆமா மாப்பிள்ளை" என்றார் அவர் சமயலறைக்குள் இருந்து...

அவனும் பெருமூச்சுடன் கண்களை சுழல விட, அங்கே சுவரில் தேன்மொழியின் சிறிய வயது படங்கள் மாட்டப்பட்டு இருந்தன...

எழுந்து சென்று அவற்றின் முன்னே நின்று ஒவ்வொன்றாக பார்த்தான்...

அழகாக இருந்தாள்.

அவனை அறியாமல் இதழில் மெல்லிய புன்னகை...

அவன் விழிகளோ இப்போது அவள் பரிசு வாங்கும் புகைப்படத்தில் படிந்தது...

பின்னால், "பாடல் போட்டி" என்று பதாகை இருந்தது...

அவள் முன்னால் நின்று பரிசை வாங்கிக் கொண்டு இருந்தாள்.

மகாலக்ஷ்மியும் நீர்க் குவளையுடன் அவ்விடத்தில் வந்து சேர, "தேங்க்ஸ்" என்று சொல்லிக் கொண்டே, குவளையை வாங்கியவன், "இது தேன்மொழி தானே" என்று கெட்டான்...

மகாலக்ஷ்மிக்கு கண்கள் கலங்கி விட்டன...

அவரோ அவனை கலங்கிய விழிகளுடன் ஏறிட்டுப் பார்த்தவர், "ம்ம் அவ தான்... அவ கடைசியா பாடுன பாட்டு தான் அது... முதல் பரிசே அவளுக்கு தான்... எவ்ளோ அழகா பாடுவா தெரியுமா? இந்த ஃபோட்டோல இருக்கிற சிரிப்பு அவ கிட்ட இருக்கவே கூடாதுன்னு கடவுள் நினைச்சுட்டார் போல, அன்னைக்கு நடந்த ஆக்சிடென்ட் ல தான் அவ அப்பாவும் எங்களை விட்டு போய்ட்டார்... அவ குரலும் போய்டுச்சு" என்றார்...

வம்சி கிருஷ்ணாவுக்கு என்னவோ போல இருந்தது...

ஒருத்தருக்கு பிறப்பிலேயே பேசும் திறன் இல்லை என்றால் வரும் வலியை விட, அந்த திறனை இடையில் தொலைத்து விடும் போது வரும் வலி அதிகம்...

அதுவும் அவள் பாட ஆசைப்பட்டு இருக்கின்றாள்...

அவள் மனம் என்ன பாடு பட்டு இருக்கும் என்று அவனால் உணர முடிந்தது...

அவனும் பாடகன் அல்லவா? அவள் இடத்தில் தன்னை வைத்து அவனால் பார்க்கவே முடியவில்லை...

சட்டென தலையை உலுக்கி தன்னை சமநிலைப்படுத்தியவன், "டாக்டர்ஸ் கிட்ட காட்டலையா?" என்று கேட்டான்...

"போகாத இடம் இல்லை மாப்பிள்ளை... அவர் சேர்த்து வச்ச பணம் எல்லாமே அதற்கே செலவாகிடுச்சு... அவ உயிரை காப்பாத்துனதே பெருசுன்னு சொன்னாங்க... என் பொண்ணு அதுக்கப்புறம் மௌனமாகிட்டா..." என்று சொன்னவர் கண்ணில் இருந்து கண்ணீர் வழிய, அவனுக்கு அவரை பார்க்கவே பாவமாகி விட்டது...

"நீங்க கவலைப்படாதீங்க அத்தை, நான் அவளை நல்லா பார்த்துப்பேன்" என்று சொன்னவனோ வீட்டை சுற்றி கண்களை சுழல விட, "வீட்டை சுற்றி பார்க்கிறதுன்னா பாருங்க மாப்பிள்ளை" என்றார் மகாலக்ஷ்மி...

அவனுக்கும் அப்படியே சும்மா இருக்க சலிப்பாக இருந்தது... ஆமோதிப்பாக தலையாட்டியவன், மென் புன்னகையுடன் கையில் இருந்த நீர் குவளையை அங்கிருந்த மேசையில் வைத்து விட்டு, வீட்டை சுற்றிப் பார்த்துக் கொண்டே நடந்தான்...

அவள் அறைக்குள் நுழைந்தவன் விழிகளோ அறையின் நேர்த்தியை ரசனையுடன் பார்த்தன...

பெரிதாக பொருட்கள் இல்லை...

அழகாக நேர்த்தியாக இருந்தது... அங்கே ஒரு மேசையும் நாற்காலியும் இருந்தன...

அப்படியே நடந்து வந்து அந்த மேசையில் அமர்ந்தான்...

விசில் அடித்துக் கொண்டே, "ரூமை சூப்பரா வச்சு இருக்கா" என்று சொன்னபடி மேசையில் இருந்த நோட் புக்கை பார்த்தான்...

அவன் கரமோ மெதுவாக நோட் புக்கை திறந்த கணம், அவன் விழிகள் சட்டென விரிந்து கொண்டன...

அவன் இத்தனை நாட்கள் தேடிக் கொண்டு இருந்த எழுத்துக்கள் அவை... அதே அதிர்ச்சியுடன் நோட் புக்கை கையில் எடுத்து ஒவ்வொரு பக்கமாக புரட்டினான்...

ஆம் அவன் தென்றலின் எழுத்துக்கள்...

அவன் வேகமாக புரட்டியதில், நோட் புக்கினுள் அவள் வைத்து விட்டு சென்ற கடிதம் கீழே விழுந்தது...

சட்டென அதனை குனிந்து எடுத்தான்...

இதயம் வேகமாக துடிக்க தொடங்கியது... அதிர்ச்சியுடன் எழுந்து கொண்டான்...

என்ன உணர்வென்று தெரியவில்லை...

ஆனால் படபடப்பு...

கையில் இருந்த கடிதத்தை மெதுவாக திறந்த போதே அவன் கரம் நடுங்கியது...

இறுதியாக திறந்து விட்டான்...

அவள் அவனுக்காக வரைந்த மடல்...

"அன்புள்ள வம்சி கிருஷ்ணாவுக்கு" என்று ஆரம்பிக்கப்பட்டு இருந்தது...

ஒவ்வொரு வரியாக படித்தான்...

ஆழ்ந்து படித்தான்...

இடையில் எழுத்துக்கள் மங்கின...

அவன் விழிநீர் எழுத்துக்களை மறைத்து இருந்தன...

அவளுக்கான அவன் கண்ணில் இருந்து இரண்டாம் தடவை கண்ணீர்... காதல் எவ்வளவு பொல்லாதது, அவனையும் மீண்டும் மீண்டும் அழ வைக்கின்றதே...

அவள் எழுத்துக்கள் அவன் இதயத்தை ஏதோ செய்தன...

கண்களை மூடி திறந்து விழிநீரை கண்ணில் இருந்து அகற்றியவன் மீண்டும் அவள் மடலை வாசித்தான்...

அவள் மடலை வாசித்து முடித்து விட்டு இறுதியாக அவள் பெயரை ஆழ்ந்து பார்த்தான்...

"இப்படிக்கு தேன்மொழி வம்சி கிருஷ்ணா"

இதழ்களில் மெல்லிய புன்னகை...

அவன் யாருக்காக காத்துக் கொண்டு இருந்தானோ, அவளே அவன் மனைவியாகி விட்டாள்.

இதனை அறியாமல் முட்டாளாக இத்தனை நாட்கள் இருந்து இருக்கின்றான்...

தான் கேட்டதுமே அவள் திருமணத்துக்கு சம்மதித்த காரணம் இப்போது புரிந்தது...

"இடியட் வம்சி" என்று தனக்கு தானே திட்டிக் கொண்டே இருக்க, வளையல் சத்தம் கேட்டது...

பக்கவாட்டாக திரும்பி அறை வாசலைப் பார்த்தான்...

அங்கே தேன்மொழி நின்று இருந்தாள்.

அவள் கண்கள் கலங்கி இருந்தன...

அவளுக்கோ அவனை அணைத்து வலி தீர அழ வேண்டும் போன்ற உணர்வு...

ஆனால் அதற்கு அவளுக்கு தைரியம் இல்லை...

அவன் தன்னை பற்றி என்ன நினைத்து இருக்கின்றான் என்று பயம்...

அவனை நோக்கி அடி மேல் அடி வைத்து வந்தாள்.

அவள் பார்வை அவன் கையில் இருந்த காகிதத்தில் ஒரு கணம் படிந்து மீண்டது...

அவனோ அவளை இமைக்காமல் பார்த்து இருந்தான்...

மனதில் எத்தனையோ உணர்வுகள்...

அவனால் பேச கூட முடியவில்லை...

குரல் இருந்தும் வார்த்தைகள் வர மறுத்தன... அவளை பார்க்கும் போதே விழிகள் கலங்கி விட்டன...

அவன் முன்னே வந்து நின்றவள் கையை அசைத்து, "என்ன சந்தேகப்படுறீங்களா?" என்று கேட்டாள்.

அவனோ, "ஹேய் என்னடி பேசுற?" என்று சொல்லும் போதே அவன் குரல் மொத்தமாக உடைந்து விட்டது... அடுத்த கணமே, அவளை காற்றுப் புகாத அளவுக்கு இறுக அணைத்து இருந்தான்...

பெண்ணவளோ அதிர்ந்து விட்டாள்.

அவள் அணைக்க நினைத்தாள், ஆனால் அவன் அணைத்தே விட்டான்...

அவள் கலங்கிய கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தது...

அவன் இத்தனை நாள் தொலைத்ததாக எண்ணிய பொக்கிஷம் அவன் கையிலேயே இருந்து இருக்கின்றது...

இன்று அந்த பொக்கிஷத்தை கண்டு கொண்டான்...

தென்றலை அணைக்கவே முடியாதா? என்ற அவன் ஏக்கம் இன்று தீர்ந்து விட்டது...

அவன் தென்றலை அணைத்து விட்டான்...
 

lashnivetha

New member
இப்போது வம்சி கிருஷ்ணா திரும்பி வேதவல்லியைப் பார்த்தவன், "இவங்களோடது எல்லாம் ஒரு சாட்சின்னு நம்புறீங்களா?" என்று குருமூர்த்தியிடம் கேட்டான்...

அவரோ, "அப்போ நான் பொய் சொல்றேன்னு சொல்றியா? அவ பணத்தை எடுத்ததை என் ரெண்டு கண்ணால பார்த்தேன்... உன் பொண்டாட்டியை காப்பாத்த நீ கட்டுக் கதை சொல்ற" என்று இப்போது அவன் மீதும் பழி விழுந்தது...

"ஒஹோ நான் இப்போ கட்டுக் கதை சொல்றேனா?" என்று அவன் கடுப்பாக கேட்க, சாப்பிட்ட பாதியில் நடப்பதை பார்த்துக் கொண்டு இருந்த கெளதம் கிருஷ்ணாவுக்கே பொறுக்கவில்லை...

"பாட்டி, அவன் ஒண்ணும் கட்டுக்கதை சொல்லல, அவன் சிங்கப்பூர் போகும் போது தேன்மொழி கிட்ட கோபமா இருக்க காரணமே இது தான்... தன் கிட்ட பணம் கேட்காம வட்டிக்கடைல போய் கேட்ட கோபம் தான் அது... விட்டா இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்கீங்க" என்றான்...

"ஓஹ் நீயும் உன் அண்ணன் கூட கூட்டா?" என்றார் அவர்...

எங்கே சிக்கி விடுவோமோ என்கின்ற பதட்டத்தில் அனைவர் மீதும் பழியை தூக்கிப் போட்டார்...

அங்கே சமையலறைக்குள் நின்ற பாக்கியாவுக்கும் அவர்கள் பேசியது தெளிவாக கேட்டது...

'அடி ஆத்தி, இந்த பாட்டி எப்படி எல்லாம் திட்டம் போட்டு இருக்கு, சரியான க்ரிமினல் போல, நாம பார்த்ததை இப்போ சொல்றதா? வேணாமா? சொன்னா நமக்கு பிரச்சனை வருமோ? இது அவங்க குடும்ப விஷயம்... நமக்கெதுக்கு வம்பு... கம்முன்னு இருப்போம்' என்று நினைத்துக் கொண்டாள்.

வம்சி கிருஷ்ணாவோ வேதவல்லியை உறுத்து விழித்தவன், "தேன்மொழியை அழைச்சிட்டு வந்து, உங்க கிட்ட மீதி விஷயத்தை பேசிக்கிறேன்" என்று சொன்னபடி தனது கார்க் கீயை எடுத்துக் கொண்டே வெளியேறி விட்டான்.

'என்னது? ஊமைச்சியை கூட்டி வர போறானாமா?' என்று நினைத்த வேதவல்லிக்கு உதறல் தான்...

குருமூர்த்தியோ பெருமூச்சுடன் வேதவல்லியை பார்த்தவர், "அம்மா, அன்னைக்கு நீங்க சொன்னது உண்மை தானா?" என்று கேட்டார்...

வேதவல்லியோ, "அவன் சொன்னதை கேட்டு என்னையே சந்தேகப்படுறியே" என்று கேட்டபடி வராத கண்ணீரை துடைத்துக் கொள்ள, "பச், இப்போ எதுக்கு கண்ணை கசக்கிட்டு இருக்கீங்க, சரி விடுங்க, அந்த பணம் எங்க போனாலும் பரவாயில்லை, அத பத்தி இனி பேச வேணாம்" என்று சொல்லி விட்டு அங்கிருந்து அகன்று தனது வேலைகளை பார்க்க சென்று விட்டார்...

கெளதம் கிருஷ்ணாவோ தனக்கு சற்று தள்ளி நின்ற வசந்தியை பார்த்தவன், "எனக்கென்னவோ இந்த பாட்டி மேல சந்தேகமா இருக்கு, பணத்தை அவங்களே எடுத்து வச்சிட்டு தேன்மொழி மேல பழி போடுறாங்கன்னு தோணுது... ஷீ இஸ் டேஞ்சரெஸ் பாட்டி" என்றான் அவன்...

"ஆதாரம் இல்லாம சந்தேகப்படாத கெளதம்... பார்த்துக்கலாம்... நீ முதல் சாப்பிடு" என்றார் வசந்தி...

"சரி அத விடுங்க, உங்கள பாட சொல்லி ஜெய் கேட்டான்" என்று கெளதம் கிருஷ்ணா சொல்ல, அவரோ, "நான் தான் பாடுறத விட்டேன்ல.. அப்புறம் என்ன?" என்றார் அவர்...

"அது தான் ஏன்? எத்தனையோ சிங்கர்ஸ் சாகும் வரைக்கும் பாடுறாங்க... நீங்க ஏன் இப்படி இருக்கீங்க? உங்க வாய்ஸ் எவ்ளோ செமயா இருக்கும் தெரியுமா? வம்சி கூட ஒரு டூயட் பாடுங்க, அப்புறம் இந்த இன்டர்நெட்டே உங்கள பத்தி தான் பேசும்... ரெண்டு பேரோட வாய்ஸ்ஸும் சூப்பரா மேட்ச் ஆகும்..." என்று அவன் சொல்ல, வசந்தி மெதுவாக புன்னகைத்து விட்டு, "பாட இஷ்டம் இல்லன்னா விடேன்டா" என்றார்...

"என்னவோ போங்க" என்று சலிப்பாக சொல்லிக் கொண்டே கெளதம் கிருஷ்ணா சாப்பிட ஆரம்பித்து விட்டான்...

இதே சமயம் வம்சி கிருஷ்ணாவின் காரானது தேன்மொழியின் வீட்டின் முன்னே நின்றது...

அவனும் காரில் இருந்து இறங்கி அவர்கள் வீட்டின் உள்ளே நுழைய, அவனைக் கண்ட பக்கத்து வீட்டு பெண்மணியோ, 'மகா சொன்னது உண்மை தான் போலவே' என்று நினைத்துக் கொண்டார்...

கார் சத்தம் கேட்டு வாசலுக்கு வந்த மகாலக்ஷ்மியோ அங்கே நின்ற வம்சி கிருஷ்ணாவை மென் புன்னகையுடன் பார்த்தவர், "வாங்க மாப்பிள்ளை, தேன்மொழி ஸ்கூல் போய் இருக்கா" என்று சொன்னார்...

அவன் அப்போது தான் நேரத்தைப் பார்த்தான்...

'ச்ச, வர்ற அவசரத்துல நேரத்தை பார்க்கலாமலே கிளம்பிட்டேன்' என்று நினைத்துக் கொண்டே, "வர்றதுக்கு லேட் ஆகுமா?" என்று கேட்டான்...

அவரும் அங்கே இருந்த சுவர் கடிகாரத்தை பார்த்துக் கொண்டே, "இல்ல இன்னும் அரை மணி நேரத்துல வந்திடுவா, நீங்க உட்காருங்க, நான் காஃபி போட்டு கொண்டு வரேன்" என்று சொல்ல, அவனோ, "காஃபி எல்லாம் வேணாம், தண்ணி மட்டும் போதும்" என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான்...

இன்று தான் நிதானமாக வீட்டை சுற்றிப் பார்க்கின்றான்...

சுவரில் அங்கும் இங்கும் சில வெடிப்புகள்...

வீடு சற்று மோசமாக தான் இருந்தது...

"வாடகைக்கா இருக்கீங்க" என்று சத்தமாக கேட்டான்...

"ஆமா மாப்பிள்ளை" என்றார் அவர் சமயலறைக்குள் இருந்து...

அவனும் பெருமூச்சுடன் கண்களை சுழல விட, அங்கே சுவரில் தேன்மொழியின் சிறிய வயது படங்கள் மாட்டப்பட்டு இருந்தன...

எழுந்து சென்று அவற்றின் முன்னே நின்று ஒவ்வொன்றாக பார்த்தான்...

அழகாக இருந்தாள்.

அவனை அறியாமல் இதழில் மெல்லிய புன்னகை...

அவன் விழிகளோ இப்போது அவள் பரிசு வாங்கும் புகைப்படத்தில் படிந்தது...

பின்னால், "பாடல் போட்டி" என்று பதாகை இருந்தது...

அவள் முன்னால் நின்று பரிசை வாங்கிக் கொண்டு இருந்தாள்.

மகாலக்ஷ்மியும் நீர்க் குவளையுடன் அவ்விடத்தில் வந்து சேர, "தேங்க்ஸ்" என்று சொல்லிக் கொண்டே, குவளையை வாங்கியவன், "இது தேன்மொழி தானே" என்று கெட்டான்...

மகாலக்ஷ்மிக்கு கண்கள் கலங்கி விட்டன...

அவரோ அவனை கலங்கிய விழிகளுடன் ஏறிட்டுப் பார்த்தவர், "ம்ம் அவ தான்... அவ கடைசியா பாடுன பாட்டு தான் அது... முதல் பரிசே அவளுக்கு தான்... எவ்ளோ அழகா பாடுவா தெரியுமா? இந்த ஃபோட்டோல இருக்கிற சிரிப்பு அவ கிட்ட இருக்கவே கூடாதுன்னு கடவுள் நினைச்சுட்டார் போல, அன்னைக்கு நடந்த ஆக்சிடென்ட் ல தான் அவ அப்பாவும் எங்களை விட்டு போய்ட்டார்... அவ குரலும் போய்டுச்சு" என்றார்...

வம்சி கிருஷ்ணாவுக்கு என்னவோ போல இருந்தது...

ஒருத்தருக்கு பிறப்பிலேயே பேசும் திறன் இல்லை என்றால் வரும் வலியை விட, அந்த திறனை இடையில் தொலைத்து விடும் போது வரும் வலி அதிகம்...

அதுவும் அவள் பாட ஆசைப்பட்டு இருக்கின்றாள்...

அவள் மனம் என்ன பாடு பட்டு இருக்கும் என்று அவனால் உணர முடிந்தது...

அவனும் பாடகன் அல்லவா? அவள் இடத்தில் தன்னை வைத்து அவனால் பார்க்கவே முடியவில்லை...

சட்டென தலையை உலுக்கி தன்னை சமநிலைப்படுத்தியவன், "டாக்டர்ஸ் கிட்ட காட்டலையா?" என்று கேட்டான்...

"போகாத இடம் இல்லை மாப்பிள்ளை... அவர் சேர்த்து வச்ச பணம் எல்லாமே அதற்கே செலவாகிடுச்சு... அவ உயிரை காப்பாத்துனதே பெருசுன்னு சொன்னாங்க... என் பொண்ணு அதுக்கப்புறம் மௌனமாகிட்டா..." என்று சொன்னவர் கண்ணில் இருந்து கண்ணீர் வழிய, அவனுக்கு அவரை பார்க்கவே பாவமாகி விட்டது...

"நீங்க கவலைப்படாதீங்க அத்தை, நான் அவளை நல்லா பார்த்துப்பேன்" என்று சொன்னவனோ வீட்டை சுற்றி கண்களை சுழல விட, "வீட்டை சுற்றி பார்க்கிறதுன்னா பாருங்க மாப்பிள்ளை" என்றார் மகாலக்ஷ்மி...

அவனுக்கும் அப்படியே சும்மா இருக்க சலிப்பாக இருந்தது... ஆமோதிப்பாக தலையாட்டியவன், மென் புன்னகையுடன் கையில் இருந்த நீர் குவளையை அங்கிருந்த மேசையில் வைத்து விட்டு, வீட்டை சுற்றிப் பார்த்துக் கொண்டே நடந்தான்...

அவள் அறைக்குள் நுழைந்தவன் விழிகளோ அறையின் நேர்த்தியை ரசனையுடன் பார்த்தன...

பெரிதாக பொருட்கள் இல்லை...

அழகாக நேர்த்தியாக இருந்தது... அங்கே ஒரு மேசையும் நாற்காலியும் இருந்தன...

அப்படியே நடந்து வந்து அந்த மேசையில் அமர்ந்தான்...

விசில் அடித்துக் கொண்டே, "ரூமை சூப்பரா வச்சு இருக்கா" என்று சொன்னபடி மேசையில் இருந்த நோட் புக்கை பார்த்தான்...

அவன் கரமோ மெதுவாக நோட் புக்கை திறந்த கணம், அவன் விழிகள் சட்டென விரிந்து கொண்டன...

அவன் இத்தனை நாட்கள் தேடிக் கொண்டு இருந்த எழுத்துக்கள் அவை... அதே அதிர்ச்சியுடன் நோட் புக்கை கையில் எடுத்து ஒவ்வொரு பக்கமாக புரட்டினான்...

ஆம் அவன் தென்றலின் எழுத்துக்கள்...

அவன் வேகமாக புரட்டியதில், நோட் புக்கினுள் அவள் வைத்து விட்டு சென்ற கடிதம் கீழே விழுந்தது...

சட்டென அதனை குனிந்து எடுத்தான்...

இதயம் வேகமாக துடிக்க தொடங்கியது... அதிர்ச்சியுடன் எழுந்து கொண்டான்...

என்ன உணர்வென்று தெரியவில்லை...

ஆனால் படபடப்பு...

கையில் இருந்த கடிதத்தை மெதுவாக திறந்த போதே அவன் கரம் நடுங்கியது...

இறுதியாக திறந்து விட்டான்...

அவள் அவனுக்காக வரைந்த மடல்...

"அன்புள்ள வம்சி கிருஷ்ணாவுக்கு" என்று ஆரம்பிக்கப்பட்டு இருந்தது...

ஒவ்வொரு வரியாக படித்தான்...

ஆழ்ந்து படித்தான்...

இடையில் எழுத்துக்கள் மங்கின...

அவன் விழிநீர் எழுத்துக்களை மறைத்து இருந்தன...

அவளுக்கான அவன் கண்ணில் இருந்து இரண்டாம் தடவை கண்ணீர்... காதல் எவ்வளவு பொல்லாதது, அவனையும் மீண்டும் மீண்டும் அழ வைக்கின்றதே...

அவள் எழுத்துக்கள் அவன் இதயத்தை ஏதோ செய்தன...

கண்களை மூடி திறந்து விழிநீரை கண்ணில் இருந்து அகற்றியவன் மீண்டும் அவள் மடலை வாசித்தான்...

அவள் மடலை வாசித்து முடித்து விட்டு இறுதியாக அவள் பெயரை ஆழ்ந்து பார்த்தான்...

"இப்படிக்கு தேன்மொழி வம்சி கிருஷ்ணா"

இதழ்களில் மெல்லிய புன்னகை...

அவன் யாருக்காக காத்துக் கொண்டு இருந்தானோ, அவளே அவன் மனைவியாகி விட்டாள்.

இதனை அறியாமல் முட்டாளாக இத்தனை நாட்கள் இருந்து இருக்கின்றான்...

தான் கேட்டதுமே அவள் திருமணத்துக்கு சம்மதித்த காரணம் இப்போது புரிந்தது...

"இடியட் வம்சி" என்று தனக்கு தானே திட்டிக் கொண்டே இருக்க, வளையல் சத்தம் கேட்டது...

பக்கவாட்டாக திரும்பி அறை வாசலைப் பார்த்தான்...

அங்கே தேன்மொழி நின்று இருந்தாள்.

அவள் கண்கள் கலங்கி இருந்தன...

அவளுக்கோ அவனை அணைத்து வலி தீர அழ வேண்டும் போன்ற உணர்வு...

ஆனால் அதற்கு அவளுக்கு தைரியம் இல்லை...

அவன் தன்னை பற்றி என்ன நினைத்து இருக்கின்றான் என்று பயம்...

அவனை நோக்கி அடி மேல் அடி வைத்து வந்தாள்.

அவள் பார்வை அவன் கையில் இருந்த காகிதத்தில் ஒரு கணம் படிந்து மீண்டது...

அவனோ அவளை இமைக்காமல் பார்த்து இருந்தான்...

மனதில் எத்தனையோ உணர்வுகள்...

அவனால் பேச கூட முடியவில்லை...

குரல் இருந்தும் வார்த்தைகள் வர மறுத்தன... அவளை பார்க்கும் போதே விழிகள் கலங்கி விட்டன...

அவன் முன்னே வந்து நின்றவள் கையை அசைத்து, "என்ன சந்தேகப்படுறீங்களா?" என்று கேட்டாள்.

அவனோ, "ஹேய் என்னடி பேசுற?" என்று சொல்லும் போதே அவன் குரல் மொத்தமாக உடைந்து விட்டது... அடுத்த கணமே, அவளை காற்றுப் புகாத அளவுக்கு இறுக அணைத்து இருந்தான்...

பெண்ணவளோ அதிர்ந்து விட்டாள்.

அவள் அணைக்க நினைத்தாள், ஆனால் அவன் அணைத்தே விட்டான்...

அவள் கலங்கிய கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தது...

அவன் இத்தனை நாள் தொலைத்ததாக எண்ணிய பொக்கிஷம் அவன் கையிலேயே இருந்து இருக்கின்றது...

இன்று அந்த பொக்கிஷத்தை கண்டு கொண்டான்...

தென்றலை அணைக்கவே முடியாதா? என்ற அவன் ஏக்கம் இன்று தீர்ந்து விட்டது...


அவன் தென்றலை அணைத்து விட்டான்...
Super moments Vamsi❤️Thenmozhi
 
Top