அத்தியாயம் 2
ரத்னத்தை தொடர்ந்து வீட்டினுள் நுழைந்த தேவ் உடைய விழிகள் உள்ளே நுழைந்ததுமே மூர்த்தியின் உடலில் படிந்து, அப்படியே மேலேறி, அங்கே அழுதுக் கொண்டே அமர்ந்து இருந்த பத்மாவில் படிந்தது...
அழுதழுது விழிகள் வீங்கிப் போய் இருந்தன...
ரத்னமோ, "ஜெயா" என்று அழைக்க, ஓடி வந்து அவரை அணைத்த ஜெயாவோ, "அண்ணா, இங்க பாருங்க, என் புருஷன இவ கொன்னுட்டா" என்று அழ ஆரம்பித்து விட்டார்...
இதற்கு அவர் நோய்வாய்ப்பட்டு இருந்த சமயம், ஒரு தடவை கூட ஜெயா வந்து பார்க்கவில்லை...
அவ்வளவு ஆத்திரத்துடன் இருந்தவர், இன்று இப்படி பேசப் பேச, உச்சக்கட்ட பொறுமையுடன் தான் அமர்ந்து இருந்தாள் பத்மா...
நித்யாவோ, "இந்த கொலைகாரியை நம்பி வந்த அப்பாவை சொல்லணும்" என்று சொல்லிக் கொண்டே அழுதாள்...
எல்லோரும் இருந்த வன்மத்தை அவள் மீது அள்ளிக் கொட்டிக் கொண்டே இருக்க, நிரூபனோ ஒரு படி மேலே சென்று, "இவளை எதுக்கு இங்க வச்சு இருக்கணும்? அடிச்சு துரத்துங்க, இவளை பார்த்தாலே ஆத்திரம் வருது" என்று சொல்லிக் கொண்டே, அவளை நோக்கிச் செல்ல, சட்டென எட்டி, அவன் மார்பில் கையை வைத்த தேவ்வோ, "நிரூபன், கீப் காம்" என்றான்...
"மச்சான், அவ நம்ம குடும்பத்தை அழிச்சவ, என் அப்பாவை கொன்னவ" என்று ஆரம்பிக்க, பத்மாவுக்கு அதுவரை இருந்த பொறுமை போய் விட்டது...
"நான் ஒன்னும் கொலைகாரி இல்லை" என்று ஆத்திரத்துடன் சீறிக் கொண்டே எழுந்து நின்றாள் பத்மா...
எல்லோரும் அவளை இப்போது அதிர்ந்து பார்க்க, "நானும் பார்த்துட்டே இருக்கேன், எல்லோரும் வாய்க்கு வந்த போல பேசுறீங்க... அவர் உயிரோட இருந்த நேரம் ஒருத்தர் வந்து பார்த்தீங்களா? இப்போ வந்து வார்த்தைக்கு வார்த்தை புருஷன், அப்பான்னு பேசிட்டு இருக்கீங்க... அவர் உங்கள எல்லாம் நினைச்சு நினைச்சு தான் செத்து போனார்... அவரை கொன்னது நீங்க தான்" என்று ஆக்ரோஷமாக பேசி முடிக்கவில்லை, ஓங்கி அவளுக்கு அறைந்து இருந்தார் ஜெயா...
சட்டென அவர் அருகே ஓடி வந்து, அவரை இழுத்து எடுத்த தேவ்வோ, "அத்தை" என்று அதட்டலாக அழைக்க, "இங்க பாரு தேவ், என்ன பேசுறானு" என்று அவர் ஆரம்பித்து, அவன் மார்பில் சாய்ந்து அழ, அவனோ கண்களை மூடி திறந்து விட்டு, அதிர்ந்தபடி கன்னத்தை பொத்திக் கொண்டே நின்ற பத்மாவைப் பார்த்தவன், "நீ மட்டும் வாயை மூடிட்டு ஓரமா இங்க நிற்கலைன்னா, நான் மனுஷனா இருக்க மாட்டேன்..." என்றான் அவளை உறுத்து விழித்தபடி...
அவனை அடிப்பட்ட பார்வை பார்த்தாள்.
அவ்வளவு வார்த்தைகள் அவள் மீது அள்ளி தெளிக்கும் கணங்களில் அமைதியாக நின்றவன், இப்போது மட்டும் அவளை மிரட்டும் போது வலிக்கும் தானே...
அப்படியே, அடி மேல் அடி வைத்து பின்னால் சென்றவள் சுவரில் சாய்ந்து நின்று அவனை வெறித்துப் பார்க்க, அவனோ அவளை முறைத்து விட்டு, "அத்தை உட்காருங்க" என்று தனது மார்பில் சாய்ந்து அழுதவரை அங்கிருந்த இருக்கையில் அமர வைத்தவன், நிரூபனிடம், "கொஞ்சம் அமைதியா இருடா" என்று பற்களை கடித்துக் கொண்டே, அதட்ட, அவனும், "சரி மச்சான்" என்று சொல்லிக் கொண்டே மௌனமாகி விட்டான்...
அவனுக்கு தேவ் என்றால் ஒரு வித மரியாதை கலந்த பயம்...
அதனை தொடர்ந்து இறுதி கிரியைகள் நடந்தன...
"அவ பக்கத்துலயே வர கூடாது" என்று சொன்னார் ஜெயா...
அவள் வீட்டில், இருந்துக் கொண்டே, அவளையே தந்தையின் அருகே வரக் கூடாது என்று சொல்ல, மொத்தமாக நொறுங்கி விட்டாள்...
வாயை திறந்து உரிமையை கேட்க முடியாத நிலை...
கேட்டாலும் அவள் பக்கம் யாரும் நிற்க மாட்டார்கள்...
அவளுக்கென்று இருந்த உயிரும் இப்போது அவளை விட்டு பிரிந்து இருக்க, கண்களை மூடி திறந்து பெருமூச்சை விட்டுக் கொண்டவளோ, அழுகையுடன் தூர இருந்தே மூர்த்தியின் பிரேதத்தை பார்த்துக் கொண்டே இருந்தாள்.
இறுதி கிரியைகள் நடந்தன...
நிரூபன், கொள்ளி வைக்க ஆயத்தமானான்... எல்லா செலவுகளையும் தேவ் பார்த்துக் கொண்டான்...
அவள் அலுவலக ஊழியர்களும் வந்து பார்த்து விட்டுச் சென்று இருந்தார்கள்...
தாமதமாக தான் அவர்கள் வந்ததால் காலையில் நடந்த எதுவும் அவர்களுக்கும் தெரியவில்லை...
அலுவலக நண்பர்களை தவிர அவளுக்கு நெருக்கமானவர்கள் என்று யாருமே இல்லை.
அங்கே பத்மா ஒரு பார்வையாளர் மட்டுமே...
ஆதங்கம் இருந்தது...
வலி இருந்தது...
காட்டிக் கொள்ள முடியவில்லை...
இறுதி சடங்கும் முடிய, எல்லோரும் கலைந்துச் செல்ல ஆயத்தமானார்கள்...
இப்படியே எல்லோரும் கலைந்துச் சென்று இருக்க, தனியாக அந்த வீட்டில் எஞ்சியது என்னவோ பத்மா மட்டும் தான்...
மூர்த்தியின் படத்துக்கு மாலை போட்டவள், ஹாலிலேயே அவர் படத்தின் கீழ் படுத்து இருந்தாள்.
நாட்கள் இப்படியே நகர, அவளுக்கு தன்னை தானே மீட்டு எடுக்க வேண்டிய நிலை...
மனதை திடப்படுத்திக் கொண்டே, அலுவலகத்துக்குச் செல்ல ஆயத்தமானாள்...
மனம் சோர்வாக இருந்தது...
மூர்த்தியுடன் அவளுக்கு நல்ல உறவு நிலை தான்...
ஆனாலும் அவர் துரோகம் அவளுக்கு என்றுமே ஏமாற்றம் தான்...
அதனை பற்றி அவள் கேட்கவில்லை என்றாலும், மனதுக்குள் நினைத்து வருந்தி இருக்கின்றாள்...
அவர் செய்த தவறால் இன்று வலி அனுபவித்துக் கொண்டு இருப்பது அவள் மட்டுமே...
அன்று வேலைக்கு வந்து வீட்டுக்கு திரும்பியவள் விழிகள் மூர்த்தியின் புகைப்படத்தில் பட்டு மீள, ஒரு பெருமூச்சுடன் தான் குளிக்கச் சென்றாள்.
குளித்து விட்டும் வந்து விட்டாள்.
சாப்பிடவே முடியவில்லை...
சாப்பாட்டை எடுத்து வைத்துக் கொண்டே யோசித்தபடி அமர்ந்து இருந்தாள்.
அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை...
அவளுக்கென்று யாரும் இல்லை...
நினைக்க நினைக்க அழுகை வந்தது...
தனிமை என்றும் கொடுமை தானே...
அடக்கிக் கொண்டே அமர்ந்து இருந்தாள்.
அப்போது தான் அவள் வீட்டின் ஜன்னல் உடையும் சத்தம் கேட்டது...
சட்டென உணவு தட்டை மேசையிலேயே வைத்து விட்டு, கையை கழுவிக் கொண்டே ஓடிச் சென்றவள், ஜன்னலினால் எட்டிப் பார்த்தாள்.
வாசலில் நின்று இருந்தான் நிரூபன்...
குடித்து இருப்பான் போலும், நிதானத்தில் இல்லை.
அவன் நண்பர்களுடன் வந்து இருந்தான்...
"ஏன் டி, என் அப்பாவை கொன்னுட்டு, இப்படி இருக்கியே" என்று திட்டிக் கொண்டே, மீண்டும் கல்லை எறிய, சட்டென விலகிக் கொண்டாள்.
அடுத்த ஜன்னல் கண்ணாடியும் உடைந்தது.
அப்படியே சுவரில் சாய்ந்து நின்றாள்.
கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர்...
"உன் அம்மா எங்க குடியை கெடுத்த போல, நீ யார் குடியை கெடுக்க போற, கதவை திறடி" என்று சொல்லிக் கொண்டே, கேட்டில் வேகமாக தட்டினான்...
நெஞ்சை பிடித்துக் கொண்டாள்.
அவன் வாயில் அதனை தொடர்ந்து வந்த வார்த்தைகளை கேட்கவே முடியவில்லை.
அவள் தாயையும் அவளையும் எந்தளவு கீழ் தரமாக பேச முடியுமோ பேசினான்...
காதை இரு கைகளாலும் பொத்திக் கொண்டாள்.
அருகே இருந்தவர்கள் கூட ஜன்னலினூடு எட்டிப் பார்த்தார்கள் தவிர, நேரே வந்து தட்டிக் கேட்கவில்லை...
குடித்து இருந்தவர்களை பார்க்க அவர்களுக்கும் பயம்...
இதே சமயம் நிரூபனோ, "கதவை உடைங்கடா, அவளை இந்த ஊரை விட்டு அடிச்சு துரத்தணும்" என்று சொல்லிக் கொண்டே, கதவின் பூட்டை இழுத்துக் கொண்டே, கொண்டு வந்து இருந்த சுத்தியலை எடுத்து ஓங்கி அடித்து உடைத்த சமயம், அவனை அடிப்பது போல வேகமாக வந்து நின்றது, கருப்பு நிற ஆடி கார்.
"டேய் யாரு?" என்று காரை திரும்பிப் பார்த்துக் கொண்டே திட்ட ஆரம்பித்த நிரூபனோ எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டான்...
காரில் இருந்து இறங்கியது வேறு யாருமல்ல தேவ் தான்...
வேலை முடிந்து வீட்டுக்குச் செல்லும் போது அவன் மனம் இன்று அவள் வீட்டின் வழியாக செல்ல உந்திக் கொண்டே இருந்தது...
அது ஏன் என்று அவனுக்கும் தெரியவில்லை...
சில சமயம் நம் உணர்வுகள் நமக்கு எதையோ உணர்த்தும் அல்லவா? அப்படி தான் அவனுக்கும் உணர்த்தி இருக்க, அவன் கண்ணில் பட்டது என்னவோ அவள் வீட்டின் முன்னே நின்று கலாட்டா செய்துக் கொண்டு இருந்த நிரூபனும் அவன் நண்பர்களும் தான்.
தேவ் என்றால் நிரூபனுக்கு பயம் தான்...
காரில் இருந்து இறங்கியவனோ நிரூபனை பார்த்துக் கொண்டே அருகே வர, "மச்சான்" என்றான் அவன் பயந்த குரலில்...
"இங்க என்ன பண்ணுற?" என்று கேட்டுக் கொண்டே, அவன் கையில் இருந்த சுத்தியலைக் கண்களால் காட்ட, "இல்ல சும்மா" என்று ஆரம்பிக்க, "கிளம்புடா" என்றான்...
நிரூபனும் மாறி பேசாமல், "சரி மச்சான்" என்று சொல்லிக் கொண்டே நகர, எட்டி அவன் ஷேர்ட்டை பற்றி தன்னை நோக்கி இழுத்தவன், அவன் விழிகளை பார்த்துக் கொண்டே, "உன் அப்பா செத்து ஒரு மாசம் கூட முழுசா முடியல, குடிச்சிட்டு இருக்க..." என்று பற்களை கடித்துக் கொண்டே கேட்க, "மனசு சரி இல்ல" என்று சொன்னவன் அவன் நீல நிற உறுத்தும் விழிகளை பார்த்து தலையை தாழ்த்திக் கொள்ள, "கிளம்பு" என்று சொல்லி அவனை உதறி விட, அவனும், "வாங்கடா சீக்கிரம்" என்று நண்பர்களிடம் சொல்லிக் கொண்டே, அங்கிருந்து கிளம்பி இருக்க, தேவ்வோ, இதழ் குவித்து ஊதிக் கொண்டே, வீட்டைப் பார்த்தான்...
ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து இருந்தன...
கேட்டை திறந்துக் கொண்டே உள்ளேச் சென்றவன் அவள் வாசல் கதவில் தட்ட, சுவரில் சாய்ந்து நின்ற பத்மாவோ பதறி விட்டாள்.
வெளியே நடந்தது அவளுக்கு தெரியவில்லை...
நிரூபன் தான் வந்து இருக்கின்றான் என்று நினைத்துக் கொண்டே, கண்களை துடைத்துக் கொண்டவளோ, அப்படியே நின்று இருக்க, "பத்மா கதவை திற" என்று ஒரு சத்தம்...
குரல் வேறு மாதிரி இருந்தது...
தேவ் உடைய குரல் என்று தெரிந்தது...
இப்போது ஜன்னலினூடு வாசலை எட்டிப் பார்த்தாள்.
அங்கே நிரூபனையும் நண்பர்களையும் காணவில்லை...
கருப்பு நிற ஆடி கார் மட்டுமே நின்று இருந்தது...
அது தேவ் உடைய கார் என்று அவளும் அறிந்து இருக்க, இதழ் குவித்து பெருமூச்சொன்றை விட்டவள், 'இவன் மட்டும் என்ன பண்ணி கிழிச்சிட போறான். அவன் இண்டீசென்ட் ஆஹ் திட்டுனான், இவன் டீசென்ட் ஆஹ் திட்டுவான், அவ்ளோ தானே' என்று நினைத்துக் கொண்டே கதவை திறந்தாள்.
அழுதழுது கண்கள் வீங்கி இருக்க, அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே உள்ளே நுழைய, போக, "எதுவா இருந்தாலும் வெளிய நின்னு பேசுங்க" என்றாள் வெடுக்கென்று...
அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன், "வாடகைக்கு தானே இருக்க?" என்று கேட்க, ஆம் என்று தலையாட்டினாள்...
"சரி கிளம்பு" என்றான்...
அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது...
"எங்க?" என்றாள் பதட்டமாக...
"எங்க வீட்டுக்கு" என்றான்...
"எதுக்கு?" என்று அவள் கேட்க, "இப்போ என்ன நடந்திச்சுன்னு பார்த்த தானே... நான் இல்லாத நேரம் வந்திருந்தா என்ன பண்ணி இருப்ப? பக்கத்துல இருக்கிற எவனும் ஒரு வார்த்தை கேட்கல... என்ன தான் பக்கத்து வீட்டு காரங்களோ" என்று ஆதங்கமாக அவன் வார்த்தைகள் வர, அவளோ, "இல்ல நான் பார்த்துக்கிறேன்" என்றாள்.
அவன் வீட்டுக்குச் சென்று எப்படி அவள் இருக்க முடியும்? அவன் மீது அவளுக்கு ஒன்றும் நல்ல அபிப்பிராயம் இல்லை...
நிரூபன் அளவுக்கு மோசமானவன் இல்லை என்று தெரியும்...
ஆத்மன் விஷயத்தில் அதிருப்தி... அதே போல, அவளிடம் அவன் பேசிய சந்தர்ப்பங்களில் அவன் வார்த்தைகள் கத்தி போல தானே அவளை நோக்கி வந்தன...
அதனாலேயே அவனுடன் செல்ல அவளுக்கு இஷ்டமில்லை...
"என்ன பார்த்துக்க போற?" என்று கேட்டான்...
"நான் என்ன பார்த்துப்பேன்" என்றாள்.
"பார்த்துகிற லட்சணத்தை பார்த்தேனே" என்றான்...
பதில் சொல்ல தெரியவில்லை...
"இல்ல எனக்கு?" என்று இழுக்க, "உள்ளே வந்து, உன்னை ரேப் பண்ணி இருந்தா என்ன பண்ணி இருப்ப? குடிச்சு இருந்தானுங்க, எவனுக்கும் நிதானம் இல்ல" என்றான்...
சற்றே பதறி விட்டாள் தான்...
இதழ்களை கடித்து தனது அழுகையை அடக்க முயல, "வீட்டுக்கு வா" என்றான்...
"அதே ரேப்பை நீங்க பண்ணிட்டீங்கன்னா?" என்று கேட்டாள்.
அவன் முகம் இறுகியது...
"அதுக்குன்னு வந்து இருந்தேன்னா, இப்படி வெளிய நின்னு பேசிட்டு இருக்க மாட்டேன்... உள்ள வந்து வேலையை முடிச்சு இருப்பேன்... எவன் கேட்க போறான்?" என்றான்...
சரியான கேள்வி தான்...
அவளுக்கு அவனுடன் செல்ல இஷ்டம் இல்லை என்றாலும் அவன் கேட்ட கேள்விகளால் பயந்தும் விட்டாள்.
அவளுக்கென்று பற்றுக்கோல் இல்லாத நிலை... தேவ் மேல் நல்ல அபிப்பிராயம் இல்லை என்றாலும், அவனை தவிர அவளுக்கு நம்புவதற்கு யாரும் இல்லாத நிலை தான்.
ரத்னம் மேல் அவளுக்கு நம்பிக்கையும் நல்ல அபிப்பிராயமும் இருந்தது...
மூர்த்தியின் இறப்பு வீட்டில் கூட, அவர் மட்டும் தான், "மனச தளரவிடாதே" என்று சொல்லி விட்டுச் சென்றார்.
அவரை தவிர யாருமே அவளிடம் பேசவில்லை...
தேவ் மீது இல்லாத நம்பிக்கை, அவர் மீது அவளுக்கு இருந்தது.
சற்று நேரம் நிதானமாக யோசித்தவளுக்கு, தன்னுடைய பாதுகாப்பு மிக முக்கியமாக பட, "சரி வர்றேன்" என்றாள்.
"ரொம்ப புத்திசாலி நீ" என்றான்...
அவள் புரியாமல் பார்க்க, "குட் டிசிஷன் அட் ரைட் டைம்..." என்று சொல்லிக் கொண்டே, பாக்கெட்டில் கையை விட்டபடி வெளியே நின்று இருக்க, "இம்போர்ட்டன்ஸ் திங்க்ஸ் மட்டும் எடுத்துட்டு வர்றேன், அடுத்து என்ன பண்ணுறதுன்னு ஐடியா இல்லை..." என்று சொல்ல, "இப்போதைக்கு வீட்டுக்கு வா, அப்புறம் பார்த்துக்கலாம்" என்றான்.
அவளும் தேவையான உடைகளை மட்டும் எடுத்துக் கொண்டே வெளியே வர, அவனே அவளிடம் இருந்து பையை வாங்கிக் காரில் வைத்தவன், "கெட் இன்" என்று சொல்லிக் கொண்டே காரில் ஏற அவளும் ஏறிக் கொண்டாள்.
அவனும் காரை ஸ்டார்ட் செய்ய, "உங்க அத்தை என்ன சொல்வாங்க?" என்று கேட்டாள்.
"நான் பார்த்துக்கிறேன்" என்று மட்டும் அவன் சொல்லி இருக்க, அவர்கள் வண்டி தேவ் உடைய வீட்டை நோக்கி கிளம்பி இருந்தது.
இருவரும் பேசிக் கொண்டது குறைவு தான்...
சற்று நேரத்தில் அவர்கள் வீட்டினை கார் அடைந்து இருக்க, உள்ளே இருந்தபடி பிரம்மாண்ட வீட்டைப் பார்த்தாள்.
"ரொம்ப பெரிய வீடு" என்றாள்.
"நானும் அப்பாவும் தான் இருக்கோம்" என்று சொல்ல, "அம்மா?" என்று கேட்டாள்.
"சின்ன வயசுல இறந்துட்டாங்க" என்று சொல்ல, "என்னோட அம்மாவும்" என்று அவள் சொன்னதுமே, அவளை திரும்பி உறுத்து விழித்தான்...
அந்த பார்வையின் அர்த்தம் அவளுக்கு புரிய, எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டே, தலையை தாழ்த்திக் கொண்டவள், "அவங்க பண்ணுன தப்புக்கு நான் என்ன பண்ணட்டும்?" என்று கேட்டாள்.
சட்டென இறுகி இருந்த அவன் விழிகள் சாதாரணமாக மாற, "தட் மேக் சென்ஸ்" என்று சொல்லிக் கொண்டே இறங்கிக் கொண்டவன், அவள் உடைகளை எடுத்துக் கொண்டே, வீட்டினுள் நுழைய, ஹாலில் இருந்து டி வி பார்த்துக் கொண்டு இருந்த ரத்னமோ, உடைப்பெட்டியுடன் வந்தவனை புருவம் சுருக்கிப் பார்க்க, அவனோ தலையை மட்டும் திருப்பி, பின்னால் வந்தவளைப் பார்த்தான்...
ரத்னமோ அதிர்ந்து போய் எழுந்து நின்றவர், "என்னப்பா இது?" என்று கேட்க, "நிரூபன் குடிச்சிட்டு போய் ஃப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து அவ வீட்டு முன்னாடி நின்னு பிரச்சனை பண்ணுறான்... சோ அழைச்சிட்டு வந்துட்டேன்" என்று சொல்ல, பத்மாவைப் பார்த்தவரோ, "ஓஹ், ஓகே, உள்ளே வாம்மா" என்றார்.
அவளுக்கு ஆச்சரியம்...
தேவ் சொன்ன ஒரு வார்த்தைக்கு மேல் அவர் எதுவும் கேட்கவில்லை...
அவன் மீது எந்தளவு நம்பிக்கை என்று அவளுக்கு புரிந்தது...
"கொஞ்ச நாளுல போயிடுவேன்" என்றாள் அவள் ரத்னத்தைப் பார்த்துக் கொண்டே...
"அதெல்லாம் அவசியமே இல்லை... கல்யாணம் முடிஞ்சு புருஷன் வீட்டுக்கு போறதுன்னா ஓகே, அது வரைக்கும் இங்கயே நீ இருந்துக்கலாம்... எனக்கு நீ எப்படியும் மருமகள் முறை தானே" என்று சொல்ல, அவள் மெலிதாக சிரித்துக் கொள்ள, அவரும் புன்னகைத்துக் கொண்டே, "அன்னைக்கே, நீ தனியா இருந்து என்ன பண்ணுவன்னு யோசிச்சேன்... வீட்டுக்கு கூப்பிட தேவ் விரும்ப மாட்டான்னு தான் உன்னை கூப்பிடல, அவனே அழைச்சு வந்து இருக்கான்..." என்று சொன்னவரோ, "குளிச்சிட்டு சாப்பிட வாப்பா" என்று சொல்ல, அவனும், உடைகளை, அவர்கள் வீட்டில் இருக்கும் அறைக்குள் கொண்டு வைத்தவன், "இந்த ரூமை யூஸ் பண்ணிக்கோ" என்று சொல்லி விட்டு பத்மாவை பார்க்காமல் தனது அறைக்குள் செல்ல, அவளும் பெருமூச்சுடன் அந்த அறைக்குள் நுழைய போனாள்...
"சாப்பிட்டியாம்மா?" என்று கேட்டார் ரத்னம்.
"இல்ல சார்" என்று சொல்ல, "மாமான்னு கூப்பிடு" என்றார்.
குரலை செருமிக் கொண்டே, "இல்ல மாமா" என்றாள்.
ரத்னத்தை தொடர்ந்து வீட்டினுள் நுழைந்த தேவ் உடைய விழிகள் உள்ளே நுழைந்ததுமே மூர்த்தியின் உடலில் படிந்து, அப்படியே மேலேறி, அங்கே அழுதுக் கொண்டே அமர்ந்து இருந்த பத்மாவில் படிந்தது...
அழுதழுது விழிகள் வீங்கிப் போய் இருந்தன...
ரத்னமோ, "ஜெயா" என்று அழைக்க, ஓடி வந்து அவரை அணைத்த ஜெயாவோ, "அண்ணா, இங்க பாருங்க, என் புருஷன இவ கொன்னுட்டா" என்று அழ ஆரம்பித்து விட்டார்...
இதற்கு அவர் நோய்வாய்ப்பட்டு இருந்த சமயம், ஒரு தடவை கூட ஜெயா வந்து பார்க்கவில்லை...
அவ்வளவு ஆத்திரத்துடன் இருந்தவர், இன்று இப்படி பேசப் பேச, உச்சக்கட்ட பொறுமையுடன் தான் அமர்ந்து இருந்தாள் பத்மா...
நித்யாவோ, "இந்த கொலைகாரியை நம்பி வந்த அப்பாவை சொல்லணும்" என்று சொல்லிக் கொண்டே அழுதாள்...
எல்லோரும் இருந்த வன்மத்தை அவள் மீது அள்ளிக் கொட்டிக் கொண்டே இருக்க, நிரூபனோ ஒரு படி மேலே சென்று, "இவளை எதுக்கு இங்க வச்சு இருக்கணும்? அடிச்சு துரத்துங்க, இவளை பார்த்தாலே ஆத்திரம் வருது" என்று சொல்லிக் கொண்டே, அவளை நோக்கிச் செல்ல, சட்டென எட்டி, அவன் மார்பில் கையை வைத்த தேவ்வோ, "நிரூபன், கீப் காம்" என்றான்...
"மச்சான், அவ நம்ம குடும்பத்தை அழிச்சவ, என் அப்பாவை கொன்னவ" என்று ஆரம்பிக்க, பத்மாவுக்கு அதுவரை இருந்த பொறுமை போய் விட்டது...
"நான் ஒன்னும் கொலைகாரி இல்லை" என்று ஆத்திரத்துடன் சீறிக் கொண்டே எழுந்து நின்றாள் பத்மா...
எல்லோரும் அவளை இப்போது அதிர்ந்து பார்க்க, "நானும் பார்த்துட்டே இருக்கேன், எல்லோரும் வாய்க்கு வந்த போல பேசுறீங்க... அவர் உயிரோட இருந்த நேரம் ஒருத்தர் வந்து பார்த்தீங்களா? இப்போ வந்து வார்த்தைக்கு வார்த்தை புருஷன், அப்பான்னு பேசிட்டு இருக்கீங்க... அவர் உங்கள எல்லாம் நினைச்சு நினைச்சு தான் செத்து போனார்... அவரை கொன்னது நீங்க தான்" என்று ஆக்ரோஷமாக பேசி முடிக்கவில்லை, ஓங்கி அவளுக்கு அறைந்து இருந்தார் ஜெயா...
சட்டென அவர் அருகே ஓடி வந்து, அவரை இழுத்து எடுத்த தேவ்வோ, "அத்தை" என்று அதட்டலாக அழைக்க, "இங்க பாரு தேவ், என்ன பேசுறானு" என்று அவர் ஆரம்பித்து, அவன் மார்பில் சாய்ந்து அழ, அவனோ கண்களை மூடி திறந்து விட்டு, அதிர்ந்தபடி கன்னத்தை பொத்திக் கொண்டே நின்ற பத்மாவைப் பார்த்தவன், "நீ மட்டும் வாயை மூடிட்டு ஓரமா இங்க நிற்கலைன்னா, நான் மனுஷனா இருக்க மாட்டேன்..." என்றான் அவளை உறுத்து விழித்தபடி...
அவனை அடிப்பட்ட பார்வை பார்த்தாள்.
அவ்வளவு வார்த்தைகள் அவள் மீது அள்ளி தெளிக்கும் கணங்களில் அமைதியாக நின்றவன், இப்போது மட்டும் அவளை மிரட்டும் போது வலிக்கும் தானே...
அப்படியே, அடி மேல் அடி வைத்து பின்னால் சென்றவள் சுவரில் சாய்ந்து நின்று அவனை வெறித்துப் பார்க்க, அவனோ அவளை முறைத்து விட்டு, "அத்தை உட்காருங்க" என்று தனது மார்பில் சாய்ந்து அழுதவரை அங்கிருந்த இருக்கையில் அமர வைத்தவன், நிரூபனிடம், "கொஞ்சம் அமைதியா இருடா" என்று பற்களை கடித்துக் கொண்டே, அதட்ட, அவனும், "சரி மச்சான்" என்று சொல்லிக் கொண்டே மௌனமாகி விட்டான்...
அவனுக்கு தேவ் என்றால் ஒரு வித மரியாதை கலந்த பயம்...
அதனை தொடர்ந்து இறுதி கிரியைகள் நடந்தன...
"அவ பக்கத்துலயே வர கூடாது" என்று சொன்னார் ஜெயா...
அவள் வீட்டில், இருந்துக் கொண்டே, அவளையே தந்தையின் அருகே வரக் கூடாது என்று சொல்ல, மொத்தமாக நொறுங்கி விட்டாள்...
வாயை திறந்து உரிமையை கேட்க முடியாத நிலை...
கேட்டாலும் அவள் பக்கம் யாரும் நிற்க மாட்டார்கள்...
அவளுக்கென்று இருந்த உயிரும் இப்போது அவளை விட்டு பிரிந்து இருக்க, கண்களை மூடி திறந்து பெருமூச்சை விட்டுக் கொண்டவளோ, அழுகையுடன் தூர இருந்தே மூர்த்தியின் பிரேதத்தை பார்த்துக் கொண்டே இருந்தாள்.
இறுதி கிரியைகள் நடந்தன...
நிரூபன், கொள்ளி வைக்க ஆயத்தமானான்... எல்லா செலவுகளையும் தேவ் பார்த்துக் கொண்டான்...
அவள் அலுவலக ஊழியர்களும் வந்து பார்த்து விட்டுச் சென்று இருந்தார்கள்...
தாமதமாக தான் அவர்கள் வந்ததால் காலையில் நடந்த எதுவும் அவர்களுக்கும் தெரியவில்லை...
அலுவலக நண்பர்களை தவிர அவளுக்கு நெருக்கமானவர்கள் என்று யாருமே இல்லை.
அங்கே பத்மா ஒரு பார்வையாளர் மட்டுமே...
ஆதங்கம் இருந்தது...
வலி இருந்தது...
காட்டிக் கொள்ள முடியவில்லை...
இறுதி சடங்கும் முடிய, எல்லோரும் கலைந்துச் செல்ல ஆயத்தமானார்கள்...
இப்படியே எல்லோரும் கலைந்துச் சென்று இருக்க, தனியாக அந்த வீட்டில் எஞ்சியது என்னவோ பத்மா மட்டும் தான்...
மூர்த்தியின் படத்துக்கு மாலை போட்டவள், ஹாலிலேயே அவர் படத்தின் கீழ் படுத்து இருந்தாள்.
நாட்கள் இப்படியே நகர, அவளுக்கு தன்னை தானே மீட்டு எடுக்க வேண்டிய நிலை...
மனதை திடப்படுத்திக் கொண்டே, அலுவலகத்துக்குச் செல்ல ஆயத்தமானாள்...
மனம் சோர்வாக இருந்தது...
மூர்த்தியுடன் அவளுக்கு நல்ல உறவு நிலை தான்...
ஆனாலும் அவர் துரோகம் அவளுக்கு என்றுமே ஏமாற்றம் தான்...
அதனை பற்றி அவள் கேட்கவில்லை என்றாலும், மனதுக்குள் நினைத்து வருந்தி இருக்கின்றாள்...
அவர் செய்த தவறால் இன்று வலி அனுபவித்துக் கொண்டு இருப்பது அவள் மட்டுமே...
அன்று வேலைக்கு வந்து வீட்டுக்கு திரும்பியவள் விழிகள் மூர்த்தியின் புகைப்படத்தில் பட்டு மீள, ஒரு பெருமூச்சுடன் தான் குளிக்கச் சென்றாள்.
குளித்து விட்டும் வந்து விட்டாள்.
சாப்பிடவே முடியவில்லை...
சாப்பாட்டை எடுத்து வைத்துக் கொண்டே யோசித்தபடி அமர்ந்து இருந்தாள்.
அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை...
அவளுக்கென்று யாரும் இல்லை...
நினைக்க நினைக்க அழுகை வந்தது...
தனிமை என்றும் கொடுமை தானே...
அடக்கிக் கொண்டே அமர்ந்து இருந்தாள்.
அப்போது தான் அவள் வீட்டின் ஜன்னல் உடையும் சத்தம் கேட்டது...
சட்டென உணவு தட்டை மேசையிலேயே வைத்து விட்டு, கையை கழுவிக் கொண்டே ஓடிச் சென்றவள், ஜன்னலினால் எட்டிப் பார்த்தாள்.
வாசலில் நின்று இருந்தான் நிரூபன்...
குடித்து இருப்பான் போலும், நிதானத்தில் இல்லை.
அவன் நண்பர்களுடன் வந்து இருந்தான்...
"ஏன் டி, என் அப்பாவை கொன்னுட்டு, இப்படி இருக்கியே" என்று திட்டிக் கொண்டே, மீண்டும் கல்லை எறிய, சட்டென விலகிக் கொண்டாள்.
அடுத்த ஜன்னல் கண்ணாடியும் உடைந்தது.
அப்படியே சுவரில் சாய்ந்து நின்றாள்.
கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர்...
"உன் அம்மா எங்க குடியை கெடுத்த போல, நீ யார் குடியை கெடுக்க போற, கதவை திறடி" என்று சொல்லிக் கொண்டே, கேட்டில் வேகமாக தட்டினான்...
நெஞ்சை பிடித்துக் கொண்டாள்.
அவன் வாயில் அதனை தொடர்ந்து வந்த வார்த்தைகளை கேட்கவே முடியவில்லை.
அவள் தாயையும் அவளையும் எந்தளவு கீழ் தரமாக பேச முடியுமோ பேசினான்...
காதை இரு கைகளாலும் பொத்திக் கொண்டாள்.
அருகே இருந்தவர்கள் கூட ஜன்னலினூடு எட்டிப் பார்த்தார்கள் தவிர, நேரே வந்து தட்டிக் கேட்கவில்லை...
குடித்து இருந்தவர்களை பார்க்க அவர்களுக்கும் பயம்...
இதே சமயம் நிரூபனோ, "கதவை உடைங்கடா, அவளை இந்த ஊரை விட்டு அடிச்சு துரத்தணும்" என்று சொல்லிக் கொண்டே, கதவின் பூட்டை இழுத்துக் கொண்டே, கொண்டு வந்து இருந்த சுத்தியலை எடுத்து ஓங்கி அடித்து உடைத்த சமயம், அவனை அடிப்பது போல வேகமாக வந்து நின்றது, கருப்பு நிற ஆடி கார்.
"டேய் யாரு?" என்று காரை திரும்பிப் பார்த்துக் கொண்டே திட்ட ஆரம்பித்த நிரூபனோ எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டான்...
காரில் இருந்து இறங்கியது வேறு யாருமல்ல தேவ் தான்...
வேலை முடிந்து வீட்டுக்குச் செல்லும் போது அவன் மனம் இன்று அவள் வீட்டின் வழியாக செல்ல உந்திக் கொண்டே இருந்தது...
அது ஏன் என்று அவனுக்கும் தெரியவில்லை...
சில சமயம் நம் உணர்வுகள் நமக்கு எதையோ உணர்த்தும் அல்லவா? அப்படி தான் அவனுக்கும் உணர்த்தி இருக்க, அவன் கண்ணில் பட்டது என்னவோ அவள் வீட்டின் முன்னே நின்று கலாட்டா செய்துக் கொண்டு இருந்த நிரூபனும் அவன் நண்பர்களும் தான்.
தேவ் என்றால் நிரூபனுக்கு பயம் தான்...
காரில் இருந்து இறங்கியவனோ நிரூபனை பார்த்துக் கொண்டே அருகே வர, "மச்சான்" என்றான் அவன் பயந்த குரலில்...
"இங்க என்ன பண்ணுற?" என்று கேட்டுக் கொண்டே, அவன் கையில் இருந்த சுத்தியலைக் கண்களால் காட்ட, "இல்ல சும்மா" என்று ஆரம்பிக்க, "கிளம்புடா" என்றான்...
நிரூபனும் மாறி பேசாமல், "சரி மச்சான்" என்று சொல்லிக் கொண்டே நகர, எட்டி அவன் ஷேர்ட்டை பற்றி தன்னை நோக்கி இழுத்தவன், அவன் விழிகளை பார்த்துக் கொண்டே, "உன் அப்பா செத்து ஒரு மாசம் கூட முழுசா முடியல, குடிச்சிட்டு இருக்க..." என்று பற்களை கடித்துக் கொண்டே கேட்க, "மனசு சரி இல்ல" என்று சொன்னவன் அவன் நீல நிற உறுத்தும் விழிகளை பார்த்து தலையை தாழ்த்திக் கொள்ள, "கிளம்பு" என்று சொல்லி அவனை உதறி விட, அவனும், "வாங்கடா சீக்கிரம்" என்று நண்பர்களிடம் சொல்லிக் கொண்டே, அங்கிருந்து கிளம்பி இருக்க, தேவ்வோ, இதழ் குவித்து ஊதிக் கொண்டே, வீட்டைப் பார்த்தான்...
ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து இருந்தன...
கேட்டை திறந்துக் கொண்டே உள்ளேச் சென்றவன் அவள் வாசல் கதவில் தட்ட, சுவரில் சாய்ந்து நின்ற பத்மாவோ பதறி விட்டாள்.
வெளியே நடந்தது அவளுக்கு தெரியவில்லை...
நிரூபன் தான் வந்து இருக்கின்றான் என்று நினைத்துக் கொண்டே, கண்களை துடைத்துக் கொண்டவளோ, அப்படியே நின்று இருக்க, "பத்மா கதவை திற" என்று ஒரு சத்தம்...
குரல் வேறு மாதிரி இருந்தது...
தேவ் உடைய குரல் என்று தெரிந்தது...
இப்போது ஜன்னலினூடு வாசலை எட்டிப் பார்த்தாள்.
அங்கே நிரூபனையும் நண்பர்களையும் காணவில்லை...
கருப்பு நிற ஆடி கார் மட்டுமே நின்று இருந்தது...
அது தேவ் உடைய கார் என்று அவளும் அறிந்து இருக்க, இதழ் குவித்து பெருமூச்சொன்றை விட்டவள், 'இவன் மட்டும் என்ன பண்ணி கிழிச்சிட போறான். அவன் இண்டீசென்ட் ஆஹ் திட்டுனான், இவன் டீசென்ட் ஆஹ் திட்டுவான், அவ்ளோ தானே' என்று நினைத்துக் கொண்டே கதவை திறந்தாள்.
அழுதழுது கண்கள் வீங்கி இருக்க, அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே உள்ளே நுழைய, போக, "எதுவா இருந்தாலும் வெளிய நின்னு பேசுங்க" என்றாள் வெடுக்கென்று...
அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன், "வாடகைக்கு தானே இருக்க?" என்று கேட்க, ஆம் என்று தலையாட்டினாள்...
"சரி கிளம்பு" என்றான்...
அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது...
"எங்க?" என்றாள் பதட்டமாக...
"எங்க வீட்டுக்கு" என்றான்...
"எதுக்கு?" என்று அவள் கேட்க, "இப்போ என்ன நடந்திச்சுன்னு பார்த்த தானே... நான் இல்லாத நேரம் வந்திருந்தா என்ன பண்ணி இருப்ப? பக்கத்துல இருக்கிற எவனும் ஒரு வார்த்தை கேட்கல... என்ன தான் பக்கத்து வீட்டு காரங்களோ" என்று ஆதங்கமாக அவன் வார்த்தைகள் வர, அவளோ, "இல்ல நான் பார்த்துக்கிறேன்" என்றாள்.
அவன் வீட்டுக்குச் சென்று எப்படி அவள் இருக்க முடியும்? அவன் மீது அவளுக்கு ஒன்றும் நல்ல அபிப்பிராயம் இல்லை...
நிரூபன் அளவுக்கு மோசமானவன் இல்லை என்று தெரியும்...
ஆத்மன் விஷயத்தில் அதிருப்தி... அதே போல, அவளிடம் அவன் பேசிய சந்தர்ப்பங்களில் அவன் வார்த்தைகள் கத்தி போல தானே அவளை நோக்கி வந்தன...
அதனாலேயே அவனுடன் செல்ல அவளுக்கு இஷ்டமில்லை...
"என்ன பார்த்துக்க போற?" என்று கேட்டான்...
"நான் என்ன பார்த்துப்பேன்" என்றாள்.
"பார்த்துகிற லட்சணத்தை பார்த்தேனே" என்றான்...
பதில் சொல்ல தெரியவில்லை...
"இல்ல எனக்கு?" என்று இழுக்க, "உள்ளே வந்து, உன்னை ரேப் பண்ணி இருந்தா என்ன பண்ணி இருப்ப? குடிச்சு இருந்தானுங்க, எவனுக்கும் நிதானம் இல்ல" என்றான்...
சற்றே பதறி விட்டாள் தான்...
இதழ்களை கடித்து தனது அழுகையை அடக்க முயல, "வீட்டுக்கு வா" என்றான்...
"அதே ரேப்பை நீங்க பண்ணிட்டீங்கன்னா?" என்று கேட்டாள்.
அவன் முகம் இறுகியது...
"அதுக்குன்னு வந்து இருந்தேன்னா, இப்படி வெளிய நின்னு பேசிட்டு இருக்க மாட்டேன்... உள்ள வந்து வேலையை முடிச்சு இருப்பேன்... எவன் கேட்க போறான்?" என்றான்...
சரியான கேள்வி தான்...
அவளுக்கு அவனுடன் செல்ல இஷ்டம் இல்லை என்றாலும் அவன் கேட்ட கேள்விகளால் பயந்தும் விட்டாள்.
அவளுக்கென்று பற்றுக்கோல் இல்லாத நிலை... தேவ் மேல் நல்ல அபிப்பிராயம் இல்லை என்றாலும், அவனை தவிர அவளுக்கு நம்புவதற்கு யாரும் இல்லாத நிலை தான்.
ரத்னம் மேல் அவளுக்கு நம்பிக்கையும் நல்ல அபிப்பிராயமும் இருந்தது...
மூர்த்தியின் இறப்பு வீட்டில் கூட, அவர் மட்டும் தான், "மனச தளரவிடாதே" என்று சொல்லி விட்டுச் சென்றார்.
அவரை தவிர யாருமே அவளிடம் பேசவில்லை...
தேவ் மீது இல்லாத நம்பிக்கை, அவர் மீது அவளுக்கு இருந்தது.
சற்று நேரம் நிதானமாக யோசித்தவளுக்கு, தன்னுடைய பாதுகாப்பு மிக முக்கியமாக பட, "சரி வர்றேன்" என்றாள்.
"ரொம்ப புத்திசாலி நீ" என்றான்...
அவள் புரியாமல் பார்க்க, "குட் டிசிஷன் அட் ரைட் டைம்..." என்று சொல்லிக் கொண்டே, பாக்கெட்டில் கையை விட்டபடி வெளியே நின்று இருக்க, "இம்போர்ட்டன்ஸ் திங்க்ஸ் மட்டும் எடுத்துட்டு வர்றேன், அடுத்து என்ன பண்ணுறதுன்னு ஐடியா இல்லை..." என்று சொல்ல, "இப்போதைக்கு வீட்டுக்கு வா, அப்புறம் பார்த்துக்கலாம்" என்றான்.
அவளும் தேவையான உடைகளை மட்டும் எடுத்துக் கொண்டே வெளியே வர, அவனே அவளிடம் இருந்து பையை வாங்கிக் காரில் வைத்தவன், "கெட் இன்" என்று சொல்லிக் கொண்டே காரில் ஏற அவளும் ஏறிக் கொண்டாள்.
அவனும் காரை ஸ்டார்ட் செய்ய, "உங்க அத்தை என்ன சொல்வாங்க?" என்று கேட்டாள்.
"நான் பார்த்துக்கிறேன்" என்று மட்டும் அவன் சொல்லி இருக்க, அவர்கள் வண்டி தேவ் உடைய வீட்டை நோக்கி கிளம்பி இருந்தது.
இருவரும் பேசிக் கொண்டது குறைவு தான்...
சற்று நேரத்தில் அவர்கள் வீட்டினை கார் அடைந்து இருக்க, உள்ளே இருந்தபடி பிரம்மாண்ட வீட்டைப் பார்த்தாள்.
"ரொம்ப பெரிய வீடு" என்றாள்.
"நானும் அப்பாவும் தான் இருக்கோம்" என்று சொல்ல, "அம்மா?" என்று கேட்டாள்.
"சின்ன வயசுல இறந்துட்டாங்க" என்று சொல்ல, "என்னோட அம்மாவும்" என்று அவள் சொன்னதுமே, அவளை திரும்பி உறுத்து விழித்தான்...
அந்த பார்வையின் அர்த்தம் அவளுக்கு புரிய, எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டே, தலையை தாழ்த்திக் கொண்டவள், "அவங்க பண்ணுன தப்புக்கு நான் என்ன பண்ணட்டும்?" என்று கேட்டாள்.
சட்டென இறுகி இருந்த அவன் விழிகள் சாதாரணமாக மாற, "தட் மேக் சென்ஸ்" என்று சொல்லிக் கொண்டே இறங்கிக் கொண்டவன், அவள் உடைகளை எடுத்துக் கொண்டே, வீட்டினுள் நுழைய, ஹாலில் இருந்து டி வி பார்த்துக் கொண்டு இருந்த ரத்னமோ, உடைப்பெட்டியுடன் வந்தவனை புருவம் சுருக்கிப் பார்க்க, அவனோ தலையை மட்டும் திருப்பி, பின்னால் வந்தவளைப் பார்த்தான்...
ரத்னமோ அதிர்ந்து போய் எழுந்து நின்றவர், "என்னப்பா இது?" என்று கேட்க, "நிரூபன் குடிச்சிட்டு போய் ஃப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து அவ வீட்டு முன்னாடி நின்னு பிரச்சனை பண்ணுறான்... சோ அழைச்சிட்டு வந்துட்டேன்" என்று சொல்ல, பத்மாவைப் பார்த்தவரோ, "ஓஹ், ஓகே, உள்ளே வாம்மா" என்றார்.
அவளுக்கு ஆச்சரியம்...
தேவ் சொன்ன ஒரு வார்த்தைக்கு மேல் அவர் எதுவும் கேட்கவில்லை...
அவன் மீது எந்தளவு நம்பிக்கை என்று அவளுக்கு புரிந்தது...
"கொஞ்ச நாளுல போயிடுவேன்" என்றாள் அவள் ரத்னத்தைப் பார்த்துக் கொண்டே...
"அதெல்லாம் அவசியமே இல்லை... கல்யாணம் முடிஞ்சு புருஷன் வீட்டுக்கு போறதுன்னா ஓகே, அது வரைக்கும் இங்கயே நீ இருந்துக்கலாம்... எனக்கு நீ எப்படியும் மருமகள் முறை தானே" என்று சொல்ல, அவள் மெலிதாக சிரித்துக் கொள்ள, அவரும் புன்னகைத்துக் கொண்டே, "அன்னைக்கே, நீ தனியா இருந்து என்ன பண்ணுவன்னு யோசிச்சேன்... வீட்டுக்கு கூப்பிட தேவ் விரும்ப மாட்டான்னு தான் உன்னை கூப்பிடல, அவனே அழைச்சு வந்து இருக்கான்..." என்று சொன்னவரோ, "குளிச்சிட்டு சாப்பிட வாப்பா" என்று சொல்ல, அவனும், உடைகளை, அவர்கள் வீட்டில் இருக்கும் அறைக்குள் கொண்டு வைத்தவன், "இந்த ரூமை யூஸ் பண்ணிக்கோ" என்று சொல்லி விட்டு பத்மாவை பார்க்காமல் தனது அறைக்குள் செல்ல, அவளும் பெருமூச்சுடன் அந்த அறைக்குள் நுழைய போனாள்...
"சாப்பிட்டியாம்மா?" என்று கேட்டார் ரத்னம்.
"இல்ல சார்" என்று சொல்ல, "மாமான்னு கூப்பிடு" என்றார்.
குரலை செருமிக் கொண்டே, "இல்ல மாமா" என்றாள்.