அத்தியாயம் 2
மிதுனோ " நான் ஜெயிக்கிறது ரெண்டாவது விஷயம்மா... எவ்ளோ தைரியம் இருந்தா நதி பத்தி இப்படி நியூஸ் வர வச்சு இருப்பான்.. அவ எவ்ளோ பீல் பண்ணுவா தெரியுமா?" என்று கேட்க மதுபாலாவோ "இவன் அரசியல் ல தேற மாட்டான் போல.. லவ் லவ் ன்னு என்ன பாடு படுறான் ஷப்பா ..இவன வச்சு எப்படி இந்த கட்சியை காப்பாத்த போறேனோ தெரில" என்று மனதுக்குள் சலித்தவள் "சரி விடு. அவ அவ்ளோ வீக் ஆன பொண்ணு இல்ல, கண்டிப்பா சமாளிச்சுப்பா" என்று சொன்னாள்.
அதே சமயம் தந்தையிடம் தருண் கேட்க போன நேரம் அங்கு ஒரு கலவரமே உருவாக ஆரம்பித்து இருந்தது. சத்தம் கேட்டு அறைக்குள் இருந்த ஆதித் வெளியே ஓடி வர " என் அடுத்த பையனையும் பறி கொடுக்க நான் தயாரா இல்ல" என்று தருணின் தாய் அழுது கொண்டு இருக்க, தனராஜ் யோசனையுடன் அங்கு அமர்ந்து இருந்தார். அவருக்கும் கட்சி சார்பில் ஒருவனை நிற்க வைக்க வேண்டும்.. அவர் கட்சியில் நிறைய பேர் இருந்தாலும் மிதுனை எதிர்த்து நின்று ஜெயிக்கும் அளவுக்கு திறமை இருந்தவன் வருண் மட்டுமே. அவன் இறப்புக்கு பிறகு தருண் ஓரளவு திறமை உடையவனாக இருந்தாலும் பெற்ற மகனை இழந்த தாயோ அடுத்த மகனையும் பணயம் வைக்கும் நிலையில் இல்லை. உடனே தருண் "அம்மா, எனக்கு ஒண்ணும் ஆகாது,. நம்ம ஆதித் எல்லாமே பார்த்துப்பான்'" என்று சொல்ல அவரோ ஆதங்கத்தில் "அப்படின்னா உன் பிரெண்டையே நிற்க சொல்லு, உன்னை நான் நிற்க விடமாட்டேன்.. அப்படி நின்னா இந்த வீட்டுல அடுத்த சாவு என்னோடது தான்" என்று சொல்ல தனராஜ் கூட நடுங்கி விட்டார்.
நிலைமை விபரீதமாக போவதை உணர்ந்த ஆதித்தோ "இங்க பாருங்கம்மா, தருணை ஜெயிக்க வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு...நீங்க சொல்ற போல நான் நிற்கிறதுல எனக்கு ஆட்சேபனை இல்ல, ஆனா இந்த ஊருக்கு நான் புதுசு, கட்சில பல தொண்டர்கள் இருக்காங்க... நான் இடைல வந்து சொருகிக்கிறது சரியான்னு தெரில... ஆனா தருண் ஜெயிக்க நான் என்னால முடிஞ்ச எல்லாமே பண்ணுவேன்.. அவன் மேல குண்டூசி குத்தணும்னா கூட என்னை தாண்டி தான் போகணும்." என்று சொல்ல தனராஜோ "நல்லா தான் பேசுற தம்பி,, ஆனா உனக்கு அந்த மதுபாலா பத்தி தெரில, அவ ஜெயிக்கணும்னா எந்த எல்லைக்கும் போவா.. எந்த பின்புலமும் இல்லாம கொஞ்ச நாளிலேயே மினிஸ்டர் ஆகி இருக்கான்னா அவளை பத்தி யோசிச்சு பாரு" என்று சொல்ல ஆதித்தோ " எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் ஒரு வீக்னஸ் கண்டிப்பா இருக்கும் அங்கிள்,, அத கண்டு பிடிச்சு அடிச்சா அது மரண அடியா இருக்கும்.. "என்றான். அவனை மென் சிரிப்புடன் பார்த்த தனராஜ் "உன் திறமை இன்னைக்கு நியூஸ் பார்த்ததுமே புரிஞ்சிடுச்சு, ஆனா உன்னால ஒரு கட்டத்துல அவள எதிர்க்க முடியாம போய்டலாம்" என்று மறை முகமாக சொன்னார் அவனது பிறப்பின் ரகசியம் அறிந்தவர். அவனோ "எந்த சந்தர்ப்பத்திலயும் நான் மாற மாட்டேன்.. இவனை மேயர் ஆக்காம ஓய மாட்டேன்" என்று சொல்ல சற்று யோசித்த தன்ராஜும் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர் அல்லவா.
பெருமூச்சுடன் "சரிப்பா, நம்ம தருண் நிற்க வேணாம்.. நீ நில்லு, அவளை எதிர்த்து காயை நகரத்து.. உனக்கு எல்லா உதவியும் நானே பண்ணுறேன்.. நம்ம பசங்க கூட இருக்காங்க" என்று சொன்னவர் உள்ளமோ "என் பையனை கொன்னை உன்ன உன் பையனை வச்சே பழி வாங்குறேன் பாருடி" ன்று சவால் விட்டுக் கொண்டது.
தருணோ "சரின்னு சொல்லுடா, என்னை விட நீ தான் இதுக்கு பொருத்தமா இருப்ப, நிஜமா இந்த அரசியல் எல்லாம் எனக்கு இஷ்டம் இல்ல,," என்று சொல்ல சற்றும் யோசிக்காமல் சரி என்று சொன்ன ஆதித் தந்தையிடம் விஷயத்தை சொல்ல கரிகாலனுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
இந்த விஷயம் மாதவிக்கு தெரிந்தால் தன்னை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவாள் என்று பயந்த கரிகாலன். "இத உன் அம்மா கிட்ட சொல்லாதேடா, நான் அப்புறம் இங்க இருக்க முடியாது" என்று சொல்ல அவனோ முத்துப் பற்கள் தெரிய சிரித்தவன் " சரிப்பா" என்று சொன்னான். உடனே கரிகாலன் " அந்த மதுபாலா கிட்ட கொஞ்சம் கவனமா இரு" என்று சொல்ல அவனோ "நானும் பார்க்கிறேன் ஏதோ பெரிய பூதம் போல மதுபாலா மதுபாலான்னு எல்லாரும் புலம்புறீங்க,, அவ்ளோ பெரிய அப்பட்டாக்கரா அவ? நேர்ல பார்க்க தான் வேணும்" என்று சொன்னான். உடனே கரிகாலன் "நீ அவளை பார்க்கிற நாள் உனக்கு சாதாரணமா இருக்கும். ஆனா அவளுக்கு தூக்கம் போய்டும்" என்று சொல்ல அவனோ " ஹ்ம்ம் பார்க்கலாம் பார்க்கலாம்" என்று சொல்லி விட்டு வைத்து விட்டான்.
இப்படியாக மும்முரமாக எலெக்ஷன் வேலை நடக்கும் நேரம், மேயர் பதவிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்யும் நாளும் வந்து சேர்ந்தது. அதுவரை ஆதித் போட்டி இடுவது ரகசியமா இருக்க, மதுபாலாவுக்கு தருண் போட்டி இட போவதாகவே செய்தி வந்து சேர்ந்தது. அவளோ மிதுனிடம் "அவன் அண்ணா அளவுக்கு அவனோட திறமை இல்ல,, சோ ஈஸியா அவனை மண்ணை கவ்வ வைக்கலாம்" என்று சொன்னவள் மகனுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய புறப்பட்டாள். அதே சமயம், அதே நல்ல நாளில் ஆதித்தும் தன்ராஜுடனும் தருணுடனும் கட்சி தொண்டர்களுடனும் புறப்பட்டு இருக்க, முதலில் வந்து சேர்ந்த மதுபாலா மிதுனுடன் வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு அங்கிருந்த பத்திரிகையாளர்களிடம் " எங்கே நாங்க தேர்தலில் ஜெயித்து விடுவோம் என்ற பயத்தில் தான் எதிர்க்கட்சி காரர்கள் என்னோட பி ஏ நதீகா மீது அனாவசிய குற்ற சாட்டுகளை சுமத்தி அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறார்கள்" என்று தன்னோட அரசியல் பேச்சை பேச ஆரம்பித்தவள் பேசி முடிந்து விட்டு தனது ஜீப்பை நோக்கி சென்ற சமயம் வந்து நின்றது தருணின் ஜீப்.
முதலில் இறங்கிய தருண் முன்னால் செல்ல, முக்கியமான போன் பேசிக் கொண்டு இருந்த ஆதித்தோ ஜீப்பில் இருந்து தாமாதமாகவே இறங்கினான். தருணின் அருகே அவன் தந்தை தனராஜ் செல்ல, அவர் இதழ்களோ மதுபாலாவை பார்த்து கேலியாக வளைந்து கொண்டது.
உடனே மதுபாலா "பையன் செத்தும் இவன் திமிர் இன்னும் குறையல பாரேன்" என்று மிதுனிடம் முணு முணுக்க அவனோ "அடுத்தவனையும் போட்டா தான் இந்த பெருசு அடங்கும்" என்று சொல்ல அவனை முறைத்த மதுபாலா "கொஞ்சம் சும்மா இரு, நான் பார்த்துகிறேன்" என்று சொன்னாள். தனராஜ் நேரே மதுபாலா அருகே வந்தவர் பத்திரிகையாளர்களுக்காக சிரித்தபடி வணக்கம் தெரிவித்தாலும் அடக்கப்பட்ட கோபத்துடன் "வாழ்க்கையில எப்போவுமே ஜெயிக்க முடியாது மதுபாலா, உன் அரசியலை ஆட்டம் காண வைக்க ஒருவன் வந்து இருக்கான்," என்று சொல்ல, அவர் அருகே இருந்த தருணை பார்த்த மதுபாலா பத்திரிகை காரர்களுக்காக புன்னகையுடன் வணக்கம் செலுத்தினாலும் " யாரு உன் பையன் என்ன ஆட்டம் காண வைக்க போறானா? இருந்தாலும் உனக்கு கற்பனை ரொம்ப அதிகம் தான்.. இவன் உயிராவது மிஞ்சுதான்னு பாரு.. உன் பையனாலா என்னோட நுனி விரலை கூட அசைக்க முடியாது " என்று சொல்ல அவரோ இதழ்களை பிதுக்கியபடி "ஓஹ் என் பையனால முடியாது.. ஆனா உன் பையனால முடியும்ல " என்று சொல்ல மதுபாலாவோ மிதுனை திரும்பி பார்க்க அவனோ இதை எல்லாம் கவனிக்காமல் சற்று தள்ளி இருந்த பெண்ணை பார்த்துக் கொண்டு இருந்தான். உடனே "ஹா ஹா " என்று சிரித்தவர் மதுபாலாவிடம் "அங்க இல்ல இங்க பாரு" என்றபடி சற்று திரும்பி பார்க்க ஆதித்தும் கட்சி உறுப்பினர்களை ஊடறுத்து முன்னால் வர நேரம் சரியாக இருந்தது.
அவனை கண்டதுமே மதுபாலாவின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்து கொள்ள ஒரே காரணம் அவன் கரிகாலனின் அச்சு அசலாக அல்லவா இருந்தான். அவனோ "அங்கிள் இங்க நின்னு யார் கிட்ட பேசிட்டு இருக்கீங்க? உள்ள போகலையா?' என்று கேட்க அவரோ "இது தான்பா, மினிஸ்டர் மதுபாலா" என்று அறிமுகப்படுத்தினார். அவனும் அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன் "ஓஹ் இது தான் அந்த பஜாரி பொம்பிளையா?அது சரி என்ன ஏன் இப்படி விறைச்சு விறைச்சு பார்க்கிறா... " என்று யோசித்தபடி "வணக்கம் மேடம்" என்று கையை கூப்பினான்.
மதுபாலாவின் கைகள் அதே அதிர்ச்சியுடன் எழுந்து வணங்கி கொள்ள, தனராஜ் உடனே அங்கிருந்த பத்திரிகையாளர்களிடம் "இது தான் எங்க கட்சில மேயருக்கு நிற்க போற பையன்.. பெயர் ஆதித் கரிகாலன்.." என்று சொன்னவர் கரிகாலனில் அழுத்தத்தை கொடுக்க அவளோ எச்சிலை விழுங்கி கொண்டாள்.
ஆதித்தோ "எதுக்கு அங்கிள் டைம் வெஸ்ட் பண்ணுறீங்க " என்று கேட்க அவரும் " அதானேப்பா வா" என்றபடி உள்ளே செல்ல மிதுனோ "அம்மா இவனை போடணும்,, இவன் தானே நதீகாவை பைத்தியம்னு சொல்லி பேப்பருக்கு நியூஸ் கொடுத்தவன் " என்று சொல்ல அவனை திரும்பி அனல் தெறிக்க பார்த்த மதுபாலா " கொஞ்சம் சும்மா இரு மிதுன்" என்று அதட்டிவிட்டு முன்னே சென்றாலும் மனமோ நடந்த நிகழ்வுலேயே தங்கி இருந்தது.
கரிகாலன் சொன்ன போல அவள் தூக்கம் அன்று தொலைந்து தான் போனது. இரு மகன்களும் எதிர் எதிர் கட்சியில் போட்டி இடுகிறார்கள் அல்லவா? அதற்கும் மேல் கரிகாலன் உருவிலேயே அவள் மகன் இருக்க, அந்த முகத்தை நினைக்கும் போதெல்லாம் அவள் கைகள் அவளது போலி கால்களை வருடிக் கொண்டன.
என்ன உணர்வென்று அவளுக்கும் தெரியவில்லை.. சொந்த உதிரமே எதிர்த்து நிற்கும் போது வரும் நடுக்கம் அது.. ஆதித் கரிகாலன் பையனாக மட்டுமே இருந்தால் அவள் அதனை சட்டை செய்து இருக்க மாட்டாள். அவன் உடம்பில் ஓடுவது தனது உதிரமும் என்று அறிந்தவள் மனமோ தன்னை போல அவன் தந்திரசாலியாக இருப்பானோ என்று தெளிவாக கணித்து இருந்தது நதீகாவின் சம்பவத்தை வைத்து.. இப்போது அவளுக்கு புரிந்தது இந்த அரசியல் ஞானம் இந்த சின்ன வயசில் அவனுக்கு எப்படி ஊடுகடத்தப்பட்டது என்று..
சூழ்ச்சி தெரிந்த சகுனியினை இலகுவில் வென்று விடலாம். ஆனால் அதே சூழ்ச்சி தெரிந்த கிருஷ்ணை வெல்வது அவ்வளவு இலகுவான காரியம் இல்லை என்று அவள் அறிவாள். சுருங்க சொல்ல போனால் மதுபாலா அதர்மம் பக்கம் நிற்கும் சூழ்ச்சி தெரிந்த சகுனி என்றால் ஆதித் தர்மம் பக்கம் நிற்கும் சூழ்ச்சி அறிந்த கிருஷ்ணன் அவ்வளவே..
வேட்புமனு தாக்கல் செய்ததில் இருந்து இரு நாட்கள் அவள் கொஞ்சம் தடுமாறி தூக்கம் தொலைந்து போனது என்னவோ உண்மை தான். அவளுக்கு அந்த மகன் பாசம் எல்லாம் இடண்டாம் பட்சம் தான்.. அவன் தன்னை தோற்க வைத்து விடுவானோ என்ற பயம் மட்டுமே ஓங்கி இருந்தது.
ஆதித் யாருமே அறியாத வெளியூர் காரனாக இருந்தாலும் அவன் முகமும் அவன் அப்பாவின் சேவையுமே போதுமானதாக இருந்தது அவன் இந்த தேர்தலில் நின்று ஜெயிப்பதற்கு.. அவனும் கரிகாலனை வைத்தே அரசியல் பேச ஆரம்பிக்க ஊடகங்கள் சும்மா இருக்குமா என்ன? அடுத்தடுத்தே அவன் மதுபாலாவின் மகன் என்ற உண்மையை தேடி எடுத்து வெளியிட்டு இருந்தன. இது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான அதிர்ச்சியாக இருந்தது.
அடுத்த நாள் முதலில் பேப்பரை பிரித்த மாதவிக்கோ கண்கள் கரித்துக் கொண்டு வர "கண்ணா" என்று அழைத்தவள் அப்படியே மயங்கி சரிந்தாள்.. அவளை நோக்கி ஓடி வந்த கரிகாலனும் அவளை தூக்கி நீரை தெளித்து எழுப்பா "என் பையன் என்னை விட்டு போய்டுவானா? இது தான் அவனை அங்கு அனுப்ப வேணாம்னு சொன்னேன்" என்று அழ ஆரம்பிக்க அவளை அணைத்துக் கொண்ட கரிகாலனோ "அப்படிலாம் நடக்காது. நீ முதலில ஆதித் கிட்ட பேசு" என்று போனை எடுத்து கொடுத்தான். மாதேஷ் வேறு மொழி மட்டுமே படித்தவன் ஆதலால் தமிழ் பேச மட்டுமே தெரிந்து இருந்ததாலும் அவனுக்கு இந்த செய்தி காதில் எட்டாதது அவர்களுக்கு நன்மையாகி போனது.
மாதவி அழைத்ததும் மறு முனையில் இருந்த ஆதித் "என்னம்மா?' என்று கேட்க அவளோ அவன் நிலையான குரலை கேட்டு பெருமூச்சுடன் "என்னப்பா பண்ணுற? எலெக்ஷன் ல நிற்க போறேன்னு நீ ஏன் சொல்லல?" என்று கேட்க அவனோ "அத விடுங்க, நீங்க எப்படி இருக்கீங்க? அப்பா எப்படி இருக்கிறார்? மாதேஷ் படிக்கானா ?" என்று அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டுவிட்டு வைத்து விட்டான். உடனே கரிகாலன் "பார்த்தியா அவனுக்கு இதெல்லாம் தெரில,, நீயா சும்மா பயப்படாதே" என்று சொன்னாலும் அவன் மனமோ "ஸ்மார்ட் ஆக்டிங் ஆதித்" என்றே சொல்லிக் கொண்டு இருந்தது.
ஆம் அவன் எதிர்பார்த்த போல அவன் கையில் இருந்தது அதே பத்திரிகை செய்தி தான். இந்த செய்தி அவனை விட அதிகமாக பாதித்தது என்னவோ மிதுனை தான். அவனும் பத்திரிகையுடன் தாய் முன்னே அமர்ந்து இருந்தவன் நடந்ததை கேட்க அவளும் கரிகாலன் மீது மொத்த பழியையும் போட்டு தன்னை உத்தமி போல காட்டி கதையை சொல்லி முடிக்க அவளை கலங்கிய கண்களுடன் ஏறிட்டு பார்த்த மிதுன் "சொந்த பையன் வந்துட்டான். அப்போ தத்தெடுத்த என்னை கவனிக்க மாட்டீங்க தானே" என்று கேட்க மதுபாலா கொஞ்சம் அதிர்ந்து தான் போனாள். உடனே "என்னப்பா பேசுற? என்ன நடந்தாலும் நீ தான் என் பையன்.. " என்று சொன்னாள். ஏன் என்றால் மிதுன் அவளது சொந்த பையன் என்று அவள் மட்டுமே அறிவாள். ஊராரை பொறுத்தவரை அவன் தத்தெடுத்த பையன் என்றே அனைவருக்கும் தெரியும் மிதுன் உட்பட. அவனும் "நிஜமா அம்மா" என்று கேட்க அவனை எழுந்து வந்து அணைத்துக் கொண்டவன் "நிஜம் தாண்டா " என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே "மேடம் உங்கள பார்க்க ஆதித் வந்து இருக்கார்" என்று அவள் கீழ் வேலை செய்பவன் சொன்னான்.
மதுபாலாவும் "வர சொல்லு" என்று சொல்ல உள்ளே வந்த ஆதித் மதுபாலாவை பார்த்து கலங்கிய கண்களுடன் "சுத்தி வளச்சு பேச விரும்பல, நிஜமாவே நீங்க தான் என் அம்மாவா?" என்று கேட்க அவளும் "ம்ம்" என்றபடி மிதுனிடம் சொன்ன அதே கதையை சொல்ல ஆதித்துக்கோ தூக்கி வாரிப் போட்டது.
அடுத்த கணமே அவளை அணைத்துக் கொண்டவன் "என் அப்பா இவ்ளோ கெட்டவர்ன்னு எனக்கு தெரியாதும்மா" என்று கண்ணீருடன் சொல்ல அவள் இதழ்களோ கேலியாக வளைய அவன் முதுகை வருடியவள் "அது தான் என் கிட்ட வந்துட்டியே, நான் பார்த்துக்கிறேன் " என்று சொன்னாள். அவர்களை மிதுன் சற்று சங்கடமாக பார்க்க அதைக் கண்ட ஆதித்தோ " நீயும் என் தம்பி தானே, வாடா " என்று மிதுனை அணைத்துக் கொண்டதுமே அவன் இதழ்கள் மெலிதாக விரிய "அண்ணா" என்று அழைத்தான்.
அப்போது தான் உள்ளே வந்த நதீகா அவர்கள் நெருக்கத்தை பார்த்து வெளியேற போக "வாம்மா" என்று அழைத்த மதுபாலா "இது தான் " என்று ஆரம்பிக்க, அவளை மேலிருந்து கீழ் பார்த்த ஆதித்தோ "நதீகா ரைட்? நல்லாவே தெரியுமே" என்று சொன்னான். அவளும் அவனை முறைத்து விட்டு " மேடம் இன்னைக்கு ஈவினிங் ஒரு மீட்டிங் இருக்கு" என்று சொல்ல அவனோ "நானும் வரலாமா?உங்க கூடவே இருக்க ரெடியா தான் வந்து இருக்கேன்.. " என்று கேட்க மதுபாலாவோ மனதுக்குள் "இந்த வெகுளி மிதுனை விட, இவன் இந்த கட்சியை எடுத்து நடத்த பொருத்தமா இருப்பான்,,இவனும் நம்ம ரத்தம் தானே " என்று நினைத்தவள் "தாராளமா வாப்பா" என்று சொன்னாள். அவனும் அவள் கூடவே நேரம் செலவிட ஆரம்பித்தவன் அவள் வீட்டிலேயே மொத்தமாக செட்டில் ஆகி இருந்தான்.
இதை எல்லாம் கேட்டு கொதித்து போன தனராஜ் தனது பணத்தை வைத்து ஆதித்தின் வேட்பு மனுவை நிராகரிக்க வைத்து விட்டு தருண் மூலம் அடுத்த வேட்பு மனுவை தாக்கல் செய்து இருந்தார்....
இதே சமயம் "அம்மாவும் மகனும் சேர்ந்து விட்டார்களா?" என்று செய்திகள் வெளியாகி இருந்தாலும் மாதவி மயங்கிய பிறகு செய்தி தாள்களை வீட்டுக்கு எடுக்காத கரிகாலன் அவன் மட்டுமே அறிந்த அந்த செய்தியை பார்த்து முகம் இறுகி போனான்.
மிதுனோ " நான் ஜெயிக்கிறது ரெண்டாவது விஷயம்மா... எவ்ளோ தைரியம் இருந்தா நதி பத்தி இப்படி நியூஸ் வர வச்சு இருப்பான்.. அவ எவ்ளோ பீல் பண்ணுவா தெரியுமா?" என்று கேட்க மதுபாலாவோ "இவன் அரசியல் ல தேற மாட்டான் போல.. லவ் லவ் ன்னு என்ன பாடு படுறான் ஷப்பா ..இவன வச்சு எப்படி இந்த கட்சியை காப்பாத்த போறேனோ தெரில" என்று மனதுக்குள் சலித்தவள் "சரி விடு. அவ அவ்ளோ வீக் ஆன பொண்ணு இல்ல, கண்டிப்பா சமாளிச்சுப்பா" என்று சொன்னாள்.
அதே சமயம் தந்தையிடம் தருண் கேட்க போன நேரம் அங்கு ஒரு கலவரமே உருவாக ஆரம்பித்து இருந்தது. சத்தம் கேட்டு அறைக்குள் இருந்த ஆதித் வெளியே ஓடி வர " என் அடுத்த பையனையும் பறி கொடுக்க நான் தயாரா இல்ல" என்று தருணின் தாய் அழுது கொண்டு இருக்க, தனராஜ் யோசனையுடன் அங்கு அமர்ந்து இருந்தார். அவருக்கும் கட்சி சார்பில் ஒருவனை நிற்க வைக்க வேண்டும்.. அவர் கட்சியில் நிறைய பேர் இருந்தாலும் மிதுனை எதிர்த்து நின்று ஜெயிக்கும் அளவுக்கு திறமை இருந்தவன் வருண் மட்டுமே. அவன் இறப்புக்கு பிறகு தருண் ஓரளவு திறமை உடையவனாக இருந்தாலும் பெற்ற மகனை இழந்த தாயோ அடுத்த மகனையும் பணயம் வைக்கும் நிலையில் இல்லை. உடனே தருண் "அம்மா, எனக்கு ஒண்ணும் ஆகாது,. நம்ம ஆதித் எல்லாமே பார்த்துப்பான்'" என்று சொல்ல அவரோ ஆதங்கத்தில் "அப்படின்னா உன் பிரெண்டையே நிற்க சொல்லு, உன்னை நான் நிற்க விடமாட்டேன்.. அப்படி நின்னா இந்த வீட்டுல அடுத்த சாவு என்னோடது தான்" என்று சொல்ல தனராஜ் கூட நடுங்கி விட்டார்.
நிலைமை விபரீதமாக போவதை உணர்ந்த ஆதித்தோ "இங்க பாருங்கம்மா, தருணை ஜெயிக்க வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு...நீங்க சொல்ற போல நான் நிற்கிறதுல எனக்கு ஆட்சேபனை இல்ல, ஆனா இந்த ஊருக்கு நான் புதுசு, கட்சில பல தொண்டர்கள் இருக்காங்க... நான் இடைல வந்து சொருகிக்கிறது சரியான்னு தெரில... ஆனா தருண் ஜெயிக்க நான் என்னால முடிஞ்ச எல்லாமே பண்ணுவேன்.. அவன் மேல குண்டூசி குத்தணும்னா கூட என்னை தாண்டி தான் போகணும்." என்று சொல்ல தனராஜோ "நல்லா தான் பேசுற தம்பி,, ஆனா உனக்கு அந்த மதுபாலா பத்தி தெரில, அவ ஜெயிக்கணும்னா எந்த எல்லைக்கும் போவா.. எந்த பின்புலமும் இல்லாம கொஞ்ச நாளிலேயே மினிஸ்டர் ஆகி இருக்கான்னா அவளை பத்தி யோசிச்சு பாரு" என்று சொல்ல ஆதித்தோ " எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் ஒரு வீக்னஸ் கண்டிப்பா இருக்கும் அங்கிள்,, அத கண்டு பிடிச்சு அடிச்சா அது மரண அடியா இருக்கும்.. "என்றான். அவனை மென் சிரிப்புடன் பார்த்த தனராஜ் "உன் திறமை இன்னைக்கு நியூஸ் பார்த்ததுமே புரிஞ்சிடுச்சு, ஆனா உன்னால ஒரு கட்டத்துல அவள எதிர்க்க முடியாம போய்டலாம்" என்று மறை முகமாக சொன்னார் அவனது பிறப்பின் ரகசியம் அறிந்தவர். அவனோ "எந்த சந்தர்ப்பத்திலயும் நான் மாற மாட்டேன்.. இவனை மேயர் ஆக்காம ஓய மாட்டேன்" என்று சொல்ல சற்று யோசித்த தன்ராஜும் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர் அல்லவா.
பெருமூச்சுடன் "சரிப்பா, நம்ம தருண் நிற்க வேணாம்.. நீ நில்லு, அவளை எதிர்த்து காயை நகரத்து.. உனக்கு எல்லா உதவியும் நானே பண்ணுறேன்.. நம்ம பசங்க கூட இருக்காங்க" என்று சொன்னவர் உள்ளமோ "என் பையனை கொன்னை உன்ன உன் பையனை வச்சே பழி வாங்குறேன் பாருடி" ன்று சவால் விட்டுக் கொண்டது.
தருணோ "சரின்னு சொல்லுடா, என்னை விட நீ தான் இதுக்கு பொருத்தமா இருப்ப, நிஜமா இந்த அரசியல் எல்லாம் எனக்கு இஷ்டம் இல்ல,," என்று சொல்ல சற்றும் யோசிக்காமல் சரி என்று சொன்ன ஆதித் தந்தையிடம் விஷயத்தை சொல்ல கரிகாலனுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
இந்த விஷயம் மாதவிக்கு தெரிந்தால் தன்னை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவாள் என்று பயந்த கரிகாலன். "இத உன் அம்மா கிட்ட சொல்லாதேடா, நான் அப்புறம் இங்க இருக்க முடியாது" என்று சொல்ல அவனோ முத்துப் பற்கள் தெரிய சிரித்தவன் " சரிப்பா" என்று சொன்னான். உடனே கரிகாலன் " அந்த மதுபாலா கிட்ட கொஞ்சம் கவனமா இரு" என்று சொல்ல அவனோ "நானும் பார்க்கிறேன் ஏதோ பெரிய பூதம் போல மதுபாலா மதுபாலான்னு எல்லாரும் புலம்புறீங்க,, அவ்ளோ பெரிய அப்பட்டாக்கரா அவ? நேர்ல பார்க்க தான் வேணும்" என்று சொன்னான். உடனே கரிகாலன் "நீ அவளை பார்க்கிற நாள் உனக்கு சாதாரணமா இருக்கும். ஆனா அவளுக்கு தூக்கம் போய்டும்" என்று சொல்ல அவனோ " ஹ்ம்ம் பார்க்கலாம் பார்க்கலாம்" என்று சொல்லி விட்டு வைத்து விட்டான்.
இப்படியாக மும்முரமாக எலெக்ஷன் வேலை நடக்கும் நேரம், மேயர் பதவிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்யும் நாளும் வந்து சேர்ந்தது. அதுவரை ஆதித் போட்டி இடுவது ரகசியமா இருக்க, மதுபாலாவுக்கு தருண் போட்டி இட போவதாகவே செய்தி வந்து சேர்ந்தது. அவளோ மிதுனிடம் "அவன் அண்ணா அளவுக்கு அவனோட திறமை இல்ல,, சோ ஈஸியா அவனை மண்ணை கவ்வ வைக்கலாம்" என்று சொன்னவள் மகனுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய புறப்பட்டாள். அதே சமயம், அதே நல்ல நாளில் ஆதித்தும் தன்ராஜுடனும் தருணுடனும் கட்சி தொண்டர்களுடனும் புறப்பட்டு இருக்க, முதலில் வந்து சேர்ந்த மதுபாலா மிதுனுடன் வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு அங்கிருந்த பத்திரிகையாளர்களிடம் " எங்கே நாங்க தேர்தலில் ஜெயித்து விடுவோம் என்ற பயத்தில் தான் எதிர்க்கட்சி காரர்கள் என்னோட பி ஏ நதீகா மீது அனாவசிய குற்ற சாட்டுகளை சுமத்தி அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறார்கள்" என்று தன்னோட அரசியல் பேச்சை பேச ஆரம்பித்தவள் பேசி முடிந்து விட்டு தனது ஜீப்பை நோக்கி சென்ற சமயம் வந்து நின்றது தருணின் ஜீப்.
முதலில் இறங்கிய தருண் முன்னால் செல்ல, முக்கியமான போன் பேசிக் கொண்டு இருந்த ஆதித்தோ ஜீப்பில் இருந்து தாமாதமாகவே இறங்கினான். தருணின் அருகே அவன் தந்தை தனராஜ் செல்ல, அவர் இதழ்களோ மதுபாலாவை பார்த்து கேலியாக வளைந்து கொண்டது.
உடனே மதுபாலா "பையன் செத்தும் இவன் திமிர் இன்னும் குறையல பாரேன்" என்று மிதுனிடம் முணு முணுக்க அவனோ "அடுத்தவனையும் போட்டா தான் இந்த பெருசு அடங்கும்" என்று சொல்ல அவனை முறைத்த மதுபாலா "கொஞ்சம் சும்மா இரு, நான் பார்த்துகிறேன்" என்று சொன்னாள். தனராஜ் நேரே மதுபாலா அருகே வந்தவர் பத்திரிகையாளர்களுக்காக சிரித்தபடி வணக்கம் தெரிவித்தாலும் அடக்கப்பட்ட கோபத்துடன் "வாழ்க்கையில எப்போவுமே ஜெயிக்க முடியாது மதுபாலா, உன் அரசியலை ஆட்டம் காண வைக்க ஒருவன் வந்து இருக்கான்," என்று சொல்ல, அவர் அருகே இருந்த தருணை பார்த்த மதுபாலா பத்திரிகை காரர்களுக்காக புன்னகையுடன் வணக்கம் செலுத்தினாலும் " யாரு உன் பையன் என்ன ஆட்டம் காண வைக்க போறானா? இருந்தாலும் உனக்கு கற்பனை ரொம்ப அதிகம் தான்.. இவன் உயிராவது மிஞ்சுதான்னு பாரு.. உன் பையனாலா என்னோட நுனி விரலை கூட அசைக்க முடியாது " என்று சொல்ல அவரோ இதழ்களை பிதுக்கியபடி "ஓஹ் என் பையனால முடியாது.. ஆனா உன் பையனால முடியும்ல " என்று சொல்ல மதுபாலாவோ மிதுனை திரும்பி பார்க்க அவனோ இதை எல்லாம் கவனிக்காமல் சற்று தள்ளி இருந்த பெண்ணை பார்த்துக் கொண்டு இருந்தான். உடனே "ஹா ஹா " என்று சிரித்தவர் மதுபாலாவிடம் "அங்க இல்ல இங்க பாரு" என்றபடி சற்று திரும்பி பார்க்க ஆதித்தும் கட்சி உறுப்பினர்களை ஊடறுத்து முன்னால் வர நேரம் சரியாக இருந்தது.
அவனை கண்டதுமே மதுபாலாவின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்து கொள்ள ஒரே காரணம் அவன் கரிகாலனின் அச்சு அசலாக அல்லவா இருந்தான். அவனோ "அங்கிள் இங்க நின்னு யார் கிட்ட பேசிட்டு இருக்கீங்க? உள்ள போகலையா?' என்று கேட்க அவரோ "இது தான்பா, மினிஸ்டர் மதுபாலா" என்று அறிமுகப்படுத்தினார். அவனும் அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன் "ஓஹ் இது தான் அந்த பஜாரி பொம்பிளையா?அது சரி என்ன ஏன் இப்படி விறைச்சு விறைச்சு பார்க்கிறா... " என்று யோசித்தபடி "வணக்கம் மேடம்" என்று கையை கூப்பினான்.
மதுபாலாவின் கைகள் அதே அதிர்ச்சியுடன் எழுந்து வணங்கி கொள்ள, தனராஜ் உடனே அங்கிருந்த பத்திரிகையாளர்களிடம் "இது தான் எங்க கட்சில மேயருக்கு நிற்க போற பையன்.. பெயர் ஆதித் கரிகாலன்.." என்று சொன்னவர் கரிகாலனில் அழுத்தத்தை கொடுக்க அவளோ எச்சிலை விழுங்கி கொண்டாள்.
ஆதித்தோ "எதுக்கு அங்கிள் டைம் வெஸ்ட் பண்ணுறீங்க " என்று கேட்க அவரும் " அதானேப்பா வா" என்றபடி உள்ளே செல்ல மிதுனோ "அம்மா இவனை போடணும்,, இவன் தானே நதீகாவை பைத்தியம்னு சொல்லி பேப்பருக்கு நியூஸ் கொடுத்தவன் " என்று சொல்ல அவனை திரும்பி அனல் தெறிக்க பார்த்த மதுபாலா " கொஞ்சம் சும்மா இரு மிதுன்" என்று அதட்டிவிட்டு முன்னே சென்றாலும் மனமோ நடந்த நிகழ்வுலேயே தங்கி இருந்தது.
கரிகாலன் சொன்ன போல அவள் தூக்கம் அன்று தொலைந்து தான் போனது. இரு மகன்களும் எதிர் எதிர் கட்சியில் போட்டி இடுகிறார்கள் அல்லவா? அதற்கும் மேல் கரிகாலன் உருவிலேயே அவள் மகன் இருக்க, அந்த முகத்தை நினைக்கும் போதெல்லாம் அவள் கைகள் அவளது போலி கால்களை வருடிக் கொண்டன.
என்ன உணர்வென்று அவளுக்கும் தெரியவில்லை.. சொந்த உதிரமே எதிர்த்து நிற்கும் போது வரும் நடுக்கம் அது.. ஆதித் கரிகாலன் பையனாக மட்டுமே இருந்தால் அவள் அதனை சட்டை செய்து இருக்க மாட்டாள். அவன் உடம்பில் ஓடுவது தனது உதிரமும் என்று அறிந்தவள் மனமோ தன்னை போல அவன் தந்திரசாலியாக இருப்பானோ என்று தெளிவாக கணித்து இருந்தது நதீகாவின் சம்பவத்தை வைத்து.. இப்போது அவளுக்கு புரிந்தது இந்த அரசியல் ஞானம் இந்த சின்ன வயசில் அவனுக்கு எப்படி ஊடுகடத்தப்பட்டது என்று..
சூழ்ச்சி தெரிந்த சகுனியினை இலகுவில் வென்று விடலாம். ஆனால் அதே சூழ்ச்சி தெரிந்த கிருஷ்ணை வெல்வது அவ்வளவு இலகுவான காரியம் இல்லை என்று அவள் அறிவாள். சுருங்க சொல்ல போனால் மதுபாலா அதர்மம் பக்கம் நிற்கும் சூழ்ச்சி தெரிந்த சகுனி என்றால் ஆதித் தர்மம் பக்கம் நிற்கும் சூழ்ச்சி அறிந்த கிருஷ்ணன் அவ்வளவே..
வேட்புமனு தாக்கல் செய்ததில் இருந்து இரு நாட்கள் அவள் கொஞ்சம் தடுமாறி தூக்கம் தொலைந்து போனது என்னவோ உண்மை தான். அவளுக்கு அந்த மகன் பாசம் எல்லாம் இடண்டாம் பட்சம் தான்.. அவன் தன்னை தோற்க வைத்து விடுவானோ என்ற பயம் மட்டுமே ஓங்கி இருந்தது.
ஆதித் யாருமே அறியாத வெளியூர் காரனாக இருந்தாலும் அவன் முகமும் அவன் அப்பாவின் சேவையுமே போதுமானதாக இருந்தது அவன் இந்த தேர்தலில் நின்று ஜெயிப்பதற்கு.. அவனும் கரிகாலனை வைத்தே அரசியல் பேச ஆரம்பிக்க ஊடகங்கள் சும்மா இருக்குமா என்ன? அடுத்தடுத்தே அவன் மதுபாலாவின் மகன் என்ற உண்மையை தேடி எடுத்து வெளியிட்டு இருந்தன. இது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான அதிர்ச்சியாக இருந்தது.
அடுத்த நாள் முதலில் பேப்பரை பிரித்த மாதவிக்கோ கண்கள் கரித்துக் கொண்டு வர "கண்ணா" என்று அழைத்தவள் அப்படியே மயங்கி சரிந்தாள்.. அவளை நோக்கி ஓடி வந்த கரிகாலனும் அவளை தூக்கி நீரை தெளித்து எழுப்பா "என் பையன் என்னை விட்டு போய்டுவானா? இது தான் அவனை அங்கு அனுப்ப வேணாம்னு சொன்னேன்" என்று அழ ஆரம்பிக்க அவளை அணைத்துக் கொண்ட கரிகாலனோ "அப்படிலாம் நடக்காது. நீ முதலில ஆதித் கிட்ட பேசு" என்று போனை எடுத்து கொடுத்தான். மாதேஷ் வேறு மொழி மட்டுமே படித்தவன் ஆதலால் தமிழ் பேச மட்டுமே தெரிந்து இருந்ததாலும் அவனுக்கு இந்த செய்தி காதில் எட்டாதது அவர்களுக்கு நன்மையாகி போனது.
மாதவி அழைத்ததும் மறு முனையில் இருந்த ஆதித் "என்னம்மா?' என்று கேட்க அவளோ அவன் நிலையான குரலை கேட்டு பெருமூச்சுடன் "என்னப்பா பண்ணுற? எலெக்ஷன் ல நிற்க போறேன்னு நீ ஏன் சொல்லல?" என்று கேட்க அவனோ "அத விடுங்க, நீங்க எப்படி இருக்கீங்க? அப்பா எப்படி இருக்கிறார்? மாதேஷ் படிக்கானா ?" என்று அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டுவிட்டு வைத்து விட்டான். உடனே கரிகாலன் "பார்த்தியா அவனுக்கு இதெல்லாம் தெரில,, நீயா சும்மா பயப்படாதே" என்று சொன்னாலும் அவன் மனமோ "ஸ்மார்ட் ஆக்டிங் ஆதித்" என்றே சொல்லிக் கொண்டு இருந்தது.
ஆம் அவன் எதிர்பார்த்த போல அவன் கையில் இருந்தது அதே பத்திரிகை செய்தி தான். இந்த செய்தி அவனை விட அதிகமாக பாதித்தது என்னவோ மிதுனை தான். அவனும் பத்திரிகையுடன் தாய் முன்னே அமர்ந்து இருந்தவன் நடந்ததை கேட்க அவளும் கரிகாலன் மீது மொத்த பழியையும் போட்டு தன்னை உத்தமி போல காட்டி கதையை சொல்லி முடிக்க அவளை கலங்கிய கண்களுடன் ஏறிட்டு பார்த்த மிதுன் "சொந்த பையன் வந்துட்டான். அப்போ தத்தெடுத்த என்னை கவனிக்க மாட்டீங்க தானே" என்று கேட்க மதுபாலா கொஞ்சம் அதிர்ந்து தான் போனாள். உடனே "என்னப்பா பேசுற? என்ன நடந்தாலும் நீ தான் என் பையன்.. " என்று சொன்னாள். ஏன் என்றால் மிதுன் அவளது சொந்த பையன் என்று அவள் மட்டுமே அறிவாள். ஊராரை பொறுத்தவரை அவன் தத்தெடுத்த பையன் என்றே அனைவருக்கும் தெரியும் மிதுன் உட்பட. அவனும் "நிஜமா அம்மா" என்று கேட்க அவனை எழுந்து வந்து அணைத்துக் கொண்டவன் "நிஜம் தாண்டா " என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே "மேடம் உங்கள பார்க்க ஆதித் வந்து இருக்கார்" என்று அவள் கீழ் வேலை செய்பவன் சொன்னான்.
மதுபாலாவும் "வர சொல்லு" என்று சொல்ல உள்ளே வந்த ஆதித் மதுபாலாவை பார்த்து கலங்கிய கண்களுடன் "சுத்தி வளச்சு பேச விரும்பல, நிஜமாவே நீங்க தான் என் அம்மாவா?" என்று கேட்க அவளும் "ம்ம்" என்றபடி மிதுனிடம் சொன்ன அதே கதையை சொல்ல ஆதித்துக்கோ தூக்கி வாரிப் போட்டது.
அடுத்த கணமே அவளை அணைத்துக் கொண்டவன் "என் அப்பா இவ்ளோ கெட்டவர்ன்னு எனக்கு தெரியாதும்மா" என்று கண்ணீருடன் சொல்ல அவள் இதழ்களோ கேலியாக வளைய அவன் முதுகை வருடியவள் "அது தான் என் கிட்ட வந்துட்டியே, நான் பார்த்துக்கிறேன் " என்று சொன்னாள். அவர்களை மிதுன் சற்று சங்கடமாக பார்க்க அதைக் கண்ட ஆதித்தோ " நீயும் என் தம்பி தானே, வாடா " என்று மிதுனை அணைத்துக் கொண்டதுமே அவன் இதழ்கள் மெலிதாக விரிய "அண்ணா" என்று அழைத்தான்.
அப்போது தான் உள்ளே வந்த நதீகா அவர்கள் நெருக்கத்தை பார்த்து வெளியேற போக "வாம்மா" என்று அழைத்த மதுபாலா "இது தான் " என்று ஆரம்பிக்க, அவளை மேலிருந்து கீழ் பார்த்த ஆதித்தோ "நதீகா ரைட்? நல்லாவே தெரியுமே" என்று சொன்னான். அவளும் அவனை முறைத்து விட்டு " மேடம் இன்னைக்கு ஈவினிங் ஒரு மீட்டிங் இருக்கு" என்று சொல்ல அவனோ "நானும் வரலாமா?உங்க கூடவே இருக்க ரெடியா தான் வந்து இருக்கேன்.. " என்று கேட்க மதுபாலாவோ மனதுக்குள் "இந்த வெகுளி மிதுனை விட, இவன் இந்த கட்சியை எடுத்து நடத்த பொருத்தமா இருப்பான்,,இவனும் நம்ம ரத்தம் தானே " என்று நினைத்தவள் "தாராளமா வாப்பா" என்று சொன்னாள். அவனும் அவள் கூடவே நேரம் செலவிட ஆரம்பித்தவன் அவள் வீட்டிலேயே மொத்தமாக செட்டில் ஆகி இருந்தான்.
இதை எல்லாம் கேட்டு கொதித்து போன தனராஜ் தனது பணத்தை வைத்து ஆதித்தின் வேட்பு மனுவை நிராகரிக்க வைத்து விட்டு தருண் மூலம் அடுத்த வேட்பு மனுவை தாக்கல் செய்து இருந்தார்....
இதே சமயம் "அம்மாவும் மகனும் சேர்ந்து விட்டார்களா?" என்று செய்திகள் வெளியாகி இருந்தாலும் மாதவி மயங்கிய பிறகு செய்தி தாள்களை வீட்டுக்கு எடுக்காத கரிகாலன் அவன் மட்டுமே அறிந்த அந்த செய்தியை பார்த்து முகம் இறுகி போனான்.