அத்தியாயம் 15
முன்னால் நின்ற கயலின் காளி அவதாரத்தை பார்த்து இருவரும் அதிர்ந்து நின்றனர். கயலோ கௌதமை சுட்டெரிப்பது போல் பார்த்தவள் அவன் தாடையை பிடித்து கன்னத்தை தன் பக்கம் திருப்பி, "இது என்ன?" என்று கேட்டாள்.
"எது?" என்று புருவம் சுருக்கியவன் இடது கையால் கன்னத்தை தடவி கையை பார்க்க அதில் அப்பெண்மணியின் லிப்ஸ்டிக் இருந்தது. சாணக்கியனோ சமாளிக்கும் பொருட்டு, "இல்லம்மா..." என்று தொடங்க அவனை நோக்கி நிறுத்தும் படி கையை காட்டியவள், "அண்ணா நீங்க இதுல தலையிடாதீங்க" என்றாள்.சாணக்கியனும், 'புருஷன் பொண்டாட்டிக்குள்ள நாம எதுக்கு?' என்று நினைத்து ஒதுங்கி அங்கிருந்த சுவரில் சாய்ந்து கை கட்டி நின்று நடப்பதை வேடிக்கை பார்த்தான்.
'நம்மள ஒரு வழி பண்ணாம விடமாட்டா' என்று யோசித்த கௌதமுக்கு அவள் பொறாமை கலந்த கோபம் கூட சுகமாக இருந்தது.
ஆனால் தன் எண்ணத்தை மறைத்தவன் அவளை சீண்டும் பொருட்டு இறுகிய முகத்துடன் அவளை நோக்கி, "நான் என்ன பண்றது அந்த பொண்ணு கிஸ் பண்ணினதுக்கு? கொஞ்சம் ஹாண்ட்சம் ஆக இருந்தா இதெல்லாம் சகஜம் தான்" என்றான்.
அவன் பேச்சினால் அவன் மேல் இருக்கும் கோபம் இன்னும் தலைக்கு ஏற, "பொண்ணா ? அது கிழவி... அந்த கிழவி கிஸ் பண்ணுறா நீங்களும் கன்னத்தை காட்டிட்டு நிற்குறீங்க" என்று சினமாக உரைத்தபடி கையில் இருந்த டிஷ்யூ வால் அவன் கன்னத்தை துடைத்து விட்டாள். நெருங்கி நின்று மூச்சு காற்று பட துடைத்துக் கொண்டிருந்தவளை அப்படியே கட்டியணைத்து அவளிதழ்களுடன் இதழ் சேர்த்து முத்தமிட தோன்றிய எண்ணங்களுக்கு கடிவாளமிட்டவன் இறுகிய முகத்துடனேயே அவள் துடைத்துக் கொண்டிருந்த கையை பிடித்து நிறுத்தி, "போதும்" என்றான்.
கையை அவனிடமிருந்து உருவி எடுத்தவள், "நாங்க தொட்டா மட்டும் கோபம் பொத்துக்கிட்டு வருது...அந்த கிழவிக்கு மட்டும் கிஸ்" என்று அவள் முணுமுணுத்தது தெளிவாக அவன் காதில் விழுந்தது. அவனோ அவளை முறைத்து பார்த்து, "கிழவி கூட போட்டி போடும் அளவுக்கு இருக்கியே, உனக்கு உன் மேல கொஞ்சமும் கான்பிடென்ட் இல்லையா?" என்று வேணுமென்றே அவளை சீண்டினான்.
உடனே அவள் எகத்தாளமாக, "நான் எதுக்கு அவ கூட போட்டி போடணும்? அந்தளவுக்கு நீங்க ஒர்த் இல்ல" என்று அவன் கூறிய டையலாக்கையே திருப்பி அவனுக்கே கூறினாள்.
அவனோ புருவம் சுருக்கி பார்த்து, "அப்படி என்ன ஒர்த் இல்லாம போய் விட்டேன் ?" என்று ஆதங்கமாக கேட்க, ஓரளவு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவனை கூர்ந்து பார்த்தவள், "அழகான பொண்டாட்டியை பக்கத்துல வச்சுட்டே ஒண்ணும் செய்யாதவங்க... அந்த கிழவிக்கு என்ன செஞ்சிருவாங்க?" என்று கேட்க கை கட்டி இருந்த சாணக்கியன் கண்ணை விரித்து தனது வாயில் "ஆய்" என்றபடி கையை வைத்தான் கௌதமை இன்னும் சீண்டுவதற்காக.
இருவர் சீண்டலிலும் கோபம் தலைக்கேற "ஏய்" என்று உறுமியவன் அவ்வழியால் சென்றவர்கள் அவனை திரும்பி பார்க்க பெரு மூச்செடுத்து கோபத்தை கட்டுப்படுத்தி விட்டு இரு கைகளையும் தனது இடுப்பில் குற்றி, "இப்போ உனக்கு என்னடி வேணும்? போடி" என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன் வெகு நிதானமாக .
"இதுக்கு மட்டும் குறைச்சல் இல்ல" என்றவள் கையிலிருந்த பையை திறந்து அவனுக்காக கொண்டு வந்த விஷ்வாவின் ஒரு ஷர்ட்டை எடுத்தவள் அவனுக்கு அவளே அதை அணிவிக்க போக கோபத்துடன் ஷர்ட்டை பறித்தவன், "நானே போட்டுக்கிறேன் நீ போ" என்றான்.
அவளோ பரிதாபமாக சாணக்கியனை பார்க்க, தங்கையின் கண்ணிலிருந்த வலியை கண்டவன் மனமும் வலிக்க, "நீ போ கயல்" என்றான். கௌதமின் உதாசீனத்தால் கண்கள் கரிக்க அவள் அவ்விடத்தை விட்டுச் சென்றாள்.
அவள் அவனை தாண்டிச் செல்ல பெரு மூச்செடுத்தவன் சாணக்கியனை முறைத்து பார்த்தான். சென்றவளுக்கு அந்த பெண்மணியின் முத்தமே நினைவில் வந்தது.
அவமான பட்டாலும் பரவாயில்லை என்று திரும்பி விறு விறுவென திரும்பி வந்தவள் அவன் முன்னால் வந்து நின்றாள்.
"இந்த சொர்ணாக்கா இன்னும் போகலையா?" என்று சலித்தபடி கெளதம் அவளை பார்க்க அவளோ, "இன்னொரு தடவை இப்படி நடந்துச்சு கொன்னுருவேன்" என்று கை காட்டி மிரட்டியவள் விறு விறுவென அவனை தாண்டிச் சென்றாள். அவள் செல்வதை பின்னால் திரும்பி வெறித்து பார்த்தவன் சாணக்கியனை திரும்பி பார்க்க அவனோ அங்கிருந்த தூணில் சாய்ந்தபடி இருவரையும் உணர்ச்சி துடைத்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
இருவரையும் பார்த்து தலையை உலுக்கிய கௌதம் ஷர்ட்டை போட முயற்சித்து முடியாமல் போக சாணக்கியன் அவனை நோக்கி நிதானமாக வந்தவன் ஷர்ட்டை போட உதவி செய்தான்.
சாணக்கியன் பட்டன் போடும் போது அவனை முறைத்து பார்த்தபடி, "அவ தான் லூசு போல பேசுறானா நீயும் வாயில கை வச்சு ரசிச்சிட்டிருக்க" என்றவனை பார்த்து வாய் விட்டு சிரித்தவன், "அவளுக்கு இருக்கிற அதே டவுட் எனக்கும் இருக்குடா" என்றான். "டேய்... உன்ன கொல்லாம விட மாட்டேன்டா... அண்ணனும் தங்கச்சியும் சேர்ந்து கலாய்க்கிறீங்களா?" என்று திட்டியபடி அவன் வயிற்றில் குத்த வந்தவன் சுற்றி ஜன நடமாட்டம் இருப்பதால் தன்னை அடக்கிக் கொண்டான்.
சாணக்கியன் கௌதமுக்கு பட்டன் போட்டு முடித்ததும், "வா போவோம்" என்றபடி அவனை அழைத்துக் கொண்டு தனது ஜீப்பை நோக்கிச் சென்றான்.
ஜீப்பில் இருவரும் வெவ்வேறு சிந்தனையில் இருந்ததால் ஒருவருடன் ஒருவர் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. கௌதமை அவனின் இருப்பிடத்தில் இறக்கியவன், "லீவு போட்டு ஒரு ரெண்டு கிழமை ரெஸ்ட் எடு" என்றான். "ஏன் அப்போ தான் உங்களுக்கு வசதியா இருக்குமா?" என்று கண்ணடித்து கேட்டவன் மேலும், "நீங்க நினைக்கிறது எப்போதும் நடக்காது சார்" என்றபடி வீட்டுக்குள் சென்றான். அவனை வெறித்து பார்த்தபடி ட்ரைவரிடம் ஜீப்பை எடுக்க சொன்னான் சாணக்கியன்.
அவன் வண்டி வீட்டை அடைந்ததும் வீட்டுக்குள் புயலென வந்தவனை பார்த்த மகாலிங்கம் பயத்தில் உறைந்து போனார். நடந்ததை கேள்விப்பட்டவருக்கு வியர்த்து வழிய அவரை முறைத்தவாறே தனது அறைக்குள் சென்று அடைத்துக் கொண்டான் சாணக்கியன்.
இன்னும் இரு கிழமைகள் திருமணத்துக்கு என்ற நிலையில் சம்பிரதாயத்துக்காக பெண் பார்த்து நிச்சய தாம்பாளம் மாற்றும் பொருட்டு மகாலிங்கம் குடும்பம் விருத்தாச்சலம் வீட்டுக்குச் செல்ல முடிவெடுத்தனர். டெனிம் ஜீன்ஸ் உம் ஸ்லிம் பிட் இளம் நீல நிற செக் ஷர்ட்டையும் இன் பண்ணி கையில் ரோலெக்ஸ் வாட்ச் என ஸ்டைலான ஹேர் கட்டுடன் டிப் டாப்பாக ஆயத்தமாகி முதல் ஆளாகவே விஷ்வா ஹாலுக்குள் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தான்.
பச்சை நிற பட்டு புடவையுடன் நெற்றி வகிட்டில் குங்குமமும் வைத்து எந்த வித முக ஒப்பனையும் இல்லாமலே அழகியாக விஷ்வா இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தாள் கயல் விழி.
"அண்ணா இன்னைக்காச்சும் வேட்டி கட்டலாம் தானே?" என்று கேட்டபடி அவன் பக்கத்தில் இருக்க, "என் இடுப்புல வேட்டி நிக்காதுடி" என்றான் விஷ்வா, "கல்யாணத்துக்காச்சும் கட்டும் எண்ணம் இருக்கா?" என்று அவள் கேட்க, "அதுதான் யோசனையாக இருக்குடி" என்றான்.
வெண்ணிற குர்தாவும் கருப்பு ஜீன்ஸ் உம் என வந்த சாணக்கியன் அவ்விடத்தில் இருந்த தனி கதிரையில் அமர்ந்து தொலைக்காட்சி பார்க்க தொடங்க, "இப்போ எல்லாம் நாம யார் கண்ணுக்கும் தெரிய மாட்டோம் கயல்" என்றான் விஷ்வா அண்ணனை சீண்டும் பொருட்டு.
அவன் பேசியதில் அவனை திரும்பி பார்த்த சாணக்கியன், "நல்லாவே தெரியுது. ஏழு கழுதை வயசுல வேட்டி கட்ட தெரியாத உனக்கு என்னடா வெட்டி பேச்சு ?" என்று கேட்க , தமையனின் உரிமை பேச்சில் மனம் மகிழ்ந்தவன், "நீங்களே குர்தாவுக்கு மாறிட்டீங்க... நான் மட்டும் வேட்டி கட்டி வந்து அது கீழ விழுந்து நான் அவமான படுற காட்சியை கண் குளிர பார்க்க உங்க எல்லாருக்கும் ஆசையா ?" என்று நக்கலாக கேட்க அங்கிருந்த அனைவர்க்கும் சிரிப்பு வந்தது.
சிரித்த சாணக்கியனின் முகம் மகாலிங்கத்தை கண்டதும் இறுகி போக அவரை தவிர்க்கும் பொருட்டு முன்னால் சென்று வண்டியில் ஏறிக் கொண்டான்.
'நல்லா தானே இருந்தார் என்னாச்சு?' என்று யோசித்தபடி விஷ்வாவும் கயலும் பின்னால் சென்றனர். நிச்சய தட்டுக்களுடன் உறவினர்களும் வண்டியில் ஏற திருவிழாவிற்கு செல்லும் வாகனங்கள் போல தொடர்ச்சியாக வாகனங்கள் விருத்தாச்சலம் வீட்டை நோக்கி புறப்பட்டன.
அழகாக இயற்கை மலர் சரங்களால் வீடு அலங்காரம் பண்ணப்பட்டிருக்க வாசலில் நின்ற விருதாச்சலமும், லக்ஷ்மியும், வசுந்தராவும் அனைவரையும் வரவேற்றனர். சாணக்கியன் வேணும் என்றே வசுந்தராவை பார்த்து கை கூப்பி "வணக்கம்" என்றான். சாணக்கியனை முறைத்தபடி அவளும் பதிலுக்கு கை கூப்பினாள்.
நீல நிற பட்டு புடவையில் தலையை பின்னி பூ வைத்து மேடிட்ட வயிறும் வைர மூக்குத்தியும் என மகாலக்ஷ்மி போல இருந்தவளை அவன் ரசித்தவாறே உள்ளேச் சென்றான்.
உள்ளேச் சென்று அமர்ந்ததும் விருதாச்சலமும் மகாலிங்கமும் பேச தொடங்கினர். விஷ்வாவோ எப்போது மித்ராவை காட்டுவார்கள் என்று ஏங்கி வீட்டின் உள்ளே எட்டி எட்டி பார்த்தான். அதை கவனித்த கயல்விழியோ, "எதுக்கு இப்போ அவசரம்?" என்று கேட்க, "என்னடி பொண்ண காட்ட மாட்டாங்களா?" என்று ஏக்கமாக கேட்டான்.
அவனை அதிர்ந்து பார்த்தவள், "டேய் உனக்கே இது ஓவரா இல்லையாடா ? நீங்க ரெண்டு பெரும் பண்ணின வேலைக்கு இந்த சம்பிரதாயம் தான் ஒரு குறை... மானத்தை வாங்காம சும்மா இருடா...ரொம்ப வழியிற...பெரிய அண்ணனை பாரு எவ்வளவு கெத்தா இருக்கார் தெரியுமா?" என்றதும் விஷ்வா கயலுக்கு பின்னால் இருந்த சாணக்கியனை எட்டி பார்க்க அவனோ வாசலில் நின்ற வசுந்தராவை தனது இதழ்களை வருடியவாறே விழுங்குவது போல் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆச்சரியத்துடன் கண்ணை விரித்தவன் பார்வையை கயல் பக்கம் திருப்பி, "நீயே திரும்பி பாரு" என்றபடி அவள் நாடியை பிடித்து திருப்பி விட்டான். சாணக்கியனின் பார்வையில் அதிர்ந்தவள் விஷ்வாவை பார்த்து, "என்னடா இவர்? இதுக்கு நீயே பரவாயில்ல போலயே" என்றாள்.
"என்ன பண்றது குடும்பமே கொஞ்சம் அப்படி தான் போல" என்று கண்ணடிக்க, "உங்க கூட்டத்துக்குள் என்னை சேர்க்காதீங்க" என்று அவள் கம்பீரமாக சொன்னாள்.
அவளை கூர்ந்து பார்த்தவன் தலையை இருபுறமும் ஆட்டி நக்கலாக சிரித்தான். "இப்போ எதுக்கு சிரிக்கிற?" என்று கேட்க, "ஒண்ணுமில்ல" என்றவனுக்கு சிரிப்பு மட்டும் குறையவில்லை. "இப்போ சொல்ல போறியா இல்லையா?" என்று அவள் சீற, "அன்னைக்கு மாநாட்டுல நடந்ததில இருந்து என்னோட ஷர்ட் காணாம போன வரைக்கும் தெரியும்... இதுக்கு மேல கேட்காதே ...என்னை கொஞ்சம் உன் அண்ணனா இருக்க விடு ப்ளீஸ்" என்று சிரித்தபடி சொல்ல அவளுக்கு அவன் என்ன சொல்ல வருகிறான் என்று விளங்கியது. சங்கடத்துடன் தலையை வேறு பக்கம் திருப்பியவள் மறந்தும் விஷ்வா பக்கம் அதன் பிறகு திரும்ப வில்லை.
சிறிது நேரம் கழித்து வசுந்தரா பலகாரங்கள் பரிமாறினாள். புடவையுடன் கஷ்டப்பட்டு நடந்தவளுக்கு கீழே விரித்து இருந்த விரிப்பு அடிக்கடி தடுத்தது. அடிக்கடி நிலை தப்பியவள் சுதாரித்தபடி அனைவர்க்கும் பரிமாறினாள்.
'ச்ச... இவளை யாரு இப்போ பரிமாற சொன்னது? இவ்வளவு பேர் இருக்காங்க இவ தான் எல்லாம் செய்யணுமா?' என்று மனதுக்குள் திட்டிய சாணக்கியனுக்கு தெரியவில்லை அவளே விருப்பப்பட்டு பரிமாற வந்த விஷயம்.
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தவன் எழுந்து அவளை நோக்கி நடக்க அவள் மட்டுமல்ல அனைவர்க்கும் அதிர்ச்சியாக இருந்தது. 'இவர் எங்க போறார்?' என்று கயலும் விஷ்வாவும் யோசித்தபடி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
வசுந்தரா அருகில் வந்த சாணக்கியன் அவளிடம் தட்டை பலவந்தமாக வாங்கினான். அவளோ அதிர்ச்சியுடன் அவ்விடத்திலேயே நிற்க அங்கு நின்ற ஒரு பெண்ணை அழைத்தவன், "நீங்க கொடுங்க" என்றபடி அவள் கையை பிடித்து அழைத்துச் சென்று தன் பக்கத்தில் உட்கார வைத்தான். அவளுக்கோ அவனின் செய்கை ஒரு பக்கம் சங்கடமாகவும் மறு பக்கம் சந்தோஷமாகவும் இருந்தது.
அனைவரையும் பார்த்து சங்கடப்பட்டபடி அவனருகில் உட்கார அவள் விரல்களை தனது விரல்களுடன் கோர்த்துக் கொண்டவன் மறந்தும் தனது கைக்குள் இருந்த அவள் கையை விடவில்லை. இருவரின் அந்நியோன்யத்தை பார்த்த லக்ஷ்மிக்கு ஆனந்தத்தில் கண்ணீர் வழிந்தது. இதனை பார்த்த அனைவரும் ஒரு வகை சந்தோஷ மன நிலையில் இருந்தனர்.
அவன் செய்கையில் அதிர்ந்த விஷ்வா, "நம்ம ரெண்டு பேரையும் முந்தி விடுவார் போலயே" என்று கயல் காதுக்குள் சொன்னான். அவ்வளவு நேரமும் கௌதமின் நினைவில் உழன்றுக் கொண்டிருந்தவள் விஷ்வாவை பார்த்து விரக்தியாக சிரித்தாள்.
சிறிது நேரத்தின் பின் ஊதா நிற பட்டு புடவையில் ஜிமிக்கி அட்டியல் மற்றும் ஒட்டியாணம் சகிதமாக மிதமான அலங்காரத்தில் மித்ரா அழகு தேவதையாக வந்து நின்றாள். அவளை பார்த்து கண்ணிமைக்க மறந்த விஷ்வாவை பார்த்தவள், 'இவன் என்னப்பா இப்படி பார்க்கிறான் ?' என்று சங்கடப்பட்டவாறே அவ்விடத்தில் தலை குனிந்து நின்றாள். மித்ராவின் சங்கடத்தை அறிந்த கயல் அவன் கையில் கிள்ளி தன்னுணர்வு அடைய செய்தாள்.
மித்ராவை பார்த்த லட்சுமி, "மித்ரா, மாப்பிள்ளை காலில விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கோ" என்று சொல்ல அவளுக்கோ தலையில் யாரோ இடியை போட்ட போல் அதிர்ச்சியுடன் லட்சுமியை பார்த்தாள்.
விஷ்வாவுக்கோ ஒரே குதூகலமாக இருந்தது. காலை வெளியில் நீட்டி ஆயத்தமாக இருந்தான். கடைக்கண்ணால் அவனின் செய்கையை பார்த்து எரிச்சல் முண்ட சபை நாகரீகம் கருதி மெல்ல மெல்ல அவனை நோக்கி நடந்தாள்.
நீட்டி இருந்த அவனை சித்ரா முறைத்து பார்த்தபடி, "எழுந்து நில்லுடா" என்று சொல்ல, "ஓ எழுந்து நிக்கணுமா?" என்றபடி எழுந்து நின்றான்.
அவனின் செய்கை அனைவர்க்கும் சிரிப்பை மூட்டினாலும் அடக்கிக் கொண்டு இருந்தனர். அவனருகில் வந்தவள் அவன் காலில் விழ கையை ஆசிர்வாதம் பண்ணுவது போல் வைத்து, "நல்லா இரும்மா நல்லா இரு" என்றான்.
நிறைய நேரம் விழுந்தவள் எழாமல் இருக்க தாயிடம் குனிந்தவன், "ஏன்மா இவ இப்படியே இருக்கா... எழும்ப மாட்டாளா?" என்று கேட்க "தூக்கி விடுடா" என்று அவர் சீறினார். "ஓ" என்றவன், "எழுந்திரும்மா" என்றபடி அவள் தோளை தொட்டு தூக்கியவன் அவளது சினம் தெறித்த விழிகளை பார்த்து எச்சிலை விழுங்கியபடி மீண்டும் உட்கார்ந்தான். அவளும் தலையை குனிந்த படி நடந்து வந்தவள் அருகிலிருந்த கதிரையில் இருந்தாள். இருக்கும் போது கூட விஷ்வாவை முறைக்க தவறவில்லை.
அப்போது தான் அவதானித்தாள் வசுந்தரா சாணக்கியனின் கை கோர்த்து அருகில் அமர்ந்திருப்பதை. அதை பார்த்து மனதுக்குள் ஒரு நிம்மதி பரவ அதன் பிறகு விஷ்வாவை காதல் பார்வை பார்த்தாள். அவள் பார்வை மாறியதில் அதிர்ந்தவனுக்கு ஏதேதோ நினைவுகள் வந்து அவன் மனதில் முகாமிட்டது.
உடனே சுதாரித்தவன் மித்ராவை சீண்டும் பொருட்டு, "பொண்ணு பாடுமா?" என்று கேட்டான். அனைவரும் அதிர்ந்து ஒரேயடியாக அவனை பார்க்க, 'தப்பா கேட்டு விட்டோமோ?' என்று யோசித்தவன், "எனக்கு பொண்ணு கிட்ட தனியா பேசணும்" என்றான்.
அப்போதும் அனைவரும் அவனை அதிர்ந்து பார்க்க, 'எல்லாத்துக்கும் ஒரே ரியாக்ஷன் கொடுக்குறாங்கப்பா...' என்று மனதுக்குள் சலித்தவன் தைரியமாக, "ம்ம்... பேசணும்" என்றான். 'இவன் ஒருத்தன மாப்பிள்ளையா உட்கார வச்சா அவன் பண்ணுற அலும்பு தாங்கலப்பா' என்று மனதுக்குள் சாணக்கியன் சலித்துக் கொண்டான்.
விருத்தாச்சலம் உடனே, "மித்ரா உன் ரூமுக்கு மாப்பிள்ளையை கூட்டி போம்மா" என்று சொல்ல எழுந்து வந்த விஷ்வா மித்ராவை கதிரையில் இருந்து எழுப்ப அவளை நோக்கி கையை நீட்டினான்.
'கடவுளே இவன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கான்... மானம் போகுதே' என்று மனதில் புலம்பியபடி வலுக்கட்டாயமாக அனைவரையும் பார்த்து சிரித்தவள் விஷ்வாவின் கையை பிடித்து எழும்பி அவனுடன் சென்றாள். விஷ்வாவின் அவசரத்துக்கான காரணம் அனைவரும் அறிந்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல் வேறு பேச்சு பேசினர்.
சாணக்கியனோ வசுந்தராவை கண் வெட்டாமல் பார்க்க, 'அண்ணனுக்கும் தம்பிக்கும் இதுல நல்ல ஒற்றுமை' என்று தனது மனதில் நினைத்த வசுந்தரா தலையை குனிந்துக் கொண்டாள். அவள் நினைத்ததை யூகித்தவன் அவள் காதுக்கு அருகில் குனிந்து, "என்ன பண்றது வசு குடும்பத்துக்கே காதல் வைரஸ் தாக்கிடுச்சு" என்றான்.
தான் நினைத்ததை சரியாக கணித்த கணவனை அதிர்ந்து பார்த்தவள் இனி நினைப்பது கூட கவனமாக நினைக்க வேண்டும் என்று மனதில் பதிய வைத்தாள்.
மித்ரா அறைக்குள் சென்றதும் கதவை சாத்திய விஷ்வா, "சூப்பரா இருக்கடி" என்றபடி அவளை இறுக அணைத்துக் கொண்டவன், அவள் முகத்தை தாங்கி பேச வந்தவளை பேச கூட விடாது முகம் முழுவதும் அவள் திணற திணற முத்தமிட்டவன் அவளை அப்படியே தனது மார்பில் அணைத்துக் கொண்டான். அவளோ அவன் மார்பில் சாய்ந்தபடி, "வெளிய தேடுவாங்க" என்றதும் சிரித்தபடி அவளை விடுவித்தவன், "எதுக்கு உன்ன கூட்டி வந்தேன்னு அவங்களுக்கும் தெரியும்" என்றான்.
வெட்கத்துடனேயே அங்கிருந்த மேசையை நோக்கிச் சென்றவள் டிஷ்ஷுவை எடுத்து அவன் இதழ்களில் இருந்த லிப்ஸ்டிக்கை துடைத்து விட்டு கண்ணாடியில் பார்த்து தனது கசங்கி இருந்த புடவையையும் குழம்பி இருந்த தலையையும் சரி செய்தபடி, "வாங்க போவோம்" என்று அறையை விட்டு வெளியில் அவனுடன் சென்றாள்.
எல்லாம் செய்தவள் அவன் ஷர்டில் இருந்த லிப்ஸ்டிக்கை கண்டுக் கொள்ளவில்லை. வெளியில் பூரிப்புடன் வந்தவர்களை பார்த்து மற்றவர்கள் சங்கடப்பட்டனர். முன்னால் விஷ்வாவும் பின்னால் மித்ராவும் நடந்து வரும் போது விஷ்வா ஷர்டில் லிப்ஸ்டிக்கை கண்ட கயல்விழி அதை கண்களால் காட்ட அவனுக்கோ அவள் கண்ணசைவு புரியாமல் என்ன என்று கண்களாலேயே அவளிடம் கேட்டான்.
கயல்விழி சொன்னது அவனை தவிர அங்கிருந்த அனைவருக்கும் புரிந்தது, அப்போது அங்கிருந்த ஒரு சுட்டி பொண்ணு, "அண்ணா கயல் விழி அக்கா உங்க ஷர்டில் இருக்கும் லிப்ஸ்டிக்கை துடைக்க சொல்றாங்க" என்றதும் அவ்விடமே சிரிப்பில் மூழ்கியது.
அவனுக்கோ வெட்கத்தில் பூமிக்குள் போகலாம் போல இருந்தது. அனைவரையும் பார்த்து "ஹி ஹி" என்று சமாளிக்க சிரித்தவன் திரும்பி பின்னால் வந்த மித்ராவை பார்த்து கண்களால் ஷர்ட்டை காட்டி, 'மண்டைல இருக்கிற கொண்டையை மறந்துட்டியேடி' என்று வடிவேல் பாணியில் மனதுக்குள் நினைத்து உதட்டை பிதுக்கினான்.
அவளும் அவனை பாவமாக பார்த்தபடி வெட்கத்தில் தலை குனிந்தபடியே இருக்கையில் அமர்ந்தாள். அவனும் சென்று கயல் பக்கத்தில் உட்கார கயலோ அவனை முறைத்தபடி இருந்தாள். "மாப்பிள்ளைக்கு அவசரம் ஜாஸ்தி விரைவா கல்யாணத்த முடிங்கப்பா" என்று ஒரு அங்கிருந்த ஒரு பெருசு கூற இரு வீட்டாரும், 'கல்யாணம் முடிச்சாத்தான் என்ன முடிக்காட்டி தான் என்ன... அதான் எல்லாம் முடிஞ்சிடுச்சே' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டனர்.
முன்னால் நின்ற கயலின் காளி அவதாரத்தை பார்த்து இருவரும் அதிர்ந்து நின்றனர். கயலோ கௌதமை சுட்டெரிப்பது போல் பார்த்தவள் அவன் தாடையை பிடித்து கன்னத்தை தன் பக்கம் திருப்பி, "இது என்ன?" என்று கேட்டாள்.
"எது?" என்று புருவம் சுருக்கியவன் இடது கையால் கன்னத்தை தடவி கையை பார்க்க அதில் அப்பெண்மணியின் லிப்ஸ்டிக் இருந்தது. சாணக்கியனோ சமாளிக்கும் பொருட்டு, "இல்லம்மா..." என்று தொடங்க அவனை நோக்கி நிறுத்தும் படி கையை காட்டியவள், "அண்ணா நீங்க இதுல தலையிடாதீங்க" என்றாள்.சாணக்கியனும், 'புருஷன் பொண்டாட்டிக்குள்ள நாம எதுக்கு?' என்று நினைத்து ஒதுங்கி அங்கிருந்த சுவரில் சாய்ந்து கை கட்டி நின்று நடப்பதை வேடிக்கை பார்த்தான்.
'நம்மள ஒரு வழி பண்ணாம விடமாட்டா' என்று யோசித்த கௌதமுக்கு அவள் பொறாமை கலந்த கோபம் கூட சுகமாக இருந்தது.
ஆனால் தன் எண்ணத்தை மறைத்தவன் அவளை சீண்டும் பொருட்டு இறுகிய முகத்துடன் அவளை நோக்கி, "நான் என்ன பண்றது அந்த பொண்ணு கிஸ் பண்ணினதுக்கு? கொஞ்சம் ஹாண்ட்சம் ஆக இருந்தா இதெல்லாம் சகஜம் தான்" என்றான்.
அவன் பேச்சினால் அவன் மேல் இருக்கும் கோபம் இன்னும் தலைக்கு ஏற, "பொண்ணா ? அது கிழவி... அந்த கிழவி கிஸ் பண்ணுறா நீங்களும் கன்னத்தை காட்டிட்டு நிற்குறீங்க" என்று சினமாக உரைத்தபடி கையில் இருந்த டிஷ்யூ வால் அவன் கன்னத்தை துடைத்து விட்டாள். நெருங்கி நின்று மூச்சு காற்று பட துடைத்துக் கொண்டிருந்தவளை அப்படியே கட்டியணைத்து அவளிதழ்களுடன் இதழ் சேர்த்து முத்தமிட தோன்றிய எண்ணங்களுக்கு கடிவாளமிட்டவன் இறுகிய முகத்துடனேயே அவள் துடைத்துக் கொண்டிருந்த கையை பிடித்து நிறுத்தி, "போதும்" என்றான்.
கையை அவனிடமிருந்து உருவி எடுத்தவள், "நாங்க தொட்டா மட்டும் கோபம் பொத்துக்கிட்டு வருது...அந்த கிழவிக்கு மட்டும் கிஸ்" என்று அவள் முணுமுணுத்தது தெளிவாக அவன் காதில் விழுந்தது. அவனோ அவளை முறைத்து பார்த்து, "கிழவி கூட போட்டி போடும் அளவுக்கு இருக்கியே, உனக்கு உன் மேல கொஞ்சமும் கான்பிடென்ட் இல்லையா?" என்று வேணுமென்றே அவளை சீண்டினான்.
உடனே அவள் எகத்தாளமாக, "நான் எதுக்கு அவ கூட போட்டி போடணும்? அந்தளவுக்கு நீங்க ஒர்த் இல்ல" என்று அவன் கூறிய டையலாக்கையே திருப்பி அவனுக்கே கூறினாள்.
அவனோ புருவம் சுருக்கி பார்த்து, "அப்படி என்ன ஒர்த் இல்லாம போய் விட்டேன் ?" என்று ஆதங்கமாக கேட்க, ஓரளவு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவனை கூர்ந்து பார்த்தவள், "அழகான பொண்டாட்டியை பக்கத்துல வச்சுட்டே ஒண்ணும் செய்யாதவங்க... அந்த கிழவிக்கு என்ன செஞ்சிருவாங்க?" என்று கேட்க கை கட்டி இருந்த சாணக்கியன் கண்ணை விரித்து தனது வாயில் "ஆய்" என்றபடி கையை வைத்தான் கௌதமை இன்னும் சீண்டுவதற்காக.
இருவர் சீண்டலிலும் கோபம் தலைக்கேற "ஏய்" என்று உறுமியவன் அவ்வழியால் சென்றவர்கள் அவனை திரும்பி பார்க்க பெரு மூச்செடுத்து கோபத்தை கட்டுப்படுத்தி விட்டு இரு கைகளையும் தனது இடுப்பில் குற்றி, "இப்போ உனக்கு என்னடி வேணும்? போடி" என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன் வெகு நிதானமாக .
"இதுக்கு மட்டும் குறைச்சல் இல்ல" என்றவள் கையிலிருந்த பையை திறந்து அவனுக்காக கொண்டு வந்த விஷ்வாவின் ஒரு ஷர்ட்டை எடுத்தவள் அவனுக்கு அவளே அதை அணிவிக்க போக கோபத்துடன் ஷர்ட்டை பறித்தவன், "நானே போட்டுக்கிறேன் நீ போ" என்றான்.
அவளோ பரிதாபமாக சாணக்கியனை பார்க்க, தங்கையின் கண்ணிலிருந்த வலியை கண்டவன் மனமும் வலிக்க, "நீ போ கயல்" என்றான். கௌதமின் உதாசீனத்தால் கண்கள் கரிக்க அவள் அவ்விடத்தை விட்டுச் சென்றாள்.
அவள் அவனை தாண்டிச் செல்ல பெரு மூச்செடுத்தவன் சாணக்கியனை முறைத்து பார்த்தான். சென்றவளுக்கு அந்த பெண்மணியின் முத்தமே நினைவில் வந்தது.
அவமான பட்டாலும் பரவாயில்லை என்று திரும்பி விறு விறுவென திரும்பி வந்தவள் அவன் முன்னால் வந்து நின்றாள்.
"இந்த சொர்ணாக்கா இன்னும் போகலையா?" என்று சலித்தபடி கெளதம் அவளை பார்க்க அவளோ, "இன்னொரு தடவை இப்படி நடந்துச்சு கொன்னுருவேன்" என்று கை காட்டி மிரட்டியவள் விறு விறுவென அவனை தாண்டிச் சென்றாள். அவள் செல்வதை பின்னால் திரும்பி வெறித்து பார்த்தவன் சாணக்கியனை திரும்பி பார்க்க அவனோ அங்கிருந்த தூணில் சாய்ந்தபடி இருவரையும் உணர்ச்சி துடைத்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
இருவரையும் பார்த்து தலையை உலுக்கிய கௌதம் ஷர்ட்டை போட முயற்சித்து முடியாமல் போக சாணக்கியன் அவனை நோக்கி நிதானமாக வந்தவன் ஷர்ட்டை போட உதவி செய்தான்.
சாணக்கியன் பட்டன் போடும் போது அவனை முறைத்து பார்த்தபடி, "அவ தான் லூசு போல பேசுறானா நீயும் வாயில கை வச்சு ரசிச்சிட்டிருக்க" என்றவனை பார்த்து வாய் விட்டு சிரித்தவன், "அவளுக்கு இருக்கிற அதே டவுட் எனக்கும் இருக்குடா" என்றான். "டேய்... உன்ன கொல்லாம விட மாட்டேன்டா... அண்ணனும் தங்கச்சியும் சேர்ந்து கலாய்க்கிறீங்களா?" என்று திட்டியபடி அவன் வயிற்றில் குத்த வந்தவன் சுற்றி ஜன நடமாட்டம் இருப்பதால் தன்னை அடக்கிக் கொண்டான்.
சாணக்கியன் கௌதமுக்கு பட்டன் போட்டு முடித்ததும், "வா போவோம்" என்றபடி அவனை அழைத்துக் கொண்டு தனது ஜீப்பை நோக்கிச் சென்றான்.
ஜீப்பில் இருவரும் வெவ்வேறு சிந்தனையில் இருந்ததால் ஒருவருடன் ஒருவர் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. கௌதமை அவனின் இருப்பிடத்தில் இறக்கியவன், "லீவு போட்டு ஒரு ரெண்டு கிழமை ரெஸ்ட் எடு" என்றான். "ஏன் அப்போ தான் உங்களுக்கு வசதியா இருக்குமா?" என்று கண்ணடித்து கேட்டவன் மேலும், "நீங்க நினைக்கிறது எப்போதும் நடக்காது சார்" என்றபடி வீட்டுக்குள் சென்றான். அவனை வெறித்து பார்த்தபடி ட்ரைவரிடம் ஜீப்பை எடுக்க சொன்னான் சாணக்கியன்.
அவன் வண்டி வீட்டை அடைந்ததும் வீட்டுக்குள் புயலென வந்தவனை பார்த்த மகாலிங்கம் பயத்தில் உறைந்து போனார். நடந்ததை கேள்விப்பட்டவருக்கு வியர்த்து வழிய அவரை முறைத்தவாறே தனது அறைக்குள் சென்று அடைத்துக் கொண்டான் சாணக்கியன்.
இன்னும் இரு கிழமைகள் திருமணத்துக்கு என்ற நிலையில் சம்பிரதாயத்துக்காக பெண் பார்த்து நிச்சய தாம்பாளம் மாற்றும் பொருட்டு மகாலிங்கம் குடும்பம் விருத்தாச்சலம் வீட்டுக்குச் செல்ல முடிவெடுத்தனர். டெனிம் ஜீன்ஸ் உம் ஸ்லிம் பிட் இளம் நீல நிற செக் ஷர்ட்டையும் இன் பண்ணி கையில் ரோலெக்ஸ் வாட்ச் என ஸ்டைலான ஹேர் கட்டுடன் டிப் டாப்பாக ஆயத்தமாகி முதல் ஆளாகவே விஷ்வா ஹாலுக்குள் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தான்.
பச்சை நிற பட்டு புடவையுடன் நெற்றி வகிட்டில் குங்குமமும் வைத்து எந்த வித முக ஒப்பனையும் இல்லாமலே அழகியாக விஷ்வா இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தாள் கயல் விழி.
"அண்ணா இன்னைக்காச்சும் வேட்டி கட்டலாம் தானே?" என்று கேட்டபடி அவன் பக்கத்தில் இருக்க, "என் இடுப்புல வேட்டி நிக்காதுடி" என்றான் விஷ்வா, "கல்யாணத்துக்காச்சும் கட்டும் எண்ணம் இருக்கா?" என்று அவள் கேட்க, "அதுதான் யோசனையாக இருக்குடி" என்றான்.
வெண்ணிற குர்தாவும் கருப்பு ஜீன்ஸ் உம் என வந்த சாணக்கியன் அவ்விடத்தில் இருந்த தனி கதிரையில் அமர்ந்து தொலைக்காட்சி பார்க்க தொடங்க, "இப்போ எல்லாம் நாம யார் கண்ணுக்கும் தெரிய மாட்டோம் கயல்" என்றான் விஷ்வா அண்ணனை சீண்டும் பொருட்டு.
அவன் பேசியதில் அவனை திரும்பி பார்த்த சாணக்கியன், "நல்லாவே தெரியுது. ஏழு கழுதை வயசுல வேட்டி கட்ட தெரியாத உனக்கு என்னடா வெட்டி பேச்சு ?" என்று கேட்க , தமையனின் உரிமை பேச்சில் மனம் மகிழ்ந்தவன், "நீங்களே குர்தாவுக்கு மாறிட்டீங்க... நான் மட்டும் வேட்டி கட்டி வந்து அது கீழ விழுந்து நான் அவமான படுற காட்சியை கண் குளிர பார்க்க உங்க எல்லாருக்கும் ஆசையா ?" என்று நக்கலாக கேட்க அங்கிருந்த அனைவர்க்கும் சிரிப்பு வந்தது.
சிரித்த சாணக்கியனின் முகம் மகாலிங்கத்தை கண்டதும் இறுகி போக அவரை தவிர்க்கும் பொருட்டு முன்னால் சென்று வண்டியில் ஏறிக் கொண்டான்.
'நல்லா தானே இருந்தார் என்னாச்சு?' என்று யோசித்தபடி விஷ்வாவும் கயலும் பின்னால் சென்றனர். நிச்சய தட்டுக்களுடன் உறவினர்களும் வண்டியில் ஏற திருவிழாவிற்கு செல்லும் வாகனங்கள் போல தொடர்ச்சியாக வாகனங்கள் விருத்தாச்சலம் வீட்டை நோக்கி புறப்பட்டன.
அழகாக இயற்கை மலர் சரங்களால் வீடு அலங்காரம் பண்ணப்பட்டிருக்க வாசலில் நின்ற விருதாச்சலமும், லக்ஷ்மியும், வசுந்தராவும் அனைவரையும் வரவேற்றனர். சாணக்கியன் வேணும் என்றே வசுந்தராவை பார்த்து கை கூப்பி "வணக்கம்" என்றான். சாணக்கியனை முறைத்தபடி அவளும் பதிலுக்கு கை கூப்பினாள்.
நீல நிற பட்டு புடவையில் தலையை பின்னி பூ வைத்து மேடிட்ட வயிறும் வைர மூக்குத்தியும் என மகாலக்ஷ்மி போல இருந்தவளை அவன் ரசித்தவாறே உள்ளேச் சென்றான்.
உள்ளேச் சென்று அமர்ந்ததும் விருதாச்சலமும் மகாலிங்கமும் பேச தொடங்கினர். விஷ்வாவோ எப்போது மித்ராவை காட்டுவார்கள் என்று ஏங்கி வீட்டின் உள்ளே எட்டி எட்டி பார்த்தான். அதை கவனித்த கயல்விழியோ, "எதுக்கு இப்போ அவசரம்?" என்று கேட்க, "என்னடி பொண்ண காட்ட மாட்டாங்களா?" என்று ஏக்கமாக கேட்டான்.
அவனை அதிர்ந்து பார்த்தவள், "டேய் உனக்கே இது ஓவரா இல்லையாடா ? நீங்க ரெண்டு பெரும் பண்ணின வேலைக்கு இந்த சம்பிரதாயம் தான் ஒரு குறை... மானத்தை வாங்காம சும்மா இருடா...ரொம்ப வழியிற...பெரிய அண்ணனை பாரு எவ்வளவு கெத்தா இருக்கார் தெரியுமா?" என்றதும் விஷ்வா கயலுக்கு பின்னால் இருந்த சாணக்கியனை எட்டி பார்க்க அவனோ வாசலில் நின்ற வசுந்தராவை தனது இதழ்களை வருடியவாறே விழுங்குவது போல் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆச்சரியத்துடன் கண்ணை விரித்தவன் பார்வையை கயல் பக்கம் திருப்பி, "நீயே திரும்பி பாரு" என்றபடி அவள் நாடியை பிடித்து திருப்பி விட்டான். சாணக்கியனின் பார்வையில் அதிர்ந்தவள் விஷ்வாவை பார்த்து, "என்னடா இவர்? இதுக்கு நீயே பரவாயில்ல போலயே" என்றாள்.
"என்ன பண்றது குடும்பமே கொஞ்சம் அப்படி தான் போல" என்று கண்ணடிக்க, "உங்க கூட்டத்துக்குள் என்னை சேர்க்காதீங்க" என்று அவள் கம்பீரமாக சொன்னாள்.
அவளை கூர்ந்து பார்த்தவன் தலையை இருபுறமும் ஆட்டி நக்கலாக சிரித்தான். "இப்போ எதுக்கு சிரிக்கிற?" என்று கேட்க, "ஒண்ணுமில்ல" என்றவனுக்கு சிரிப்பு மட்டும் குறையவில்லை. "இப்போ சொல்ல போறியா இல்லையா?" என்று அவள் சீற, "அன்னைக்கு மாநாட்டுல நடந்ததில இருந்து என்னோட ஷர்ட் காணாம போன வரைக்கும் தெரியும்... இதுக்கு மேல கேட்காதே ...என்னை கொஞ்சம் உன் அண்ணனா இருக்க விடு ப்ளீஸ்" என்று சிரித்தபடி சொல்ல அவளுக்கு அவன் என்ன சொல்ல வருகிறான் என்று விளங்கியது. சங்கடத்துடன் தலையை வேறு பக்கம் திருப்பியவள் மறந்தும் விஷ்வா பக்கம் அதன் பிறகு திரும்ப வில்லை.
சிறிது நேரம் கழித்து வசுந்தரா பலகாரங்கள் பரிமாறினாள். புடவையுடன் கஷ்டப்பட்டு நடந்தவளுக்கு கீழே விரித்து இருந்த விரிப்பு அடிக்கடி தடுத்தது. அடிக்கடி நிலை தப்பியவள் சுதாரித்தபடி அனைவர்க்கும் பரிமாறினாள்.
'ச்ச... இவளை யாரு இப்போ பரிமாற சொன்னது? இவ்வளவு பேர் இருக்காங்க இவ தான் எல்லாம் செய்யணுமா?' என்று மனதுக்குள் திட்டிய சாணக்கியனுக்கு தெரியவில்லை அவளே விருப்பப்பட்டு பரிமாற வந்த விஷயம்.
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தவன் எழுந்து அவளை நோக்கி நடக்க அவள் மட்டுமல்ல அனைவர்க்கும் அதிர்ச்சியாக இருந்தது. 'இவர் எங்க போறார்?' என்று கயலும் விஷ்வாவும் யோசித்தபடி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
வசுந்தரா அருகில் வந்த சாணக்கியன் அவளிடம் தட்டை பலவந்தமாக வாங்கினான். அவளோ அதிர்ச்சியுடன் அவ்விடத்திலேயே நிற்க அங்கு நின்ற ஒரு பெண்ணை அழைத்தவன், "நீங்க கொடுங்க" என்றபடி அவள் கையை பிடித்து அழைத்துச் சென்று தன் பக்கத்தில் உட்கார வைத்தான். அவளுக்கோ அவனின் செய்கை ஒரு பக்கம் சங்கடமாகவும் மறு பக்கம் சந்தோஷமாகவும் இருந்தது.
அனைவரையும் பார்த்து சங்கடப்பட்டபடி அவனருகில் உட்கார அவள் விரல்களை தனது விரல்களுடன் கோர்த்துக் கொண்டவன் மறந்தும் தனது கைக்குள் இருந்த அவள் கையை விடவில்லை. இருவரின் அந்நியோன்யத்தை பார்த்த லக்ஷ்மிக்கு ஆனந்தத்தில் கண்ணீர் வழிந்தது. இதனை பார்த்த அனைவரும் ஒரு வகை சந்தோஷ மன நிலையில் இருந்தனர்.
அவன் செய்கையில் அதிர்ந்த விஷ்வா, "நம்ம ரெண்டு பேரையும் முந்தி விடுவார் போலயே" என்று கயல் காதுக்குள் சொன்னான். அவ்வளவு நேரமும் கௌதமின் நினைவில் உழன்றுக் கொண்டிருந்தவள் விஷ்வாவை பார்த்து விரக்தியாக சிரித்தாள்.
சிறிது நேரத்தின் பின் ஊதா நிற பட்டு புடவையில் ஜிமிக்கி அட்டியல் மற்றும் ஒட்டியாணம் சகிதமாக மிதமான அலங்காரத்தில் மித்ரா அழகு தேவதையாக வந்து நின்றாள். அவளை பார்த்து கண்ணிமைக்க மறந்த விஷ்வாவை பார்த்தவள், 'இவன் என்னப்பா இப்படி பார்க்கிறான் ?' என்று சங்கடப்பட்டவாறே அவ்விடத்தில் தலை குனிந்து நின்றாள். மித்ராவின் சங்கடத்தை அறிந்த கயல் அவன் கையில் கிள்ளி தன்னுணர்வு அடைய செய்தாள்.
மித்ராவை பார்த்த லட்சுமி, "மித்ரா, மாப்பிள்ளை காலில விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கோ" என்று சொல்ல அவளுக்கோ தலையில் யாரோ இடியை போட்ட போல் அதிர்ச்சியுடன் லட்சுமியை பார்த்தாள்.
விஷ்வாவுக்கோ ஒரே குதூகலமாக இருந்தது. காலை வெளியில் நீட்டி ஆயத்தமாக இருந்தான். கடைக்கண்ணால் அவனின் செய்கையை பார்த்து எரிச்சல் முண்ட சபை நாகரீகம் கருதி மெல்ல மெல்ல அவனை நோக்கி நடந்தாள்.
நீட்டி இருந்த அவனை சித்ரா முறைத்து பார்த்தபடி, "எழுந்து நில்லுடா" என்று சொல்ல, "ஓ எழுந்து நிக்கணுமா?" என்றபடி எழுந்து நின்றான்.
அவனின் செய்கை அனைவர்க்கும் சிரிப்பை மூட்டினாலும் அடக்கிக் கொண்டு இருந்தனர். அவனருகில் வந்தவள் அவன் காலில் விழ கையை ஆசிர்வாதம் பண்ணுவது போல் வைத்து, "நல்லா இரும்மா நல்லா இரு" என்றான்.
நிறைய நேரம் விழுந்தவள் எழாமல் இருக்க தாயிடம் குனிந்தவன், "ஏன்மா இவ இப்படியே இருக்கா... எழும்ப மாட்டாளா?" என்று கேட்க "தூக்கி விடுடா" என்று அவர் சீறினார். "ஓ" என்றவன், "எழுந்திரும்மா" என்றபடி அவள் தோளை தொட்டு தூக்கியவன் அவளது சினம் தெறித்த விழிகளை பார்த்து எச்சிலை விழுங்கியபடி மீண்டும் உட்கார்ந்தான். அவளும் தலையை குனிந்த படி நடந்து வந்தவள் அருகிலிருந்த கதிரையில் இருந்தாள். இருக்கும் போது கூட விஷ்வாவை முறைக்க தவறவில்லை.
அப்போது தான் அவதானித்தாள் வசுந்தரா சாணக்கியனின் கை கோர்த்து அருகில் அமர்ந்திருப்பதை. அதை பார்த்து மனதுக்குள் ஒரு நிம்மதி பரவ அதன் பிறகு விஷ்வாவை காதல் பார்வை பார்த்தாள். அவள் பார்வை மாறியதில் அதிர்ந்தவனுக்கு ஏதேதோ நினைவுகள் வந்து அவன் மனதில் முகாமிட்டது.
உடனே சுதாரித்தவன் மித்ராவை சீண்டும் பொருட்டு, "பொண்ணு பாடுமா?" என்று கேட்டான். அனைவரும் அதிர்ந்து ஒரேயடியாக அவனை பார்க்க, 'தப்பா கேட்டு விட்டோமோ?' என்று யோசித்தவன், "எனக்கு பொண்ணு கிட்ட தனியா பேசணும்" என்றான்.
அப்போதும் அனைவரும் அவனை அதிர்ந்து பார்க்க, 'எல்லாத்துக்கும் ஒரே ரியாக்ஷன் கொடுக்குறாங்கப்பா...' என்று மனதுக்குள் சலித்தவன் தைரியமாக, "ம்ம்... பேசணும்" என்றான். 'இவன் ஒருத்தன மாப்பிள்ளையா உட்கார வச்சா அவன் பண்ணுற அலும்பு தாங்கலப்பா' என்று மனதுக்குள் சாணக்கியன் சலித்துக் கொண்டான்.
விருத்தாச்சலம் உடனே, "மித்ரா உன் ரூமுக்கு மாப்பிள்ளையை கூட்டி போம்மா" என்று சொல்ல எழுந்து வந்த விஷ்வா மித்ராவை கதிரையில் இருந்து எழுப்ப அவளை நோக்கி கையை நீட்டினான்.
'கடவுளே இவன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கான்... மானம் போகுதே' என்று மனதில் புலம்பியபடி வலுக்கட்டாயமாக அனைவரையும் பார்த்து சிரித்தவள் விஷ்வாவின் கையை பிடித்து எழும்பி அவனுடன் சென்றாள். விஷ்வாவின் அவசரத்துக்கான காரணம் அனைவரும் அறிந்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல் வேறு பேச்சு பேசினர்.
சாணக்கியனோ வசுந்தராவை கண் வெட்டாமல் பார்க்க, 'அண்ணனுக்கும் தம்பிக்கும் இதுல நல்ல ஒற்றுமை' என்று தனது மனதில் நினைத்த வசுந்தரா தலையை குனிந்துக் கொண்டாள். அவள் நினைத்ததை யூகித்தவன் அவள் காதுக்கு அருகில் குனிந்து, "என்ன பண்றது வசு குடும்பத்துக்கே காதல் வைரஸ் தாக்கிடுச்சு" என்றான்.
தான் நினைத்ததை சரியாக கணித்த கணவனை அதிர்ந்து பார்த்தவள் இனி நினைப்பது கூட கவனமாக நினைக்க வேண்டும் என்று மனதில் பதிய வைத்தாள்.
மித்ரா அறைக்குள் சென்றதும் கதவை சாத்திய விஷ்வா, "சூப்பரா இருக்கடி" என்றபடி அவளை இறுக அணைத்துக் கொண்டவன், அவள் முகத்தை தாங்கி பேச வந்தவளை பேச கூட விடாது முகம் முழுவதும் அவள் திணற திணற முத்தமிட்டவன் அவளை அப்படியே தனது மார்பில் அணைத்துக் கொண்டான். அவளோ அவன் மார்பில் சாய்ந்தபடி, "வெளிய தேடுவாங்க" என்றதும் சிரித்தபடி அவளை விடுவித்தவன், "எதுக்கு உன்ன கூட்டி வந்தேன்னு அவங்களுக்கும் தெரியும்" என்றான்.
வெட்கத்துடனேயே அங்கிருந்த மேசையை நோக்கிச் சென்றவள் டிஷ்ஷுவை எடுத்து அவன் இதழ்களில் இருந்த லிப்ஸ்டிக்கை துடைத்து விட்டு கண்ணாடியில் பார்த்து தனது கசங்கி இருந்த புடவையையும் குழம்பி இருந்த தலையையும் சரி செய்தபடி, "வாங்க போவோம்" என்று அறையை விட்டு வெளியில் அவனுடன் சென்றாள்.
எல்லாம் செய்தவள் அவன் ஷர்டில் இருந்த லிப்ஸ்டிக்கை கண்டுக் கொள்ளவில்லை. வெளியில் பூரிப்புடன் வந்தவர்களை பார்த்து மற்றவர்கள் சங்கடப்பட்டனர். முன்னால் விஷ்வாவும் பின்னால் மித்ராவும் நடந்து வரும் போது விஷ்வா ஷர்டில் லிப்ஸ்டிக்கை கண்ட கயல்விழி அதை கண்களால் காட்ட அவனுக்கோ அவள் கண்ணசைவு புரியாமல் என்ன என்று கண்களாலேயே அவளிடம் கேட்டான்.
கயல்விழி சொன்னது அவனை தவிர அங்கிருந்த அனைவருக்கும் புரிந்தது, அப்போது அங்கிருந்த ஒரு சுட்டி பொண்ணு, "அண்ணா கயல் விழி அக்கா உங்க ஷர்டில் இருக்கும் லிப்ஸ்டிக்கை துடைக்க சொல்றாங்க" என்றதும் அவ்விடமே சிரிப்பில் மூழ்கியது.
அவனுக்கோ வெட்கத்தில் பூமிக்குள் போகலாம் போல இருந்தது. அனைவரையும் பார்த்து "ஹி ஹி" என்று சமாளிக்க சிரித்தவன் திரும்பி பின்னால் வந்த மித்ராவை பார்த்து கண்களால் ஷர்ட்டை காட்டி, 'மண்டைல இருக்கிற கொண்டையை மறந்துட்டியேடி' என்று வடிவேல் பாணியில் மனதுக்குள் நினைத்து உதட்டை பிதுக்கினான்.
அவளும் அவனை பாவமாக பார்த்தபடி வெட்கத்தில் தலை குனிந்தபடியே இருக்கையில் அமர்ந்தாள். அவனும் சென்று கயல் பக்கத்தில் உட்கார கயலோ அவனை முறைத்தபடி இருந்தாள். "மாப்பிள்ளைக்கு அவசரம் ஜாஸ்தி விரைவா கல்யாணத்த முடிங்கப்பா" என்று ஒரு அங்கிருந்த ஒரு பெருசு கூற இரு வீட்டாரும், 'கல்யாணம் முடிச்சாத்தான் என்ன முடிக்காட்டி தான் என்ன... அதான் எல்லாம் முடிஞ்சிடுச்சே' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டனர்.