அத்தியாயம் 14
இதே சமயம் அறைக்குள் வந்த திவ்யனோ நடந்தபடியே யோசித்தான்...'மாதுரி புருஷன் வந்துட்டான், கல்யாணம் நின்னுடும், ஆனாலும் என்னை இந்த நாசமா போன அமர் ரிதன்யாவை கல்யாணம் பண்ண விட மாட்டானே' என்று யோசித்தவன் இதழ்கள் சட்டென விரிய, 'கலப்பு இருக்க கூடாதுன்னு சொல்றவனையே கலக்க வச்சுட்டா' என்று கண்ணாடி முன்னே பார்த்து சிரித்தபடி தன்னிடமே கேட்டவனின் மனதில் வந்த விம்பம் என்னவோ முல்லை தான்.
'சிரிச்சிட்டே இருக்கேன், ஹீரோன்னு நினைச்சியா அமர்? நான் பக்கா வில்லன் டா' என்று சொல்லிக் கொண்டே அலைபேசியை எடுத்து தனக்கு தெரிந்த ஒருவனுக்கு அழைத்தவன், "எனக்கு ரொம்ப ஸ்ட்ராங் ஆன போதை மாத்திரை வேணும்..." என்றான்.
மறுமுனையில் இருந்தவனோ, "எப்படி மாத்திரை சார்?" என்று கேட்க, "போட்டதுமே செம்ம மூட் ஆகணும், என்ன பண்ணுறோம்னு தெரியாம இன்டெர்கோர்ஸ் வச்சுக்கணும்... நிதானாமே இருக்க கூடாது... காலைல நிதானம் வந்தா போதும்" என்றான்.
அவனும், "ஆஹ் அதுக்கு நம்ம கிட்ட சில சரக்கு இருக்கு... அனுப்பி விடவா?" என்று கேட்க, "ம்ம் அனுப்பி விடு, எப்போ வந்து சேரும்னு சரியான டைம் சொல்லு, அமர் கிட்ட சிக்கிச்சுன்னா செத்திடுவேன்" என்றான்.
"அதெல்லாம் ஓகே சார் பக்காவா பண்ணிடலாம், ஆனா நீங்க போதை மாத்திரை முதல் தடவை கேக்கிறீங்களே, அதான் கொஞ்சம் நெருடலா, அதெல்லாம் அடிக்கட் ஆச்சுன்னா பிரச்சனை சார்" என்றான்.
"வன் டைம் யூஸ் டா, இதுக்கப்புறம் கேட்க மாட்டேன், அந்த பழக்கம் எல்லாம் எனக்கு இல்லை, நீ அனுப்பு" என்று சொல்லி விட்டு வைத்து விட்டவன் இதழ்களில் இப்போது தான் திருப்தி புன்னகை...
அடுத்த நாள் காலையில் சமையலறைக்குள் சென்றான் ராவந்த்.
அங்கே இருந்த ஏப்ரனை அணிந்து கொண்டவனுக்கு, என்ன செய்வது என்றே தெரியவில்லை...
வேலைக்காரர்கள் கூட அவ்வளவு நேர்த்தியாக இருந்தார்கள்.
அவனது ஐ டி கம்பெனியில் கூட இவ்வளவு நேர்த்தி இருக்காது என்று தான் தோன்றியது...
ஐம்பதுக்கு மேல் உணவுகள் மூன்று நேரமும் தயாரிக்கப்பட்டன...
அங்கே சமையலறை தலைவன் சுந்தரோ, "நீ தான் புதுசா வந்த குக் ஆஹ்?" என்று கேட்டான்.
"ம்ம்" என்றான் ராவந்த்.
"உனக்கு மா உருட்டுற வேலை, அங்கே போ" என்று சொல்ல, அவனும் பெருமூச்சுடன், 'நல்ல வேளை கரண்டியை கைல தரல' என்று நினைத்துக் கொண்டே, மாவை பிசைய ஆரம்பித்தான்.
இதே சமயம் மாதுரியின் அறைக்குள் நுழைந்தாள் முல்லை...
அவளை அலங்காரம் செய்து கொண்டு இருந்தார்கள் பெண்கள்.
மாதுரியின் மனமோ, 'டெய்லி கல்யாண பொண்ணு போல ரெடி பண்ணுறாங்களே' என்று சலித்துக் கொண்டது...
பவுடர் மட்டும் போடுபவளுக்கு இத்தனை நகைகளை போட்டு இருக்கின்றார்களே...
உள்ளே வந்த முல்லையை பார்த்த பெண்ணொருத்தி, "நீயா புதுசா வந்த பொண்ணு?" என்று கேட்க, "ம்ம்" என்றாள் அவள்...
"சரி இதெல்லாம் க்ளீன் பண்ணு" என்று அவளுக்கு செய்ய வேண்டிய வேலைகளை கொடுக்க, அவளும் அதனை செய்ய ஆரம்பித்தாள்.
வரும் போது கவனித்தாள் ஒரு ஓடை ஒன்றுக்குள் தான் மாதுரியின் அறை இருந்தது...
அந்த ஓடையின் வாசலில் இரு காவலர்கள் நின்று இருந்தார்கள்...
அதனை தாண்டி உள்ளே வந்தால் போதும்...
வாசலில் சி சி டி வி இருக்கிறது...
அதனை எப்படியும் திவ்யன் பார்த்துக் கொள்வான்...
முல்லையும் கொஞ்சம் புத்திசாலி தான்...
எல்லாவற்றையும் கவனித்து முடித்தவள், அன்றைய வேலைகளை முடித்து விட்டு அறைக்குள் வர, அங்கே சோஃபாவில் படுத்துக் கிடந்த ராவந்த்தோ, "என்ன கண்டு பிடிச்ச?" என்று கேட்டான்.
"வாசல் ல இருக்கிற ரெண்டு காவல்காரங்கள ஏமாத்திட்டா உள்ளே போயிடலாம்" என்றாள்.
"சரி எப்படி ஏமாத்துறது? அவனுங்க அப்படியே பிள்ளையார் பிடிச்ச போல நிக்குறானுங்களே" என்ற ராவந்த்திடம், "சரியா ஒன்பது மணிக்கு ஆள் மாறுறாங்க, ஒன்பது அஞ்சுக்கு தான் அடுத்த ஆள் அந்த இடத்துக்கு வர்றாங்க, சோ அது சரியா இருக்கும், அப்புறம் விசாரிச்சு பார்த்தேன், காலைல ஆறு மணிக்கு இதே போல ஆள் மாறுறாங்க" என்று சொன்னாள்.
"செம்ம ஷார்ப் முல்லை நீ, படிச்சு இருந்தா பெரிய இடத்துக்கு வந்திருப்ப, உனக்கு வாய்ப்பு கிடைக்கல, ரொம்ப இன்டெலிஜெண்ட் ஆஹ் இருக்க, படிக்க ஆசை இருந்தா சொல்லு, நான் படிக்க வைக்கிறேன், எப்படியும் மாதுரியை படிக்க வைக்கிற பிளான் எனக்கு இருக்கு" என்றான்.
அவளோ, "ஐயோ வேணாம் அண்ணா, உங்களுக்கு எதுக்கு சிரமம், ஏதும் வேலை எடுத்து கொடுங்க, அது போதும்" என்றாள்.
அவனும் மென்மையாக சிரித்துக் கொண்டே, "சரி தூங்கு, நாளைக்கு வேலை இருக்குல்ல?" என்று கேட்க, "ம்ம்" என்று சொன்னவளும், குளித்து விட்டு வந்து கட்டிலில் படுத்துக் கொண்டாள்.
அவன் சோஃபாவில் கஷ்டப்படுத்து தான் படுத்து இருந்தான்.
கால் வெளியே வேறு நீட்டிக் கொண்டு இருந்தது...
"அண்ணா நீங்க கட்டிலில படுங்க, நான் சோஃபாவில படுக்கிறேன், உங்க கால் ரொம்ப நீளமா இருக்குல்ல" என்று சொல்ல, "அது பிரச்சனை இல்லை, இன்னைக்கு மட்டும் தானே" என்றான்.
"அப்போ நாளைக்கு?" என்று கேட்க, "மாதுரி ரூம் ல தான்" என்று அவன் கண் சிமிட்டி சொல்ல, அவளும் சத்தமாக சிரித்தபடி தூங்கிப் போனாள்.
அடுத்த நாள் காலையில் எல்லாருமே வேலை செய்ய ஆரம்பித்து விட்டார்கள்...
மாதுரியுடன் முல்லையால் பேசவே முடியவில்லை, ஒன்று வேலை கொடுத்தார்கள், இல்லை என்றால் யாரவது கூடவே இருந்தார்கள்...
ஒரு வழியாக ஒன்பது மணியை நெருங்க, மாதுரியும் சாப்பிட்டு விட்டு சலிப்புடன் கட்டிலில் படுத்துக் கொள்ள, அவளது உடைகளை அடுக்கி வைத்த முல்லை, மெதுவாக வெளியேறினாள்.
கதவை இழுத்து மூடவில்லை...
மெதுவாக சாற்றி இருந்தாள்.
அவள் அவ்விடம் வரவும், அங்கே நின்றவர்கள் இடம் மாறவும் நேரம் சரியாக இருந்தது...
அவர்கள் எப்போது இடம் மாறுவார்கள் என்று தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்த ராவந்த்தோ, அவர்கள் மாறும் சமயம், அவ்விடம் ஓடி வந்தவன், "தேங்க்ஸ் முல்லை. நீ ரூமுக்குள்ள போ, கதவு லாக் பண்ணல தானே" என்று கேட்டான்.
"இல்ல" என்று சொல்லி விட்டு சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே நகர, அவனும் வேகமாக மாதுரியின் அறைக் கதவை திறந்து கொண்டே உள்ளே வந்து விட்டான்.
உள்ளே வந்த ராவந்த்தை அதிர்ந்து பார்த்தபடி எழுந்து நின்ற மாதுரியோ, "ராவ் நீங்க எப்படி இங்க ?" என்று கேட்டாள்.
அவனோ, "அதெல்லாம் எக்ஸ்ப்ளயின் பண்ண டைம் இல்ல. சீக்கிரம் வா" என்றான்.
"ஆஹ் இங்க இருந்து தப்பி போக போறோமா?" என்றபடி வாசல் கதவை நோக்கி செல்ல , அவளை பிடித்து இழுத்தவன், "அதுக்கெல்லாம் டைம் இல்ல... முதலிரவு கொண்டாடலாம் வா" என்றான்.
"எத?" என்று அவள் அதிர, "அப்போ தான் கல்யாணம் நிக்கும்... சீக்கிரம்" என்றபடி அவள் ஆடைகளில் கையை வைக்க, "உங்க அவசரத்துக்கு மூட் வருமா என்ன?" என்றாள்.
"எனக்கு வரும் உனக்கு நான் வர வைக்கிறேன்" என்றபடி அவள் நகைகளை பார்த்தவன், "என்னடி நகை கடை விளம்பரம் போல இவ்ளோ நகை? சீக்கிரம் கழட்டு" என்றான்.
"படுத்துறீங்க ராவ்" என்றபடி அவள் நகைகளை கழட்ட , பொறுமை இன்றி அவளை அணைத்தபடி கட்டிலில் விழுந்தவன், "கட்டில் ஸ்ட்ராங் தானே" என்றான்.
"ஸ்ட்ராங் தான். கொஞ்சம் பொறுமையா" என்று ஆரம்பிக்கும் போதே அறைக்கதவு தட்டும் சத்தம் கேட்டது... "ஐயோ யாரோ வந்து இருக்காங்க, கட்டிலுக்கு கீழ போங்க" என்றபடி அவனை தள்ளி விட, "இந்த நேரத்தில யாரு?" என்றபடி அவன் கட்டிலின் கீழே புகுந்து கொள்ள, "கால் தெரியுது" என்றபடி அவன் காலில் பதட்டத்தில் மிதித்து விட்டாள்.
"அடிப்பாவி மிதிக்காதடி, என் உயரத்துக்கு தெரிய தான் செய்யும்" என்று சொல்ல, "சாரி சாரி டென்ஷன் ல மிதிச்சிட்டேன்" என்றபடி கட்டிலின் விரிப்பை இழுத்து கீழே படரவிட்டு அவனும் காலை குறுக்கிக் கொண்டே, "நல்ல காலம் டென்ஷன் ல காலில மிதிச்ச" என்றான். அவளும், சிரிப்பை அடக்கிக் கொண்டே, "ஷ் ஷ்" என்றவள் வாசல் கதவை திறக்க சென்றாள்.
கண்களை மூடி ஆழ்ந்த மூச்சை விட்டுக் கொண்டே கதவை திறக்க, அங்கே வாசலில் நின்ற பணிப்பெண்ணோ, "பால் சாப்பிடாம வந்துட்டீங்கன்னு சின்ன ஐயா சொன்னார்" என்று பால் கப்பை நீட்ட, அவளுக்கோ, ஐயோடா என்று ஆகி விட்டது...
"இல்ல போதும்" என்றாள்.
"ஐயா கண்டிப்பா கொடுக்க சொன்னார்" என்றாள் அவள்...
'படுத்துறான்' என்று அமரேந்திரனுக்கு வாய்க்குள் திட்டி விட்டு, பாலை குடித்தவள் கப்பை நீட்ட, அவளும் கிளம்பி விட்டாள்.
பெருமூச்சுடன், அறை வாசலை தாழிட்ட மாதுரி திரும்பவும், அவளை இழுத்து அணைத்த ராவந்த் அவள் இதழ்களில் இதழ்களை பொருத்தவும் நேரம் சரியாக இருந்தது...
முதலில் திணறினாள், பின்பு முனகினாள்...
தூக்கி கட்டிலில் போட்டான்...
வஸ்திரங்கள் வசமிழந்தன...
அவளும் அவனும் மட்டுமே தங்க மஞ்சத்தில்...
அவனை மொத்தமாக, "ராவ்" என்கின்ற முனகலுடன் உள்வாங்கிக் கொண்டாள்.
திணற வைத்து, முனக வைத்து, மொத்தமாக ஆட்கொண்டான்.
அவனை இறுக அணைத்துக் கொண்டே, உணர்வுகளுக்கு கடிவாளம் போட முயன்று தோற்றவளாக, மோன நிலையை அடைந்து இருந்தாள் பெண்ணவள்...
அவளை ஆட்கொண்டபடியே, அவள் இதழ்களை கவ்வி இழுத்த ராவந்த்தோ, "தங்க கட்டிலிலே முதலிரவு கொண்டாடுறதே செமயா இருக்கு டி" என்றான்.
அவளும், "ராவ்" என்று சிணுங்கியபடி, அவன் கழுத்தினுள் முகம் புதைத்துக் கொண்டாள். "செம்ம ஃபீல் டி" என்றான் அவள் காதருகே கிசு கிசுப்பாக.
"ம்ம்" என்று முனகலுடன் அவள் சொல்லிக் கொள்ள, அவளை மொத்தமாக ஆட்கொண்டு விலகி படுத்தான்.
இருவருக்குமே மூச்சு வாங்கியது.
மெதுவாக திரும்பி அவனை பார்த்தாள்.
அவனும் பார்த்தான்.
இருவரின் விழிகளும் கவ்விக் கொள்ள, "இப்போவாச்சும் எப்படி வந்தீங்கன்னு சொல்லுங்க" என்று சொன்னபடி அவன் மார்பில் தலை சாய்ந்து படுத்துக் கொள்ள, அவனும் அவளை வருடிக் கொடுத்தபடி கதை சொல்ல ஆரம்பித்து விட்டான்.
அவளும் கதையை கேட்டுக் கொண்டே, "முல்லை அப்போ நம்ம ஆளா? தெரிஞ்சு இருந்தா பேசி இருப்பேனே" என்றாள்.
அவனும், "ம்ம், உன்னை ப்ரெக்னன்ட் ஆக்குனா அப்புறம் உன் அண்ணனால ஒன்னும் பண்ண முடியாது, அதென்னடி எங்களை எல்லாம் உன் அண்ணன் இவ்ளோ மோசமா பாக்கிறான்" என்று ஆதங்கப்பட, "நான் என்ன பண்ணுறது? அவர பார்த்தா எனக்கு அவ்ளோ பயம்... செம்ம டெர்ரர் தெரியுமா?" என்று கேட்டாள்.
"தெரியுது தெரியுது... ஒரு மாசம் தான், டெய்லி நமக்கு இது தான் வேலை, அப்புறம் இங்க இருந்து கிளம்பிடலாம்" என்று சொல்ல, அவளும் சிரித்துக் கொண்டே, எம்பி அவன் இதழ்களில் இதழ்களை பதிக்க அவனும் அவள் இதழ்களை கவ்வி இருந்தான்.
அவன் இதழ்களில் இருந்து இதழ்களை பிரித்து எடுத்தவள், "சண்டை போட்டு ரெஸ்கியூ பண்ணுவீங்கன்னு எதிர்பார்த்தேன், ஆனா இப்படி ஒரு ரெஸ்கியூ என் லைஃப் ல நான் பார்த்ததே இல்லை" என்றாள்.
அவனோ சத்தமாக சிரித்துக் கொண்டே, "எனக்கு வேற வழி தெரியல ஆத்தா" என்று சொன்னபடி அவளை கீழே போட்டு மேலே மீண்டும் படர்ந்து விட்டான்.