அத்தியாயம் 14
"உனக்கு அவனை கிண்டல் பண்ணலனா நிம்மதியே இருக்காதா?" என்று சாணக்கியன் சிரித்தபடி கூறினாலும் அவன் முகத்தில் இனம் புரியாத சீற்றம் இருந்தது. அந்த கோபம் எதற்காக என்று கௌதமுக்கும் தெரியும். அவன் எண்ணத்தை திசை திருப்ப யோசித்தவன், "என்னடா லவ் எல்லாம் பண்ணுற? ஒரே புதுசா இருக்கு" என்று நக்கல் குரலில் கேட்க கௌதமை கூர்மையாக பார்த்தவன், "உன்னை போல மனசுக்குள்ள காதலை வச்சிட்டு நான் மறைக்க மாட்டேன். ஐ லவ் வசுந்தரா" என்றான்.
அவன் கூற்றில் கௌதமுக்கு குற்ற உணர்வு எட்டி பார்த்தாலும் அதை சமாளிக்கும் பொருட்டு, "எனக்கு ஒண்ணும் லவ் எல்லாம் இல்ல...என்னோட வேலை முடிஞ்சதும் உன் தங்கச்சிக்கு சீக்கிரம் டிவோர்ஸ் கொடுத்து விடுவேன்" என்றான். ஒரு அண்ணனாக வந்த கோபத்தில் அவனை முறைத்தவன், "பார்த்தா அப்படி தெரியலையே... பப்ளிக் என்றும் பார்க்காம கட்டி பிடிக்கிற கிஸ் பண்ணுற அதெல்லாம் எனக்கு தெரியாதுனு நினைச்சியா?" என்று சினம் பொங்க கேட்டான்.
'இவன் எங்க எங்க ஆள் வச்சு இருக்கான் என்றே தெரியவில்லையப்பா... கெளதம் சமாளிடா' என்று மனதுக்குள் புலம்பியவன் பெருமூச்சை எடுத்து, "உன் ஸ்பை எல்லாம் வேஸ்ட்டா... பாரு உன் கிட்ட பிழை பிழையா தகவல் சொல்லி இருக்காங்க" என்றவனை, "ஆஹா" என்று விழி விரிய பார்த்தவன் தனது தொலைபேசியை எடுத்து அதில் ஒரு வீடியோவை அவனுக்கு போட்டு காட்டினான்.
அதில் கெளதம் கயல் விழியை ரத்த தான மண்டபத்தில் வைத்து முத்தமிட்டது தொடக்கம் தூக்கிக் கொண்டு வெளியில் சென்று கட்டி பிடித்தது என ஒவ்வொன்றும் வெவ்வேறு ஆட்களிடம் இருந்து அவனுக்கு அனுப்ப பட்டிருந்தது. தனது செயலை நினைத்து மானசீகமாக தலையில் அடித்தவன் சங்கடப்பட்டுக் கொண்டே தொலைபேசியை திருப்பி கொடுத்தவன், "எத்தனை பேர்டா ஸ்பையா வச்சு இருக்க?நிம்மதியா ஒரு வேலை கூட செய்ய முடியல" என்று பேச்சை மாற்றினான்.
அது வரை அவனை மெல்லிய புன்னகையுடன் பார்த்துக் கொண்டு இருந்தவன், "நீ பேச்சை டைவர்ட் பண்ணாம எனக்கு பதில் சொல்லு... இதெல்லாம் லவ் இல்லாமலா நீ பண்ணின?" என்று கேட்க அவனோ அந்த பேச்சை தவிர்க்கும் பொருட்டு, "ரொம்ப வலிக்குதுடா சும்மா தொண தொணக்காம வா" என்றபடி கண்களை மூடியவன் மறந்தும் கண் திறக்கவில்லை. அவன் செய்கையை புன்னகையுடன் பார்த்தவன் இருபக்கமும் தலையாட்டி சிரித்தபடி வெளியில் பார்வையை செலுத்தியபடி வந்தான்.
வைத்திய சாலை வந்ததும் விஷ்வாவுக்கு அழைத்து ஸ்ட்ரெச்சரை வாசலுக்கு அனுப்ப சொன்ன சாணக்கியன், கௌதமை ஸ்ட்ரெச்சரில் ஏற்றி விஷ்வா இருக்கும் இடத்துக்கு கொண்டு கொண்டுச் சென்றான்.
போலீஸ் பிரச்சனைகளை தவிர்க்கும் பொருட்டு தோளில் இறங்கிய புல்லட்டை அகற்ற தேவையான மருத்துவ பொருட்களுடன் தனி அறையை விஷ்வாவிடம் ஏற்பாடு பண்ண சொன்னவன் மறந்தும் அடிபட்டது யாருக்கு என்று மூச்சு விடவில்லை.
நேரில் சமாளிக்கலாம் என்ற தைரியத்தில் கௌதமை கொண்டுச் சென்றான்.
கொண்டு போகும் போது, "டேய் அவன் ரொம்ப பண்ணுவான் வேணாம்டா" என்று கெளதம் கெஞ்ச சாணக்கியனோ, "வாய மூடிட்டு வாடா" என்று திட்டியபடி உள்ளே கொண்டுச் சென்றான்.
கதிரையில் சாய்ந்து இருந்து தொலைபேசியை பார்த்துக் கொண்டிருந்த விஷ்வா உள்ளே சாணக்கியன் வர எழுந்து அவனை நோக்கிச் சென்றவன் பின்னால் ஸ்ட்ரெச்சரில் கௌதமை பார்த்ததும் ஒரு கணம் அதிர்ச்சியடைந்தான். கௌதமோ அவனை பார்க்காமல் தலையை சாணக்கியனை நோக்கி திருப்பி அவனை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தான்.
ஊழியர்கள் ஸ்டர்ட்ச்சரை வைத்து விட்டு வெளியேற, "அண்ணா..." என்று தொடங்கியவனை வாயில் கை வைத்து பேச வேண்டாம் என்று சைகை செய்தவன், "இவரை கொஞ்சம் ட்ரீட் பண்ணு" என்றான் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து இருந்தபடி . 'இப்போ என்னை கண்டுக்கிறதே இல்ல, தேவை என்றால் மட்டும் வர வேண்டியது' என்று வெளியில் புலம்ப முடியாததை மனதுக்குள் புலம்பிய விஷ்வா கெளதம் கையில் சாணக்கியன் கட்டி இருந்த கட்டை அவிழ்த்து, "டிஷர்டை கழட்டுங்க" என்றான்.
அவன் கூறியதில் கடுப்பான கெளதம், 'கொஞ்சம் கூட அறியவில்லையா இவனுக்கு? இந்த கைய வச்சிட்டு நான் எப்படி கையை உயர்த்தி கழட்டுறது?' என்று மனசுக்குள் திட்டியவன், "கழட்ட எல்லாம் முடியாது வேணும்னா வெட்டி விடுங்க" என்றான்.
அப்போது தான் கையை அசைக்க அவன் கஷ்டப்படுவது புரிய கத்தரிக்கோலை எடுத்து டிஷர்டை வெட்டி எறிந்தவன் புல்லட் இருக்கும் கையை பரிசோதித்தான். அவன் கை பட்டதும் கௌதமுக்கு வலிக்க அவனுக்கு எரிச்சல் முண்டியது. பொறுமை இழந்தவன் சாணக்கியனை பார்த்து, "டேய் வேணும்னே புஷ் பண்ணுறான் டா" என்று தன்னை மறந்து கத்த சாணக்கியனோ கண்களை விரித்து இல்லை என்ற தோரணையில் தலையை ஆட்டினான். அதன் பிறகு தான் மறதியில் சாணக்கியனிடம் மரியாதை இல்லாமல் பேசியது நினைவுக்கு வர நாக்கை கடித்துக் கொண்டவன் விஷ்வாவை மெல்ல திரும்பி பார்த்தான்.
விஷ்வாவோ கௌதமை எரித்து விடுவது போல் பார்க்க சங்கடப்பட்ட கெளதம் சாணக்கியனை நோக்கி திரும்பி, "சார் வேணும் என்றே அமுக்குகிறார்" என்றான் மென்மையான குரலில். நண்பனின் நடிப்பில் பொங்கி வந்த சிரிப்பை கஷ்டப்பட்டு கொடுப்புக்குள் அடக்கிய சாணக்கியன், "விஷ்வா கொஞ்சம் பார்த்து" என்று சொல்ல, சாணக்கியனையும் கௌதமையும் சந்தேகமாக பார்த்த விஷ்வா பெருமூச்சொன்றை எடுத்து விட்டு தனது வேலையை தொடர்ந்தான்.
காயத்தில் கத்தியை வைக்கும் போது, "இது ஒண்ணும் வேணும் என்று நான் பண்ண போறது இல்லை... வலிக்கும், கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்க... ஒரு போலீஸ் ஆஃபீசர்க்கு இது பெரிய வலியில்லைனு நினைக்கிறேன்" என்று நக்கலாக சொன்னதும் கௌதமுக்கு கோபம் வர பல்லை கடித்துக் கொண்டு முகத்தை கடினமாக்கி வலியை பொறுத்துக் கொண்டான்.
அவன் புல்லட்டை வெளியே எடுத்த போதும் தையல் போட்ட போதும் காயத்துக்கு கட்டு போட்ட போதும் ஒரு சின்ன முனகல் கூட அவனிடம் இருந்து வரவில்லை. அவன் மன உறுதியை பார்த்து மலைத்த விஷ்வா எல்லாம் முடிய அங்கிருந்த கட்டிலில் படுத்து கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க சொன்னான்.
அவனும் கண் மூடி தூங்கியதும், "என்ன நடந்தது ?" என்று விஷ்வா சாணக்கியனை பார்த்து கேட்க, "ஒரு சின்ன ஆக்சிடென்ட்" என்றவன் சோபாவில் கால் மேல் கால் போட்டு சாய்ந்து இருந்து கண் மூடி அதிலேயே தூங்க தொடங்கினான்.
இருவரும் தூங்குவதை பார்த்தவன் தனது கைகளை கழுவி விட்டு அவனது சுழல் நாற்காலியில் ஒரு கையை தலைக்கு பின்னால் வைத்து சாய்ந்த படி தொலைபேசியை பார்த்த வண்ணம் இருந்தான்.
சிறிது நேரம் கழித்து எழுந்த கெளதம் தூங்கிக் கொண்டிருந்த சாணக்கியன் பக்கத்தில் போய் உட்கார்ந்தான். அவன் அருகில் வந்து இருந்ததும் கண் விழித்த சாணக்கியன், "எப்படி இருக்கு?" என்று கேட்க, "பரவாயில்லை" என்றவன் விஷ்வாவை பார்த்தான்.
தொலைபேசியை விஷ்வா பார்த்துக் கொண்டு இருந்தாலும் அவன் கவனம் முழுதும் கௌதமிலும் சாணக்கியனிலுமே இருந்தது.
அந்நேரம் பார்த்து கயல்விழி விஷ்வாவுக்கு அழைத்து, "அண்ணா சாப்பிட வரலையா?" என்று கேட்க அவர்கள் இருக்கும் அறை எண்ணை சொன்னவன் அங்கு அவளை சாப்பாட்டை எடுத்து வரும் படி கூறினான். 'இப்போ எதுக்கு அவ இங்க? குடும்பமா சேர்ந்து நம்மள ஒரு வழி பண்ணாம விடமாட்டாங்க' என்று நினைத்த கெளதம் ஜன்னலினூடு வெளியில் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.
உள்ளே வந்த கயல்விழி அனைவரும் அங்கே இருப்பதை பார்த்து அதிர்ந்து போனாள். சாணக்கியனிடம், "என்ன அண்ணா?" என்று தொடங்கியவள் பக்கத்தில் கெளதம் கையில் கட்டுடன் இருப்பதை பார்த்து அதிர்ந்து இருக்கும் இடம் மறந்து அவனை நோக்கி ஓடினாள். சோபாவில் இரு கைகளையும் முட்டியில் வைத்து கோர்த்தபடி இருந்த அவனருகில் முழங்காலில் இருந்தவள், "என்னாச்சு? ஏன் கட்டு போட்டிருக்கு?" என்று கட்டை வருடிய படி கண்ணீருடன் கேட்க அவனோ அவள் முகத்தை திரும்பி கூட பார்க்காமல் வெளியில் வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தான்.
தங்கையின் நிலையை எண்ணி இரு அண்ணன்களுக்குமே ஆத்திரம் தலைக்கு ஏறியது. 'அவ எவ்வளவு அக்கறையா கேக்கிறா, வாய திறக்கிறானா பாரு கல்லுளி மங்கன்' என்று மனதுக்குள் கௌதமுக்கு திட்டிய விஷ்வா இன்னும் அங்கு இருந்தால் ஏதும் விபரீதமாகி விடும் என்று நினைத்தபடி கதிரையில் இருந்து எழுந்தவன் அவனை முறைத்தபடி விறு விறுவென கதவை திறந்து வெளியேறினான்.
சாணக்கியனுக்கு கெளதம் மேல் கோபம் வந்தாலும் அதை அடக்கியவன், "ஒண்ணுமில்ல கயல் சின்ன காயம் தான்" என்றான். அவர்களின் உணர்வுகள் அனைத்தும் கௌதமுக்கு விளங்கினாலும் அவன் மறந்தும் கயலை பார்க்கவில்லை. கணவன் உதாசீனத்தில் இரட்டிப்பாக வந்த கண்ணீரை துடைத்தபடி எழுந்தவள், "சாப்பிட்டாரா அண்ணா ?" என்று கேட்க "இல்லம்மா, நீ ஊட்டி விடு நான் வெளிய போறேன்" என்று எழுந்தவனை அனல் பறக்க திரும்பி பார்த்த கெளதம், "எனக்கு பசிக்கல" என்றபடி வெளியில் செல்ல போக அவனை தடுத்த சாணக்கியன், "நான் கொண்டு விடுறேன் வா" என்றபடி அவனுடன் சென்றான்.
வாசலுக்குச் சென்றவன் கலங்கி நின்ற கயலை பார்த்து, "நீயும் விஷ்வாவும் சாப்பிடுங்க... நாங்க கிளம்புறோம்" என்ற படி புறப்பட்டான்.
வெளியில் நடந்துச் செல்லும் போது அனைவரின் பார்வைகளும் கௌதமிலேயே நிலைத்திருந்தது. போலீசுக்கு என்றே செதுக்கிய போல அவனின் கட்டுமஸ்தான வெற்று மார்பையும் முறுக்கேறிய ஜிம் உடலையும் அனைவரும் பார்த்து ரசித்து விட்டேச் சென்றனர். அவர்கள் பார்வையில் எரிச்சலடைந்தவன், "டேய் இங்க ஒரு டிஷர்ட் எடுக்கலாமா?" என்று கேட்டான். அனைத்தையும் அவதானித்த சாணக்கியன், "ஏன் டா செம ஹாட் ஆக தானே இருக்கிற? எதுக்கு மறைச்சுக்கிட்டு... என்ஜோய் படி" என்று சிரித்தபடி சொன்னான்.
சாணக்கியனை முறைத்தவாறே முன்னால் திரும்பியவன் தன்னை ரசனையுடன் பார்த்து வந்த இளம் பெண்களை கண்டு மனதுக்குள், 'முன்ன பின்ன ஆம்பளையையே பார்க்காத போல ஆ என்று பார்க்கிறத பாரு... உங்கள எல்லாம் வீட்ட சாத்தி வளர்த்திருக்கணும்டி' என்று திட்டியபடி நடந்த போது அவ்வழியால் நடந்து வந்த ஒரு வயதான வெளிநாட்டு பெண்மணி அப்படியே நின்று "வாவ்" என்றார்.
அதை கேட்டு சாணக்கியனுக்கு சிரிப்பு தாங்க முடியாமல் சத்தமாக சிரித்தவன், "உனக்கு பொருத்தமான ஜோடி தான்" என்றான். சாணக்கியனை முறைத்த கெளதம் அப்பெண்மணியை பார்த்து பண்பாட்டுக்காக சிரிக்க அவரோ கௌதமை நோக்கி நெருங்கி வந்தவர், "ஷால் வீ டேட்" என்று கேட்டார்.
கௌதமுக்கு மயக்கம் வராத குறையாக சாணக்கியனை பார்க்க அவனோ தான் ஒரு எம்.பி என்பதையே மறந்து ஓரமாக போய் வயிற்றை பொத்தி சுவரை பார்த்து சத்தமாக சிரித்துக் கொண்டிருந்தான். தர்மசங்கடப்பட்ட கெளதம், "சாரி மேடம் ஐ அம் மரீட், சோ ஐ அம் நாட் இன்ட்ரெஸ்ட்டட்" என்றதும் "லக்கி கேர்ள்" என்றவர் அவன் கன்னத்தில் எம்பி முத்தமிட்டு விட்டு, "பை ஹாண்ட்சம்" என்று சொல்லிச் சென்றார்.
எதிர் பார்க்காத அவரது முத்தத்தில் அதிர்ந்த கெளதம் சாணக்கியனை பார்க்க அவனோ சிரிப்பை கஷ்டப்பட்டு நிறுத்தி இருந்தான்.
மெதுவாக கெளதம் அருகில் வந்து, "போகலாமா?" என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் கேட்டவன் முன்னே செல்ல ஆயத்தமாக இருவர் முன்னாலும் கயல் விழி சினம் தெறித்த பார்வையுடன் பத்திரகாளியாய் நின்று இருந்தாள்.
"உனக்கு அவனை கிண்டல் பண்ணலனா நிம்மதியே இருக்காதா?" என்று சாணக்கியன் சிரித்தபடி கூறினாலும் அவன் முகத்தில் இனம் புரியாத சீற்றம் இருந்தது. அந்த கோபம் எதற்காக என்று கௌதமுக்கும் தெரியும். அவன் எண்ணத்தை திசை திருப்ப யோசித்தவன், "என்னடா லவ் எல்லாம் பண்ணுற? ஒரே புதுசா இருக்கு" என்று நக்கல் குரலில் கேட்க கௌதமை கூர்மையாக பார்த்தவன், "உன்னை போல மனசுக்குள்ள காதலை வச்சிட்டு நான் மறைக்க மாட்டேன். ஐ லவ் வசுந்தரா" என்றான்.
அவன் கூற்றில் கௌதமுக்கு குற்ற உணர்வு எட்டி பார்த்தாலும் அதை சமாளிக்கும் பொருட்டு, "எனக்கு ஒண்ணும் லவ் எல்லாம் இல்ல...என்னோட வேலை முடிஞ்சதும் உன் தங்கச்சிக்கு சீக்கிரம் டிவோர்ஸ் கொடுத்து விடுவேன்" என்றான். ஒரு அண்ணனாக வந்த கோபத்தில் அவனை முறைத்தவன், "பார்த்தா அப்படி தெரியலையே... பப்ளிக் என்றும் பார்க்காம கட்டி பிடிக்கிற கிஸ் பண்ணுற அதெல்லாம் எனக்கு தெரியாதுனு நினைச்சியா?" என்று சினம் பொங்க கேட்டான்.
'இவன் எங்க எங்க ஆள் வச்சு இருக்கான் என்றே தெரியவில்லையப்பா... கெளதம் சமாளிடா' என்று மனதுக்குள் புலம்பியவன் பெருமூச்சை எடுத்து, "உன் ஸ்பை எல்லாம் வேஸ்ட்டா... பாரு உன் கிட்ட பிழை பிழையா தகவல் சொல்லி இருக்காங்க" என்றவனை, "ஆஹா" என்று விழி விரிய பார்த்தவன் தனது தொலைபேசியை எடுத்து அதில் ஒரு வீடியோவை அவனுக்கு போட்டு காட்டினான்.
அதில் கெளதம் கயல் விழியை ரத்த தான மண்டபத்தில் வைத்து முத்தமிட்டது தொடக்கம் தூக்கிக் கொண்டு வெளியில் சென்று கட்டி பிடித்தது என ஒவ்வொன்றும் வெவ்வேறு ஆட்களிடம் இருந்து அவனுக்கு அனுப்ப பட்டிருந்தது. தனது செயலை நினைத்து மானசீகமாக தலையில் அடித்தவன் சங்கடப்பட்டுக் கொண்டே தொலைபேசியை திருப்பி கொடுத்தவன், "எத்தனை பேர்டா ஸ்பையா வச்சு இருக்க?நிம்மதியா ஒரு வேலை கூட செய்ய முடியல" என்று பேச்சை மாற்றினான்.
அது வரை அவனை மெல்லிய புன்னகையுடன் பார்த்துக் கொண்டு இருந்தவன், "நீ பேச்சை டைவர்ட் பண்ணாம எனக்கு பதில் சொல்லு... இதெல்லாம் லவ் இல்லாமலா நீ பண்ணின?" என்று கேட்க அவனோ அந்த பேச்சை தவிர்க்கும் பொருட்டு, "ரொம்ப வலிக்குதுடா சும்மா தொண தொணக்காம வா" என்றபடி கண்களை மூடியவன் மறந்தும் கண் திறக்கவில்லை. அவன் செய்கையை புன்னகையுடன் பார்த்தவன் இருபக்கமும் தலையாட்டி சிரித்தபடி வெளியில் பார்வையை செலுத்தியபடி வந்தான்.
வைத்திய சாலை வந்ததும் விஷ்வாவுக்கு அழைத்து ஸ்ட்ரெச்சரை வாசலுக்கு அனுப்ப சொன்ன சாணக்கியன், கௌதமை ஸ்ட்ரெச்சரில் ஏற்றி விஷ்வா இருக்கும் இடத்துக்கு கொண்டு கொண்டுச் சென்றான்.
போலீஸ் பிரச்சனைகளை தவிர்க்கும் பொருட்டு தோளில் இறங்கிய புல்லட்டை அகற்ற தேவையான மருத்துவ பொருட்களுடன் தனி அறையை விஷ்வாவிடம் ஏற்பாடு பண்ண சொன்னவன் மறந்தும் அடிபட்டது யாருக்கு என்று மூச்சு விடவில்லை.
நேரில் சமாளிக்கலாம் என்ற தைரியத்தில் கௌதமை கொண்டுச் சென்றான்.
கொண்டு போகும் போது, "டேய் அவன் ரொம்ப பண்ணுவான் வேணாம்டா" என்று கெளதம் கெஞ்ச சாணக்கியனோ, "வாய மூடிட்டு வாடா" என்று திட்டியபடி உள்ளே கொண்டுச் சென்றான்.
கதிரையில் சாய்ந்து இருந்து தொலைபேசியை பார்த்துக் கொண்டிருந்த விஷ்வா உள்ளே சாணக்கியன் வர எழுந்து அவனை நோக்கிச் சென்றவன் பின்னால் ஸ்ட்ரெச்சரில் கௌதமை பார்த்ததும் ஒரு கணம் அதிர்ச்சியடைந்தான். கௌதமோ அவனை பார்க்காமல் தலையை சாணக்கியனை நோக்கி திருப்பி அவனை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தான்.
ஊழியர்கள் ஸ்டர்ட்ச்சரை வைத்து விட்டு வெளியேற, "அண்ணா..." என்று தொடங்கியவனை வாயில் கை வைத்து பேச வேண்டாம் என்று சைகை செய்தவன், "இவரை கொஞ்சம் ட்ரீட் பண்ணு" என்றான் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து இருந்தபடி . 'இப்போ என்னை கண்டுக்கிறதே இல்ல, தேவை என்றால் மட்டும் வர வேண்டியது' என்று வெளியில் புலம்ப முடியாததை மனதுக்குள் புலம்பிய விஷ்வா கெளதம் கையில் சாணக்கியன் கட்டி இருந்த கட்டை அவிழ்த்து, "டிஷர்டை கழட்டுங்க" என்றான்.
அவன் கூறியதில் கடுப்பான கெளதம், 'கொஞ்சம் கூட அறியவில்லையா இவனுக்கு? இந்த கைய வச்சிட்டு நான் எப்படி கையை உயர்த்தி கழட்டுறது?' என்று மனசுக்குள் திட்டியவன், "கழட்ட எல்லாம் முடியாது வேணும்னா வெட்டி விடுங்க" என்றான்.
அப்போது தான் கையை அசைக்க அவன் கஷ்டப்படுவது புரிய கத்தரிக்கோலை எடுத்து டிஷர்டை வெட்டி எறிந்தவன் புல்லட் இருக்கும் கையை பரிசோதித்தான். அவன் கை பட்டதும் கௌதமுக்கு வலிக்க அவனுக்கு எரிச்சல் முண்டியது. பொறுமை இழந்தவன் சாணக்கியனை பார்த்து, "டேய் வேணும்னே புஷ் பண்ணுறான் டா" என்று தன்னை மறந்து கத்த சாணக்கியனோ கண்களை விரித்து இல்லை என்ற தோரணையில் தலையை ஆட்டினான். அதன் பிறகு தான் மறதியில் சாணக்கியனிடம் மரியாதை இல்லாமல் பேசியது நினைவுக்கு வர நாக்கை கடித்துக் கொண்டவன் விஷ்வாவை மெல்ல திரும்பி பார்த்தான்.
விஷ்வாவோ கௌதமை எரித்து விடுவது போல் பார்க்க சங்கடப்பட்ட கெளதம் சாணக்கியனை நோக்கி திரும்பி, "சார் வேணும் என்றே அமுக்குகிறார்" என்றான் மென்மையான குரலில். நண்பனின் நடிப்பில் பொங்கி வந்த சிரிப்பை கஷ்டப்பட்டு கொடுப்புக்குள் அடக்கிய சாணக்கியன், "விஷ்வா கொஞ்சம் பார்த்து" என்று சொல்ல, சாணக்கியனையும் கௌதமையும் சந்தேகமாக பார்த்த விஷ்வா பெருமூச்சொன்றை எடுத்து விட்டு தனது வேலையை தொடர்ந்தான்.
காயத்தில் கத்தியை வைக்கும் போது, "இது ஒண்ணும் வேணும் என்று நான் பண்ண போறது இல்லை... வலிக்கும், கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்க... ஒரு போலீஸ் ஆஃபீசர்க்கு இது பெரிய வலியில்லைனு நினைக்கிறேன்" என்று நக்கலாக சொன்னதும் கௌதமுக்கு கோபம் வர பல்லை கடித்துக் கொண்டு முகத்தை கடினமாக்கி வலியை பொறுத்துக் கொண்டான்.
அவன் புல்லட்டை வெளியே எடுத்த போதும் தையல் போட்ட போதும் காயத்துக்கு கட்டு போட்ட போதும் ஒரு சின்ன முனகல் கூட அவனிடம் இருந்து வரவில்லை. அவன் மன உறுதியை பார்த்து மலைத்த விஷ்வா எல்லாம் முடிய அங்கிருந்த கட்டிலில் படுத்து கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க சொன்னான்.
அவனும் கண் மூடி தூங்கியதும், "என்ன நடந்தது ?" என்று விஷ்வா சாணக்கியனை பார்த்து கேட்க, "ஒரு சின்ன ஆக்சிடென்ட்" என்றவன் சோபாவில் கால் மேல் கால் போட்டு சாய்ந்து இருந்து கண் மூடி அதிலேயே தூங்க தொடங்கினான்.
இருவரும் தூங்குவதை பார்த்தவன் தனது கைகளை கழுவி விட்டு அவனது சுழல் நாற்காலியில் ஒரு கையை தலைக்கு பின்னால் வைத்து சாய்ந்த படி தொலைபேசியை பார்த்த வண்ணம் இருந்தான்.
சிறிது நேரம் கழித்து எழுந்த கெளதம் தூங்கிக் கொண்டிருந்த சாணக்கியன் பக்கத்தில் போய் உட்கார்ந்தான். அவன் அருகில் வந்து இருந்ததும் கண் விழித்த சாணக்கியன், "எப்படி இருக்கு?" என்று கேட்க, "பரவாயில்லை" என்றவன் விஷ்வாவை பார்த்தான்.
தொலைபேசியை விஷ்வா பார்த்துக் கொண்டு இருந்தாலும் அவன் கவனம் முழுதும் கௌதமிலும் சாணக்கியனிலுமே இருந்தது.
அந்நேரம் பார்த்து கயல்விழி விஷ்வாவுக்கு அழைத்து, "அண்ணா சாப்பிட வரலையா?" என்று கேட்க அவர்கள் இருக்கும் அறை எண்ணை சொன்னவன் அங்கு அவளை சாப்பாட்டை எடுத்து வரும் படி கூறினான். 'இப்போ எதுக்கு அவ இங்க? குடும்பமா சேர்ந்து நம்மள ஒரு வழி பண்ணாம விடமாட்டாங்க' என்று நினைத்த கெளதம் ஜன்னலினூடு வெளியில் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.
உள்ளே வந்த கயல்விழி அனைவரும் அங்கே இருப்பதை பார்த்து அதிர்ந்து போனாள். சாணக்கியனிடம், "என்ன அண்ணா?" என்று தொடங்கியவள் பக்கத்தில் கெளதம் கையில் கட்டுடன் இருப்பதை பார்த்து அதிர்ந்து இருக்கும் இடம் மறந்து அவனை நோக்கி ஓடினாள். சோபாவில் இரு கைகளையும் முட்டியில் வைத்து கோர்த்தபடி இருந்த அவனருகில் முழங்காலில் இருந்தவள், "என்னாச்சு? ஏன் கட்டு போட்டிருக்கு?" என்று கட்டை வருடிய படி கண்ணீருடன் கேட்க அவனோ அவள் முகத்தை திரும்பி கூட பார்க்காமல் வெளியில் வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தான்.
தங்கையின் நிலையை எண்ணி இரு அண்ணன்களுக்குமே ஆத்திரம் தலைக்கு ஏறியது. 'அவ எவ்வளவு அக்கறையா கேக்கிறா, வாய திறக்கிறானா பாரு கல்லுளி மங்கன்' என்று மனதுக்குள் கௌதமுக்கு திட்டிய விஷ்வா இன்னும் அங்கு இருந்தால் ஏதும் விபரீதமாகி விடும் என்று நினைத்தபடி கதிரையில் இருந்து எழுந்தவன் அவனை முறைத்தபடி விறு விறுவென கதவை திறந்து வெளியேறினான்.
சாணக்கியனுக்கு கெளதம் மேல் கோபம் வந்தாலும் அதை அடக்கியவன், "ஒண்ணுமில்ல கயல் சின்ன காயம் தான்" என்றான். அவர்களின் உணர்வுகள் அனைத்தும் கௌதமுக்கு விளங்கினாலும் அவன் மறந்தும் கயலை பார்க்கவில்லை. கணவன் உதாசீனத்தில் இரட்டிப்பாக வந்த கண்ணீரை துடைத்தபடி எழுந்தவள், "சாப்பிட்டாரா அண்ணா ?" என்று கேட்க "இல்லம்மா, நீ ஊட்டி விடு நான் வெளிய போறேன்" என்று எழுந்தவனை அனல் பறக்க திரும்பி பார்த்த கெளதம், "எனக்கு பசிக்கல" என்றபடி வெளியில் செல்ல போக அவனை தடுத்த சாணக்கியன், "நான் கொண்டு விடுறேன் வா" என்றபடி அவனுடன் சென்றான்.
வாசலுக்குச் சென்றவன் கலங்கி நின்ற கயலை பார்த்து, "நீயும் விஷ்வாவும் சாப்பிடுங்க... நாங்க கிளம்புறோம்" என்ற படி புறப்பட்டான்.
வெளியில் நடந்துச் செல்லும் போது அனைவரின் பார்வைகளும் கௌதமிலேயே நிலைத்திருந்தது. போலீசுக்கு என்றே செதுக்கிய போல அவனின் கட்டுமஸ்தான வெற்று மார்பையும் முறுக்கேறிய ஜிம் உடலையும் அனைவரும் பார்த்து ரசித்து விட்டேச் சென்றனர். அவர்கள் பார்வையில் எரிச்சலடைந்தவன், "டேய் இங்க ஒரு டிஷர்ட் எடுக்கலாமா?" என்று கேட்டான். அனைத்தையும் அவதானித்த சாணக்கியன், "ஏன் டா செம ஹாட் ஆக தானே இருக்கிற? எதுக்கு மறைச்சுக்கிட்டு... என்ஜோய் படி" என்று சிரித்தபடி சொன்னான்.
சாணக்கியனை முறைத்தவாறே முன்னால் திரும்பியவன் தன்னை ரசனையுடன் பார்த்து வந்த இளம் பெண்களை கண்டு மனதுக்குள், 'முன்ன பின்ன ஆம்பளையையே பார்க்காத போல ஆ என்று பார்க்கிறத பாரு... உங்கள எல்லாம் வீட்ட சாத்தி வளர்த்திருக்கணும்டி' என்று திட்டியபடி நடந்த போது அவ்வழியால் நடந்து வந்த ஒரு வயதான வெளிநாட்டு பெண்மணி அப்படியே நின்று "வாவ்" என்றார்.
அதை கேட்டு சாணக்கியனுக்கு சிரிப்பு தாங்க முடியாமல் சத்தமாக சிரித்தவன், "உனக்கு பொருத்தமான ஜோடி தான்" என்றான். சாணக்கியனை முறைத்த கெளதம் அப்பெண்மணியை பார்த்து பண்பாட்டுக்காக சிரிக்க அவரோ கௌதமை நோக்கி நெருங்கி வந்தவர், "ஷால் வீ டேட்" என்று கேட்டார்.
கௌதமுக்கு மயக்கம் வராத குறையாக சாணக்கியனை பார்க்க அவனோ தான் ஒரு எம்.பி என்பதையே மறந்து ஓரமாக போய் வயிற்றை பொத்தி சுவரை பார்த்து சத்தமாக சிரித்துக் கொண்டிருந்தான். தர்மசங்கடப்பட்ட கெளதம், "சாரி மேடம் ஐ அம் மரீட், சோ ஐ அம் நாட் இன்ட்ரெஸ்ட்டட்" என்றதும் "லக்கி கேர்ள்" என்றவர் அவன் கன்னத்தில் எம்பி முத்தமிட்டு விட்டு, "பை ஹாண்ட்சம்" என்று சொல்லிச் சென்றார்.
எதிர் பார்க்காத அவரது முத்தத்தில் அதிர்ந்த கெளதம் சாணக்கியனை பார்க்க அவனோ சிரிப்பை கஷ்டப்பட்டு நிறுத்தி இருந்தான்.
மெதுவாக கெளதம் அருகில் வந்து, "போகலாமா?" என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் கேட்டவன் முன்னே செல்ல ஆயத்தமாக இருவர் முன்னாலும் கயல் விழி சினம் தெறித்த பார்வையுடன் பத்திரகாளியாய் நின்று இருந்தாள்.