அத்தியாயம் 11
நாட்கள் மெதுவாக நகர ஆரம்பித்தது.. ஆதித் மாதவியிடமும் மாதேஷிடமும் நடந்த மறைக்க வேண்டிய விடையங்களை மறைத்து சொல்ல வேண்டிய விடயங்களை சொல்லி இருந்தான். முக்கியமாக தான் மதுபாலாவின் மகன் என்ற விடயம் தெரியும் என்பதை பற்றி அவன் மூச்சு கூட விடவில்லை...
தாயின் விருப்பப்படி தொழிலுக்கு சென்றாலும் சமூக சேவையில் ஆர்வம் உடையவன் அதனைக் கை விடவில்லை. அதன் பலனாக அவனுக்கு கிடைத்தது அந்த ஊர் அரசியல்வாதியின் விஷேட ஆலோசகர் பதவி.. அரசியலில் நேரடியாக ஈடுபடுவதை விட, அவனுக்கு இந்த ஆலோசகர் பதவி பிடித்து போய் இருந்ததால் பகுதி நேரமாக அதிலும் ஈடுபட்டு இருந்தான். பகலில் உடல் களைக்க ஓய்வே இல்லாமல் வேலை செய்தாலும் இரவின் தனிமையில் அவனை வாட்டிக் கொண்டு இருந்தது நதீகாவின் நினைவலைகள்.. வேலைக்கு செல்லும் அவனுக்கே இந்த நிலை என்றால் வேலையை விட்டு விட்டு அறைக்குள் அடைந்து கிடந்த நதீகாவின் நிலையை சொல்லவே தேவை இல்லை. நேரத்துக்கு சாப்பிடாமல் தனிமையில் தவித்தவளுக்கு காதல் ஒரு பக்கம், அவன் ஏமாற்றியது மறுபக்கம் என்று அனைத்தும் அவளை வதைக்க, உடல் மெலிந்து சோர்ந்து போனாள். அவளிடம் பேச பாண்டியனுக்கோ அவர் மனைவிக்கோ அவ்வளவு தைரியம் இருக்கவில்லை. அவள் இஷ்டத்துக்கே விட்டவர்கள் ஒரு பார்வையாளராகவே அந்த வீட்டில் இருந்தார்கள்..
ஆதித்தின் தோற்றமும் பொலிவிழந்து போக அது கரிகாலன் கண்ணில் இருந்து தப்புமா என்ன? சிரைக்காத தாடியும்.. சிரிக்காத இதழ்களும் என்று இருந்தவன் வேலையில் தீயாக இருந்தாலும் கண்ணில் ஒரு ஏக்கம் வலி அப்பட்டமாக தெரிந்தது. முதல் மாதேஷ் அவனை கலாய்த்தால் மீண்டும் மாதேஷை வைத்து செய்பவன் இப்போது சிறு புன்னகையுடன் கடந்து போக, அவனுக்கும் மனசு பாரமாகி போனது. அவன் ஒருவன் சந்தோஷம் இழந்ததால் அந்த வீடே சோகத்தில் உறைந்து இருக்க, அவன் சந்தோஷத்தை மீட்டெடுக்கும் வல்லமை படைத்தவளும் அதே சோகத்துடன் வீட்டில் இருந்தாள்.
ஒரு நாள் வேலை விஷயமாக செல்வதாக கூறி விட்டு சென்ற கரிகாலன் நேரே சென்றது நதீகாவை தேடி தான். கரிகாலனை கண்டதுமே "வாங்க கரிகாலன்" என்று பாண்டியன் வரவேற்க , சுத்தி வளச்சு பேச விரும்பாத கரிகாலனும் " நான் நதீகாவை பார்க்கணும் சார்" என்று சொல்ல அவரோ "சம்பந்தின்னு சொல்லுங்க" என்றார். அதைக் கேட்டு புன்னகைத்த கரிகாலனும் "சரி சம்பந்தி" என்று சொல்ல அவரோ பெருமூச்சுடன் "என்ன பிரச்சனை ஏன் இந்த பிரிவுன்னு தெரில, ஆனா பொண்ணு வாழா வெட்டியா இருக்கும் போது வலிக்குது" என்று சொல்லும் போதே அவர் குரல் அப்பட்டமாக வலியைக் காட்டியது,..
கரிகாலனோ "எல்லாம் சீக்கிரமே சரி ஆகிடும்" என்று சொல்லி விட்டு , பாண்டியனுடன் மேலே அவள் அறையை நோக்கி சென்றார். பாண்டியன் கதவை தட்ட வெளியே வந்தவள் வாசலில் நின்ற கரிகாலனை பார்த்து சற்றே அதிர்ந்து தான் போனாள். அறிமுகம் தேவையே இல்லாமல் இருந்த கரிகாலனின் தோற்றத்தை பார்த்து "நீங்க எப்படி இங்க?"என்று தட்டு தடுமாறி கேட்க "உன் கூட கொஞ்சம் பேசணும் " என்றார் கரிகாலன். அவளும் "ம்ம்" என்று சொல்ல, அருகே இருந்த பால்கனி அருகே போய் நின்ற கரிகாலன் அந்த கம்பியில் இரு கைகளையும் இறுக பற்றியபடி நிற்க, அவர் அருகே வந்த நதீகா "சொல்லுங்க மாமா" என்றாள்…
.. வரும் போது ஒரு தயக்கத்துடனேயே வந்த கரிகாலனுக்கு அந்த மாமா என்ற அழைப்பு நம்பிக்கையை அளிக்க, மெலிதாக புன்னகைத்தவன் "என்னம்மா பிரச்சனை .. சொன்னா தானே தெரியும்" என்று கேட்க அவளோ பொங்கி வந்த கண்ணீரை உள்ளே இழுத்துக் கொண்டு "ஆதித்துக்கு எல்லாமே நடிப்பு மாமா , அவன் பண்ணினத சொன்னா நீங்க கூட தாங்க மாட்டீங்க " என்று சொல்ல அவரோ "அவன் எப்போவுமே தப்பு பண்ண மாட்டான்" என்றார். அதுவரை பொறுமையாக இருந்தவளுக்கு அவனுக்கு சார்பாக கரிகாலன் பேசியது அதிர்ச்சியாக இருக்க " நீங்க நினைக்கிற போல இல்ல மாமா, அவன் ரொம்ப தப்பானவன்" என்று சொன்னாள்.
உடனே கரிகாலன் "நீ அவனை புரிஞ்சுக்கலம்மா," என்று சொல்ல அவள் பொறுமை காற்றில் பறந்து போனது.. "நீங்க உங்க மகனுக்கு சப்போர்ட் பண்ணுறீங்க,, அவன் கொலைகாரனா இருந்தா கூட இப்படி தான் சப்போர்ட் பண்ணுவீங்களா?" என்று கேட்க அவரோ அவளை பக்கவாட்டாக திரும்பி பார்த்து "அவன் கையால ஒரு எறும்பு இறந்தா கூட அந்த எறும்பு ஏதோ பெரிய பாவம் வாழ்க்கையில பண்ணி இருக்குன்னு அர்த்தம்" என்று சொல்ல அவளுக்கோ அவர் ஆதித் மேல் அவ்வளவு நம்பிக்கை வைத்து பேசுவது எரிச்சலாக இருந்தது.
"நீங்க என்ன சொன்னாலும் நம்ப மாட்டிங்க ,, அவன் மேல எவ்வளவு காதல் வச்சு இருந்தேன் தெரியுமா? இப்போ கூட அவன் நினைப்பு தான் எனக்கு" என்று சொன்னவள் கண்ணில் இருந்து இரு சொட்டு கண்ணீர் வழிய "அவனும் உன் நினைவா தான் இருக்கான் நதீகா, மனசுல ரெண்டு பேரும் எவ்வளவோ காதல் வச்சுட்டு ஏன் இந்த பிரிவு?" என்று கேட்க அவளோ "அவன் என்ன பண்ணினான் தெரியுமா?" என்று ஆரம்பித்து ஒரு கணம் நிறுத்தி "ச்ச வேணாம், விடுங்க மாமா, அத நான் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்" என்று சொல்ல அதைக் கேட்டு மெலிதாக சிரித்த கரிகாலன் "அவன் தான் மதுபாலா இறப்புக்கு காரணம் .. ரைட்?" என்று கேட்க அவரை விழி விரித்து அதிர்ந்து பார்த்தாள் நதீகா.
பெருமூச்சுடன் முன்னே திரும்பி "மதுபாலாவை பற்றி உனக்கு தெரியுமா?" என்று ஆரம்பித்து தனது வாழக்கையை கூற அவள் முகமோ மதுபாலா மேல் கோபத்தில் கொப்பளித்த அதே கணம் அவள் கண்களோ தன்னவன் பட்ட வேதனையை நினைத்து கலங்கி போனது. உடனே அவள் "மதுபாலா இவ்வளவு மோசமா?" என்று கேட்க அவரோ "உனக்கு சந்தேகம் வரும்னு தெரியும்.. அது தான் ஆதாரம் கூட கொண்டு வந்து இருக்கேன்" என்று ஆதாரத்தை அவளிடம் காட்ட, வாயில் கை வைத்து இரு அடிகள் பின்னே சென்றவளுக்கு பேச வார்த்தைகள் வந்தால் தானே. தன்னவனைப் பற்றி தெரியாமல் அவனை வார்த்தையால் வதைத்து விட்டாள் அல்லவா? கலங்கிய கண்களுடன் அவரை ஏறிட்டு பார்த்தவள் "எனக்கு ஆதித்தை இப்போவே பார்க்கணும். நானும் உங்க கூட வரவா மாமா?" என்று கேட்க கரிகாலன் முத்துப் பற்கள் தெரிய சிரித்தவர் "தாராளமா" என்றார். அவள் மன மாற்றம் பாண்டியனுக்கும் மனைவிக்கும் கூட பூரிப்பாக இருக்க,தன்னவனை காண அவள் கரிகாலனுடன் புறப்பட்டு இருந்தாள்.
அடுத்த நாள் ஓய்வு நாளாக இருக்க, முதலில் நுழைந்த கரிகாலன் "வாம்மா" என்று அழைக்க, உள்ளே இருந்த மாதவி மற்றும் மாதேஷ் வாசலை எட்டிப் பார்த்தனர். உள்ளே பெட்டியோடு நுழைந்தவளை பார்த்த மாதவி பூரிப்புடன் "அங்கேயே நில்லும்மா" என்று சொல்லி விட்டு ஓடிச் சென்று ஆரத்தி தட்டை எடுத்து வர, மாதேஷோ "ஹாய் அண்ணி" என்று உரிமையாக அழைத்தான். அனைவரையும் பார்த்த மாத்திரத்திலேயே நதீகாவுக்கு பிடித்துப் போக, அனைவரிடமும் சகஜமாக உரையாட ஆரம்பித்தாள். இது எதுவும் அப்போது தான் எழுந்து குளியலறைக்குள் நுழைந்த ஆதித்துக்கு தெரிய வாய்ப்பு இல்லை. அவளை ஆரத்தி எடுத்து அழைத்து வந்த மாதவி "இது தான் ஆதித் ரூம்" என்று காட்ட அவளும் கதவை மெதுவாக திறந்தாள். அங்கு குளியலறைக்குள் குளிக்கும் சத்தம் கேட்க அவளோ உள்ளே வந்து பெட்டியை வைத்து விட்டு அந்த அறையை சுற்றி பார்க்க ஆரம்பித்தாள்.
அந்த சமயம் குளித்து விட்டு வெளியே இடையில் டவலுடன் வந்த ஆதித் ஒரு கணம் அவளை பார்த்து கண்களை கசக்கியவன் , "உண்மையா தான் வந்து இருக்கா" என்று அவள் பெட்டியை பார்த்து நினைத்து உறுதிப் படுத்தியவன் கண்ணாடி முன்னே நின்று தலையை துவட்ட ஆரம்பித்தான். அவளோ அவன் வந்ததுமே திரும்பி பார்த்த போதும் கூட அவன் பாரா முகம் வதைக்க ஈகோ எல்லாம் தூக்கி எறிந்து விட்டு பின்னால் சென்று அவன் இடையை அணைத்து அவன் வெற்று முதுகில் கன்னம் வைத்தவள் "ஐ அம் சாரி ஆதித்.. உண்மை தெரியாம தப்பா பேசிட்டேன்" என்று சொல்ல அவனும் தனது வயிற்றை சுற்றி இருந்த அவள் கைகளை வலுக்கட்டாயமாக அகற்றியபடி " ம்ம்" என்று உரைத்தவன் வெளியே செல்ல ஆயத்தமாக அவளுக்கோ சப்பென்று ஆனது. உடனே "என்னை மன்னிக்கவே மாட்டிங்களா" என்று அவன் மூச்சு காற்று படும் தூரத்தில் வந்து நின்று அவன் திண்ணிய மார்பில் கை வைக்க போக, அவள் கையை பிடித்து உதறி தள்ளியவன் "வேணாம்மா, அப்புறம் உனக்கு தான் அருவருப்பா இருக்கும்" என்று சொல்லும் போதே அவன் குரல் அந்த வார்த்தைகளால் உண்டாக வலியை அப்பட்டமாக காட்டியது.
அவனை ஏறிட்டு அடிப்பட்ட பார்வை பார்த்தவள் "ப்ளீஸ் ஆதித், இப்படி பேசாதீங்க, ரொம்ப வலிக்குது,, அது கோபத்துல பேசிட்டேன்...நான் என்ன பண்ணினா என்ன மன்னிப்பீங்க?" என்று கேட்க அவனோ "ஒண்ணுமே பண்ண தேவலம்மா,, என்னை தொந்தரவு பண்ணாம இருந்தாலே போதும்" என்று சொன்னபடி ஷேர்ட்டை அணிந்து கொள்ள அவளோ அவனை நெருங்கி அவன் ஷேர்ட் பட்டனை பூட்டியபடி "என்னையும் வெளியே அழைச்சிட்டு போறீங்களா ப்ளீஸ் ?" என்று உரிமையாக கேட்டாள் .
அவனோ அவள் கையை ஷேர்ட்டில் இருந்து அகற்றியவன் "நான் யாரையும் அழைச்சிட்டு போறதா இல்ல" என்றபடி ஆயத்தமாகி வெளியே வர, அவன் பின்னால் அவளும் வந்தாள் . அவன் வந்ததுமே "சாப்பிட்டு போப்பா" என்று மாதவி சொல்ல சாப்பிட அவன் அமர, அவன் அருகே அமர்ந்தவள் "ப்ளீஸ்" என்று கண்களால் கெஞ்சினாள். அவனோ இறுக்கமாக அமர்ந்து இருக்க, அவள் மனமோ "இவன் கிட்ட கெஞ்சி காரியம் சாதிக்க முடியாது. நம்ம அதிரடி தான் சரியா வரும்" என்று நினைத்தவள் அருகே மும்முரமாக சாப்பிட்டுக் கொண்டு இருந்த மாதேஷை பார்த்து விட்டு ஆதித்தின் காதருகே எம்பி "இப்போ உள்ளே நீங்க வரலன்னா , உங்க தம்பி இருக்கார்னு பார்க்காம கிஸ் பண்ணுவேன். என்னை பத்தி தெரியும் தானே" என்று கேட்க அவனோ அதிர்ச்சியுடன் விழி விரித்து நதீகாவை பார்த்தான்.
அவளோ கண்களால் உள்ளே வரும்படி சைகை செய்து விட்டு அவன் அறைக்குள் புகுந்து கொள்ள அவனோ தம்பியை ஒரு கணம் பார்த்து விட்டு அவள் பின்னே நுழைந்தான். உள்ளே அவன் வந்ததுமே கதவை தாள் போட்ட நதீகா "மன்னிப்பு கேட்டா மன்னிக்கணும்.. இப்படி ஓவர் பில்ட் அப் பண்ணுனா எனக்கு பிடிக்காது" என்று விரல் நீட்டி பேச, அவள் விரலை பிடித்து முறுக்கினான் அவன். அவளோ வலி தாங்க முடியாமல் "ஆஆ வலிக்குது ஆதித்" என்று அலறியவள் அவன் கையை விட்டதும் நெருங்கி வந்து "நிஜமா எனக்கே ரொம்ப கஷ்டமா போச்சு.. நீங்க பண்ணினது தப்பே இல்ல" என்று சொன்னவள் கண்ணில் இருந்து விழுந்த கண்ணீர் கூட மன்னிப்பு யாசித்தது. அவனோ அவளை அழுத்தமாக பார்த்தவன் "டச் பண்ணாம நில்லும்மா.,அப்புறம் உனக்கு தான் அருவருப்பா இருக்கும்" என்று சொல்ல அவளும் "ப்ளீஸ் ஆதித் அது கோபத்துல பேசுனது. அதயே எவ்ளோ நாளுக்கு பேச போறீங்க" என்று இயலாமையுடம் கேட்டாள். அவனோ "நியாபகம் இருக்கும் மட்டும், இப்போ நான் கிளம்புறேன்" என்று சொன்னபடி வெளியேற போக, அவன் ஷேர்ட் காலரை பிடித்து தன்னை நோக்கி இழுத்தவள் அவன் இதழில் அழுந்த இதழ் பதித்து இருந்தாள். அவன் மேனியிலோ மின்சாரம் பாய்ந்த உணர்வு.. அவளை இழுத்து சரசமாட மனம் ஆணையிட்டாலும் அவனது ஈகோ விட்டால் தானே.
அவன் இதழில் முத்தம் பதித்தது மட்டும் அல்லாமல் அவனது கீழ் அதரங்களில் அழுத்தமாக பற் தடத்தை பதிக்க அவனோ வலி தாங்க முடியாமல் "ஆ" என்று அறியவன் அவளை வலுக்கட்டாயமாக தள்ளி நிறுத்தினான். அவளோ மீண்டும் அவன் ஷேர்ட்டை பிடித்து இழுத்து, "அருவருப்பா இல்லன்னு ப்ரூப் பண்ண வேணாமா?" என்று அவன் கேட்ட தோரணையிலேயே ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டவள் தனது உடல் முழுதும் அவன் மேனியில் உரச, தனது காலை அவன் காலில் வைத்து எம்பி அவன் முகத்தில் ஓய்வின்றி முத்தம் வழங்கி இதழில் இளைப்பாறினாள் . அவனோ அவள் இதழ் ஈரத்தினால் உணர்ச்சியின் பிடியில் இருந்தாலும் கஷ்ட்டபட்டு தன்னை தானே பாக்கெட்டில் கை விட்டு கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தான்.
அவளோ அப்போதும் சலிக்காமல் அவன் கழுத்தில் பற்தடங்களை பதித்தபடி இறுக அவனை அணைத்துக் கொள்ள, அதுவரை இருந்த அவன் கட்டுப்பாடுகள் காற்றில் பறந்து போனது.
அவளை அப்படியே தூக்கி அணைத்து மஞ்சத்தில் சரித்தவன் அடுத்த கணமே அவள் செயலை தனதாக்கி இருந்தான். முதல் தடவை காதல் மட்டுமே கொண்டு இணைந்த இரு ஜீவன்கள், இன்று காதலும் புரிந்துணர்வும் ஒருங்கே உருவாக ரெண்டற கலந்தன.
எபிலாக்
சில மாதங்கள் கழித்து ,
காலையிலேயே கோர்ட் ஷேர்ட் போட்டு ஆயத்தமானவன் அருகே வந்து அவனையே பார்த்து இருந்தாள் நதீகா.. அவனோ தலையை கோதியபடி அவளை நெருங்கி அவள் செவ்விதழ்களில் இதழ் பதித்து விட்டு "இப்படியே பார்த்துட்டு இருந்தா நான் மீட்டிங் போக வேணாமா?" என்று கேட்க அவளோ " தம்பியோட பொண்ணு பார்க்கிற பன்க்ஷனை விட மீட்டிங் ஆஹ் முக்கியம்" என்று ஆதங்கமாக கேட்டாள். அவனும் " அவன் கட்டிக்க போற பொண்ண அவன் தான் பார்க்கணும்.. நான் பார்த்து என்ன பண்ண முடியும்..? " என்று கேட்க அவளோ இதழ்களை சுளித்தபடி "க்கும்" என்றாள்.
"முக்கியமான மீட்டிங்டி புரிஞ்சுக்கோடி" என்று சொன்னவன் கரங்கள் அவள் மேடிட்ட வயிற்றை வருட, அவளோ அவன் கோர்ட்டில் இருந்த தூசை தட்டியபடி "எப்போ பார்த்தாலும் மீட்டிங் தானா? உங்க தம்பி பாவம் இல்லையா?" என்று கேட்டாள். "நான் மினிஸ்டர் உடைய ஸ்பெஷல் அட்வைசர் .. மீட்டிங் போகலன்னா அவருக்கு கையும் ஓடாது காலும் ஓடாது" என்று சொல்ல அவளும் பெருமூச்சுடன் " அவருக்கு பேர் தான் மினிஸ்டர்..எல்லா வேலையும் நீங்க தான் பார்க்கிறீங்க" என்று சொன்னாள் . அவனோ " யார் வேணும்னாலும் ஜெயிக்க முடியும்.. ஆனா அரசாங்கம் நடக்கிறதே இந்த அட்வைஸிங் டீம் வச்சு தான். அது பலருக்கு தெரிய வாய்ப்பில்லை.. இந்த டீம் பவர் தெரியாம பேசாதடி.." என்று சொல்ல "ஆமா சூழ்ச்சி பண்ணுறதுக்கு பேர் தான் பவரா " என்று கேட்க அவனோ வாய் விட்டு சிரித்தான். அவளும் " எனக்கு மனசே கேட்கல" என்று சிணுங்க , "மறுபடி ஆரம்பிக்காதடி .. அது தான் நீயும் நம்ம குழந்தையும் என்னை ரீ ப்ரெசென்ட் பண்ணுறீங்களே" என்று சொல்ல "இப்படி சொல்லி சொல்லியே" என்று ஆரம்பித்தவள் இதழ்களை இதழ் கொண்டு அடைந்தவன் சற்று நேரம் கழித்து நிமிர்ந்து "உன் வாய் இதுக்கு மட்டும் தாண்டி அடங்கி போகுது.. உன்னை பேசாம வைக்கணும்னா கிஸ் பண்ணிட்டே இருக்கணும் " என்று சொல்ல அவளுக்கோ வெட்கம் பிடிங்கி தின்ன "ச்சீ அப்படிலாம் இல்ல" என்று வீம்பாக உரைத்தாலும் அவன் சொன்னது என்னவோ உண்மை தான் என்று அவளும் அறிவாள்..
அவன் அரசியல் பயணம் அரசியல்வாதியாக இல்லாமல் வேறு வழியில் தொடங்கி இருக்க, அவன் மனைவியும் அவனுக்கு உறுதுணையாக இருந்தாள்.
முற்றும்
நாட்கள் மெதுவாக நகர ஆரம்பித்தது.. ஆதித் மாதவியிடமும் மாதேஷிடமும் நடந்த மறைக்க வேண்டிய விடையங்களை மறைத்து சொல்ல வேண்டிய விடயங்களை சொல்லி இருந்தான். முக்கியமாக தான் மதுபாலாவின் மகன் என்ற விடயம் தெரியும் என்பதை பற்றி அவன் மூச்சு கூட விடவில்லை...
தாயின் விருப்பப்படி தொழிலுக்கு சென்றாலும் சமூக சேவையில் ஆர்வம் உடையவன் அதனைக் கை விடவில்லை. அதன் பலனாக அவனுக்கு கிடைத்தது அந்த ஊர் அரசியல்வாதியின் விஷேட ஆலோசகர் பதவி.. அரசியலில் நேரடியாக ஈடுபடுவதை விட, அவனுக்கு இந்த ஆலோசகர் பதவி பிடித்து போய் இருந்ததால் பகுதி நேரமாக அதிலும் ஈடுபட்டு இருந்தான். பகலில் உடல் களைக்க ஓய்வே இல்லாமல் வேலை செய்தாலும் இரவின் தனிமையில் அவனை வாட்டிக் கொண்டு இருந்தது நதீகாவின் நினைவலைகள்.. வேலைக்கு செல்லும் அவனுக்கே இந்த நிலை என்றால் வேலையை விட்டு விட்டு அறைக்குள் அடைந்து கிடந்த நதீகாவின் நிலையை சொல்லவே தேவை இல்லை. நேரத்துக்கு சாப்பிடாமல் தனிமையில் தவித்தவளுக்கு காதல் ஒரு பக்கம், அவன் ஏமாற்றியது மறுபக்கம் என்று அனைத்தும் அவளை வதைக்க, உடல் மெலிந்து சோர்ந்து போனாள். அவளிடம் பேச பாண்டியனுக்கோ அவர் மனைவிக்கோ அவ்வளவு தைரியம் இருக்கவில்லை. அவள் இஷ்டத்துக்கே விட்டவர்கள் ஒரு பார்வையாளராகவே அந்த வீட்டில் இருந்தார்கள்..
ஆதித்தின் தோற்றமும் பொலிவிழந்து போக அது கரிகாலன் கண்ணில் இருந்து தப்புமா என்ன? சிரைக்காத தாடியும்.. சிரிக்காத இதழ்களும் என்று இருந்தவன் வேலையில் தீயாக இருந்தாலும் கண்ணில் ஒரு ஏக்கம் வலி அப்பட்டமாக தெரிந்தது. முதல் மாதேஷ் அவனை கலாய்த்தால் மீண்டும் மாதேஷை வைத்து செய்பவன் இப்போது சிறு புன்னகையுடன் கடந்து போக, அவனுக்கும் மனசு பாரமாகி போனது. அவன் ஒருவன் சந்தோஷம் இழந்ததால் அந்த வீடே சோகத்தில் உறைந்து இருக்க, அவன் சந்தோஷத்தை மீட்டெடுக்கும் வல்லமை படைத்தவளும் அதே சோகத்துடன் வீட்டில் இருந்தாள்.
ஒரு நாள் வேலை விஷயமாக செல்வதாக கூறி விட்டு சென்ற கரிகாலன் நேரே சென்றது நதீகாவை தேடி தான். கரிகாலனை கண்டதுமே "வாங்க கரிகாலன்" என்று பாண்டியன் வரவேற்க , சுத்தி வளச்சு பேச விரும்பாத கரிகாலனும் " நான் நதீகாவை பார்க்கணும் சார்" என்று சொல்ல அவரோ "சம்பந்தின்னு சொல்லுங்க" என்றார். அதைக் கேட்டு புன்னகைத்த கரிகாலனும் "சரி சம்பந்தி" என்று சொல்ல அவரோ பெருமூச்சுடன் "என்ன பிரச்சனை ஏன் இந்த பிரிவுன்னு தெரில, ஆனா பொண்ணு வாழா வெட்டியா இருக்கும் போது வலிக்குது" என்று சொல்லும் போதே அவர் குரல் அப்பட்டமாக வலியைக் காட்டியது,..
கரிகாலனோ "எல்லாம் சீக்கிரமே சரி ஆகிடும்" என்று சொல்லி விட்டு , பாண்டியனுடன் மேலே அவள் அறையை நோக்கி சென்றார். பாண்டியன் கதவை தட்ட வெளியே வந்தவள் வாசலில் நின்ற கரிகாலனை பார்த்து சற்றே அதிர்ந்து தான் போனாள். அறிமுகம் தேவையே இல்லாமல் இருந்த கரிகாலனின் தோற்றத்தை பார்த்து "நீங்க எப்படி இங்க?"என்று தட்டு தடுமாறி கேட்க "உன் கூட கொஞ்சம் பேசணும் " என்றார் கரிகாலன். அவளும் "ம்ம்" என்று சொல்ல, அருகே இருந்த பால்கனி அருகே போய் நின்ற கரிகாலன் அந்த கம்பியில் இரு கைகளையும் இறுக பற்றியபடி நிற்க, அவர் அருகே வந்த நதீகா "சொல்லுங்க மாமா" என்றாள்…
.. வரும் போது ஒரு தயக்கத்துடனேயே வந்த கரிகாலனுக்கு அந்த மாமா என்ற அழைப்பு நம்பிக்கையை அளிக்க, மெலிதாக புன்னகைத்தவன் "என்னம்மா பிரச்சனை .. சொன்னா தானே தெரியும்" என்று கேட்க அவளோ பொங்கி வந்த கண்ணீரை உள்ளே இழுத்துக் கொண்டு "ஆதித்துக்கு எல்லாமே நடிப்பு மாமா , அவன் பண்ணினத சொன்னா நீங்க கூட தாங்க மாட்டீங்க " என்று சொல்ல அவரோ "அவன் எப்போவுமே தப்பு பண்ண மாட்டான்" என்றார். அதுவரை பொறுமையாக இருந்தவளுக்கு அவனுக்கு சார்பாக கரிகாலன் பேசியது அதிர்ச்சியாக இருக்க " நீங்க நினைக்கிற போல இல்ல மாமா, அவன் ரொம்ப தப்பானவன்" என்று சொன்னாள்.
உடனே கரிகாலன் "நீ அவனை புரிஞ்சுக்கலம்மா," என்று சொல்ல அவள் பொறுமை காற்றில் பறந்து போனது.. "நீங்க உங்க மகனுக்கு சப்போர்ட் பண்ணுறீங்க,, அவன் கொலைகாரனா இருந்தா கூட இப்படி தான் சப்போர்ட் பண்ணுவீங்களா?" என்று கேட்க அவரோ அவளை பக்கவாட்டாக திரும்பி பார்த்து "அவன் கையால ஒரு எறும்பு இறந்தா கூட அந்த எறும்பு ஏதோ பெரிய பாவம் வாழ்க்கையில பண்ணி இருக்குன்னு அர்த்தம்" என்று சொல்ல அவளுக்கோ அவர் ஆதித் மேல் அவ்வளவு நம்பிக்கை வைத்து பேசுவது எரிச்சலாக இருந்தது.
"நீங்க என்ன சொன்னாலும் நம்ப மாட்டிங்க ,, அவன் மேல எவ்வளவு காதல் வச்சு இருந்தேன் தெரியுமா? இப்போ கூட அவன் நினைப்பு தான் எனக்கு" என்று சொன்னவள் கண்ணில் இருந்து இரு சொட்டு கண்ணீர் வழிய "அவனும் உன் நினைவா தான் இருக்கான் நதீகா, மனசுல ரெண்டு பேரும் எவ்வளவோ காதல் வச்சுட்டு ஏன் இந்த பிரிவு?" என்று கேட்க அவளோ "அவன் என்ன பண்ணினான் தெரியுமா?" என்று ஆரம்பித்து ஒரு கணம் நிறுத்தி "ச்ச வேணாம், விடுங்க மாமா, அத நான் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்" என்று சொல்ல அதைக் கேட்டு மெலிதாக சிரித்த கரிகாலன் "அவன் தான் மதுபாலா இறப்புக்கு காரணம் .. ரைட்?" என்று கேட்க அவரை விழி விரித்து அதிர்ந்து பார்த்தாள் நதீகா.
பெருமூச்சுடன் முன்னே திரும்பி "மதுபாலாவை பற்றி உனக்கு தெரியுமா?" என்று ஆரம்பித்து தனது வாழக்கையை கூற அவள் முகமோ மதுபாலா மேல் கோபத்தில் கொப்பளித்த அதே கணம் அவள் கண்களோ தன்னவன் பட்ட வேதனையை நினைத்து கலங்கி போனது. உடனே அவள் "மதுபாலா இவ்வளவு மோசமா?" என்று கேட்க அவரோ "உனக்கு சந்தேகம் வரும்னு தெரியும்.. அது தான் ஆதாரம் கூட கொண்டு வந்து இருக்கேன்" என்று ஆதாரத்தை அவளிடம் காட்ட, வாயில் கை வைத்து இரு அடிகள் பின்னே சென்றவளுக்கு பேச வார்த்தைகள் வந்தால் தானே. தன்னவனைப் பற்றி தெரியாமல் அவனை வார்த்தையால் வதைத்து விட்டாள் அல்லவா? கலங்கிய கண்களுடன் அவரை ஏறிட்டு பார்த்தவள் "எனக்கு ஆதித்தை இப்போவே பார்க்கணும். நானும் உங்க கூட வரவா மாமா?" என்று கேட்க கரிகாலன் முத்துப் பற்கள் தெரிய சிரித்தவர் "தாராளமா" என்றார். அவள் மன மாற்றம் பாண்டியனுக்கும் மனைவிக்கும் கூட பூரிப்பாக இருக்க,தன்னவனை காண அவள் கரிகாலனுடன் புறப்பட்டு இருந்தாள்.
அடுத்த நாள் ஓய்வு நாளாக இருக்க, முதலில் நுழைந்த கரிகாலன் "வாம்மா" என்று அழைக்க, உள்ளே இருந்த மாதவி மற்றும் மாதேஷ் வாசலை எட்டிப் பார்த்தனர். உள்ளே பெட்டியோடு நுழைந்தவளை பார்த்த மாதவி பூரிப்புடன் "அங்கேயே நில்லும்மா" என்று சொல்லி விட்டு ஓடிச் சென்று ஆரத்தி தட்டை எடுத்து வர, மாதேஷோ "ஹாய் அண்ணி" என்று உரிமையாக அழைத்தான். அனைவரையும் பார்த்த மாத்திரத்திலேயே நதீகாவுக்கு பிடித்துப் போக, அனைவரிடமும் சகஜமாக உரையாட ஆரம்பித்தாள். இது எதுவும் அப்போது தான் எழுந்து குளியலறைக்குள் நுழைந்த ஆதித்துக்கு தெரிய வாய்ப்பு இல்லை. அவளை ஆரத்தி எடுத்து அழைத்து வந்த மாதவி "இது தான் ஆதித் ரூம்" என்று காட்ட அவளும் கதவை மெதுவாக திறந்தாள். அங்கு குளியலறைக்குள் குளிக்கும் சத்தம் கேட்க அவளோ உள்ளே வந்து பெட்டியை வைத்து விட்டு அந்த அறையை சுற்றி பார்க்க ஆரம்பித்தாள்.
அந்த சமயம் குளித்து விட்டு வெளியே இடையில் டவலுடன் வந்த ஆதித் ஒரு கணம் அவளை பார்த்து கண்களை கசக்கியவன் , "உண்மையா தான் வந்து இருக்கா" என்று அவள் பெட்டியை பார்த்து நினைத்து உறுதிப் படுத்தியவன் கண்ணாடி முன்னே நின்று தலையை துவட்ட ஆரம்பித்தான். அவளோ அவன் வந்ததுமே திரும்பி பார்த்த போதும் கூட அவன் பாரா முகம் வதைக்க ஈகோ எல்லாம் தூக்கி எறிந்து விட்டு பின்னால் சென்று அவன் இடையை அணைத்து அவன் வெற்று முதுகில் கன்னம் வைத்தவள் "ஐ அம் சாரி ஆதித்.. உண்மை தெரியாம தப்பா பேசிட்டேன்" என்று சொல்ல அவனும் தனது வயிற்றை சுற்றி இருந்த அவள் கைகளை வலுக்கட்டாயமாக அகற்றியபடி " ம்ம்" என்று உரைத்தவன் வெளியே செல்ல ஆயத்தமாக அவளுக்கோ சப்பென்று ஆனது. உடனே "என்னை மன்னிக்கவே மாட்டிங்களா" என்று அவன் மூச்சு காற்று படும் தூரத்தில் வந்து நின்று அவன் திண்ணிய மார்பில் கை வைக்க போக, அவள் கையை பிடித்து உதறி தள்ளியவன் "வேணாம்மா, அப்புறம் உனக்கு தான் அருவருப்பா இருக்கும்" என்று சொல்லும் போதே அவன் குரல் அந்த வார்த்தைகளால் உண்டாக வலியை அப்பட்டமாக காட்டியது.
அவனை ஏறிட்டு அடிப்பட்ட பார்வை பார்த்தவள் "ப்ளீஸ் ஆதித், இப்படி பேசாதீங்க, ரொம்ப வலிக்குது,, அது கோபத்துல பேசிட்டேன்...நான் என்ன பண்ணினா என்ன மன்னிப்பீங்க?" என்று கேட்க அவனோ "ஒண்ணுமே பண்ண தேவலம்மா,, என்னை தொந்தரவு பண்ணாம இருந்தாலே போதும்" என்று சொன்னபடி ஷேர்ட்டை அணிந்து கொள்ள அவளோ அவனை நெருங்கி அவன் ஷேர்ட் பட்டனை பூட்டியபடி "என்னையும் வெளியே அழைச்சிட்டு போறீங்களா ப்ளீஸ் ?" என்று உரிமையாக கேட்டாள் .
அவனோ அவள் கையை ஷேர்ட்டில் இருந்து அகற்றியவன் "நான் யாரையும் அழைச்சிட்டு போறதா இல்ல" என்றபடி ஆயத்தமாகி வெளியே வர, அவன் பின்னால் அவளும் வந்தாள் . அவன் வந்ததுமே "சாப்பிட்டு போப்பா" என்று மாதவி சொல்ல சாப்பிட அவன் அமர, அவன் அருகே அமர்ந்தவள் "ப்ளீஸ்" என்று கண்களால் கெஞ்சினாள். அவனோ இறுக்கமாக அமர்ந்து இருக்க, அவள் மனமோ "இவன் கிட்ட கெஞ்சி காரியம் சாதிக்க முடியாது. நம்ம அதிரடி தான் சரியா வரும்" என்று நினைத்தவள் அருகே மும்முரமாக சாப்பிட்டுக் கொண்டு இருந்த மாதேஷை பார்த்து விட்டு ஆதித்தின் காதருகே எம்பி "இப்போ உள்ளே நீங்க வரலன்னா , உங்க தம்பி இருக்கார்னு பார்க்காம கிஸ் பண்ணுவேன். என்னை பத்தி தெரியும் தானே" என்று கேட்க அவனோ அதிர்ச்சியுடன் விழி விரித்து நதீகாவை பார்த்தான்.
அவளோ கண்களால் உள்ளே வரும்படி சைகை செய்து விட்டு அவன் அறைக்குள் புகுந்து கொள்ள அவனோ தம்பியை ஒரு கணம் பார்த்து விட்டு அவள் பின்னே நுழைந்தான். உள்ளே அவன் வந்ததுமே கதவை தாள் போட்ட நதீகா "மன்னிப்பு கேட்டா மன்னிக்கணும்.. இப்படி ஓவர் பில்ட் அப் பண்ணுனா எனக்கு பிடிக்காது" என்று விரல் நீட்டி பேச, அவள் விரலை பிடித்து முறுக்கினான் அவன். அவளோ வலி தாங்க முடியாமல் "ஆஆ வலிக்குது ஆதித்" என்று அலறியவள் அவன் கையை விட்டதும் நெருங்கி வந்து "நிஜமா எனக்கே ரொம்ப கஷ்டமா போச்சு.. நீங்க பண்ணினது தப்பே இல்ல" என்று சொன்னவள் கண்ணில் இருந்து விழுந்த கண்ணீர் கூட மன்னிப்பு யாசித்தது. அவனோ அவளை அழுத்தமாக பார்த்தவன் "டச் பண்ணாம நில்லும்மா.,அப்புறம் உனக்கு தான் அருவருப்பா இருக்கும்" என்று சொல்ல அவளும் "ப்ளீஸ் ஆதித் அது கோபத்துல பேசுனது. அதயே எவ்ளோ நாளுக்கு பேச போறீங்க" என்று இயலாமையுடம் கேட்டாள். அவனோ "நியாபகம் இருக்கும் மட்டும், இப்போ நான் கிளம்புறேன்" என்று சொன்னபடி வெளியேற போக, அவன் ஷேர்ட் காலரை பிடித்து தன்னை நோக்கி இழுத்தவள் அவன் இதழில் அழுந்த இதழ் பதித்து இருந்தாள். அவன் மேனியிலோ மின்சாரம் பாய்ந்த உணர்வு.. அவளை இழுத்து சரசமாட மனம் ஆணையிட்டாலும் அவனது ஈகோ விட்டால் தானே.
அவன் இதழில் முத்தம் பதித்தது மட்டும் அல்லாமல் அவனது கீழ் அதரங்களில் அழுத்தமாக பற் தடத்தை பதிக்க அவனோ வலி தாங்க முடியாமல் "ஆ" என்று அறியவன் அவளை வலுக்கட்டாயமாக தள்ளி நிறுத்தினான். அவளோ மீண்டும் அவன் ஷேர்ட்டை பிடித்து இழுத்து, "அருவருப்பா இல்லன்னு ப்ரூப் பண்ண வேணாமா?" என்று அவன் கேட்ட தோரணையிலேயே ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டவள் தனது உடல் முழுதும் அவன் மேனியில் உரச, தனது காலை அவன் காலில் வைத்து எம்பி அவன் முகத்தில் ஓய்வின்றி முத்தம் வழங்கி இதழில் இளைப்பாறினாள் . அவனோ அவள் இதழ் ஈரத்தினால் உணர்ச்சியின் பிடியில் இருந்தாலும் கஷ்ட்டபட்டு தன்னை தானே பாக்கெட்டில் கை விட்டு கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தான்.
அவளோ அப்போதும் சலிக்காமல் அவன் கழுத்தில் பற்தடங்களை பதித்தபடி இறுக அவனை அணைத்துக் கொள்ள, அதுவரை இருந்த அவன் கட்டுப்பாடுகள் காற்றில் பறந்து போனது.
அவளை அப்படியே தூக்கி அணைத்து மஞ்சத்தில் சரித்தவன் அடுத்த கணமே அவள் செயலை தனதாக்கி இருந்தான். முதல் தடவை காதல் மட்டுமே கொண்டு இணைந்த இரு ஜீவன்கள், இன்று காதலும் புரிந்துணர்வும் ஒருங்கே உருவாக ரெண்டற கலந்தன.
எபிலாக்
சில மாதங்கள் கழித்து ,
காலையிலேயே கோர்ட் ஷேர்ட் போட்டு ஆயத்தமானவன் அருகே வந்து அவனையே பார்த்து இருந்தாள் நதீகா.. அவனோ தலையை கோதியபடி அவளை நெருங்கி அவள் செவ்விதழ்களில் இதழ் பதித்து விட்டு "இப்படியே பார்த்துட்டு இருந்தா நான் மீட்டிங் போக வேணாமா?" என்று கேட்க அவளோ " தம்பியோட பொண்ணு பார்க்கிற பன்க்ஷனை விட மீட்டிங் ஆஹ் முக்கியம்" என்று ஆதங்கமாக கேட்டாள். அவனும் " அவன் கட்டிக்க போற பொண்ண அவன் தான் பார்க்கணும்.. நான் பார்த்து என்ன பண்ண முடியும்..? " என்று கேட்க அவளோ இதழ்களை சுளித்தபடி "க்கும்" என்றாள்.
"முக்கியமான மீட்டிங்டி புரிஞ்சுக்கோடி" என்று சொன்னவன் கரங்கள் அவள் மேடிட்ட வயிற்றை வருட, அவளோ அவன் கோர்ட்டில் இருந்த தூசை தட்டியபடி "எப்போ பார்த்தாலும் மீட்டிங் தானா? உங்க தம்பி பாவம் இல்லையா?" என்று கேட்டாள். "நான் மினிஸ்டர் உடைய ஸ்பெஷல் அட்வைசர் .. மீட்டிங் போகலன்னா அவருக்கு கையும் ஓடாது காலும் ஓடாது" என்று சொல்ல அவளும் பெருமூச்சுடன் " அவருக்கு பேர் தான் மினிஸ்டர்..எல்லா வேலையும் நீங்க தான் பார்க்கிறீங்க" என்று சொன்னாள் . அவனோ " யார் வேணும்னாலும் ஜெயிக்க முடியும்.. ஆனா அரசாங்கம் நடக்கிறதே இந்த அட்வைஸிங் டீம் வச்சு தான். அது பலருக்கு தெரிய வாய்ப்பில்லை.. இந்த டீம் பவர் தெரியாம பேசாதடி.." என்று சொல்ல "ஆமா சூழ்ச்சி பண்ணுறதுக்கு பேர் தான் பவரா " என்று கேட்க அவனோ வாய் விட்டு சிரித்தான். அவளும் " எனக்கு மனசே கேட்கல" என்று சிணுங்க , "மறுபடி ஆரம்பிக்காதடி .. அது தான் நீயும் நம்ம குழந்தையும் என்னை ரீ ப்ரெசென்ட் பண்ணுறீங்களே" என்று சொல்ல "இப்படி சொல்லி சொல்லியே" என்று ஆரம்பித்தவள் இதழ்களை இதழ் கொண்டு அடைந்தவன் சற்று நேரம் கழித்து நிமிர்ந்து "உன் வாய் இதுக்கு மட்டும் தாண்டி அடங்கி போகுது.. உன்னை பேசாம வைக்கணும்னா கிஸ் பண்ணிட்டே இருக்கணும் " என்று சொல்ல அவளுக்கோ வெட்கம் பிடிங்கி தின்ன "ச்சீ அப்படிலாம் இல்ல" என்று வீம்பாக உரைத்தாலும் அவன் சொன்னது என்னவோ உண்மை தான் என்று அவளும் அறிவாள்..
அவன் அரசியல் பயணம் அரசியல்வாதியாக இல்லாமல் வேறு வழியில் தொடங்கி இருக்க, அவன் மனைவியும் அவனுக்கு உறுதுணையாக இருந்தாள்.
முற்றும்