ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 10

pommu

Administrator
Staff member

அத்தியாயம் 10

ராவந்த்தின் விழிகள் அதிர்ச்சியில் விரிய, "என்னடி பண்ணி வச்சு இருக்க?" என்று மாதுரியிடம் கேட்டான்.

அவளோ, "ராவ், அவங்க லவ் பண்ணுறாங்க" என்று ஆரம்பிக்க, "அதுக்குன்னு படிச்சு முடிக்க முதலே கல்யாணமா? உனக்கென்ன பைத்தியமா?" என்று சீறிக் கொண்டு இருக்கும் போதே, சத்தம் கேட்டு வீட்டினுள் இருந்து எல்லாருமே வெளியே வந்தார்கள்...

எல்லாருக்குமே அதிர்ச்சியின் உச்சம்.

"என்ன இது?" என்று திலகவதி அதிர, "அத்தை, நான் சொல்றதை கேளுங்க, ஜீவிதா ப்ரெக்னன்ட் ஆஹ் இருக்கா" என்று போட்டு உடைத்து விட்டாள்.

கல்யாணம் முடித்ததே பெரிய அதிர்ச்சி, அதற்கும் மேல் இது பேரதிர்ச்சி அல்லவா?

"என்னது ப்ரெக்னன்ட் ஆஹ்? என்னடா பண்ணி தொலைச்ச?" என்று கேட்டுக் கொண்டே ராவந்த் எட்டி அஸ்வந்த்தின் ஷேர்ட்டை பிடிக்க போக, அவனை மறைத்தபடி நின்று இருந்தாள் மாதுரி...

"தள்ளுடி" என்று அவன் சொல்ல, "இல்ல மாட்டேன்" என்றாள்.

"உன் சைசுக்குள்ள என்னை மறைச்சிட்டு இருக்கியா?" என்று கேட்டவன் ராவந்த்தின் ஷேர்ட்டை அவளை தாண்டி பிடிக்க, முற்பட, அவன் கையை பற்றியவள், "விடுங்க ப்ளீஸ், இதுக்கு அப்புறம் என்ன தான் செய்யுறது?" என்று கெஞ்சுதலாக கேட்டாள்.

"சாவடிச்சிடுவேன் உன்னை, தள்ளு" என்று அவன் அவளை பற்றி இழுத்து தள்ளி விட்டவன், அஸ்வந்தின் ஷேர்ட்டை பற்றி ஓங்கி அறைய போக, "மாமா ப்ளீஸ்" என்று ஒரு பக்கம் ஜீவிதா கெஞ்ச ஆரம்பித்து விட்டாள். ராவந்த் அதற்கு எல்லாம் அசராமல் பிடித்து அடித்தான்.

ராவந்த் தள்ளியதில் மாதுரி கீழேயும் விழுந்து விட்டாள்.

'நாசமா போனவன், எப்படி தள்ளி விட்டு இருக்கான்' என்று வாய்க்குள் திட்டிக் கொண்டே எழுந்தவளுக்கு முட்டியில் இருந்து ரத்தம் வேறு வந்தது...

ராமசாமியோ, "டேய் விடு டா, இதுக்கப்புறம் ஏன் டா போட்டு அடிக்கிற?" என்று கேட்டுக் கொண்டே அவன் அருகே செல்ல, "மாப்பிள்ளை விடுங்க பேசி தீர்த்துக்கலாம்" என்று வடிவேலும் சென்றார்.

இதனிடையே, மாதுரி அருகே வந்த பார்வதியோ, "என்னம்மா ரத்தம் வருது?" என்று கேட்க, "பரவாயில்லம்மா, விடுங்க" என்று சொல்லிக் கொண்டே, அதனை புடவை முந்தானையால் துடைத்து விட்டவளோ ராவந்த்தைப் பார்த்தாள்.

அவனும் அஷ்வந்த்தில் இருந்து கையை எடுத்தவன், "எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு" என்று சீறி விட்டு, மாதுரியை பார்க்க, அவளோ கையில் வழிந்த ரத்தத்தை துடைத்துக் கொண்டு இருந்தாள்.

"பச்" என்றபடி நெற்றியை நீவிய ராவந்த்தோ, "சாரி" என்று சொல்லிக் கொண்டே அவளை அருகே வந்து அவள் கையை பற்ற, "விடுங்க" என்று கடுப்பாக சொல்லிக் கொண்டே அவள் அவனிடம் இருந்து கையை உருவிக் கொள்ள, "நீ பண்ணுனது தப்பு தானே" என்று கேட்டான்.

"ஆமா தப்பு தான், அவ ப்ரெக்னன்ட் ஆஹ் இருக்கா, என்ன பண்ண சொல்றீங்க? கல்யாணம் பண்ணி வைக்கலன்னா இன்னும் போட்டு அடிச்சு இருப்பீங்க" என்று சொல்ல, அவனோ நெற்றியை நீவியவன், "சரி விடு" என்று சொல்லி விட்டு அங்கே நின்ற பார்வதியை பார்த்து, "அத்தை நீங்க திடீர்னு இங்க எங்க?" என்று கேட்டான்.

"ஐயோ மாப்பிள்ளை, இந்த பிரச்சனைல வந்த விஷயத்தை மறந்தே போய்ட்டேன் நீங்களும் மாதுரியும், எங்கேயாவது கொஞ்ச நாள் போறீங்களா?" என்று கேட்க, "எதுக்கும்மா?" என்று மாதுரி கேட்டுக் கொண்டே இருக்கும் போது பெரிய ஜீப் ஒன்று அவர்கள் வளாகத்தினுள் நுழைந்தது...

எல்லாருமே அதிர்ந்து ஜீப்பை பார்க்க, உள்ளே இருந்து வரிசையாக ஆட்கள் இறங்கினார்கள்.

எல்லாருமே தக தகவென தங்க நிறத்தில் மின்னிக் கொண்டு இருந்தார்கள்.

ஜீப் கூடதங்க நிறம் தான்...

எல்லாருமே உயரமாகவும் கட்டுமஸ்தாகவும் இருந்தார்கள்...

யாருக்கும் எதுவும் புரியவில்லை...

"நீங்க யாரு?" என்று ராமசாமி கேட்க, "எங்க இளவரசியை அழைச்சு போக வந்திருக்கோம்" என்று சொன்னான் முன்னால் வந்தவன்.

"இளவரசியா? அப்படி யாரும் இல்ல இங்க... இது பார்வதி, இது திலகவதி, இது மாதுரி, இவ பேர் ஜீவிதா" என்றார் ராமசாமி...

அவரை ஒரு மார்க்கமாக பார்த்த காவலாளியோ, அப்படியே மாதுரியை நோக்கி நடந்து வந்தான்.

அவளும் அவனை ஒரு மார்க்கமாக பார்க்க, "நீங்க இருக்க வேண்டிய இடம் இது இல்ல இளவரசி" என்றான்.

"அடேய் அது என் பொண்டாட்டி ல, என் கூட தான் இருப்பா" என்று சொல்லிக் கொண்டே, ராவந்த் வர, அவனை முறைத்த காவலாளி, "அப்படி சொல்லாதீங்க, இளவரசிக்காக எங்க ஐயாவோட மொத்த குடும்பமும் காத்துக் கிட்டு இருக்காங்க" என்றான்.

"என்னது ஐயாவா? விளையாடுறியா நீ? கொன்னுடுவேன் பார்த்துக்கோ, எந்த டிராமா ட்ரூப் டா நீங்க?" என்று ராவந்த் எகிற, மாதுரிக்கு எதுவும் புரியவில்லை...

அவனை விறைத்து போய் பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள்.

"நாங்க பொன்முடி அரண்மனைல இருந்து வர்றோம்... எங்க தலைவர் பொன்முடி தேவர் ஐயாவுக்கும் தங்கவிழி அம்மாவுக்கும் பிறந்த பொண்ணு தான் இவங்க... அவங்க குழந்தையா இருக்கும் போது திருவிழா ஒண்ணுக்கு வந்தாங்க, அப்போ குழந்தை போட்டு இருந்த தங்கத்துக்கு ஆசைப்பட்டு, ஒருத்தன் குழந்தையை தூக்கிட்டு போய்ட்டான், இத்தனை வருஷம் தேடிட்டே இருந்தாங்க, இப்போ தான் இவங்க இங்க இருக்காங்கன்னு தெரிஞ்சுது... , பொன்முடிதேவர் ஐயாவோட வம்சத்து ஆண்கள் தான் இவங்கள கல்யாணம் பண்ணிக்கணும்... வேற யாருக்கும் இவங்க மேல உரிமை இல்லை... எங்க வீட்டு இளவரசியோட பேர் பொன்னிலா" என்றபடி மாதுரியை பார்க்க அவளோ அவர்களை புரியாமல் பார்த்து விட்டு வடிவேலை பார்த்தவள், "அப்பா என்னப்பா இது?" என்று கேட்டாள்.

"ஐயோ நான் உன்னை தங்கத்துக்கு ஆசைப்பட்டு எல்லாம் தூக்கலம்மா, கோவில் குளத்தடி ல யாரும் இல்லாம அழுதுட்டு இருந்த, எங்களுக்கும் நிறைய நாள் குழந்தை இல்லை, அதனால் தூக்கிட்டு வந்தோம்... காலைல எங்க கிட்ட வந்து விசாரிச்சாங்க, ஏதோ தப்பா இருக்கேன்னு தான் ஓடி வந்தோம்..." என்று சொல்ல, "அப்போ நான் உங்க பொண்ணு இல்லையாம்மா?" என்று பார்வதியிடம் கேட்க, அவரோ இல்லை என்று தலையாட்டினார்...

ராவந்த்துக்கு இப்போது நெஞ்சில் படபடப்பு...

"இப்போ உடனே, அரிச்சந்திரன் போல எல்லாமே ஒத்துக்கணுமா மாமா?" என்று சீற, "ஐயோ மாப்பிள்ளை அவ முதுகுல இருக்கிற மச்சமே எல்லாம் சொல்லும், இதுல நான் ஒத்துக்கிட்டா என்ன ஒத்துக்கலன்னா என்ன? இவளை பத்தி எப்படி இவங்களுக்கு தெரிஞ்சுதுன்னு தெரியல" என்றார்.

"மச்சமா?" என்று கேட்டவனோ, "திரும்புடி" என்றான் மாதுரியிடம்.

"எங்க இளவரசிக்கு மரியாதை கொடுங்க" என்றான் காவலன்...

"அவ என் பொண்டாட்டி டா" என்று சொல்லிக் கொண்டே, திரும்பியவளின், ஜாக்கெட்டை கிழிக்க, "ஐயோ லூசு ராவ், எனக்கு மச்சம் இருக்கு தான், இப்படியா ஜாக்கெட்டை கிழிப்பீங்க?" என்று கேட்க, அவன் அவள் முதுகில் இருக்கும் மச்சத்தை பார்த்தவன், "அட ஆமா மச்சம் இருக்கு" என்றான் அதிர்ச்சியுடன்...

அவளோ புடவையால் முதுகை மூடிக் கொண்டவள், "சார், எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு... நான் அவங்க பொண்ணா இல்லாம இருக்கலாம், ஆனா இவர் பொண்டாட்டி" என்று ராவந்த்தைக் காட்டினாள்.

ராவந்த்தோ, "அப்படி சொல்லுடி, முதலிரவு கூட இன்னும் நடக்கல தெரியுமா?" என்றான்.

"இதெல்லாம் அவங்க கேட்டாங்களா?" என்று மாதுரி அவனை முறைத்தபடி கேட்க, "என் கஷ்டத்தை நான் சொல்றேன், உனக்கென்ன?" என்று கேட்டான்.

காவலாளியோ, அலைபேசியை எடுத்து, அமரேந்திரனுக்கு அழைத்து, "ஐயா, நான் கார்கோடன்" என்றான்.

"ம்ம் சொல்லு" என்றான் அவன் கம்பீர குரலில்...

"இளவரசி வர மாட்டேன்னு சொல்றாங்க" என்று சொல்ல, "ஏன் புருஷன் மேல அவ்ளோ லவ்வா?" என்று இளக்காரமாக கேட்டான்.

"ம்ம், ஆனா இன்னும் முதலிரவு நடக்கலைன்னு தெரியுது" என்று சொன்னான்.

மறுபக்கம் ஒரு பெரிய புன்னகை...

"அது தான் எனக்கு வேணும்... அப்படியே தூக்கிட்டு வா, நம்ம வம்சத்துல எந்த அந்நிய கலப்பும் இருக்கவே கூடாது, அவளுக்கு அண்ணன் நான் இருக்கேன், நம்ம வம்சத்துல அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்." என்று சொல்லி விட்டு வைத்து விட்டான்.

கார்கோடன் தனக்கு பின்னே நின்றவர்களை பார்த்து, சைகை செய்ய, அவர்கள் வரிசையாக வந்து, எல்லாரையும் வேகமாக பிடித்துக் கொள்ள, "டேய், என்னடா பண்ணுறீங்க?" என்று எல்லாருமே பதற ஆரம்பித்து விட்டார்கள்...

மாதுரியோ, "ஏன் எல்லாரையும் பிடிச்சு இருக்கீங்க, விடுங்க" என்று பதற, அவளை இருவர் அலேக்காக தூக்கிக் கொண்டு சென்று வண்டியில் ஏற்றி இருந்தார்கள்...

"ஐயோ விடுங்க" என்று ராவந்த் பதற, எல்லாருக்கும் ஓர் நேரத்தில் மயக்க மருந்து முகத்தில் அடிக்கப்பட்டது...

மாதுரிக்கும் தான்.

அதன் பிறகு, அவர்கள் வண்டி மாதுரியை தூக்கிக் கொண்டே கிளம்பி விட, அலைபேசியை வைத்த அமரேந்திரன் தங்க நீர் தொட்டியில் படுத்துக் கிடந்தான்.

முன் முற்பதில் இருப்பான்...

ஆஜானுபாகுவான தோற்றம்...

தாடி மீசை வளர்த்து இருந்தான்...

தங்க தட்டில் பிறந்து தங்க தட்டில் வளர்ந்தவன் அவன்...

அவன் நினைத்ததை முடிக்காமல் விட்டதாக சரித்திரம் இல்லை, அதுவும் அந்நிய கலப்பு தங்களது வம்சத்தில் வந்து விடவே கூடாது என்கின்ற உயர் மட்ட சிந்தனை உடையவன் அவன்...

தனது உடன் பிறந்தவளுக்கு வேறு திருமணம் செய்து வைக்க இப்போது ஆயத்தமாகி விட்டான்.

மாதுரி கிடைத்தது அவனுக்கு அதீத சந்தோஷம்.

சின்ன வயதில் இருந்தே அவள் மீது அப்படி ஒரு நேசம்...

தூக்கி வளர்த்தது அவன் தான்...

அவள் இப்படி காணாமல் போனதுமே உடைந்து விட்டான்...

மீண்டும் அவன் இதயத்தில் இதம் உண்டான உணர்வு...

அவளை கண்டு பிடிக்காமல் திருமணமே செய்ய போவது இல்லை என்று வாழ்ந்து வந்தவன் அவன்...

சிரிக்க மறுப்பவன் இதழ்கள் இப்போது மெலிதாக விரிந்தன...

அவளினால், அவன் பொன்னிலாவினால், அவள் மீண்டும் இந்த அரண்மனையை அலங்கரிக்க வருகின்றாள் என்கின்ற சந்தோஷத்தினால்... தங்க நீர் தொட்டியில் படுத்து இருந்தவனின் முதுகிலும் அவர்கள் வம்சத்து கிரீட மச்சம் தெளிவாக தெரிந்தது...

இதே சமயம், வீட்டு வாசலில் மயங்கி கிடந்த எல்லாரும் எழுந்தது என்னவோ அடுத்த நாள் தான்.

முதலில் எழுந்த ராவந்த்தோ தலையை உலுக்கிக் கொண்டே, சுற்றும் முற்றும் கீழே விழுந்து கிடந்தவர்களை எழுப்பினான்...

பார்வதியோ, "என் பொண்ணு" என்று ஓரமாக அமர்ந்து அழ ஆரம்பிக்க, ராவத்துக்கு கண்ணை கட்டி காட்டில் விட்ட நிலைமை...

அவளை எங்கே தேடுவது...

நெஞ்சம் எல்லாமே அடைத்து விட்டது...

இத்தனை நாட்கள் அவளது நிமிர்வான தெளிவான பேச்சு எங்கே இருந்து வந்திருக்கும் என்று யோசித்து இருக்கின்றான். அவள் ரத்தத்தில் ஊறியது என்று இப்போது புரிந்தது...

மெதுவாக மாதுரியும் கண்களை விரித்தாள்.

தங்க கட்டிலில் தான் படுத்து இருந்தாள்.

பதறி எழுந்து அமர்ந்தவளுக்கு அது எந்த இடம் என்றே தெரியவில்லை...

'ஐயோ என்னை கடத்திட்டங்களா?' என்று நினைத்தவளுக்கு எப்படி இங்கே இருந்து செல்வது என்றே தெரியவில்லை...
 

grg

Member
😍😍😍
என்னது பொன்னிலாவா...
இது என்ன ராவ் க்கு வந்த சோதனை 🤣🤣🤣
 
Last edited:
Top